என் மலர்
அழகுக் குறிப்புகள்
ஒரு ஹேர்டையை பயன்படுத்தும் முன் சிறிய அளவில் உபயோகித்து பார்த்து நமக்கு அது ஏதும் அலர்ஜி அல்லது எரிச்சம் ஏற்படுத்துகிறதா என்று சோதித்து விட்டு பின் உபயோகப்படுத்தலாம்.
முகத்துக்கு பூசும் பவுடர் போல ஹேர் டையும் சாதாரண அலங்காரப்பொருட்களில் ஒன்றாக மாறியுள்ளது. நடுத்தர வயதை எட்டிய இளம் பெண்களுக்கு இது ஒரு வரப்பிரசாதமாகவே ஆகியுள்ளது. ஆனால் ஹேர் டையில் ரசாயனக்கலவைகள் இருப்பதால் தலைமுடி உதிர்தல், எரிச்சல் போன்ற பின்விளைவுகள் ஏற்படுமோ என்ற அச்சத்தால் பலன் ஹேர் டை பயன்படுத்த தயக்கம் கொண்டுள்ளனர்.
ஹேர் டைகளில் பல்வேறு ரசாயனப்பொருட்களில் கலவை இருப்பது என்னமோ உண்மை தான். ஆனால் அவை அனைத்துமே கெடுதல் என்று சொல்லிவிட முடியாது. நாம் பயன்படுத்தும் ஷாம்புவில் கூட சில ரசாயன பொருட்கள் உள்ளன.
* ஒரு ஹேர்டையை பயன்படுத்தும் முன் சிறிய அளவில் உபயோகித்து பார்த்து நமக்கு அது ஏதும் அலர்ஜி அல்லது எரிச்சம் ஏற்படுத்துகிறதா என்று சோதித்து விட்டு பின் உபயோகப்படுத்தலாம்.
* தலைமுடியின் கருப்பு நிறம் சீக்கிரம் மங்கி விடாமல் இருக்க சில வழிமுறைகளை ஹேர் டை பாக்கெட்டுகளில் குறிப்பிட்டு இருப்பார்கள். நாம் அவற்றை சரியாக பின்பற்றினால் மாதமாதம் ஹேர் டை போடுவதை தவிர்க்கலாம்.
* இப்பொழுது நாட்டு மருந்து கடைகளில் மூலிகை ஹேர் டைகளும் விற்பனை ஆகின்றது. ரசாயன ஹேர் டை உபயோகிக்க விரும்பாதவர்கள் இது போன்ற முலிகை ஹேர் டைகளை பயன்படுத்தலாம்.
வெள்ளை முடியுடன் இயற்கை தோற்றத்தில் இருப்பது ஒரு அழகு தான். மிகப்பெரிய ’ஹீரோக்கள் கூட சால்ட் அண்டு பெப்பர் லுககிற்கு மாறிவிட்டார்கள். ஆனால் ஒரு திருமண வரவேற்பு வேலைக்கான இன்டர்வியூ நம்மை விட வயதில் குறைந்தவர்கள மத்தியில் நாம் இருக்கும் போது வயதை குறைத்து காட்டுவதில் தவறில்லை. அதற்கு ஹேர் டை கைகொடுக்கும்.
ஹேர் டைகளில் பல்வேறு ரசாயனப்பொருட்களில் கலவை இருப்பது என்னமோ உண்மை தான். ஆனால் அவை அனைத்துமே கெடுதல் என்று சொல்லிவிட முடியாது. நாம் பயன்படுத்தும் ஷாம்புவில் கூட சில ரசாயன பொருட்கள் உள்ளன.
* ஒரு ஹேர்டையை பயன்படுத்தும் முன் சிறிய அளவில் உபயோகித்து பார்த்து நமக்கு அது ஏதும் அலர்ஜி அல்லது எரிச்சம் ஏற்படுத்துகிறதா என்று சோதித்து விட்டு பின் உபயோகப்படுத்தலாம்.
* தலைமுடியின் கருப்பு நிறம் சீக்கிரம் மங்கி விடாமல் இருக்க சில வழிமுறைகளை ஹேர் டை பாக்கெட்டுகளில் குறிப்பிட்டு இருப்பார்கள். நாம் அவற்றை சரியாக பின்பற்றினால் மாதமாதம் ஹேர் டை போடுவதை தவிர்க்கலாம்.
* இப்பொழுது நாட்டு மருந்து கடைகளில் மூலிகை ஹேர் டைகளும் விற்பனை ஆகின்றது. ரசாயன ஹேர் டை உபயோகிக்க விரும்பாதவர்கள் இது போன்ற முலிகை ஹேர் டைகளை பயன்படுத்தலாம்.
வெள்ளை முடியுடன் இயற்கை தோற்றத்தில் இருப்பது ஒரு அழகு தான். மிகப்பெரிய ’ஹீரோக்கள் கூட சால்ட் அண்டு பெப்பர் லுககிற்கு மாறிவிட்டார்கள். ஆனால் ஒரு திருமண வரவேற்பு வேலைக்கான இன்டர்வியூ நம்மை விட வயதில் குறைந்தவர்கள மத்தியில் நாம் இருக்கும் போது வயதை குறைத்து காட்டுவதில் தவறில்லை. அதற்கு ஹேர் டை கைகொடுக்கும்.
