என் மலர்
கன்னியாகுமரி
- அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்
- பங்கேற்ற நிகழ்ச்சிகள் நடந்த பகுதிகள் உள்ளிட்ட இடங்களில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
நாகர்கோவில் :
குமரி கிழக்கு மற்றும் மேற்கு மாவட்ட தி.மு.க. இளைஞரணி செயல்வீரர்கள் கூட்டம், நூலக திறப்பு விழா, மகளிர் உரிமைத் தொகை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, கழகத்தின் மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்குதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்ப தற்காக தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று இரவு நாகர்கோவிலுக்கு வந்தார்.
அவருக்கு குமரி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் உள்ளிட்ட அதிகாரிகள், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், தி.மு.க. நிர்வாகிகள் உள்ளிட்டோர் வரவேற்பு அளித்தனர். பின்பு நாகர்கோவிலில் உள்ள அரசு விருந்தினர் மாளிகையில் இரவில் தங்கி ஓய்வெடுத்தார். இன்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் குமரி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.
முதலில் வேர்க்கிளம்பி க்கு சென்ற அவர், சட்டமன்ற தொகுதிக்கு ஒரு நூலகம் என்ற வகையில் அங்கு அமைக்கப்பட்டிருந்த நூலகத்தை திறந்து வைத்தார். பின்பு அங்கி ருந்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அழகிய மண்டப த்திற்கு சென்றார். அங்கு நடைபெற்ற குமரி கிழக்கு மற்றும் மேற்கு மாவட்ட தி.மு.க. இளைஞரணி செயல் வீரர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு சிறப்புரை யாற்றினார்.
பின்பு நாகர்கோவில் கங்கா கிராண்டியூர் மண்டபத்தில் தி.மு.க. மூத்த முன்னோடிகளுக்கான பொற்கிழி வழங்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். இந்த நிகழ்ச்சிக்கு நாகர்கோவில் மாநகராட்சி மேயரும், குமரி கிழக்கு மாவட்ட செயலாளருமான மகேஷ் தலைமை தாங்கினார்.
அதில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், குமரி கிழக்கு மாவட்டத்தை சேர்ந்த 500 பேர், மேற்கு மாவட்டத்தை சேர்ந்த 500பேர் என கழகத்தின் மூத்த முன்னோடிகள் 1000 பேருக்கு தலா 10ஆயிரம் ரூபாய் வீதம் ரூ1கோடி மதிப்பிலான பொற்கிழிகளை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் மனோ தங்கராஜ், கழக துணை அமைப்பு செயலாளர் ஆஸ்டின், முன்னாள் அமைச்சர் சுரேஷ்ராஜன், மாவட்ட பொருளாளர் கேட்சன், ஒன்றிய செயலாளர் மதியழகன், ஊராட்சி மன்ற தலைவர் சோமு, மாநகராட்சி மண்டல தலைவர்கள் ஜவகர், அகஸ்டினா கோகிலவாணி உள்பட ஏராளமான நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
அதனைத் தொடர்ந்து நாகர்கோவிலில் உள்ள அரசு விருந்தினர் மாளிகைக்கு சென்று மதிய உணவு சாப்பிட்டார். அதன்பிறகு மாலையில் ஈத்தாமொழி சந்திப்பில் தி.மு.க. இளைஞரணி சார்பில் அமைக்கப்பட்டுள்ள கலைஞர் நூலகத்தை அமை ச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.
பின்பு நாகர்கோவிலில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு செல்லும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அங்கு நடக்கும் ஆய்வு கூட்ட த்தில் பங்கேற்கிறார். மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் தலைமையில் நடக்கும் இந்த ஆய்வு கூட்டத்தில் அமைச்சர்கள் மற்றும் அனைத்து துறை அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர்.
