என் மலர்
ஈரோடு
கடந்த சில நாட்களாக பராமரிப்பு செய்யும் பணி நடந்தது. இதனை தொடர்ந்து நீச்சல் குளம் திறக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வந்தது.
ஈரோடு:
ஈரோடு வ.உ.சி பூங்காவில் அரசு நீச்சல் குளம் உள்ளது.
இங்கு காலை, மாலை நேரங்களில் நீச்சல் பயிற்சி அளிக்கப்பட்டு வந்தது. கொரோனா தாக்கம் காரணமாக கடந்த 2 வருடங்களுக்கு முன்பு நீச்சல் குளம் பூட்டப்பட்டது.
இந்நிலையில் கொரோனா தாக்கம் குறைய தொடங்கியதால் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வந்தன.
தேசிய, மாநில போட்டியில் பங்கேற்க தேர்வு செய்யப்பட்ட வீரர்கள் மட்டும் நீச்சல் குளத்தில் பயிற்சி பெற்று வந்தனர்.
இதையடுத்து கொரோ னா கட்டுப்பாடுகள் முழுவதுமாக விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளதை வ.உ.சி பூங்காவில் உள்ள நீச்சல் குளத்தை திறக்க முடிவு செய்யப்பட்டது.
இதையடுத்து கடந்த சில நாட்களாக பராமரிப்பு செய்யும் பணி நடந்தது. அதனை தொடர்ந்து நேற்று முதல் நீச்சல் குளம் திறக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வந்தது.
இதுகுறித்து மாவட்ட விளையாட்டு அலுவலர் சதீஷ்கூறியதாவது:&
தினமும் காலை 7 மணி முதல் மதியம் ஒரு மணிவரை நீச்சல் குளம் திறந்திருக்கும். மதியம் 1 முதல் 3 மணி வரை உணவு இடைவேளைக்காக மூடப்படும்.
பின்னர் மாலை 5 மணி வரை திறந்திருக்கும். 5 மணி முதல் விளையாட்டு விடுதி மாணவிகள் பயிற்சி பெற அனுமதிக்கப்படுவார்கள்.
7 வயதுக்கு மேற்பட்டோர் நீச்சல் பயிற்சி பெறலாம். ஒரு மணி நேரத்துக்கு ரூ.50 கட்டணம் வசூலிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கவுந்தப்பாடி அரசு மாதிரி மேல் நிலைப்பள்ளி மைதானத்தில் கோபி உட்கோட்டத்திற்குட்பட்ட வேளாண்மை கூட்டுறவு வங்கி பணியாளர்களுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்றது.
கவுந்தப்பாடி:
கவுந்தப்பாடி அரசு மாதிரி மேல் நிலைப்பள்ளி மைதானத்தில் கோபி உட்கோட்டத்திற்குட்பட்ட வேளாண்மை கூட்டுறவு வங்கி பணியாளர்களுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்றது.
கோபி சரக துணைப்பதிவாளர் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும் கூட்டுறவு துறை அலுவலர்கள், கூட்டுறவு சங்க பணி யாளர்கள் மற்றும் ரேஷன் கடை பணியாளர்கள் ஆகியோர் பவானி வட்டாரம், சத்தி வட்டாரம், தாளவாடி வட்டாரம், அம்மா பேட்டை வட்டாரம், பவானிசாகர் வட்டாரம், நம்பியூர் வட்டாரம், சரக துணைப்பதிவாளர் அலுவலக அணி என வட்டாரவாரியாக 9 கிரிக்கெட் அணிகளாக பிரிக்கப்பட்டு அந்த அணிகளுக்கு இடை யேயான கிரிக்கெட் போட்டிகள் 2 நாட்கள் நடைபெற்றது.
இறுதி போட்டியில் அம்மாபேட்டை வட்டாரம் முதல் பரிசையும், நம்பியூர் வட்டாரம் 2&ம் பரிசையும், சத்தி வட்டாரம் 3&ம் பரிசையும் வென்றது.
கோபி சரக துணைப்பதிவாளர் கந்தராஜா வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளையும், கோப்பையும் வழங்கினார்.
இவ்விழாவில் கூட்டுறவு சார்பதி வாளர்கள், கூட்டுறவு சங்க பணியாளர்கள் மற்றும் ரேஷன் கடை பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
137 நாட்களுக்கு பிறகு இன்று பெட்ரோல்- டீசல் விலை உயர்ந்தது. ஈரோட்டிலும் இன்று பெட்ரோல் டீசல் விலை உயர்ந்துள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.
ஈரோடு:
137 நாட்களுக்கு பிறகு இன்று பெட்ரோல்- டீசல் விலை உயர்ந்தது. ஈரோட்டிலும் இன்று பெட்ரோல் டீசல் விலை உயர்ந்துள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.
சர்வதேச சந்தையில் கச்சா மதிப்பின் அடிப்படையில் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. இந்தியாவில் கடந்த சில மாதங்களாக பெட்ரோல்-டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வந்தது.
தமிழகத்திலும் பெட்ரோல் டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வந்தது. இதனால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
பெட்ரோல் டீசல் விலை லிட்டருக்கு ரூ.100 தாண்டியதால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்தனர். பெட்ரோல், டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
கடந்த வருடம் நவம்பர் மாதம் தீபாவளிக்கு பிறகு பெட்ரோல், டீசல் விலை மாறாமல் இருந்தது. இதனால் வாகன ஓட்டிகள் ஓரளவு நிம்மதி பெருமூச்சு அடைந்தனர்.