இரவில் சருமம் மற்றும் கூந்தலில் சில பராமரிப்பு செயல்களை மேற்கொண்டால் அது காலை நேர மேக்கப்பை விட கூடுதல் பலன்தரும். சருமமும், கூந்தலும் ஆரோக்கியமாகவும் திகழும்.
தினமும் காலை நேரங்களில் முகம் மற்றும் கூந்தல் அலங்காரம் செய்துகொள்ளும் பெண்களில் பலருக்கும் தெரியாத விஷயம் ஒன்று இருக்கிறது. அதாவது இரவில் சருமம் மற்றும் கூந்தலில் சில பராமரிப்பு செயல்களை மேற்கொண்டால் அது காலை நேர மேக்கப்பை விட கூடுதல் பலன்தரும். சருமமும், கூந்தலும் ஆரோக்கியமாகவும் திகழும்.
இரவில் தூங்கச் செல்வதற்கு முன்பு அழகில் செலுத்தவேண்டிய அக்கறை என்னென்ன தெரியுமா?
இரவில் நன்றாக தூங்கி எழும்போது மனது புத்துணர்ச்சி பெறுவது போன்று, தூங்கி எழும்போது அன் றாடம் சருமமும் புத்துணர்ச்சி பெறும். தூங்கும் இரவு நேரத்தில் தூசுவோ, அழுக்கோ சருமத்தில் படாது. அசுத்தக்காற்றும் அண்டாது. வெயில், சூடு எதுவும் படாமல் சருமம் இரவு நேரத்தில் பாதுகாக்கப்படுகிறது. இத்தகைய பலன்கள் இரவில் சருமத்திற்கு கிடைப்பதால், தூங்கச் செல்வதற்கு முன்னால் சருமத்தை சுத்தப்படுத்தி தயார்படுத்துவதற்கு மறந்துவிடக்கூடாது.
காலை நேரத்தில் முகத்தில் கிரீம் பூசி மேக்கப் போட்டிருப்பீர்கள். அதை முழுமையாக நீக்குவதற்கு கிளன்சிங் செய்வது மிக அவசியம். சருமம் நன்றாக சுவாசிப்பதற்காகவும், தானே புதுப்பித்துக்கொள்வதற்காகவும் இதை செய்யவேண்டும். முகத்தில் இருக்கும் தொற்றுக்கள், தூசுக்கள், எண்ணெய்த் தன்மை போன்றவைகளை போக்கி சருமத்தை சுத்தமாக்கும் பணியை கிளன்சிங் செய்கிறது. சருமத்திற்கு பொருத்தமான ‘பேஸ் வாஷ்’ பயன்படுத்தி முகத்தை சுத்தப்படுத்தவேண்டும்.
பெண்கள் கிளன்சரை வீட்டிலேயே தயார் செய்துகொள்ளலாம். மூன்று பாதாம் பருப்பையும், இரண்டு பெரிய தேக்கரண்டி அரிசியையும் கலந்து நன்றாக அரைத்து தூளாக்குங்கள். அதனை காற்றுப்புகாத பாத்திரத்தில் அடைத்து வைத்துக்கொண்டு தேவைக்கு தக்கபடி பயன்படுத்தவேண்டும். அதில் சிறிதளவு பால் கலந்து கிளன்சராக பயன்படுத்த வேண்டியதுதான்.
பசும்பாலை கொதிக்கவைக்காமல் அப்படியே குளிரச்செய்து அதனை பயன்படுத்தி இரவில் முகத்தில் தேய்த்து, சிறிது நேரம் கழித்து கழுவலாம். வறண்ட சருமம் கொண்டவர்களுக்கு இது சிறந்த கிளன்சராக பயன்படும். எண்ணெய்த்தன்மை நிறைந்த சருமத்தைகொண்டவர்கள் தேன் மற்றும் எலுமிச்சை சாறு சம அளவு எடுத்து முகத்திற்கு கிளன்சராக பயன்படுத்தலாம். சாதாரண சருமமாக இருந்தால் எலுமிச்சை சாறுக்கு பதில் பால் சேர்த்துக்கொள்ளலாம்.
சருமத்தில் இருக்கும் பி.எச்.அளவு சீரற்ற நிலையில் இருந்தால், சரும பிரச்சினைகள் தோன்றும். அதனால் சருமத்தில் ‘டோனிங்’ செய்து பி.எச். அளவை சீராக்கவேண்டும். இரவில் தூங்கச் செல்வதற்கு முன்னால் முகத்தை நன்றாக கழுவினாலும் சரும துவாரங்களில் அழுக்குகள் சேர்ந்திருக்கத்தான் செய்யும். அதனை முழுமையாக நீக்கினால்தான் முக அழகை பாதுகாக்கமுடியும். இதற்கு டோனிங் துணைபுரியும்.
வறண்ட சருமத்திற்கும், எண்ணெய்த்தன்மையான சருமத்திற்கும் பொருத்தமான ‘டோனர்’களை அழகு சாதன பொருட்களை விற்கும் கடைகளில் வாங்கலாம். அதில் ஆல்கஹால் கலக்காததை தேர்வு செய்யவேண்டும்.
