என் மலர்tooltip icon

    காஞ்சிபுரம்

    • வழியாக ரோந்து பணியில் இருந்த மாங்காடு போலீசார் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடப்பதை கண்டனர்.
    • வீட்டுக்குள் சென்று பார்த்தபோது வீட்டில் மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.

    காஞ்சிபுரம் மாவட்டம் மாங்காடு அடுத்த சிக்கராயபுரம், சிவன் தாங்கல், தில்லை நடராஜர் நகர் பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ் (வயது 29). வளசரவாக்கத்தில் உள்ள தனியார் கார் ஷோரூமில் வேலை செய்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் வீட்டை பூட்டி விட்டு தனது குடும்பத்தினருடன் திருச்சியில் உள்ள கோவிலுக்கு சாமி கும்பிட சென்று விட்டார்.

    இந்த நிலையில் அந்த வழியாக ரோந்து பணியில் இருந்த மாங்காடு போலீசார் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடப்பதை கண்டனர். பின்னர் வீட்டுக்குள் சென்று பார்த்தபோது வீட்டில் மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.

    இது குறித்து வீட்டின் உரிமையாளரை தொடர்பு கொண்டு கேட்டபோது வீட்டில் 18 பவுன் நகை மற்றும் ரூ.1½ லட்சம் திருடப்பட்டது போலீசாருக்கு தெரியவந்தது.

    இது பற்றி மாங்காடு போலீசார் விசாரித்து வருகின்றனர். வீட்டின் உரிமையாளர் வந்த பிறகே வேறு என்ன பொருட்கள் எல்லாம் திருட்டு போனது என்பது தெரியவரும். அந்த பகுதியில் பதிவான கண்காணிப்பு கேமரா காட்சிகளை கொண்டு போலீசார் கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

    • மதுரவாயல், கணபதி நகர் பகுதியை சேர்ந்தவர் சதிஷ்குமார்(வயது27).தொழிலாளி.
    • மதுரவாயல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    போரூர்:

    மதுரவாயல், கணபதி நகர் பகுதியை சேர்ந்தவர் சதிஷ்குமார்(வயது27).தொழிலாளி. இவரது மனைவி சித்ரா. தற்போது 9 மாத கர்ப்பிணியாக உள்ளார். கடந்த 4நாட்களுக்கு முன்பு சித்ராவிற்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடந்தது. அப்போது சித்ராவின் உறவினருடன் சதிஷ்குமாருக்கு தகராறு ஏற்பட்டது. இதையடுத்து சித்ரா கணவருடன் கோபித்துக் கொண்டு செவ்வாப்பேட்டையில் உள்ள தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார். இதனால் மன வேதனை அடைந்த சதிஷ்குமார் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து மதுரவாயல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • அரும்பாக்கம் பிரகதீஸ்வரர் நகர் பகுதியை சேர்ந்தவர் சிவகுமார்.
    • விருகம்பாக்கம் குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    போரூர்:

    அரும்பாக்கம் பிரகதீஸ்வரர் நகர் பகுதியை சேர்ந்தவர் சிவகுமார். மதுரவாயல் அடுத்த ஆலப்பாக்கத்தில் டீ கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி தனபிரியா

    கணவன்-மனைவி இருவரும் நேற்று இரவு கடையை பூட்டிவிட்டு மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர்.

    விருகம்பாக்கம் ஆற்காடு சாலையில் வந்தபோது அவர்களை பின் தொடர்ந்து மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் திடீரென தனபிரியா அணிந்திருந்த 6 பவுன் செயினை பறித்துக் கொண்டு மின்னல் வேகத்தில் தப்பி சென்று விட்டனர்.

    இதுகுறித்து தனபிரியா புகாரின் பேரில் விருகம்பாக்கம் குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • 7 ஆண்டுகளாக வனமகோத்சவ விழா சிறப்பாக கொண்ட்டாடப்பட்டு வருகிறது.
    • காடு செழித்தால் நாடு செழிக்கும் என்ற நோக்கத்தில் மரக்கன்றுகள் நடும் விழா மற்றும் மரக்கன்றுகள் வழங்கும் விழா நடைபெற்றது.

    காஞ்சிபுரம்:

    வாலாஜாபாத்தில் உள்ள அரசு அலுவலகங்களில் அகத்தியா மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளியின் சுற்றுச் சூழல் மன்றத்தின் சார்பில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.