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வருகையை முன்னிட்டு குமரி மாவட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவதனம் தலைமையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. அவர் தங்கியிருந்த அரசு விருந்தினர் மாளிகை, அவர் பங்கேற்ற நிகழ்ச்சிகள் நடந்த பகுதிகள் உள்ளிட்ட இடங்களில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
- அரசு போக்குவரத்து கழகங்களில் ஒப்பந்த அடிப்படையில் டிரைவர்,
- டிரைவர், கண்டக்டர்கள் நியமனம் செய்வதை உடனடியாக நிறுத்த வேண்டும்
நாகர்கோவில் :அரசு போக்குவரத்து கழகங்களில் ஒப்பந்த அடிப்படையில் டிரைவர், கண்டக்டர்கள் நியமனம் செய்வதை உடனடியாக நிறுத்த வேண்டும், போதிய தொழில்நுட்ப பணியாளர்களை நியமனம் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கன்னியாகுமரி மாவட்ட பாரதிய அரசு போக்குவரத்து தொழிலாளர்கள் சங்கம் சார்பில் நாகர்கோவில் ராணி தோட்டம் பணிமனை முன்பு இன்று தர்ணா போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு சங்க தலைவர் ஜெயபாலன் தலைமை தாங்கினார். துணை தலைவர்கள் அற்புதராஜ், ராஜேந்திரன் முன்னிலை வகித்தனர். நிர்வாகிகள் சுவாமி, செந்தில்குமார், நடேசன் உள்பட ஏராளமான தொழிலாளர்கள் கலந்துகொண்டனர்.
- . இவருக்கு மது அருந்தும் பழக்கம் உள்ளது
- அருந்திவிட்டு மனைவியிடம் சண்டையிட்டதால்
நாகர்கோவில் : பறக்கை அருகே உள்ள மதுசூதனபுரத்தை சேர்ந்தவர் ஜெஸ்டின் சாமுவேல் (வயது 50), லாரி டிரைவர். இவருக்கு மது அருந்தும் பழக்கம் உள்ளது. அடிக்கடி மது அருந்திவிட்டு மனைவியிடம் சண்டையிட்டதால் மனைவி சொரூபராணி கணவரிடம் கோபித்துக்கொண்டு அவருடைய தாயார் வீட்டுக்கு சென்று விட்டார்.
இதனால் மன வருத்தத்தில் இருந்த ஜெஸ்டின் சாமுவேல் கடந்த 21-ந்தேதி தனது வீட்டின் அருகே விஷ மருந்து சாப்பிட்டு உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். உடனடியாக அவரை அக்கம் பக்கத்தினர் உதவியுடன் மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்ைச அளிக்கப்பட்டது. எனினும் சிகிச்சை பலன் இன்றி நேற்று பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து அவரது மனைவி சொரூபராணி சுசீந்திரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் சுசீந்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்பையா, சப்-இன்ஸ்பெக்டர் முத்துசாமி ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- விளையாட்டு விடுதிகளுக்கு இடையேயான மாநில அளவி லான விளையாட்டு போட்டி
- சென்னை ஜவஹர்லால் நேரு விளையாட்டரங்கத்தில் நடைபெற்றது
நாகர்கோவில் : விளையாட்டு விடுதிகளுக்கு இடையேயான மாநில அளவிலான விளையாட்டு போட்டி சென்னை ஜவஹர்லால் நேரு விளையாட்டரங்கத்தில் நடைபெற்றது. இதில் நாகர்கோவில் அண்ணா விளையாட்டு மைதானத்தில் உள்ள மகளிர் விளையாட்டு விடுதி மாணவி ருத்ரா ஸ்ரீ வட்டு எறிதல் போட்டியில் தங்கப்பதக்கமும், குண்டு எறிதல் போட்டியில் வெள்ளிப் பதக்கமும் வென்றுள்ளார்.
