என் மலர்
தர்மபுரி
- 412 மாணவர்கள் மாநில அளவிலான போட்டிகளுக்கு தேர்வாகியுள்ளனர்.
- வேலூர், செங்கல்பட்டு, திருச்சி ஆகிய மாவட்டங்களில் நடக்கிறது.
தருமபுரி,
அரசுப்பள்ளி மாணவர் களின் கலை சார்ந்த திறன்களை வளர்ப்பதற்காக நடைபெறும் கலைத் திருவிழா போட்டிகளில் மாவட்ட அளவில் முதலிடத்தில் வெற்றி பெற்ற 412 மாணவர்கள் மாநில அளவிலான போட்டிகளுக்கு தேர்வாகியுள்ளனர்.
இம்மாணவர்களுக்கு மாநில அளவிலான போட்டிகள் இன்று முதல் 24ந்தேதி வரை வேலூர், செங்கல்பட்டு, திருச்சி ஆகிய மாவட்டங்களில் நடக்கிறது. மாநில அளவிலான போட்டிகளுக்கு செல்லும் மாண வர்களை தருமபுரி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ஜோதி சந்திரா, மாவட்டக் கல்வி அலுவலர்கள் மற்றும் உதவி திட்ட அலுவலர் ஆகியோர் வாழ்த்தி வழியனுப்பி வைத்தனர்.
- பக்தர்கள் அனைவருக்கும் அன்ன தானம் வழங்கப்பட்டது.
- வாகனத்தில் சாமி வீதி உலா நடைபெற்றது
அரூர்,
அரூர் மாரியம்மன் கோயில் தெருவில் அமைந்துள்ள ஸ்ரீவள்ளி தேவசேனா சமேத கல்யாண சுப்ரமணிய சுவாமி ஆலயத்தில் கந்த சஷ்டி விழாவை ஒட்டி சூரசம்ஹாரம், சுவாமி திருக்கல்யாணம் ஆகியவை நடைபெற்றது.
கடந்த 13.11.23ம் தேதி தொடங்கிய விழா விக்னேஷ்வர பூஜை, ஹோம பூஜைகள் ஆகியவற்றுடன் 18ம் தேதி கந்த சஷ்டி விழாவும் நேற்று 20.11.23சுவாமி திருக்கல்யாணமும் நடைபெற்றது. பின்னர் பக்தர்கள் அனைவருக்கும் அன்ன தானம் வழங்கப்பட்டது. மாலை அலங்கரிக்கப்பட்ட வாகன த்தில் சுவாமி திருவீதி உலா வும் நடைபெற்றது.
அர்ச்ச கர்கள் விஜயகுமார், லோக நாதன் ஆகியோர் சுவாமி திருக்கல்யாணத்தை நடத்தி னர். முல்லைரவி தலை மையில் விழா குழுவினர் செல்வதயாளன், விஸ்வ நாதன், சிவபிரகாசம், பத்ம நாபன் ஆகியோர் ஏற்பாடு களை செய்திருந்தனர்.
- தருமபுரி கலெக்டர் வழங்கினார்
- பரிசுகள் மற்றும் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.
தருமபுரி,
தருமபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டம், பருவதனஅள்ளியில் உள்ள தனியார் மஹாலில் 70-வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா நடைபெற்றது. விழாவில் கலெக்டர் சாந்தி சிறப்பாக செயல்பட்ட கூட்டுறவு சங்கங்களுக்கு கேடயங்களையும், 1915 பயனாளிகளுக்கு ரூ.15.36 கோடி மதிப்பிலான பல்வேறு கடனுதவிகள் மற்றும் அரசு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.
இவ்விழாவில் மாவட்ட கலெக்டர் சாந்தி தெரிவித்ததாவது:-
70-வது அகில இந்தியக் கூட்டுறவு வாரவிழா முதலமைச்சரின் ஆணைக்கி ணங்க ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரம் மற்றும் நீடித்த நிலையான வளர்ச்சிக்கான இலக்கு களில் கூட்டுறவு அமைப்பு களின் பங்கு எனும் பிரதானப் பொருளை மையமாகக் கொண்டு கொண்டாடப்பட்டு வருகிறது.