கொதித்து ஆறிய நீரை சிறிய பாத்திரத்தில் எடுத்து, அதில் இரண்டு ரோஜா இதழ்களை போட்டு சூரிய வெளிச்சத்தில் ஒரு நாள் முழுக்க வைத்திருங்கள். பின்பு அந்த நீரை வடிகட்டி எடுங்கள். இதுதான் ரோஸ்வாட்டர். இரவில் தூங்கச் செல்வதற்கு முன்பு இதில் பஞ்சை முக்கி, நன்றாக முகத்தை தேய்த்து சுத்தப்படுத்துங்கள். பிரிட்ஜில் குளிரவைத்த கிரீன் டீ அல்லது வெள்ளரிக்காய் சாறு போன்றவற்றையும் ஸ்கின் டோனராக பயன்படுத்தலாம்.
இரவில் நீங்கள் கூந்தலை அவிழ்த்துவிட்டபடி தூங்குபவர்களாக இருந்தால், உங்களுக்கு கூந்தல் மீது அக்கறை இல்லை என்று அர்த்தம். தினமும் இரண்டு முறையாவது தலைமுடியை சீப்பால் நன்றாக சீவவேண்டும். மண்டை ஓட்டில் ரத்த ஓட்டம் அதிகரிக்கவும், கூந்தலின் ஆரோக்கியத்திற்கும் இது ஏற்றது.
கூந்தலை சீவிவிடாமல் இருந்தால் பொடுகு அதிகரிக்கும். பிளாஸ்டிக் சீப்பிற்கு பதில் மரத்தாலான சீப்பை பயன்படுத்தினால் முடி உடைந்துபோவதை ஓரளவு தடுக்கலாம். முடியை நன்றாக சீவி கட்டிவைத்துக்கொண்டு தூங்கவேண்டும். கூந்தலை அவிழ்த்துவிட்டபடி தூங்கினால் தலையணை, போர்வையில் முடி உரசி, உடைந்துபோகும்.
சருமத்தில் தண்ணீர்த்தன்மையை நிலைநிறுத்த துணைபுரிவது, மாய்ஸ்சரைசர். எந்த வகை சருமமாக இருந்தாலும் அதில் மாய்ஸ்சரைசர் பயன்படுத்தலாம். முகத்தில் சுருக்கம் ஏற்பட்டு முதுமை தெரியாமல் இருக்க சருமத்திற்கு தண்ணீர்த்தன்மை மிக முக்கியம். வறண்ட சருமத்தினர் கிரீமை அடிப்படையாகக் கொண்டவற்றையும், எண்ணெய் சருமத்தினர் ஜெல்லை அடிப்படையாகக் கொண்டவற்றையும் வாங்கி பயன்படுத்த வேண்டும். டோனரை சருமம் நன்றாக உறிஞ்சிய பின்பு மாய்ஸ்சரைசரை பயன்படுத்தவேண்டும். ஒரு பெரிய தேக்கரண்டி நிறைய தேங்காய் எண்ணெய்யை எடுத்து அதில் மூன்று துளி வைட்டமின் ஈ ஆயில் கலந்து மாய்ஸ்சரைசராக முகத்தில் பூசலாம்.
இரவில் தூங்கச் செல்வதற்கு முன்பு அழகில் செலுத்தவேண்டிய அக்கறை என்னென்ன தெரியுமா?
இரவில் நன்றாக தூங்கி எழும்போது மனது புத்துணர்ச்சி பெறுவது போன்று, தூங்கி எழும்போது அன் றாடம் சருமமும் புத்துணர்ச்சி பெறும். தூங்கும் இரவு நேரத்தில் தூசுவோ, அழுக்கோ சருமத்தில் படாது. அசுத்தக்காற்றும் அண்டாது. வெயில், சூடு எதுவும் படாமல் சருமம் இரவு நேரத்தில் பாதுகாக்கப்படுகிறது. இத்தகைய பலன்கள் இரவில் சருமத்திற்கு கிடைப்பதால், தூங்கச் செல்வதற்கு முன்னால் சருமத்தை சுத்தப்படுத்தி தயார்படுத்துவதற்கு மறந்துவிடக்கூடாது.
காலை நேரத்தில் முகத்தில் கிரீம் பூசி மேக்கப் போட்டிருப்பீர்கள். அதை முழுமையாக நீக்குவதற்கு கிளன்சிங் செய்வது மிக அவசியம். சருமம் நன்றாக சுவாசிப்பதற்காகவும், தானே புதுப்பித்துக்கொள்வதற்காகவும் இதை செய்யவேண்டும். முகத்தில் இருக்கும் தொற்றுக்கள், தூசுக்கள், எண்ணெய்த் தன்மை போன்றவைகளை போக்கி சருமத்தை சுத்தமாக்கும் பணியை கிளன்சிங் செய்கிறது. சருமத்திற்கு பொருத்தமான ‘பேஸ் வாஷ்’ பயன்படுத்தி முகத்தை சுத்தப்படுத்தவேண்டும்.