    தேசிய வன மகோத்சவ விழாவை முன்னிட்டு வாலாஜாபாத் அகத்தியா மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளியின் சுற்றுச் சுழல் மன்ற மாணவ- மாணவியர் சார்பில் மரம் வளர்ப்போம், மழை பெறுவோம், காடு செழித்தால் நாடு செழிக்கும் என்ற நோக்கத்தில் மரக்கன்றுகள் நடும் விழா மற்றும் மரக்கன்றுகள் வழங்கும் விழா நடைபெற்றது.

    இதன் தொடர்ச்சியாக வாலாஜாபாத்தில் உள்ள அரசு சித்த மருத்துவமனை, அரசு மருத்துவ மனை, இரயில் நிலையம், வட்டார கல்வி அலுவலகம், பேரூராட்சி அலுவலகம், காவல் நிலையம், வட்டார வளர்ச்சி அலுவலகம், வட்டாட்சியர் அலுவலக வளாகங்களில் நிழல் தரும் மரக் கன்றுகள் நடப்பட்டன.

    அகத்தியா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் உள்ள பள்ளி மாணவ மாணவியர் அனைவருக்கும் பயன்தரும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டன. விழாவிற்கான ஏற்பாடுகளை பள்ளி நிர்வாகி சாந்தி அஜய்குமார் செய்திருந்தார். அவர் தொடர்ந்து பேசும் போது இப்பள்ளியில் தொடர்ந்து 7 ஆண்டுகளாக வனமகோத்சவ விழா சிறப்பாக கொண்ட்டாடப்பட்டு வருகிறது. இதுவரை பதினைந்தாயிரம் மரக்கன்றுகளும், ஐயாயிரம் விதைப்பந்துகளும் இப்பள்ளி வழங்கியுள்ளோம்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • 249 குறுவட்டங்களில் 200 ஆதி திராவிட பழங்குடியின சிறு, குறு விவசாயிகள் பயன்பெறும் வகையில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
    • நீர் விநியோக குழாய்கள் அமைப்பதற்கு ரூ. 20 ஆயிரமும் உச்சவரம்புத் தொகையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் டாக்டர் மா.ஆர்த்தி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது :

    தமிழ்நாட்டில் பாசன நீர் ஆதாரங்களை புதிதாக உருவாக்கி அதிக பரப்பில் சாகுபடி மேற்கொண்டு விவசாயிகள் அதிக விளைச்சல் பெற வேண்டும் என்ற நோக்கத்துடன் அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

    ஆதி திராவிட, பழங்குடியின விவசாயிகளுக்கு 100 சதவீத மானியத்தில் ஆழ்துளை அல்லது குழாய் கிணறுகள் அமைத்து 2022-23 ஆம் ஆண்டில் ரூ. 12 கோடி செலவில் மின் மோட்டாருடன் நுண்ணீர் பாசன வசதி அமைத்துத் தரப்படும் என வேளாண் துறை அமைச்சர் பேரவையில் அறிவித்தார்.

    அதன் அடிப்படையில் தமிழ்நாட்டின் 8 மாவட்டங்களில் பாசன நீர் வசதி இல்லாத இடங்களில் 200 சிறு, குறு விவசாயிகள் பயன்பெறும் வகையில், திட்டம் தயாரிக்கப்பட்டு, நிலத்தடி நீர் பாதுகாப்பான குறுவட்டங்களில் வேளாண்மை பொறியியல் துறை மூலம் செயல்படுத்திட தமிழ்நாடு அரசு ஆணை பிறப்பித்தது.

    அரியலுர், செங்கல்பட்டு, கிருஷ்ணகிரி, காஞ்சிபுரம், புதுக்கோட்டை, இராமநாதபுரம், விருதுநகர் மற்றும் தேனி ஆகிய 8 மாவட்டங்களில் உள்ள நிலத்தடி நீர் பாதுகாப்பாக உள்ள 249 குறுவட்டங்களில் 200 ஆதி திராவிட பழங்குடியின சிறு, குறு விவசாயிகள் பயன்பெறும் வகையில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

    249 சம்பந்தப்பட்ட பாதுகாப்பான குறுவட்டங்களில் உள்ள பயனாளிகள் அந்தந்த மாவட்டத்தின் வேளாண்மை பொறியியல் துறையின் செயற்பொறியாளர் மற்றும் உதவி செயற்பொறியாளர் அலுவலர்களை அணுகலாம்.

