என் மலர்tooltip icon

    காஞ்சிபுரம்

    • போக்குவரத்து பணியில் இருந்த போலீஸ் ஏட்டு சேகரை ஆட்டோ டிரைவர்கள் கற்கள் மற்றும் உருட்டுக்கட்டையால் தாக்கி விட்டு தப்பிச்சென்றனர்.
    • காயம் அடைந்த போலீஸ் ஏட்டு சேகரை சிகிச்சைக்காக காஞ்சிபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் பூக்கடைசத்திரம் அருகே இரவு பணியில் இருந்த போக்குவரத்து போலீஸ் ஏட்டு சேகர் மீது ஆட்டோ மோதுவது போல் சென்ற 2 வாலிபர்களை போலீசார் எச்சரித்து அனுப்பினர். இதனை தொடர்ந்து ஆட்டோவை சாலை ஓரமாக நிறுத்திவிட்டு வந்து மீண்டும் போக்குவரத்து பணியில் இருந்த போலீஸ் ஏட்டு சேகரை ஆட்டோ டிரைவர்கள் கற்கள் மற்றும் உருட்டுக்கட்டையால் தாக்கி விட்டு தப்பிச்சென்றனர். இதனை தொடர்ந்து காயம் அடைந்த போலீஸ் ஏட்டு சேகரை சிகிச்சைக்காக காஞ்சிபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    போலீஸ் ஏட்டு சேகர் கொடுத்த புகாரின் பேரில் சிவகாஞ்சி போலீசார் கஞ்சா போதையில் இருந்த காஞ்சிபுரத்தை சேர்ந்த ஆட்டோ டிரைவர்கள் முகமதுசாதிக் (வயது24) மற்றும் தீபக் (28) ஆகியோரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • செங்கல்பட்டு சென்னை செனாய் நகர் பகுதியை சேர்ந்தவர் கோபிநாத்.

    செங்கல்பட்டு சென்னை செனாய் நகர் பகுதியை சேர்ந்தவர் கோபிநாத் (வயது 41). அதே பகுதியை சேர்ந்தவர் மாரிமுத்து (52). இவர்கள் இருவரும் சென்னையில் இருந்து மோட்டார் சைக்கிளில் காஞ்சிபுரம் நோக்கி சென்றனர். சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த தண்டலம் கூட்டு சாலையில் செல்லும்போது அடையாளம் தெரியாத வாகனம் கோபிநாத் வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் இருவரும் தூக்கி வீசப்பட்டனர். இதில் கோபிநாத் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே இறந்தார். மாரிமுத்து பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடினார்.

    அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து மாரிமுத்துவை மீட்டு ஸ்ரீபெரும்புதூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த ஸ்ரீபெரும்புதூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்தில் பலியான கோபிநாத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீபெரும்புதூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.




    • குடும்பத் தகராறில் தற்கொலை செய்து இருக்கலாம் என்று தெரிகிறது.
    • பள்ளிக்கரணை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    பம்மல், காமராஜபுரம் பகுதியை சேர்ந்தவர் செல்வம் (வயது35). தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். கடந்த 1-ந்தேதி மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் வெளியே சென்ற அவர் பின்னர் திரும்பி வரவில்லை. இந்த நிலையில் இன்று காலை நன்மங்கலம் ஏரியில் செல்வம் பிணமாக கிடந்தார். அவரது மோட்டார் சைக்கிள் ஏரிக் கரையில் நிறுத்தப்பட்டு இருந்தது. அவர் குடும்பத் தகராறில் தற்கொலை செய்து இருக்கலாம் என்று தெரிகிறது. இதுகுறித்து பள்ளிக்கரணை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • திருவள்ளூர் பகுதியில் இருந்த 10-க்கும் மேற்பட்ட தொழிலாளர்களை ஏற்றிக்கொண்டு வேன் வந்தது.

    ஸ்ரீபெரும்புதூர்:

    ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனியார் தொழிற்சாலைக்கு இன்று காலை திருவள்ளூர் பகுதியில் இருந்த 10-க்கும் மேற்பட்ட தொழிலாளர்களை ஏற்றிக்கொண்டு வேன் வந்தது. ஸ்ரீபெரும்புதூர் அடுத்த செங்காடு பகுதியில் வந்தபோது எதிரே வந்த சரக்குவேன் திடீரென மோதியது. இதில் வேனில் இருந்த 10-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பலத்த காயம் அடைந்தனர். அவர்களுக்கு ஸ்ரீபெரும்புதூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இது குறித்து ஸ்ரீபெரும்புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    கூட்டுறவுத் துறை காஞ்சிபுரம் மண்டலம் சார்பில் காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கி தலைமை அலுவலகம்.