பெண்கள் கிளன்சரை வீட்டிலேயே தயார் செய்துகொள்ளலாம். மூன்று பாதாம் பருப்பையும், இரண்டு பெரிய தேக்கரண்டி அரிசியையும் கலந்து நன்றாக அரைத்து தூளாக்குங்கள். அதனை காற்றுப்புகாத பாத்திரத்தில் அடைத்து வைத்துக்கொண்டு தேவைக்கு தக்கபடி பயன்படுத்தவேண்டும். அதில் சிறிதளவு பால் கலந்து கிளன்சராக பயன்படுத்த வேண்டியதுதான்.
பசும்பாலை கொதிக்கவைக்காமல் அப்படியே குளிரச்செய்து அதனை பயன்படுத்தி இரவில் முகத்தில் தேய்த்து, சிறிது நேரம் கழித்து கழுவலாம். வறண்ட சருமம் கொண்டவர்களுக்கு இது சிறந்த கிளன்சராக பயன்படும். எண்ணெய்த்தன்மை நிறைந்த சருமத்தைகொண்டவர்கள் தேன் மற்றும் எலுமிச்சை சாறு சம அளவு எடுத்து முகத்திற்கு கிளன்சராக பயன்படுத்தலாம். சாதாரண சருமமாக இருந்தால் எலுமிச்சை சாறுக்கு பதில் பால் சேர்த்துக்கொள்ளலாம்.
சருமத்தில் இருக்கும் பி.எச்.அளவு சீரற்ற நிலையில் இருந்தால், சரும பிரச்சினைகள் தோன்றும். அதனால் சருமத்தில் ‘டோனிங்’ செய்து பி.எச். அளவை சீராக்கவேண்டும். இரவில் தூங்கச் செல்வதற்கு முன்னால் முகத்தை நன்றாக கழுவினாலும் சரும துவாரங்களில் அழுக்குகள் சேர்ந்திருக்கத்தான் செய்யும். அதனை முழுமையாக நீக்கினால்தான் முக அழகை பாதுகாக்கமுடியும். இதற்கு டோனிங் துணைபுரியும்.
வறண்ட சருமத்திற்கும், எண்ணெய்த்தன்மையான சருமத்திற்கும் பொருத்தமான ‘டோனர்’களை அழகு சாதன பொருட்களை விற்கும் கடைகளில் வாங்கலாம். அதில் ஆல்கஹால் கலக்காததை தேர்வு செய்யவேண்டும்.
கொதித்து ஆறிய நீரை சிறிய பாத்திரத்தில் எடுத்து, அதில் இரண்டு ரோஜா இதழ்களை போட்டு சூரிய வெளிச்சத்தில் ஒரு நாள் முழுக்க வைத்திருங்கள். பின்பு அந்த நீரை வடிகட்டி எடுங்கள். இதுதான் ரோஸ்வாட்டர். இரவில் தூங்கச் செல்வதற்கு முன்பு இதில் பஞ்சை முக்கி, நன்றாக முகத்தை தேய்த்து சுத்தப்படுத்துங்கள். பிரிட்ஜில் குளிரவைத்த கிரீன் டீ அல்லது வெள்ளரிக்காய் சாறு போன்றவற்றையும் ஸ்கின் டோனராக பயன்படுத்தலாம்.
இரவில் நீங்கள் கூந்தலை அவிழ்த்துவிட்டபடி தூங்குபவர்களாக இருந்தால், உங்களுக்கு கூந்தல் மீது அக்கறை இல்லை என்று அர்த்தம். தினமும் இரண்டு முறையாவது தலைமுடியை சீப்பால் நன்றாக சீவவேண்டும். மண்டை ஓட்டில் ரத்த ஓட்டம் அதிகரிக்கவும், கூந்தலின் ஆரோக்கியத்திற்கும் இது ஏற்றது.
கூந்தலை சீவிவிடாமல் இருந்தால் பொடுகு அதிகரிக்கும். பிளாஸ்டிக் சீப்பிற்கு பதில் மரத்தாலான சீப்பை பயன்படுத்தினால் முடி உடைந்துபோவதை ஓரளவு தடுக்கலாம். முடியை நன்றாக சீவி கட்டிவைத்துக்கொண்டு தூங்கவேண்டும். கூந்தலை அவிழ்த்துவிட்டபடி தூங்கினால் தலையணை, போர்வையில் முடி உரசி, உடைந்துபோகும்.
சருமத்தில் தண்ணீர்த்தன்மையை நிலைநிறுத்த துணைபுரிவது, மாய்ஸ்சரைசர். எந்த வகை சருமமாக இருந்தாலும் அதில் மாய்ஸ்சரைசர் பயன்படுத்தலாம். முகத்தில் சுருக்கம் ஏற்பட்டு முதுமை தெரியாமல் இருக்க சருமத்திற்கு தண்ணீர்த்தன்மை மிக முக்கியம். வறண்ட சருமத்தினர் கிரீமை அடிப்படையாகக் கொண்டவற்றையும், எண்ணெய் சருமத்தினர் ஜெல்லை அடிப்படையாகக் கொண்டவற்றையும் வாங்கி பயன்படுத்த வேண்டும். டோனரை சருமம் நன்றாக உறிஞ்சிய பின்பு மாய்ஸ்சரைசரை பயன்படுத்தவேண்டும். ஒரு பெரிய தேக்கரண்டி நிறைய தேங்காய் எண்ணெய்யை எடுத்து அதில் மூன்று துளி வைட்டமின் ஈ ஆயில் கலந்து மாய்ஸ்சரைசராக முகத்தில் பூசலாம்.
