என் மலர்
அழகுக் குறிப்புகள்
வாரத்திற்கு ஒருமுறையாவது தலைக்கு நல்லெண்ணெய் தேய்த்து குளித்தால் உடல் சூடு குறையும். நல்லெண்ணெயை பயன்படுத்துவதன் மூலம் நம் சருமத்திற்கு கிடைக்கும் பயன்கள் என்னவென்று தெரிந்துகொள்வோம் வாருங்கள்.
நல்லெண்ணெயில் வைட்டமின் ஈ சத்து அதிகம் உள்ளதால் மிகச்சிறந்த ஆன்டி ஆக்சிடென்ட் ஆக செயல்படுகிறது. வாரத்திற்கு ஒருமுறையாவது தலைக்கு நல்லெண்ணெய் தேய்த்து குளித்தால் உடல் சூடு குறையும். தலைமுடி வறட்சி நீங்கும். பொடுகு முற்றிலும் நீங்கும். நல்லெண்ணெய் மிகவும் பிரபலமான பல்வேறு க்ரீம்கள், ஆயின்மென்ட், சோப்புகள், லோஷன் மற்றும் பாடி ஸ்கரப் போன்றவற்றில் பயன்படுத்தப்படுகிறது.நல்லெண்ணெயை பயன்படுத்துவதன் மூலம் நம் சருமத்திற்கு கிடைக்கும் பயன்கள் என்னவென்று தெரிந்துகொள்வோம் வாருங்கள்.
1. நல்லெண்ணெய் சருமத்தில் சுரக்கும் அதிகப்படியான எண்ணெய் பசையைக் கட்டுப்படுத்த உதவுகிறது, முகப்பரு மற்றும் பருக்களால் வரும் தழும்புகளைத் தடுக்கும். அதற்கு தினமும் 1 டீஸ்பூன் நல்லெண்ணெயுடன் 1 டீஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து பஞ்சில் தொட்டு பருக்கள் உள்ள இடத்தில் தடவி ஊற வைத்து கழுவுங்கள். இப்படி தினமும் செய்து வந்தால், பருக்கள் குறைவதோடு, தழும்புகளும் குறையும்.
2. பெரும்பாலானோர் சந்திக்கும் ஒரு சரும பிரச்சனை தான் சரும வறட்சி. இந்த சரும வறட்சியைத் தடுக்க பல்வேறு வழிகள் உள்ளன. அதில் ஒன்று நல்லெண்ணெய். இந்த நல்லெண்ணெயை டோனர் வடிவில் பயன்படுத்தி வந்தால், சருமத்தின் இளமைத்தன்மை தக்க வைக்கப்பட்டு, சருமம் புத்துணர்ச்சியுடன் காணப்படும்.அதற்கு ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் 2 டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய் மற்றும் 1 டேபிள் ஸ்பூன் ரோஸ் வாட்டர் சேர்த்து நன்கு குலுக்கிக் கொள்ள வேண்டும். பின் அதை முகம், கை, கால்களில் ஸ்ப்ரே செய்து கொள்ளுங்கள். இப்படி தினமும் பயன்படுத்தி வருவதால், சருமம் வறட்சி அடைவதைத் தடுக்கலாம்.
3. நல்லெண்ணெய் உதடுகளுக்கு ஒரு நல்ல நிறத்தை வழங்கும். ஒருவர் தினமும் நல்லெண்ணெயை உதடுகளுக்கு பயன்படுத்தி வந்தால், உதடுகள் மென்மையாகவும், பிங்க் நிறத்திலும் இருக்கும். அதற்கு நல்லெண்ணெயை தினமும் இரவில் படுக்கும் முன் உதட்டில் தடவிக் கொள்ளுங்கள். ஆனால் நல்லெண்ணெயைப் பயன்படுத்திய உடனேயே பலன் கிடைக்காது. தினமும் பயன்படுத்தி வந்தால் தான் பலனைக் காண முடியும்.
4. கெமிக்கல் கலந்த மேக்கப் ரிமூவரைப் பயன்படுத்துவதைத் தவிர்த்து, இயற்கை வழியில் மேக்கப்பை நீக்க நினைத்தால், நல்லெண்ணெயைப் பயன்படுத்துங்கள். அதுவும் பஞ்சுருண்டையில் நல்லெண்ணெயை நனைத்து, முகத்தை தினமும் துடைத்து எடுங்கள். இப்படி தினமும் இரவில் படுக்கும் முன் செய்து வந்தால், மேக்கப் முழுமையாக நீங்குவதோடு, சருமமும் வறட்சியடையாமல் இருக்கும்.
5. நல்லெண்ணெயை ரோஸ் வாட்டருடன் சேர்த்து குதிகால் வெடிப்பை சரிசெய்யலாம். அதற்கு நல்லெண்ணெய் மற்றும் ரோஸ் வாட்டரை சரிசம அளவில் எடுத்து கலந்து, தினமும் இரவில் படுக்கும் முன் குதிகாலில் தடவுங்கள். மறுநாள் காலையில் காலை வெதுவெதுப்பான நீரால் கழுவுங்கள். இதனால் விரைவில் குதிகால் வெடிப்பு நீங்கும்.
6. கோடையில் ஒவ்வொருவரும் சந்திக்கும் ஒரு பெரிய பிரச்சனை தான் சருமம் கருமையாவது. இதைத் தடுப்பதற்கு நல்லெண்ணெய் பெரிதும் உதவியாக இருக்கும். அதற்கு 1 டேபிள் ஸ்பூன் கடலை மாவை ஒரு பௌலில் போட்டு, அத்துடன் 1 டீஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் 1 டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய் சேர்த்து கலந்து, கருமையான பகுதிகளில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான நீரால் கழுவ வேண்டும்.
7. உங்கள் தலைமுடி வறட்சியுடனும், பாதிக்கப்பட்டும் காணப்படுகிறதா? அப்படியானால் உங்கள் தலைமுடியை நல்லெண்ணெய் பயன்படுத்தி பராமரியுங்கள். அதுவும் உங்கள் தலைமுடிக்கு தேவையான அளவு நல்லெண்ணெயை தலையில் தடவி, நன்கு மசாஜ் செய்து, 30 நிமிடம் நன்கு ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரால் கழுவுங்கள். இப்படி வாரத்திற்கு ஒருமுறை தலைமுடிக்கு நல்லெண்ணெய் மசாஜ் செய்து வந்தால், தலைமுடி வறட்சியின்றி மென்மையாக இருக்கும்
8. உங்கள் கண்கள் சோர்வடைந்து, கருவளையங்களுடன் காணப்படுகிறதா? இதை நல்லெண்ணெய் கொண்டு சரிசெய்யலாம். அதற்கு நல்லெண்ணெயை ப்ரிட்ஜில் வைத்து குளிர செய்து, பஞ்சுருண்டைப் பயன்படுத்தி, கண்களின் மீது தடவ வேண்டும். இப்படி செய்தால், வீங்கிய கண்களின் வீக்கம் குறைவதோடு, கருவளையங்களும் நீங்கிவிடும்.
1. நல்லெண்ணெய் சருமத்தில் சுரக்கும் அதிகப்படியான எண்ணெய் பசையைக் கட்டுப்படுத்த உதவுகிறது, முகப்பரு மற்றும் பருக்களால் வரும் தழும்புகளைத் தடுக்கும். அதற்கு தினமும் 1 டீஸ்பூன் நல்லெண்ணெயுடன் 1 டீஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து பஞ்சில் தொட்டு பருக்கள் உள்ள இடத்தில் தடவி ஊற வைத்து கழுவுங்கள். இப்படி தினமும் செய்து வந்தால், பருக்கள் குறைவதோடு, தழும்புகளும் குறையும்.
2. பெரும்பாலானோர் சந்திக்கும் ஒரு சரும பிரச்சனை தான் சரும வறட்சி. இந்த சரும வறட்சியைத் தடுக்க பல்வேறு வழிகள் உள்ளன. அதில் ஒன்று நல்லெண்ணெய். இந்த நல்லெண்ணெயை டோனர் வடிவில் பயன்படுத்தி வந்தால், சருமத்தின் இளமைத்தன்மை தக்க வைக்கப்பட்டு, சருமம் புத்துணர்ச்சியுடன் காணப்படும்.அதற்கு ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் 2 டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய் மற்றும் 1 டேபிள் ஸ்பூன் ரோஸ் வாட்டர் சேர்த்து நன்கு குலுக்கிக் கொள்ள வேண்டும். பின் அதை முகம், கை, கால்களில் ஸ்ப்ரே செய்து கொள்ளுங்கள். இப்படி தினமும் பயன்படுத்தி வருவதால், சருமம் வறட்சி அடைவதைத் தடுக்கலாம்.
3. நல்லெண்ணெய் உதடுகளுக்கு ஒரு நல்ல நிறத்தை வழங்கும். ஒருவர் தினமும் நல்லெண்ணெயை உதடுகளுக்கு பயன்படுத்தி வந்தால், உதடுகள் மென்மையாகவும், பிங்க் நிறத்திலும் இருக்கும். அதற்கு நல்லெண்ணெயை தினமும் இரவில் படுக்கும் முன் உதட்டில் தடவிக் கொள்ளுங்கள். ஆனால் நல்லெண்ணெயைப் பயன்படுத்திய உடனேயே பலன் கிடைக்காது. தினமும் பயன்படுத்தி வந்தால் தான் பலனைக் காண முடியும்.
4. கெமிக்கல் கலந்த மேக்கப் ரிமூவரைப் பயன்படுத்துவதைத் தவிர்த்து, இயற்கை வழியில் மேக்கப்பை நீக்க நினைத்தால், நல்லெண்ணெயைப் பயன்படுத்துங்கள். அதுவும் பஞ்சுருண்டையில் நல்லெண்ணெயை நனைத்து, முகத்தை தினமும் துடைத்து எடுங்கள். இப்படி தினமும் இரவில் படுக்கும் முன் செய்து வந்தால், மேக்கப் முழுமையாக நீங்குவதோடு, சருமமும் வறட்சியடையாமல் இருக்கும்.
5. நல்லெண்ணெயை ரோஸ் வாட்டருடன் சேர்த்து குதிகால் வெடிப்பை சரிசெய்யலாம். அதற்கு நல்லெண்ணெய் மற்றும் ரோஸ் வாட்டரை சரிசம அளவில் எடுத்து கலந்து, தினமும் இரவில் படுக்கும் முன் குதிகாலில் தடவுங்கள். மறுநாள் காலையில் காலை வெதுவெதுப்பான நீரால் கழுவுங்கள். இதனால் விரைவில் குதிகால் வெடிப்பு நீங்கும்.
6. கோடையில் ஒவ்வொருவரும் சந்திக்கும் ஒரு பெரிய பிரச்சனை தான் சருமம் கருமையாவது. இதைத் தடுப்பதற்கு நல்லெண்ணெய் பெரிதும் உதவியாக இருக்கும். அதற்கு 1 டேபிள் ஸ்பூன் கடலை மாவை ஒரு பௌலில் போட்டு, அத்துடன் 1 டீஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் 1 டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய் சேர்த்து கலந்து, கருமையான பகுதிகளில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான நீரால் கழுவ வேண்டும்.
