என் மலர்
கன்னியாகுமரி
- தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்
- சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து நிதி ஒதுக்கும்படி கோரிக்கை விடுத்தனர்.
கன்னியாகுமரி :
கன்னியாகுமரி வாவத்துறை பகுதியில் மீனவ மழலை குழந்தைகளின் அங்கன்வாடி கட்டிடம் மிகவும் பழுதடைந்த கட்டிடத்தில் ஆபத்தான நிலையில் செயல்பட்டு வந்தது. இதைத் தொடர்ந்து அந்தப் பகுதி மீனவ பொதுமக்கள் கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ. தளவாய்சுந்தரத்தை நேரில் சந்தித்து வாவத்துறை பகுதியில் பழுதடைந்த நிலையில் செயல்பட்டு வரும் அங்கன்வாடி மைய கட்டிடத்தை மாற்றி புதிய கட்டிடம் கட்டுவதற்கு தங்களது சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து நிதி ஒதுக்கும்படி கோரிக்கை விடுத்தனர்.
மீனவ மக்களின் அந்த கோரிக்கையை தளவாய் சுந்தரம் எம்.எல்.ஏ. ஏற்று கன்னியாகுமரி வாவத்துறை பகுதியில் மீனவ மழலை குழந்தைகளின் நலன் கருதி புதிய அங்கன்வாடி கட்டிடம் கட்டுவதற்கு தனது சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில்இருந்து ரூ.10 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்தார். இதைத் தொடர்ந்து வாவத்துறை பகுதியில் ரூ..10லட்சம்செலவில் மீனவ மழலை குழந்தைகளின் புதிய அங்கன்வாடி கட்டிடம் கட்டப்பட்டது. இதன் திறப்பு விழா உலக மீனவர் தினமான இன்று காலை நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு முன்னாள் அமைச்சரும் அ.தி.மு.க. அமைப்பு செயலாளரும் குமரி கிழக்கு மாவட்ட கழக செயலாளருமான தளவாய் சுந்தரம் எம்.எல்.ஏ. தலைமை தாங்கி புதிய அங்கன்வாடி கட்டிடத்தை திறந்து வைத்து குத்து விளக்கு ஏற்றினார். பின்னர் அவர் பேசியதாவது:-
இன்று அகில உலக மீனவர் தினம்என்பதால் மீனவ மக்களுக்கு எனது உலக மீனவர் தின வாழ்த்துக்களை முதலில் தெரிவித்துக் கொள்கிறேன்.மீனவர் நலன் காக்கும் ஒரே இயக்கம் அ.தி.மு.க. சுனாமி ஏற்பட்ட நேரத்தில் மட்டுமின்றி கொரோனா காலத்திலும்மீனவ மக்களுக்காக எனது சார்பிலும் அ.தி.மு.க. சார்பிலும் ஏராளமான நலத்திட்ட உதவிகளை வழங்கியதோடு அவர்களுக்கு வாழ்வாதா ரத்தையும் அளித்துஉள்ளோம்.மீனவ மக்கள் பாதுகாப்பாக மீன்பிடி தொழில் செய்வதற்காக கடற்கரை கிராமங்களில் தூண்டில் வளைவு அமைத்துக் கொடுத்தது அ.தி.மு.க. ஆட்சியில் தான். ஓமன் நாட்டில் தவிக்கும் கோவளம் பகுதியை சேர்ந்த 9 மீனவர்களையும் போர்க்கால அடிப்படையில் மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு கடிதம் எழுதி உள்ளேன். விரைவில் அந்த மீனவர்கள் பாதுகாப்பாக ஊர்திரும்ப வேண்டும் என்று உலக மீனவர்தினமான இன்று இறைவனை பிரார்த்திக்கிறேன்.
இவ்வாறு தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. பேசினார்.
