என் மலர்
காஞ்சிபுரம்
- சக்திவேல் மோட்டார் சைக்கிளில் சேர்ப்பாக்கம் என்ற இடத்திற்கு சென்று விட்டு மீண்டும் தண்டரை கூட்ரோடு நோக்கி வந்து கொண்டிருந்தார்.
- நிலை தடுமாறி கீழே விழுந்ததில் தலையில் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்து போனார்.
உத்திரமேரூர்:
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் ஒன்றியம் மானாமதி மங்கலம்மாள் நகரை சேர்ந்தவர் சக்திவேல் (வயது 35). இவருக்கு மனைவி, ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். சக்திவேல் மானாமதி அடுத்த தண்டரை கூட்ரோட்டில் முடி வெட்டும் கடை நடத்தி வந்தார்.
நேற்று முன்தினம் மோட்டார் சைக்கிளில் சேர்ப்பாக்கம் என்ற இடத்திற்கு சென்று விட்டு மீண்டும் தண்டரை கூட்ரோடு நோக்கி வந்து கொண்டிருந்தார்.
அப்போது நிலை தடுமாறி கீழே விழுந்ததில் தலையில் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்து போனார்.
இது குறித்து பெருநகர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது இன்ஸ்பெக்டர் விஜயகுமார் உத்தரவின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.
- ரூ.11 லட்சத்து 50 ஆயிரம் மதிப்புள்ள அமெரிக்க டாலர்களை பறிமுதல் செய்த அதிகாரிகள், வாலிபரை கைது செய்து விசாரித்தனர்.
- பணத்தை கொடுத்து வெளிநாட்டுக்கு கடத்த சொன்ன ஆசாமி யார்? என சுங்க இலாகா அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆலந்தூர்:
சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து சிங்கப்பூர் நாட்டுக்கு நேற்று விமானம் புறப்பட தயாராகிக் கொண்டிருந்தது. அதில் பயணம் செய்ய தயாராக இருந்த பயணிகளிடம் சென்னை விமான நிலைய சுங்க இலாகா அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது சென்னையை சேர்ந்த வாலிபர் மீது சந்தேகம் கொண்ட அதிகாரிகள் அவரை நிறுத்தி சோதனை செய்தனர்.
அப்போது அவருடைய உடைமைகளில் எதுவும் இல்லாததால், தனி அறைக்கு அழைத்துச் சென்று சோதித்தபோது, அவரது உள்ளாடைகளுக்குள் கட்டுக்கட்டாக அமெரிக்க டாலர்கள் மறைத்து வைத்து இருந்ததை கண்டுபிடித்தனா். இதையடுத்து, அவரிடமிருந்து ரூ.11 லட்சத்து 50 ஆயிரம் மதிப்புள்ள அமெரிக்க டாலர்களை பறிமுதல் செய்த அதிகாரிகள், வாலிபரை கைது செய்து விசாரித்தனர்.
விசாரணையில், சென்னையைச் சேர்ந்த ஒருவர் அமெரிக்க டாலரை கொடுத்து அனுப்பி சிங்கப்பூரில் உள்ள ஒருவரிடம் கொடுத்து வர சொன்னதாகவும், அதற்காக தனக்கு விமான டிக்கெட் எடுத்து தந்து செலவுக்கு ரூ.3ஆயிரம் கமிஷன் பணம் தந்ததாகவும் கூறினாா். இதையடுத்து பணத்தை கொடுத்து வெளிநாட்டுக்கு கடத்த சொன்ன ஆசாமி யார்? என சுங்க இலாகா அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- அண்ணாவின் இல்லம் அருகே கூடி இருந்த பொதுமக்களுக்கும், கட்சி நிர்வாகிகளுக்கும் தி.மு.க.வினரும், அ.தி.மு.க.வினரும் இனிப்புகளை வழங்கி அண்ணாவின் பிறந்தநாளை விமரிசையாக கொண்டாடினர்.
- பொன்னேரி பழைய பஸ் நிலையத்தில் உள்ள அண்ணா சிலைக்கு அ.தி.மு.க. சார்பில் மாவட்ட செயலாளர் பலராமன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி இனிப்புகள் வழங்கப்பட்டது.
காஞ்சிபுரம்:
பேரறிஞர் அண்ணாவின் 114-வது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்படுகிறது.