    காஞ்சிபுரம்:

    கூட்டுறவுத் துறை காஞ்சிபுரம் மண்டலம் சார்பில் காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கி தலைமை அலுவலகத்தில் காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்தில் செயல்படும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களை பல்நோக்கு சேவை மையங்களாக மாற்றுதல் குறித்து கலந்தாய்வு கூட்டம் காஞ்சிபுரம் மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் எஸ்.லட்சுமி தலைமையில் நடைபெற்றது. காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கியின் கூடுதல் பதிவாளரும் மேலாண்மை இயக்குனருமான முருகன் முன்னிலை வகித்தார்.

    தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களை பல்நோக்கு சேவை மையமாக மாற்றுவது குறித்து நபார்டு வங்கியின் மாவட்ட விரிவாக்க அலுவலர் விஜய் நேஹா, மண்டல இணைப்பதிவாளர் அலுவலக துணைப்பதிவாளர், பணியாளர் அலுவலர் மு.தயாளன், சரக துணைப் பதிவாளர்கள் த.சுவாதி, ம.சுடர்விழி, பா.ஐஸ்வர்யா வங்கியின் முதன்மை வருவாய் அலுவலர், கண்காணிப்பாளர்கள், கள அலுவலர்கள், பொது மேலாளர், துணை பொது மேலாளர் மற்றும் கூட்டுறவுத் துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் வருவாய் அலுவலர் ரவிச் சந்திரன் நன்றி கூறினார்.

    • வரதராஜ பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவி, ஆண்டாள் நாச்சியாருடன் வைர வைடூரிய அலங்காரத்தில் எழுந்தருளினார்.
    • இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

    காஞ்சீபுரத்தில் உள்ள பிரசித்தி பெற்ற வரதராஜ பெருமாள் கோவிலில் திருவாடிப்பூரம் உற்சவம் வெகு விமரிசையாக நடைபெற்றது.

    இதையொட்டி வரதராஜ பெருமாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டது. பின்னர் ஸ்ரீதேவி, பூதேவி, ஆண்டாள் நாச்சியார் ஆகியோருடன் வைர வைடூரிய அலங்காரத்தில் எழுந்தருளினார்.

    இதைத்தொடர்ந்து மேளதா ளங்கள் முழங்க, இரட்டைக் குடையுடன், ஸ்ரீதேவி, பூதேவி, ஆண்டாள் நாச்சியாருடன், வரதராஜ பெருமாள் நான்கு மாட வீதிகளில் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

    இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

    • அஸ்தினாபுரம், நேதாஜி தெருவை சேர்ந்தவர்கள் பாலாஜி,லோகேஷ், விக்டர்.
    • பள்ளிக்கரணை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    அஸ்தினாபுரம், நேதாஜி தெருவை சேர்ந்தவர்கள் பாலாஜி,லோகேஷ், விக்டர். இவர்கள் 3 பேரும் பள்ளிக்கரணை அடுத்த நன்மங்கலம் பகுதியில் உள்ள பிரியாணி ஓட்டலுக்கு சாப்பிட சென்றனர். அப்போது அங்கு மதுபோதையில் வந்த 10 பேர் கும்பல் அவர்களிடம் தகராறில் ஈடுபட்டு சரமாரியாக தாக்கி தப்பி சென்று விட்டனர். இதில் பலத்த காயம் அடைந்த பாலாஜி உள்பட 3 பேருக்கும் குரோம்பேட்டையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டது. இதுகுறித்து பள்ளிக்கரணை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • சாலிகிராமம் அருணாசலம் சாலையில் பிரபல நிறுவனத்தின் ஓட்டல் உள்ளது.
    • கைதான சிவகுமார் ஏற்கனவே சாலிகிராமத்தில் உள்ள ஓட்டலில் பணியில் இருந்து இருக்கிறார்.

    போரூர்:

    சாலிகிராமம் அருணாசலம் சாலையில் பிரபல நிறுவனத்தின் ஓட்டல் உள்ளது. இங்கு கடந்த மாதம் 24-ந் தேதி பணப்பெட்டியுடன் ரூ.54 ஆயிரம் ரொக்கம் மற்றும் கண்காணிப்பு கேமிரா பதிவு கருவிகள் கொள்ளை போனது.

