என் மலர்
காஞ்சிபுரம்
- செம்பரம்பாக்கம் ஏரியை பொருத்தவரையில் முழு கொள்ளளவை எட்டும் அளவுக்கு மேல் நீர் சேமிக்கப்படுவதில்லை.
- சென்னைக்கு குடிநீர் வழங்கும் அனைத்து ஏரிகளிலும் சேர்த்து தற்போது 7 ஆயிரத்து 900 மில்லியன் கன அடி இருப்பு உள்ளது.
காஞ்சிபுரம்:
சென்னை மாநகருக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில், 3 ஆயிரத்து 291 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட பூண்டி ஏரியில் 1,018 மில்லியன் கன அடியும், 1,081 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட சோழவரம் ஏரியில் 132 மில்லியன் கன அடியும், 3 ஆயிரத்து 300 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட புழல் ஏரியில் 3 ஆயிரத்து 76 மில்லியன் கன அடியும், 500 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட கண்ணன்கோட்டை-தேர்வாய்கண்டிகை ஏரியில் 439 மில்லியன் கன அடியும், 3 ஆயிரத்து 645 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட செம்பரம்பாக்கம் ஏரியில் 3 ஆயிரத்து 120 மில்லியன் கன அடியும் நீர் இருப்பு உள்ளது.
இதுதவிர 1,465 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட வீராணம் ஏரியில் 115 மில்லியன் கன அடி மட்டும் இருப்பு உள்ளது.
இதில் செம்பரம்பாக்கம் ஏரிக்கு 460 கன அடி வீதம் நீா் வந்து கொண்டு இருக்கிறது. ஏரியில் மொத்தம் 22 அடி நீர் உள்ளது. மாநகரின் குடிநீர் தேவைக்காக 180 கன அடி நீர் திறக்கப்படுகிறது. தினசரி 23 மில்லியன் கன அடி உயர்ந்து வருகிறது. தொடர்ந்து 40 நாட்கள் இதே அளவு நீர் வந்தால் ஏரி முழு கொள்ளளவை எட்ட வாய்ப்பு உள்ளது.
தற்போது 85 சதவீதம் நீர் இருப்பு உள்ளது. செம்பரம்பாக்கம் ஏரியை பொருத்தவரையில் முழு கொள்ளளவை எட்டும் அளவுக்கு மேல் நீர் சேமிக்கப்படுவதில்லை.
சென்னைக்கு குடிநீர் வழங்கும் அனைத்து ஏரிகளிலும் சேர்த்து தற்போது 7 ஆயிரத்து 900 மில்லியன் கன அடி (7.9 டி.எம்.சி.) இருப்பு உள்ளது. கடந்த ஆண்டு இதேகால கட்டத்தில் 6 ஆயிரத்து 959 மில்லியன் கன அடி (6.9 டி.எம்.சி.) நீர் இருப்பு இருந்தது குறிப்பிடத்தக்கது என்று பொதுப்பணித்துறை மற்றும் குடிநீர் வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.
- வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள மக்கள், பட்டியல் இனத்தவர்கள், சிறுபான்மையினர் மற்றும் மகளிர் ஆகியோருக்கு முன்னுரிமை அளித்து கடன் வழங்க வேண்டும் என கலெக்டர் ஆர்த்தி கூறினார்.
- தொழில் முனைவோர்களுக்கு அதிக கடன்களை கொடுத்து மாவட்டத்தில் அதிகமான வேலை வாய்ப்பை பெருக்க உதவ வேண்டும். மேலும் கடன் வழங்கும் பரிசீலனை முறைகளை எளிதாக்க வேண்டும்.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் வங்கிகளின் வாடிக்கையாளர் தொடர்பு முகாம் நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் ஆர்த்தி தலைமை தாங்கினார்.