7. உங்கள் தலைமுடி வறட்சியுடனும், பாதிக்கப்பட்டும் காணப்படுகிறதா? அப்படியானால் உங்கள் தலைமுடியை நல்லெண்ணெய் பயன்படுத்தி பராமரியுங்கள். அதுவும் உங்கள் தலைமுடிக்கு தேவையான அளவு நல்லெண்ணெயை தலையில் தடவி, நன்கு மசாஜ் செய்து, 30 நிமிடம் நன்கு ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரால் கழுவுங்கள். இப்படி வாரத்திற்கு ஒருமுறை தலைமுடிக்கு நல்லெண்ணெய் மசாஜ் செய்து வந்தால், தலைமுடி வறட்சியின்றி மென்மையாக இருக்கும்
8. உங்கள் கண்கள் சோர்வடைந்து, கருவளையங்களுடன் காணப்படுகிறதா? இதை நல்லெண்ணெய் கொண்டு சரிசெய்யலாம். அதற்கு நல்லெண்ணெயை ப்ரிட்ஜில் வைத்து குளிர செய்து, பஞ்சுருண்டைப் பயன்படுத்தி, கண்களின் மீது தடவ வேண்டும். இப்படி செய்தால், வீங்கிய கண்களின் வீக்கம் குறைவதோடு, கருவளையங்களும் நீங்கிவிடும்.
முகப்பருக்கள் வந்தாலே முகத்தின் அழகு பொலிவிழந்து போய்விடும். முக அழகை கெடுக்கும் முகப்பரு தழும்புகளை எளிய வீட்டு வைத்தியங்கள் கொண்டே போக்கிவிடலாம்.
முகப்பருக்கள் வந்தாலே முகத்தின் அழகு பொலிவிழந்து போய்விடும். சிலருக்கு பருக்கள் இருந்த இடங்களில் தழும்புகள், புள்ளிகள் மறையாமல் இருக்கும். சில சமயங்களில் வலி, வேதனைகளை ஏற்படுத்தும். முக அழகை கெடுக்கும் முகப்பரு தழும்புகளை எளிய வீட்டு வைத்தியங்கள் கொண்டே போக்கிவிடலாம்.
* எலுமிச்சை சாறை பஞ்சுவில் ஒற்றி தழும்பு இருக்கும் இடத்தில் தடவிவிட்டு சிறிது நேரம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவி வரலாம். மேலும் எலுமிச்சை சாறுடன் சிறிதளவு பால், பாதாம் எண்ணெய், தேன் கலந்து குழைத்து முகப்பரு தழும்புகள் இருக்கும் இடத்தில் தினமும் தடவி வந்தால் ஒரு வாரத்தில் நல்ல மாற்றத்தை காணலாம்.
* வெந்தயத்தையும் முகப்பரு தழும்பை போக்க உபயோகிக்கலாம். சிறிதளவு வெந்தயத்தை நீரில் போட்டு கொதிக்கவைத்து, அந்த நீரை பஞ்சுவில் முக்கி தழும்புகள் இருக்கும் இடத்தில் தடவி வர வேண்டும். தினமும் இவ்வாறு செய்து வந்தால் தழும்புகள் விரைவில் மறைந்துவிடும்.
* சந்தனமும் தழும்புகளை போக்கும் தன்மை கொண்டது. சந்தனக்கட்டையை இரவில் நீரில் ஊறவைத்துவிட்டு காலையில் நன்றாக உரசி, பஞ்சுவில் முக்கி தழும்புகள் இருக்கும் இடத்தில் தடவ வேண்டும். தினமும் இருமுறை செய்து வந்தால் ஒருவாரத்தில் தழும்புகள் மறைய தொடங்கிவிடும்.
* சந்தன கட்டையில் ரோஸ் வாட்டர் ஊற்றி தேய்த்து அந்த விழுதை இரவில் தூங்க செல்லும் முன்பு தழும்புகள் இருக்கும் இடத்தில் தடவிவிட்டு காலையில் எழுந்ததும் முகத்தை கழுவிவிடலாம். தினமும் இவ்வாறு செய்துவந்தால் தழும்புகள் மறைந்துவிடும்.
* ஆப்பிள் சிடேர் வினிகரையும் உபயோகிக்கலாம். சிறிதளவு ஆப்பிள் சிடேர் வினிகருடன் அதே அளவு நீர் கலந்து பஞ்சுவில் முக்கி தழும்புகளில் தடவி வரலாம்.
* கற்றாழை ஜெல்லையும் தழும்புகள் இருக்கும் இடத்தில் தடவிவிட்டு அரைமணி நேரம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவிவிடலாம். தொடர்ந்து கற்றாழை ஜெல்லை பயன்படுத்தி வந்தால் தழும்புகள் விரைவாகவே மறைந்துவிடும்.
* எலுமிச்சை சாறை பஞ்சுவில் ஒற்றி தழும்பு இருக்கும் இடத்தில் தடவிவிட்டு சிறிது நேரம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவி வரலாம். மேலும் எலுமிச்சை சாறுடன் சிறிதளவு பால், பாதாம் எண்ணெய், தேன் கலந்து குழைத்து முகப்பரு தழும்புகள் இருக்கும் இடத்தில் தினமும் தடவி வந்தால் ஒரு வாரத்தில் நல்ல மாற்றத்தை காணலாம்.
* வெந்தயத்தையும் முகப்பரு தழும்பை போக்க உபயோகிக்கலாம். சிறிதளவு வெந்தயத்தை நீரில் போட்டு கொதிக்கவைத்து, அந்த நீரை பஞ்சுவில் முக்கி தழும்புகள் இருக்கும் இடத்தில் தடவி வர வேண்டும். தினமும் இவ்வாறு செய்து வந்தால் தழும்புகள் விரைவில் மறைந்துவிடும்.
* சந்தனமும் தழும்புகளை போக்கும் தன்மை கொண்டது. சந்தனக்கட்டையை இரவில் நீரில் ஊறவைத்துவிட்டு காலையில் நன்றாக உரசி, பஞ்சுவில் முக்கி தழும்புகள் இருக்கும் இடத்தில் தடவ வேண்டும். தினமும் இருமுறை செய்து வந்தால் ஒருவாரத்தில் தழும்புகள் மறைய தொடங்கிவிடும்.
* சந்தன கட்டையில் ரோஸ் வாட்டர் ஊற்றி தேய்த்து அந்த விழுதை இரவில் தூங்க செல்லும் முன்பு தழும்புகள் இருக்கும் இடத்தில் தடவிவிட்டு காலையில் எழுந்ததும் முகத்தை கழுவிவிடலாம். தினமும் இவ்வாறு செய்துவந்தால் தழும்புகள் மறைந்துவிடும்.
* ஆப்பிள் சிடேர் வினிகரையும் உபயோகிக்கலாம். சிறிதளவு ஆப்பிள் சிடேர் வினிகருடன் அதே அளவு நீர் கலந்து பஞ்சுவில் முக்கி தழும்புகளில் தடவி வரலாம்.
* கற்றாழை ஜெல்லையும் தழும்புகள் இருக்கும் இடத்தில் தடவிவிட்டு அரைமணி நேரம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவிவிடலாம். தொடர்ந்து கற்றாழை ஜெல்லை பயன்படுத்தி வந்தால் தழும்புகள் விரைவாகவே மறைந்துவிடும்.
மிதமான சுடுநீரில் குளிப்பதன் மூலம் ஏராளமான நன்மைகளை பெறலாம் என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.
தினமும் குளிப்பது உடலில் உள்ள அழுக்கை நீக்குவதோடு நோய்கள் நெருங்காமல் பாதுகாக்கவும் செய்யும். பெரும்பாலானோர் குளிர்ந்த நீரில்தான் குளிப்பார்கள். குளிர்காலங்களில் வெந்நீரை பயன்படுத்துவார்கள். அதேவேளையில் மிதமான சுடுநீரில் குளிப்பதன் மூலம் ஏராளமான நன்மைகளை பெறலாம் என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.
* மிதமான சுடுநீரில் சற்று அதிக நேரம் குளிப்பது 30 நிமிடங்கள் நடைப்பயிற்சி மேற்கொள்ளும்போது எரிக்கப்படும் கலோரி களுக்கு சமமானது. சுடு நீரில் குளிக்கும்போது இதயம் வேகமாக இயங்கும். அதற்கேற்ப கலோரிகளும் வேகமாக எரியும். உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் இந்த வழக்கத்தை தொடர்வது நல்லது.
* சுடு நீரில் குளிப்பது மாரடைப்பு ஏற்படுவதற்கான அபாயத்தை குறைக்கும். சுடு நீரில் குளிக்கும்போது உடல் நெகிழ்ந்து மனமும் அமைதியாகிவிடும். அதனால் ரத்த ஓட்டம் சிறப்பாக இருக்கும். அதன் காரணமாக இதய செயலிழப்பு ஏற்படுவதற்கான அபாயம் குறையும்.
* ரத்த ஓட்டம் சீராகும்போது அது நரம்பு மண்டல செயல்பாடுகளை மேம்படுத்தும். சுடு நீரில் குளிக்கும்போது தசைகளில் ஏற்படும் வலிகள் நீங்கிவிடும். தசைகள் இறுக்கம் குறைந்து நெகிழும். குளிக்கும்போது கை, கால்களை நீட்டி அசைப்பது மூட்டுகள், எலும்புகளில் ஏற்படும் வலிகளை போக்கும்.
* கோபமாக இருந்தாலோ, ஏதாவதொரு காரணத்தால் ரத்த அழுத்தம் அதிகரித்திருந்தாலோ வெதுவெதுப்பான நீரில் குளிப்பது நல்லது. அது ரத்த அழுத்தத்தை சீராக்குவதோடு மனதையும் இலகுவாக்கும். இரவில் நல்ல தூக்கத்தை வரவழைக்கும்.
* நாள்பட்ட நோய் பாதிப்புக்கு ஆளானவர்கள், மன அழுத்தத்தால் அவதிப்படுபவர்கள் வெதுவெதுப்பான நீரில் குளிப்பது இதமளிக்கும்.
* மிதமான சுடுநீரில் சற்று அதிக நேரம் குளிப்பது 30 நிமிடங்கள் நடைப்பயிற்சி மேற்கொள்ளும்போது எரிக்கப்படும் கலோரி களுக்கு சமமானது. சுடு நீரில் குளிக்கும்போது இதயம் வேகமாக இயங்கும். அதற்கேற்ப கலோரிகளும் வேகமாக எரியும். உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் இந்த வழக்கத்தை தொடர்வது நல்லது.
* சுடு நீரில் குளிப்பது மாரடைப்பு ஏற்படுவதற்கான அபாயத்தை குறைக்கும். சுடு நீரில் குளிக்கும்போது உடல் நெகிழ்ந்து மனமும் அமைதியாகிவிடும். அதனால் ரத்த ஓட்டம் சிறப்பாக இருக்கும். அதன் காரணமாக இதய செயலிழப்பு ஏற்படுவதற்கான அபாயம் குறையும்.