இதையொட்டி காஞ்சிபுரத்தில் அண்ணா பிறந்து வாழ்ந்த அவரது நினைவு இல்லத்தில் உள்ள அவரது சிலைக்கு தமிழக அரசின் சார்பில் அமைச்சர் தா.மோ.அன்பரசன், மாவட்ட கலெக்டர் ஆர்த்தி ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
தி.மு.க. சார்பில் மாவட்ட செயலாளர் க.சுந்தர் எம்.எல்.ஏ., காஞ்சிபுரம் எம்.பி. ஜி.செல்வம், மாணவரணி மாநில செயலாளர் சி.வி.எம்.பி.எழிலரசன் எம்.எல்.ஏ., மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.
இதில் காஞ்சிபும் மாநகராட்சி மேயர் யுவராஜ் மகாலட்சுமி, வருவாய் அலுவலர் சிவருத்ரய்யா, ஒன்றியக்குழு தலைவர்கள் மலர்கொடிகுமார், தேவேந்திரன், கருணாநிதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இதேபோல் அ.தி.மு.க. சார்பில் முன்னாள் அமைச்சரும், காஞ்சிபுரம் மாவட்ட செயலாளருமான வி.சோமசுந்தரம் தலைமையில் மரியாதை செலுத்தப்பட்டது. இதில் அமைப்பு செயலாளர் வாலாஜாபாத் பா.கணேசன், நிர்வாகிகள் மைதிலி, காஞ்சி பன்னீர்செல்வம், கே.யு.எஸ்.சோமசுந்தரம், வள்ளிநாயகம், பாலாஜி, ஜெயராஜ், திலக்குமார், வாலாஜாபாத் அரிக்குமார் உள்ளிட்ட கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
அண்ணாவின் இல்லம் அருகே கூடி இருந்த பொதுமக்களுக்கும், கட்சி நிர்வாகிகளுக்கும் தி.மு.க.வினரும், அ.தி.மு.க.வினரும் இனிப்புகளை வழங்கி அண்ணாவின் பிறந்தநாளை விமரிசையாக கொண்டாடினர். பொன்னேரி பழைய பஸ் நிலையத்தில் உள்ள அண்ணா சிலைக்கு அ.தி.மு.க. சார்பில் மாவட்ட செயலாளர் பலராமன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி இனிப்புகள் வழங்கப்பட்டது. இதில் முன்னாள் எம்.எல்.ஏ. பொன் ராஜா, கவுன்சிலர் பானு பிரசாத், நகர செயலாளர் செல்வகுமார், முன்னாள் தலைவர் பா. சங்கர், ஒன்றிய செயலாளர் முத்துக்குமார், கவுன்சிலர்கள் செந்தில், சுரேஷ், அபிராமி விஜயகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். தி.மு.க. சார்பில் ஒன்றிய செயலாளர் சுகுமாரன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
திருத்தணி சித்தூர் சாலையில் உள்ள அண்ணா திருவுருவ சிலைக்கு அ.தி.மு.க. அமைப்புச் செயலாளர் திருத்தணி கோ.அரி தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
- மோட்டார் வாகன ஆய்வாளர் பன்னீர்செல்வம் காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலகம் எதிரே வாகன சோதனையில் ஈடுபட்டார்.
- டிரைவர்களிடம் விசாரணை நடத்தியபோது உரிய ஆவணங்களின்றி 7 ஆட்டோக்களை பறிமுதல் செய்து ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் நகரில் இயங்கும் ஆட்டோக்கள் போக்குவரத்து நெரிசலுக்கு பெரிதும் இடையூறு ஏற்படுத்துவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி வந்தனர்.
இந்த நிலையில் காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆர்த்தி அறிவுரையின் பேரில் காஞ்சிபுரம் மாவட்ட வட்டார போக்குவரத்து அலுவலர் தினகரன் உத்தரவின் பேரில் மோட்டார் வாகன ஆய்வாளர் பன்னீர்செல்வம் காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலகம் எதிரே திடீர் வாகன சோதனையில் ஈடுபட்டார்.
அப்போது அந்த வழியாக வந்த ஆட்டோக்களை நிறுத்தி உரிய ஆவணங்கள் உள்ளதா? என அதன் டிரைவர்களிடம் விசாரணை நடத்தியபோது உரிய ஆவணங்களின்றி 7 ஆட்டோக்களை பறிமுதல் செய்து ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.
- சென்னையை அடுத்த உத்தண்டி பகுதியை சேர்ந்தவர் சத்யமூர்த்தி.
- போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆலந்தூர்:
சென்னையை அடுத்த உத்தண்டி பகுதியை சேர்ந்தவர் சத்யமூர்த்தி (வயது 65). ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரியான இவரது வீட்டில் கடந்த ஒரு வாரமாக சீரமைப்பு பணி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இவரது வீட்டில் கடந்த 10-ந் தேதி ரூ.10 லட்சம் திருட்டு போனதாக கானத்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் வீட்டை சீரமைக்கும் பணியில் ஈடுபட்ட 3 பேர் சேர்ந்து திருடியது தெரியவந்தது. இதையடுத்து கானத்தூர் பகுதியை சேர்ந்த மார்டின் (52), சுந்தர் (62), பாபு (40) ஆகியோரை கைது செய்தனர். இவர்களிடம் இருந்து ரூ.7 லட்சத்து 28 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பூந்தமல்லி சேஷா நகர் பகுதியில் சுற்றி திரிந்த கொள்ளையன் சிவசந்திரன் கைது செய்யப்பட்டான்.
- பூந்தமல்லி கிளை மேலாளர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
பூந்தமல்லி மற்றும் அதனை சுற்றியுள்ள சென்னீர்குப்பம், திருவேற்காடு உள்ளிட்ட பகுதிகளில் பூட்டிய வீடுகளை குறிவைத்து கடந்த 2 ஆண்டுகளாக கொள்ளையன் ஒருவன் கைவரிசை காட்டி வந்தான். அவனை பிடிக்க ஆவடி கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் உத்தரவின் பேரில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆவடி துணை கமிஷனர் மகேஷ் மேற்பார்வையில், பூந்தமல்லி உதவி கமிஷனர் முத்துவேல்பாண்டி, இன்ஸ்பெக்டர் வள்ளி ஆகியோரது தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.
கேமரா காட்சிகளை வைத்து இரவு பணியில் இருந்த ஏட்டு பிரபாகரன், காவலர் சீனிவாசன் ஆகியோர் கொள்ளையனை அடையாளம் கண்டனர். பூந்தமல்லி சேஷா நகர் பகுதியில் சுற்றி திரிந்த கொள்ளையன் சிவசந்திரன் கைது செய்யப்பட்டான்.
அவனிடமிருந்து 10 பவுன் நகைகள் கைப்பற்றப்பட்டுள்ளன. செஞ்சியைச் சேர்ந்த இவன் திருவேற்காடு பகுதியில் மனைவியுடன் வசித்து வந்ததும் தற்போது பிரிந்து வாழ்வதும் தெரிய வந்தது.
சிவச்சந்திரன், சனி, ஞாயிறு போன்ற விடுமுறை நாட்களில் பூட்டிய வீடுகளை குறி வைத்து கொள்ளையடித்து விட்டு ஆவடி பகுதியில் உள்ள பிரபல நகை வாங்கும் நிறுவனத்தில் அடமானம் வைத்திருப்பதும் தெரிய வந்துள்ளது.
இதையடுத்து அந்த நிறுவனத்தின் பூந்தமல்லி கிளை மேலாளர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
தனிப்படை போலீசாரை கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் பாராட்டினார்.
- காஞ்சிபுரம் மாவட்டத்திலும் நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
- வீடுகளை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து பெண்கள் உள்பட சுமார் 200-க்கும் மேற்பட்டோர் குழந்தைகளுடன் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.
காஞ்சிபுரம்:
தமிழகம் முழுவதும் நீர்நிலைகளில் செய்யப்பட்டுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி காஞ்சிபுரம் மாவட்டத்திலும் நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் காஞ்சிபுரம் பொன்னேரிக்கரையோரம் ஆக்கிரமிப்பு செய்து 82 வீடுகள் கட்டப்பட்டு இருந்தன. இதனை அகற்ற வேண்டும் என்று ஆக்கிரமிப்பாளர்களுக்கு அதிகாரிகள் பலமுறை நோட்டீஸ் வழங்கினர். ஆனால் ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றப்படவில்லை.
இந்த நிலையில் பொதுப்பணித்துறை இளநிலை பொறியாளர் மார்க்கண்டேயன், தாசில்தார் பிரகாஷ் மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகள் ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்ற ஜே.சி.பி எந்திரத்துடன் வந்தனர். இதற்கு அங்கு வசிப்பவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
மேலும் வீடுகளை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து பெண்கள் உள்பட சுமார் 200-க்கும் மேற்பட்டோர் குழந்தைகளுடன் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. பாதுகாப்புக்கு நின்ற டி.எஸ்.பி. ஜூலியஸ்சீசர் தலைமையிலான போலீசார் அவர்களை வலுக்கட்டாயமாக அகற்றினர். இதைத்தொடர்ந்து ஆக்கிரமித்து கட்டிய 82 வீடுகள் முழுவதும் இடித்து அகற்றப்பட்டன. தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் போலீசார் கைது செய்து அருகில் உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.