    இத்திட்டத்தின் கீழ் இடத்திற்கு ஏற்றவாறு, குழாய் கிணறு அல்லது ஆழ்துளை கிணறு அமைத்தல், நீரினை இறைப்பதற்கு மின்சார சக்தி மூலம் இயங்கக்கூடிய பம்பு செட்டுகள் நிறுவுதல், பாசன நீரினை வீணாக்காமல் சாகுபடி செய்யப்படும் வயலுக்கு அருகில் கொண்டு செல்வதற்கு பாசன நீர் குழாய்கள் நிறுவுதல் மற்றும் நுண்ணீர் பாசன அமைப்புகளை நிறுவுதல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.

    அரசு வெளியிட்ட ஆணையின்படி, 90 மீட்டர் ஆழம் உள்ள குழாய் கிணறு அமைப்பதற்கும் 100 மீட்டர் ஆழம் உள்ள ஆழ்துளை கிணறு அமைப்பதற்கும் அதிகபட்சமாக ரூ.3 இலட்சமும், மின்சார சக்தி மூலம் இயங்கக்கூடிய 5 குதிரைத்திறன் கொண்ட பம்பு செட்டுகள் அமைப்பதற்கு ரூ. 75 ஆயிரமும், நீர் விநியோக குழாய்கள் அமைப்பதற்கு ரூ. 20 ஆயிரமும் உச்சவரம்புத் தொகையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    மேலும், மின்சார சக்தி மூலம் இயங்கக்கூடிய இடங்களுக்கு மின்சார இணைப்புக்கான கட்டமைப்புகள் அமைத்திட ரூ.2.50 இலட்சமும் நிதி வழங்கப்பட்டுள்ளது.

    அரசினால் நிர்ணயிக்கப்பட்ட ஆழத்திற்கும் அதிகமாக கிணறு அமைக்க வேண்டும் என்றாலோ அல்லது கூடுதல் குதிரைத்திறன் கொண்ட பம்பு செட்டுகள் நிறுவ வேண்டும் என்றாலோ, அதற்கான கூடுதல் செலவினை விவசாயிகளே ஏற்றுக் கொள்ள வேண்டும்.

    இத்திட்டத்திற்கான இதுவரை விவசாயிகளை கண்டறிந்து பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    பெரிய விவசாயிகளைப் போல, சிறு மற்றும் குறு ஆதி திராவிட பழங்குடியின விவசாயிகளும் பயன்பெறும் வகையில் பாசன அமைப்புகளை உருவாக்கி தங்களது நிலத்தில் சாகுபடியினை மேற்கொள்ள வேண்டும் என்ற உயரிய எண்ணத்தில், தமிழ்நாடு அரசு அறிமுகப்படுத்தியுள்ள இத்திட்டத்தினை வேளாண் பெருமக்கள் பயன்படுத்திட சம்பந்தப்பட்ட மாவட்ட வேளாண்மை பொறியியல் துறை அலுவலகத்தினை அணுகலாம்.

    காஞ்சீபுரம் மாவட்ட விவசாயிகள் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி செயற்பொறியாளர் , 487, அண்ணா சாலை, நந்தனம், சென்னை – 35,

    வேளாண்மை பொறியியல் விரிவாக்க மையம்,பஞ்சுப்பேட்டை, காஞ்சிபுரம் - 631502 அலைபேசி எண் : 044-24352356 கைபேசி எண் : 9003090440 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    • ஸ்ரீபெரும்புதூர் அருகே ஏரிக்கரை பகுதியில் வசிப்பவர் பாக்யராஜ் என்கிற பார்கவி (வயது38).
    • அப்பகுதி மக்கள் ஸ்ரீபெரும்புதூர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.

    ஸ்ரீபெரும்புதூர்:

    ஸ்ரீபெரும்புதூர் அருகே ஏரிக்கரை பகுதியில் வசிப்பவர் பாக்யராஜ் என்கிற பார்கவி (வயது38). திருநங்கை. இவர் அதே பகுதியில் மதுபானங்களை கள்ளச்சந்தையில் விற்று வந்ததாக கூறப்படுகிறது.