முகாமில் விவசாயம், தொழில் முனைவோர் மற்றும் தனி நபர் கடனாக 5,353 பயனாளிகளுக்கு ரூ.344.53 கோடி கடனுதவிகளையும், வங்கிகளுக்கு சான்றிதழ்களையும் கலெக்டர் ஆர்த்தி வழங்கினார். அப்போது அவர் கூறியதாவது:-
வங்கிகள் மாவட்டத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு உதவும் வகையில் செயல்பட வேண்டும். வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள மக்கள், பட்டியல் இனத்தவர்கள், சிறுபான்மையினர் மற்றும் மகளிர் ஆகியோருக்கு முன்னுரிமை அளித்து கடன் வழங்க வேண்டும்.
தொழில் முனைவோர் களுக்கு அதிக கடன்களை கொடுத்து மாவட் டத்தில் அதிகமான வேலை வாய்ப்பை பெருக்க உதவ வேண்டும். மேலும் கடன் வழங்கும் பரிசீலனை முறைகளை எளிதாக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
- பரிசோதனையில் மேற்கொண்டதில் இதுவரை 35 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
- தொற்று அதிகரிப்பால் விடுதி மாணவர்கள் வீடு திரும்பவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஸ்ரீபெரும்புதூர் ராஜீவ் காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு பயிற்சி மையத்தில் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது.
அங்குள்ள மொத்தம் 235 மாணவர்களுக்கு மேற்கொண்ட பரிசோதனையில் இதுவரை 35 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
தொற்று அதிகரிப்பால் விடுதி மாணவர்கள் வீடு திரும்பவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், இதுகுறித்து துணைப்பதிவாளர் கூறியதாவது:-
கொரோனா பரவலால் ஊழியர்கள், மாணவர்கள் பாதுகாப்பு கருதி மறு அறிவிப்பு வரும்வரை பயிற்சி நிறுவனம் மூடப்படும்.
விடுதியில் தங்கியுள்ள மாணவர்கள் விடுதியை உடனே காலி செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வரும் 13-ம் தேதி முதல் மறு உத்தரவு வரும் வரை ஆன்லைன் வகுப்பு நடைபெறும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- முதல்-அமைச்சர் தினந்தோறும் கொரோனா தொற்று பரவலை தொடர்ந்து கண்காணித்து வருகிறார்.
- லேசான தொற்று அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக காலம் தாழ்த்தாமல் உரிய மருத்துவ சிகிச்சைகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.
ஸ்ரீபெரும்புதூர்:
ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ராஜீவ் காந்தி இளைஞர் மேம்பாட்டு மையத்தில் சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட வெளி மாவட்டம் மற்றும் வெளி மாநில மாணவ- மாணவிகள் தங்கி படித்து வருகின்றனர்.
இங்குள்ள சில மாணவர்களுக்கு கொரோனா தொற்று அறிகுறி காணப்பட்டது. இதனைத் தொடர்ந்து சுகாதாரத்துறையினர் இந்த மையத்தில் படிக்கும் 235 மாணவ-மாணவிகளுக்கு பரிசோதனை செய்தனர்.
இதில் 2 மாணவர்களுக்கு முதலில் கொரோனா தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டது. இதற்கிடையே மேலும் 29 பேருக்கு நோய் பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. அவர்கள் தனியார் மற்றும் காஞ்சிபுரம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேலும் அவர்களுடன் தொடர்பில் இருந்த 16 மாணவர்கள் அந்த மைய வளாகத்திலேயே தனிமைப்படுத்தப் பட்டுள்ளனர். அவர்களை சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். மேலும் மாணவர்களின் உடல் நிலை மற்றும் அவர்களுக்கு தேவையான மருத்துவ ஆலோசனைகளை வழங்கினார்.