அதன்பிறகு அங்கன்வாடி புதிய கட்டடத்தில்தளவாய் சுந்தரம் எம்.எல்.ஏ. உலக மீனவர்தினத்தையொட்டி கேக் வெட்டி அங்கன்வாடியில் பயிலும் குழந்தைகளுக்கு கேக் மற்றும் இனிப்பு பொட்டலங்களை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் வாவத்துறை பங்குத்தந்தை லிகோரியஸ் புதிய அங்கன்வாடி கட்டிடத்தை ஆசிர்வதித்து ஜெபம்செய்தார். இந்த நிகழ்ச்சியில் குமரி கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. அவைத்தலைவர் சேவியர் மனோகரன், தோவாளை தெற்கு ஒன்றிய அ.தி.மு.க. செயலாளரும் ஆரல் வாய்மொழி பேரூராட்சி தலைவருமான முத்துக்குமார், அகஸ்தீஸ்வரம்வடக்கு ஒன்றிய செயலாளர் ஜெஸீம், வடக்கு ஒன்றிய செயலாளர் தாமரை தினேஷ், தோவாளை ஊராட்சி ஒன்றிய தலைவி சாந்தினி பகவதியப்பன், அகஸ்தீஸ்வரம்ஊராட்சி ஒன்றிய தலைவர் அழகேசன், ஒன்றிய இலக்கிய அணி செயலாளர் பகவதியப்பன், கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சி வார்டு கவுன்சிலர் ஆடலின் சேகர், பேரூர் கழகச் செயலாளர்கள் ஆடிட்டர் சந்திரசேகரன், குமார், எழிலன், சிவபாலன், மணிகண்டன், டாக்டர் தேவசுதன், லீபுரம் ஊராட்சி அ.தி.மு.க. செயலாளர் லீன், அ.தி.மு.க. நிர்வாகிகள் நசரேத் பசலியான், சுகுமாரன் டாஸ்மாக் மணிகண்டன், சந்துரு என்று ஜெயச்சந்திரன், கிருஷ்ண தாஸ், அக்க்ஷயா கண்ணன், வக்கீல் ஜெயகோபால் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- கிண்டல் செய்து இரும்பு கம்பியால் தாக்கியதாக கூறப்படுகிறது.
- இருதரப்பினையும் சேர்ந்த 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை
குழித்துறை :
மார்த்தாண்டம் போலீஸ் நிலையத்துக்குட்பட்ட பாகோடு ஊராளிவிளையை சேர்ந்தவர் சாந்தப்பன் (வயது 48), கட்டிட தொழிலாளி. சம்பத்தன்று வீட்டின் அருகாமையில் டீ குடித்துக்கொண்டிருந்தபோது, அதே பகுதியை சேர்ந்த வினோலின் (36), அனல் ஜெகலின் றோஸ் (37) ஆகியோர் கிண்டல் செய்து இரும்பு கம்பியால் தாக்கியதாக கூறப்படுகிறது.
இதனை பார்த்த அவரது தாயார் கனகம்மாள் (70), தடுக்க சென்றதாக கூறப்படுகிறது. அவரையும் கம்பியால் தாக்கியதால் அவரும் படுகாயம் அடைந்துள்ளார். இதையடுத்து இருவரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு குழித்துறை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றுள்ளனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அதேபோல மறுதரப்பில் கொடுத்த புகாரில், அதே பகுதியை சேர்ந்த பிறிகேஸ் வினோலின் (26), அவ்வழியே மோட்டார் சைக்கிள் சென்று கொண்டிருந்தபோது சாந்தப்பன் (46), ஜான்சன் (55) ஆகியோர் தடுத்து நிறுத்தி இரும்பு கம்பியால் தாக்கி காயப்படுத்தி உள்ளனர்.
இதையடுத்து அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு குழித்துறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். இதுகுறித்து மார்த்தாண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கு சம்பந்தமாக இருதரப்பினையும் சேர்ந்த 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- 8-ந்தேதி டர்பனை உடலில் ஊற்றி தீக்குளித்தார்.
- ராஜாக்கமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராஜாக்கமங்கலம், நவ.21-
ராஜாக்கமங்கலம் அருகே பரமன்விளையை சேர்ந்தவர் ஸ்ரீனிவாசன் (வயது 65). இவருக்கு மதுப்பழக்கம் உள்ளதாக கூறப்படுகிறது. இவர் கடந்த 8-ந்தேதி டர்பனை உடலில் ஊற்றி தீக்குளித்தார். உடனடியாக உறவினர்கள் அவரை மீட்டு நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக ஸ்ரீனிவாசனை ஆசாரிபள்ளம் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் சிகிச்சை பலனின்றி இன்று காலை ஸ்ரீனிவாசன் பரிதாபமாக இறந்தார். இது குறித்து ராஜாக்கமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- 17-ந்தேதி இரணியல் கோர்ட் அருகில் உள்ள பிரபல டாக்டர் ஒருவரிடம் ரூ.10 ஆயிரம் கடன் பெற்றுள்ளார்.
