என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்

கலெக்டர் அலுவலகம் முன்பு குடும்பத்துடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட பெண்

- தருமபுரி அருகே கலெக்டர் அலுவலகம் முன்பு குடும்பத்துடன் பெண் போராட்டத்தில் ஈடுபட்டார்.
- சகோதரர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை
தருமபுரி மாவட்டம் செட்டிக்கரை அருகேயுள்ள பள்ளக்கொல்லை கிராமத்தை சேர்ந்தவர் சின்னசாமி. இவரது மனைவி சரோஜா.
இவர் தனது குடும்பத்தினருடன் இன்று காலை 11 மணியளவில் தருமபுரி கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார்.
அப்போது திடீரென்று கலெக்டர் அலுவலக வளாகத்தில் தனது குடும்பத்தினருடன் தர்ணா போராட்டத்தில் ஈடுப்பட்டார். அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போலீசார் அவர்களிடம் விசாரித்தனர். அப்போது சரோஜா மற்றும் அவரது குடும்பத்தினர் கூறியதாவது:-
தருமபுரி மாவட்டம் விருப்பாட்சிபுரம் அருகே–யுள்ள கோடிகொட்டாய் கிராமத்தை சேர்்ந்தவர் எனது தந்தை பெருமாள். அவருக்கு 5 குழந்தைகளில் நான் 3-வதாக பிறந்தேன். என்னை பள்ளக் கொல்லையைச் சேர்ந்த சின்ன–சாமி என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்த னர். என் தந்தைக்கு 3 மகன்களும் 2 மகள்களும் வாரிசுதாரர்கள். இதில் தந்தை பெருமாள், தாய் ராஜம்மாள், அண்ணன் பச்சியப்பன் மற்றும் அக்கா ராணி ஆகியோர் இறந்து விட்டனர்.
இந்நிலையில் குடு்ம்ப சொத்தை அபகரிக்க வேண்டும் என்று ஆசை கொண்ட எனது தம்பிகள் மாதையன், மாரிமுத்து, மற்றும் அண்ணன் குடும்பத்தை சேர்ந்தவர்கள் போலியாக வாரிசு சான்று தயாரித்து தந்தை பெயரில் உள்ள குடும்ப சொத்தை 5 பத்திரங்களாக பதிவு செய்து உள்ளனர்.
என்னையும், இறந்து போன தனது அக்கா ராணியை தவிர்த்து விட்டு என் தந்தைக்கு 3 மகன்கள் தான் உள்ளனர் என்று போலியாக வாரிசு சான்று பெற்று உள்ளனர். அதன் மூலம் எங்களது சொத்துகளை விற்றுவிட்டனர்.
ஆகவே போலியான சான்று மூலம் குடும்ப சொத்தை அபகரித்து இருக்கும் எனது தம்பிகள் மற்றும் அண்ணன் குடும்பத்தினர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வட்டாட்சியார் மற்றும் அதிகாரிகளிடம் பலமுறை புகார் மனு அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கா–வில்லை. எனவே, போலி வாரிசு சான்று மூலம் சொத்தை அபகரித்த சகோதரர்கள், அண்ணன் குடும்பத்தினர், போலி வாரிசு சான்று வழங்கிய அதிகாரிகள் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்காததை கண்டித்து தர்ணா போராட்டத்தில் ஈடு படுவதாக தெரிவித்தனர்.
இது குறித்து போலீசார் தர்ணாபோராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். பின்னர் அவர்களை ககெலக்டரிடம் மனு கொடுக்குமாறு அறிவுறுத்தி னர். அதன்பின்னர் சரோஜா தனது குடும்பத்தினருடன் கலெக்டரிடம் மனு கொடுத்தனர். அந்த மனுவின் மீது கலெக்டர் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். அதன் பின்னர் அவர்கள் அங்கி–ருந்து கலைந்து சென்றனர்.
இந்த சம்பவத்தால் கலெக்டர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
