என் மலர்tooltip icon

    இமாச்சல பிரதேசம்

    • முதலில் ஆடிய இங்கிலாந்து 364 ரன்களை குவித்தது.
    • அந்த அணியின் டேவிட் மலான் சதமடித்து அசத்தினார்.

    தர்மசலா:

    உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில், இமாசலப்பிரதேசத்தின் தர்மசலாவில் 7வது லீக் போட்டி இன்று நடைபெற்றது. இதில் இங்கிலாந்து, வங்காளதேசம் ஆகிய அணிகள் மோதின. டாஸ் வென்ற வங்காளதேசம் பவுலிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய இங்கிலாந்து அணி 50 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 364 ரன்கள் குவித்தது. டேவிட் மலான் 107 பந்தில் 5 சிக்சர், 16 பவுண்டரி உள்பட 140 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். ஜோ ரூட் 68 பந்தில் ஒரு சிக்சர், 8 பவுண்டரி உள்பட 82 ரன்கள் சேர்த்தார்

    வங்காளதேசம் சார்பில் மெஹிதி ஹசன் 4 விக்கெட்டும், ஷோரிபுல் இஸ்லாம் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 365 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்காளதேசம் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் லிட்டன் தாஸ் பொறுப்புடன் ஆடி 76 ரன்னில் அவுட்டானார். முஷ்பிகுர் ரஹிம் 51 ரன்னில் வெளியேறினார். ஹிருடோய் 39 ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் நிலைத்து நிற்கவில்லை.

    இறுதியில், வங்காளதேசம் 227 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் 137 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அபார வெற்றி பெற்றது. இங்கிலாந்து அணி பெற்ற முதல் வெற்றி இதுவாகும்.

    இங்கிலாந்து சார்பில் ரீஸ் டாப்ளே 4 விக்கெட்டும், கிறிஸ் வோக்ஸ் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    • டாஸ் வென்ற வங்காளதேசம் முதலில் பவுலிங் தேர்வு செய்தது.
    • அதன்படி, முதலில் ஆடிய இங்கிலாந்து 364 ரன்களை குவித்தது.

    தர்மசலா:

    உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில், இமாசலப்பிரதேசத்தின் தர்மசலாவில் 7வது லீக் போட்டி இன்று நடைபெறுகிறது. இதில் இங்கிலாந்து, வங்காளதேசம் ஆகிய அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற வங்காளதேசம் பவுலிங் தேர்வு செய்தது.

    அதன்படி, இங்கிலாந்து அணி முதலில் களமிறங்கியது. பேர்ஸ்டோவ், டேவிட் மலான் தொடக்க ஆட்டக்காரர்களாக இறங்கினர். முதல் விக்கெட்டுக்கு 115 ரன்கள் சேர்த்த நிலையில் பேர்ஸ்டோவ் அரை சதமடித்து 52 ரன்னில் அவுட்டானார்.

    அடுத்து இறங்கிய ஜோ ரூட், மலானுடன் இணைந்து அதிரடியை தொடர்ந்தார். இருவரும் கிடைத்த பந்துகளை சிக்சர், பவுண்டரிகளாக விளாசினர். டேவிட் மலான் பொறுப்புடன் ஆடி சதமடித்தார். ஜோ ரூட் அரை சதமடித்தார்.

    2-வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த மலான், ஜோ ரூட் 151 ரன்கள் சேர்த்தனர். மலான் 107 பந்தில் 5 சிக்சர், 16 பவுண்டரி உள்பட 140 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். ஜோ ரூட் 68 பந்தில் ஒரு சிக்சர், 8 பவுண்டரி உள்பட 82 ரன்கள் சேர்த்தார்

    இறுதியில், இங்கிலாந்து நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 364 ரன்கள் குவித்தது.

    வங்காளதேசம் சார்பில் மெஹிதி ஹசன் 4 விக்கெட்டும், ஷோரிபுல் இஸ்லாம் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 365 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்காளதேசம் களமிறங்குகிறது.