மாணவி கயாஸ்மி உயரம் தாண்டுதலில் வெண்கலப்ப தக்கமும், நீளம் தாண்டுதலில் வெண்கலப்பதக்கம் வென்றார். மாணவி கயல்விழி ஜனனி 1500 மீட்டர் ஓட்டப் போட்டியில் வெண்க லப்பதக்கம் வென்றுள்ளார். மாணவிகள் ரோஸ்லின், அஸ்மிதா, வசந்தி, கயல்விழி ஜனனி ஆகியோர் 4 x 400 தொடர் ஓட்டப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றார்கள். மாநில அள விலான போட்டியில் பதக்கங்களை வென்ற மாணவிகளை குமரி மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் ராஜேஷ் பாராட்டினார்.
- தேங்காய்பட்டினம் மீன்பிடி துறைமுகத்திற்கு தங்கு தடையின்றி கற்கள் கிடைக்க நடவடிக்கை கலெக்டர் ஸ்ரீதர் தகவல்
- தற்பொழுது அந்த துறைமுகத்தில் பணிகள் நடைபெறவில்லை. இதனால் மீனவர்களுடைய வாழ்வாதாரம் பாதிக்கப்பட் டுள்ளது.
நாகர்கோவில் : தேங்காய்பட்டினம் மீன்பிடி துறைமுகத்திற்கு தங்கு தடையின்றி கற்கள் கிடைக்க நடவடிக்கை கலெக்டர் ஸ்ரீதர் தகவல் நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் மீனவர் குறைதீர்க்கும் கூட்டம் இன்று கலெக்டர் ஸ்ரீதர் தலைமையில் நடந்தது. மீன்வளத்துறை துணை இயக்குனர் சின்ன குப்பன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். மீனவர்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை கலெக்டர் ஸ்ரீதர் பெற்றுக்கொண்டார்.இதைத்தொடர்ந்து மீனவர்கள் கூறியதாவது:- தேங்காய்பட்டினம் மீன்பிடி துறைமுகம் 15 மீனவ கிராமத்தில் உள்ளவர்கள் பயன்பெறும் வகையில் உருவாக்கப்பட்டது. தற்பொழுது அந்த துறைமுகத்தில் பணிகள் நடைபெறவில்லை. இதனால் மீனவர்களுடைய வாழ்வாதாரம் பாதிக்கப்பட் டுள்ளது.
மீனவர்கள் மீன்பிடிப்பதற்கு வெளியே மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களுக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது. எனவே உடனடியாக தேங்காய்பட்டினம் துறைமுக பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தேங்காய்பட்டினம் துறை முகத்தில் உள்ள தனியார் ஐஸ் பிளான்ட்டிற்கு மீன்வளத்துறை அதிகாரிகள் கட்டணம் செலுத்தியுள்ளனர். இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தேங்காய் பட்டினம் துறைமுகத்தில் உள்ள மணல் திட்டுகளை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். அங்கு அனைத்து மீனவர்களும் தொழில் செய்ய வழிவகை செய்ய வேண்டும். மீனவர்களுக்கு வழங்கப்படுகிற மானிய விலை மண்எண்ணையை தகுதியான அனைத்து மீனவர்களுக்கும் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்கள்.
இதற்கு பதில் அளித்து கலெக்டர் ஸ்ரீதர் பேசியதா வது:-
தேங்காய்பட்டினம் துறைமுக பணிகள் தொடர்பாக கண்காணிக்க 15 கிராமங்களை சேர்ந்த உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்கள் கண்காணிப்பு பணியை மேற்கொண்டு வருகிறார்கள். மாதத்திற்கு 2 முறை கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. கல் பிரச்சினை இருந்ததாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து குமரி மாவட்டத்தில் உள்ள குவாரி உரிமையாளர்களை அழைத்துபேசி கூடுதலாக கற்கள் கொண்டுவர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. கற்கள் அதிகமாக கொண்டு வரப்படும்போது பணிகள் விரைவாக முடிக்கப்படும். தகுதியான நபர்களுக்கு மானிய விலை மண்எண்ணை வழங்க நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம், இவ்வாறு அவர் கூறினார்.
