என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புப்படம்.
    X
    கோப்புப்படம்.

    காய்கறி வியாபாரி தூக்குபோட்டு தற்கொலை

    கொரோனா ஊரடங்கில் வியாபாரம் பாதித்ததால் காய்கறி வியாபாரி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஈரோட்டில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    ஈரோடு:

    கொரோனா ஊரடங்கில் வியாபாரம் பாதித்ததால் காய்கறி வியாபாரி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஈரோட்டில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    ஈரோடு வீரப்பன்சத்திரம் காவிரி நகர் 4-வது வீதியை சேர்ந்தவர் மனோகரன். இவருடைய மனைவி கமலா. இவர்களுக்கு மோகன்ராஜ் என்ற மகனும், மணிமேகலை என்ற மகளும் உள்ளனர்.

    இதில் மணிமேகலை திருமணமாகி தேனியில் வசித்து வருகிறார். மனோகரன் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டதால் கமலா தனது மகன் மோகன்ராஜூடன் வசித்து வருகிறார்.

    மோகன்ராஜ் சரக்கு ஆட்டோவில் காய்கறிகள் வியாபாரம் செய்து வந்தார். 

    இதற்காக அவர் கடன் வாங்கி இருந்தார். இந்தநிலையில் கொரோனா ஊரடங்கு காரணமாக சரியாக வியாபாரம் செய்ய முடியாமல் மோகன்ராஜ் சிரமப்பட்டார். 

    அவர் வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியாமல் மனவேதனையுடன் இருந்து வந்துள்ளார்.  

    சம்பவத்தன்று  மாலை கமலா உறவினர் வீட்டுக்கு சென்றுவிட்டு வீடு திரும்பினார். 

    அப்போது வீட்டின் படுக்கை அறையில் மோகன்ராஜ் தூக்கில் தொங்கிக்கொண்டு இருந்ததை பார்த்து அவர் அதிர்ச்சி அடைந்தார். 

    உடனடியாக அவர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் மோகன்ராஜை மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். 

    அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே மோகன்ராஜ் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்து வீப்பன்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×