கருப்பு உப்பு இறந்த செல் அடுக்குகளை நீக்கி சருமத்திற்கு புத்துணர்ச்சி ஏற்படுத்தும். இளமையான சரும ரகசியத்திற்கு கருப்பு உப்பை பயன்படுத்தும் விதம் குறித்து பார்ப்போம்.
வீட்டு சமையலுக்கு பயன்படுத்தும் இந்து உப்பைவிட சற்று அடர் நிறத்துடன் காணப்படும் கருப்பு உப்பையும் அழகு சாதன மூலப்பொருளாக உபயோகிக்கலாம். இது சருமத்திற்கு பளபளப்பு தன்மையை உண்டாக்குவதோடு இளமையான தோற்றப்பொலிவையும் தக்கவைக்கும். இறந்த செல் அடுக்குகளை நீக்கி சருமத்திற்கு புத்துணர்ச்சி ஏற்படுத்தும். இளமையான சரும ரகசியத்திற்கு கருப்பு உப்பை பயன்படுத்தும் விதம் குறித்து பார்ப்போம்.
சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்குவதோடு ஈரப்பதத்தைதக்கவைக்க, கருப்பு உப்புடன் தேனை பயன்படுத்தலாம். இரண்டு டீஸ்பூன் தேனுடன் அரை டீஸ்பூன் கருப்பு உப்பு சேர்த்து நன்கு கலக்க வேண்டும். பின்பு அந்த பேஸ்டை முகத்தில் தடவி 10 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவ வேண்டும். வாரம் 2 அல்லது 3 முறை இவ்வாறு செய்துவந்தால் நல்ல மாற்றம் ஏற்படும்.
வறண்ட சருமம் கொண்டவர்கள் பாதாம் எண்ணெய்யுடன் கருப்பு உப்பை உபயோகிக்கலாம். பாதாம் எண்ணெய்க்கு ஈரப்பதமூட்டும் தன்மை இருப்பதால் வறண்ட சருமத்திற்கு புத்துணர்ச்சி ஏற்படுத்தி தரும். மூன்று டீஸ்பூன் பாதாம் எண்ணெய்யுடன் ஒரு டீஸ்பூன் கருப்பு உப்பை கலந்து நன்கு குழைத்துக்கொள்ளவும். அதனை முகத்தில் தடவி உலர்ந்ததும் குளிர்ந்த நீரில் முகத்தை கழுவிவிடலாம். பாதாம் எண்ணெய்க்கு பதிலாக தேங்காய் எண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெய்யும் பயன்படுத்தலாம்.
எண்ணெய் பசை தன்மை கொண்ட சருமம் கொண்டவர்கள் ஓட்ஸுடன் கருப்பு உப்பை உபயோகிக்கலாம். அது சருமத்தில் எண்ணெய் சுரப்பை சமன் செய்ய உதவும். ஓட்ஸ் மற்றும் கருப்பு உப்பை சிறிதளவு கலந்து அதனுடன் சிறிதளவு பாதாம் எண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெய் கலந்து நன்கு குழைத்துக்கொள்ளவும். அதனை முகத்தில் தடவி 10 நிமிடங்கள் உலரவிடவும். பின்பு கைகளால் மென்மையாக துடைத்து மசாஜ் செய்துவிட்டு நீரில் கழுவி விடலாம். வாரம் இரண்டு முறை இவ்வாறு செய்துவந்தால் நல்ல மாற்றம் தென்படும். சருமத்தில் எரிச்சல் ஏற்பட்டால் முகத்தை கழுவிய பிறகு ரோஸ் வாட்டரை தடவலாம்.
முகத்தில் கரும்புள்ளி, வெண் புள்ளி, முகப்பரு போன்ற பிரச்சினைகள் இருந்தால் எலுமிச்சை பழத்துடன் கருப்பு உப்பை பயன்படுத்தலாம். இரண்டு டீஸ்பூன் எலுமிச்சை சாறுடன் ஒரு டீஸ்பூன் கருப்பு உப்பை கலந்து முகத்தில் தடவி மென்மையாக மசாஜ் செய்ய வேண்டும். பிறகு நீரில் கழுவி விடலாம்.
சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்குவதோடு ஈரப்பதத்தைதக்கவைக்க, கருப்பு உப்புடன் தேனை பயன்படுத்தலாம். இரண்டு டீஸ்பூன் தேனுடன் அரை டீஸ்பூன் கருப்பு உப்பு சேர்த்து நன்கு கலக்க வேண்டும். பின்பு அந்த பேஸ்டை முகத்தில் தடவி 10 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவ வேண்டும். வாரம் 2 அல்லது 3 முறை இவ்வாறு செய்துவந்தால் நல்ல மாற்றம் ஏற்படும்.