அப்போது சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:-
கடந்த ஒரு ஆண்டில் தமிழகத்தில் நடைபெற்ற சிறப்பு மருத்துவ முகாம்களில் 85 சதவீதத்திற்கும் மேற்பட்ட மக்கள் முதல் மற்றும் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தி கொண்டனர். மருத்துவ வல்லுனர்கள் கூறுகையில் தடுப்பூசி செலுத்தி கொண்ட நபர்களுக்கு தற்போது உள்ள உருமாறிய வைரசால் பாதிப்பு பெரிய அளவில் இருக்காது என்று தெரிவித்து உள்ளனர்.
தற்போது தமிழகத்தில் பாதிக்கப்பட்ட மாணவர்கள் அனைவரும் பிற மாநில மாணவர்கள் என்பதும் குறிப்பாக கேரளா பகுதிகளில் இருந்து வந்த மாணவர்களுக்கு இந்த தொற்று இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் தொற்று பரவாமல் இருக்க ஏற்கனவே நாம் கடைபிடித்த முகக்கவசம், தனிமனித இடைவெளி, கூட்டங்களை தவிர்த்தல் உள்ளிட்ட நடைமுறைகளை தொடர்ச்சியாக கடைபி டித்தால் ஆரோக்கியமான உடல் நலம் காக்கப்படும்.
முதல்-அமைச்சர் தினந்தோறும் கொரோனா தொற்று பரவலை தொடர்ந்து கண்காணித்து வருகிறார்.
தற்போது முற்றிலும் கொரோனாவை தமிழ்நாட்டில் இருந்து முடிவுக்கு கொண்டு வரும் நேரத்தில் பொதுமக்கள் அலட்சியமாக இருக்கக் கூடாது. கொரோனாவை முடிவுக்கு கொண்டு வந்து கரை ஒதுங்கும் நேரத்தில் தமிழக மக்கள் கவனக் குறைவாக இருந்து மூழ்கும் நிலைக்கு போகக் கூடாது.
மேலும் பொதுமக்கள் லேசான தொற்று அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக காலம் தாழ்த்தாமல் உரிய மருத்துவ சிகிச்சைகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது மாவட்ட கலெக்டர் ஆர்த்தி, மாவட்ட சுகாதார நலப் பணிகள் இணை இயக்குனர் பிரிய ராஜ் உடன் இருந்தனர்.
- விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டு தங்களின் தேவையை மனுவாக அளிக்கும் பட்சத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
- நுண்ணீர் பாசன திட்டத்தில் பதிவு செய்தல், சிறு தொழில் செய்ய விரும்பும் முனைவோர்களுக்கான விண்ணப்பங்கள் பெறப்படும்.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
காஞ்சிபுரம் மாவட்டத்தில் 37 பஞ்சாயத்துக்களில் வேளாண்மை-உழவர் நலத்துறை சார்பில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் செயல்படுத்தப்படும் பஞ்சாயத்துக்களில் சிறப்பு முகாம் இன்று (7-ந் தேதி) நடைபெற உள்ளது.
இந்த சிறப்பு முகாம் சிறுகாவேரிப்பாக்கம், கோனேரிக்குப்பம், ஆசூர், தாமல், திம்மசமுத்திரம், அத்திவாக்கம், ஏனாத்தூர், வாரணவாசி, இலுப்பப்பட்டு, பழையசீவரம், ஐமச்சேரி, கட்டவாக்கம், கொட்டவாக்கம், முத்தியால்பேட்டை, அரும்புலியூர், திருவானைக்கோவில், பெருநகர், காரனை, ஒழையூர், சாலவாக்கம், சிறுதாமூர், கம்மாளம்பூண்டி, ராவத்தநல்லூர், மொளச்சூர், பிச்சிவாக்கம், சந்தவேலூர், கிளாய், மேல்மதுரமங்கலம், செங்காடு, துளசாபுரம், வெங்காடு, கொளத்தூர், வரதராஜபுரம், ஐயப்பந்தாங்கல், கோவூர், ஆதனூர், கெருகம்பாக்கம் ஆகிய பஞ்சாயத்துக்களில் நடைபெறுகிறது.