* ரத்த ஓட்டம் சீராகும்போது அது நரம்பு மண்டல செயல்பாடுகளை மேம்படுத்தும். சுடு நீரில் குளிக்கும்போது தசைகளில் ஏற்படும் வலிகள் நீங்கிவிடும். தசைகள் இறுக்கம் குறைந்து நெகிழும். குளிக்கும்போது கை, கால்களை நீட்டி அசைப்பது மூட்டுகள், எலும்புகளில் ஏற்படும் வலிகளை போக்கும்.
* கோபமாக இருந்தாலோ, ஏதாவதொரு காரணத்தால் ரத்த அழுத்தம் அதிகரித்திருந்தாலோ வெதுவெதுப்பான நீரில் குளிப்பது நல்லது. அது ரத்த அழுத்தத்தை சீராக்குவதோடு மனதையும் இலகுவாக்கும். இரவில் நல்ல தூக்கத்தை வரவழைக்கும்.
* நாள்பட்ட நோய் பாதிப்புக்கு ஆளானவர்கள், மன அழுத்தத்தால் அவதிப்படுபவர்கள் வெதுவெதுப்பான நீரில் குளிப்பது இதமளிக்கும்.
சிலர் விரல் அழகை கெடுக்கும் நக பாலீஷை நீக்குவதற்கு மெனக்கெடுவார்கள். சில எளிமையான வழிமுறைகளை பயன்படுத்தியே நக பாலீஷை சில நிமிடங்களில் நீக்கிவிடலாம்.
விரல் நகங்களில் அழகுக்காக பூசப்படும் நக பாலீஷ் சில நாட்களில் பொலிவை இழக்க தொடங்கிவிடும். நகங்களில் இருந்து உதிர்ந்து விழுந்துகொண்டிருக்கும். அதனை பலரும் கண்டுகொள்ள மாட்டார்கள். ஆனால் அவசரமாக வெளியே செல்ல வேண்டியிருந்தால் விரல் அழகை கெடுக்கும் நக பாலீஷை நீக்குவதற்கு மெனக்கெடுவார்கள். சில எளிமையான வழிமுறைகளை பயன்படுத்தியே நக பாலீஷை சில நிமிடங்களில் நீக்கிவிடலாம்.
பற்பசை: நக பாலீஷை நீக்குவதற்கு பற்பசையை கூட பயன்படுத்தலாம். பொதுவாக பற்பசையில் எத்தில் அசிடேட் கலந்திருக்கும். இது நக பாலீஷை நீக்குவதற்கு பயன்படுத்தப்படும் பொருட்களில் சேர்க்கப்படும் மூலப்பொருளாகும். பல் துலக்கப்பயன்படுத்தப்பட்ட பழைய பிரஷில் சிறிதளவு பற்பசையை தடவி நகங்களில் படர்ந்திருக்கும் நக பாலீஷ் மீது தேய்க்க வேண்டும். இரண்டு, மூன்று முறை நன்றாக அழுத்தி தேய்த்தால் நக பாலீஷ் உதிர்ந்து வந்துவிடும். நகமும் பிரகாசத்துடன் காட்சியளிக்கும்.
வாசனை திரவியம்: நக பாலீஷை நீக்குவதற்கு வாசனை திரவியத்தையும் உபயோகிக்கலாம். டிஸ்யூ பேப்பரில் சில துளிகள் வாசனை திரவியங்களை தெளித்துவிட்டு அது ஆவியாகும் முன்பு நகங்களில் நன்றாக அழுத்தி தேய்க்க வேண் டும். ஓரிரு முறை அவ்வாறு தேய்த்தால் நக பாலீஷ் நீங்கிவிடும்.
ஹேர் ஸ்பிரே: பெரும் பாலான ஸ்பிரேக்களில் ஆல்கஹால் சேர்க்கப்பட்டிருக்கிறது. அது நக பாலீஷை நீர்த்துபோக செய்ய உதவும். நகங்களில் சிறிதளவு ஸ்பிரே தெளித்து காட்டன் பஞ்சு அல்லது டிஸ்யூ பேப்பரை கொண்டு அழுத்தி தேய்க்க வேண் டும். நகங்களில் தெளிக்கும் ஸ்பிரே ஆவி ஆவதற்கு முன்பு ஓரிருமுறை தேய்த்துவிட்டால் போதும். நக பாலீஷ் நீங்கிவிடும்.
சானிடைசர்: கொரோனா வைரஸ் தொற்றுவிடம் இருந்து தற்காத்துக்கொள்வதற்கு கைகளில் உபயோகப்படுத்தும் சானிடைசரையும் பயன்படுத்தலாம். காட்டன் பஞ்சுவில் சிறிதளவு சானிடைசரை ஒற்றி எடுத்து நக பாலீஷ் மீது அழுத்தி தேய்க்க வேண்டும். இரண்டு, மூன்று முறை அவ்வாறு செய்தால் நக பாலீஷ் நீங்கிவிடும்.
பற்பசை: நக பாலீஷை நீக்குவதற்கு பற்பசையை கூட பயன்படுத்தலாம். பொதுவாக பற்பசையில் எத்தில் அசிடேட் கலந்திருக்கும். இது நக பாலீஷை நீக்குவதற்கு பயன்படுத்தப்படும் பொருட்களில் சேர்க்கப்படும் மூலப்பொருளாகும். பல் துலக்கப்பயன்படுத்தப்பட்ட பழைய பிரஷில் சிறிதளவு பற்பசையை தடவி நகங்களில் படர்ந்திருக்கும் நக பாலீஷ் மீது தேய்க்க வேண்டும். இரண்டு, மூன்று முறை நன்றாக அழுத்தி தேய்த்தால் நக பாலீஷ் உதிர்ந்து வந்துவிடும். நகமும் பிரகாசத்துடன் காட்சியளிக்கும்.
வாசனை திரவியம்: நக பாலீஷை நீக்குவதற்கு வாசனை திரவியத்தையும் உபயோகிக்கலாம். டிஸ்யூ பேப்பரில் சில துளிகள் வாசனை திரவியங்களை தெளித்துவிட்டு அது ஆவியாகும் முன்பு நகங்களில் நன்றாக அழுத்தி தேய்க்க வேண் டும். ஓரிரு முறை அவ்வாறு தேய்த்தால் நக பாலீஷ் நீங்கிவிடும்.
ஹேர் ஸ்பிரே: பெரும் பாலான ஸ்பிரேக்களில் ஆல்கஹால் சேர்க்கப்பட்டிருக்கிறது. அது நக பாலீஷை நீர்த்துபோக செய்ய உதவும். நகங்களில் சிறிதளவு ஸ்பிரே தெளித்து காட்டன் பஞ்சு அல்லது டிஸ்யூ பேப்பரை கொண்டு அழுத்தி தேய்க்க வேண் டும். நகங்களில் தெளிக்கும் ஸ்பிரே ஆவி ஆவதற்கு முன்பு ஓரிருமுறை தேய்த்துவிட்டால் போதும். நக பாலீஷ் நீங்கிவிடும்.
சானிடைசர்: கொரோனா வைரஸ் தொற்றுவிடம் இருந்து தற்காத்துக்கொள்வதற்கு கைகளில் உபயோகப்படுத்தும் சானிடைசரையும் பயன்படுத்தலாம். காட்டன் பஞ்சுவில் சிறிதளவு சானிடைசரை ஒற்றி எடுத்து நக பாலீஷ் மீது அழுத்தி தேய்க்க வேண்டும். இரண்டு, மூன்று முறை அவ்வாறு செய்தால் நக பாலீஷ் நீங்கிவிடும்.
தங்க நகைகளை போல் வைர நகைகளை அலட்சியமாக வைத்துவிட முடியாது. அதற்கென்று தனி பராமரிப்பு முறை இருக்கிறது. வைர நகைகளை தினசரி உபயோகத்துக்கு பயன்படுத்தக் கூடாது.
ஒரு காலத்தில் தங்க நகை கூட நடுத்தர மக்களுக்கு எட்டாத நிலையில் இருந்தது. இன்று பலரும் வைர நகைகளை தங்கள் வீடுகளில் வைத்திருக்கிறார்கள். தங்க நகைகளை போல் வைர நகைகளை அலட்சியமாக வைத்துவிட முடியாது. அதற்கென்று தனி பராமரிப்பு முறை இருக்கிறது. வைர நகைகளை தினசரி உபயோகத்துக்கு பயன்படுத்தக் கூடாது. வீட்டில் அதை போட்டுக்கொண்டு சமைப்பது, துவைப்பது, சுத்தம் செய்வது, பாத்திரம் கழுவுவது போன்றவை செய்யக்கூடாது.
வீட்டில் குளிக்கும் போதும் சரி, சுற்றுலா செல்லும் போது, கடல் மற்றும் நீச்சல் குளங்களில் குளிக்கும் போதும் கண்டிப்பாக வைரம் அணியக்கூடாது. நீச்சல் குளத்தில் உள்ள குளோரின் தண்ணீரும், கடலில் உள்ள உப்புநீரும் வைரத்துக்கு ஆகாதது.
எல்லாவிதமான அலங்காரங்களும் அழகுசாதனங்களும் பயன்படுத்தப்பட்ட பின் கடைசியாகத்தான் வைர நகைகளை அணிந்து கொள்ளவேண்டும். அழகு சாதனங்களில் இருக்கும் ரசாயனங்கள் வைரத்தின் மீது பட்டால் வைரம் கருத்துவிடு்ம். இப்படி கருத்த நகைகளை சுத்தம் செய்ய சாக் பவுடரை பஞ்சால் தேய்த்து அழுத்தி துடைத்தெடுத்தால் வைரம் பழைய பளபளப்பு பெற்றுவிடும்.
விழாக்கள் முடிந்து வீடு வந்ததும் வைர நகைகளை கழற்றி வைத்துவிட வேண்டும். அதற்கு முன் கழற்றிய நகையை ஒரு பாத்திரத்தில் நல்ல தண்ணீரை வைத்து அதற்குள் நகையை மூழ்குமாறு அமிழ்த்தி வைத்துவிட வேண்டும். சில நிமிடங்கள் கழித்து நகையை வெளியே எடுத்து மென்மையான பருத்தி துணியால் துடைத்து, காய்ந்த பின் உள்ளே வைக்க வேண்டும்.