தருமபுரி மாவட்டத்தில் 523 கூட்டுறவு நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. பொதுவிநியோகத் திட்டத் தின் கீழ் 498 முழுநேர நியாய விலைக்கடைகளும், 586 பகுதிநேர நியாய விலைக் கடைகளும் என ஆக மொத்தம் 1084 நியாய விலைக்கடைகள் செயல்பட்டு வருகின்றன. இந்நியாய விலைக் கடை களில் 4,68,364 தகுதியுள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா அரிசி, கோதுமை, சர்க்கரை, பாமாயில் மற்றும் துவரம் பருப்பு ஆகியன விநியோ கிக்கப்பட்டு வருகிறது.
2022-23-ஆம் நிதியா ண்டில் 61,405 விவசாயி களுக்கு ரூ.499.95 கோடி பயிர்க்கடன் வழங்க ப்பட்டுள்ளது. பயிர்க்கடன் உட்பட இதர கடன்கள் 1,89,458 நபர்களுக்கு ரூ.1464.15 கோடி கடனாக வழங்கப்பட்டுள்ளது. 2023-24 ஆம் ஆண்டில் அக்டோபர் 2023 வரை 28,159 விவசாயிகளுக்கு ரூ.251.21 கோடி பயிர்க்கடன் வழங்கப்பட்டுள்ளது. பயிர்க் ்கடன் உட்பட இதர கடன்கள் 1,16,332 நபர்களுக்கு ரூ.936.35 கோடி கடனாக வழங்கப்பட்டுள்ளது.
விவசாயி களுக்கு வட்டி யில்லா பயிர்க்கடன்கள் கூட்டுறவுச் சங்கங்கள் மூலம் வழங்கப்பட்டு வருகிறது. விவசாயிகள் தாங்கள் பெற்ற பயிர்க்கடனை தவணை தவறாது திரும்ப செலுத்து பவருக்கு 7% வட்டித் தொகை முழுவதையும் அரசாங்கமே ஏற்றுக் கொண்டு வட்டியே இல்லாத விவசாயக் கடன் வழங்கப்பட்டு வருகிறது. இவ்வாறு கலெக்டர் சாந்தி தெரிவித்தார். கூட்டுறவு வார விழாவினை முன்னிட்டு, நடத்தப்பட்ட கட்டு ரைப்போட்டி, பேச்சுப் போட்டி உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி, கல்லூரிகளைச் சேர்ந்த மாணவ, மாணவி யர்களுக்கு பரிசுகள் மற்றும் பாராட்டு சான்றிதழ்களையும் மாவட்ட கலெக்டர் வழங்கி னார்.
மேலும், இன்று நடைபெற்ற 70-வது அனைத்திந்தியக் கூட்டுறவு வார விழாவில் 922 நபர்களுக்கு பயிர்க்கடனாக ரூ.774.46 இலட்சமும், கால்நடை பராமரிப்பு கடன் 303 நபர்களுக்கு ரூ.131.18 இலட்சமும், 34 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு 523 பயனாளிகளுக்கு ரூ.464.11 இலட்சமும், மாற்றுத் திறனாளி கடன்கள் 54 நபர்களுக்கு ரூ.27.71 இலட்சமும், டாம்கோ தனி நபர் கடனாக 34 நபர்களுக்கு ரூ.23.18 இலட்சமும், டாம்கோ குழுக் கடனாக 71 நபர்களுக்கு ரூ.38.66 இலட்சம், வீடு அடமானக் கடன் 8 நபர்களுக்கு ரூ.77.50 இலட்சமும் ஆக மொத்தம் இவ்விழாவில் 1915 உறுப்பினர்களுக்கு ரூ.15.36 கோடி மதிப்பிலான பல்வேறு கடனுதவிகள் மற்றும் அரசு நலத்திட்ட உதவிகளை மாவட்ட கலெக்டர் சாந்தி வழங்கினார்.
