என் மலர்
செய்திகள்

காரைக்குடியில் கூடுதல் வரதட்சணை கேட்டு இளம்பெண் சித்ரவதை: கணவர் உள்பட 5 பேர் மீது வழக்கு
காரைக்குடியில் கூடுதல் வரதட்சணை கேட்டு இளம்பெண் சித்ரவதை செய்யப்பட்டதாக வந்த புகாரின் பேரில் கணவர் உள்பட 5 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து உள்ளனர்.
சிவகங்கை:
காரைக்குடி அருகே உள்ள புதுவயலை சேர்ந்தவர் நாகப்பன் (வயது 30). இவர் புதுக்கோட்டையில் பேக்கரி கடை நடத்தி வருகிறார்.
இவருக்கும், புதுவயல் பகுதியை சேர்ந்த கற்பகம் (26) என்பவருக்கும் கடந்த 2010-ம் ஆண்டு திருமணம் நடந்தது. அப்போது நகை, பணம் வரதட்சணையாக கொடுக்கப்பட்டது. தற்போது இவர்களுக்கு 6 வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது.
இந்நிலையில் கற்பகம் காரைக்குடி அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். அதில், எனது கணவர் நாகப்பன், தொழிலை அபிவிருந்தி செய்ய கூடுதல் வரதட்சணை கேட்டு துன்புறுத்துவதாகவும், இதற்கு உடந்தையாக அவரது பெற்றோர் மாரிக்கண்ணு- லட்சுமணன் உள்பட 5 பேர் இருப்பதாகவும் தெரிவித்திருந்தார்.
இந்த புகாரின் அடிப்படையில் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் சீதாலட்சுமி விசாரணை நடத்தி நாகப்பன் உள்பட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்து உள்ளார்.
காரைக்குடி அருகே உள்ள புதுவயலை சேர்ந்தவர் நாகப்பன் (வயது 30). இவர் புதுக்கோட்டையில் பேக்கரி கடை நடத்தி வருகிறார்.
இவருக்கும், புதுவயல் பகுதியை சேர்ந்த கற்பகம் (26) என்பவருக்கும் கடந்த 2010-ம் ஆண்டு திருமணம் நடந்தது. அப்போது நகை, பணம் வரதட்சணையாக கொடுக்கப்பட்டது. தற்போது இவர்களுக்கு 6 வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது.
இந்நிலையில் கற்பகம் காரைக்குடி அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். அதில், எனது கணவர் நாகப்பன், தொழிலை அபிவிருந்தி செய்ய கூடுதல் வரதட்சணை கேட்டு துன்புறுத்துவதாகவும், இதற்கு உடந்தையாக அவரது பெற்றோர் மாரிக்கண்ணு- லட்சுமணன் உள்பட 5 பேர் இருப்பதாகவும் தெரிவித்திருந்தார்.
இந்த புகாரின் அடிப்படையில் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் சீதாலட்சுமி விசாரணை நடத்தி நாகப்பன் உள்பட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்து உள்ளார்.
Next Story