    • எஸ்.எஃப்.டி. எனும் அமைப்பு நீண்டகாலமாக திபெத் விடுதலைக்கு போராடுகிறது
    • திபெத்திய குழுந்தைகளை பெற்றோர்களிடம் இருந்து சீனா பிரிக்கிறது

    கிழக்கு ஆசியாவின் மத்தியில் உள்ள நாடு திபெத். 1950-ல் திபெத்தை தன்னுடன் இணைத்து கொண்டு விட்டதாக சீனா அறிவித்தது. ஆனால், அப்போது முதல் அந்நாட்டின் விடுதலைக்காக ஆங்காங்கே அந்நாட்டவர்கள் குரலெழுப்பி வருகின்றனர்.

    தற்போது இந்தியாவில் ஜி20 உறுப்பினர் நாடுகள் கூட்டமைப்பின் 18-வது உச்சி மாநாடு, தலைநகர் புது டெல்லியில் நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்ள பல உறுப்பினர் நாடுகளின் தலைவர்களும் டெல்லி வந்து இம்மாநாட்டில் பங்கேற்றுள்ளனர்.

    இந்நிலையில், உலக தலைவர்களுக்கு தங்கள் விடுதலை போராட்டம் குறித்து அறிவிக்கும் விதமாக எஸ்.எஃப்.டி. எனும் சுதந்திர திபெத்திற்கான மாணவர்கள் அமைப்பை சேர்ந்த மாணவர்கள் இமாச்சல பிரதேச மாநிலத்தின் காங்க்ரா மாவட்டத்தில் உள்ள தர்மசாலா நகரத்திற்கு வெளியே மெக்லியாட் காஞ்ச் எனும் பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இந்த அமைப்பின் இயக்குனர் டென்சின் பசாங்க், "எங்கள் கலாசாரத்தையும், அடையாளங்களையும் அழிக்கும் விதமாக சீனா தொடர் முயற்சிகளில் ஈடுபடுகிறது. எங்கள் கல்வி அமைப்புகளின் மீது மறைமுக தாக்குதல் நடத்தி வருகிறது. சிறிய 4-வயது குழந்தைகளை கூட பெற்றோர்களிடம் இருந்து பிரித்து சீனாவின் உறைவிடப் பள்ளிகளில் வலுக்கட்டாயமாக சேர்க்கிறது. இதனால் அக்குழந்தைகளுக்கு நாளடைவில் எங்கள் மொழி, கலாச்சாரம், வாழ்க்கைமுறை ஆகியவையுடன் அறவே தொடர்பில்லாமல் போகிறது," என்று தெரிவித்தார்.

    இதே அமைப்பின் பிரச்சார இயக்குனர் டென்சின் லெக்தென், "ஜி20 தலைவர்கள் இது குறித்து பேச வேண்டும். குறிப்பாக, காலனி ஆதிக்க மனப்பான்மையுடன் சீனாவின் பள்ளிகளில் திபெத்திய குழந்தைகள் கட்டாயமாக சேர்க்கப்படுவதையும், திபெத் முழுவதும் சீனா செய்து வரும் மனித உரிமை மீறல் நடவடிக்கைகள் குறித்தும் உலக தலைவர்கள் பேச வேண்டும்," என்று கூறினார்.

    • விலங்குகளை கொன்று இரையாக்குவது சுற்றுச்சூழலை பாதிப்பதில் தொடர்பு கொண்டிருக்கிறது.
    • நிலச்சரிவு, மேக வெடிப்பு போன்ற சம்பவங்களை நாம் மீண்டும், மீண்டும் எதிர்கொண்டு வருகிறோம்.

    இறைச்சிக்காக உயிரினங்களை கொலை செய்வதால் தான் இமாச்சல பிரதேச மாநிலத்தில் நிலச்சரிவு மற்றும் மேக வெடிப்பு போன்ற இயற்கை பேரிடர் சம்பவங்கள் ஏற்படுகின்றன என்று ஐ.ஐ.டி. மண்டி இயக்குனர் லக்ஷமிதார் பெஹெரா பேசும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது.

    உணவுக்காக விலங்குகளை கொல்லும் போது, சுற்றுச்சூழலில் எத்தகைய பாதிப்புகள் ஏற்படுகின்றன என்பதை மக்கள் புரிந்து கொள்ள மறுக்கின்றனர் என்று அவர் மேலும் தெரிவித்து உள்ளார். யூடியூபில் பதிவேற்றம் செய்யப்பட்ட இந்த வீடியோ எக்ஸ் தளத்தில் பதிவிடப்பட்டதும் வைரல் ஆக துவங்கி விட்டது.