    இந்நிலையில் இன்று காலை வீட்டின் அருகே திருநங்கை பார்கவி ரத்த வெள்ளத்தில் உயிருக்கு ஆபத்தான நிலையில் மயங்கி கிடந்தார். அவரது உடலில் அரிவாளால் வெட்டியதற்கான பலத்த காயங்கள் இருந்தன. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் ஸ்ரீபெரும்புதூர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். இன்ஸ்பெக்டர் ரமேஷ் மற்றும் போலீசார் விரைந்து வந்து பார்கவியை மீட்டு ஸ்ரீபெரும்புதூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மர்ம நபர்கள் பார்கவியை வெட்டி கொல்ல முயன்று இருப்பது தெரிய வந்துள்ளது. இது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகி றார்கள்.

    கடந்த சில மாதங்களுக்கு முன் திருநங்கை பார்கவியின் காதலன் அவரது வீட்டின் அருகே தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

    • நிலவொளி பள்ளிகள் 24 பள்ளிகளாக அதிகரித்தது.
    • காஞ்சிபுரம் மாவட்டத்தில் அனைத்து ஒன்றியங்களிலும் நிலவொளி பள்ளிகள் தொடங்கப்பட உள்ளது.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    காஞ்சிபுரம் மற்றும் அதன் சுற்றுப்புறபகுதிகளில் உள்ள உழைக்கும் தொழிலாளர்களுக்காக நிலவொளி பள்ளிகள் மாவட்ட நிர்வாகத்தால் 1998-ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. நிலவொளி பள்ளிகள் 24 பள்ளிகளாக அதிகரித்தது. இதற்கு தேவையான நிதியை நன்கொடையாளர்களிடம் இருந்து வசூலித்து நடைபெற்றது.

    அனைவருக்கும் ஆரம்ப கல்வி திட்டம் மாவட்டத்தில் நடைபெற்றதால் நிலவொளி பள்ளிகளின் தேவை குறைந்து 2 பள்ளிகள் மட்டுமே நடத்தப்பட்டது. பள்ளியில் இடைநின்ற மாணவர்கள், உழைக்கும் தொழிலாளர்கள் தொடர்ந்து கல்வி கற்பதற்கு நிலவொளி பள்ளிகள் நல்ல வாய்ப்பாக அமைந்துள்ளது.

    கொரோனா தொற்றுக்கு பின்னர் மீண்டும் நிலவொளி பள்ளிகளை திறக்க மாவட்ட நிர்வாகம் முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. முதல் கட்டமாக யாகசாலை மற்றும் சி.எஸ்.எம். நிலவொளிபள்ளிகள் தொடங்கப்படவுள்ளது.

    அதனைதொடர்ந்து காஞ்சிபுரம் மாவட்டத்தில் அனைத்து ஒன்றியங்களிலும் நிலவொளி பள்ளிகள் தொடங்கப்பட உள்ளது.

    நிலவொளிப்பள்ளிகளில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் அவர்களுடைய கல்வி தகுதியை பொறுத்து நேரடியாக 8, 10, 11 மற்றும் 12-ம் வகுப்புகளில் சேர்த்து கொள்ளப்படுவார்கள். 10-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்புவரை தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள் மற்றும் தேர்வு எழுத தகுதியானவர்களும் சேர்ந்து நிலவொளி பள்ளிகளில் படிக்கலாம்.

    நிலவொளி பள்ளிகள் இரவு 7 மணிக்கு ஆரம்பித்து 9 மணிவரை நடைபெறும். நிலவொளி பள்ளிகள் மூலம் நேரடியாக 8-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்புவரை தேர்வு எழுதும் கற்போர்களுக்கு தேர்வு கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்களிக்கப்பட்டுள்ளது.

    நிலவொளி பள்ளியில் படிக்கும் கற்போர்களுக்கு மாவட்ட நிர்வாகத்தின் மூலம் விலையில்லா பாட புத்தகம், குறிப்பேடுகள் மற்றும் கற்பித்தல் பொருட்கள் வழங்கப்படும்.

    நிலவொளிப் பள்ளியில் சேர விரும்புவர்கள் 74184 19495 என்ற வாட்சப் எண்ணில் வருகிற 20-ந்தேதிக்குள் தங்களுடைய விவரங்களை தெரிவித்து கொள்ளலாம். மேலும் 044-27237696-ல் மாவட்ட அறிவொளி இயக்க திட்ட அலுவலக எண்ணிலும் தொடர்புகொள்ளலாம்.

