என் மலர்tooltip icon

    கிருஷ்ணகிரி

    • கலெக்டர் ஜெயசந்திர பானுரெட்டி நேற்று பணி நியமன ஆணைகளை வழங்கினார்.
    • கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த 3 ஆயிரத்தும் 500 பேர் வேலை வாய்ப்பு பெற்றுள்ளார்கள்.

    ராயக்கோட்டை,

    கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை தாலுகா கெலமங்கலம் அருகே திம்ஜேப்பள்ளி ஊராட்சியில் இயங்கி வரும் டாடா எலக்ரானிக்ஸ் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு முகாமில் தேர்வு செய்யப்பட்ட 32 நபர்களுக்கு கலெக்டர் ஜெயசந்திர பானுரெட்டி நேற்று பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

    இந்த நிகழ்ச்சிக்கு செல்லகுமார் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் கே.பி.முனுசாமி (வேப்பனப்பள்ளி), டி.ராமச்சந்திரன் (தளி), ஒய்.பிரகாஷ் (ஓசூர்), டி.மதியழகன் (பர்கூர்), அசோக்குமார் (கிருஷ்ணகிரி), தமிழ்செல்வம் (ஊத்தங்கரை), ஓசூர் மாநகராட்சி மேயர் எஸ்.ஏ.சத்யா ஆகியோர் முன்னிலை வகித்தனர். டாடா எலக்ரானிக்ஸ் நிர்வாக இயக்குநர் விவேகானந்தா அனைவரையும் வரவேற்றார்.

    நிகழ்ச்சியில் கலெக்டர் பேசியதாவது:-

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தொடங்கப்பட்டுள்ள டாடா எலக்ரானிக்ஸ் நிறுவனம் கிருஷ்ணகிரி மாவட்டம் மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்களில் சமூக முன்னேற்றத்திற்கு உதவும் நீடித்து பயனளிக்கும் பல்வேறு முயற்சிகளை செய்து வருகிறது.

    பெண்களுக்கு உரிய அதிகாரம் அளித்தல் அடிப்படையில் டாடா எலக்ரானிக்ஸ் நிறுவனத்தில் 90 சதவீதம் பெண்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது. ஒரு நாடு, ஒரு மாநிலம், ஒரு சமுதாயம் முன்னேற வேளாண்மை முக்கிய பங்கு வகிக்கிறது.

    அதேப்போல பொருளாதாரத்தில் முன்னேற்றம் அடைய தொழில் நிறுவனங்கள் முக்கிய பங்கு வகிக்கிறது. தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் தொழில் சாலைகள் பெருமளவில் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

    டாடா எலக்ரானிக்ஸ் நிறுவனம் தமிழக அரசு மற்றும் மாவட்ட நிர்வாகத்தோடு இணைந்து வேலை வாய்ப்பு முகாமை நடத்தி பணியாணைகளை வழங்கி வருகிறது. மக்கள் பிரதிநிதிகளின் கோரிக்கைகளை நிறுவனம் ஏற்று கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்க வேண்டும்.

    இதுவரை இந்த நிறுவனத்தில் 9 ஆயிரம் நபர்கள் வேலை பெற்றுள்ளார்கள்.

    அவற்றில் கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த 3 ஆயிரத்தும் 500 பேர் வேலை வாய்ப்பு பெற்றுள்ளார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மாவட்ட வருவாய் அலுவலர் ( நில எடுப்பு பிரிவு) அலுவலகம் முன்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    • அதிகாரிகளிடம் பா.ம.க.நிர்வாகிகள் மற்றும் விவசாயிகள் காரசார வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    ஓசூர்,

    பெங்களூருக்கு செல்லும் வாகன போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் தமிழக எல்லையிலிருந்து புதிதாக வெளி வட்ட சாலை அமைக்கப்படுகிறது.

    அதன்படி, கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே பேள கொண்டபள்ளி முதல் கர்நாடக எல்லை வரை 35.76 கி.மீ. தொலைவிற்கு சாட்டிலைட் டவுன் ரிங் ரோடு ( எஸ்.டி.ஆர்.ஆர்.) என்ற புதிய சாலை அமைக்கப்படுகிறது.