    இதுகுறித்து விருகம்பாக்கம் போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் தாம்சன் சேவியர் ஜார்ஜ், சப்- இன்ஸ்பெக்டர் இளம்வழுதி, ஏட்டு ராஜ்மோகன், கேசவன் ஆகியோர் தீவிர விசாரணை நடத்தினர்.

    அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை வைத்து விசாரித்த போது அதே நிறுவனத்தில் முகப்பேர் கிளையில் மேலாளராக வேலை பார்த்துவரும் கிருஷ்ணகிரியை சேர்ந்த சிவகுமார், மற்றும் அவரது நண்பரான கார் டிரைவர் ராசுக்குட்டி என்கிற ராஜி ஆகியோர் இந்த கொள்ளையில் ஈடுபட்டது தெரிந்தது.

    இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைதுசெய்தனர். அவர்களிடம் இருந்து பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

    கைதான சிவகுமார் ஏற்கனவே சாலிகிராமத்தில் உள்ள ஓட்டலில் பணியில் இருந்து இருக்கிறார்.

    அப்போது தன்னிடம் இருந்த கடையின் ஷட்டர் மற்றும் முன்பக்க கண்ணாடி கதவுக்கான சாவிகளுக்கு கள்ளச்சாவி தயாரித்து நண்பருடன் சேர்ந்து பணம் இருந்த லாக்கரை தூக்கி சென்று உள்ளார்.

    வழக்கமாக சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் ரூ.3 லட்சம் வரை விற்பனை பணம் இருக்கும் என்று திட்டமிட்டு கொள்ளை திட்டத்தை அரங்கேற்றினார்.

    ஆனால் கொள்ளை நடந்த அன்று ஆன்-லைன் மற்றும் கிரெடிட் கார்டு மூலம் அதிக அளவில் விற்பனை நடந்ததால் ரூ.54ஆயிரம் மட்டுமே லாக்கரில் இருந்ததால் ஏமாற்றம் அடைந்ததாக சிவக்குமார் போலீசாரிடம் தெரிவித்து உள்ளார்.

    • உத்திரமேரூர் அடுத்த மானாம்பதி கிராமத்தை சேர்ந்தவர் ஆறுமுகம்
    • வீட்டில் இருந்த சுலோச்சனா திடீரென மயங்கி கீழே விழுந்தார்.

    ஸ்ரீபெரும்புதூர்:

    உத்திரமேரூர் அடுத்த மானாம்பதி கிராமத்தை சேர்ந்தவர் ஆறுமுகம்(வயது91).இவரது மனைவி சுலோச்சனா(80). இருவரும் ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் ஆவர்.

    இவர்களுக்கு 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர். அவர்கள் அனைவரும் திருமணம் ஆகி தனித்தனியாக வசித்து வருகிறார்கள். மகனுடன் ஆறுமுகமும், சுலோச்சனாவும் வசித்து வந்தனர்.

    வயது முதிர்வு காரணமாக கடந்த சில மாதங்களாகவே ஆறுமுகத்திற்கு உடல் நிலைபாதிக்கப்பட்டது. அவர் அவ்வப்போது ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார்.சில நாட்களாக வீட்டில் படுத்த படுக்கையாக இருந்தார். அவரை மனைவி சுலோச்சனா மற்றும் மகன்கள், மருமகள்கள் கவனித்து வந்தனர்.

    சுலோச்சனா அவ்வப்போது கணவரிடம், உங்களுக்கு முன்பாக நான் இறைவனிடம் சென்றடைய வேண்டும். நீங்கள் இல்லாத உலகத்தில் நான் இருக்க கூடாது என்று ஆறுமுகத்திடம் கூறி வந்ததாக தெரிகிறது.

    இந்த நிலையில் வீட்டில் இருந்த சுலோச்சனா திடீரென மயங்கி கீழே விழுந்தார். குடும்பத்தினர் அவரை மீட்டபோது சுலோச்சனா இறந்து இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    இதைத்தொடர்ந்து உறவினர்களுக்கு தெரிவித்து சுலோச்சனாவின் உடலை அடக்கம் செய்வதற்காக இறுதி சடங்கிற்கு ஏற்பாடுகள் செய்து கொண்டிருந்தனர்.