இந்நிலையில் 5 மாநில தேர்தலுக்கு பிறகு பெட்ரோல், டீசல் விலை உயரும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனாலும் விலை உயரவில்லை.
ரஷ்யா, உக்ரைன் போர் காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்ததை தொடர்ந்து பெட்ரோல்- டீசல் விலை இன்று உயர்ந்தது.
கிட்டத்தட்ட 137 நாட்களுக்கு பிறகு இன்று பெட்ரோல்- டீசல் விலை உயர்ந்தது. ஈரோட்டிலும் இன்று பெட்ரோல் டீசல் விலை உயர்ந்துள்ளது. ஈரோட்டில் இதுவரை ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.101.89-க்கு விற்கபட்டு வந்தது.
இன்று 76 காசு உயர்ந்து ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.65-க்கு விற்கப்பட்டது.
அதேப்போல் டீசல் விலையும் உயர்ந்து உள்ளது. இதுவரை ஒரு லிட்டர் டீசல் ரூ.91.93-க்கு விற்கப்பட்டது. இன்று 77 காசுகள் உயர்ந்து ரூ.92.70-க்கு விற்க்கப்பட்டது.
சிமெண்ட் ஏற்றிக்கொண்டு வந்த லாரி ஒன்று திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து பாலத்திற்கு முன்புறம் போடப்பட்டுள்ள இரும்புத் தடுப்பில் மோதி நின்றது.
ஈரோடு:
பூந்துறையில் இருந்து இன்று அதிகாலை ஈரோடு நோக்கி ஆவின் பால் லாரி வந்து கொண்டிருந்தது.
முள்ளாம்பரப்பு தனியார் மருத்துவமனை அருகே லாரி வந்து கொண்டிருந்தபோது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடத் தொடங்கியது.
அப்போது ரோட்டின் நடுவில் உள்ள தடுப்பில் லாரி மோதி நின்றது. இதில் லாரியின் முன்பகுதி சேதமடைந்தது.
ஆனால் யாருக்கும் எந்த ஒரு காயமும் ஏற்படவில்லை.
விபத்து குறித்து தகவல் அறிந்ததும் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். பின்னர் லாரி அகற்ற ப்பட்டு போக்குவரத்து சீர் செய்யப்பட்டது.
இதேபோல் அதிகாலை ஈரோடு சென்னிமலை ரோடு கே.கே.நகர் ரெயில்வே நுழைவு பாலத்தில் ஈரோட்டிலிருந்து சென்னிமலையில் நோக்கி சிமெண்ட் ஏற்றிக்கொண்டு வந்த லாரி ஒன்று திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து பாலத்திற்கு முன்புறம் போடப்பட்டுள்ள இரும்புத் தடுப்பில் மோதி நின்றது.
இந்த விபத்தில் யாருக்கும் எந்த ஒரு காயமும் ஏற்படவில்லை.
இதுகுறித்து தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். அதிகாலை நேரத்தில் விபத்து நடந்ததால் போக்குவரத்து பாதிப்பு ஏற்படவில்லை.
மதுவில் கலக்க தண்ணீர் தராததால் ஆத்திரம் மதுபாட்டிலால் வாலிபர் மண்டையை உடைத்த தொழிலாளி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகினற்னர்.
கோபி:
மதுவில் கலக்க தண்ணீர் தராததால் ஆத்திரம் மதுபாட்டிலால் வாலிபர் மண்டையை உடைத்த தொழிலாளி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகினற்னர்.
கோபி செட்டிபாளையம் அருகே உள்ள நாயக்கன்காடு பகுதியை சேர்ந்தவர் தர்மராஜ் (வயது 40). கூலி தொழிலாளி.
இவர் கரட்டுப்பாளையம் குப்பை கிடங்கு அருகே உள்ள ஒரு டாஸ்மாக் கடை யில் மது வாங்கினார். தொடர்ந்து அவர் அருகே உள்ள மறைவான இடத்தில் மது குடித்து கொண்டு இருந் தார்.
அப்போது கோபி செட்டிபாளையம் அடுத்த புதுப்பாளையம் பகுதியை சேர்ந்த முருகன் (54) என்பவரும் அந்த பகுதிக்கு மது குடிக்க வந்தார். அப் போது தர்மராஜிடம் முருகன் மது குடிக்க தண்ணீர் கேட்டார். ஆனால் தர்மராஜ் மறுத்து விட்டார். இதனால் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டு தாக்கி கொண்டனர்.
இதில் ஆத்திரம் அடைந்த முருகன் அருகே கிடந்த மது பாட்டிலை எடுத்து தர்மராஜ் தலையில் அடித்தார். இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
இதனால் அலறி துடித்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் கோபி செட்டிபாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.
இது குறித்து கோபி செட்டி பாளையம் போலீ சார் முருகன் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கொரோனா தாக்கம் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக குண்டம் திருவிழா நடைபெறவில்லை. கடந்த ஆண்டு எளிமையாக விழா நடத்தப்பட்டு பூசாரி மட்டுமே குண்டம் இறங்கினார்.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை அடுத்துள்ளது பிரசித்தி பெற்ற பண்ணாரி அம்மன் கோவில். இங்கு ஆண்டுதோறும் பங்குனி மாதம் குண்டம் திருவிழா வெகு விமரிசையாக நடைபெறும்.
இந்த விழாவில் ஈரோடு, கோவை, சேலம், திருப்பூர், நீலகிரி ஆகிய மாவட்டங்களில் இருந்தும் கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களில் இருந்தும் சுமார் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொள்வார்கள். 4 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் விரதமிருந்து குண்டம் இறங்குவார்கள்.