    இதற்காக ஓசூர் பகுதியில் 340 ஹெக்டர் நிலம் விவசாயிகளிடமிருந்து கையகப்படுத்தப் பட்டுள்ளது. ஆனால் விவசாயிகளுக்கு இதுவரை உரிய இழப்பீடு வழங்கப்படவில்லை.

    இதனை உடனடியாக வழங்க வலியுறுத்தி கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட பா.ம.க.. மற்றும் உழவர் பேரியக்கம் சார்பில், ஓசூரில் உள்ள தனி மாவட்ட வருவாய் அலுவலர் ( நில எடுப்பு பிரிவு) அலுவலகம் முன்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    இந்த ஆர்ப்பாட்ட நிகழ்ச்சிக்கு, பா.ம.க. மாவட்ட செயலாளர் அருண் ராஜன் தலைமை தாங்கினார். இதில் மாவட்ட தலைவர் கோவிந்தராஜ், அமைப்பு செயலாளர் விசுவநாதன் மற்றும் நிர்வாகிகள், விவசாயிகள் என 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    இதில், தமிழக அரசு இனியும் காலம் தாழ்த்தாமல் கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கு உடனடியாக உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டது. தவறும் பட்சத்தில், டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. தலைமையில் ஓசூரில் மிகப் பெரிய போராட்டம் நடத்தப்படும் என்றும் எச்சரிக்கை விடப்பட்டது.

    முன்னதாக நேற்று காலை முதல், அலுவலகத்தை முற்றுகையிட்டு, உடனடியாக இழப்பீடு வாங்க வலியுறுத்தியும், கையகப்படுத்தப்பட்ட விவசாய நிலங்கள் மற்றும் தென்னை மரங்களுக்குரிய உரிமைத்தொகையை குறிப்பிட்டு வழங்கப்படும் அவார்டு பிரதியை உடனே வழங்க வலியுறுத்தியும், தனி மாவட்ட வருவாய் அலுவலர் (நில எடுப்பு) முத்துமாரி மற்றும் அதிகாரிகளிடம் பா.ம.க.நிர்வாகிகள் மற்றும் விவசாயிகள் காரசார வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    மாலை வரை இந்த நிலை நீடித்தது. பின்னர் 10 பேருக்கு அவார்டு பிரதி வழங்கியும், மற்ற விவசாயிகளுக்கு இன்னும் 2 நாட்களுக்குள் வழங்கப்படும் என்று அதிகாரிகள் உறுதியளித்ததையடுத்து மாலை 5 மணி அளவில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

    • ஓசூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மாணவ, மாணவி களுக்கு மர்ம காய்ச்சல் பரவி வருகிறது.
    • மருத்துவ சிகிச்சை வழங்க வேண்டும் என்று மாணவ,மாணவிகளின் பெற்றோர்களும், பொதுமக்களும் வலியுறியுத்தி வருகின்றனர்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்ட த்தில் ஓசூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மாணவ, மாணவி களுக்கு மர்ம காய்ச்சல் பரவி வருகிறது.மேலும் சூழிநிலை மாற்றத்தாலும் பல்வேறு நோய் பாதிப்புகள் ஏற்படுகின்றன.

    அரையாண்டு தேர்வு நடந்த நிலையில் பெரும்பாலான மாணவ, மாணவிகள் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு தவித்து ள்ளனர்.

    கிராமப்புற பகுதிகளில் இந்த பாதிப்பு அதிக அளவில் இருந்து வருகிறது. ஒரே குடும்பத்தில் 3 பேருக்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

    இதையடுத்து பள்ளிகளில் சிறப்பு மருத்துவ முகாம்களை நடத்தி பரிசோதனை நடத்தி உரிய மருத்துவ சிகிச்சை வழங்க வேண்டும் என்று மாணவ,மாணவிகளின் பெற்றோர்களும், பொதுமக்களும் வலியுறியுத்தி வருகின்றனர்.

