என் மலர்
ஈரோடு
பவானி:
ஈரோடு மாவட்டம் பவானி நகராட்சியில் மொத்தம் 27 வார்டுகள் உள்ளன. இதில் தி.மு.க, அ.தி.மு.க. மற்றும் பல்வேறு கட்சிகளை சேர்ந்த வேட்பாளர்கள், சுயேச்சை வேட்பாளர்கள் என மொத்தம் 112 பேர் போட்டியிட்டனர்.
தேர்தலில் 79.78 சதவீதம் வாக்குகள் பதிவானது. ஓட்டுப்பதிவு முடிந்ததும் பலத்த பாதுகாப்புடன் ஓட்டு எண்ணும் மையமான பவானி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு கொண்டு செல்லப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்பட்டது.
இன்று காலை 8 மணிக்கு மின்னணு எந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி வேட்பாளர்கள் முன்னிலையில் தொடங்கியது. இதற்காக 4 மேஜைகள் போடப்பட்டு இருந்தது. ஒரு மேஜைக்கு 2 பேர் என்று 8 பேர் ஓட்டு எண்ணும் பணியில் ஈடுபட்டனர்.
1-வது வார்டில் தி.மு.க. வேட்பாளர் வடிவேல் 500 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். 2-வது வார்டில் தி.மு.க. வேட்பாளர் மோகன்ராஜ் 435 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இவரை எதிர்த்து போட்டியிட்ட அ.தி.மு.க. வேட்பாளர் விஜயகுமாரி 434 ஓட்டுகள் பெற்றார். ஒரு ஓட்டு வித்தியாசத்தில் தி.மு.க. வேட்பாளர் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. 3-வது வார்டில் அ.தி.மு.க. வேட்பாளர் சிவக்குமார் 407 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். 4-வது வார்டில் தி.மு.க. வேட்பாளர் கார்த்திகேயன் 380 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். 5-வது வார்டில் தி.மு.க. வேட்பாளர் சந்தோஷ் 461 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். தொடர்ந்து வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது.
ஈரோடு:
ஈரோடு மாவட்டத்தில் 42 பேரூராட்சிகள் உள்ளன. இங்கு 20 வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். 2 இடங்களில் வேட்பாளர்கள் இறந்ததால் தேர்தல் ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து 608 இடங்களுக்கு தேர்தல் நடந்தது.
42 பேரூராட்சிகளிலும் 79.42 சதவீதம் வாக்குகள் பதிவாகி இருந்தது. பதிவான மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வாக்கு எண்ணும் 9 மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அனைத்து மையங்களிலும் இன்று காலை ஓட்டு எண்ணிக்கை தொடங்கியது.
அந்தியூர் பேரூராட்சி 1-வது வார்டில் அ.தி.மு.க. வேட்பாளர் சரஸ்வதி 506 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். 2-வது வார்டில் சுயேச்சை வேட்பாளர் கீதாஞ்சலி செந்தில் 485 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். 3-வது வார்டில் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் கீதா 366 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். 4-வது வார்டில் தி.மு.க. வேட்பாளர் கவுரி 308 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். 5-வது வார்டில் தி.மு.க. வேட்பாளர் சண்முகம் 519 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.
அம்மாபேட்டை பேரூராட்சி 1-வது வார்டு தி.மு.க. வேட்பாளர் கவிதா 294 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். 3-வதுவார்டில் சுயேச்சை வேட்பாளர் பூங்கொடி 177 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.
நெரிஞ்சிப்பேட்டை பேரூராட்சி 1-வது வார்டு அ.தி.மு.க. வேட்பாளர் வில்சி 181 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். 2-வது வார்டில் தி.மு.க.வேட்பாளர் அம்மாசை 172 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.
பெருந்துறை பேரூராட்சி 1-வது வார்டில் தி.மு.க. வேட்பாளர் ராஜேந்திரன் 488 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். 2-வது வார்டில் காங்கிரஸ் வேட்பாளர் பசிரியா பேகம் 501 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். 4-வது வார்டில் அ.தி.மு.க. வேட்பாளர் அருணாசலம் 486 வாக்குகள் பெற்று பெற்று வெற்றி பெற்றார்.
காஞ்சிக்கோயில் 1-வது வார்டில் சுயேச்சை வேட்பாளர் தங்கராஜ் 348 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். 2-வது வார்டில் தி.மு.க.வேட்பாளர் திவ்யா 316 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.
பள்ளப்பாளையம் பேரூராட்சி 1-வது வார்டில் தி.மு.க. வேட்பாளர் விஜயா 209 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.
ஜம்பை பேரூராட்சி 1-வது வார்டில் தி.மு.க. வேட்பாளர் அன்பரசி 480 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.
ஆப்பக்கூடல் பேரூராட்சி 1-வது வார்டில் அ.தி.மு.க. வேட்பாளர் சுமதி 319 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.
பி.மேட்டுப்பாளையம் பேரூராட்சியில் 1-வது வார்டில் தி.மு.க. வேட்பாளர் ராமசாமி 262 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். 2-வது வார்டில் தி.முக. வேட்பாளர் காந்திமதி 167 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். 3-வது வார்டில் தி.மு.க. வேட்பாளர் வசந்தி 227 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.
பெரிய கொடிவேரி பேரூராட்சியில் மொத்தம் 15 வார்டுகள் உள்ளன. இதில் 1-வது தி.மு.க. வேட்பாளர் தமிழ்மகன் சிவா 579 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். 2-வது வார்டு தி.மு.க. வேட்பாளர் ராணி 290 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். 3-வது வார்டு தி.மு.க. வேட்பாளர் முத்துசாமி 417 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். 4-வது வார்டு தி.மு.க. வேட்பாளர் தங்கமணி 290 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். 5-வது வார்டு தி.முக. வேட்பாளர் செந்தில் 352 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். 6-வது வார்டு காங்கிரஸ் வேட்பாளர் யுவராணி 204 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். 7-வது வார்டில் தி.மு.க. வேட்பாளர் தங்கமணி 248 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். 8-வது வார்டில் தி.மு.க. வேட்பாளர் சுமதி 402 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். 9-வது வார்டில் தி.மு.க. வேட்பாளர் பாலச்சந்தர் 423 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். 10-வது வார்டில் தி.மு.க. வேட்பாளர் பேபி 456 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். 11-வது வார்டில் அ.தி.மு.க. வேட்பாளர் அருண் 385 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். 12-வது வார்டில் தி.மு.க. வேட்பாளர் பெருமாள் 525 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். 13-வது வார்டில் தி.மு.க. வேட்பாளர் வேலுச்சாமி 250 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.






