என் மலர்tooltip icon

    செய்திகள்

    புதுக்கோட்டையில் வருகிற 15-ந்தேதி மதுக்கடை- பார்கள் மூடல்: கலெக்டர் தகவல்
    X

    புதுக்கோட்டையில் வருகிற 15-ந்தேதி மதுக்கடை- பார்கள் மூடல்: கலெக்டர் தகவல்

    சுதந்திர தினத்தை முன்னிட்டு புதுக்கோட்டை மாவட்டத்தில் வருகிற 15-ந்தேதி மதுக்கடை மற்றும் பார்கள் மூடவேண்டும் என கலெக்டர் கணேஷ் உத்தரவிட்டுள்ளார்.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் கணேஷ் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு மதுபான சில்லரை விற்பனை (கடைகள் மற்றும் மதுக்கூடங்கள்) விதிகள் 2003 (அரசு ஆணை (பல்வகை) எண்.292, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை (ஏஐ) நாள் 03.11.2003)-இன் விதி 12-இல் தெரிவிக்கப்பட்டுள்ளவாறு 15.08.2017 அன்று சுதந்திர தினத்தை முன்னிட்டு டாஸ்மாக் நிறுவனத்தின் அனைத்து இந்திய தயாரிப்பு அந்நிய மதுபான சில்லரை விற்பனைக் கடைகள் மற்றும் மதுபானக் கூடங்களில் விற்பனை நடை பெறாமலும், மூடப்பட்டும் இருக்க வேண்டும்.

    எனவே, புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுபானக் கடைகள், மதுபானக்கூடங்கள்(பார்) ஆகியவற்றில் மேற்கண்ட ஒரு நாள் மட்டும் மது விற்பனை ஏதும் நடைபெறாது என்றும், அவை யாவும் மூடப்பட்டிருக்க வேண்டும்.

    இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
    Next Story
    ×