என் மலர்tooltip icon

    ஈரோடு

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே இன்று கலவை வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ளது நஞ்சப்பகவுண்டன் புதூர். இந்த பகுதியில் வடிகால் அமைக்கும் பணி நடந்து வருகிறது.

    இதற்காக கலவை ஏற்றிக் கொண்டு ஒரு வாகனம் நஞ்சப்பகவுண்டன்புதூர் நோக்கி வந்து கொண்டிருந்தது. கலவை வாகனத்தை தேனியை சேர்ந்த கருப்புசாமி என்பவர் ஓட்டி வந்தார்.

    இந்த வாகனத்தில் பவானிசாகர் காராட்சிகோரை என்ற பகுதியை சேர்ந்த முத்தப்பன், கொத்துக்காடு பகுதியை சேர்ந்த சரவணன் ஆகியோர் வந்து கொண்டிருந்தனர்.

    கலவை வாகனம் சத்தியமங்கலம்-நெகமம் பிரிவு என்ற பகுதியில் குறுகலான சாலையில் வந்து கொண்டிருந்தது. அப்போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த கலவை வாகனம் நடுரோட்டில் கவிழ்ந்து விபத்தானது.

    இதில் கலவை வாகனத்தில் பயணித்த 3 பேரும் சிக்கி அலறினார்கள். இந்த சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடி வந்தனர். பின்னர் அவர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது கலவை வாகனத்தில் வந்த டிரைவர் கருப்புசாமி மற்றும் தொழிலாளர்கள் முத்தப்பன், சரவணன் ஆகிய 3 பேரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானது தெரிய வந்தது.

    இதுபற்றி தகவல் கிடைத்ததும் சத்தியமங்கலம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பலியான 3 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
    ஈரோடு மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இதனால் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கையும் அதிகரித்து உள்ளது.
    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இதனால் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கையும் அதிகரித்து உள்ளது.


    ஈரோடு மாவட்டத்தில் கட்டுக்குள் இருந்த கொரோனா பரவல் மீண்டும் வேகம் எடுக்க தொடங்கியுள்ளது. சுகாதாரத்துறையினர் வெளியிட்ட பட்டியல் படி நேற்று ஒரே நாளில் இதுவரை இல்லாத அளவாக புதிய உச்சமாக மேலும் 973 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது நேற்று முன்தினத்தைவிட 54 கூடுதலாகும்.

    இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் பாதித் தவர்களின் மொத்த எண்ணிக்கை 1 லட்சத்து 15 ஆயிரத்து 031 ஆக உயர்ந்துள்ளது. 

    நேற்று ஒரே நாளில் 437 பேர் பாதிப்பிலிருந்து குணமடைந்துள்ளனர். இதனால் இதுவரை மாவட்டத்தில் குணமடை ந்தவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 9 ஆயிரத்து 361 ஆக உயர்ந்துள்ளது. 

    மாவட்டத்தில் இதுவரை கொரோனாவால் உயிரிழந் தவர்கள் எண்ணிக்கை 721 ஆக உயர்ந்து உள்ளது. தற்போது மாவட்டம் முழுவதும் 4,949 பேர் கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

    நாளைக்குள் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 5 ஆயிரத்தை கடந்து விடும்.

    குணமடைந்தவர்கள் எண்ணிக்கையை விட தினசரி பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதால் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 

    கடந்த 7-ந் தேதி மாவட்டத்தில் 435 பேர் கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வந்தனர்.

    அதைத்தொடர்ந்து ஒவ்வொரு நாளும் தினசரி பாதிப்பு அதிகரி த்து வண்ணம் இருந்து வருகிறது. 

    இதனால் தற்போது 4 ஆயிரத்து 949 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதாவது கடந்த 14 நாட்களில் மட்டும் 4 ஆயிரத்து 514 பேர் பாதிக்கப் பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    பவானி ஆற்றங்கரையோரம் அருகே உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகள் 85 பேருக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளனர்.
    சத்தியமங்கலம்:

    பவானி ஆற்றங்கரையோரம் அருகே உள்ள ஆக்கிரமிப்புகளை  அகற்ற அதிகாரிகள் 85 பேருக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளனர்.