- பணத்தை எண்ணியபோது ரூ. 5 ஆயிரத்தை காணவில்லை
இரணியல் :
இரணியல் அருகே உள்ள மைலோடு பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ்குமார் (வயது 46). பத்திரம் எழுதும் அலுவலகத்தில் பணிபுரிந்து வருகிறார். இவர் கடந்த 17-ந்தேதி இரணியல் கோர்ட் அருகில் உள்ள பிரபல டாக்டர் ஒருவரிடம் ரூ.10 ஆயிரம் கடன் பெற்றுள்ளார். பணத்தை பாக்கெட்டில் வைத்த அவர் வேலைக்கு சென்றுவிட்டார். அங்கு வைத்து பணத்தை எண்ணியபோது ரூ. 5 ஆயிரத்தை காணவில்லை. பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்காததால் வீட்டிற்கு சென்றுவிட்டார்.
இந்த நிலையில் நெய்யூர் முரசன்கோடு பகுதியை சேர்ந்த மோகன் என்பவரது மகன் விஜின் (20) கல்லூரி தேர்வு எழுதிவிட்டு அரசு பேருந்தில் வந்து இரணியல் கோர்ட் பஸ் நிறுத்தத்தில் இறங்கியுள்ளார். அப்போது கீழே ரூ.5 ஆயிரம் கிடப்பதை பார்த்துள்ளார். அதனையடுத்து போலீஸ் நிலையத்தில் பணத்தை கொடுத்து உரியவரிடம் ஒப்படைக்குமாறு கூறி சென்றுவிட்டார்.
இதனிடையே நேற்று காலை பணத்தை இழந்த ராஜேஷ்குமார் இரணியல் போலீஸ் நிலையம் வந்தார். உரிய விசாரணைக்குப்பின், அவரிடம் இரணியல் இன்ஸ்பெக்டர் செந்தில்வேல்குமார் முன்னிலையில் விஜின் ஒப்படைத்தார். கீழே கிடந்த பணத்தை நேர்மையாக ஒப்படைத்த விஜினுக்கு பரிசுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டது
- மோட்டார் சைக்கிளில் தப்பிய 2 பேருக்கு வலைவீச்சு
- பள்ளி சீருடையை மாற்றி விட்டு டியூசன் வகுப்புக்கு புறப்பட்டான்.
மணவாளக்குறிச்சி :
குமரி மாவட்டம் மண்டைக்காடுஅருகே உள்ள கூட்டுமங்கலத்தைச் சேர்ந்தவர் சுரேஷ். இவர் தேசியமயமாக்கப்பட்ட ஒரு வங்கியில் கணிணி பிரிவில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார்.
இவரது மகன் அஷ்வந்த் (வயது 9). இவன் அந்தப்பகுதியில் உள்ள சி.பி.எஸ்.இ. பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வருகிறான். மாலையில் டியூசன் வகுப்புக்கும் சென்று வந்தான்.
நேற்று மாலை அஷ்வந்த், பள்ளியில் இருந்து வழக்கம்போல் வீடு திரும்பினான். பின்னர் அவன் பள்ளி சீருடையை மாற்றி விட்டு டியூசன் வகுப்புக்கு புறப்பட்டான். பஸ் நிலையம் பகுதிக்கு அஷ்வந்த் வந்த போது, 2 பேர் மோட்டார் சைக்கிளில் அங்கு வந்தனர்.
அவர்கள் நைசாக அஷ்வந்திடம் பேச்சுக் கொடுத்தனர். அப்போது பஸ் நிலைய பகுதியில் ஆட்கள் நடமாட்டம் குறைவாக இருந்தது. இதனை பயன்படுத்தி 2 பேரும் திடீரென, அஷ்வந்த்தை மோட்டார் சைக்கிளில் கடத்திச் செல்ல முயன்றனர். இதனை எதிர்பார்க்காத அவன், அவர்களது பிடியில் இருந்து தப்பிக்க முயன்றான். உடனே 2 பேரும் அஷ்வந்த் வாயில் துணியை (கர்சீப்) வைத்து அழுத்தி உள்ளனர்.