இவ்விழாவில் பென்னா கரம் சட்டமன்ற உறுப்பினர் ஜி.கே.மணி, தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி.வெங்கடேஸ்வரன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தடங்கம் சுப்பிரமணி, கூட்டுறவு சங்கங்களின் இணைப்ப திவாளர் ராமதாஸ், அரசுத் துறை அலுவலர்கள் மற்றும் பயனாளிகள் கலந்து கொண்டனர்.
- கல்லாவி சாலையில் நடந்து சென்றார்.
- இருசக்கர வாகனம் எதிர்பாராத விதமாக கோபால் மீது மோதியது.
தருமபுரி,
தருமபுரி மாவட்டம், அருர் அருகே உள்ள பொண்ணா கவுண்டம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் கோபால் (வயது 85).விவசாயி. கடந்த 18-ம் தேதி மொரப்பூர்-கல்லாவி சாலையில் நடந்து சென்றார்.அப்போது பின்னால் வந்த இருசக்கர வாகனம் எதிர்பாராத விதமாக கோபால் மீது மோதியதில் பலத்த காயமடைந்தார்.
அக்கம்,பக்கத்தினர் இவரை மீட்டு சிகிச்சைக்சைகாக 108 ஆம்புலன்ஸ் மூலம் தருமபுரி அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். சிகிச்சை பெற்று வந்த கோபால் சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து அவருடைய மகன் ரவி கொடுத்த புகாரின் பேரில் மொரப்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- எடப்பாடி பழனிசாமி சீர்வரிசை பொருட்களை வழங்கினார்
- சட்டமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டில் அ.தி.மு.க. ஆட்சி அமையும் என கூறினார்.
தருமபுரி,
தருமபுரி மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் எஸ்.ஆர். வெற்றிவேல் இல்ல திருமண விழா தருமபுரியில் நடைபெற்றது. திருமண விழாவில் எஸ்.ஆர்.வெற்றிவேல் அனை வரையும் வரவேற்றார். விழாவில் அ.தி.மு.க. பொதுச்செயலாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு டாக்டர் ரேணுகாதேவி, டாக்டர் ஜே.டி. ஆலன் திலக் ஆகியோருக்கு திருமணத்தை நடத்தி வைத்தார். இதைத்தொடர்ந்து 100 ஜோடிகளுக்கு சீர்வரிசை பொருட்களை வழங்கினார்.
இந்த விழாவில் அ.தி.மு.க. பொதுச்செய லாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-
எம்.ஜி.ஆர்.,ஜெயல லிதாவின் அருள் ஆசியுடன் இந்த திருமண விழா நடைபெற்றுள்ளது. முன்னாள் எம்.எல்.ஏ. அரங்க நாதன் எம்.ஜி.ஆரின் அன்பை பெற்றவர். தருமபுரியில் எம்.எல்.ஏ., மாவட்ட செயலாளர் பொறுப்புகளை வகித்தவர். அவருடைய மகன் எஸ்.ஆர். வெற்றி வேல் அ.தி.மு.க.வில் பல ஆண்டுகளாக கட்சிப் பணியாற்றி வருபவர். தருமபுரி நகர செயலாளர், மத்திய கூட்டுறவு வங்கி தலைவர், நகராட்சி தலைவர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்பு களை வகித்தவர்.
தனது மகளின் திரும ணத்தோடு 100 ஜோடி களுக்கு திரும ணத்தை அவர் நடத்தி இருப்பது பாராட்டு க்குரியது. இந்த திருமண ஜோடிகள் பல்லாண்டு வாழ வாழ்த்துகிறேன். மணமகனின் தந்தை ஆர்.ஜே.கே.திலக் எம்.ஜி.ஆர்.காலத்தில் இருந்து அ.தி.மு.க.வில் பல்வேறு பொறுப்புகளை வகித்து வருபவர். அடுத்த சட்டமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டில் அ.தி.மு.க. ஆட்சி அமையும். தமிழகத்தில் எப்போது எந்த தேர்தல் வந்தாலும் அ.தி.மு.க. தான் வெற்றி பெறும். இவ்வாறு எடப்பாடி பழனிசாமி பேசினார்.
- அரங்குகளை பார்வையிட்டு துண்டு பிரசுரங்களை வழங் கினார்.