    பவானி ஆற்றங்கரையோரம் ஏராளமான வீடுகள் மற்றும் விவசாய நிலங்கள் உள்ளது. கரையோர  பகுதிகளில் விவசாய நிலங்களில் விவசாயிகள் சோளம், நெல், மஞ்சள் மற்றும் கரும்பு உள்பட பல்வேறு பயிர்களை பயிரிட்டு உள்ளனர். 

    பவானிசாகர் அணையில் இருந்து அதிகளவு தண்ணீர் திறந்து விடும் போது கரையோரம் உள்ள விவசாய  நிலங்களில் தண்ணீர் புகுந்து விடுகிறது.

    இந்த நிலையில் பவானிசாகர் அணையில் இருந்து சத்தியமங்கலம் பவானி ஆற்று பாலம் வரை ஆற்றங் கரையோரம் சிலர் ஆக்கிரமித்து வீடுகள் கட்டி உள்ளதாக புகார்கள் வந்தது. 

    இதையடுத்து கரையோரம் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி பொதுப்பணித்துறை சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது.

    இது குறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறியதாவது:-
     
    பொதுப்பணித்துறைக்கு சொந்தமான இடத்தில் பவானி ஆற்றங்கரையோரம் சிலர் ஆக்கரமித்து வீடுகள் கட்டி உள்ளனர். 

    மேலும் சிலர் ஆக்கிரமித்து விவசாயம் செய்து வருகிறார்கள். எனவே பவானி ஆற்றங்கரையோரம் ஆக்கிரமித்து வீடு கட்டி வசித்து வருபவர்களை வெளியேற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இதன் அடிப்படையில் பவானிசாகர் அணை முதல் சத்தியமங்கலம் ஆற்றுப் பாலம் வரை சுமார் 15 கி.மீட்டர் தூரத்துக்கு ஆற்றின் இருகரைகளிலும் தாழ்வான பகுதிகளில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான இடத்தில் வீடு கட்டி வசிப்பவர்கள், நிலத்தை ஆக்கிரமித்து விவசாயம் செய்வோர் என மொத்தம் 85 பேருக்கு ஆக்கிரமிப்புகள் அகற்ற  நோட்டீஸ் வழங்கப்பட்டு உள்ளது.

    இந்த பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் தானாக ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். இல்லை என்றால் அதிகாரிகள் உத்தரவுப்படி மேல் நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.


    ஈரோட்டில் சாலையில் நடந்து செல்பவர்களை கூட்டமாக வந்து தெருநாய்கள் துரத்துவதால் பொதுமக்கள் அச்சமடைந்து உள்ளனர்.
    ஈரோடு:

    ஈரோட்டில்  சாலையில் நடந்து செல்பவர்களை கூட்டமாக வந்து தெருநாய்கள் துரத்துவதால் பொதுமக்கள் அச்சமடைந்து உள்ளனர்.

    ஈரோடு மாநகராட்சி 40-வது வார்டில் கற்பகம் லே அவுட், மோசிக்கீரனார் வீதி, ஓம் காளியம்மன் கோவில் வீதி, கோட்டையார் வீதி உள்பட 30-க்கும் மேற்பட்ட வீதிகள் உள்ளது.
     
    இப்பகுதியில் 100-க்கும் மேற்பட்ட தெரு நாய்கள் சுற்றித் திரிகின்றன. அவ்வப்போது, வாகனங்களில் செல்பவர் களையும், சாலையில் நடந்து செல்பவர்களையும் கூட்டமாக வந்து தெரு நாய்கள் துரத்துவதால் அச்சத்துடனே வீதிகளில் நடக்கும் நிலைக்கு பொதுமக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

    ஒரு சில நேரங்களில் நாய்கள் துரத்துவதால் வாகனத்தில் செல்பவர்கள் நிலை தடுமாறி கீழே விழுந்து பாதிக்கப்பட்டு வருவதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். 

    இது குறித்து தமிழ்நாடு மக்கள் உரிமை பாதுகாப்பு மையத்தின் மண்டல செயலாளர் அன்புதம்பி கூறியதாவது:-

     ஈரோடு மாநகராட்சி 40-வது வார்டில் தெருநாய் களால் பொதுமக்கள் கடுமையாக பாதிக் கப்பட்டு வருகின்றனர். 