வைர நகைகளை சுத்தம் செய்ய இளம் சூடான நீரில் முக்கி எடுத்து பழைய பல் துலக்கும் பிரஷ்சால், சோப்பை தொட்டு லேசாக தேய்த்து, பிறகு தண்ணீரில் சுத்தமாக அலசி துடைத்து வைக்கலாம். வைரக்கற்களில் நேரடியாக கை படக்கூடாது. தங்கம் இருக்கும் பகுதியை பிடித்துக்கொண்டே சுத்தம் செய்யவேண்டும். வைர நகைகளை குளியலறையிலோ, தோட்டத்திலோ வைத்து சுத்தம் செய்யக்கூடாது. வைரக்கல் ஏதாவது உதிர்ந்து விழுந்தால் கண்டுபிடிக்க முடியாது. வீட்டினுள் ஏதாவது ஒரு பாத்திரத்தில் வைர நகைகளை வைத்து சுத்தம் செய்ய வேண்டும். சுத்தம் செய்த பிறகு கற்கள் எல்லாம் சரியாக இருக்கிறதா என்று பாருங்கள். அதன்பின்னே கழுவிய தண்ணீரை கீழே ஊற்றுங்கள்.
வங்கி லாக்கரில் வைர நகைகளை சும்மா வைத்திருந்தால் கூட நாளடைவில் அது கருத்துவிடும். அதற்காக பிரத்யேகமாக செய்யப்பட்ட பெட்டிகளில் வைத்து, அதிலும் மென்மையான வெல்வெட் துணியால் சுற்றி வைப்பதுதான் கருகாமல் இருக்க வழி. தங்க நகைகளுடன் சேர்த்து வைர நகைகளை வைக்கக்கூடாது. தனித்தனி அறை கொண்ட ஜிப் வைத்த நகைப்பை கிடைக்கிறது. அதில் வைத்துக்கொள்ளலாம்.
வீட்டில் குளிக்கும் போதும் சரி, சுற்றுலா செல்லும் போது, கடல் மற்றும் நீச்சல் குளங்களில் குளிக்கும் போதும் கண்டிப்பாக வைரம் அணியக்கூடாது. நீச்சல் குளத்தில் உள்ள குளோரின் தண்ணீரும், கடலில் உள்ள உப்புநீரும் வைரத்துக்கு ஆகாதது.
எல்லாவிதமான அலங்காரங்களும் அழகுசாதனங்களும் பயன்படுத்தப்பட்ட பின் கடைசியாகத்தான் வைர நகைகளை அணிந்து கொள்ளவேண்டும். அழகு சாதனங்களில் இருக்கும் ரசாயனங்கள் வைரத்தின் மீது பட்டால் வைரம் கருத்துவிடு்ம். இப்படி கருத்த நகைகளை சுத்தம் செய்ய சாக் பவுடரை பஞ்சால் தேய்த்து அழுத்தி துடைத்தெடுத்தால் வைரம் பழைய பளபளப்பு பெற்றுவிடும்.
விழாக்கள் முடிந்து வீடு வந்ததும் வைர நகைகளை கழற்றி வைத்துவிட வேண்டும். அதற்கு முன் கழற்றிய நகையை ஒரு பாத்திரத்தில் நல்ல தண்ணீரை வைத்து அதற்குள் நகையை மூழ்குமாறு அமிழ்த்தி வைத்துவிட வேண்டும். சில நிமிடங்கள் கழித்து நகையை வெளியே எடுத்து மென்மையான பருத்தி துணியால் துடைத்து, காய்ந்த பின் உள்ளே வைக்க வேண்டும்.
வைர நகைகளை சுத்தம் செய்ய இளம் சூடான நீரில் முக்கி எடுத்து பழைய பல் துலக்கும் பிரஷ்சால், சோப்பை தொட்டு லேசாக தேய்த்து, பிறகு தண்ணீரில் சுத்தமாக அலசி துடைத்து வைக்கலாம். வைரக்கற்களில் நேரடியாக கை படக்கூடாது. தங்கம் இருக்கும் பகுதியை பிடித்துக்கொண்டே சுத்தம் செய்யவேண்டும். வைர நகைகளை குளியலறையிலோ, தோட்டத்திலோ வைத்து சுத்தம் செய்யக்கூடாது. வைரக்கல் ஏதாவது உதிர்ந்து விழுந்தால் கண்டுபிடிக்க முடியாது. வீட்டினுள் ஏதாவது ஒரு பாத்திரத்தில் வைர நகைகளை வைத்து சுத்தம் செய்ய வேண்டும். சுத்தம் செய்த பிறகு கற்கள் எல்லாம் சரியாக இருக்கிறதா என்று பாருங்கள். அதன்பின்னே கழுவிய தண்ணீரை கீழே ஊற்றுங்கள்.
வங்கி லாக்கரில் வைர நகைகளை சும்மா வைத்திருந்தால் கூட நாளடைவில் அது கருத்துவிடும். அதற்காக பிரத்யேகமாக செய்யப்பட்ட பெட்டிகளில் வைத்து, அதிலும் மென்மையான வெல்வெட் துணியால் சுற்றி வைப்பதுதான் கருகாமல் இருக்க வழி. தங்க நகைகளுடன் சேர்த்து வைர நகைகளை வைக்கக்கூடாது. தனித்தனி அறை கொண்ட ஜிப் வைத்த நகைப்பை கிடைக்கிறது. அதில் வைத்துக்கொள்ளலாம்.
பெண்களுக்கும் சரி, ஆண்களுக்கும் சரி இரு தொடைகளும் சந்திக்கும் இடம் மிகவும் அடர்ந்த கருப்பாக இருக்கும். இயற்கையான வழிகளில் உங்கள் சருமத்தைப் பளபளப்பாக்குவது எப்படி என்று பார்ப்போம்.
பெண்களுக்கும் சரி, ஆண்களுக்கும் சரி இரு தொடைகளும் சந்திக்கும் இடம் மிகவும் அடர்ந்த கருப்பாக இருக்கும். இந்தப் பிரச்சனைக்கு விரைவில் தீர்வு காண இயற்கையான வழிகளில் எளிதிலும் கிடைக்கும் எலுமிச்சை, தேன், மஞ்சள், கற்றாழை, ஆலிவ் எண்ணெய் உள்ளிட்ட பொருட்களை உபயோகித்து உங்கள் சருமத்தைப் பளபளப்பாக்குவது எப்படி என்று பார்ப்போம்.
நம் சருமங்களில் உள்ள இறந்து போன செல்களை அகற்றுவதில் எலுமிச்சைக்கு முக்கியப் பங்கு உண்டு. எலுமிச்சைச் சாற்றை நேரடியாக சருமத்தில் தேய்க்க வேண்டாம். அதில் அமிலத் தன்மை இருப்பதால், அதைத் தேய்க்கும் போது எரிச்சல் ஏற்படலாம். எனவே, எலுமிச்சைச் சாற்றை நீரில் கலந்து, அந்தக் கரைசலை கருப்பான தொடைப் பகுதிகளில் தடவி 5 நிமிடங்கள் வரை மசாஜ் செய்யவும். பின்னர் அந்தப் பகுதியை நீரால் நன்றாகக் கழுவ வேண்டும்.
கற்றாழை பசையைக் கடிகாரச் சுற்றிலும் எதிர்-கடிகாரச் சுற்றிலுமாக 5 நிமிடங்களுக்கு மசாஜ் தேய்த்து, நன்றாகக் காய விட வேண்டும். காய்ந்து கொண்டிருக்கும் போது தான் அந்தப் பசை தன்னுடைய மேஜிக் வேலையை செய்து கொண்டிருக்கும். பின்னர் மிதமான சுடு நீரில் கழுவி அந்தப் பசையை நீக்க வேண்டும். இதைத் தொடர்ந்து சில நாட்கள் செய்து வந்தால் மேஜிக்கிற்கான நல்லதொரு ரிசல்ட் கிடைக்கும்.
நம் சருமத்திற்குப் பளபளப்பைக் கொடுப்பதில் தக்காளிக்கு நிகர் தக்காளி தான்! இதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் நம் சருமத்தில் உள்ள அழுக்குகளையும், இறந்த செல்களையும் எண்ணெய்களையும் முற்றிலுமாக நீக்க வல்லது. தக்காளியை பேஸ்ட் செய்து கொண்டு, கருப்பான தொடைகளில் 5 நிமிடங்கள் வரை நன்றாகத் தேய்க்கவும். பின்னர் 20 நிமிடங்கள் அப்படியே விட்டு விட வேண்டும். கருப்பான தொடைகள் நிச்சயம் பளபளப்பாக மாறும்.
சிறிது சிறிதாக வெட்டப்பட்ட வெள்ளரிக்காய் துண்டுகளை கருந்தொடைகள் மீது தினமும் 10 நிமிடங்கள் வரை நன்கு தேய்க்க வேண்டும். வெள்ளரியில் உள்ள ஈரத் தன்மை காரணமாக கருந்தொடைகள் வெளுப்பாகும், சருமமும் பளபளப்பாகும். கொஞ்சம் எலுமிச்சைத் துளிகளையும் சேர்த்துத் தேய்த்தால் இன்னும் நல்ல ரிசல்ட் கிடைக்கும்.
சருமத்தில் உள்ள அழுக்குகளைப் போக்கிச் சுத்தமாக்குவதில் பப்பாளிக்கு முக்கியப் பங்கு உள்ளது. பப்பாளி பேஸ்ட்டை தினமும் கருமையான தொடைகளில் ஒரு பிரஷ்ஷின் உதவியுடன் மசாஜ் செய்து வந்தால், கருப்பான அழுக்குகள் நீங்கி தொடையோரங்கள் பளபளக்கும்.
தொடைகளில் 5 நிமிடங்களுக்கு தேனை நன்றாகத் தடவி, 20 நிமிடங்கள் வரை அப்படியே விட்டு விட வேண்டும். தேனில் உள்ள ஈரப்பதம் உங்கள் கருந்தொடைகளை குழந்தைகளின் மென்மையான சருமம் போல் மாற்றும். இதைத் தொடர்ந்து ஒரு வாரம் செய்தால் பளபள ரிசல்ட் கிடைக்கும்.
நம் சருமங்களில் உள்ள இறந்து போன செல்களை அகற்றுவதில் எலுமிச்சைக்கு முக்கியப் பங்கு உண்டு. எலுமிச்சைச் சாற்றை நேரடியாக சருமத்தில் தேய்க்க வேண்டாம். அதில் அமிலத் தன்மை இருப்பதால், அதைத் தேய்க்கும் போது எரிச்சல் ஏற்படலாம். எனவே, எலுமிச்சைச் சாற்றை நீரில் கலந்து, அந்தக் கரைசலை கருப்பான தொடைப் பகுதிகளில் தடவி 5 நிமிடங்கள் வரை மசாஜ் செய்யவும். பின்னர் அந்தப் பகுதியை நீரால் நன்றாகக் கழுவ வேண்டும்.
கற்றாழை பசையைக் கடிகாரச் சுற்றிலும் எதிர்-கடிகாரச் சுற்றிலுமாக 5 நிமிடங்களுக்கு மசாஜ் தேய்த்து, நன்றாகக் காய விட வேண்டும். காய்ந்து கொண்டிருக்கும் போது தான் அந்தப் பசை தன்னுடைய மேஜிக் வேலையை செய்து கொண்டிருக்கும். பின்னர் மிதமான சுடு நீரில் கழுவி அந்தப் பசையை நீக்க வேண்டும். இதைத் தொடர்ந்து சில நாட்கள் செய்து வந்தால் மேஜிக்கிற்கான நல்லதொரு ரிசல்ட் கிடைக்கும்.