    எனவே உழைக்கும் தொழிலாளர்கள் இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

    இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • காஞ்சிபுரம் செவிலிமேடு பகுதியை சேர்ந்தவர் விஜய்.
    • கொலையாளிகள் யார்? கொலைக்கான காரணம் என்ன? என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் செவிலிமேடு பகுதியை சேர்ந்தவர் விஜய் (வயது 23). இவர் பிளஸ்-2 படித்துவிட்டு கொத்தனாராக வேலை செய்து வந்தார். இவரது தந்தை வெங்கடேசன் ஏற்கனவே இறந்து விட்டார். தாய் பாஞ்சாலியுடன் வசித்து வந்தார்.

    அடிக்கடி தாய்க்கும், மகனுக்கும் தகராறு ஏற்படுவதால் விஜய் தனியாக செவிலிமேடு பெட்ரோல் நிலையம் எதிரே தனியாக வீடு எடுத்து தங்கி இருந்தார்.

    இந்த நிலையில் நீண்ட நேரம் ஆகியும் மகன் வராததால் அவர் தங்கி உள்ள வீட்டுக்கு சென்று பார்த்து வரலாம் என்று அவருடைய தாய் பாஞ்சாலி நேற்று முன்தினம் இரவு 8 மணி அளவில் வீட்டுக்கு சென்று பார்த்தார். அப்போது அவர் ரத்தக்காயத்துடன் இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து கூச்சலிட்டார்.

    அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து போலீஸ்நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். காஞ்சிபுரம் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக காஞ்சிபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். கொலையாளிகள் யார்? கொலைக்கான காரணம் என்ன? என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    • 50% மானிய அடிப்படையில் அதிகபட்சமாக ரூ. 4 இலட்சம் மானியம் வழங்கப்படும்.
    • மாவட்ட கலெக்டரின் மாவட்ட அளவிலான செயற்குழு கூட்டத்தில் ஒப்புதல் பெற்ற பின்னரே பயனாளிகளுக்கு இம்மையம் மானியத்தில் அமைத்து தரப்படும்.

    காஞ்சிபுரம்:

    வேளாண் இயந்திரங்கள் மற்றும் சூரிய சக்தியால் இயங்கும் பம்பு செட்டுகள் பழுது நீக்கும் பராமரிப்பு மையம் மானியத்தில் அமைக்கும் புதிய திட்டத்தில் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட கலெக்டர் டாக்டர் மா.ஆர்த்தி தெரிவித்துள்ளார்

    இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழக அரசு, வேளாண்மைப் பொறியியல் துறையின் மூலம் தேசிய வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் "வேளாண் இயந்திரங்கள் மற்றும் சூரிய சக்தியால் இயங்கும் பம்பு செட்டுகள் பழுது நீக்கும் பராமரிப்பு மையம்" மானியத்தில் அமைக்கும் புதிய திட்டத்தை கடந்த 2021-22 ஆம் ஆண்டு முதல் செயல்படுத்தி வருகிறது.

    விவசாயிகள் தங்கள் வேளாண் இயந்திரங்கள் மற்றும் சூரிய சக்தியால் இயங்கும் பம்பு செட்டுகளை தங்கள் விளைநிலங்களிலேயே பழுது நீக்கி பராமரிக்கவும், விவசாயிகள் வேளாண் பணிகளை எவ்வித இடர்பாடுகளின்றி குறித்த நேரத்தில் செய்திடவும், கிராமப்புற இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கி நிலையான வருமானம் ஈட்டி பொருளாதாரத்தை மேம்படுத்தும் நோக்கத்துடனும் இம்மையங்கள் அமைக்கப்படுகின்றன. தொழில் முனைவோர், விவசாய குழுக்கள் மற்றும் உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கு இம்மையங்கள் மானியத்தில் அமைத்து தரப்படும், இம்மையங்கள் ரூ. 8 இலட்சம் செலவில் அமைக்கப்படுகின்றன.

    இதில் 50% மானிய அடிப்படையில் அதிகபட்சமாக ரூ. 4 இலட்சம் மானியம் வழங்கப்படும்.

    மையங்கள் அமைக்க போதிய இடவசதியும், மும்முனை மின்சார இணைப்பும் கொண்ட கிராமப்புற இளைஞர்கள், தொழில் முனைவோர்கள், விவசாய குழுக்கள் மற்றும் உழவர் உற்பத்தி நிறுவனங்கள் தங்கள் அருகாமையில் உள்ள வேளாண் பொறியியல் துறையின் உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தை அனுகி விண்ணப்பத்தினை அளிக்கலாம்.