அந்த நேரத்தில் ஊர் மக்கள் அங்கு வந்ததால், மோட்டார் சைக்கிள் நபர்கள், அஷ்வந்தை விட்டு விட்டு தப்பிச் சென்று விட்டனர். டியூசன் சென்ற மாணவனை கடத்த முயன்ற சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுகுறித்து மண்டைக்காடு போலீசில் சுரேஷ் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அஷ்வந்த்தை கடத்த முயன்றது யார்? எதற்காக கடத்த முயன்றனர்? முன்விரோத செயலா? அல்லது பணம் பறிக்க முயற்சியா? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்
- தொலையாவட்டம் பகுதியில் ரூ.3 கோடியே 5 லட்சத்தில் கட்டப்பட்ட கிள்ளியூர் தாலுகா அலுவலக கட்டிடத்தையும் திறந்தார்
திருவட்டார் :
குமரி மாவட்டம் கல்குளம் தாலுகா கடந்த 2019-ம் ஆண்டு இரண்டாக பிரிக்கப்பட்டது. திருவட்டாரை மையமாக வைத்து புதியதாக திருவட்டார் தாலுகா உதயமானது.
இதனையடுத்து திருவட்டாரில் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளா கத்தில் உள்ள பழைய அலுவலக கட்டிடங்கள் புதுப்பிக்கப்பட்டு தாலுகா அலுவலகமாக செயல்பட்டு வந்தது.
இந்த நிலையில் அமைச்சர் மனோ தங்கராஜ் திருவட்டார் தாலுகா அலுவலகத்துக்கு சொந்தமாக அலுவலக கட்டிடம் கட்ட நடவடிக்கை எடுத்தார். திருவட்டார் தாலுகாவின் மைய பகுதியான குலசேகரம், செருப்பாலூர் பகுதியில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான இடத்தில் 2 ஏக்கர் நிலம் கையகப்படுத்த ப்பட்டது.
இங்கு கட்டிடம் கட்ட ரூ.3.26 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதற்கான பணிகளை கடந்த 2021-ம் ஆண்டு டிசம்பர் மாதம் அமைச்சர் மனோதங்கராஜ் தொடங்கி வைத்தார். அதோடு அலுவலக வளாகத்தில் சுற்றுச்சுவர், நுளைவு வாயில், தாலுகா குடியிருப்பு அமைக்க கூடுதலாக ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதில் அலுவலக கட்டிடப்பணி கடந்த ஜனவரி மாதம் நிறை வடைந்தது.
இதனையடுத்து புதிய அலுவலக கட்டிடத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். தொடர்ந்து மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் குத்துவிளக்கு ஏற்றி அலுவலக செயல்பாட்டை தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து அலுவலக கட்டிடத்தை திறந்து வைத்த முதல்-அமைச்சருக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்வுக்கு மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் தலைமை தாங்கினார். பத்மநாபபுரம் சப்-கலெக்டர் கவுசிக் முன்னிலை வகித்தார். தாசில்தார் முருகன் வரவேற்றார். திருவட்டார் தாலுகாவின் முதல் தாசில்தார் சுப்பிரமணியன் நன்றி கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட அரசு வழக்கறிஞர் ஜாண்சன், தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினர் ரெமோன் மனோதங்கராஜ், திருவட்டார் ஊராட்சி ஒன்றிய தலைவர் ஜெகநாதன், முன்னாள் எம்.எல்.ஏ. டாக்டர் புஷ்பலீலா ஆல்பன், பொதுக்குழு உறுப்பினர் அலாவுதீன், உள்ளாட்சி அமைப்புகளின் நிர்வாகிகள் ஜெயந்தி ஜேம்ஸ், ஜோஸ் எட்வர்ட், பெனிலா ரமேஷ், அகஸ்டின், சுஜிர் ஜெபசிங்குமார், பொன்ரவி, பால்சன், கெப்சிபாய் றூஸ், விமலா சுரேஷ், லில்லிபாய் சாந்தப்பன், ரெஜினி விஜிலா பாய், தங்கவேல், தேவதாஸ், ஸ்டாலின்தாஸ், பேரூராட்சி செயல் அலுவலர்கள் எட்வின் ஜோஸ், ஜெயமாலினி, விஜயகுமார் உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
தொலையாவட்டம் பகுதியில் ரூ.3 கோடியே 5 லட்சத்தில் கட்டப்பட்ட கிள்ளியூர் தாலுகா அலுவலக கட்டிடத்தையும் முதல-அமைச்சர் மு.க. ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். தாலுகா அலுவலக கட்டிடத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட வருவாய் அலுவலர் சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜேஷ் குமார் எம்.எல்.ஏ. பங்கேற்று குத்து விளக்கு ஏற்றினார்.