வறண்ட சருமம் கொண்டவர்கள் பாதாம் எண்ணெய்யுடன் கருப்பு உப்பை உபயோகிக்கலாம். பாதாம் எண்ணெய்க்கு ஈரப்பதமூட்டும் தன்மை இருப்பதால் வறண்ட சருமத்திற்கு புத்துணர்ச்சி ஏற்படுத்தி தரும். மூன்று டீஸ்பூன் பாதாம் எண்ணெய்யுடன் ஒரு டீஸ்பூன் கருப்பு உப்பை கலந்து நன்கு குழைத்துக்கொள்ளவும். அதனை முகத்தில் தடவி உலர்ந்ததும் குளிர்ந்த நீரில் முகத்தை கழுவிவிடலாம். பாதாம் எண்ணெய்க்கு பதிலாக தேங்காய் எண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெய்யும் பயன்படுத்தலாம்.
எண்ணெய் பசை தன்மை கொண்ட சருமம் கொண்டவர்கள் ஓட்ஸுடன் கருப்பு உப்பை உபயோகிக்கலாம். அது சருமத்தில் எண்ணெய் சுரப்பை சமன் செய்ய உதவும். ஓட்ஸ் மற்றும் கருப்பு உப்பை சிறிதளவு கலந்து அதனுடன் சிறிதளவு பாதாம் எண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெய் கலந்து நன்கு குழைத்துக்கொள்ளவும். அதனை முகத்தில் தடவி 10 நிமிடங்கள் உலரவிடவும். பின்பு கைகளால் மென்மையாக துடைத்து மசாஜ் செய்துவிட்டு நீரில் கழுவி விடலாம். வாரம் இரண்டு முறை இவ்வாறு செய்துவந்தால் நல்ல மாற்றம் தென்படும். சருமத்தில் எரிச்சல் ஏற்பட்டால் முகத்தை கழுவிய பிறகு ரோஸ் வாட்டரை தடவலாம்.
முகத்தில் கரும்புள்ளி, வெண் புள்ளி, முகப்பரு போன்ற பிரச்சினைகள் இருந்தால் எலுமிச்சை பழத்துடன் கருப்பு உப்பை பயன்படுத்தலாம். இரண்டு டீஸ்பூன் எலுமிச்சை சாறுடன் ஒரு டீஸ்பூன் கருப்பு உப்பை கலந்து முகத்தில் தடவி மென்மையாக மசாஜ் செய்ய வேண்டும். பிறகு நீரில் கழுவி விடலாம்.
சமையலில் பிரதானமாக இடம் பிடிக்கும் பூண்டுவை கொண்டு அழகையும் மேம்படுத்தலாம். பூண்டு பல மருத்துவ குணங்களையும், ஆச்சரியமான அழகு ரகசியங்களையும் கொண்டிருக்கிறது.
சமையலில் பிரதானமாக இடம் பிடிக்கும் பூண்டுவை கொண்டு அழகையும் மேம்படுத்தலாம். பூண்டு பல மருத்துவ குணங்களையும், ஆச்சரியமான அழகு ரகசியங்களையும் கொண்டிருக்கிறது. பூண்டின் ஐந்து அழகு நன்மைகள் குறித்து பார்ப்போம்.
1. முகப்பருவுக்கு பூண்டு சிறந்த நிவாரணம் அளிக்கும். பூண்டுவை தோல் நீக்கி நன்றாக நசுக்கி சாறாக்கவும். முகப்பரு இருக்கும் இடங்களில் பூண்டு சாறுவை தேய்த்துவிட்டு ஐந்து நிமிடம் கழித்து கழுவிவிடலாம். முகத்தில் சிவப்பு நிறத்தில் திட்டுகள், வீக்கம் இருந்தாலும் பூண்டுச் சாறை பயன்படுத்தலாம்.
2. சிலருக்கு முகத்தில் புள்ளிகளும், திட்டுகளும் காணப்படும். ஒரு பூண்டுவை தோல் நீக்கி அதனுடன் பாதி தக்காளி பழத்தை சேர்த்து விழுதாக அரைத்து முகத்தில் தடவவும். 10 நிமிடங்கள் கழித்து முகத்தை கழுவிவிடலாம். தொடர்ந்து இவ்வாறு செய்துவந்தால் முகம் பிரகாசத்துடன் காட்சியளிக்கும்.
3. பிரசவத்திற்கு பிறகு வயிற்றில் படர்ந்திருக்கும் தழும்புகளை நீக்குவதற்கும் பூண்டுவை பயன்படுத்தலாம். பூண்டு சாறுடன் 100 மி.லி. ஆலிவ் எண்ணெய் சேர்த்து சூடாக்கி தழும்பு இருக்கும் இடங்களில் தடவி மசாஜ் செய்து வர வேண்டும். தொடர்ந்து செய்துவந்தால் தழும்புகள் மறைய தொடங்கிவிடும்.
4. உச்சந்தலை, முழங்கைகள், முழங்கால்களில் சிலருக்கு சருமம் சிவத்தல், அரிப்பு போன்ற பிரச்சினைகள் ஏற்படும். இத்தகைய சரும அழற்சிக்கு பூண்டுவை நசுக்கி சருமத்தில் தடவி வரலாம்.
