என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
கிணற்றில் பிணமாக கிடந்த வாலிபர் கொலையா? போலீசார் விசாரணை
Byமாலை மலர்20 May 2022 9:07 AM GMT (Updated: 20 May 2022 9:07 AM GMT)
ஏற்காட்டில் கிணற்றில் பிணமாக கிடந்த வாலிபர் கொலையா? போலீசார் விசாரணை நடத்தினர்.
ஏற்காடு:
ஏற்காடு முருகன் நகர்,பகுதியில் அரசுக்கு சொந்தமான கிணறு உள்ளது. இதில் 26 வயது மதிக்கத்தக்க ஆண் பிணம் மிதப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனடியாக ஏற்காடு போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் பிணமாக கிடந்தவர் ஏற்காடு முருகன் நகர் பகுதியை சேர்ந்த குணசேகரன் மகன் கீர்த்தி குமார் (வயது 25 ) என்பது தெரிய வந்தது. இவர் கடந்த 17-ந்தேதி இரவு 8 மணிக்கு வெளியே சென்றார்.
அதன்பிறகு அவர் வீடு திரும்பவில்லை. இதையடுத்து உறவினர்கள் தேடிக் கொண்டிருந்தனர். இந்த நிலையில் இன்று காலை கிணற்றில் பிணமாக மிதந்தது உறவினர் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து கீர்த்திகுமாரின் உடலை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து ஏற்காடு போலீஸ் இன்ஸ்பெக்டர் ரஜினி வழக்குப்பதிவு செய்து கீர்த்திகுமார் கிணற்றில் குதித்து தற்கொலை செய்தாரா? அல்லது அவரை யாரும் கொலை செய்து கிணற்றில் வீசினார்களா? என்று தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X