- தருமபுரி கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது.
தருமபுரி,
2023- 2024 ம் ஆண்டை சிறுதானிய ஆண்டாக அறிவித்துள்ளதைத் தொடர்ந்து சிறுதானிய விழிப்புணர்வு மற்றும் சர்வதேச சிறுதானிய திருவிழாவை மாவட்ட கலெக்டர் சாந்தி தொடங்கி வைத்து கண்காட்சி அரங்குகளை பார்வையிட்டு துண்டு பிரசுரங்களை வழங்கினார். அப்போது அவர் கூறியதாவது;-
2023-2024ஆம் ஆண்டினை சர்வதேச சிறுதானிய ஆண்டாக அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து பொது மக்களா கிய நுகர்வோர்களிடையே பாரம்பரிய உணவான சிறுதானியங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சர்வதேச சிறுதா னிய திருவிழா இன்று தருமபுரி மாவட் டத்தில் கொண்டாடப்படுகிறது.
மேலும் சிறுதானியங்கள் முக்கியதுவம் குறித்து கண்காட்சி அரங்குகள் அமைத்து, அனைத்து வகையான பாராம்பரிய சிறுதானிய சிறப்புகள் தொடர்பான விழிப்பு ணர்வு தகவல்கள் வழங்கி பல்வகை சிறுதானிய உணவுகளை தயார் செய்து அச்சிறுதானியத்தின் நன்மைகள் குறித்து குறிப்புக ளுடன் நுகர்வோ ராகிய பொது மக்களின் பார்வைக்கு வைத்து பள்ளி, கல்லூரி மாணவர்க ளை கொண்டு விநியோகம் செய்து நேரடி விளக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
நம் முன்னோர்களால் ஆதிகாலத்திலிருந்தே உண்ணப்பட்டு வந்த ஆரோக்கியமான உணவில் முதல் இடத்தைப் பிடிப்ப வை சிறுதானிய வகைக ளான குதிரைவாலி, கேழ்வரகு, தினை, வரகு, சாமை, கம்பு, பனிவரகு, சோளம் போன்றவைதான். எனவேஇந்தியாவின் பாரம்பரியமிக்க சிறுதானிய வகைகளை உலக மக்களி டையே பிரபலப்படுத்தும் விதமாக 193 ஐ.நா. சபையின் உறுப்பு நாடுகள் இந்தத் தீர்மா னத்தை ஒரு மனதாக ஆதரித்ததால் 2023-ஆம் ஆண்டை சிறுதானியங்க ளுக்கான சர்வதேச ஆண்டாக ஐ.நா. அறிவித்திருக்கிறது.
உடலுக்கு நல்லது என்று பல உணவு வகைக ளைப் பயன்படுத்தும் நாம்சிறுதானிய உணவு களை உண்பதைக் காலப் போக்கில் மறந்துவிட் டோம். ஆரோக்கி யத்தைப் பேணுவதற்குத் தேவை யான அனைத்து சத்துக்க ளும் சிறுதானி யங்களில் உள்ளது. சிறுதானியங்க ளில் நார்ச்சத்து, கால்சியம், இரும்பு, பாஸ்பரஸ் போன்ற தாது உப்புக்கள் அதிகமாகக் காணப்படு வதால் நாம் உண்ணும்போது நம் உடலுக்கு ஆரோக்கியம் கிடைக்கிறது.
சிறுதானியங்களில் சத்துக்களுடன் பல மருத்து வக் குணம் கொண்ட நுண் ணுயிர் எதிர்ப்பு வேதிப் பொருட்களும் ஆக்சிஜ னேற்ற எதிர்ப் பொருட்க ளும் உள்ளன. சிறுதானி யங்களில் உள்ள கிளை சிமிக் இன் டெக்ஸ் சர்க்க ரை நோயாளிக ளுக்குச்சிறந்தது. இவ்வாறு அவர் கூறினார். இந்நிகழ்ச்சி யில் மாவட்ட வருவாய் அலு வலர் செ.பால்பி ரின்ஸ்லி ராஜ்குமார், தமிழ் நாடு நுகர்ப்பொருள் வாணி பக் கழக மண்டல மேலாளார் தேன்மொழி, கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதி வாளர் சு.இராமதாஸ் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்தடங்கம் பெ.சுப்பரமணி மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
- சகாதேவன் தன்னை மிரட்டி பலமுறை தகாத முறையில் நடந்து கொண்டதாக தெரிவித்தார்.