மீன்வளத்துறை அதிகாரி கூறுகையில், தேங்காய்பட்டினம் துறைமுகத்தில் செயல் பட்டு வந்த தனியார் ஐஸ் பிளான்ட்டிற்கு கரண்ட் பில் கட்டியதை சம்பந்தப்பட்ட நபர்களிடமிருந்து வசூல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்ட ரூ.5 லட்சம் வசூல் செய்யப்பட் டுள்ளது. கடந்த 3 மாதமாக மின்சாரம் துண்டிக்கப்பட் டுள்ள நிலையில் தற்போது மீண்டும் அவர்களுக்கு மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது. மேலும் ரூ.5 லட்சம் வசூல் செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறோம் என்றார். கூட்டத்தில் ஒரு சில மீனவர்கள் மட்டுமே தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். இதற்கு சில மீனவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். கோரிக்கையை மனுக்களை முதலில் பெற்றுவிட்டு அது தொடர்பான பதில்களை பேசிவிட்டு விவாதத்தை நடத்த வேண்டும் என்று கூறினார்கள். இதனால் இரு தரப்பு மீனவர்களுக்கு இடையே பிரச்சனை ஏற்பட்டது. இதனால் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது.
- நாகர்கோவில் மாநக ராட்சி 16-வது வார்டுக் குட்பட்ட பரமேஸ்வரன் தெருவில் ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் கான்கிரீட் தளம்
- ரூ.8 லட்சம் மதிப்பீட்டில் கான்கிரீட் தளம் அமைக்கும் பணி
நாகர்கோவில் : நாகர்கோவில் மாநகராட்சி 16-வது வார்டுக் குட்பட்ட பரமேஸ்வரன் தெருவில் ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் கான்கிரீட் தளம் அமைக்கும் பணி, 32-வது வார்டுக்குட்பட்ட செயின்ட் பிரான்சிஸ் தெருவில் ரூ.8 லட்சம் மதிப்பீட்டில் கான்கிரீட் தளம் அமைக்கும் பணி ஆகிய பணிகளை நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் தொடங்கி வைத்தார். இதில் துணை மேயர் மேரி பிரின்ஸி லதா, மண்டல தலைவர் ஜவகர், மாமன்ற உறுப்பினர்கள் சிஜி, மாநகர செயலாளர் ஆனந்த், பகுதி செயலாளர் சேக் மீரான், அணிகள் நிர்வாகிகள் ராஜன், ராதாகிருஷ்ணன்,
சரவணன், பீட்டர், வட்ட செயலாளர் மைக்கேல் ராஜ், ராஜேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
- தக்கலை அருகே உள்ள கன்றுபிலாவிளை கொற்றிகோடு பகுதியை சேர்ந்தவர் ரெஜிலின் மனோ. இவரது மனைவி அஜி(வயது32).