     

    "அப்பாவி விலங்குகளை கொன்று இரையாக்குவது சுற்றுச்சூழலை பாதிப்பதில் நெருங்கிய தொடர்பு கொண்டிருக்கிறது. இது ஏற்கனவே தாக்கத்தை ஏற்படுத்திவிட்டது. நிலச்சரிவு, மேக வெடிப்பு போன்ற சம்பவங்களை நாம் மீண்டும், மீண்டும் எதிர்கொண்டு வருகிறோம். இவை அனைத்திற்கும் காரணம் விலங்குகளை கொடுமைப்படுத்துவது தான்."

    "நல்ல மனிதர்களாக இருக்க என்ன செய்ய வேண்டும்? இறைச்சி போன்ற உணவுகளை தவிர்த்துவிட வேண்டும். ஆமாவா, இல்லையா?" என்று அவர் மாணவர்களிடையே பேசும் போது கேள்வியாக எழுப்பியுள்ளார்.

    • மாநிலத்திற்கு சுமார் 10,000 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
    • மாநிலத்தின் பேரிடர் நிவாரண நிதிக்கு தாராளமாக பங்களிக்க வேண்டும்.

    இமாச்சலப் பிரதேசத்தில் சமீபகாலமாக ஏற்பட்ட கனமழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளால் பேரழிவைச் சந்தித்தது. இதனை சமாளிக்க ராஜஸ்தான் ரூ.15 கோடி வழங்கியுள்ளதாக இமாச்சல பிரதேச முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு தெரிவித்துள்ளார்.

    சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகேல் இமாச்சலப் பிரதேசத்திற்கு ரூ.11 கோடி நிதியுதவி அறிவித்த நிலையில், ராஜஸ்தான் முதல்வர் நிதியுதவி அறிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக வெளியிட்ட அறிக்கையில், "நிதி உதவி வழங்கியதற்காக ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்டுக்கும், இமாச்சல் மக்களுக்கும் நன்றி தெரிவித்தார். பேரிடர்களால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு இந்த உதவி பெரும் உதவியாக இருக்கும்" என்றார்.

    மேலும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு போதுமான உதவிகளை வழங்குவதற்கு பல்வேறு அமைப்புகளும், பொதுமக்களும் மாநிலத்தின் பேரிடர் நிவாரண நிதிக்கு தாராளமாக பங்களிக்க வேண்டும் என்றும் சுகு கேட்டுக் கொண்டார்.

    இமாச்சல் பேரிழப்பில், மாநிலத்திற்கு சுமார் 10,000 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் இமாசலில் மேகவெடிப்பு ஏற்பட்டு பேய்மழை கொட்டி வருகிறது.
    • இமாச்சல் முழுவதையும் இயற்கை பேரிடர் பாதித்த மாநிலமாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

    சிம்லா:

    தென்மேற்கு பருவமழையால் இமாச்சல பிரதேசம் அதிகபட்ச மழைப்பொழிவை பெற்றுள்ளது. இதனால் கடும் வெள்ளப் பெருக்கு, நிலச்சரிவு ஏற்பட்டு மோசமான பாதிப்புகளையும் எதிர்கொண்டு உள்ளது.

    அங்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் மேகவெடிப்பு ஏற்பட்டு பேய்மழை கொட்டி வருகிறது. கடந்த 3 நாட்களில் மட்டும் இயல்பைவிட 157 சதவீதம் அதிகம் மழை பெய்துள்ளது.

    மழை மற்றும் நிலச்சரிவு காரணமாக இதுவரை ஆயிரக்கணக்கான வீடுகள், அரசு மற்றும் தனியார் சொத்துக்கள் அழிந்துள்ளது. அத்துடன் இதுவரை நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். தொடர்ந்து அங்கு மீட்புப்பணிகள் நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில், இமாச்சல பிரதேசம் முழுவதையும் இயற்கை பேரிடர் பாதித்த மாநிலமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    • மத்திய அரசின் இடைக்கால நிவாரணம் விரைவில் கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம்.
    • மாநிலத்தின் உள் கட்டமைப்பை மீண்டும் மேம்படுத்த ஒரு ஆண்டு ஆகும்.

