தபால் ஊழியர் மாயம்

தருமபுரி அருகே தபால் ஊழியர் மாயம் ஆனார். மனைவி போலிசீல் புகார்
தபால் ஊழியர் மாயம்
Published on

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகேயுள்ள பஞ்சப்பள்ளி கிராமத்தை சேர்ந்த கோவிந்தன் மகன் ராஜாராம்(46) இவர் இவருக்கு திருமணம் ஆகி அம்பிகா(36) என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் ராஜாராம் நம்மாண்டஅள்ளியில் உள்ள தபால் நிலையத்தில் வேலை பார்த்து வந்துள்ளார்.

ராஜாராமுக்கும் அவரது மனைவி அம்பிகாவிற்கும் விவசாயம் செய்ய வாங்கிய ரூ. 10 லட்சம் தொடர்பாக அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து கடந்த 17ந்தேதி ராஜாராம் வீட்டில் இருந்து தபால் அலுவலகம் வேலைக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை. அவரது செல்போனுக்கு போன் செய்து பார்த்தபோது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது.

அவரை பல இடங்களில் தேடியும் அவர் குறித்து எந்த தகவலும் இல்லை தெரிகிறது. இது குறித்து ராஜாராம் மனைவி அம்பிகா அளித்த புகாரின் பேரில் பஞ்சப்பள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com