    மாவட்ட கலெக்டரின் மாவட்ட அளவிலான செயற்குழு கூட்டத்தில் ஒப்புதல் பெற்ற பின்னரே பயனாளிகளுக்கு இம்மையம் மானியத்தில் அமைத்து தரப்படும்.

    மையங்கள் அமைக்கத் தேவையான இயந்திரங்கள் ஒப்பந்த புள்ளி அடிப்படையில் கண்காணிப்பு பொறியாளர் முடிவு செய்யப்பட்டு, பயனாளிகள் மொத்த தொகையினை செலுத்தி வாங்கிக் கொள்ளலாம். பின்னர் சம்மந்தப்பட்ட உதவி செயற்பொறியாளர் மையத்தினை நேரில் ஆய்வு செய்து, திருப்தி அளிக்கும் வகையில் இருப்பின் மானியத்தொகையினை பயனாளிகளின் வங்கிக் கணக்கில் பின்னேற்பு மானியமாக செலுத்தப்படும்.

    மேலும், விவரங்களுக்கு அருகாமையில் உள்ள வேளாண்மை பொறியியல் துறை, உதவி செயற்பொறியாளர்களை அனுகி பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

    உதவி செயற்பொறியாளர், வேளாண்மை பொறியியல் விரிவாக்க மையம்,பஞ்சுப்பேட்டை, காஞ்சிபுரம் – 631502 அலைபேசி எண் : 044-24352356 கைபேசி எண் : 9003090440 என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • மத்திய மந்திரி கபில் மொரிஸ்வர் உள்நாட்டு விமானநிலையத்தில் சுமார் 2 மணி நேரம் காத்திருத்தார்.
    • சென்னையிலிருந்து மும்பைக்கு செல்ல டிக்கெட் முன்பதிவு செய்யப்பட்டிருந்தது.

    ஆலந்தூர்:

    மத்திய இணை மந்திரி கபில் மோரேஷ்வர் பாட்டீல், நேற்று இரவு மதுரையில் இருந்து இரவு 7 மணிக்கு இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானத்தில் சென்னைக்கு வந்துவிட்டு, இரவு 8.30 மணிக்கு விஸ்தாரா ஏர்லைன்ஸ் விமானம் மூலம் சென்னையிலிருந்து மும்பைக்கு செல்ல டிக்கெட் முன்பதிவு செய்யப்பட்டிருந்தது.

    ஆனால் மதுரையிலிருந்து இரவு 7 மணிக்கு வர வேண்டிய விமானம் தாமதமாக இரவு 8.15 மணிக்கு தான் சென்னை வந்தது. உடனடியாக அவரை சென்னை விமான நிலைய பாதுகாப்பு கிளை போலீசார் அவசரமாக மும்பை செல்ல இருக்கும், விஸ்தாரா ஏர்லைன்ஸ் விமானத்தில் ஏற்றி வைக்க அழைத்து சென்றனர்.ஆனால் விஸ்தாரா ஏர்லைன்ஸ் அதிகாரிகள் போா்டிங் முடிந்து விட்டது. நீங்கள் தாமதமாக வந்துவிட்டீர்கள் என்று மந்திரியின் டிக்கெட் முன்பதிவை ரத்து செய்தனா்.

    இதையடுத்து மத்திய மந்திரி கபில் மொரிஸ்வர் உள்நாட்டு விமானநிலையத்தில் சுமார் 2 மணி நேரம் காத்திருத்தார்.

    அதன்பின்பு இரவு 10.30 மணிக்கு மும்பை செல்லும் இண்டிகோ ஏா்லைன்ஸ் விமானத்தில் அவர் புறப்பட்டு சென்றாா்.

    மதுரையில் இருந்து வந்த விமானம் தாமதம் காரணமாக, மத்திய மந்திரி மும்பை செல்ல முடியாமல், 2 மணி நேரம் சென்னை விமானநிலையத்தில் தவிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

    • காஞ்சிபுரம் மாவட்டக் கலை மன்றம் வாயிலாக கலைத் துறையில் சிறந்து விளங்குகின்ற 10 சிறந்த கலைஞர்களுக்கு அரசு நல திட்ட உதவிகள்.
    • காஞ்சிபுரம் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் படப்பை ஆ.மனோகரன், கலைப்பண்பாட்டுத்துறை உதவி இயக்குனர் பா.ஹேமநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மண்டலக் கலை பண்பாட்டு துறையின், காஞ்சிபுரம் மாவட்டக் கலை மன்றம் வாயிலாக கலைத் துறையில் சிறந்து விளங்குகின்ற 10 சிறந்த கலைஞர்களுக்கு அரசு நல திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி சிறுகாவேரிபாக்கம், வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நடைபெற்றது.