இந்நிலையில் கொரோனா தாக்கம் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக குண்டம் திருவிழா நடைபெறவில்லை. கடந்த ஆண்டு எளிமையாக விழா நடத்தப்பட்டு பூசாரி மட்டுமே குண்டம் இறங்கினார். பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை.
இந்த ஆண்டு கொரோனா தாக்கம் குறைந்து உள்ளதால் குண்டம் திருவிழா விமரி சையாக நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி கடந்த 7-ந் தேதி இரவு பூச்சாட்டுதலுடன் விழா தொடங்கியது. அன்று முதல் பண்ணாரியம்மன் சப்பரத்தில் வைக்கப்பட்டு வீதி உலா நடந்தது.
இதைத் தொடர்ந்து கடந்த 15-ந் தேதி இரவு கம்பம் சாட்டு விழா நடந்தது. அதைத் தொடர்ந்து 20-ந் தேதி வரை ஒவ்வொரு நாள் இரவும் மலைவாழ் மக்கள் பீனாட்சி வாத்தியத்திற்கு ஏற்ப நடனம் ஆடி மகிழ்ந்தனர்.
மேலும் குண்டம் பற்றவைக்க பக்தர்கள் காணிக்கையாக வேம்பு மற்றும் ஊஞ்ச மரங்களை கொண்டு வந்து கோவில் முன்பு குவியலாக போட் டார்கள். பொதுவாக குண்டம் இறங்குவதற்கு 5 நாட்களுக்கு முன்பாகவே பக்தர்கள் கோவில் முன்பு வந்து இடம்பிடித்து காத்திருப் பார்கள்.
ஆனால் கொரோனா கட்டுப்பாடு காரணமாக முதலில் இடம் பிடிக்க பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. இதையடுத்து பொதுமக்கள் தாங்கள் கொண்டு வந்த சேலை, வேட்டி, துண்டுகள் வைத்து இடம் பிடித்தனர். அதனைத் தொடர்ந்து கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவில் வளாகத்திற்கு வந்து குண்டம் இறங்குவதற்கு இடம் பிடித்தனர். இதற்காக பக்கத்து மாவட்டத்திலிருந்து மாட்டு வண்டிகளில் சாரை, சாரையாக வந்தனர்.
நேற்று இரவு 9 மணி அளவில் குண்டம் பகுதியில் வேம்பு மற்றும் ஊஞ்ச மரங்கள் அடுக்கி வைக்கப்பட்டு பண்ணாரி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்து கற்பூரம் பற்றவைத்து குண்டத்தில் தீ மூட்டப்பட்டது.
இதை தொடர்ந்து இன்று அதிகாலை 2 மணி அளவில் தெப்பக்குளம் சென்று அம்மன் அழைத்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் அங்கு அனைவரும் புனித நீராடி வேப்பிலையை கையில் ஏந்தியபடி தாரை, தப்பட்டை உடன் குண்டம் இறங்க தயாராகினர். இன்று அதிகாலை 3.50 மணிக்கு குண்டம் இறங்கும் நிகழ்ச்சி நடந்தது. குண்டம் 12 அடி நீளம், 8 அடி அகலத்தில் இருந்தது. முதலில் குண்டத்தில் பூபந்து உருட்டி விடப்பட்டது. அதைத்தொடர்ந்து கோவில் பூசாரி செந்தில் முதல் நபராக குண்டம் இறங்கி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து விரதம் இருந்த பக்தர்கள் ஒவ்வொருவராக குண்டம் இறங்கினர்.
விழாவில் ஊரக வளர்ச்சித் துறை முதன்மைச் செயலர் அமுதா பயபக்தியுடன் குண்டம் இறங்கினார். இதேபோல் இந்து அறநிலையத்துறை கூடுதல் நிர்வாக ஆணையர் கண்ணன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) பாலாஜி, பண்ணாரி எம்.எல்.ஏ, முன்னாள் எம்.பி., காளியப்பன் மற்றும் அதிகாரிகள், அரசியல் பிரமுகர்கள் குண்டம் இறங்கினர்.
பொதுமக்கள் கைக் குழந்தையுடன் குண்டம் இறங்கினர். இதேபோல் திருநங்கைகள், பெண்களும் விரதமிருந்து பயபக்தியுடன் குண்டம் இறங்கினர். இதேபோல் கேரளா, கர்நாடகா மாநில பக்தர்களும் குண்டம் இறங்கினார்கள். லட்சக்கணக்கான பக்தர்கள் விரதம் இருந்து குண்டம் இறங்கி பண்ணாரி யம்மனை வழிபட்டனர். இதை தொடர்ந்து மதியம் கால்நடைகளும் குண்டம் இறங்குகிறது. குண்டத்தை சுற்றிலும் தீயணைப்பு வீரர்கள் தயார் நிலையில் நிறுத்தப்பட்டு இருந்தனர்.
குண்டம் விழாவையொட்டி போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் தலைமையில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதேபோல் கிருஷ்ணகிரி, சேலம், நாமக்கல், திருப்பூர், கோவை போன்ற மாவட்டங் களில் இருந்தும் போலீசார் வரவழைக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். பக்தர்கள் வசதிக்காக வாகனங்கள் நிறுத்துவதற்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப் பட்டிருந்தன.