    இது குறித்து கல்வித்துறை வட்டாரங்களில் விசாரித்தபோது இந்த விவகாரம் குறித்து மாவட்ட கல்வி அதிகாரியிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    விரைவில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளின் கலந்து ஆலோசனை நடத்தி மருத்துவ முகாம்கள் நடத்துவது குறித்து பரிசீலிக்கப்பட்டு வருகிறது என்று கூறியுள்ளனர்.கொரோனா தொற்றின் அடுத்த பரவல் பல்வேறு நாடுகளில் பரவி வரும் சூழலில் சாதாரண காய்ச்சல் கூட மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்துவது தவிர்க்க முடியாதது.

    • செந்தில்குமாரின் உடலை நேற்று முன்தினம் கிணற்றில் இருந்து மீட்டு பிரேத பரிசோதனைக்கு பிறகு உறவினர்களிடம் போலீசார் ஒப்படைத்தனர்.
    • வெள்ளைச்சாமி, செங்குட்டுவன் ஆகிய 2 பேரையும் போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம் கல்லாவியை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 48). போலீஸ் ஏட்டாக பணியாற்றிய இவர், பணி காலத்தில் பல்வேறு குற்ற செயல்களில் ஈடுபட்டதால் பணி நீக்கம் செய்யப்பட்டார்.

    இந்த நிலையில் செந்தில்குமார் கடந்த செப்டம்பர் மாதம் 16-ந் தேதி மாயமானார். இது தொடர்பாக செந்தில்குமாரின் தாயார் பாக்கியம் கல்லாவி போலீஸ் நிலையம், கலெக்டர் அலுவலகத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

    இதனிடையே மாயமான செந்தில்குமாரின் செல்போனும், அவரது மகனின் செல்போனும், இவர்களது கார் டிரைவர் கமல்ராஜ் (37) செல்போனும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது.

    இதனால் அவர்கள் மீது சந்தேகம் அடைந்த போலீசார் அவர்களை கடந்த 13-ந் தேதி விசாரணைக்கு வருமாறு போலீசார் கூறினர். ஆனால் அவர்கள் போலீசில் ஆஜராகாமல் கடந்த 14-ந் தேதி கிருஷ்ண கிரி கோர்ட்டில் சரண் அடைந்தனர்.

    அப்போது அவர்கள் செந்தில்குமாரை கொலை செய்து தென்பெண்ணை ஆற்றில் உடலை வீசி விட்டதாக போலீசாரிடம் கூறினர்.

    இதையடுத்து இந்த கொலை தொடர்பாக செந்தில்குமாரின் மனைவி சித்ராவிடம் ஊத்தங்கரை துணை போலீஸ் சூப்பிரண்டு அமலா அட்வின் விசாரணை நடத்தினார்.

    அப்போது செந்தில்குமாரை கொலை செய்து உடலை கல்லை கட்டி ஊத்தங்கரை பாரதிபுரம் பகுதியில் உள்ள ஒரு கிணற்றில் வீசியது தெரிய வந்தது.

    இதையடுத்து செந்தில்குமாரின் உடலை நேற்று முன்தினம் கிணற்றில் இருந்து மீட்டு பிரேத பரிசோதனைக்கு பிறகு உறவினர்களிடம் போலீசார் ஒப்படைத்தனர்.

    இதையடுத்து சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சித்ரா, பாவக்கல்லைச் சேர்ந்த பெண் சாமியார் சரோஜா என்கிற சரோஜா தேவி (37), கூலிப்படையை சேர்ந்த ஊத்தங்கரை பாரதிபுரம் விஜயகுமார் (21), தூத்துக்குடி மாவட்டம் மாங்குட்டைபுரம் கிழக்கு தெருவை சேர்ந்த ராஜ பாண்டியன் (32) ஆகிய 4 பேரையும் போலீசார் நேற்று கைது செய்தனர்.

