என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஸ்ரீபெரும்புதூர் அருகே வேன் மீது சரக்கு வேன் மோதல்- 10 தொழிலாளர்கள் படுகாயம்
- திருவள்ளூர் பகுதியில் இருந்த 10-க்கும் மேற்பட்ட தொழிலாளர்களை ஏற்றிக்கொண்டு வேன் வந்தது.
ஸ்ரீபெரும்புதூர்:
ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனியார் தொழிற்சாலைக்கு இன்று காலை திருவள்ளூர் பகுதியில் இருந்த 10-க்கும் மேற்பட்ட தொழிலாளர்களை ஏற்றிக்கொண்டு வேன் வந்தது. ஸ்ரீபெரும்புதூர் அடுத்த செங்காடு பகுதியில் வந்தபோது எதிரே வந்த சரக்குவேன் திடீரென மோதியது. இதில் வேனில் இருந்த 10-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பலத்த காயம் அடைந்தனர். அவர்களுக்கு ஸ்ரீபெரும்புதூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இது குறித்து ஸ்ரீபெரும்புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
Next Story