- ரெஜிலின் மனோ வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார்
நாகர்கோவில் : தக்கலை அருகே உள்ள கன்றுபிலாவிளை கொற்றிகோடு பகுதியை சேர்ந்தவர் ரெஜிலின் மனோ. இவரது மனைவி அஜி(வயது32). இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். ரெஜிலின் மனோ வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். இதனால் அஜி, தனது குழந்தைகளுடன் ஊரில் இருந்து வந்தார். இந்நிலையில் கடந்த 8-ம் தேதி தோழி வீட்டுக்கு செவ்வ தாக தனது தாயிடம் கூறிவிட்டு தனது 2 குழந்தைகளை அழைத்துக் கொண்டு அஜி வீட்டில் இருந்து புறப்பட்டு சென்றார். பின்பு வீட்டுக்கு திரும்பி வரவில்லை. குழந்தைகளுடன் தனது மகள் மாயமானது குறித்து கொற்றிகோடு போலீஸ் நிலையத்தில் தாய் பிரேமா புகார் செய்தார்.அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் அஜி கொற்றிக்கோடு மற்றும் தக்கலை பகுதியில் பலரிடம் நகை-பணத்தை வாங்கி விட்டு ஏமாற்றி சென்றதாக பலர் புகார் கொடுத்தனர். அந்த புகாரை பெற்றுக்கொண்ட கொற்றிக்கோடு போலீசார், அஜியை தேடும் பணியில் ஈடுபட்டனர். அவர் கேரள மாநிலம் பாறசாலை பகுதியில் தங்கியி ருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது அதன்பேரில் தக்கலை போலீஸ் இன்ஸ்பெக்டர் ராம சந்திரன் தலைமையிலான போலீசார் அங்கு விரைந் தனர். அவர்கள் செல்வ தற்கு முன்பாகவே, புகார் கொடுத்த வர்கள் பாறசாலைக்கு சென்று அஜி தங்கியிருந்த வீட்டை சுற்றி வளைத்தனர். உடனே பாற சாலை போலீசார் அஜியை மீட்டு விசாரணை நடத்தி கொற்றிகோடு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
இந்நிலையில் முதலார் பகுதியை சேர்ந்த கிங்சிலி என்பவர் அஜி மீது போலீசில் புகார் செய்தார். தன்னிடம் ரூ.2லட்சத்து 43 ஆயிரம் வாங்கி ஏமாற்றி சென்ற அஜி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து அஜியை கைது செய்தனர். மோசடி புகார்கள் தொடர்பாக அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. பின்பு தக்கலை கோர்ட் டில் அஜி ஆஜர்படுத்தப் பட்டார். அவரை நீதி மன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து அஜி தக்கலை பெண்கள் கிளை சிறையில் அடைக்கப்பட்டார்.
- அதிகாரி விளக்கம்
- வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகங்களை தொடர்பு கொள்ளுமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.
நாகர்கோவில்:
குமரி மாவட்ட தோட்டக்கலை துணை இயக்குனர் ஷீலா ஜாண் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதா வது:- குமரி மாவட்டமானது தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழை ஆகிய இரண்டையும் ஒருங்கே கிடைக்கப்பெறும் மாவட்டமாகும். தற்போது வடகிழக்கு பருவமழை காலத்தில் தோட்டக்கலை பயிர்களுக்கான ஆயத்த நிலை ஏற்பாடுகள் விவசாயிகளால் மேற்கொள்ளப்பட வேண்டும். தோட்டக்கலை பயிர்களில் பொதுவாக அறுவடைக்கு தயாராக இருக்கும் தோட்டங்களில் அறுவடை மேற்கொண்டு மரத்தின் சுமையை குறைத்தல், மரங்களை கவாத்து செய்து மரத்தின் சுமையை குறைத்து காற்றினால் ஏற்படும் சேதத்தை தவிர்த்தல், கனமழை காரணமாக ஏற்படும் மழைநீர் தேக்கத்தை குறைக்க உபரிநீர் வடிந்த பின் நடவு, விதைப்பணிகளை மேற்கொள்ளல், வடிகால் வசதி அற்ற நிலங்களில் ஆங்காங்கே வடிகால் அமைத்து மழைநீர் தேக்கத்தை தவிர்த்தல், காற்றினால் ஏற்படும் சேதத்தை தவிர்க்க காற்று வீசும் திசைக்கு எதிர் திசையில் குச்சிகளால் முட்டு கொடுத்தல், மழைநீர் வடிந்தபின் பயிர்களுக்கு ஏற்றவாறு மேல் உரம் இட்டு மண் அணைத்தல் போன்ற பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
எனவே குமரி மாவட்ட வடகிழக்கு பருவமழை காலத்தில் தோட்டக்கலை பயிர்களுக்கான ஆயத்த நிலை ஏற்பாடுகளை மேற்கொண்டு வடகிழக்கு பருவமழையினால் ஏற்படும் இடர்பாடுகளை எதிர்கொள்ளுமாறும், மேலும் பாதிப்பு ஏற்பட்டால் அந்தந்த வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகங்களை தொடர்பு கொள்ளுமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- குருந்தன்கோடு மேற்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் தீர்மானம்
- அருள்பிரபின் நன்றி கூறினார்.