    சிம்லா:

    இமாச்சல பிரதேச முதல்-மந்திரி சுக்விந்தர்சிங் சுகு கூறியதாவது:-

    நான் கங்க்ரா செல்லும் வழியில் இருக்கிறேன். நிலச்சரிவால் அங்கு 650-க்கும் மேற்பட்டோரை வெளியேற்றியுள்ளோம். சுமார் 100 பேர் கங்க்ராவில் இன்னும் சிக்கியுள்ளனர். மீட்பு பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

    இமாச்சல பிரதேசத்தில் பெய்த கனமழையால் சுமார் ரூ.10 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. இமாச்சல பிரதேசத்தில் இதற்கு முன்பு இது போன்ற பேரழிவு ஏற்பட்டது இல்லை.

    மத்திய அரசின் இடைக்கால நிவாரணம் விரைவில் கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம். மாநிலத்தின் உள் கட்டமைப்பை மீண்டும் மேம்படுத்த ஒரு ஆண்டு ஆகும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு சாத்தியமான அனைத்து உதவிகளையும் ஆதரவையும் உறுதி செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவு.
    • சாலைகள், மின்சாரம் மற்றும் தண்ணீர் வசதிகளை சீராக பராமரிக்க வேண்டும் என்றும் முதல்-மந்திரி உத்தரவிட்டுள்ளார்.

    வடகிழக்குப் பருவமழை காரணமாக இமாச்சல பிரதேசத்தில் கனமழை பெய்து வருகிறது. பல்வேறு இடங்களில், மேக வெடிப்பு எனும் வகையில் குறிப்பிட்ட பகுதியில் அளவுக்கு மிஞ்சிய மழை பெய்து வருகிறது. மாநிலம் முழுவதும் கனமழை காரணமாக நூற்றுக்கும் மேற்பட்ட சாலைகள் மூடப்பட்டுள்ளன. தாழ்வான பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

    இந்நிலையில் சோலன் மாவட்டத்தில் மேக வெடிப்பு சம்பவத்தில் 7 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    மேலும், சோலன் மாவட்டத்தில் உள்ள மம்லிக் கிராமத்தில் மேக வெடிப்பிற்கு பிறகு 6 பேர் மீட்கப்பட்டுள்ளதாகவும் 2 வீடுகளும், ஒரு மாட்டு தொழுவமும் அடித்துச் செல்லப்பட்டது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதனிடையே மேக வெடிப்பில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு முதல்-மந்திரி சுக்விந்தர் சிங் இரங்கல் தெரிவித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். மேலும், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு சாத்தியமான அனைத்து உதவிகளையும் ஆதரவையும் உறுதி செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாக கூறியுள்ளார்.

    கனமழையைக் கருத்தில் கொண்டு நிலைமையை உன்னிப்பாகக் கண்காணிக்குமாறு தலைமைச் செயலாளர், உள்துறைச் செயலாளர் மற்றும் அனைத்து டிசிக்களுக்கும் முதல்-மந்திரி உத்தரவிட்டுள்ளார். நிர்வாக ஊழியர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும், சாலைகள், மின்சாரம் மற்றும் தண்ணீர் வசதிகளை சீராக பராமரிக்க வேண்டும் என்றும் முதல்-மந்திரி உத்தரவிட்டுள்ளார்.

    இமாச்சல பிரதேசத்தில் இதுவரை கனமழை தொடர்பாக 257 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 7 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளது.

    • கனமழை எதிரொலியால் இமாச்சல பிரதேசத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.
    • இமாச்சல பிரதேச பல்கலைக்கழகத்தில் நடைபெற இருந்த முதுகலை மற்றும் பி.எட். தேர்வு ஒத்திவைக்கப்படுகிறது.

    சிம்லா:

    வடகிழக்குப் பருவமழை காரணமாக இமாச்சல பிரதேசத்தில் கனமழை பெய்து வருகிறது. பல்வேறு இடங்களில், மேக வெடிப்பு எனும் வகையில் குறிப்பிட்ட பகுதியில் அளவுக்கு மிஞ்சிய மழை பெய்து வருகிறது. மாநிலம் முழுவதும் கனமழை காரணமாக நூற்றுக்கும் மேற்பட்ட சாலைகள் மூடப்பட்டுள்ளன. தாழ்வான பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

    இந்நிலையில், இமாச்சல பிரதேசத்தில் கனமழை காரணமாக ஆகஸ்ட் 14-ம் தேதி (நாளை) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக மாநில பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