    சிறுவர்கள், முதியோர்கள் சாலையில் நடந்து செல்லவே அச்சப்படுகின்றனர். 

    பல பேர் நாய்கடித்து சிகிச்சை பெற்றுள்ளனர். நாளுக்கு நாள் தெருநாய் களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது.

    எனவே தெரு நாய்களை பிடித்து கருத்தடை அறுவை சிகிச்சை மற்றும் ரேபிஸ் தடுப்பூசி செலுத்த மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    நாளை முழுஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. இதையடுத்து பொதுமக்கள் தங்களுக்கு தேவையான காய்கறிகள் வாங்க வ.உ.சி.பூங்கா காய்கறி மார்க்கெட்டில் குவிந்தனர். இதனால் கூட்டம் அலைமோதியது.
    ஈரோடு:

    நாளை முழுஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. இதையடுத்து பொதுமக்கள் தங்களுக்கு தேவையான காய்கறிகள் வாங்க வ.உ.சி.பூங்கா காய்கறி மார்க்கெட்டில் குவிந்தனர். இதனால் கூட்டம் அலைமோதியது.

    தமிழகத்தில் கொரோனா பாதிப்புடன் ஒமைக்ரான் பாதிப்பும் சேர்ந்து அதிக அளவு பரவி வருவதால் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதன்படி கடந்த 6-ந் தேதி முதல் இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது.

    அதைத்தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை முழுநேர ஊரடங்கு  அமல் படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி கடந்த 2 வாரம் ஞாயிற்றுக்கிழமைகளில் முழுநேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. 

    இந்நிலையில் கொரோனா தினசரி பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதால் அதை கட்டுப்படுத்தும் வகையில் நாளை (ஞாயிற்றுக்கிழமை)  3-வது வாரமாக மீண்டும் முழு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது.

    இதன்படி நாளைய தினம் அனைத்து கடைகளும் அடைக்கப்படுகிறது. பொதுமக்கள் யாரும் தேவையின்றி வெளியே வரவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

    அதேசமயம் அத்தியாவசிய பொருட்களான பால், மருந்தகங்கள், ஆஸ்பத்திரிகள், பெட்ரோல் பங்குகள் வழக்கம் போல் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

    அத்தியாவசிய பொருட்களை ஏற்றி வரும் வாகனங்களுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    நாளை முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்படுவதையொட்டி இன்று வ.உ.சி பூங்கா பகுதியில் செயல்பட்டுவரும் நேதாஜி காய்கறி மார்க்கெட்டில் காலையிலிருந்தே மக்கள் கூட்டம் அதிக அளவில் இருந்தது. குறிப்பாக பெண்கள் அதிக அளவில் வந்து தேவையான காய்கறிகளை வாங்கிச் சென்றனர்.

    இதேபோல் ஈரோடு பெரியார் நகர், சம்பத் நகரில் செயல்பட்டு வரும் உழவர் சந்தையிலும் மக்கள் கூட்டம் அதிகளவில் இருந்தது. இன்று காய்கறிகள் வரத்து அதிகரித்து காணப்பட்டதால் தங்களுக்கு வேண்டிய காய்கறிகளை மக்கள் வாங்கிச் சென்றனர். கொங்காலம்மன் வீதியிலும் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது.

    இதேபோல் ஈரோடு ஸ்டோனிபிரிட்ஜ் மீன் மார்க்கெட், கருங்கல்பாளையம் காவிரிரோடு மீன் மார்க்கெட், இறைச்சி கடைகளிலும் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. 

    கோபி, பவானி, அந்தியூர், சத்தியமங்கலம், பெருந்துறை, மொடக்குறிச்சி, கொடுமுடி என மாவட்டம் முழுவதும் காய்கறி கடை இறைச்சி கடைகளில் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது.

    ஈரோடு மாவட்டத்தில் நாளை முழு ஊரடங்கை யொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்டம் முழுவதும் 1,500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். 