    தமிழக சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் தொழில்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், மாவட்ட கலெக்டர் டாக்டர் மா.ஆர்த்தி ஆகியோர் முன்னிலையில் 10 சிறந்த கலைஞர்களுக்கு மாவட்ட கலை மன்ற விருதுகள் வழங்கப்பட்டது.

    கலைமுதுமணி பிரிவில் காஞ்சிபுரம் வ.ஜபருல்லாகான் (மிருதங்க கலைஞர்), திம்மராஜம்பேட்டை சுந்தரமூர்த்தி (கைசிலம்ப கலைஞர்), கலைநன்மணி பிரிவில் மாமல்லபுரம் து.தனசேகரன் (கற்சிற்பக் கலைஞர்), ஐய்யம்பேட்டை ம.அண்ணாமலை (ஆர்மோனிய பாடகர்) கலைசுடர்மணி பிரிவில் மணமை சா.மதன் (ஓவியக் கலைஞர்), தெள்ளிமேடு கு.கனகராசு (நாதஸ்வரக் கலைஞர்), கலைவளர்மணி பிரிவில் காஞ்சிபுரம் சு.லலிதா (பரதநாட்டியக் கலைஞர்) பட்டிப்புலம் ராஜரத்தினம் (சிற்பக்கலைஞர்), கலைஇளமணி பிரிவில் த.திவ்யா (பரதநாட்டியக் கலைஞர்) வி.தர்ஷினி (சிலம்பாட்டக் கலைஞர்) ஆகியோர்களுக்கு விருதுகள், காசோலைகள் மற்றும் பொன்னாடைகள் போத்தி கௌரவிக்கப்பட்டனர்.

    இந்நிகழ்ச்சியில் உத்தரமேரூர் எம்.எல்.ஏ க.சுந்தர், காஞ்சிபுரம் எம்.பி க.செல்வம், காஞ்சிபுரம் எம்.எல்.ஏ சி.வி.எம்.பி.எழிலரசன், காஞ்சிபுரம் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் படப்பை ஆ.மனோகரன், கலைப்பண்பாட்டுத்துறை உதவி இயக்குனர் பா.ஹேமநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • போலி மதுபாட்டில்கள் எங்கு தயாரிக்கப்பட்டன,எங்கிருந்து கடத்தி செல்லப்படுகிறது.
    • மாகரல் கிராமத்திலிருந்து சித்தாலப்பாக்கம் செல்லும் சாலை சந்திப்பில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் அருகே ரூ 6லட்சம் மதிப்புள்ள 2880 போலி மதுபாட்டில்களை கடத்தி சென்றவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுவிலக்கு அமலாக்கத்துறையின் நுண்ணறிவுப் பிரிவு காவல் ஆய்வாளர் பாலச்சந்திரன் தலைமையிலான போலீசார் காஞ்சிபுரம் அருகே மாகரல் கிராமத்திலிருந்து சித்தாலப்பாக்கம் செல்லும் சாலை சந்திப்பில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த ஒரு மினி சரக்கு லாரியை நிறுத்தி சோதனையிட்டபோது அதில் தலா 48 பாட்டில்களை உள்ளடக்கிய 60 பெட்டிகள் இருந்தன.மொத்தம் 2880 மதுபாட்டில்களை கடத்தி சென்று கொண்டிருப்பதும் அவையனைத்தும் போலி மதுபாட்டில்கள் என்பதும் விசாரணையில் தெரிய வந்தது.

    விசாரணையில் இவற்றை மினிசரக்கு வாகனத்தில் கடத்தி சென்று கொண்டிருப்பது திருவண்ணாமலை மாவட்டம் கூழமந்தல் கிராமத்தைச் சேர்ந்த பாலமுருகன்(44)என்றும் இதன் மதிப்பு ரூ.6லட்சம் இருக்கலாம் எனவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.போலி மதுபாட்டில்கள் எங்கு தயாரிக்கப்பட்டன,எங்கிருந்து கடத்தி செல்லப்படுகிறது,இக்கடத்தலில் தொடர்புடையவர்கள் யாராக இருக்கலாம் எனவும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    ×