இதேபோல் பண்ணாரி யம்மனை தரிசனம் செய்வதற் காக போக்குவரத்து கழகம் சார்பில் 100-க்கும் மேற்பட்ட சிறப்பு பஸ்களும் பல்வேறு பகுதிகளில் இருந்தும் இயக்கப்பட்டன. முன்னெச்ச ரிக்கை நடவடிக்கையாக நேற்று மாலை முதல் இன்று இரவு வரை கனரக போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. மேலும் தீயணைப்பு துறை வீரர்களும் தயார் நிலையில் இருந்தனர். அவர்கள் தண்ணீர் பக்கெட்டுடன் தயார் நிலையில் இருந்தனர். பக்தர்கள் சிலர் குண்டம் இறங்கிய போது தட்டுத் தடுமாறி கீழே விழுந்த போது அங்கிருந்த போலீசார் தாங்கி பிடித்தனர். இதனால் பெருமளவில் எதுவும் அசம்பாவிதம் நடைபெறாமல் அமைதியான முறையில் குண்டம் விழா நடைபெற்றது.
இதேப்போல 108 ஆம்புலன்ஸ் குழுவினர் மற்றும் மருத்துவ குழுவினரும் தயார் நிலையில் இருந்தனர்.
குண்டம் விழாவை யொட்டி மூலவர் பண்ணாரி யம்மனுக்கு தங்க கவசம் அணிவிக்கப்பட்டு வீணை அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. இதேபோல் உற்சவர் பண்ணாரி யம்மனுக்கு சிறப்பு மலர் அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது.
இந்த விழாவில் ஈரோடு, கோவை, சேலம், திருப்பூர், நீலகிரி ஆகிய மாவட்டங்களில் இருந்தும் கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களில் இருந்தும் சுமார் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொள்வார்கள். 4 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் விரதமிருந்து குண்டம் இறங்குவார்கள்.
இந்நிலையில் கொரோனா தாக்கம் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக குண்டம் திருவிழா நடைபெறவில்லை. கடந்த ஆண்டு எளிமையாக விழா நடத்தப்பட்டு பூசாரி மட்டுமே குண்டம் இறங்கினார். பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை.
இந்த ஆண்டு கொரோனா தாக்கம் குறைந்து உள்ளதால் குண்டம் திருவிழா விமரி சையாக நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி கடந்த 7-ந் தேதி இரவு பூச்சாட்டுதலுடன் விழா தொடங்கியது. அன்று முதல் பண்ணாரியம்மன் சப்பரத்தில் வைக்கப்பட்டு வீதி உலா நடந்தது.
இதைத் தொடர்ந்து கடந்த 15-ந் தேதி இரவு கம்பம் சாட்டு விழா நடந்தது. அதைத் தொடர்ந்து 20-ந் தேதி வரை ஒவ்வொரு நாள் இரவும் மலைவாழ் மக்கள் பீனாட்சி வாத்தியத்திற்கு ஏற்ப நடனம் ஆடி மகிழ்ந்தனர்.
மேலும் குண்டம் பற்றவைக்க பக்தர்கள் காணிக்கையாக வேம்பு மற்றும் ஊஞ்ச மரங்களை கொண்டு வந்து கோவில் முன்பு குவியலாக போட் டார்கள். பொதுவாக குண்டம் இறங்குவதற்கு 5 நாட்களுக்கு முன்பாகவே பக்தர்கள் கோவில் முன்பு வந்து இடம்பிடித்து காத்திருப் பார்கள்.
ஆனால் கொரோனா கட்டுப்பாடு காரணமாக முதலில் இடம் பிடிக்க பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. இதையடுத்து பொதுமக்கள் தாங்கள் கொண்டு வந்த சேலை, வேட்டி, துண்டுகள் வைத்து இடம் பிடித்தனர். அதனைத் தொடர்ந்து கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவில் வளாகத்திற்கு வந்து குண்டம் இறங்குவதற்கு இடம் பிடித்தனர். இதற்காக பக்கத்து மாவட்டத்திலிருந்து மாட்டு வண்டிகளில் சாரை, சாரையாக வந்தனர்.
நேற்று இரவு 9 மணி அளவில் குண்டம் பகுதியில் வேம்பு மற்றும் ஊஞ்ச மரங்கள் அடுக்கி வைக்கப்பட்டு பண்ணாரி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்து கற்பூரம் பற்றவைத்து குண்டத்தில் தீ மூட்டப்பட்டது.
இதை தொடர்ந்து இன்று அதிகாலை 2 மணி அளவில் தெப்பக்குளம் சென்று அம்மன் அழைத்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் அங்கு அனைவரும் புனித நீராடி வேப்பிலையை கையில் ஏந்தியபடி தாரை, தப்பட்டை உடன் குண்டம் இறங்க தயாராகினர். இன்று அதிகாலை 3.50 மணிக்கு குண்டம் இறங்கும் நிகழ்ச்சி நடந்தது. குண்டம் 12 அடி நீளம், 8 அடி அகலத்தில் இருந்தது. முதலில் குண்டத்தில் பூபந்து உருட்டி விடப்பட்டது. அதைத்தொடர்ந்து கோவில் பூசாரி செந்தில் முதல் நபராக குண்டம் இறங்கி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து விரதம் இருந்த பக்தர்கள் ஒவ்வொருவராக குண்டம் இறங்கினர்.
விழாவில் ஊரக வளர்ச்சித் துறை முதன்மைச் செயலர் அமுதா பயபக்தியுடன் குண்டம் இறங்கினார். இதேபோல் இந்து அறநிலையத்துறை கூடுதல் நிர்வாக ஆணையர் கண்ணன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) பாலாஜி, பண்ணாரி எம்.எல்.ஏ, முன்னாள் எம்.பி., காளியப்பன் மற்றும் அதிகாரிகள், அரசியல் பிரமுகர்கள் குண்டம் இறங்கினர்.