- போலீசார் சகாதேவனை போக்சோ வழக்கில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ள ஏரியூர் காவல் நிலையத்தின் உதவி ஆய்வாளர் சகாதவேன் புகார் கொடுக்க வந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இது தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் குழந்தைகள் நல உறுப்பினரிடம் அளித்த புகாரில் சகாதேவன் தன்னை மிரட்டி பலமுறை தகாத முறையில் நடந்து கொண்டதாக தெரிவித்தார்.
இதன் அடிப்படையில் குழந்தைகள் நல உறுப்பினர்கள் பென்னாகரம் நீதிமன்றத்தை நாடினர். பென்னாகரம் குற்றவியல் நீதிமன்றத்தில் பாதிக்கப்பட்ட பெண் நீதிபதியிடம் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் ஏரியூர் போலீசார் மற்றும் பென்னாகரம் மகளிர் போலீசார் சகாதேவனை போக்சோ வழக்கில் கைது செய்து தர்மபுரி கிளை சிறையில் அடைத்தனர்.
இந்த நிலையில், போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டு இருக்கும் உதவி ஆய்வாளர் சகாதவேன் பணி இடைநீக்கம் செய்யப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
- தருமபுரி அருகே தபால் ஊழியர் மாயம் ஆனார்.
- மனைவி போலிசீல் புகார்
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகேயுள்ள பஞ்சப்பள்ளி கிராமத்தை சேர்ந்த கோவிந்தன் மகன் ராஜாராம்(46) இவர் இவருக்கு திருமணம் ஆகி அம்பிகா(36) என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் ராஜாராம் நம்மாண்டஅள்ளியில் உள்ள தபால் நிலையத்தில் வேலை பார்த்து வந்துள்ளார்.
ராஜாராமுக்கும் அவரது மனைவி அம்பிகாவிற்கும் விவசாயம் செய்ய வாங்கிய ரூ. 10 லட்சம் தொடர்பாக அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து கடந்த 17ந்தேதி ராஜாராம் வீட்டில் இருந்து தபால் அலுவலகம் வேலைக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை. அவரது செல்போனுக்கு போன் செய்து பார்த்தபோது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது.
அவரை பல இடங்களில் தேடியும் அவர் குறித்து எந்த தகவலும் இல்லை தெரிகிறது. இது குறித்து ராஜாராம் மனைவி அம்பிகா அளித்த புகாரின் பேரில் பஞ்சப்பள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- தருமபுரி அருகே மனநலம் பாதிக்கப்பட்டவர் தற்கொலை செய்து கொண்டார்.
- போலீசார் விசாரணை
தருமபுரி மாவட்டம், கே.நடுஅள்ளி அருகே உள்ள மாரியம்மன் கோவில் கொட்டாய் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகன் (வயது 45). சற்று மனநலம் பாதிக்கப் பட்டவரான இவர் நேற்று இரவு வீட்டில் தனியாக இருந்தபோது தூக்கு போட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
இதனை கண்ட உறவி–னர்கள் உடனே அவரை மீட்டு தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்ற னர். அப்போது அவர் வழியிலேயே உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவலறிந்த டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து முருகனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- தருமபுரி அருகே தொடர் திருட்டில் ஈடுபட்ட 2 கொள்ளையர்களை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
- 35 பவுன் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
தருமபுரி மாவட்டம் அதியமான் கோட்டை போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட ஒட்டப்பட்டி பொதுப் பணித்துறை காலனி பகுதிகளில் தீபாவளிக்கு முன்பு தொடர்ந்து 2 வீடுகள் உடைக்கப்பட்டு சுமார் 35 பவுன் நகை கொள்ளை அடிக்கப்பட்டது. இதுகுறித்து அதியமான் கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து குற்றவாளிகளை சி.சி.டி.வி. கேமிராவில் பதிவான பதிவுகளை வைத்து விசாரணை செய்து வந்தனர்.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பகுதியைச் சார்ந்த திருமால் (வயது37) என்பவரும், திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி பகுதியைச் சார்ந்த முத்துபாலன் (28) ஆகிய இருவரும் சேர்ந்து இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. உடனே போலீசார் 2 பேரையும் கைது செய்தனர்.