    இதற்கிடையே மனைவி சுலோச்சனா இறந்து விட்டார் என்று தகவலை ஆறுமுகத்திடம் உறவினர்கள் தெரிவித்தனர். இதனை கேட்டு அதிர்ச்சியில் உறைந்த ஆறுமுகம் மயங்கினார். சிறிது நேரத்தில் அவரும் இறந்து போனார். மனைவியின் இறப்பை தாங்கிக்கொள்ள முடியாமல் ஆறுமுகத்தின் உயிரும் பிரிந்துவிட்டது. சாவிலும் ஆசிரியர் தம்பதி இணைபிரியாமல் இருந்ததை கண்டு உறவினர்கள் உணர்ச்சி மிகுதியால் அழுதனர்.

    இதைத்தொடர்ந்து ஆறுமுகம்-சுலோச்சனா தம்பதியின் உடல்களுக்கு சேர்ந்த்தே இறுதிச் சடங்குகள் செய்யப்பட்டது ஒன்றாக ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது. பின்னர் மானாம்பதி சுடுகாட்டில் இருவரது உடலும் அடக்கம் செய்யப்பட்டது. இச்சம்பவம் உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • பம்மல், அண்ணா நகர் பகுதியை சேர்ந்தவர் பாஸ்கர் ஆட்டோ டிரைவர்.
    • மதுரவாயல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    போரூர்:

    பம்மல், அண்ணா நகர் பகுதியை சேர்ந்தவர் பாஸ்கர்(36). ஆட்டோ டிரைவர். இவர் நேற்று இரவு 11மணி அளவில் மதுரவாயல் அடுத்த போரூர் கார்டன் வழியாக ஆட்டோவில் சென்று கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 3பேர் கும்பல் பாஸ்கரை வழி மறித்து கத்தியால் வெட்டி அவரது செல்போனை பறித்து தப்பி சென்றுவிட்டனர்.

    சின்ன நொளம்பூர் பகுதியை சேர்ந்தவர் நிகில்(32) பிரபல தனியார் நிறுவனத்தில் உதவி மேலாளராக பணி புரிந்து வருகிறார். இவர் இன்று காலை 7மணி அளவில் மதுரவாயல் ஏரிக்கரை பஸ் நிறுத்தத்தில் பஸ்சுகாக காத்து நின்றார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் நிகிலின் கையில் வைத்திருந்த விலை உயர்ந்த செல்போனை பறித்துக் கொண்டு தப்பி சென்றுவிட்டனர். இதுகுறித்து மதுரவாயல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் கும்பகோணத்தில் உள்ள கோவிலுக்கு சென்றார்.
    • கொள்ளையர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

    போரூர்:

    சாலிகிராமம் காவேரி ரங்கன் நகர் பிள்ளையார் கோவில் தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் சுரேஷ். சாப்ட்வேர் என்ஜினீயர்.

    இவர் நேற்று முன்தினம் வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் கும்பகோணத்தில் உள்ள கோவிலுக்கு சென்றார். இதை நோட்டமிட்ட மர்ம நபர்கள் அவரது வீட்டிற்குள் புகுந்து பீரோ லாக்கரில் இருந்த 25பவுன் நகைகள் மற்றும் ரூ.25 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை சுருட்டி சென்று விட்டனர்.

    நேற்று மாலை சுரேஷ் வீட்டுக்கு வந்தபோது நகை-பணம் கொள்ளை போனது தெரிந்தது.

    பால்கனி ஜன்னல் வழியாக புகுந்த கொள்ளையர்கள் நூதனமான முறையில் கைவரிசை காட்டி நகை பணத்தை சுருட்டி தப்பி இருப்பது தெரிய வந்தது.

    இதுகுறித்து விருகம்பாக்கம் போலீசில் புகார் செய்யப்பட்டது. அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை கொண்டு கொள்ளையர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

    • சென்னை விமான நிலையத்தில் பயணிகளின் உடைமைகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.
    • தங்கம் கடத்தல் தொடர்பாக பிடிபட்ட பயணியிடம் அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஆலந்தூர்:

    சென்னை விமான நிலையத்தில் பயணிகளின் உடைமைகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது ஒரு பயணி 4.20 கிலோ தங்கத்தை இலங்கைக்கு கடத்த மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ.2.30 கோடி ஆகும்.

    தங்கம் கடத்தல் தொடர்பாக பிடிபட்ட பயணியிடம் அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×