    ஈரோடு மாவட்டத்தில் உள்ள 14 சோதனைச்சாவடிகளிலும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மாநகரில் மட்டும் 400-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். 

    பன்னீர்செல்வம் பார்க், பஸ் நிலையம், ஜி.எச். ரவுண்டானா போன்ற பகுதிகளில் போலீசார் தடுப்புகளை அமைத்து தீவிர கண்காணிப்பில் ஈடுபடவுள்ளனர்.
     
    முக்கிய சாலைகள் தடுப்புகள் அடைக்கப்பட்டு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். இதேபோல் மேம்பாலங்களும் அடைக்கப்படுகின்றன. நாளை முழு ஊரடங்கை மதிக்காமல் வெளியே சுற்றுபவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என போலீசார் தெரிவித்தனர். 

    அதேசமயம் மருத்துவம், திருமணம் போன்ற விசேஷமாக இருந்தால் அதற்குரிய ஆவணங்களை சம்பந்தப்பட்டவர்கள் செல்லலாம் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
    ஈரோடு ரெயில் நிலையத்தில் ஓடும் ரெயிலில் இருந்து இறங்கியபோது தவறி விழுந்த வடமாநில வாலிபர் போலீசார் ஓடி சென்று காப்பாற்றிய வீடியோ காட்சிகள் வெளியானது

    ஈரோடு:

    ஈரோடு வழியாக தினமும் ஏராளமான ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக வட மாநிலத்திலிருந்து தினமும் 50- க்கும் மேற்பட்ட ரெயில்கள் ஈரோடு வழியாக வந்து செல்கின்றன.

    இதில் நூற்றுக்கணக்கான வடமாநில தொழிலாளர்கள் பயணம் மேற்கொண்டு ஈரோட்டுக்கு வருகின்றனர். இந்நிலையில் நேற்று முன்தினம் செகன்திராபாத்திலிருந்து திருவனந்தபுரம் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் கிளம்பியது.

    இதில் அசோக்தாஸ் என்ற வாலிபர் முன்பதிவு செய்து பணித்துள்ளார். இவர் ஈரோட்டில் உள்ள ஒரு நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார்.

    விடுமுறைக்கு ஊருக்கு சென்றவர் மீண்டும் ஈரோட்டுக்கு திரும்பி ரெயிலில் வந்து கொண்டிருந்தார். நேற்று ஈரோடு ரெயில் நிலையத்திற்கு அசோக்தாஸ் பயணம் செய்த ரெயில் வந்து நின்றது. அப்போது அசோக்தாஸ் நன்றாக தூங்கிக்கொண்டிருந்தார். இதனால் ரெயில் ஈரோட்டுக்கு வந்தது அவருக்கு தெரியவில்லை.

    பின்னர் ரெயில் பயணிகளை இறக்கி விட்டு கிளம்பத் தொடங்கியது. ரெயில் கிளம்ப தொடங்கியதும் கண்விழித்து பார்த்த அசோக்தாஸ் ஈரோடு ரெயில் நிலையத்தில் ரெயில் கிளம்பியதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    பின்னர் அவசர அவசரமாக எழுந்து தனது உடமைகளை முதலில் வெளியே தூக்கி வீசினார். பின்னர் அசோக்தாஸ் ஓடும் ரெயிலில் இருந்து இறங்க முயன்றார். அப்போது அவர் தவறி நடைமேடைக்கும் ரெயிலுக்கும் இடையே அவரது ஒரு கால் சிக்கி கொண்டது. அவர் ரெயிலில் தொங்கியபடி சென்றார். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த ரெயில்வே பாதுகாப்பு படையை சேர்ந்த தலைமை காவலர்கள் பழனிசாமி மற்றும் கிருஷ்ணன் ஆகியோர் துரிதமாக செயல்பட்டு அசோக்தாசை பிடித்து இழுத்து அவரை காப்பாற்றினர்.

    பின்னர் அவருக்கு புத்திமதி சொல்லி அனுப்பி வைத்தனர். ரெயில்வே போலீசார் வடமாநில வாலிபரை காப்பாற்றும் வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வைரலாக பரவி வருகிறது. துரிதமாக செயல்பட்டு வடமாநில வாலிபரை காப்பாற்றிய தலைமை காவலர்களை போலீஸ் உயர் அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் பாராட்டினர்.

