search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வடசேரியில் தடை செய்யப்பட்ட 360 கிலோ புகையிலை பாக்கெட்டுகள் பறிமுதல்
    X

    வடசேரியில் தடை செய்யப்பட்ட 360 கிலோ புகையிலை பாக்கெட்டுகள் பறிமுதல்

    • ரூ.2 லட்சம் சிக்கியது; 2 பேர் கைது
    • வேறு யாருக்காவது தொடர்பு உண்டா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை

    நாகர்கோவில் :

    குமரி மாவட்டத்தில் போதை பொருள் விற்ப னையை தடுக்க போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகி றார்கள். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவதனம் மேற்பார்வையில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியை மேற்கொண்டு உள்ளனர்.

    கன்னியாகுமரி, நாகர் கோவில், தக்கலை, குளச்சல் சப்-டிவி ஷனலுக்குட்பட்ட பகுதிகளில் தனிப்படை அமைக்கப்பட்டு கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் நாகர்கோவில் தனிப்படை போலீசார் நேற்று வடசேரி, ஒழுகினசேரி பகுதியில் அதிரடி சோதனை மேற் கொண்டனர். அப்போது அந்த வழியாக வந்த வாகனம் ஒன்றை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது அதில் தடை செய்யப்பட்ட புகையிலை இருந்தது தெரிய வந்தது.

    அதில் இருந்து 360 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பாக்கெட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் அவர்க ளிடமிருந்து ரூ.2 லட்சத்து 8 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது. இதுகுறித்து வடசேரி சப்-இன்ஸ்பெக்டர் ஜெசி மேனகா வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டார்.

    தடை செய்யப்பட்ட புகையிலை கடத்தி வந்ததாக காட்டாதுறை பூவின்விளை பகுதியை சேர்ந்த ரத்தின குமார் (55), சேலம் மேட்டூர் பகுதியை சேர்ந்த முருகே சன் (28), சேலம் சங்ககிரி பகுதியை சேர்ந்த கண்ணன் (28) ஆகிய 3 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

    இதில் ரத்தினகுமார், முருகேசன் இருவரையும் போலீசார் கைது செய்தனர். கைது செய்யப் பட்ட இரு வரிடமும் தடை செய்யப் பட்ட புகையிலை எங்கிருந்து கொண்டு வரப்பட்டது என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்ட னர். மேலும் இதில் வேறு யாருக்காவது தொடர்பு உண்டா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×