5. வயதாகும்போது சருமத்தில் சுருக்கங்கள் ஏற்படுவது இயல்பானது. ஆனால் இளம் வயதிலேயே நிறைய பேர் சரும சுருக்க பிரச்சினையை எதிர்கொள்கிறார்கள். காலையில் ஒரு டம்ளர் நீரில் ஒரு டேபிள்ஸ்பூன் தேன், எலுமிச்சை சாறுடன் சிறிதளவு பூண்டு சாறை கலந்து பருகி வந்தால் முகத்தில் சுருக்கங்கள் தோன்றாது. இளமையை பாதுகாக்கும் தன்மையும் பூண்டுக்கு இருக்கிறது.
1. முகப்பருவுக்கு பூண்டு சிறந்த நிவாரணம் அளிக்கும். பூண்டுவை தோல் நீக்கி நன்றாக நசுக்கி சாறாக்கவும். முகப்பரு இருக்கும் இடங்களில் பூண்டு சாறுவை தேய்த்துவிட்டு ஐந்து நிமிடம் கழித்து கழுவிவிடலாம். முகத்தில் சிவப்பு நிறத்தில் திட்டுகள், வீக்கம் இருந்தாலும் பூண்டுச் சாறை பயன்படுத்தலாம்.
2. சிலருக்கு முகத்தில் புள்ளிகளும், திட்டுகளும் காணப்படும். ஒரு பூண்டுவை தோல் நீக்கி அதனுடன் பாதி தக்காளி பழத்தை சேர்த்து விழுதாக அரைத்து முகத்தில் தடவவும். 10 நிமிடங்கள் கழித்து முகத்தை கழுவிவிடலாம். தொடர்ந்து இவ்வாறு செய்துவந்தால் முகம் பிரகாசத்துடன் காட்சியளிக்கும்.
3. பிரசவத்திற்கு பிறகு வயிற்றில் படர்ந்திருக்கும் தழும்புகளை நீக்குவதற்கும் பூண்டுவை பயன்படுத்தலாம். பூண்டு சாறுடன் 100 மி.லி. ஆலிவ் எண்ணெய் சேர்த்து சூடாக்கி தழும்பு இருக்கும் இடங்களில் தடவி மசாஜ் செய்து வர வேண்டும். தொடர்ந்து செய்துவந்தால் தழும்புகள் மறைய தொடங்கிவிடும்.
4. உச்சந்தலை, முழங்கைகள், முழங்கால்களில் சிலருக்கு சருமம் சிவத்தல், அரிப்பு போன்ற பிரச்சினைகள் ஏற்படும். இத்தகைய சரும அழற்சிக்கு பூண்டுவை நசுக்கி சருமத்தில் தடவி வரலாம்.
5. வயதாகும்போது சருமத்தில் சுருக்கங்கள் ஏற்படுவது இயல்பானது. ஆனால் இளம் வயதிலேயே நிறைய பேர் சரும சுருக்க பிரச்சினையை எதிர்கொள்கிறார்கள். காலையில் ஒரு டம்ளர் நீரில் ஒரு டேபிள்ஸ்பூன் தேன், எலுமிச்சை சாறுடன் சிறிதளவு பூண்டு சாறை கலந்து பருகி வந்தால் முகத்தில் சுருக்கங்கள் தோன்றாது. இளமையை பாதுகாக்கும் தன்மையும் பூண்டுக்கு இருக்கிறது.
பழங்காலக் கலைகள் எண்ணற்றவை இந்தியாவில் இருந்தாலும், பாந்தினி புடவையின் பாரம்பரியம் தனித்துவமானது. பாந்தினி ரகப் புடவைகள் பருத்தி, மஸ்லின், பட்டு உள்ளிட்ட துணிகளில் தயாராகின்றன.
ஜவுளித் தொழில்நுட்பத்தில் என்னதான் புதுமைகள், நவீனங்கள் வந்தாலும், காலத்தை வென்று நிற்கும் பழங்கால கலைநுட்பங்களுக்கு அவை ஈடாகாது. அப்படிப்பட்ட பழங்காலக் கலைகள் எண்ணற்றவை இந்தியாவில் இருந்தாலும், பாந்தினி புடவையின் பாரம்பரியம் தனித்துவமானது. குஜராத்தி, ராஜஸ்தான் போன்ற வடஇந்திய பாரம்பரிய ஜவுளிகளில் பளிச் நிறம் கொண்ட, விதவிதமான டிசைன்களில் சாயமேற்றப்பட்ட புடவைகளை நீங்கள் பார்த்திருக்கலாம். வரையப்பட்ட டிசைனுக்கு ஏற்ப, துணியை விரல்நகங்களைப் பயன்படுத்தி சுங்கிட்டு அதன் பின்பு சாயமேற்றித் தயாரிக்கப்படும் புடவை வகைகள்தான் பாந்தினி புடவைகள்.
இவ்வகைப் புடவைகளில் அதிகம் பயன்படுத்தப்படும் வண்ணங்கள் மஞ்சள், சிவப்பு, மெரூன், நீலம், பச்சை, மற்றும் கருப்பு. இதில் பயன்படுத்தப்படும் முக்கிய நிறங்கள் இயற்கையானவை. முடிச்சிட்டு சாயமிடும் முறை கைகளால் செய்யப்படுவதால், அது சிறந்த வண்ணங்களின் காம்பினேஷன் ஆக வெளிப்படுகிறது.