முகாமில் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டு தங்களின் தேவையை மனுவாக அளிக்கும் பட்சத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
பட்டா மாறுதல், சிறு, குறு விவசாயிகளுக்கு சான்று வழங்குதல், பி.எம்.கிசான் கடன் அட்டை (கே.சி.சி.) விண்ணப்பம் பெறுதல், பயிர் காப்பீடு பதிவுகள் மேற்கொள்ளுதல், பயிர் கடன் விண்ணப்பம் பெறுதல், நுண்ணீர் பாசன திட்டத்தில் பதிவு செய்தல், சிறு தொழில் செய்ய விரும்பும் முனைவோர்களுக்கான விண்ணப்பங்கள் பெறப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- காஞ்சிபுரம் ஆதிகாமாட்சி அம்மன் கோவில் ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் உண்டியல் பணத்தை எண்ணும் பணியில் ஈடுபட்டனர்.
- பக்தர்களிடம் இருந்து காணிக்கையாக ரூ.2 லட்சத்து 21 ஆயிரத்து 987 ரொக்கமாக கிடைத்தது.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரத்தில் புகழ் பெற்ற ஆதிகாமாட்சி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் உள்ள உண்டியல்கள் அனைத்தும் நிரம்பின.
இதையடுத்து இந்து சமய அறநிலையத்துறை செயல் அலுவலர்கள் தலைமையிலான குழுவினர் முன்னிலையில் கோவிலில் உள்ள 5 உண்டியல்கள் திறக்கப்பட்டது.
கோவில் ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் உண்டியல் பணத்தை எண்ணும் பணியில் ஈடுபட்டனர். இதில் பக்தர்களிடம் இருந்து காணிக்கையாக ரூ.2 லட்சத்து 21 ஆயிரத்து 987 ரொக்கமாக கிடைத்தது. மேலும் 50 கிராம் தங்கம், 85 கிராம் வெள்ளியும் இருந்தது. இந்த தகவலை இந்து சமய அறநிலையத்துறை செயல் அலுவலர் ஸ்ரீதர் தெரிவித்து உள்ளார்.
- நண்பரின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கலந்து கொள்ள இருவரும் ஒரே மோட்டார் சைக்கிளில் காஞ்சிபுரம் வந்தனர்.
- நண்பர்கள் 2 பேரும் விபத்தில் பலியான சம்பவம் குடும்பத்தினரிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
காஞ்சிபுரம்:
ஸ்ரீபெரும்புதூர் அடுத்த ஆரணிசேரி பகுதியை சேர்ந்தவர்கள் பாலகிருஷ்ணன். கருணாகரன். இவர்களில் பாலகிருஷ்ணன் சுங்குவார்சத்திரம் அருகே தனியார் கண்ணாடி நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். மேலும் சொந்தமாக சரக்கு வாகனம் வைத்து டிராவல்ஸ் நடத்தினார். இதில் கருணாகரன் டிரைவராக வேலைபார்த்து வந்தார்.
இந்தநிலையில் நேற்று இரவு காஞ்சிபுரத்தில் நடைபெற்ற நண்பரின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கலந்து கொள்ள இருவரும் ஒரே மோட்டார் சைக்கிளில் காஞ்சிபுரம் வந்தனர்.
பின்னர் இருவரும் தங்களது சொந்த ஊருக்கு மோட்டார் சைக்கிளில் திரும்பி சென்று கொண்டு இருந்தனர். ஏனாத்தூர் வழியாக அங்குள்ள தரைப்பாலத்தில் சென்று கொண்டு இருந்தபோது கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் பாலத்தில் மோதியது. இதில் பாலகிருஷணனும், கருணாகரனும் தூக்கி வீசப்பட்டனர்.
பாலத்தின் கீழே தேங்கி இருந்த தண்ணீரில் விழுந்த பாலகிருஷ்ணன் சம்பவ இடத்திலேயே பலியானார். மேலும் கருணாகரன் பலத்த காயம்அடைந்து உயிருக்கு போராடியபடி கிடந்தார்.