    நைஜீரியா வாலிபர்கள் 2 பேரும் உரிய பாஸ்போர்ட் இல்லாமலும், அடையாள அட்டை இல்லாமலும் எப்படி இந்தியாவுக்கு வந்தார்களா? என போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தினர்.
    பெருந்துறை:

    ஈரோடு மாவட்டம் பெருந்துறை சிப்காட் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள தொழிற்சாலைகள் மற்றும் நிறுவனங்களில் ஏராளமான வட மாநில தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகிறார்கள்.

    மேலும் வெளிநாடுகளை சேர்ந்தவர்களும் தொழில் சம்பந்தமாக பெருந்துறை பகுதிக்கு வந்து செல்கிறார்கள். இதனால் போலீசார் பெருந்துறை பகுதியில் சட்ட விரோதமாக யாராவது தங்கி உள்ளார்களா? வந்து செல்கிறார்களா? என அடிக்கடி ஆய்வு செய்தும் வருகிறார்கள்.

    இந்த நிலையில் பெருந்துறை இன்ஸ்பெக்டர் மசூதா பேகம் மற்றும் போலீசார் பெருந்துறை பஸ் நிலையம் பகுதியில் ரோந்து சென்று ஆய்வு செய்தனர். அப்போது 2 பேர் அங்கும் இங்கும் சுற்றி கொண்டு இருந்தனர். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அந்த 2 பேரை பிடித்து விசாரித்தனர்.

    அவர்கள் பேசிய மொழி போலீசாருக்கு புரியவில்லை. இதனால் அவர்களை போலீஸ் நிலையம் அழைத்து சென்று மொழிபெயர்ப்பாளர் மூலம் விசாரணை நடத்தினர்.

    இதில் அவர்கள் நைஜீரியா அபாய பகுதியை சேர்ந்த கிராண்ட் விக்டர் கென்னா (31), லாகோசை சேர்ந்த சுக்குடி (28) என்பதும், அவர்கள் பாஸ்போர்ட் இல்லாமல் தமிழ்நாட்டுக்கு வந்ததும் தெரியவந்தது.

    மேலும் அவர்கள் கடந்த 2 நாட்களுக்கு முன்பு திருப்பூர் பகுதியில் சுற்றி திரிந்ததும், தொடர்ந்து பஸ் ஏறி பெருந்துறைக்கு வந்தனர். அப்போது அவர்கள் போலீசாரிடம் சிக்கியதும் தெரிய வந்தது.

    இதையடுத்து பாஸ்போர்ட் இல்லாமல் சுற்றி திரிந்ததாக நைஜீரியா வாலிபர்கள் 2 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் இவர்கள் 2 பேரும் உரிய பாஸ்போர்ட் இல்லாமலும், அடையாள அட்டை இல்லாமலும் எப்படி இந்தியாவுக்கு வந்தார்களா? என போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தினர்.

    மேலும் இதே போல் வேறு யாராவது சட்ட விரோதமாக தங்கி உள்ளார்களா? என்று போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதற்கிடையே கைது செய்யப்பட்ட 2 நைஜீரியா வாலிபர்களும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அழைத்து செல்லப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.
    கள் இறக்க அனுமதி கேட்டு கருங்கல்பாளையம் சோதனைசாவடியில் பனங்காட்டு படை கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
    ஈரோடு:

    கள் இயக்கத்தினர் தொடர்ந்து தமிழகத்தில் கள் இறக்க அனுமதி அளிக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.

    இந்நிலையில் தமிழகம் முழுவதும் இன்று கள் இறக்க அனுமதி கோரி கள் இறக்கி விற்கும் போராட்டம் நடைபெறும் என தமிழ்நாடு கள் இயக்கம் சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த போராட்ட அறிவிப்புக்கு பல்வேறு அமைப்பினர், அரசியல் கட்சியினர் ஆதரவு தெரிவித்திருந்தனர். இதற்கு போலீசார் அனுமதி மறுத்திருந்தனர்.

