என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்

இளம்பெண் தூக்குபோட்டு தற்கொலை

- தருமபுரி அருகே இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
- ஆர். டி.ஓ விசாரணை நடக்கிறது.
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அடுத்த கவுண்டனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் முத்துசாமி வயது (வயது 48). இவர் தி.மு.க. பிரகமுரான இவருக்கு மோகனப்பிரியா (20) என்ற மகளும் நவீன்குமார் என்ற மகனும் உள்ளனர். இந்த நிலையில் மோகனப்பிரியா, கடந்த 2 வருடங்களுக்கு முன்பு கொலசனஅள்ளி கிராமத்தைச் சேர்ந்த ராமசாமி மகன் தருமன் என்கிற தருமலிங்கத்தை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 1 வயதில் ஆண் குழந்தை உள்ளது.
இந்த நிலையில் தருமன், திருமணம் ஆனதிலிருந்து தினமும் குடித்துவிட்டு வந்து மோகன பிரியாவிடம் தகராறில் ஈடுபட்டு வந்ததாக தெரிகிறது. கணவன்-மனைவி இருவருக்கும் அடிக்கடி இது போன்ற பிரச்சனைகளால் மோகனப்பிரியா தனது தாய் வீட்டிற்கு கோபித்து கொண்டு செல்வதும், மீண்டும் தருமனின் பெற்றோர்கள் சமாதானப்படுத்தி பேச்சுவார்த்தை நடத்தி அழைத்து வருவதுமாக இருந்து வந்துள்ளனர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு மோகன பிரியா, தனது தாய்க்கு போன் செய்து தருமன் குடித்து விட்டு தகராறில் ஈடுபட்டு வருகிறார். இங்கே என்னால் வாழ முடியாது வீட்டிற்கு வருகிறேன் என்று கூறியுள்ளார். இந்த நிலையில் நேற்று மோகனப்பிரியாவின் பெற்றோர்கள் நேரில் சென்று சமாதானம் பேச சென்றுள்ளனர். அப்போது தருமன் தகாத வார்த்தைகளால் திட்டியதை அடுத்து மோகன பிரியாவின் பெற்றோர்கள் சென்று விட்டனர்.
இதைத்தொடர்ந்து மாலை 3 மணிக்கு மேல் மோகன பிரியாவின் பெற்றோருக்கு போனில் உங்கள் மகள் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார் என்று தகவல் தெரிவித்தனர். இதையடுத்து மோகனபிரியாவின் பெற்றோர்கள் வந்து பார்த்தபோது தனது மகள் பிணமாக கிடந்தார். இதுகுறித்து முத்துசாமி பாலக்கோடு போலீஸ் நிலையத்தில் தனது மகள் சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி புகார்தெரிவித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டு 2 ஆண்டுகள் ஆனநிலையில் இளம் பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து தருமபுரி ஆர்.டி.ஓ விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