    மேலும் போலீஸ் ஏட்டு கொலை வழக்கில் தலைமறைவான கூலிப்படை தலைவன் வெள்ளைச்சாமி, செங்குட்டுவன் ஆகிய 2 பேரையும் போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

    கைதான சித்ரா போலீசில் அளித்துள்ள பரபரப்பு வாக்குமூலம் வருமாறு:-

    எனது கணவர் செந்தில்குமார் கடந்த 2008-ல் ஒரு காரை வாங்கி அதை வாடகைக்கு ஓட்டி வந்தார். எனது கணவரிடம் கார் டிரைவராக கமல்ராஜ் என்பவர் வேலை பார்த்தார். முதலில் அவருடன் நான் சாதாரணமாக பழகினேன். இந்த பழக்கம் நாளடைவில் எங்களுக்குள் கள்ளக்காதலாக மாறியது.

    எனது கணவர் வீட்டில் இல்லாத நேரங்களில் கமல்ராஜ் எங்கள் வீட்டிற்கு வருவார். நாங்கள் உல்லாசமாக இருந்து வந்தோம். ஒரு நாள் எனது கணவர் செந்தில்குமார் வீட்டுக்கு வந்தபோது நான் கமல்ராஜூடன் தனிமையில் இருந்தேன்.

    இதைப்பார்த்து ஆத்திரம் அடைந்த அவர், வீட்டில் இருந்த பொருட்களை உடைத்தார். அதன் பிறகு அவருக்கும், கமல்ராஜூக்கும் பிரச்சினை ஏற்பட்டது. இது தொடர்பாக கமல்ராஜ் கொடுத்த புகாரில் எனது கணவர் கைது செய்யப்பட்டார். அதன்பிறகு ஜாமீனில் வந்தார்.

    எனக்கு தொடர்ந்து பிரச்சினைகள் வந்ததால் பாவக்கல்லை சேர்ந்த பெண் சாமியார் சரோஜாவை சந்தித்தேன். எனது பிரச்சினைகளை கேட்ட அவர், என்னிடம் கூலிப்படை உள்ளது. ரூ.10 லட்சம் கொடுத்தால் உனக்கு இடையூறாக இருக்கும் கணவரை தீர்த்து கட்டி விடலாம். யாருக்கும் தெரியாமல் கதையை முடித்து விடுவோம் என்று திட்டம் போட்டு கொடுத்தார்.

    இதையடுத்து நான் ரூ.9 லட்சத்து 60 ஆயிரம் தயார் செய்து பெண் சாமியார் சரோஜாவிடம் கொடுத்தேன். அந்த பணத்தை கூலிப்படை தலைவன் வெள்ளைச்சாமியிடம் சாமியார் கொடுத்தார்.

    அப்போது நான், எனது கணவரின் கதையை முடித்து விடுங்கள். இதில் நான் சம்பந்தப்பட்டது யாருக்கும் தெரிய கூடாது என்று கூறினேன்.

    அதன்படி சம்பவத்தன்று செந்தில்குமாரை எனது மகன் ஜெகதீஷ்குமார் மூலம் வீட்டிற்கு வரவழைத்தோம். அங்கு தயாராக இருந்த கூலிப்படையினர், அவரை அடித்துக்கொலை செய்தனர்.பின்னர் உடலில் கல்லை கட்டி பாரதிபுரத்தில் உள்ள பாழடைந்த கிணற்றில் போட்டு விட்டோம்.

    இவ்வாறு அவர் வாக்குமூலத்தில் அளித்துள்ளார்.

    பின்னர் கைதான அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சேலம் சிறையில் அடைத்தனர்.

    • ஜவளகிரி வனச்சரக பகுதியில் 50-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் முகாமிட்டுள்ளன.
    • இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

    தேன்கனிக்கோட்டை,

    கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே உள்ள ஜவளகிரி வனச்சரக பகுதியில் 50-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் முகாமிட்டுள்ளன.

    கூட்டத்தில் இருந்து பிரிந்த ஒற்றை யானை நேற்று அதிகாலை ஓசட்டி கிராமத்திற்குள் புகுந்து விவசாயிகள் பயிரிட்டிருந்த நெல் வயலுக்குள் இறங்கி பயிர்களை தின்றும் காலால் மிதித்தும் நாசம் செய்தன.

    இதை அறிந்த கிராம மக்கள் மற்றும் விவசாயிகள் டார்ச் லைட் அடித்து சத்தம் போட்டு வனப்பகுதிக்கு யானையை விரட்டினர்.