கைதான 2 பேரிடம் போலீசார் விசாரித்ததில், இவர்கள் இருவரும் சிறையில் இருக்கும் போது நண்பர்களாக இருந்துள்ளனர். பின்னர் வெளியில் வந்ததும் ஒரு வழக்கில் கையெழுத்திட பஸ்சில் செல்லும்போது தருமபுரியில் உள்ள அதியமான்கோட்டை பகுதியில் நோட்டமிட்டு வந்துள்ளார். பின்னர் தனது நண்பரான முத்து பாலனுக்கு தகவல் தெரிவித்து தொடர்ந்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு வந்துள்ளனர் என்பதும், அதிமான் கோட்டையில் பதியப்பட்ட 6 கொள்ளை வழக்கில் சம்பந்தப்பட்டிருப்பதும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து கைதான 2 பேரிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட சுமார் 35 பவுன் நகைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் 2 பேரையும் தருமபுரி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்து தருமபுரி கிளைச் சிறையில் போலீசார் அடைத்தனர்.
- தருமபுரி அருகே இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
- ஆர். டி.ஓ விசாரணை நடக்கிறது.
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அடுத்த கவுண்டனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் முத்துசாமி வயது (வயது 48). இவர் தி.மு.க. பிரகமுரான இவருக்கு மோகனப்பிரியா (20) என்ற மகளும் நவீன்குமார் என்ற மகனும் உள்ளனர். இந்த நிலையில் மோகனப்பிரியா, கடந்த 2 வருடங்களுக்கு முன்பு கொலசனஅள்ளி கிராமத்தைச் சேர்ந்த ராமசாமி மகன் தருமன் என்கிற தருமலிங்கத்தை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 1 வயதில் ஆண் குழந்தை உள்ளது.
இந்த நிலையில் தருமன், திருமணம் ஆனதிலிருந்து தினமும் குடித்துவிட்டு வந்து மோகன பிரியாவிடம் தகராறில் ஈடுபட்டு வந்ததாக தெரிகிறது. கணவன்-மனைவி இருவருக்கும் அடிக்கடி இது போன்ற பிரச்சனைகளால் மோகனப்பிரியா தனது தாய் வீட்டிற்கு கோபித்து கொண்டு செல்வதும், மீண்டும் தருமனின் பெற்றோர்கள் சமாதானப்படுத்தி பேச்சுவார்த்தை நடத்தி அழைத்து வருவதுமாக இருந்து வந்துள்ளனர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு மோகன பிரியா, தனது தாய்க்கு போன் செய்து தருமன் குடித்து விட்டு தகராறில் ஈடுபட்டு வருகிறார். இங்கே என்னால் வாழ முடியாது வீட்டிற்கு வருகிறேன் என்று கூறியுள்ளார். இந்த நிலையில் நேற்று மோகனப்பிரியாவின் பெற்றோர்கள் நேரில் சென்று சமாதானம் பேச சென்றுள்ளனர். அப்போது தருமன் தகாத வார்த்தைகளால் திட்டியதை அடுத்து மோகன பிரியாவின் பெற்றோர்கள் சென்று விட்டனர்.
இதைத்தொடர்ந்து மாலை 3 மணிக்கு மேல் மோகன பிரியாவின் பெற்றோருக்கு போனில் உங்கள் மகள் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார் என்று தகவல் தெரிவித்தனர். இதையடுத்து மோகனபிரியாவின் பெற்றோர்கள் வந்து பார்த்தபோது தனது மகள் பிணமாக கிடந்தார். இதுகுறித்து முத்துசாமி பாலக்கோடு போலீஸ் நிலையத்தில் தனது மகள் சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி புகார்தெரிவித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டு 2 ஆண்டுகள் ஆனநிலையில் இளம் பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து தருமபுரி ஆர்.டி.ஓ விசாரணை நடத்தி வருகின்றனர்.