தகவல் அறிந்ததும் போலீசார் விரைந்து வந்து கருணாகரணை மீட்டு காஞ்சிபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி கருணாகரன் பரிதாபமாக உயிரிழந்தார்.
பிறந்த நாள்விழாவுக்கு சென்று திரும்பியபோது நண்பர்கள் 2 பேரும் விபத்தில் பலியான சம்பவம் குடும்பத்தினரிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
- வெளிநாட்டு ரூபாய் நோட்டுகளை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
- பணம் எங்கிருந்து யாருக்கு கொண்டு செல்லப்படுகிறது என்று பயணியிடம் விசாரணை நடந்து வருகிறது.
ஆலந்தூர்:
சென்னை விமான நிலையத்தில் இருந்து சார்ஜாவுக்கு நேற்று இரவு பயணிகள் விமானம் புறப்பட்ட தயாராக இருந்தது.
அதில் பயணம் செய்யவந்த பயணிகள் உடமைகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது ஆண் பயணி ஒருவரது நடவடிக்கையில் அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து அந்த பயணியை தனியாக அழைத்து விசாரித்தனர். அவரது பையை சோதனையிட்ட போது கட்டு, கட்டாக வெளிநாட்டு கரன்சி நோட்டுகள் இருந்தன.
மொத்தம் ரூ.97.46 லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டு நோட்டுகள் இருந்தன. இது பற்றி பயணியிடம் விசாரித்த போது பணத்திற்கான ஆவணம் அவரிடம் இல்லை. இதையடுத்து வெளிநாட்டு ரூபாய் நோட்டுகளை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் பணம் எங்கிருந்து யாருக்கு கொண்டு செல்லப்படுகிறது என்று பயணியிடம் விசாரணை நடந்து வருகிறது.
- பட்டை தீட்டிய இடங்களே நாங்கள் கண்டறிந்த இந்த கற்குழிகளாகும்.
- அமரக்கல் குன்றானது மிகப்பெரிய பாறைகளை கொண்டதாக உள்ளது.
காஞ்சிபுரம்:
உத்திரமேரூர் அருகே உள்ள சாலவாக்கம் கிராமத்தில் சுமார் 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய கற்கால மனிதர்கள் தங்களின் கல் ஆயுதங்களை தீட்ட பயன்படுத்திய இடங்கள் கண்டு பிடிக்கப்பட்டு உள்ளது. இதனை உத்திரமேரூர் வரலாற்று ஆய்வு மைய தலைவர் கொற்றவைஆதன் மற்றும் அவரது குழுவினர் கண்டறிந்துள்ளனர்.
இதுகுறித்து உத்திரமேரூர் வரலாற்று ஆய்வு மையத் தலைவர் கொற்றவைஆதன் கூறிதாவது:-
சாலவாக்கம், எடமிச்சி காட்டுப் பகுதிக்கு அருகில் உள்ள அமரக்கல்குன்று மற்றும் இரண்டு பாறைகளை களஆய்வு செய்தபோது, கற்கால மனிதர்கள் தங்களின் கல் ஆயுதங்களை பட்டை தீட்டிய வழவழப்பான கற்குழிகளை கண்டறிந்தோம்.
இது கி.மு.3 ஆயிரத்தில் இருந்து கி.மு. 10ஆயிரம் வரை இதன் காலம் இருக்கலாம் என்பது வரலாற்று ஆய்வாளர்களின் கருத்தாக உள்ளது.