    மேலும், இமாச்சல பிரதேச பல்கலைக்கழகத்தில் நாளை நடைபெற இருந்த முதுகலை, பி.எட். தேர்வுகள் ஒத்தி வைக்கப்படுகிறது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கனமழை பெய்ததால் வீடுகளில் வெள்ளம் புகுந்தது
    • இமாச்சல பிரதேசத்தில் கனமழை காரணமாக 231 பேர் உயிரிழந்துள்னர்

    இமாச்சல பிரதேசத்தில கனமழை பெய்து வருகிறது. நேற்றிரவு சிர்மாயுர் மாவட்டத்தில் உள்ள போயன்ட்டா பகுதியில் மேகவெடிப்பு ஏற்பட்டு பேய்மழை பெய்தது. இதனால் மழை வெள்ளம் கரைபுரண்டு ஓடியது.

    மலாகி கிராமத்தில் உள்ள வீடுகளில் வெள்ளம் புகுந்தது. இதில் ஒரு வீடு இடிந்து விழுந்தது. அந்த வீட்டில் வசித்த ஐந்து பேர் இடிபாடுகளில் சிக்கியுள்ளனர். அவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது.

    இமாச்சல பிரதேசத்தில் இன்று முதல் ஞாயிறு வரை கனமழை பெய்யும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது.

    இமாச்சல பிரதேசத்தில் இதுவரை கனமழை தொடர்பான விபத்தில் 231 பேர் உயிரிழந்துள்ளனர். 6731 கோடி ரூபாய் பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளது. இன்னும் 190 சாலைகள் மூடப்பட்டுள்ளது.

    கனமழை காரணமாக ஆறுகள் மற்றும் பள்ளத்தாக்குகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் நிலச்சரிவு, மண்சரிவு போன்ற நிகழ்வுகள் அடிக்கடி நடைபெற்று வருகிறது.

    • இமாச்சல பிரதேச மாநிலத்தில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது.
    • இந்த நிலநடுக்கம் 3.4 ரிக்டர் அளவுகோலில் பதிவானது.

    சிம்லா:

    இமாச்சல பிரதேச மாநிலத்தின் லஹோல் மற்றும் ஸ்பிடி மாவட்டங்களில் நேற்று நள்ளிரவு மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது.

    இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.4 ஆக பதிவாகி இருந்தது என தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நில அதிர்வை அந்த மாவட்ட மக்கள் உணர்ந்தனர்.

    இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்த தகவல் வெளியாகவில்லை.

    • நிதி, சேது பாரதம் யோஜனாவின் கீழ் வழங்கப்படுவதாகவும் அதிகாரப்பூர்வ அறிக்கையின் மூலம் தகவல்.
    • நிலம் சரியும் இடங்களைக் கண்டறிந்து நிரந்தரத் தீர்வு காணுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிக்கு கட்காரி உத்தரவு.

    இமாச்சலப் பிரதேசத்தில் தேசிய நெடுஞ்சாலைகளை இணைக்கும் சேதமடைந்த சாலைகள் மற்றும் பாலங்களை புனரமைக்க ரூ. 300 கோடி ஒதுக்கீடு செய்வதாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி உறுதியளித்துள்ளதாக அம்மாநில பொதுப்பணித் துறை அமைச்சர் விக்ரனாதித்ய சிங் தெரிவித்துள்ளார்.

    இந்த நிதி, சேது பாரதம் யோஜனாவின் கீழ் வழங்கப்படுவதாகவும் அதிகாரப்பூர்வ அறிக்கையின் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    புதுடெல்லியில் சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரியை சிங் சந்தித்து பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தார். அப்போது, தேசிய நெடுஞ்சாலைகளைச் சுற்றி நிலச்சரிவு ஏற்படும் இடங்களைக் கண்டறிந்து நிரந்தரத் தீர்வு காணுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிக்கு கட்காரி உத்தரவிட்டுள்ளதாக சிங் கூறினார்.

    மேலும், சமீபத்தில் பெய்த கனமழையால் சேதமடைந்த பாலங்களை சீரமைக்கவும், மாநில பொதுப்பணித்துறை சாலைகளை தேசிய நெடுஞ்சாலைகளுடன் இணைக்கவும் நிதி வழங்க உரிய நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு கட்கரி உத்தரவிட்டதாக சிங் கூறினார்.

    ×