    ஆனால் ஒரு மணி நேரமாக அதே இடத்தில் நின்று பயிர்களை காட்டு யானை தின்று கொண்டிருந்ததால் விவசாயிகளுக்கு பல ஆயிரம் ரூபாய் அளவிற்கு இழப்பு ஏற்பட்டது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

    கிராம பகுதிகளில் ஒற்றை யானை சுற்றித்திரிவதால் ஒசட்டி, கண்டகானப்பள்ளி, தாவரக்கரை உள்ளிட்ட கிராம மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும், வனப்பகுதிக்குள் செல்ல வேண்டாம் என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    • திருட்டுத்தனமான ஜே.சி.பி. மூலம் செம்மண்ணை அள்ளுவது தெரிந்தது.
    • அதிகாரிகள் வருவதை பார்த்த டிரைவர் அங்கிருந்து தப்பியோடி விட்டார்.

    தேன்கனிக்கோட்டை,

    தேன்கனிக்கோட்டை தாலுகாவிற்கு உட்பட்ட சாலிவாரம் வி.ஏ.ஓ. லட்சுமிகாந்தன் மற்றும் அதிகாரிகள் அப்பகுதியில் ரோந்து சென்றனர்.

    அப்போது அப்பகுதியில் உள்ள அரசு புறம்போக்கு நிலத்தில், திருட்டுத்தனமான ஜே.சி.பி. மூலம் செம்மண்ணை அள்ளுவது தெரிந்தது.

    அதிகாரிகள் வருவதை பார்த்த டிரைவர் அங்கிருந்து தப்பியோடி விட்டார்.

    இதையடுத்து பொக்லைன் வாகனத்தை பறிமுதல் செய்த வி.ஏ.ஓ. லட்சுமிகாந்தன் தேன்கனிக்கோட்டை போலீசில் ஒப்படைத்தார்.

    போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பஸ்சின் டிரைவர் அதிவேகமாக ஒட்டி சென்றதாக கூறப்படுகிறது.
    • யசோதா என்ற 40 வயது மதிக்கத்தக்க பெண் உடல் நசுங்கி உயிரிழந்தார்.

    ராயக்கோட்டை,

    கிருஷ்ணகிரி மாவட்டம், நாகமங்கலத்திலிருந்து பெங்களூருவுக்கு இன்று காலை தனியார் பஸ் ஒன்று புறப்பட்டு சென்றது. பஸ்சில் 50-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர்.

    புறப்பட்டது முதலே பஸ்சின் டிரைவர் அதிவேகமாக ஒட்டி சென்றதாக கூறப்படுகிறது.

    இந்நிலையில் கெலமங்கலம் அருகே பஸ் வந்த போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து நிலை தடுமாறி சாலையோரம் இருந்த வயலில் கவிழ்ந்தது. இதையடுத்து பயணிகள் கூச்சலிட்டனர்.

    இந்த சத்தம் கேட்டு அக்கம்பக்கம் உள்ளவர்கள் திரண்டு வந்து விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

    இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த கெலமங்கலம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.

    இதில் பஸ்சின் அடியில் சிக்கிய யசோதா என்ற 40 வயது மதிக்கத்தக்க பெண் உடல் நசுங்கி உயிரிழந்தார். மேலும் பஸ்சில் பயணித்த 20-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

    அவர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் தேன்கனிக்கோட்டை, ஓசூர் அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். விபத்தில் சிக்கிய பஸ்சை அங்கிருந்து போலீசார் அப்புறப்படுத்தினர்.

    விபத்தில் சிக்கிய பஸ்சின் பின்சக்கரங்கள் தனியாக கழன்று ஓடிவிட்டது குறிப்பிடத்தக்கது.

    இந்த விபத்து குறித்து பஸ் ஓட்டுனரிடம் கெலமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • நலமுடன் இருந்த குழந்தை, நேற்று திடீரென உயிரிழந்தது.
    • திடீரென அனைவரும் மருத்துவமனை முன்பு சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

    ஓசூர்,

    ஓசூர் அருகேயுள்ள பேகேபள்ளி கிராமத்தை சேர்ந்தவர் கணேஷ், கூலித் தொழிலாளி. இவரது மனைவி சத்யா (22).இவர்களுக்கு திருமணமாகி 1 வருடம் ஆகிறது.