பின்னர் அவர் பேசுகையில், பொதுமக்களின் நலன் கருதி கிள்ளியூர் தனி வருவாய் வட்டமாகவும், திருவட்டார் தனி வருவாய் வட்டமாகவும் உருவாக்க வேண்டும் என சட்டசபையில் பேசியதோடு, அப்போதைய முதல்-அமைச்சரை நேரில் சந்தித்து பலமுறை கோரிக்கை வைத்ததன் விளைவாக எனது கோரிக்கையை ஏற்று கடந்த 2019-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 19-ம் தேதி தொலையாவட்டத்தில் கால்நடை துறைக்கு சொந்தமான ஒரு பழைய அரசு கட்டிடத்தில் தற்காலிக அலுவலகமாக கிள்ளியூர் தாலுகா அலுவலகம் திறக்கப்பட்டது. கடந்த 4 ஆண்டுகளாக பழைய கட்டிடத்தில் செயல்பட்டு வந்த இந்த அலுவலகத்திற்கு புதிதாக கட்டிடம் கட்டப்பட்டது. தற்போது இந்த கட்டிடத்தை முதல-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்துள்ளார். அவருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்த நிகழ்ச்சியில் கிள்ளியூர் ஊராட்சி ஒன்றிய தலைவர் கிரிஸ்டல் ரமணிபாய், கொல்லங்கோடு நகராட்சி தலைவி ராணி ஸ்டீபன், கிள்ளியூர் பேரூராட்சி தலைவி ஷீலா சத்யராஜ், கீழ்குளம் பேரூராட்சி தலைவி சரளா கோபால் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
- ஊர்வல நிறைவில் பூக்கடை அருகே பொதுகூட்டம் நடத்தினர்.
- ஆர்.எஸ்.எஸ். நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு
தக்கலை, நவ.21-
தக்கலை அருகே திக்கணங்கோடு சந்திப்பில் இருந்து பூக்கடை வரை ஆர்.எஸ்.எஸ். ஊர்வலம் நேற்றுமுன்தினம் நடந்தது. ஊர்வல நிறைவில் பூக்கடை அருகே பொதுகூட்டம் நடத்தினர்.
போலீசார் குறிப்பிட்ட நேரத்தை விட தொடர்ந்து அதிக கூட்டத்தை கூட்டி பொது தொல்லை கொடுத்து வருவதாக பூதப்பாண்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துராஜ் தக்கலை போலீசில் புகார் செய்தார்.
புகாரின் பேரில் தக்கலை போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமசந்திரன், ஆர்.எஸ்.எஸ். மண்டல பொறுப்பாளர் விசு மற்றும் மதுரை பகுதியை சேர்ந்த தென்மண்டல தலைவர் வன்னியநாதன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆர்.எஸ்.எஸ். நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- பி.எஸ்.சி. நர்சிங் படித்து முடித்துவிட்டு பெங்களுரில் தனியார் ஆஸ்பத்தியில் வேலை பார்த்து வருகிறார்.
- குலசேகரம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
திருவட்டார் :
குலசேகரம் அருகே ஈஞ்சவிளை, செருப்பாலூர் பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 56), தொழிலாளி. இவருக்கு ஜெயா (50) என்ற மனைவி யும், ஒரு மகனும், மகளும் உள்ளனர். மகளுக்கு திருமணம் ஆகி மார்த்தாண் டத்தில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். மகன் பி.எஸ்.சி. நர்சிங் படித்து முடித்துவிட்டு பெங்களுரில் தனியார் ஆஸ்பத்தியில் வேலை பார்த்து வருகிறார்.