பொதுமக்கள் கைக் குழந்தையுடன் குண்டம் இறங்கினர். இதேபோல் திருநங்கைகள், பெண்களும் விரதமிருந்து பயபக்தியுடன் குண்டம் இறங்கினர். இதேபோல் கேரளா, கர்நாடகா மாநில பக்தர்களும் குண்டம் இறங்கினார்கள். லட்சக்கணக்கான பக்தர்கள் விரதம் இருந்து குண்டம் இறங்கி பண்ணாரி யம்மனை வழிபட்டனர். இதை தொடர்ந்து மதியம் கால்நடைகளும் குண்டம் இறங்குகிறது. குண்டத்தை சுற்றிலும் தீயணைப்பு வீரர்கள் தயார் நிலையில் நிறுத்தப்பட்டு இருந்தனர்.
குண்டம் விழாவையொட்டி போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் தலைமையில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதேபோல் கிருஷ்ணகிரி, சேலம், நாமக்கல், திருப்பூர், கோவை போன்ற மாவட்டங் களில் இருந்தும் போலீசார் வரவழைக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். பக்தர்கள் வசதிக்காக வாகனங்கள் நிறுத்துவதற்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப் பட்டிருந்தன.
இதேபோல் பண்ணாரி யம்மனை தரிசனம் செய்வதற் காக போக்குவரத்து கழகம் சார்பில் 100-க்கும் மேற்பட்ட சிறப்பு பஸ்களும் பல்வேறு பகுதிகளில் இருந்தும் இயக்கப்பட்டன. முன்னெச்ச ரிக்கை நடவடிக்கையாக நேற்று மாலை முதல் இன்று இரவு வரை கனரக போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. மேலும் தீயணைப்பு துறை வீரர்களும் தயார் நிலையில் இருந்தனர். அவர்கள் தண்ணீர் பக்கெட்டுடன் தயார் நிலையில் இருந்தனர். பக்தர்கள் சிலர் குண்டம் இறங்கிய போது தட்டுத் தடுமாறி கீழே விழுந்த போது அங்கிருந்த போலீசார் தாங்கி பிடித்தனர். இதனால் பெருமளவில் எதுவும் அசம்பாவிதம் நடைபெறாமல் அமைதியான முறையில் குண்டம் விழா நடைபெற்றது.
இதேப்போல 108 ஆம்புலன்ஸ் குழுவினர் மற்றும் மருத்துவ குழுவினரும் தயார் நிலையில் இருந்தனர்.
குண்டம் விழாவை யொட்டி மூலவர் பண்ணாரி யம்மனுக்கு தங்க கவசம் அணிவிக்கப்பட்டு வீணை அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. இதேபோல் உற்சவர் பண்ணாரி யம்மனுக்கு சிறப்பு மலர் அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது.
ஈரோடு மாவட்டத்தில் இதுவரை 12 முதல் 14 வயதுடைய 18 ஆயிரம் சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளதாக சுகாதாரத்துறையினர் தெரிவித்து உள்ளனர்
ஈரோடு:
ஈரோடு மாவட்டத்தில் இதுவரை 12 முதல் 14 வயதுடைய 18 ஆயிரம் சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளதாக சுகாதாரத்துறையினர் தெரிவித்து உள்ளனர்.
உலகை அச்சுறுத்திய கொரோனா வைரஸ் இந்தியாவிலும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியது.
குறிப்பாக இரண்டாம் அலையில் கடும் பாதிப்பை ஏற்படுத்தியது. தமிழகத்திலும் கொரோனா பாதிப்பு அதிகரித்து காணப்பட்டது.
இதன் காரணமாக சுகாதாரத்துறையினர் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து தடுப்பூசி போடும் பணியை முடுக்கி விட்டனர்.
இந்தியாவில் கடந்த ஆண்டு ஜனவரி 16-&ந் தேதி தடுப்பூசி போடும் பணி தொடங்கியது.
முதலில் சுகாதார பணியாளர் களுக்கும், பின்னர் முன்கள பணியாளர்களுக்கும் தடுப்பூசி செலுத்துவதில் முன்னுரிமை அளிக்கப் பட்டு செலுத்தப்பட்டது.
அதனைத் தொடர்ந்து 60 வயதை கடந்தவர்கள் மற்றும் இணை நோய் கொண்ட 45 வயதைக் கடந்தவர்களுக்கு தடுப்பு ஊசி செலுத்தப்பட்டது.
அதனைத் தொடர்ந்து 45 வயது தாண்டிய அனைவ ருக்கும் தடுப்பூசி போடும் பணி முடுக்கிவிடப்பட்டது. பின்னர் 18 வயது தாண்டிய அனைவருக்கும் தடுப்பூசி போடும் பணி நடந்து வருகிறது.
இந்நிலையில் உருமாற்றம் அடைந்த ஒமைக்ரான் தொற்று காரணமாக இந்தியாவில் மூன்றாம் அலை உருவாகி வேகமாக பரவியது.
தமிழ்நாட்டிலும் இதன் தாக்கம் எதிரொலித்தது. இதன் காரணமாக 12 வயது முதல் 18 வயதுடைய சிறுவர் களுக்கு தடுப்பூசி செலுத்த முடிவு செய்யப்பட்டது.