நம் சருமத்திற்குப் பளபளப்பைக் கொடுப்பதில் தக்காளிக்கு நிகர் தக்காளி தான்! இதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் நம் சருமத்தில் உள்ள அழுக்குகளையும், இறந்த செல்களையும் எண்ணெய்களையும் முற்றிலுமாக நீக்க வல்லது. தக்காளியை பேஸ்ட் செய்து கொண்டு, கருப்பான தொடைகளில் 5 நிமிடங்கள் வரை நன்றாகத் தேய்க்கவும். பின்னர் 20 நிமிடங்கள் அப்படியே விட்டு விட வேண்டும். கருப்பான தொடைகள் நிச்சயம் பளபளப்பாக மாறும்.
சிறிது சிறிதாக வெட்டப்பட்ட வெள்ளரிக்காய் துண்டுகளை கருந்தொடைகள் மீது தினமும் 10 நிமிடங்கள் வரை நன்கு தேய்க்க வேண்டும். வெள்ளரியில் உள்ள ஈரத் தன்மை காரணமாக கருந்தொடைகள் வெளுப்பாகும், சருமமும் பளபளப்பாகும். கொஞ்சம் எலுமிச்சைத் துளிகளையும் சேர்த்துத் தேய்த்தால் இன்னும் நல்ல ரிசல்ட் கிடைக்கும்.
சருமத்தில் உள்ள அழுக்குகளைப் போக்கிச் சுத்தமாக்குவதில் பப்பாளிக்கு முக்கியப் பங்கு உள்ளது. பப்பாளி பேஸ்ட்டை தினமும் கருமையான தொடைகளில் ஒரு பிரஷ்ஷின் உதவியுடன் மசாஜ் செய்து வந்தால், கருப்பான அழுக்குகள் நீங்கி தொடையோரங்கள் பளபளக்கும்.
தொடைகளில் 5 நிமிடங்களுக்கு தேனை நன்றாகத் தடவி, 20 நிமிடங்கள் வரை அப்படியே விட்டு விட வேண்டும். தேனில் உள்ள ஈரப்பதம் உங்கள் கருந்தொடைகளை குழந்தைகளின் மென்மையான சருமம் போல் மாற்றும். இதைத் தொடர்ந்து ஒரு வாரம் செய்தால் பளபள ரிசல்ட் கிடைக்கும்.
இப்போது ஆண், பெண் என இருபாலருக்கும் முடி உதிர்வு பிரச்சனை இயல்பாகிவிட்டது. செயற்கை முறை இல்லாமல் இயற்கையான வழியில் முடி உதிர்வு பிரச்சனையை எப்படி சரி செய்யலாம்னு பார்க்கலாம் வாங்க...
இப்போது ஆண், பெண் என இருபாலருக்கும் முடி உதிர்வு பிரச்சனை இயல்பாகிவிட்டது. பெண்களுக்கு அழகு நீளமான கூந்தல் இருப்பதுதான். இப்போது கடைகளில் விற்கும் ஷாம்பூவை அதிகம் உபயோகிப்பதனால் கூட இந்த முடி உதிர்வு பிரச்சனை வந்துகொண்டே இருக்கிறது. செயற்கை முறை இல்லாமல் இயற்கையான வழியில் முடி உதிர்வு பிரச்சனையை எப்படி சரி செய்யலாம்னு பார்க்கலாம் வாங்க...
தேவையான பொருட்கள்:
வெந்தயம் – 10 ஸ்பூன் (ஊற வைத்தது)
வைட்டமின் இ கேப்ஸுல் – 1
விளக்கெண்ணெய் – 1 ஸ்பூன்
முதலில் ஒரு பவுலில் 10 ஸ்பூன் வெந்தயத்தை எடுத்து 5 அல்லது 6 மணிநேரம் நன்கு ஊறவைத்து கொள்ளவேண்டும். அடுத்து ஊறிய வெந்தயத்தை மிக்ஸி ஜாரில் சேர்த்து பேஸ்ட் போல் அரைத்து கொள்ளவும். மிக்ஸி ஜாரில் அரைத்ததை வடிகட்டி தனியாக எடுத்துக்கொள்ளவும். வடிகட்டி எடுத்து கொண்டதில் வைட்டமின் இ கேப்சுளை ஒன்று சேர்த்துக்கொள்ளவும். வைட்டமின் இ கேப்ஸுல் இல்லாதவர்கள் தேங்காய் எண்ணெயை 1 ஸ்பூன் அல்லது 2 ஸ்பூன் சேர்க்கலாம்.
அடுத்து 1 ஸ்பூன் விளக்கெண்ணெய் சேர்க்கவும். குளிர்ச்சி தன்மை உள்ளவர்கள் இதை தவிர்த்து கொள்ளலாம். இப்போது சேர்ந்த எல்லாவற்றையும் நன்றாக மிக்ஸ் செய்யவும். இதை தனியாக ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி தலையில் அப்ளை செய்யவேண்டும்.
முக்கியமாக இரவு நேரத்தில் மட்டுமே இதை தடவ வேண்டும். காலையில் ஷாம்பு போட்டு தலையை வாஷ் செய்துகொள்ளலாம். இந்த முறையை வாரத்தில் ஒருமுறை செய்து வந்தால் போதும் முடி உதிர்வு பிரச்சனை இருக்காது.
வெந்தயம் கண், கழுத்து பகுதிக்கு மிகவும் குளிர்ச்சியூட்டும் தன்மை உள்ளது. அதோடு முடி உதிர்வு பிரச்சனைகளுக்கும் தீர்வு தரும். வெந்தயத்தில் நிக்கோடனிக் அமிலம், ப்ரோடீன் சத்துக்கள் அடங்கியுள்ளது. வைட்டமின் இ கேப்சுலும் முடி சம்மந்தப்பட்ட பிரச்சனைக்கு சிறந்து விளங்குகிறது. விளக்கெண்ணெய் உடலுக்கு குளிர்ச்சியை தரும்.
தேவையான பொருட்கள்:
வெந்தயம் – 10 ஸ்பூன் (ஊற வைத்தது)
வைட்டமின் இ கேப்ஸுல் – 1
விளக்கெண்ணெய் – 1 ஸ்பூன்
முதலில் ஒரு பவுலில் 10 ஸ்பூன் வெந்தயத்தை எடுத்து 5 அல்லது 6 மணிநேரம் நன்கு ஊறவைத்து கொள்ளவேண்டும். அடுத்து ஊறிய வெந்தயத்தை மிக்ஸி ஜாரில் சேர்த்து பேஸ்ட் போல் அரைத்து கொள்ளவும். மிக்ஸி ஜாரில் அரைத்ததை வடிகட்டி தனியாக எடுத்துக்கொள்ளவும். வடிகட்டி எடுத்து கொண்டதில் வைட்டமின் இ கேப்சுளை ஒன்று சேர்த்துக்கொள்ளவும். வைட்டமின் இ கேப்ஸுல் இல்லாதவர்கள் தேங்காய் எண்ணெயை 1 ஸ்பூன் அல்லது 2 ஸ்பூன் சேர்க்கலாம்.
அடுத்து 1 ஸ்பூன் விளக்கெண்ணெய் சேர்க்கவும். குளிர்ச்சி தன்மை உள்ளவர்கள் இதை தவிர்த்து கொள்ளலாம். இப்போது சேர்ந்த எல்லாவற்றையும் நன்றாக மிக்ஸ் செய்யவும். இதை தனியாக ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி தலையில் அப்ளை செய்யவேண்டும்.
முக்கியமாக இரவு நேரத்தில் மட்டுமே இதை தடவ வேண்டும். காலையில் ஷாம்பு போட்டு தலையை வாஷ் செய்துகொள்ளலாம். இந்த முறையை வாரத்தில் ஒருமுறை செய்து வந்தால் போதும் முடி உதிர்வு பிரச்சனை இருக்காது.
வெந்தயம் கண், கழுத்து பகுதிக்கு மிகவும் குளிர்ச்சியூட்டும் தன்மை உள்ளது. அதோடு முடி உதிர்வு பிரச்சனைகளுக்கும் தீர்வு தரும். வெந்தயத்தில் நிக்கோடனிக் அமிலம், ப்ரோடீன் சத்துக்கள் அடங்கியுள்ளது. வைட்டமின் இ கேப்சுலும் முடி சம்மந்தப்பட்ட பிரச்சனைக்கு சிறந்து விளங்குகிறது. விளக்கெண்ணெய் உடலுக்கு குளிர்ச்சியை தரும்.
ஒருசில வழிமுறைகளை பின்பற்றினால் இயற்கையாகவே நகங்களின் வளர்ச்சியை அதிகரிக்கச் செய்யலாம். நீண்ட நகங்களுக்கு சொந்தம் கொண்டாடி விடலாம். அதற்கு செய்ய வேண்டிய வழிமுறைகள்:
நகங்களை நீளமாக வளர்ப்பதற்கு நிறைய பெண்கள் விரும்புகிறார்கள். ஒரு சிலர் நகங்களாவது தங்கள் ஆசைக்கனவை நிறைவேற்றித்தரும் என்ற நம்பிக்கையில் நகங்களை பராமரிப்பதற்கு மெனக்கெடுகிறார்கள். ஒருசில வழிமுறைகளை பின்பற்றினால் இயற்கையாகவே நகங்களின் வளர்ச்சியை அதிகரிக்கச் செய்யலாம். நீண்ட நகங்களுக்கு சொந்தம் கொண்டாடி விடலாம். அதற்கு செய்ய வேண்டிய வழிமுறைகள்:
தேங்காய் எண்ணெய்: சருமம், கூந்தலுக்கு மட்டுமின்றி நகங்களை மேம்படுத்தவும் தேங்காய் எண்ணெய்யை உபயோகிக்கலாம். அதிலும் உடையும் தன்மை இல்லாத நகங்களாக இருந்தால் தேங்காய் எண்ணெய்யை தாராளமாக உபயோகிக்கலாம். ஒரு கிண்ணத்தில் சிறிதளவு தேங்காய் எண்ணெய் எடுத்துக்கொள்ளவும். அதனுடன் அதே அளவு தேனும், 3 சொட்டு ரோஸ்மேரி எண்ணெய்யும் சேர்த்து கலக்கவும். இந்த கலவையை லேசாக சூடாக்கி அதனுள் கால் மணி நேரம் நகங்களை முக்கி வைக்கவும். வாரத்தில் இரண்டு, மூன்று முறை இவ்வாறு செய்து வந்தால் நகங்கள் வேகமாக வளரத் தொடங்கும். ஓரிரு வாரங்களிலேயே நகங்களின் வளர்ச்சியை கண்கூடாக காணலாம்.
பால்-முட்டை: இது நகங்களின் வளர்ச்சியை தூண்டும் சக்திவாய்ந்த கலவையாகும். முட்டையின் மஞ்சள் கருவுடன் சிறிதளவு பால் சேர்த்து நன்றாக கிளறவும். இந்த கலவையில் 10 நிமிடங்கள் நகங்களை முக்கிவைக்கவும். வாரத்தில் இரண்டு, மூன்று முறை செய்து வரலாம்.