ராஜேந்திரன் வயிற்று வலியினால் அவதிப்பட்டு வந்தார். இதற்காக பல்வேறு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை. இதனால் மது அருந்தி வந்தார். நேற்று மாலை வீட்டின் பின்புறம் தோட்டத்தில் மயங்கிய நிலையில் படுத்து இருந்தார். இவரது மனைவி ஜெயா பார்த்தபோது வாயில் இருந்து நுறை தள்ளியபடி இருந்தது. உடனே அக்கம் பக்கத்தினர் உதவியுடன் குலசேகரம் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக் காக சேர்த்தனர்.
டாக்டர் பரிசோதித்து பார்த்தபோது ராஜேந்திரன் ஏற்கனவே விஷம் குடித்து இறந்தது தெரியவந்தது. ஜெயா குலசேகரம் போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜேந்திரன் உடலை கைப்பற்றி குலசேகரம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
- 2 கி.மீ. தூரம் நடந்து சென்று பகவதி அம்மனை தரிசிக்கும் அவலம்
- கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு வர வேண்டும் என்றால் ஆட்டோ அல்லது வேறு போக்குவரத்து தேவைப்படுகிறது
கன்னியாகுமரி :
கன்னியாகுமரியில் சபரிமலை சீசன் தொ டங்கிய நிலையில் ஏராள மான அய்யப்ப பக்தர்கள் கன்னியாகுமரிக்கு வருகை தருகின்றனர். பஸ், கார் மற்றும் வேன்களில் வரும் அய்யப்ப பக்தர்களின் வாகனங்கள் சிலுவை நகர் வழியாக காட்சி கோபுரம் அருகே உள்ள பார்க்கிங்கில் நிறுத்தி விட்டு காமராஜர் மண்டபம் வழியாக முக்கட லும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் கடலில் புனித நீராடி பகவதி அம்மன் கோவிலுக்கு சென்று அம்மனை தரிசனம் செய்வது வழக்கம்.
ஆனால் தற்போது சிலுவை நகரில் இருந்து சன்செட் பாயிண்ட் பகு திக்கு அய்யப்ப பக்தர் களின் வாகனங்களை போலீசார் அனுப்புவதால் சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் நடந்தால் மட்டுமே கன்னி யாகுமரி பகவதி அம்மன் கோவில் சென்றடைய முடியும். ஏற்கனவே சபரிமலையில் தரிசனம் செய்து களைப்பில் வரும் அய்யப்ப பக்தர்கள், வயதான, ஊனமுற்ற பக்தர்கள் பலர் கடும் அவதிக்கு உள்ளாகின்றனர்.ஏற்கனவே நுழைவு கட்டணம் மற்றும் பார்க்கிங் கட்டணம் கட்டிவிட்டு வரும் அய்யப்ப பக்தர்கள் கூடுதலாக கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு வர வேண்டும் என்றால் ஆட்டோ அல்லது வேறு போக்குவரத்து தேவைப்படுகிறது. இதற்காக ஒரு நபர் சுமார் ரூ.100 கூடுதலாக செலவு செய்ய வேண்டும்.
இதுவரை காட்சி கோபுரம் அருகே உள்ள பார்க்கிங் பகுதியில் வாகனங்கள் நிறுத்த இடம் இல்லை என்றால் மட்டும் பயன்படுத்தி வந்த சிலுவை நகர் பார்க்கிங்கில் அனைத்து வாகனங்களையும் அனுப்பும் நடைமுறை அய்யப்ப பக்தர்களை வேண்டும் என்றே அலைக்கழிப்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுற்றுலா பயணிகளும், அய்யப்ப பக்தர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- குமரி கடற்கரை கிராமங்களில் உற்சாக கொண்டாட்டம்
- கிறிஸ்தவ ஆலயங்களில் சிறப்பு திருப்பலி நடந்தது
நாகர்கோவில் :
ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 21-ந்தேதி உலக மீனவர் தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதன்படி இன்று உலக மீனவர் தினம் கொண்டாடப்பட்டது. குமரி மாவட்டத்தில் உள்ள கடலோர கிராமங்களில் மீனவர்கள் இன்று மீனவர் தினத்தை உற்சாகமாக கொண்டாடினார்கள்.
