search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    காஞ்சிபுரத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
    X

    காஞ்சிபுரத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

    • காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக மக்கள் நல்லுறவு மையத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்.
    • பென்னலூர் கிராமத்தில் 7 நபர்களுக்கும் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் இலவச வீட்டு மனை பட்டாக்களை வழங்கினார்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மாவட்டத்தில் வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் டாக்டர்.மா.ஆர்த்தி தலைமையில் நடைபெற்றது.

    காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக மக்கள் நல்லுறவு மையத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் டாக்டர்.மா.ஆர்த்தி தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து 261 மனுக்களை பெற்று அவற்றின் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள அரசு துறை அலுவலர்களுக்கு மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டார்.

    மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், வருவாய்த்துறை சார்பில் காஞ்சிபுரம் வட்டம், பரந்தூர் மண்டலம் சிங்காடிவாக்கம் கிராமத்தில் 26 நபர்களுக்கும், ஸ்ரீபெருமந்தூர் வட்டம் பென்னலூர் கிராமத்தில் 7 நபர்களுக்கும் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் இலவச வீட்டு மனை பட்டாக்களை வழங்கினார்.

    இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் கோ.சிவ ருத்ரய்யா, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) இரவிச்சந்திரன், மாவட்ட வழங்கல் அலுவலர் பாபு மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×