இரணியல்:
குருந்தன்கோடு மேற்கு ஒன்றிய தி.மு.க. இளைஞரணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் திங்கள்நகரில் நடந்தது. குருந்தன்கோடு மேற்கு ஒன்றிய தி.மு.க. அலுவலகத்தில் நடந்த கூட்டத்திற்கு ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் வழக்கறிஞர் சசிசுபாசிங் தலைமை தாங்கினார். குமரி கிழக்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் வழக்கறிஞர் பிரிட்டோசேம் முன்னிலை வகித்தார். இளைஞரணி நிர்வாகி ஸ்ரீராஜா வரவேற்றார்.
குருந்தன்கோடு மேற்கு ஒன்றிய செயலாளர் பி.எஸ்.பி. சந்திரா சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு ஆலோசனைகள் வழங்கி பேசினார். குமரி மாவட்டம் வருகை தரும் தி.மு.க. இளைஞரணி மாநில செயலாளரும், தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு வழங்குவது. அழகியமண்டபத்தில் வைத்து நாளை (28-ந்தேதி) நடைபெறும் மாவட்ட இளைஞரணி செயல் வீரர்கள் கூட்டத்தில் குருந்தன்கோடு மேற்கு ஒன்றிய தி.மு.க. இளைஞரணி சார்பில் வெள்ளை சீருடையில் 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொள்வது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ஒன்றிய துணை செயலாளர்கள், பேரூர் செயலாளர்கள், நெய்யூர் பேரூராட்சி தலைவி பிரதீபா, குளச்சல் சபீன், இளைஞர் அணி நிர்வாகிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர். அருள்பிரபின் நன்றி கூறினார்.
- கடன் மேளாவில் 87 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.39.55 லட்சம் வட்டியில்லா மாற்றுத்திறனாளி கடன் வழங்கப்பட்டது.
- கூட்டுறவு சங்க இணைப்பதிவாளர் சிவகாமி தெரிவித்தார்.
நாகர்கோவில்:
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் பயன்பெறும் வகையில் மாற்றுத்திறனாளிகளுக்கு வட்டியில்லா கடன் வழங்குவதற்கான கடன் மேளாவானது கடந்த 19-ந்தேதி கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் கட்டுபாட்டிலுள்ள அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களிலும், கன்னியாகுமரி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மற்றும் அதன் கிளைகளிலும் நடத்தப்பட்டது. இந்த கடன் மேளாவில் 87 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.39.55 லட்சம் வட்டியில்லா மாற்றுத்திறனாளி கடன் வழங்கப்பட்டது. மேலும் 282 மாற்றுத்திறனாளிகளிடமிருந்து ரூ.1.28 கோடி மதிப்பிலான கடன் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளது என கூட்டுறவு சங்க இணைப்பதிவாளர் சிவகாமி தெரிவித்தார்.
திருநந்திக்கரை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் மாற்றுத்திறனாளி கடன் விண்ணப்பம் சங்கத்தின் செயலாட்சியர் லீலா கூட்டுறவு சார்பதிவாளரால் பெறப்பட்டது.
- விஜய் வசந்த் எம்.பி. திறந்து வைத்தார்
- ரூ.19 லட்சத்து 50 ஆயிரம் செலவில் 2 வகுப்பறைகள் கொண்ட கூடுதல் கட்டிடம் கட்டப்பட்டுள்ளது.
