என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கனகதாசர் ஜெயந்தி விழா"

    • குரும்பர் சமுதாய மக்களின் குருவாக போற்றப்படுகிறார்.
    • கனகதாசர் படத்திற்கு மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

    ஓசூர்,

    15-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த வைணவ பக்தர் கவி கனகதாசர். இவர் இசைக் கலையில் சாதனை படைத்தவர். கன்னட பக்தி இலக்கியத்தில் மிகப்பெரிய மாற்றங்களை உருவாக்கியவர். இவர், குரும்பர் சமுதாய மக்களின் குருவாக போற்றப்படுகிறார்.

    ஓசூரில், குரும்பர் சமூக மக்கள் சார்பில் கவி கனகதாசரின் 535- வது ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. முன்னதாக, பா.ஜ.க. மாநில பொதுக்குழு உறுப்பினர் பாப்பண்ணா தலைமையில், ஓசூர் ராயக்கோட்டை ரோடு சர்க்கிளில் உள்ள பண்ட ஆஞ்சநேயா சாமி கோவிலில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு நகரின் முக்கிய வீதிகள் வழியாக 100- க்கும் மேற்பட்டோர் ஊர்வலமாக சென்றனர்.

    பின்னர்ஓசூர் தாசர பேட்டையில் ஊர்வலம் நிறைவடைந்தது. அங்கு நடைபெற்ற விழாவிற்கு, மாவட்ட குரும்பர் சமூக தலை வர்திம்மராஜ் முன்னிலை வகித்தார். இதில், சிறப்பு விருந்தினராக, ஓசூர் முன்னாள் எம்.எல்.ஏ. கே.ஏ.மனோகரன் கலந்து கொண்டு கனகதாசர் படத்திற்கு மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

    மேலும், அரசு வக்கீல் சின்னபிள்ளப்பா, குரும்பர் சங்க நிர்வாகி சேகர் உள்பட பலர் விழாவில் பேசினார்கள். விழாவில், ஊராட்சி மன்ற தலைவர்கள் கோனேரிப்பள்ளி கோபம்மா சக்கர்லப்பா, பி.எஸ். திம்மசந்திரம் முனிகிருஷ்ணப்பா,தொழிலதிபர்சத்யமூர்த்தி, மற்றும் குரும்பர் சமுதாய மக்கள் திரளாக கலந்து கொண்டனர். 

    • கர்நாடக மாநில பக்த கனகதாசர் ஜெயந்தி விழா நடைபெற்றது.
    • பாவடா எனும் தலையில் தேங்காய் உடைத்து வழிபாடு செய்தனர்.

    தேன்கனிக்கோட்டை,

    கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டையில் கனகதாசர் சேவா சமிதி சார்பில் சார்பில் 535-வது கர்நாடக மாநில பக்த கனகதாசர் ஜெயந்தி விழா நடைபெற்றது.

    விழாவிற்கு, கனகதாசர் சேவா சமிதி தலைவா பாபன்னா தலைமை தாங்கினார். விழாவில் ஆந்திரா மாநில எம்.பி. கோரனடி மாதவராவ், டெலலி ஆம் ஆத்மி எம்.எல்.ஏ. தினேஷ் மௌரியா, ஆனொக்கல் சிவன்னா, கர்நாடக நடிகர் யோகேஷவா, பெங்களு எச்.எஸ்.ஆர். லே-அவுட் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பேசினர்.

    விழாவில் ரத்ததான முகாம், மாற்றுதிறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. முன்னதாக பலவேறு பகுதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட குல தெய்வங்கள் அலங்கரிக்கப்பட்டு முக்கிய வீதிகளில் வீரகாசி நடனத்துடன் ஊர்வலமாக விழா மேடை அருகே கொண்டு வரப்பட்டது.

    அங்கு கூடிய குருபர் குல மக்கள் தெய்வங்களுக்கு சிறப்பு பூஜைகள் செய்து பாவடா எனும் தலையில் தேங்காய் உடைத்து வழிபாடு செய்தனர்.

    விழாவில் அன்னதானம் நடைபெற்றது.

    ×