    இந்த நிலையில், நிறைமாத கர்ப்பிணியாக இருந்த சத்யா கடந்த வெள்ளிக்கிழமை ஓசூர் அரசு மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டார். நேற்று முன்தினம் அதிகாலை அவருக்கு சுக பிரசவத்தில் ஆண் குழந்தை பிறந்தது.

    பிரசவத்தின்போது குழந்தை எளிதாக வெளியே வராததால், குழந்தையை டாக்டர்கள் கருவிகள் மூலம் வெளியே இழுத்து பிரசவம் பார்த்ததாகவும்.

    இதில் குழந்தைக்கு பாதிப்பு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. அதனைத்தொடர்ந்து குழந்தை, மருத்துவமனையில் உள்ள பச்சிளம் குழந்தைகள் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தது.

    நலமுடன் இருந்த குழந்தை, நேற்று திடீரென உயிரிழந்தது. இதனால் குழந்தையின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

    இதையடுத்து அவர்கள் ஓசூர் அரசு மருத்துவமனை நிர்வாகத்தை கண்டித்து ஆவேசத்துடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது மருத்துவமனை நிர்வாகம் மற்றும் டாக்டர்களுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.

    பின்னர் திடீரென அனைவரும் மருத்துவமனை முன்பு சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    இது குறித்து தகவல் அறிந்து அங்கு வந்த ஓசூர் டவுன் போலீசார் மற்றும் தாசில்தார் கவாஸ்கர் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    இதையடுத்து மறியலில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். குழந்தை இறந்த சம்பவம் குறித்து மருத்துவமனை நிர்வாகத்திடம் அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். 

    • கர்நாடக மாநில பக்த கனகதாசர் ஜெயந்தி விழா நடைபெற்றது.
    • பாவடா எனும் தலையில் தேங்காய் உடைத்து வழிபாடு செய்தனர்.

    தேன்கனிக்கோட்டை,

    கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டையில் கனகதாசர் சேவா சமிதி சார்பில் சார்பில் 535-வது கர்நாடக மாநில பக்த கனகதாசர் ஜெயந்தி விழா நடைபெற்றது.

    விழாவிற்கு, கனகதாசர் சேவா சமிதி தலைவா பாபன்னா தலைமை தாங்கினார். விழாவில் ஆந்திரா மாநில எம்.பி. கோரனடி மாதவராவ், டெலலி ஆம் ஆத்மி எம்.எல்.ஏ. தினேஷ் மௌரியா, ஆனொக்கல் சிவன்னா, கர்நாடக நடிகர் யோகேஷவா, பெங்களு எச்.எஸ்.ஆர். லே-அவுட் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பேசினர்.

    விழாவில் ரத்ததான முகாம், மாற்றுதிறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. முன்னதாக பலவேறு பகுதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட குல தெய்வங்கள் அலங்கரிக்கப்பட்டு முக்கிய வீதிகளில் வீரகாசி நடனத்துடன் ஊர்வலமாக விழா மேடை அருகே கொண்டு வரப்பட்டது.

    அங்கு கூடிய குருபர் குல மக்கள் தெய்வங்களுக்கு சிறப்பு பூஜைகள் செய்து பாவடா எனும் தலையில் தேங்காய் உடைத்து வழிபாடு செய்தனர்.

    விழாவில் அன்னதானம் நடைபெற்றது.

    • முன்னாள் பாரத பிரதமர் வாஜ்பாய் பிறந்த நாள் கொண்டாடப்பட்டது.
    • வாஜ்பாய் படத்திற்கு மாவட்ட பா.ஜனதா பொதுச் செயலாளர் வி.எம்.அன்பரசன் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி ஒன்றியம் குந்தாரப்பள்ளியில் மேற்கு மாவட்ட பா.ஜனதா சார்பில் மறைந்த முன்னாள் பாரத பிரதமர் வாஜ்பாய் பிறந்த நாள் கொண்டாடப்பட்டது.