பூதப்பாண்டி:
காட்டுப்புதூர் அரசு தொடக்கப்பள்ளியில் பாராளுமன்ற மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.19 லட்சத்து 50 ஆயிரம் செலவில் 2 வகுப்பறைகள் கொண்ட கூடுதல் கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நடந்தது.
விழாவில் விஜய்வசந்த் எம்.பி. கலந்துகொண்டு புதிய வகுப்பறை கட்டிடங்களை திறந்து வைத்து, குத்து விளக்கேற்றி வைத்தார். இதில் தோவாளை மேற்கு வட்டார காங்கிரஸ் தலைவர் நாஞ்சில் செல்வராஜ், வட்டார துணை தலைவர் மரிய ஜான், செயல் தலைவர் மிக்கேல், மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள், பள்ளி தலைமையாசிரியர், ஆசிரியர்கள், மாணவர்கள், பொதுமக்கள் திரளாக கலந்துகொண்டனர்.
- பெண் வாக்காளர்களை விட ஆண் வாக்காளர்கள் அதிகம்
- குமரி மாவட்டத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது.
நாகர்கோவில்:
குமரி மாவட்டத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த இந்த நிகழ்ச்சியில் கலெக்டர் ஸ்ரீதர், அரசியல் கட்சியினர் முன்னிலையில் வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டார். மாவட்ட வருவாய் அலுவலர் பாலசுப்பிர மணியன், ஆர்.டி.ஓ. சேது ராமலிங்கம், தி.மு.க. சார்பில் இளைஞரணி அமைப்பா ளர் அகஸ்தீசன், அ.தி.மு.க. சார்பில் பகுதி செயலாளர் ஜெயகோபால், பாரதிய ஜனதா கட்சி சார்பில் ஜெகதீசன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் இசக்கி முத்து, காங்கிரஸ் கட்சி சார்பில் மாவட்ட தலைவர் நவீன் குமார், தே.மு.தி.க. சார்பில் மணிகண்டன் மற்றும் அரசியல் கட்சி நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.
தேர்தல் தாசில்தார் சுசீலா, அகஸ்தீஸ்வரம் தாசில்தார் ராஜாசிங் மற்றும் அதிகாரிகளும் இதில் பங்கேற்றனர். இதைத் தொடர்ந்து கலெக்டர் ஸ்ரீதர் கூறியதாவது:- குமரி மாவட்டத்தில் ஏற்கனவே கடந்த ஜனவரி மாதம் 5-ந் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளி யிடப்பட்டது. அதன்படி 15 லட்சத்து 46 ஆயிரத்து 581 வாக்காளர்கள் இருந்தனர். இதைத்தொடர்ந்து வாக்குச் வாவடி அலுவலர்கள் வீடு வீடாக சென்று கள ஆய்வு மேற்கொண்டனர். அதன்படி 12,860 வாக்காளர்கள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளனர். 37,405 வாக்காளர்கள் நீக்கப்பட்டு உள்ளனர்.
இதைத்தொடர்ந்து தற்போது வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. தற்போது குமரி மாவட்டத்தில் 7 லட்சத்து 61 ஆயிரத்து 884 ஆண் வாக்காளர்கள், 7 லட்சத்து 60 ஆயிரத்து 10 பெண் வாக்காளர்கள், 143 இதர வாக்காளர்கள் என 15 லட்சத்து 22 ஆயிரத்து 36 வாக்காளர்கள் உள்ளனர். மாவட்டத்தில் பெண் வாக்காளர்களை விட ஆண் வாக்காளர்கள் தற்போது அதிகமானோர் உள்ளனர்.