அதன்படி இந்த ஆண்டு ஜனவரி மாதம் தொடக்கத்தில் முதற்கட்டமாக 15 வயது முதல் 18 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியது.
பள்ளிகள் கல்லூரி களில் மாணவர்கள் படிக்கும் நிறுவனங்களில் தடுப்பு ஊசி செலுத்தப்பட்டது.
இவர்களுக்கு கோவேக்சின் தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு வருகிறது. முதல் தவணை தடுப்பூசி செலுத்தி 28 நாட்களுக்குப் பிறகு இரண்டாம் தவணைத் தடுப்பூசியும் தற்போது செலுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் 12 முதல் 14 வயது உடைய சிறுவர்களுக்கு கடந்த 15&ந் தேதி முதல் தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியது.
இந்த வயது உடைய சிறுவர்களுக்கு கோர்பேவேக்ஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.
ஈரோடு மாவட்டத்தை பொறுத்தவரை 12 வயது முதல் 14 வயதுடைய சிறுவர்கள் மொத்தம் 66,300 பேர் உள்ளனர்.
இவர்களுக்கு அவர்கள் படிக்கும் பள்ளிகளிலேயே தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் இதுவரை 12 முதல் 14 வயது உடைய சிறுவர்கள் 18 ஆயிரத்து 709 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளதாக சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர். இது 28 சதவீதம் ஆகும்.
28 நாட்களுக்கு பிறகு மீண்டும் அவர்களுக்கு இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்தப்படும் என சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர்.
ஈரோடு மாவட்டத்தில் இதுவரை 12 முதல் 14 வயதுடைய 18 ஆயிரம் சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளதாக சுகாதாரத்துறையினர் தெரிவித்து உள்ளனர்.
உலகை அச்சுறுத்திய கொரோனா வைரஸ் இந்தியாவிலும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியது.
குறிப்பாக இரண்டாம் அலையில் கடும் பாதிப்பை ஏற்படுத்தியது. தமிழகத்திலும் கொரோனா பாதிப்பு அதிகரித்து காணப்பட்டது.
இதன் காரணமாக சுகாதாரத்துறையினர் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து தடுப்பூசி போடும் பணியை முடுக்கி விட்டனர்.
இந்தியாவில் கடந்த ஆண்டு ஜனவரி 16-&ந் தேதி தடுப்பூசி போடும் பணி தொடங்கியது.
முதலில் சுகாதார பணியாளர் களுக்கும், பின்னர் முன்கள பணியாளர்களுக்கும் தடுப்பூசி செலுத்துவதில் முன்னுரிமை அளிக்கப் பட்டு செலுத்தப்பட்டது.
அதனைத் தொடர்ந்து 60 வயதை கடந்தவர்கள் மற்றும் இணை நோய் கொண்ட 45 வயதைக் கடந்தவர்களுக்கு தடுப்பு ஊசி செலுத்தப்பட்டது.
அதனைத் தொடர்ந்து 45 வயது தாண்டிய அனைவ ருக்கும் தடுப்பூசி போடும் பணி முடுக்கிவிடப்பட்டது. பின்னர் 18 வயது தாண்டிய அனைவருக்கும் தடுப்பூசி போடும் பணி நடந்து வருகிறது.
இந்நிலையில் உருமாற்றம் அடைந்த ஒமைக்ரான் தொற்று காரணமாக இந்தியாவில் மூன்றாம் அலை உருவாகி வேகமாக பரவியது.
தமிழ்நாட்டிலும் இதன் தாக்கம் எதிரொலித்தது. இதன் காரணமாக 12 வயது முதல் 18 வயதுடைய சிறுவர் களுக்கு தடுப்பூசி செலுத்த முடிவு செய்யப்பட்டது.
அதன்படி இந்த ஆண்டு ஜனவரி மாதம் தொடக்கத்தில் முதற்கட்டமாக 15 வயது முதல் 18 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியது.
பள்ளிகள் கல்லூரி களில் மாணவர்கள் படிக்கும் நிறுவனங்களில் தடுப்பு ஊசி செலுத்தப்பட்டது.
இவர்களுக்கு கோவேக்சின் தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு வருகிறது. முதல் தவணை தடுப்பூசி செலுத்தி 28 நாட்களுக்குப் பிறகு இரண்டாம் தவணைத் தடுப்பூசியும் தற்போது செலுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் 12 முதல் 14 வயது உடைய சிறுவர்களுக்கு கடந்த 15&ந் தேதி முதல் தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியது.
இந்த வயது உடைய சிறுவர்களுக்கு கோர்பேவேக்ஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.
ஈரோடு மாவட்டத்தை பொறுத்தவரை 12 வயது முதல் 14 வயதுடைய சிறுவர்கள் மொத்தம் 66,300 பேர் உள்ளனர்.
இவர்களுக்கு அவர்கள் படிக்கும் பள்ளிகளிலேயே தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் இதுவரை 12 முதல் 14 வயது உடைய சிறுவர்கள் 18 ஆயிரத்து 709 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளதாக சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர். இது 28 சதவீதம் ஆகும்.
28 நாட்களுக்கு பிறகு மீண்டும் அவர்களுக்கு இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்தப்படும் என சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர்.
கவுந்தப்பாடி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மேலாண்மை குழு கூட்டம் தலைமை ஆசிரியை மணிமேகலை தலைமையில் நடைபெற்றது.
கவுந்தப்பாடி:
கவுந்தப்பாடி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மேலாண்மை குழு கூட்டம் தலைமை ஆசிரியை மணிமேகலை தலைமையில் நடைபெற்றது.