    இதையொட்டி அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த வாஜ்பாய் படத்திற்கு மாவட்ட பா.ஜனதா பொதுச் செயலாளர் வி.எம்.அன்பரசன் மலர் தூவி மரியாதை செலுத்தினர். தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார்.

    இந்த நிகழ்ச்சியில் வேப்பனப்பள்ளி தெற்கு ஒன்றிய தலைவர் ரமேஷ்பாபு, ஒன்றிய பொதுச் செயலாளர் பிரகாஷ், நிர்வாகிகள் சந்திரன், முருகன், சரவணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • மாநில மாநாடு மற்றும் இளைஞர் முகாம் 2 நாட்கள் நடைபெற்றது.
    • பக்தர்கள், இளைஞர்கள், மாணவ, மாணவியர் திரளாக கலந்து கொண்டனர்.

    ஓசூர்,

    ஓசூரில் ஸ்ரீராமகிருஷ்ணர் பக்தர்கள் 30-வது மாநில மாநாடு மற்றும் இளைஞர் முகாம் 2 நாட்கள் நடைபெற்றது.

    ஓசூரில் ரயில் நிலைய சாலையில் உள்ள தனியார் மண்டபத்தில், முதல் நாள் பக்தர்களுக்கான நிகழ்ச்சி நடந்தது. நேற்று இளைஞர் முகாம் நடைபெற்றது. இந்த நிகழ்விற்கு, ஓசூர் பி.எம்.சி. டெக் கல்வி நிறுவனங்களின் தலைவர் பி.குமார் தலைமை தாங்கினார். மீரா மருத்துவமனை நிறுவனர் டாக்டர் சண்முகவேல் முன்னிலை வகித்தார்.

    மாநாட்டில், ராமகிருஷ்ணர், சாரதா தேவியார் பற்றிய உபதேசங்கள், பஜனைகள், பக்தர்களுக்கான சொற்பொ ழிவுகள் இடம்பெற்றன.

    இளைஞர்களுக்கான முகாமில், தியானம், சமுதாய முன்னேற்றம் பற்றிய சொற்பொழிவு, சுவாமி விவேகானந்தரின் அவதார நோக்கம் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

    சுவாமி வீரபத்ரானந்தா, சுவாமி வேத புருஷானந்தா, சத்யானந்தா மகராஜ், சுவாமி சுத்பானந்த மகராஜ் ஆகியோர் பல்வேறு தலைப்புகளில் சொற்பொழி வாற்றினார்கள். இதில், பக்தர்கள், இளைஞர்கள், மாணவ, மாணவியர் திரளாக கலந்து கொண்டனர்.

    இந்த மாநாட்டை ஓசூர் பி.எம்.சி.டெக் கல்வி நிறுவனங்கள் மற்றும் மீரா மருத்துவமனை இணைந்து நடத்தின.

    • சுமார் 50-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
    • சாலையை பயன்படுத்த முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

    மத்தூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த பண்ணந்தூர் அருகேயுள்ளது ஆத்துக்கொல்லை கிராமம். இந்த பகுதியில் சுமார் 50-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

    இந்த கிராம மக்கள் இறந்தவர்கள் உடலை ஆத்துக்கொல்லை கிராமத்தை ஒட்டியவாறு செல்லும் தென்பெண்ணை ஆற்றங்கரையோரம் புதைப்பது வழக்கம்.

    இந்த சுடுகாட்டிற்கு செல்லும் பாதையை அப்பகுதி மக்கள் நீண்ட காலமாக பயன்படுத்தி வந்த நிலையில் அந்த பாதையை சிமென்ட் சாலையாக மாற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    இதனை அதே பகுதியை சேர்ந்த ஒருவர் தடுத்து பாதையை துண்டிப்பு செய்து தகராறில் ஈடுபட்டு வருகிறார்.

    இதனால் இந்த பகுதி மக்கள் சாலையை பயன்படுத்த முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

    மேலும் இதுகுறித்து அதிகாரிகள் கவனத்தில் கொண்டு சென்றும் எவ்வித நடவடிக்கை இல்லை என இப்பகுதி மக்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர்.

    ×