எலுமிச்சை சாறு: இது நகங்களின் வளர்ச்சியையும், வலிமையையும் உறுதிப்படுத்தும் தன்மை கொண்டது. இதிலிருக்கும் வைட்டமின் சி, நகங்களை பலப் படுத்தும். அதன் வளர்ச்சியை ஊக்குவிக்கும். காட்டன் பஞ்சுவில் எலுமிச்சை சாறை முக்கி நகங்களுக்குள் சிறிது நேரம் சொருகி வைக்கலாம். சிறிதளவு சூடான ஆலிவ் எண்ணெய்யுடன் அதே அளவு எலுமிச்சை சாறை கலந்து நகங்கள் மீது தடவி கால் மணி நேரம் மசாஜ் செய்து வரலாம்.
பற்பசை: நகங்களை வளர்ப்பதற்கு பற்பசையையும் பயன்படுத்தலாம். பல் துலக்கும் பற்பசையை நகங்கள் மீது தடவி நன்றாக தேய்த்துவிடவும். சிறிது நேரம் கழித்து கழுவிவிடலாம். வாரத்தில் மூன்று முறையாவது செய்து வரலாம். நகங்கள் நன்றாக வளரத் தொடங்கும்.
பூண்டு எண்ணெய்: பூண்டுவில் இருக்கும் செலினியம் நகங்களின் வளர்ச்சிக்கு உதவும். பூண்டுவை தோல் நீக்கி நறுக்கி நகங்களில் தேய்த்து வரலாம். பூண்டு எண்ணெய்யையும் பயன்படுத்தலாம். ஒரு முழு பூண்டுவை தோல் நீக்கி சுத்தம் செய்து, சிறிதாக நறுக்கி அதனுடன் சிறிதளவு ஆலிவ் எண்ணெய் கலந்து வாணலியில் 10 நிமிடங்கள் சூடாக்கவும். எண்ணெய்யில் இருந்து புகை வெளிபடக்கூடாது. சிறு தீயில் பூண்டு நன்றாக பொறிந்ததும் இறக்கி, அந்த எண்ணெய்யை இரவில் நகங்களில் தேய்த்து மசாஜ் செய்து வரலாம்.
தேங்காய் எண்ணெய்: சருமம், கூந்தலுக்கு மட்டுமின்றி நகங்களை மேம்படுத்தவும் தேங்காய் எண்ணெய்யை உபயோகிக்கலாம். அதிலும் உடையும் தன்மை இல்லாத நகங்களாக இருந்தால் தேங்காய் எண்ணெய்யை தாராளமாக உபயோகிக்கலாம். ஒரு கிண்ணத்தில் சிறிதளவு தேங்காய் எண்ணெய் எடுத்துக்கொள்ளவும். அதனுடன் அதே அளவு தேனும், 3 சொட்டு ரோஸ்மேரி எண்ணெய்யும் சேர்த்து கலக்கவும். இந்த கலவையை லேசாக சூடாக்கி அதனுள் கால் மணி நேரம் நகங்களை முக்கி வைக்கவும். வாரத்தில் இரண்டு, மூன்று முறை இவ்வாறு செய்து வந்தால் நகங்கள் வேகமாக வளரத் தொடங்கும். ஓரிரு வாரங்களிலேயே நகங்களின் வளர்ச்சியை கண்கூடாக காணலாம்.
பால்-முட்டை: இது நகங்களின் வளர்ச்சியை தூண்டும் சக்திவாய்ந்த கலவையாகும். முட்டையின் மஞ்சள் கருவுடன் சிறிதளவு பால் சேர்த்து நன்றாக கிளறவும். இந்த கலவையில் 10 நிமிடங்கள் நகங்களை முக்கிவைக்கவும். வாரத்தில் இரண்டு, மூன்று முறை செய்து வரலாம்.
எலுமிச்சை சாறு: இது நகங்களின் வளர்ச்சியையும், வலிமையையும் உறுதிப்படுத்தும் தன்மை கொண்டது. இதிலிருக்கும் வைட்டமின் சி, நகங்களை பலப் படுத்தும். அதன் வளர்ச்சியை ஊக்குவிக்கும். காட்டன் பஞ்சுவில் எலுமிச்சை சாறை முக்கி நகங்களுக்குள் சிறிது நேரம் சொருகி வைக்கலாம். சிறிதளவு சூடான ஆலிவ் எண்ணெய்யுடன் அதே அளவு எலுமிச்சை சாறை கலந்து நகங்கள் மீது தடவி கால் மணி நேரம் மசாஜ் செய்து வரலாம்.
பற்பசை: நகங்களை வளர்ப்பதற்கு பற்பசையையும் பயன்படுத்தலாம். பல் துலக்கும் பற்பசையை நகங்கள் மீது தடவி நன்றாக தேய்த்துவிடவும். சிறிது நேரம் கழித்து கழுவிவிடலாம். வாரத்தில் மூன்று முறையாவது செய்து வரலாம். நகங்கள் நன்றாக வளரத் தொடங்கும்.
பூண்டு எண்ணெய்: பூண்டுவில் இருக்கும் செலினியம் நகங்களின் வளர்ச்சிக்கு உதவும். பூண்டுவை தோல் நீக்கி நறுக்கி நகங்களில் தேய்த்து வரலாம். பூண்டு எண்ணெய்யையும் பயன்படுத்தலாம். ஒரு முழு பூண்டுவை தோல் நீக்கி சுத்தம் செய்து, சிறிதாக நறுக்கி அதனுடன் சிறிதளவு ஆலிவ் எண்ணெய் கலந்து வாணலியில் 10 நிமிடங்கள் சூடாக்கவும். எண்ணெய்யில் இருந்து புகை வெளிபடக்கூடாது. சிறு தீயில் பூண்டு நன்றாக பொறிந்ததும் இறக்கி, அந்த எண்ணெய்யை இரவில் நகங்களில் தேய்த்து மசாஜ் செய்து வரலாம்.
பெண்கள் என்றாலே சரும அழகை பாதுகாப்பதில் மிகவும் ஆர்வம் காட்டக்கூடியவர்களாக இருப்பார்கள். அந்த வகையில் முக அழகை எப்படி அதிகரிக்கலாம் என்று பார்க்கலாம்.
தக்காளியில் வைட்டமின் சி அதிகமாக இருப்பதால் சருமத்திற்கு எந்த வித பாதிப்பும் ஏற்படாது. பெண்கள் என்றாலே சரும அழகை பாதுகாப்பதில் மிகவும் ஆர்வம் காட்டக்கூடியவர்களாக இருப்பார்கள். அந்த வகையில் தக்காளியை மட்டும் பயன்படுத்தி முக அழகை எப்படி அதிகரிக்கலாம் என்று பார்க்கலாம்.
முகத்தை ஜொலிக்க வைக்க டிப்ஸ் :
தேவையான பொருள்:
காய்ச்சாத பால் - சிறிதளவு
தக்காளி - பாதியான அளவு
செய்முறை விளக்கம்:
முகம் நல்ல வெள்ளையாக மாறுவதற்கு முதலில் காய்ச்சாத பாலில் நறுக்கிய பாதி தக்காளியை பாலில் நனைத்து முகத்தில் மெதுவாக மசாஜ் போல் செய்ய வேண்டும். அடுத்து கையால் மெதுவாக தேய்த்து விட வேண்டும். மசாஜ் போல் செய்த பிறகு 5 நிமிடம் வைத்திருக்க வேண்டும். இதை நீரால் உடனே வாஷ் செய்ய கூடாது. டவல் எடுத்து ஹாட் ஆன நீரில் நனைத்த பிறகு தொடைக்க வேண்டும்.
சருமம் பளிச்சென்று மாற டிப்ஸ்:
தேவையான பொருள்:
சர்க்கரை - 1 டேபிள் ஸ்பூன்
தேன் - 1 ஸ்பூன்
தக்காளி - நறுக்கிய பாதி
செய்முறை விளக்கம்:
முதலில் ஒரு பவுலில் 1 டேபிள் ஸ்பூன் அளவிற்கு சர்க்கரை எடுத்துக்கொள்ள வேண்டும். இதனுடன் 1 ஸ்பூன் அளவிற்கு தேனை சேர்த்து நன்றாக கலந்துகொள்ளவும். தேன் பயன்படுத்துவதால் புருவ முடிகள் வெள்ளையாகிவிடும் என்று நினைக்காதீர்கள். தேனை அனைத்து வித சரும பிரச்சனைகளுக்கும் தீர்வு வகிக்கும்.
இப்போது கலந்து வைத்ததை முதலில் பாதியாக நறுக்கி வைத்துள்ள தக்காளியில் இந்த கலந்த தேனை தக்காளியில் தடவி முகத்தில் மசாஜ் போல் மெதுவாக செய்து 5 நிமிடம் வைத்திருக்க வேண்டும். 5 நிமிடம் கழித்து டவலால் ஹாட் ஆன நீரில் நனைத்த பிறகு தொடைக்க வேண்டும்.
முக அழகை அதிகரிக்க ஃபேஸ் மாஸ்க் :
தேவையான பொருள்:
கடலை மாவு - 1 டேபிள் ஸ்பூன்
பால் பவுடர் / பால் - சிறிதளவு
நறுக்கிய பாதி தக்காளி
செய்முறை விளக்கம்:
முகத்தினை அழகுபடுத்த ஃபேஸ் மாஸ்க் செய்வதற்கு ஒரு பவுலில் கடலை மாவு 1 டேபிள் ஸ்பூன் அளவு எடுத்துக்கொள்ளவும். அந்த கடலை மாவுடன் பால் அல்லது பால் பவுடர் சேர்த்து கொள்ளவும். அடுத்ததாக நறுக்கிய பாதி தக்காளியின் சாறு சிறிதளவு சேர்த்து மிக்ஸ் செய்யவும். அடுத்து கலந்த பிறகு முகத்தில் தடவி சிறிது நேரம் கழித்து நீரில் முகத்தினை வாஷ் செய்து கொள்ளலாம். முகத்தில் இருந்து இதனை வாஷ் செய்த பிறகு சோப் பயன்படுத்தாமல் நீங்கள் உபயோகப்படுத்தும் ஃபேஸ் வாஷை மட்டுமே பயன்படுத்த வேண்டும். இந்த 3 டிப்சையும் பின்பற்றி வந்தால் கண்டிப்பாக சருமமானது நல்ல வெள்ளையாக மாறி மாற்றத்தை நீங்களே உணர்வீர்கள்..!