இதில் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படிக் கும் மாணவிகள் தங்கள் பெற்றோருடன் வந்து கலந்து கொண்டனர்.
விழாவில் பள்ளியின் அடிப்படை கட்டமைப்பு கட்டாயக் கல்வி, மாணவி கள் பெற்றோர் விழிப் புணர்வு கலை நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் ஆசிரியர் பயிற்றுனர் அன்பரசன் பள்ளி ஆசிரிய- ஆசிரியைகள் பலர் கலந்து கொண்டனர்.
இதே போல் கவுந்தப்பாடி அரசு மாதிரி மேல் நிலைப் பள்ளி, வடக்கு தொடக்கப் பள்ளி, தெற்கு தொடக்கப் பள்ளி மணியம் பாளையம் தொடக்கப் பள்ளி மற்றும் சுற்று வட்டார கிராமங்களில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளிலும் பள்ளி மேலாண்மை குழு கூட்டம் நடை பெற்றது.
கவுந்தப்பாடி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மேலாண்மை குழு கூட்டம் தலைமை ஆசிரியை மணிமேகலை தலைமையில் நடைபெற்றது.
இதில் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படிக் கும் மாணவிகள் தங்கள் பெற்றோருடன் வந்து கலந்து கொண்டனர்.
விழாவில் பள்ளியின் அடிப்படை கட்டமைப்பு கட்டாயக் கல்வி, மாணவி கள் பெற்றோர் விழிப் புணர்வு கலை நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் ஆசிரியர் பயிற்றுனர் அன்பரசன் பள்ளி ஆசிரிய- ஆசிரியைகள் பலர் கலந்து கொண்டனர்.
இதே போல் கவுந்தப்பாடி அரசு மாதிரி மேல் நிலைப் பள்ளி, வடக்கு தொடக்கப் பள்ளி, தெற்கு தொடக்கப் பள்ளி மணியம் பாளையம் தொடக்கப் பள்ளி மற்றும் சுற்று வட்டார கிராமங்களில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளிலும் பள்ளி மேலாண்மை குழு கூட்டம் நடை பெற்றது.
மத்திய அரசை கண்டித்து வரும் 28-ந் தேதி மறியல் போராட்டம் நடத்தப்படும் என விவசாயிகள் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்.
ஈரோடு:
மத்திய அரசை கண்டித்து வரும் 28-ந் தேதி மறியல் போராட்டம் நடத்தப்படும் என விவசாயிகள் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்.
பெருந்துறை தாலுக்கா அனைத்து தொழிற்சங்கங்கள் மற்றும் விவசாய சங்கங்களின் நிர்வாகிகள் கூட்டம் பெருந்துறையில் ஏ.ஐ.டி.யு.சி சங்க அலுவலகத்தில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு ஐ.என்.டி.யு.சி மாவட்ட துணை தலைவர் சுப்பிரமணி தலைமை தாங்கினார். கூட்டத்தில் ஏ.ஐ.டி.யு.சி சின்னசாமி, எல்.பி.எப் மனோகரன், ஐ.என்.டி.யு.சி மகாலிங்கம், விவசாயிகள் சங்கம் துளசிமணி, ஐக்கிய விவசாயிகள் முன்னணி பொன்னையன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் மத்திய அரசின் மக்கள் விரோத, தொழிலாளர் விரோத, நடவடிக்கைகளை கண்டித்தும், 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தியும் அனைத்து சங்கங்கள் சார்பில் வருகின்ற 28-ந் தேதி பெருந்துறையில் மறியல் போராட்டம் பேரவை நடத்துவது, தினசரி மார்க்கெட்டில் இருந்து பேரணியாக புறப்பட்டு பங்களா வீதியில் உள்ள தபால் நிலையம் முன்பு மறியல் போராட்டத்தில் ஈடுபடுவது, 29-ந் தேதி சென்னிமலையில் ஆர்ப்பாட்டம் நடத்துவது, கோரிக்கைகளை விளக்கி பிரசாரம் மேற்கொள்வது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
ஈரோடு மாவட்டத்தில் 2-வது நாளாக கொரோனா தொற்றால் யாரும் பாதிக்கப்படவில்லை என சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டத்தில் 2-வது நாளாக கொரோனா தொற்றால் யாரும் பாதிக்கப்படவில்லை என சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
ஈரோடு மாவட்டத்தில் கொரோனா மூன்றாம் அலை கட்டுக்குள் வரத் தொடங்கியுள்ளது. உருமாற்றம் அடைந்த ஒமைக்ரான் தொற்று காரணமாக ஈரோடு மாவட்டத்தில் இந்த ஆண்டு தொடக்கத்தில் தினசரி பாதிப்பு அதிகமாக பரவியது.
தொடர்ந்து ஒவ்வொரு நாளும் புதிய உச்சத்தை எட்டி வந்தது. இதையடுத்து மாவட்ட நிர்வாகம் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டது. இதன் காரணமாக தற்போது தினசரி பாதிப்பு வெகுவாக குறைந்து வருகிறது. கடந்த 16&ந் தேதி மாவட்டத்தில் யாருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை.
இதனால் கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு கொரோனா இல்லாத மாவட்டமாக ஈரோடு பதிவானது. அதன் பின்னர் தினசரி பாதிப்பு 1, 2 என பதிவாகி வந்தது.