இதே போல் காமராஜர் நகர் பகுதியில் உள்ள குளம் அருகே 23 ஆக்கிரமிப்பு வீடுகளும் அகற்றப்பட்டன.அப்போது ஒரு பெண் மயக்கம் அடைந்தார். அவரை போலீசார் மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
- கொலை, கொலை முயற்சி மற்றும் அடிதடி உள்பட பல்வேறு வழக்கில் காஞ்சிபுரம் உப்பேரிகுளம் தெருவை சேர்ந்த ஷேக் காதர் என்பவர் சிக்கினார்.
- மாவட்ட கலெக்டர், சரித்திர பதிவேடு குற்றவாளியான ஷேக் காதரை ஓராண்டு தடுப்புக்காவலில வைக்க உத்தரவு பிறப்பித்தார்.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் மாவட்டத்தில் பல்வேறு போலீஸ் நிலையங்களில் கொலை, கொலை முயற்சி மற்றும் அடிதடி உள்பட பல்வேறு வழக்கில் காஞ்சிபுரம் உப்பேரிகுளம் தெருவை சேர்ந்த ஷேக் காதர் (36) என்பவர் சிக்கினார்.
இந்த நிலையில், சரித்திர பதிவேடு குற்றவாளியான இவரை குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் தடுப்புக்காவலில் வைக்க காஞ்சிபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் எம்.சுதாகர், மாவட்ட கலெக்டருக்கு பரிந்துரை செய்தார்.
இதைத்தொடர்ந்து, அவரது பரிந்துரையை ஏற்றுக்கொண்ட மாவட்ட கலெக்டர் டாக்டர் மா.ஆர்த்தி, சரித்திர பதிவேடு குற்றவாளியான ஷேக் காதரை ஓராண்டு தடுப்புக்காவலில வைக்க உத்தரவு பிறப்பித்தார்.
- மாநகராட்சி நிர்வாகத்திற்கு செலுத்த வேண்டிய மாத வாடகையை கடைக்காரர்கள் செலுத்த தவறியதால் பாக்கித் தொகை சுமார் ரூ.3 கோடி உயர்ந்துள்ளது.
- கடந்த 2017-ம் ஆண்டு முதல் கடைக்காரர்கள் வாடகை செலுத்தாமல் ரூ.5 லட்சம் முதல் ரூ.25 லட்சம் வரை வாடகை பாக்கி செலுத்தாமல் தாமதித்து வந்துள்ளனர்.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் பஸ் நிலையத்தில் மாநகராட்சிக்கு சொந்தமான 103 கடைகள் உள்ளன. இந்த கடைகளை ஒப்பந்த அடிப்படையில் மாத வாடகைக்கு மாநகராட்சி நிர்வாகம் வழங்கியுள்ளது. பஸ் நிலையத்தில் பேன்சி கடை, டீக்கடை, பழக்கடை என பல்வேறு கடைகள் வைத்து நடத்தி வருகின்றனர். இந்நிலையில் மாநகராட்சி நிர்வாகத்திற்கு செலுத்த வேண்டிய மாத வாடகையை கடைக்காரர்கள் செலுத்த தவறியதால் பாக்கித் தொகை சுமார் ரூ.3 கோடி உயர்ந்துள்ளது.
கடந்த 2017-ம் ஆண்டு முதல் கடைக்காரர்கள் வாடகை செலுத்தாமல் ரூ.5 லட்சம் முதல் ரூ.25 லட்சம் வரை வாடகை பாக்கி செலுத்தாமல் தாமதித்து வந்துள்ளனர். இதனால் வாடகை பாக்கி வசூல் செய்ய நடவடிக்கை எடுக்க காஞ்சிபுரம் மாநகராட்சி ஆணையர் கண்ணன் ஊழியர்களுக்கு உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து மாநகராட்சி வருவாய் ஆய்வாளர் தமிழரசு உள்ளிட்ட மாநகராட்சி அதிகாரிகள் கால அவகாசம் கொடுத்தும் மாத வாடகை செலுத்தாத 25 கடைகளை பூட்டி சீல் வைத்து நடவடிக்கை மேற்கொண்டனர்.