முகத்தை ஜொலிக்க வைக்க டிப்ஸ் :
தேவையான பொருள்:
காய்ச்சாத பால் - சிறிதளவு
தக்காளி - பாதியான அளவு
செய்முறை விளக்கம்:
முகம் நல்ல வெள்ளையாக மாறுவதற்கு முதலில் காய்ச்சாத பாலில் நறுக்கிய பாதி தக்காளியை பாலில் நனைத்து முகத்தில் மெதுவாக மசாஜ் போல் செய்ய வேண்டும். அடுத்து கையால் மெதுவாக தேய்த்து விட வேண்டும். மசாஜ் போல் செய்த பிறகு 5 நிமிடம் வைத்திருக்க வேண்டும். இதை நீரால் உடனே வாஷ் செய்ய கூடாது. டவல் எடுத்து ஹாட் ஆன நீரில் நனைத்த பிறகு தொடைக்க வேண்டும்.
சருமம் பளிச்சென்று மாற டிப்ஸ்:
தேவையான பொருள்:
சர்க்கரை - 1 டேபிள் ஸ்பூன்
தேன் - 1 ஸ்பூன்
தக்காளி - நறுக்கிய பாதி
செய்முறை விளக்கம்:
முதலில் ஒரு பவுலில் 1 டேபிள் ஸ்பூன் அளவிற்கு சர்க்கரை எடுத்துக்கொள்ள வேண்டும். இதனுடன் 1 ஸ்பூன் அளவிற்கு தேனை சேர்த்து நன்றாக கலந்துகொள்ளவும். தேன் பயன்படுத்துவதால் புருவ முடிகள் வெள்ளையாகிவிடும் என்று நினைக்காதீர்கள். தேனை அனைத்து வித சரும பிரச்சனைகளுக்கும் தீர்வு வகிக்கும்.
இப்போது கலந்து வைத்ததை முதலில் பாதியாக நறுக்கி வைத்துள்ள தக்காளியில் இந்த கலந்த தேனை தக்காளியில் தடவி முகத்தில் மசாஜ் போல் மெதுவாக செய்து 5 நிமிடம் வைத்திருக்க வேண்டும். 5 நிமிடம் கழித்து டவலால் ஹாட் ஆன நீரில் நனைத்த பிறகு தொடைக்க வேண்டும்.
முக அழகை அதிகரிக்க ஃபேஸ் மாஸ்க் :
தேவையான பொருள்:
கடலை மாவு - 1 டேபிள் ஸ்பூன்
பால் பவுடர் / பால் - சிறிதளவு
நறுக்கிய பாதி தக்காளி
செய்முறை விளக்கம்:
முகத்தினை அழகுபடுத்த ஃபேஸ் மாஸ்க் செய்வதற்கு ஒரு பவுலில் கடலை மாவு 1 டேபிள் ஸ்பூன் அளவு எடுத்துக்கொள்ளவும். அந்த கடலை மாவுடன் பால் அல்லது பால் பவுடர் சேர்த்து கொள்ளவும். அடுத்ததாக நறுக்கிய பாதி தக்காளியின் சாறு சிறிதளவு சேர்த்து மிக்ஸ் செய்யவும். அடுத்து கலந்த பிறகு முகத்தில் தடவி சிறிது நேரம் கழித்து நீரில் முகத்தினை வாஷ் செய்து கொள்ளலாம். முகத்தில் இருந்து இதனை வாஷ் செய்த பிறகு சோப் பயன்படுத்தாமல் நீங்கள் உபயோகப்படுத்தும் ஃபேஸ் வாஷை மட்டுமே பயன்படுத்த வேண்டும். இந்த 3 டிப்சையும் பின்பற்றி வந்தால் கண்டிப்பாக சருமமானது நல்ல வெள்ளையாக மாறி மாற்றத்தை நீங்களே உணர்வீர்கள்..!
தங்கள் முகத்தை அழகாக காட்டிக்கொள்ள மணப்பெண்கள் புதிய அலங்கார மாஸ்குகளை அணிகிறார்கள். அவை மணப்பெண்கள் உடுத்தியிருக்கும் உடைக்கு பொருத்தமாகவும், அவர்கள் அணிந்திருக்கும் நகைகளுக்கு பொருத்தமாகவும் தேர்ந்தெடுக்கப்படுகிறது.
லட்சங்களில் பணத்தை செலவிட்டு ஆர்ப்பாட்டமாக நடந்த மணவிழாக்களுக்கு கொரோனா முடிவுகட்டியதால், காலத்திற்கு ஏற்றபடி ‘கலர்புல்லாக’ திருமணங்களை நடத்த அனைவரும் தயாராகிவிட்டார்கள். ஆடம்பர விருந்து, கொண்டாட் டங்களை தவிர்த்து குறைந்த அளவு விருந்தினர்களோடு திருமணங்களை நடத்துகிறார்கள். அதே நேரத்தில் மணப்பெண்கள் இப்போதும் அழகிலும், அலங்காரத்திலும் அதிக அக்கறை செலுத்துகிறார்கள். குறிப்பிட்டு சொல்லவேண்டுமானால் அவர்கள் அணியும் முக கவசமும் தங்களுக்கு கூடுதல் அழகு தரவேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள்.
பொதுவாக மணப்பெண் அலங்காரத்தில் முக அழகு முதலிடம் பிடிக்கும். தங்கள் முகத்திற்கு பொருத்தமான மூக்குத்தி அணிந்துகொள்வார்கள். உதடுகளுக்கு லிப்ஸ்டிக் பூசி கூடுதலாக மெருகேற்றிக்கொள்வார்கள். ஆனால் இப்போது அவர்கள் அணியும் மாஸ்க் வாயையும், மூக்கையும் மூடி, அந்த அழகை மறைத்துவிடுகிறது. ஆனாலும் தங்கள் முகத்தை அழகாக காட்டிக்கொள்ள மணப்பெண்கள் புதிய அலங்கார மாஸ்குகளை அணிகிறார்கள். அது அவர்கள் முகத்தை பிரகாசிக்கவைக்கிறது. அவை மணப்பெண்கள் உடுத்தியிருக்கும் உடைக்கு பொருத்தமாகவும், அவர்கள் அணிந்திருக்கும் நகைகளுக்கு பொருத்தமாகவும் தேர்ந்தெடுக்கப்படுகிறது.
தற்போது மணப்பெண்கள் அணியும் முக கவசங்களில் தங்க நூல் இணைப்பு கொண்டவை அதி அற்புதமான அழகைக் கொண்டிருக்கின்றன. முத்துகள், தொங்கல்கள், எம்ப்பிராய்டரி, ஜரிகை வேலைப்பாடுகள் போன்றவைகளும் மாஸ்குகளில் இடம்பெறுகின்றன. பூக்கள் மற்றும் விதவிதமான டிசைன்களை கொண்டும் மாஸ்குகள் கவர்ச்சியாக்கப்படுகின்றன.
அழகான மாஸ்குகள் மணப்பெண்களின் அழகுக் கவலையை குறைத்திருக்கின்றன. மாஸ்குகள் மூலம் தங்கள் முக அழகை மேம்படுத்திக்கொள்ளலாம் என்ற தன்னம்பிக்கையும் மணப்பெண்களிடம் ஏற்பட்டிருக்கிறது. சில மணப்பெண்களின் உதடு அல்லது மூக்கு அவர்கள் விரும்பும் அழகுடன் காட்சியளிக்காது. அந்த பகுதிகளின் அழகை மேம்படுத்த தனிக்கவனம் செலுத்தி ‘கரெக்டிவ் மேக்கப்’ போடுவார்கள். அப்படிப்பட்ட மணப்பெண்கள் இந்த கவர்ச்சி மாஸ்குகள் அணிவதில் அதிக மகிழ்ச்சியடைகிறார்கள். குறிப்பிட்ட பகுதிகளை மறைத்து, மாஸ்குகள் அவர்கள் கூடுதல் அழகுடன் காட்சியளிக்க துணைபுரிகின்றன.
மணப்பெண்களின் அலங்கார மாஸ்குகள் முதலில் வடஇந்தியாவில்தான் பிரபலமானது. இப்போது தமிழகத்தில் உள்ள பெருநகர பெண்களால் அதிகம் விரும்பி வாங்கி அணியப்படுகிறது. அவர்கள் திருமண உடைகள், ஆபரணங்கள் வாங்கும்போதே அதற்கு பொருத்தமான மாஸ்குகளையும் வாங்கிவிடுகிறார்கள். மணநாளுக்கு முன்பே அவைகளை எல்லாம் அணிந்து ஒத்திகையும் பார்த்துக்கொள்கிறார்கள்.
மாஸ்க் அணிவதால் மணப்பெண்கள் கண் அலங்காரத்தில் கூடுதல் கவனம் செலுத்துகிறார்கள். புருவத்தை சீராக்கி, கண்களுக்கு கவர்ச்சியை கூட்டுகிறார்கள். அதோடு முந்தைய காலங்களில் அவர்கள் மறந்து போயிருந்த நெற்றிச்சுட்டி, மாட்டி போன்றவைகளையும் இப்போது அணிந்துகூடுதல் அழகுடன் வலம் வருகிறார்கள். அதுமட்டுமின்றி இப்போது குறைந்த அளவு விருந்தினர்களே திருமண நிகழ்ச்சிகளில் பங்குபெறுகிறார்கள். அவர்கள் அனைவருமே மணப்பெண்ணின் குடும்பத்தினருக்கு நெருக்கமானவர்களாகவும் இருக்கிறார்கள். அப்படி திருமணத்தில் பங்கேற்கும் அனைவருமே ஒரே மாதிரி உடை அணிவதும், அதற்கு ஏற்றபடி ஒரே மாதிரியான முக கவசத்தோடு தோன்றுவதும் இப்போது புதிய டிரெண்ட்டாக இருந்துகொண்டிருக்கிறது.
பொதுவாக மணப்பெண் அலங்காரத்தில் முக அழகு முதலிடம் பிடிக்கும். தங்கள் முகத்திற்கு பொருத்தமான மூக்குத்தி அணிந்துகொள்வார்கள். உதடுகளுக்கு லிப்ஸ்டிக் பூசி கூடுதலாக மெருகேற்றிக்கொள்வார்கள். ஆனால் இப்போது அவர்கள் அணியும் மாஸ்க் வாயையும், மூக்கையும் மூடி, அந்த அழகை மறைத்துவிடுகிறது. ஆனாலும் தங்கள் முகத்தை அழகாக காட்டிக்கொள்ள மணப்பெண்கள் புதிய அலங்கார மாஸ்குகளை அணிகிறார்கள். அது அவர்கள் முகத்தை பிரகாசிக்கவைக்கிறது. அவை மணப்பெண்கள் உடுத்தியிருக்கும் உடைக்கு பொருத்தமாகவும், அவர்கள் அணிந்திருக்கும் நகைகளுக்கு பொருத்தமாகவும் தேர்ந்தெடுக்கப்படுகிறது.
தற்போது மணப்பெண்கள் அணியும் முக கவசங்களில் தங்க நூல் இணைப்பு கொண்டவை அதி அற்புதமான அழகைக் கொண்டிருக்கின்றன. முத்துகள், தொங்கல்கள், எம்ப்பிராய்டரி, ஜரிகை வேலைப்பாடுகள் போன்றவைகளும் மாஸ்குகளில் இடம்பெறுகின்றன. பூக்கள் மற்றும் விதவிதமான டிசைன்களை கொண்டும் மாஸ்குகள் கவர்ச்சியாக்கப்படுகின்றன.
