search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சந்தையடியில் அய்யா வைகுண்டசாமி கோவிலில் திருப்பணி தொடக்க விழா
    X

    சந்தையடியில் அய்யா வைகுண்டசாமி கோவிலில் திருப்பணி தொடக்க விழா

    • விஜய்வசந்த் எம்.பி. தொடங்கி வைத்தார்
    • அய்யா வைகுண்டசாமி நிழல் தாங்கல் திருப்பணி தொடக்க விழா

    கன்னியாகுமரி :

    கொட்டாரம் அருகே உள்ள சந்தையடியில் அய்யா வைகுண்டசாமி நிழல் தாங்கல் திருப்பணி தொடக்க விழா நேற்று நடந்தது. இதையொட்டி அதிகாலை 5 மணிக்கு அய்யா வுக்கு விளக்கு நிய மித்து பணிவிடை நடந்தது.

    பின்னர் அய்யா வைகுண்டசாமி நிழல் தாங்கல் திருப்பணி தொடக்க விழா நடந்தது. நிகழ்ச்சிக்கு திருப்பணி குழு தலைவரும் அகஸ்தீஸ்வரம் பேரூராட்சி முன்னாள் தலைவருமான சந்தையடி பாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார். திருப்பணிக்குழு பொருளாளர் சிவராஜன், செயலாளர் ராமதாஸ், ஒருங்கிணைப்பாளர் பாலசுந்தரம், துணை தலைவர்கள் மனோகரன், குமார் என்ற ராஜா, பால் ராஜ், துணை செயலாளர்கள் சிங்காரவேல், செல்வராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இந்த நிகழ்ச்சியில் விஜய் வசந்த் எம்.பி. சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு திருப்பணியை தொடங்கி வைத்தார். சாமிதோப்பு பாலபிரஜாபதி அடிகளார், எம்.ஆர்.காந்தி எம்.எல்.ஏ., சாமிதோப்பு பையன்ராஜா, அய்யா வைகுண்டசாமி கோவில் தர்மகர்த்தாக்கள் பாலசுந்தரம், மனோகர செல்வன், வெள்ளையன் தோப்பு ஊர் தலைவர் ரத்தின சிகாமணி, கவுரவ தலைவர் ராமச்சந்திரன், துணை தலைவர் கிருஷ்ண சாமி, ஈச்சன்விளை ஊர் கவுரவ தலைவர் கணேச மார்த்தாண்டன், கவர்குளம் தேரிவிளை ஊர் தலைவர் ராஜபாண்டியன் முன்னாள் ஊர் தலைவர் தாமோதரன் மற்றும் தங்கநடார், நம்பி நாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×