இந்நிலையில் நேற்று சுகாதாரத்துறையினர் வெளியிட்டுள்ள பட்டியல்படி மாவட்டத்தில் யாருக்கும் தொற்று பதிவாகவில்லை. இதனால் மீண்டும் இரண்டாவது முறையாக கொரோனா தினசரி பாதிப்பு இல்லாத மாவட்டமானது ஈரோடு .
இதுவரை மாவட்டத்தில் பாதித்தவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 32 ஆயிரத்து 665 ஆக பதிவாகியுள்ளது. ஒரே நாளில் மேலும் 2 பேர் பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பினர். இதுவரை மாவட் டத்தில் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 31 ஆயிரத்து 918 ஆக உயர்ந்துள்ளது.
இதுவரை 734 பேர் கொரோனாவால் பாதிக்கப் பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். தற்போது மாவட்டம் முழுவதும் 15 பேர் கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நம்பியூர் பகுதியில் மது விற்றவரை விரட்டி சென்றபோது சப்-இன்ஸ்பெக்டர் தவறி விழுந்து படுகாயமடைந்தார். அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
நம்பியூர்:
நம்பியூர் பகுதியில் மது விற்றவரை விரட்டி சென்றபோது சப்-இன்ஸ்பெக்டர் தவறி விழுந்து படுகாயமடைந்தார். அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
நம்பியூர் அருகே உள்ள கெடாரை பகுதியில் மது விற்பனை நடந்து வருவதாக வரப்பாளையம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் ராஜமாணிக்கம் (57) மற்றும் போலீசார் அந்த பகுதிக்கு சென்றனர்.
அப்போது அந்த பகுதியில் வேலன் என்கிற வேலுச்சாமி என்பவர் மது விற்றுக் கொண்டிருந்தார். அவரை சப்-இன்ஸ்பெக்டர் ராஜமாணிக்கம் பிடிக்க முயன்றார். அப்போது நிலைதடுமாறி கீழே விழுந்ததில் சப்-இன்ஸ் பெக்டர் ராஜமாணிக்கம் தலை மற்றும் இடுப்பு பகுதியில் படுகாயம் அடைந்தார்.
அப்போது மது விற்ற வேலன் தனது மோட்டார் சைக்கிளில் தப்பி சென்று விட்டார். படுகாயம் அடைந்த சப்-இன்ஸ்பெக்டர் ராஜமாணிக்கத்தை அக்கம் பக்கத்தினர் மீட்டு கோபிசெட்டி பாளையத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அவருக்கு இன்று இடுப்பு பகுதியில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
இந்நிலையில் சம்பவம் நடந்த 3மணி நேரத்தில் மது விற்ற வேலனை போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் அவர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யவும் போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
ஓடும் ரெயிலில் பெண் டாக்டரிடம் சில்மிஷம் செய்த கேரள வாலிபர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
ஈரோடு:
ஓடும் ரெயிலில் பெண் டாக்டரிடம் சில்மிஷம் செய்த கேரள வாலிபர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
சென்னை வேளச்சேரி சேர்ந்த 43 வயது மதிக்கத்தக்க பெண் டாக்டர் ஒருவர் தனது குடும்பத்தினருடன் கேரள மாநிலம் கண்ணனூருக்கு செல்வதற்காக சென்னை& மங்களு£ர் எக்ஸ்பிரஸ் ரெயிலில் முன்பதிவு பெட்டியில் பயணம் செய்து கொண்டிருந்தனர்.
அவர்கள் பயணம் செய்த முன் பெட்டியில் கேரளாவை சேர்ந்த வாலிபர் ஒருவரும் பயணம் செய்தார்.
அந்த ரெயில் சேலத்தை கடந்து ஈரோடு நோக்கி வந்து கொண்டிருந்தது. பெண் டாக்டர் மற்றும் அவரது குடும்பத்தார் அயர்ந்து தூங்கிக்கொண்டு இருந்தனர். அப்போது அந்த நபர் பெண் டாக்டரிடம் ஆபாச வார்த்தைகளால் பேசி சில்மிஷத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து அந்த பெண் டாக்டர் தனது குடும்பத்தாரிடம் தெரிவித்தார்.
அப்போது ரெயில் ஈரோடு ரெயில் நிலையத்தில் வந்து நின்றது. உடனடியாக அந்த பெண் டாக்டர் குடும்பத்தினர் நடந்த சம்பவம் குறித்து ரெயில்வே போலீஸ் நிலையத்திற்கு சென்று புகார் அளித்தனர்.
இதையடுத்து ஈரோடு ரெயில்வே போலீசார் சம்பந்தப்பட்ட அந்த முன்பதிவு பெட்டிக்கு சென்று அந்த நபரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் அந்த நபர் பெண் டாக்டரிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டது உறுதிப்படுத்தப்பட்டது.
போலீஸ் விசாரணையில் பெண் டாக்டரிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டவர் கேரளா மாநிலம் கோழிக்கோடு மாவட்டம் காலத்திங்கள் பகுதியைச் சேர்ந்த ரபீக் (39) என்பதும் அவர் கோழிக்கோட்டில் மின் அலங்கார விளக்கு கடை நடத்தி வருவதும் தெரியவந்தது
சம்பவத்தன்று அவர் சென்னையிலிருந்து பொருட்களை வாங்கி கொண்டு கேரளாவுக்கு வந்து கொண்டிருந்தது விசாரணையில் தெரியவந்தது.
ரபீக்கிற்கு திருமணமாகி 3 குழந்தைகள் உள்ளனர்.
இதுகுறித்து ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து ரபீக்கை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பின்னர் அவர் கோபியில் உள்ள மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டார்.