    இந்நிலையில் கருங்கல் பாளையம் சோதனை சாவடி அருகே கள் இறக்க அனுமதி கோரி பனங்காட்டு படை கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட போவதாக அறிவித்திருந்தனர்.

    இதற்காக இன்று ஏ.டி.எஸ்.பி பாலாஜி, குற்றப்பிரிவு டி.எஸ்.பி. அண்ணாதுரை தலைமையில் 50-க்கும் மேற்பட்ட போலீசார் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    இந்நிலையில் இன்று காலை ஈரோடு பனங்காட்டு படை கட்சி மாவட்ட செயலாளர் பாலாஜி பிரபு தலைமையில் நிர்வாகிகள் கருங்கல்பாளையம் சோதனை சாவடி அருகே திரண்டு வந்து அனுமதி கொடுங்கள், அனுமதி கொடுங்கள் கள் இறக்க அனுமதி கொடுங்கள் என கோ‌ஷமிட்டவாறு திடீரென சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    உடனடியாக போலீசார் அவர்களை கைது செய்து வேனில் அழைத்துச் சென்று அருகில் உள்ள திருமண்டபத்தில் தங்க வைத்தனர்.





    ஈரோடு மாவட்டத்தில் உள்ள தனியார் விதை விற்பனை நிலையங்களில் விதைச்சான்று இயக்குநர் சுப்பையா ஆய்வு மேற்கொண்டார்.
    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் உள்ள தனியார் விதை விற்பனை நிலையங்களில் விதைச்சான்று இயக்குநர் சுப்பையா  ஆய்வு மேற்கொண்டார்.

    ஈரோடு மாவட்டத்தில் தமிழ்நாடு அரசின் விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று துறையின் மூலம் தரமான சான்று பெற்ற உயர் விளைச்சல் ரகங்களில் விதை உற்பத்தி செய்து விவசாயிகளுக்கு உரிய நேரத்தில் வழங்குவதற்காக நடப்பு சம்பா பருவத்தில் விதைப்பண்ணைகள் அமைக்கப்பட்டுள்ளது.

    நம்பியூர் வட்டாரம் சுண்டக் காபாளையம் கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள நெல் ஐ.ஆர்.20 ஆதாரநிலை ஒன்று விதைப்பண்ணையினை ஆய்வு செய்து தரமான விதை உற்பத்தி தொழில்நுட்பங்களை எடுத்துக்கூறினார்.

    மேலும் பெருந்துறை வட்டாரம் ஓசைப்பட்டி கிராமத்தில் அமைக்கப் பட்டுள்ள புதிய அதிக மகசூல் தரக்கூடிய  நிலக்கடலை கதிரி லெப்பாக்ஸி ஆதாரநிலை ஒன்று விதைப்பண்ணையினை ஆய்வு செய்து தரமான விதை உற்பத்தி தொழில் நுட்பங்களை எடுத்து கூறினார். 

    இந்த புதிய ரகமானது விதைப்பெருக்கம் மேற்கொ ள்ளப்பட்டு ஈரோடு மாவட்ட வேளாண்மை விரிவாக்க மையங்கள் மூலம் விவசாயிகளுக்கு வழங்கப்பட உள்ளது.

    மேலும் ஈரோடு மாவட்டத்தில் நம்பியூர், கோபி மற்றும் பெருந்துறை வட்டாரங்களில் உள்ள தனியார் விதை விற்பனை நிலையங்களில் இயக்குநர் திடீர் ஆய்வு மேற்கொ ண்டார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    அனைத்து விதை விற்பனை நிலையங் களிலும் தரமான சான்றளிக் கப்பட்ட மற்றும் உண்மை நிலை விதைகளையே விற்பனை செய்ய வேண்டும்.  

    விற்பனை செய்யப்படும் அனைத்து விதைக் குவியல்களும் கொள்முதல் பட்டியல்களுடன் விதை இருப்பு பதிவேட்டில் முறையாக இருப்பு வைத்திருக்க வேண்டும்.  விற்பனை பட்டியல் இல்லாமல்  விதைகளை விற்பனை செய்யக்கூடாது. 

    மேலும் விதை விற்பனைப் பட்டியலில் விற்பனை செய்யப்படும் விதையின், குவியல் எண் மற்றும் காலாவதி தேதி தவறாமல்¢ குறிப்பிட வேண்டும். 