ஆரோக்கியபுரம் முதல் நீரோடி வரை உள்ள மீனவ கிராமங்களில் இன்று மீனவர் தின விழா கொண்டாடப்பட்டது. இதையடுத்து காலையில் அந்தந்த பகுதியில் உள்ள ஆலயங்களில் சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெற்றது. உலக மீனவர் தினத்தையொட்டி மீனவர்கள் இன்று கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. மீன்பிடி படகுகள் கடற்கரை ஓரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. நிறுத்தி வைக்கப்பட்ட விசைப்படகு வள்ளங்களுக்கு சிறப்பு பிரார்த்தனைகள் நடந்தது.
குளச்சல், முட்டம், தேங்காய்பட்டினம் துறைமுகங்களை சேர்ந்த 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பைபர் படகு மற்றும் 500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கடற்கரை ஓரமாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. விசைப்படகுகளுக்கு பங்கு தந்தைகள் அர்ச்சிப்பு செய்ததுடன் கடலில் மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள். குளச்சல் காணிக்கை அன்னை ஆலயத்தில் நடந்த சிறப்பு பிரார்த்தனையில் ஏராளமான மீனவர்கள் கலந்துகொண்டனர்.
தேங்காய்பட்டினம் துறைமுகத்தில் இன்று நீச்சல் போட்டி மற்றும் படகு போட்டிகள் நடந்தது. கொட்டில்பாடு கிராமத்தில் கடல் மீன் சமையல் போட்டியும் நடத்தப்பட்டது. மணக்குடி புனித அந்திரேயா ஆலயத்தில் பங்குத்தந்தை அந்தோணியப்பன் தலைமையில் இன்று காலை திருப்பலி நடந்தது.
பங்கு தந்தை யூஜின் தாமஸ் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர். இதைத்தொடர்ந்து பங்கு மக்கள் ஊர்வலமாக கடற்கரைக்கு சென்றனர். கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வள்ளம் மற்றும் மீன்பிடி உபகரணங்களுக்கு அர்ச்சிப்பு செய்யப்பட்டது. கடலில் மீனவர்கள் மலர் தூவியும் வழிபட்டனர்.
பள்ளம் புனித மத்தேயூ ஆலயத்தில் பங்குத்தந்தை சகாய ஆண்டனி தலைமையில் திருப்பலி நடந்தது. இதைத்தொடர்ந்து கடற்கரையில் மீன்பிடி உபகரணங்களுக்கு அர்ச்சிப்பு செய்யப்பட்டது. அன்னை நகர் அற்புதநாயகி ஆலயத்தில் பங்கு ரேமண்ட் தலைமையில் திருப்பலி நடந்தது. மீனவர்கள் கடலுக்கு செல்லாததால் கடற்கரை கிராமங்கள் இன்று வெறிச்சோடி காணப்பட்டது.
உலக மீனவர் தினத்தையொட்டி இணையம் புத்தன்துறையில் உலக மீனவர் தின பொதுக்கூட்டம் இன்று மாலை நடக்கிறது. கோட்டார் மறை மாவட்ட ஆயர் நசரேன்சூசை, கனிமொழி எம்.பி., விஜய்வசந்த் எம்.பி., அமைச்சர்கள் மனோதங்கராஜ், அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் பலர் கலந்துகொள்கிறார்கள்.
இந்த பொதுக்கூட்டத்தில் மாவட்டத்திலுள்ள அனைத்து மீனவர் கிராமங்களில் இருந்து 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.
- திற்பரப்பு அருவியில் 3-வது நாளாக குளிக்க தடை
- முக்கடல் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து முழு கொள்ளளவான 25 அடி நிரம்பி வழிகிறது.
நாகர்கோவில் :
குமரி மாவட்டத்தில் கொட்டி தீர்த்த மழையின் காரணமாக பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு, மாம்பழத்துறையாறு, முக்கடல் அணைகள் முழு கொள்ளளவை எட்டி நிரம்பி வழிகின்றன.
மாவட்டத்தில் உள்ள 2000-க்கும் மேற்பட்ட பாசன குளங்களும் நிரம்பி உள்ளது. அணைகள், குளங் கள் நிரம்பி உள்ள நிலையில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் பொதுப் பணித்துறை அதிகாரிகள் அணைகள் மற்றும் குளங் கள் நீர்மட்டத்தை கண் காணித்து வருகிறார்கள். பேச்சிப்பாறை, பெருஞ சாணி அணை பகுதியில் தொடர்ந்து மழை கொட்டி தீர்த்து வருகிறது.