- பொதுமக்களிடம் இருந்து 212 மனுக்களை பெற்று அவற்றின் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள கலெக்டர் உத்தரவிட்டார்
- முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் மாற்றுதிறனாளி பயனாளிகளுக்கு நவீன செயற்கை கால்கள் வழங்கப்பட்டன.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக மக்கள் நல்லுறவு மையத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.மா.ஆர்த்தி தலைமையில் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியரகத்தில் உள்ள மக்கள் நல்லுறவு மையத்தில் பிரதி திங்கட்கிழமை தோறும் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு, அம்மனுக்கள் சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு வழங்கி தீர்வு காணப்பட்டு வருகிறது.
இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமை வகித்து பொதுமக்களிடம் இருந்து 212 மனுக்களை பெற்று அவற்றின் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள அரசு துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் கை, கால் இயக்க குறைபாடுள்ள 7 மாற்றுதிறனாளி பயனாளிகளுக்கு ரூ.11,24,000/- மதிப்புள்ள நவீன செயற்கை கால்கள் வழங்கப்பட்டது. மேலும் கேட்புதிறன் குறைபாடுள்ள 5 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.13,900/- மதிப்புள்ள காதொலி கருவிகள் மற்றும் மக்கள் குறை தீா்க்கும் நாளில் மனு வழங்கிய காஞ்சிபுரம் வட்டம் நாியம்புதூர் கிராமத்தை சோ்ந்த மீனா என்கிற பழங்குடி இனத்தை சோ்ந்த பெண்ணுக்கு ரூ.5,000/- மதிப்பிலான இலவச தையல் இயந்திரத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலா் கோ.சிவருத்ரய்யா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) ரவிச்சந்திரன், துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) சுமதி, மாவட்ட ஆதிதிராவிட நல அலுவலர் கு.பிரகாஷ் வேல், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சரவணகுமார் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
- படப்பை அடுத்த மாடம்பாக்கம், கார்த்திக் நகர், பட்டினத்தார் தெருவை சேர்ந்தவர் சிவா.
- சிவாவின் வீட்டு கதவு பூட்டு உடைந்து கிடப்பதை கண்டு அக்கம் பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்தனர்.
ஸ்ரீபெரும்புதூர்:
படப்பை அடுத்த மாடம்பாக்கம், கார்த்திக் நகர், பட்டினத்தார் தெருவை சேர்ந்தவர் சிவா. இவர் கடந்த 7-ந் தேதி வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் திருமண நிகழ்ச்சிக்காக திருநெல்வேலிக்கு சென்றார்.
இந்த நிலையில் இன்று காலை சிவாவின் வீட்டு கதவு பூட்டு உடைந்து கிடப்பதை கண்டு அக்கம் பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து மணிமங்கலம் போலீசுக்கும், சிவாவுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
போலீசார் விரைந்து வந்து விசாரித்த போது பீரோவில் இருந்த 25 பவுன் நகை மற்றும் அரை கிலோ வெள்ளி பொருட்கள், ரூ.8ஆயிரம் ரொக்கம் ஆகிய வற்றை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்று இருப்பது தெரிந்தது.
- குன்றத்தூர் தெற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளரும், காஞ்சிபுரம் மாவட்ட ஊராட்சி குழு தலைவருமான படப்பை மனோகரன் தலைமை தாங்கினார்.
- பாசறை கூட்டத்தில் தி.மு.க. கொள்கை பரப்புச் செயலாளர் முனைவர் சபாபதி மோகன் மாநில சுயாட்சி குறித்து பேசினார்.
படப்பை:
காஞ்சிபுரம் வடக்கு மாவட்டம் தி.மு.க. இளைஞர் அணி சார்பில் திராவிட மாடல் பயிற்சி பாசறை கூட்டம் வல்லக்கோட்டை பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு குன்றத்தூர் தெற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளரும், காஞ்சிபுரம் மாவட்ட ஊராட்சி குழு தலைவருமான படப்பை மனோகரன் தலைமை தாங்கினார். மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் எம்.கே.டி. கார்த்திக் தண்டபாணி முன்னிலை வகித்தார். பாசறை கூட்டத்தில் தி.மு.க. கொள்கை பரப்புச் செயலாளர் முனைவர் சபாபதி மோகன் மாநில சுயாட்சி குறித்து பேசினார்.
இதில் சிறப்பு அழைப்பாளராக காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும் குறு சிறு நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சருமான தா.மோ.அன்பரசன் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். இந்நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர்கள் மற்றும் குன்றத்தூர் தெற்கு ஒன்றிய இளைஞர் அணி துணை அமைப்பாளர் தீபக் உள்பட தி.மு.க. இளைஞரணியை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர்.