    விதை வாங்கும் விவசாயியின் பெயர், முகவரி மற்றும் கையொப்பம் போன்றவை விற்பனை பட்டியலில் குறிப்பிட்டிருக்க வேண்டும்.

    விதை விற்பனை நிலையங்களில் விற்பனை செய்யப்படும் அனைத்து உண்மை நிலை விதைக் குவியல்களுக்கும் பதிவுச் சான்றிதழ், முளைப்புத்திறன் அறிக்கை தவறாமல் வைத்திருக்க வேண்டும். 

    மேற்கண்ட விதை ஆய்வு நடவடிக்கைகளை தவறும் விதை விற்பனை நிலையங்கள் மீது விதைச் சட்டம் 1966 மற்றும் விதைகள் கட்டுப்பாட்டு ஆணை 1983-ன் படி நடவடிக்கை மேற்கோள்ளப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார். 

    ஆய்வின் போது ஈரோடு விதை ஆய்வு துணை இயக்குநர் ஜெயராமன், விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று உதவி இயக்குநர் மோகனசுந்தரம், ஈரோடு விதைச்சான்று அலுவலர்கள், விதை ஆய்வாளர்கள் மற்றும் விதை பரிசோதனை நிலைய வேளாண்மை அலுவலர்கள்  ஆகியோர் உடனிருந்தனர்.
    சிவகிரி அருகே அஞ்சூர் ஊராட்சிக்கு உட்பட்ட விநாயகம் புதூரில் ஜெய் குருஜிசமாதி உள்ளது. இந்த சமாதிக்கு பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை நேரில் வந்து ஜெய்குருஜியின் சமாதி மற்றும் உருவப்படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்
    சிவகிரி:

    சிவகிரி அருகே அஞ்சூர் ஊராட்சிக்கு உட்பட்ட விநாயகம் புதூரில் ஜெய் குருஜிசமாதி உள்ளது. இந்த சமாதிக்கு பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை நேரில் வந்து ஜெய்குருஜியின் சமாதி மற்றும் உருவப்படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்.

    பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    உள்ளாட்சித் தேர்தலுக்கு நாங்கள் தயாராக உள்ளோம். பாரத பிரதமரின் 80 சதவீத திட்டங்கள் உள்ளாட்சி  பிரதிநிதிகள் மூலம் தான் நடந்து வருகிறது. 

    இதனால் உள்ளாட்சியில் ஊழல் செய்யாத நல்ல பிரதிநிதிகளை அமர்த்தி மக்களுக்கு நல்லதை செய்ய நாங்கள் தொடர்ந்து பாடுபடுவோம்.

    தமிழகப் பாடநூலில் பல மாற்றத்தை கொண்டுவர வேண்டும். குறிப்பாக பாரதியின் பாடல்கள் கவிதை கருத்துக்கள் என பாரதியின் பங்களிப்பு அதிகமாக இருக்கவேண்டும்.
     
    கடந்த 100 ஆண்டுகளுக்கு முன்பே புதிய இந்தியா எப்படி இருக்கவேண்டும் என நிறைய தகவல்களை பாரதியார் எழுதி வைத்து சென்றுள்ளார். 

    அதேபோல் வீரமங்கை வேலுநாச்சியார் மற்றும் இவரின் படைத்தளபதி குயிலி ஆகியோர் இணைந்து ஆங்கிலேயர்களை எதிர்த்து வெற்றி கொண்ட பெருமை இவர்களை சேரும். 

    இவர்களின் வரலாற்றை பாடநூலில் கொண்டு வர வேண்டும் என தமிழக முதல்வருக்கு கட்சியின் சார்பில் வலியுறுத்தி இருக்கிறோம்.

    2019, 20, 21 குடியரசுதினவிழா அணிவகுப்பில் தமிழகத்தின் பங்களிப்பு இருந்தது. அப்படிஇருக்கும்போது இந்த ஆண்டு இடம் பெறவில்லை என்றால் அதற்கு முழுப் பொறுப்பு மாநில அரசுதான். 