இதனால் அணைகளுக்கு வரக்கூடிய நீர்வரத்து அவ்வப்போது அதிகரித்து வருகிறது. அணைகளுக்கு வரக்கூடிய நீர்வரத்து அதிகரித்ததையடுத்து அணை யில் இருந்து வெளி யேற்றப்படும் தண்ணீரின் அளவையும் பொதுப் பணித்துறை அதிகாரிகள் அதிகரித்து வருகிறார்கள். பேச்சிப்பாறை அணையில் இருந்து நேற்று 100 கன அடி உபரிநீர் வெளியேற்றப்பட்டு வந்த நிலையில் இன்று அணையிலிருந்து வெளி யேற்றப்படும் உபரி நீரின் அளவு அதிகரிக்கப்பட் டுள்ளது.
அணையில் இருந்து 401 கன அடி தண்ணீர் மதகுகள் வழியாகவும், 355 கன அடி தண்ணீர் உபரிநீராகவும் வெளியேற்றப்பட்டு வரு கிறது. சிற்றாறு 1 அணை யிலிருந்தும் 129 கன அடி உபரிநீரும், 100 கன அடி தண்ணீர் மதகுகள் வழி யாகவும் வெளியேற்றப்பட்டு வருகிறது. அணைகளில் இருந்தும் உபரிநீர் வெளி யேற்றப்பட்டு வருவதால் கோதை ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.
கோதை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் காரணமாக திற்பரப்பு அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வரு கிறது. இதனால் திற்பரப்பு அருவியில் இன்று 3-வது நாளாக குளிக்க தடை விதிக் கப்பட்டுள்ளது. அருவியில் குளிப்பதற்கு தடை விதிக் கப்பட்டதால் சுற்றுலா பணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் இன்று காலை 44.05 அடியாக உள்ளது. அணைக்கு 595 கன அடி தண்ணீர் வந்து கொண்டி ருக்கிறது.
பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 73.31 அடியாக உள்ளது. அணைக்கு 460 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணை யில் இருந்து 350 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படு கிறது. சிற்றார்-1 அணை யின் நீர்மட்டம் 15.81 அடியாகவும், சிற்றார்-2 அணையின் நீர்மட்டம் 15.91 அடியாகவும், பொய்கை அணையின் நீர்மட்டம் 8.20 அடியாகவும் உள்ளது. மாம்பழத்துறையாறு அணையின் நீர்மட்டம் 54.12 அடியாக உள்ளது.
நாகர்கோவில் நகருக்கு குடிநீர் சப்ளை செய்யப்படும் முக்கடல் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து முழு கொள்ளளவான 25 அடி நிரம்பி வழிகிறது.
- காலை 8 மணி முதல் பிற் பகல் 3 மணி வரை மின் வினியோகம்
- தகவலை நாகர்கோவில் மின் வினியோக செயற் பொறியாளர் தெரிவித்துள்ளார்.
நாகர்கோவில் :
கன்னியாகுமரி உபமின் நிலையத்துக்குட்பட்ட மின்பாதைகளில் பராமரிப்பு பணிகள் நாளை மறு நாள் (வியாழக் கிழமை) நடக் கிறது.
எனவே அன்று காலை 8 மணி முதல் பிற் பகல் 3 மணி வரை கன்னியாகுமரி, கோவளம், ராஜாவூர், மயிலாடி, வழுக்கம்பாறை, சுசீந்திரம், சின்னமுட்டம், கீழம ணக்குடி, அழகப்பபுரம், கொட்டாரம், சாமிதோப்பு, அஞ்சுகிராமம், கோழிக் கோட்டுப்பொத்தை, வாரி யூர், அகஸ்தீஸ்வரம், மருங் கூர், தேரூர், புது கிராமம், காக்கமூர், பொத் தையடி, தோப்பூர், ஊட்டு வாழ்மடம், தென்தாமரை குளம், பால்குளம், ராமனா திச்சன் புதூர், மேல கருப்புக் கோட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதி களுக்கும் மின் வினியோகம் இருக்காது.
இந்த தகவலை நாகர்கோவில் மின் வினியோக செயற் பொறியாளர் தெரிவித்துள்ளார்.