அழகான மாஸ்குகள் மணப்பெண்களின் அழகுக் கவலையை குறைத்திருக்கின்றன. மாஸ்குகள் மூலம் தங்கள் முக அழகை மேம்படுத்திக்கொள்ளலாம் என்ற தன்னம்பிக்கையும் மணப்பெண்களிடம் ஏற்பட்டிருக்கிறது. சில மணப்பெண்களின் உதடு அல்லது மூக்கு அவர்கள் விரும்பும் அழகுடன் காட்சியளிக்காது. அந்த பகுதிகளின் அழகை மேம்படுத்த தனிக்கவனம் செலுத்தி ‘கரெக்டிவ் மேக்கப்’ போடுவார்கள். அப்படிப்பட்ட மணப்பெண்கள் இந்த கவர்ச்சி மாஸ்குகள் அணிவதில் அதிக மகிழ்ச்சியடைகிறார்கள். குறிப்பிட்ட பகுதிகளை மறைத்து, மாஸ்குகள் அவர்கள் கூடுதல் அழகுடன் காட்சியளிக்க துணைபுரிகின்றன.
மணப்பெண்களின் அலங்கார மாஸ்குகள் முதலில் வடஇந்தியாவில்தான் பிரபலமானது. இப்போது தமிழகத்தில் உள்ள பெருநகர பெண்களால் அதிகம் விரும்பி வாங்கி அணியப்படுகிறது. அவர்கள் திருமண உடைகள், ஆபரணங்கள் வாங்கும்போதே அதற்கு பொருத்தமான மாஸ்குகளையும் வாங்கிவிடுகிறார்கள். மணநாளுக்கு முன்பே அவைகளை எல்லாம் அணிந்து ஒத்திகையும் பார்த்துக்கொள்கிறார்கள்.
மாஸ்க் அணிவதால் மணப்பெண்கள் கண் அலங்காரத்தில் கூடுதல் கவனம் செலுத்துகிறார்கள். புருவத்தை சீராக்கி, கண்களுக்கு கவர்ச்சியை கூட்டுகிறார்கள். அதோடு முந்தைய காலங்களில் அவர்கள் மறந்து போயிருந்த நெற்றிச்சுட்டி, மாட்டி போன்றவைகளையும் இப்போது அணிந்துகூடுதல் அழகுடன் வலம் வருகிறார்கள். அதுமட்டுமின்றி இப்போது குறைந்த அளவு விருந்தினர்களே திருமண நிகழ்ச்சிகளில் பங்குபெறுகிறார்கள். அவர்கள் அனைவருமே மணப்பெண்ணின் குடும்பத்தினருக்கு நெருக்கமானவர்களாகவும் இருக்கிறார்கள். அப்படி திருமணத்தில் பங்கேற்கும் அனைவருமே ஒரே மாதிரி உடை அணிவதும், அதற்கு ஏற்றபடி ஒரே மாதிரியான முக கவசத்தோடு தோன்றுவதும் இப்போது புதிய டிரெண்ட்டாக இருந்துகொண்டிருக்கிறது.
தேநீர் தயாரிக்க பயன்படுத்தப்படும் டீ பேக்குகளை கொண்டு சருமம், கூந்தல் உள்பட பல்வேறு உடல்நல பிரச்சினைகளை களையலாம்.
தேநீர் தயாரிக்க பயன்படுத்தப்படும் டீ பேக்குகளை கொண்டு சருமம், கூந்தல் உள்பட பல்வேறு உடல்நல பிரச்சினைகளை களையலாம். கிரீன் டீ பேக்கை கொண்டு தேநீர் தயாரித்த பிறகு அந்த டீ பேக்கை மிதமான சூட்டில் கண்களில் வைக்கலாம். அல்லது டீ பேக்கை குளிர்சாதன பெட்டியில் குளிரவைத்துவிட்டு அதனை கண்களில் வைக்கலாம். தொடர்ந்து அவ்வாறு செய்து வந்தால் கண்களில் ஏற்படும் வீக்கம் குறையும். கருவளையங்களும் மறைய தொடங்கிவிடும்.
கிரீன் டீ பருகிய பிறகு டீ பேக்கை சருமத்திற்கு உபயோகப்படுத்தலாம். அது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்டுகளை கொண்டது. டீ பேக்கை கத்தரித்துவிட்டு அதில் இருக்கும் துகள்களை ‘பேஸ் பேக்’ தயாரிப்பதற்கு உபயோகப்படுத்தலாம். அதனை சருமத்தில் தடவுவது இயற்கையாகவே பிரகாசத்தை ஏற் படுத்தி கொடுக்கும். வயதான தோற்றம் தென்படுவதை தள்ளிப்போட வைக்கும். குளியல் நீரில் டீ பேக்குகளை சில நிமிடங்கள் ஊறவைத்துவிட்டு குளிக்கலாம். அது உடலுக்கு இதமளிக்கும்.
பயன்படுத்தப்படாத டீ பேக்குகளை கொண்டு சருமத்தை சுத்தப்படுத்தலாம். ஆழமான சரும சுத்திகரிப்புக்கு நீராவி சிறந்தது. நீராவியில் டீ பேக்குகளை 10 நிமிடங்கள் வைத்துவிட்டு சருமத்தில் தடவலாம். அது சரும துளைகளை சுத்தப்படுத்துவதற்கு உதவும். டீ பேக்குகளை வெந்நீரில் கலந்து வடிகட்டி தலைமுடியை சுத்தப்படுத்துவதற்கு பயன்படுத்தலாம். உச்சந்தலையில் தேயிலை நீரை ஊற்றி மசாஜ் செய்து குளித்து வந்தால் முடி தொடர்பான பிரச்சினைகள் நீங்கிவிடும்.
கிரீன் டீ பருகிய பிறகு டீ பேக்கை சருமத்திற்கு உபயோகப்படுத்தலாம். அது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்டுகளை கொண்டது. டீ பேக்கை கத்தரித்துவிட்டு அதில் இருக்கும் துகள்களை ‘பேஸ் பேக்’ தயாரிப்பதற்கு உபயோகப்படுத்தலாம். அதனை சருமத்தில் தடவுவது இயற்கையாகவே பிரகாசத்தை ஏற் படுத்தி கொடுக்கும். வயதான தோற்றம் தென்படுவதை தள்ளிப்போட வைக்கும். குளியல் நீரில் டீ பேக்குகளை சில நிமிடங்கள் ஊறவைத்துவிட்டு குளிக்கலாம். அது உடலுக்கு இதமளிக்கும்.
பயன்படுத்தப்படாத டீ பேக்குகளை கொண்டு சருமத்தை சுத்தப்படுத்தலாம். ஆழமான சரும சுத்திகரிப்புக்கு நீராவி சிறந்தது. நீராவியில் டீ பேக்குகளை 10 நிமிடங்கள் வைத்துவிட்டு சருமத்தில் தடவலாம். அது சரும துளைகளை சுத்தப்படுத்துவதற்கு உதவும். டீ பேக்குகளை வெந்நீரில் கலந்து வடிகட்டி தலைமுடியை சுத்தப்படுத்துவதற்கு பயன்படுத்தலாம். உச்சந்தலையில் தேயிலை நீரை ஊற்றி மசாஜ் செய்து குளித்து வந்தால் முடி தொடர்பான பிரச்சினைகள் நீங்கிவிடும்.
தோல் தொடர்பான அனைத்து விதமான நோய்களுக்கும் வேப்ப எண்ணெய் தீர்வு தருகிறது. வேப்ப எண்ணெயின் பயன்களை பற்றி விரிவாக கீழே பார்க்கலாம்.
தோல் தொடர்பான அனைத்து விதமான நோய்களுக்கும் வேப்ப எண்ணெய் தீர்வு தருகிறது. வேப்ப எண்ணெயின் பயன்களை பற்றி விரிவாக கீழே பார்க்கலாம்.
வேப்ப எண்ணெய் (Neem oil) என்பது வேப்ப மரத்தின் பழ விதைகளில்(வேப்பங்கொட்டை) இருந்து தயாரிக்கப்படும் எண்ணெய் ஆகும்.
* தினமும் வேப்ப எண்ணெய் அல்லது வேப்ப விதை தூளை முகத்தில் தடவி வர தோல் சுருக்கங்கள் மறைந்து இளமையான தோற்றத்தை பெறலாம்.
* வேப்ப எண்ணெய் தடவுவதால் தோல் மென்மையாக இருக்கும். தோலில் ஏற்படும் அரிப்பு மற்றும் சிரங்குகளை வேப்ப எண்ணெய் போக்கும்.
* குளிர்காலங்களில் ஏற்படும் தோல் வெடிப்பை வேப்ப எண்ணெய் சரிசெய்யும்.
* வேப்ப எண்ணெய் தினமும் பயன்படுத்தினால் முகத்தில் கரும்புள்ளிகள் மறையும்.
* படர் தாமரை, கருவளையம் ஆகியவற்றை வேப்ப எண்ணெய் மருந்தாக பயன்படுகிறது.
* தேங்காய் எண்ணெயில் கொஞ்சம் வேப்பெண்ணெய் கலந்து கூந்தலுக்கு தடவி வர பொடுகு தொல்லை நீங்கும்.
* தினமும் வேப்ப எண்ணெய்யை தலையில் தடவினால் அடர்த்தியான கூந்தலை பெறலாம்.
வேப்ப எண்ணெய் (Neem oil) என்பது வேப்ப மரத்தின் பழ விதைகளில்(வேப்பங்கொட்டை) இருந்து தயாரிக்கப்படும் எண்ணெய் ஆகும்.
* தினமும் வேப்ப எண்ணெய் அல்லது வேப்ப விதை தூளை முகத்தில் தடவி வர தோல் சுருக்கங்கள் மறைந்து இளமையான தோற்றத்தை பெறலாம்.
* வேப்ப எண்ணெய் தடவுவதால் தோல் மென்மையாக இருக்கும். தோலில் ஏற்படும் அரிப்பு மற்றும் சிரங்குகளை வேப்ப எண்ணெய் போக்கும்.
* குளிர்காலங்களில் ஏற்படும் தோல் வெடிப்பை வேப்ப எண்ணெய் சரிசெய்யும்.
* வேப்ப எண்ணெய் தினமும் பயன்படுத்தினால் முகத்தில் கரும்புள்ளிகள் மறையும்.
* படர் தாமரை, கருவளையம் ஆகியவற்றை வேப்ப எண்ணெய் மருந்தாக பயன்படுகிறது.
* தேங்காய் எண்ணெயில் கொஞ்சம் வேப்பெண்ணெய் கலந்து கூந்தலுக்கு தடவி வர பொடுகு தொல்லை நீங்கும்.
* தினமும் வேப்ப எண்ணெய்யை தலையில் தடவினால் அடர்த்தியான கூந்தலை பெறலாம்.