    கடந்த ஆண்டு இருந்த அதே அதிகாரிதான் இப்பவும் உள்ளார்கள். கடந்த 3 வருடமாக வேலை செய்த அந்த அதிகாரிகள் தற்போது ஏன் சரிவர வேலை செய்யவில்லை.

    குடியரசு தின விழாவில் தமிழகத்தின் பங்களிப்பு இல்லாதது வருந்தக்கூடியது. இதை அடுத்த வருடம் சரி செய்ய அனைவரும் முயற்சி எடுக்க வேண்டுமே தவிர மத்திய அரசின் மீது குற்றம் சொல்லி அதன் மூலமாக அரசியல் லாபத்தை தி.மு.க தேடுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று ஈரோட்டில் அனைத்து தொழிற்சங்கம் சார்பில் வேலை நிறுத்த ஆயத்த மாநாடு நடந்தது.
    ஈரோடு:

    பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று ஈரோட்டில் அனைத்து தொழிற்சங்கம் சார்பில் வேலை நிறுத்த ஆயத்த மாநாடு நடந்தது.

    மின்சார சட்டதிருத்தத்தை திரும்ப பெற வேண்டும். பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குவதை கைவிட வேண்டும். 

    வருமானவரி கட்டுவதற்கான வரம்புக்குள் இல்லாத குடும்பங்களுக்கு மாதம் ரூ.7,500 வீதம் 6 மாதங்களுக்கு வழங்க வேண்டும். 100 நாள் வேலைத் திட்டத்திற்கான நிதி ஒதுக்கீட்டை அதிகப்படுத்த வேண்டும்.

    பெட்ரோலியப் பொருட்கள் மீதான கலால் வரியை குறைத்து அனைத்து பொருட்களின் விலையேற்றத்தை கட்டுப்படுத்த வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு தொழிற்சங்கத்தினர் வரும் பிப்ரவரி மாதம் 23, 24-ந் தேதிகளில் 2 நாட்கள் பொது வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனர்.

    இந்த வேலை நிறுத்தத்திற்கான ஆயத்த மாநாடு ஈரோட்டில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட்டு கட்சி அலுவலகத்தில் இன்று நடந்தது. எச்.எம்.எஸ். மாவட்ட செயலாளர் ஜீவா சண்முகம் தலைமை தாங்கினார்.  

    ஏ.ஐ.டி.யூ.சி. மாநில செயலாளர் சின்னசாமி, சி.ஐ.டி.யு. மாவட்ட தலைவர் சுப்பு உள்பட பல்வேறு தொழிற் சங்கத்தை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
    ஈரோட்டில் 503 மையங்களில் நாளை மெகா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாமில் 1.50 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
    ஈரோடு:

    ஈரோட்டில் 503 மையங்களில் நாளை மெகா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாமில் 1.50 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    தமிழகத்தில் கொரோனா தாகத்தை கட்டுப்படுத்தும் வகையில் தடுப்பூசி போடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது. மக்களிடம் தடுப்பூசி போட்டுக் கொள்ளும் ஆர்வத்தை ஏற்படுத்தும் வகையில் மாபெரும் தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது.

    ஈரோடு மாவட்டத்திலும் மாபெரும் தடுப்பூசி முகாம் மூலம் பல லட்சம் பேர் தடுப்பூசி செலுத்தி கொண்டு ள்ளனர். 

    இந்நிலையில் நாளை (சனிக்கிழமை) மாபெரும் தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது. 

    ஈரோடு மாவட்டத்தில் அரசு மருத்து வமனை, ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகர்ப்புற சுகாதார நிலையங்கள், பள்ளிகள் என 503 மையங் களில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை இந்த மாபெரும் தடுப்பூசி முகாம் நடைபெறு கிறது.

    நாளை மட்டும் 1.50 லட்சம் பேருக்கு தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப் பட்டுள்ளது. இந்த முகாமில் மாவட்டம் முழுவதும் 2012 பணியாளர்கள், 66 வாகனங்கள் பயன்படுத் தப்பட உள்ளது. 

    18 வயது நிரம்பிய இதுவரை தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்கள், 2-ம்  தவணை தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்களும் இந்த முகாமினை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
    ×