கன்னியாகுமரி சட்ட சபை தொகுதியில் அதிகபட்சமாக 2,89,373 வாக்காளர்கள் உள்ளனர். அங்கு ஆண் வாக்காளர்கள் 1 லட்சத்து 43,417 பேரும், பெண் வாக்காளர்கள் 1 லட்சத்து 45 ஆயிரத்து 891 பேரும், இதர வாக்காளர்கள் 65 பேரும் உள்ளனர். நாகர்கோவில் தொகு தியில் 1 லட்சத்து 27 ஆயிரத்து 976 ஆண் வாக்காளர்கள், 1 லட்சத்து 31 ஆயிரத்து 535 பெண் வாக்காளர்கள், 13 இதர வாக்காளர்கள் என மொத்தம் 2 லட்சத்து 59 ஆயிரத்து 524 வாக்காளர்கள் உள்ளனர்.
குளச்சல் தொகுதியில் 1 லட்சத்து 33 ஆயிரத்து 540 ஆண் வாக்காளர்கள், 1 லட்சத்து 29 ஆயிரத்து 926 பெண் வாக்காளர்கள், 14 இதர வாக்காளர்கள் என 2 லட்சத்து 63 ஆயிரத்து 480 வாக்காளர்கள் உள்ளனர். பத்மநாபபுரம் தொகுதி யில் ஒரு லட்சத்து 19 ஆயிரத்து 89 ஆண் வாக்காளர்கள், 1 லட்சத்து 17 ஆயிரத்து 382 பெண் வாக்காளர்கள், 26 இதர வாக்காளர் என 2 லட்சத்து 36 ஆயிரத்து 497 வாக்காளர்கள் உள்ளனர்.
விளவங்கோடு தொகு தியில் 1 லட்சத்து 15 ஆயிரத்து 525 ஆண் வாக்காளர்கள், 1 லட்சத்து 17 ஆயிரத்து 14 பெண் வாக்காளர்கள், இதர வாக்காளர்கள் 4 என 2 லட்சத்து 32 ஆயிரத்து 543 வாக்காளர்கள் உள்ளனர். கிள்ளியூர் தொகுதியில் 1 லட்சத்து 22 ஆயிரத்து 336 ஆண் வாக்கா ளர்கள், 1 லட்சத்து 18 ஆயிரத்து 262 பெண் வாக் காளர்கள், 21 இதர வாக்காளர்கள் என 2 லட்சத்து 40 ஆயிரத்து 619 வாக்காளர்கள் உள்ளனர்.
மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளிலும் ஏற்கனவே 1,695 வாக்குச் சாவடிகள் இருந்தது. தற்போது பத்மநாபபுரம் தொகுதியில் 3 வாக்குச்சா வடிகள் கூடுதலாக அமைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து தற்போது 1,698 வாக்குச்சாவடிகள் உள்ளது. கன்னியாகுமரி தொகுதி யில் 310 வாக்கு சாவடிகளும், நாகர்கோவில் தொகுதியில் 275 வாக்குச்சாவடிகளும், குளச்சல் தொகுதியில் 300 வாக்குச்சாவடிகளும், பத்மநாபபுரம் தொகுதியில் 273 வாக்குச்சாவடிகளும், விளவங்கோடு தொகுதியில் 272 வாக்குச்சாவடிகளும், கிள்ளியூர் தொகுதியில் 268 வாக்குச்சாவடிகளும் உள்ளன.
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம், முகவரி மாற்றம் உள்ளிட்ட காரணங்க ளுக்கான விண்ணப்பங்கள் வரு கிற 4-ந்தேதி, 5-ந்தேதி, 18-ந்தேதி, 19-ந்தேதி பெறப்படுகிறது. பொது மக்கள் அன்று நடைபெறும் சிறப்பு முகாம்களில் புதிதாக வாக்காளர் பட்டியலில் சேர்ந்து கொள்வதுடன் வாக்காளர் பட்டியில் குறைபாடுகள் இருந்தால் நேரில் வந்து நிவர்த்தி செய்யலாம். வாக்களர் பட்டியலில் பெயர் சேர்த்தல் மற்றும் திருத்தல் பணிக்கு அனைத்து கட்சிகளும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.






