search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குலசேகரம் அருகே விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை
    X

    குலசேகரம் அருகே விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை

    • பி.எஸ்.சி. நர்சிங் படித்து முடித்துவிட்டு பெங்களுரில் தனியார் ஆஸ்பத்தியில் வேலை பார்த்து வருகிறார்.
    • குலசேகரம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    திருவட்டார் :

    குலசேகரம் அருகே ஈஞ்சவிளை, செருப்பாலூர் பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 56), தொழிலாளி. இவருக்கு ஜெயா (50) என்ற மனைவி யும், ஒரு மகனும், மகளும் உள்ளனர். மகளுக்கு திருமணம் ஆகி மார்த்தாண் டத்தில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். மகன் பி.எஸ்.சி. நர்சிங் படித்து முடித்துவிட்டு பெங்களுரில் தனியார் ஆஸ்பத்தியில் வேலை பார்த்து வருகிறார்.

    ராஜேந்திரன் வயிற்று வலியினால் அவதிப்பட்டு வந்தார். இதற்காக பல்வேறு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை. இதனால் மது அருந்தி வந்தார். நேற்று மாலை வீட்டின் பின்புறம் தோட்டத்தில் மயங்கிய நிலையில் படுத்து இருந்தார். இவரது மனைவி ஜெயா பார்த்தபோது வாயில் இருந்து நுறை தள்ளியபடி இருந்தது. உடனே அக்கம் பக்கத்தினர் உதவியுடன் குலசேகரம் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக் காக சேர்த்தனர்.

    டாக்டர் பரிசோதித்து பார்த்தபோது ராஜேந்திரன் ஏற்கனவே விஷம் குடித்து இறந்தது தெரியவந்தது. ஜெயா குலசேகரம் போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜேந்திரன் உடலை கைப்பற்றி குலசேகரம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    Next Story
    ×