- தருமபுரி அருகே கலெக்டர் அலுவலகம் முன்பு குடும்பத்துடன் பெண் போராட்டத்தில் ஈடுபட்டார்.
- சகோதரர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை
தருமபுரி மாவட்டம் செட்டிக்கரை அருகேயுள்ள பள்ளக்கொல்லை கிராமத்தை சேர்ந்தவர் சின்னசாமி. இவரது மனைவி சரோஜா.
இவர் தனது குடும்பத்தினருடன் இன்று காலை 11 மணியளவில் தருமபுரி கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார்.
அப்போது திடீரென்று கலெக்டர் அலுவலக வளாகத்தில் தனது குடும்பத்தினருடன் தர்ணா போராட்டத்தில் ஈடுப்பட்டார். அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போலீசார் அவர்களிடம் விசாரித்தனர். அப்போது சரோஜா மற்றும் அவரது குடும்பத்தினர் கூறியதாவது:-
தருமபுரி மாவட்டம் விருப்பாட்சிபுரம் அருகே–யுள்ள கோடிகொட்டாய் கிராமத்தை சேர்்ந்தவர் எனது தந்தை பெருமாள். அவருக்கு 5 குழந்தைகளில் நான் 3-வதாக பிறந்தேன். என்னை பள்ளக் கொல்லையைச் சேர்ந்த சின்ன–சாமி என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்த னர். என் தந்தைக்கு 3 மகன்களும் 2 மகள்களும் வாரிசுதாரர்கள். இதில் தந்தை பெருமாள், தாய் ராஜம்மாள், அண்ணன் பச்சியப்பன் மற்றும் அக்கா ராணி ஆகியோர் இறந்து விட்டனர்.
இந்நிலையில் குடு்ம்ப சொத்தை அபகரிக்க வேண்டும் என்று ஆசை கொண்ட எனது தம்பிகள் மாதையன், மாரிமுத்து, மற்றும் அண்ணன் குடும்பத்தை சேர்ந்தவர்கள் போலியாக வாரிசு சான்று தயாரித்து தந்தை பெயரில் உள்ள குடும்ப சொத்தை 5 பத்திரங்களாக பதிவு செய்து உள்ளனர்.
என்னையும், இறந்து போன தனது அக்கா ராணியை தவிர்த்து விட்டு என் தந்தைக்கு 3 மகன்கள் தான் உள்ளனர் என்று போலியாக வாரிசு சான்று பெற்று உள்ளனர். அதன் மூலம் எங்களது சொத்துகளை விற்றுவிட்டனர்.
ஆகவே போலியான சான்று மூலம் குடும்ப சொத்தை அபகரித்து இருக்கும் எனது தம்பிகள் மற்றும் அண்ணன் குடும்பத்தினர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வட்டாட்சியார் மற்றும் அதிகாரிகளிடம் பலமுறை புகார் மனு அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கா–வில்லை. எனவே, போலி வாரிசு சான்று மூலம் சொத்தை அபகரித்த சகோதரர்கள், அண்ணன் குடும்பத்தினர், போலி வாரிசு சான்று வழங்கிய அதிகாரிகள் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்காததை கண்டித்து தர்ணா போராட்டத்தில் ஈடு படுவதாக தெரிவித்தனர்.
இது குறித்து போலீசார் தர்ணாபோராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். பின்னர் அவர்களை ககெலக்டரிடம் மனு கொடுக்குமாறு அறிவுறுத்தி னர். அதன்பின்னர் சரோஜா தனது குடும்பத்தினருடன் கலெக்டரிடம் மனு கொடுத்தனர். அந்த மனுவின் மீது கலெக்டர் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். அதன் பின்னர் அவர்கள் அங்கி–ருந்து கலைந்து சென்றனர்.
இந்த சம்பவத்தால் கலெக்டர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.