பழங்கால மனிதர்கள் முதலில் வேட்டைக்காக மரங்கள் மற்றும் எலும்புகளால் ஆன கருவிகளை பயன்படுத்தினர். அது பயன்பாட்டில் நாளடைவில் சிதைந்தும் அழிந்தும் போனது. இதற்கு மாற்றாக, நிலைத்து நிற்கக்கூடிய வகையில் எளிதில் சிதையாத கல் ஆயுதங்களை பயன்படுத்த தொடங்கினார்கள். அந்த ஆயுதங்கள் சொர சொரப்பாக இருந்தது இதனால் வேட்டையாடுவதிலும் பயன்படுத்துவதிலும் பல சிரமங்கள் தோன்றின. அதை களைவதற்காக வேட்டைக் கருவிகளை வழுவழுப்பாக பட்டை தீட்ட தொடங்கினார்கள்
அவ்வாறு பட்டை தீட்டவும் கூர் செய்வதற்கும் நீர் தேவைப்பட்டது. அதனால் நீர் தேங்கும் மலைப் பகுதிகளையும் பாறைகளையும் தேர்வு செய்தார்கள். ஆகவே நீர் தேங்கும் அளவிலான சுனைகளை கொண்ட இந்த அமரக்குன்று மற்றும் நீர் தேங்கும் வசதிகள் உள்ள இந்த பாறைகளை பயன்படுத்தி உள்ளார்கள். அவ்வாறு பட்டை தீட்டிய இடங்களே நாங்கள் கண்டறிந்த இந்த கற்குழிகளாகும்.
அமரக்கல் குன்றானது மிகப்பெரிய பாறைகளை கொண்டதாக உள்ளது. அதன் நடுவில் நீர் தேங்கும் பெரிய சுனை ஒன்று உள்ளது.அதன் அருகில் நான்கு இடங்களில் வெவ்வேறு அளவுகளில் வழவழப்பான குழிகள் இருப்பதை கண்டறிந்தோம்அதில் ஒரு குழி 21 சென்டி மீட்டர் நீளமும் 10 சென்டிமீட்டர் அகலமும் கொண்டதாக இருந்தது. மேலும் வெவ்வேறு அளவுகளில் இரண்டு குழிகள் காணப்பட்டன அந்த குழிகளை ஆய்வு செய்த பொழுது அதுகற்கால மனிதர்கள் உபயோகப்படுத்திய கல் ஆயுதங்களை கூர்மை செய்ய அல்லது பட்டை தீட்டிய அடையாளம் என்பது தெரியவந்துள்ளது.
மேலும் இவ்விடத்திற்கு அருகில் உள்ள இரண்டு பெரிய பாறைகளிலும் இதே போன்ற நீர் தேங்கும் சுனைகளும் அதற்கு அருகிலேயே பல்வேறு அளவுகளில் 9 இடங்களில் வழவழப்பான பல்வேறு குழிகளை கண்டறிந்தோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- இருவரும் மோட்டார் சைக்கிளில் ராமாபுரத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தனர்.
- ராமாபுரத்தில் பெண்ணிடம் செல்போன் பறித்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
போரூர்:
ஆவடி பகுதியை சேர்ந்தவர் நலன்ராஜ். தனியார் நிறுவன ஊழியர். இவரது மனைவி பிரான்சி மோனிகா.
கடந்த 2-ந் தேதி காலை கணவன், மனைவி இருவரும் மோட்டார் சைக்கிளில் ராமாபுரத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தனர்.
மவுண்ட் பூந்தமல்லி சாலையில் வந்தபோது மற்றொரு மோட்டார் சைக்கிளில் பின் தொடர்ந்து வந்த 2 வாலிபர்கள் திடீரென மோனிகா கையில் வைத்திருந்த விலை உயர்ந்த செல்போனை பறித்து தப்பி சென்றுவிட்டனர்.
இதுகுறித்து ராமாபுரம் குற்றப்பிரிவு போலீசில் புகார் அளிக்கப்பட்டது. கண்காணிப்பு கேமரா பதிவுகளை கொண்டு செல்போன் பறிப்பில் ஈடுபட்டது முகலிவாக்கம் பகுதியை சேர்ந்த சஞ்சய் (19) கொளப்பாக்கம் பகுதியை சேர்ந்த சந்தோஷ்குமார் (19) என்று தெரிந்தது. அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 4 செல்போன், ஒரு மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது.