சிவப்பு மற்றும் மெரூன் நிறங்கள் அதிகம் பயன்படுத்தப்படுகின்றன. பாந்தினியின் வெவ்வேறு நிறங்கள், வெவ்வேறு அர்த்தங்கள் அளிப்பதாக நம்புகின்றனர். உதாரணத்திற்கு, புதிதாக திருமணமானவர்கள் சிவப்பு நிறம் அணிந்தால் நல்லதிர்ஷ்டமாம் என்பது பராம்பரியமான நம்பிக்கையாக கருதப்படுகிறது.
பாந்தினி ரகப் புடவைகள் பருத்தி, மஸ்லின், பட்டு உள்ளிட்ட துணிகளில் தயாராகின்றன. இந்த டிசைனில் புடவைகள் மட்டுமல்லாமல், காக்ரா சோளி, சுடிதார் ஷால், டர்பன் போன்ற ஆடைகளும் தயாராகின்றன. பல்லாயிரம் ஆண்டுகளாக இந்தியர்களின் விருப்பத்துக்குரிய புடவைகளாக விளங்கிவரும் பாந்தினி சேலைகளை மக்கள் அதிகம் விரும்புவதால், இவற்றின் தேவையும் விற்பனையும் கடந்த சில பத்தாண்டுகளாக அதிகரித்துள்ளது. குறிப்பாகத் திருமணம், விழாக்காலங்களில் அதிகம் உடுத்தப்படுகிறது.
புடவை கடைகளிலும், ஆன்லைன் ஷாப்பிங் தளங்களிலும் இப்போது பரபரப்பாக விற்பனை ஆவது லினன் புடவைகள். லினன் எனபது ஆளி (Flax) செடியின் நாரிலிருந்து தயாராகும் ஒரு நூல். பருத்தி போன்றே மிகவும் மென்மையானது. இதனை தயாரிக்கும் முறை சிறிது கடினமானதால், பருத்தியை விட விலை அதிகமாக இருக்கும். லினன் ஆடைகள் நூலிழைகளின் நடுவே மிகுந்த இடைவெளியுடன் காணப்படும். அதிகம் உறிஞ்சும் தன்மை மற்றும் விரைவில் உலரும் தன்மை கொண்டதால் வெப்ப பிரதேசத்தல் உள்ளவர்கள் உடுத்தஏற்ற ஆடை ரகமாகும். லினன் ஆடைகள் வேலைக்கு செல்பவர்கள் அணிய உகந்தவை.
இவ்வகைப் புடவைகளில் அதிகம் பயன்படுத்தப்படும் வண்ணங்கள் மஞ்சள், சிவப்பு, மெரூன், நீலம், பச்சை, மற்றும் கருப்பு. இதில் பயன்படுத்தப்படும் முக்கிய நிறங்கள் இயற்கையானவை. முடிச்சிட்டு சாயமிடும் முறை கைகளால் செய்யப்படுவதால், அது சிறந்த வண்ணங்களின் காம்பினேஷன் ஆக வெளிப்படுகிறது.
சிவப்பு மற்றும் மெரூன் நிறங்கள் அதிகம் பயன்படுத்தப்படுகின்றன. பாந்தினியின் வெவ்வேறு நிறங்கள், வெவ்வேறு அர்த்தங்கள் அளிப்பதாக நம்புகின்றனர். உதாரணத்திற்கு, புதிதாக திருமணமானவர்கள் சிவப்பு நிறம் அணிந்தால் நல்லதிர்ஷ்டமாம் என்பது பராம்பரியமான நம்பிக்கையாக கருதப்படுகிறது.
பாந்தினி ரகப் புடவைகள் பருத்தி, மஸ்லின், பட்டு உள்ளிட்ட துணிகளில் தயாராகின்றன. இந்த டிசைனில் புடவைகள் மட்டுமல்லாமல், காக்ரா சோளி, சுடிதார் ஷால், டர்பன் போன்ற ஆடைகளும் தயாராகின்றன. பல்லாயிரம் ஆண்டுகளாக இந்தியர்களின் விருப்பத்துக்குரிய புடவைகளாக விளங்கிவரும் பாந்தினி சேலைகளை மக்கள் அதிகம் விரும்புவதால், இவற்றின் தேவையும் விற்பனையும் கடந்த சில பத்தாண்டுகளாக அதிகரித்துள்ளது. குறிப்பாகத் திருமணம், விழாக்காலங்களில் அதிகம் உடுத்தப்படுகிறது.
புடவை கடைகளிலும், ஆன்லைன் ஷாப்பிங் தளங்களிலும் இப்போது பரபரப்பாக விற்பனை ஆவது லினன் புடவைகள். லினன் எனபது ஆளி (Flax) செடியின் நாரிலிருந்து தயாராகும் ஒரு நூல். பருத்தி போன்றே மிகவும் மென்மையானது. இதனை தயாரிக்கும் முறை சிறிது கடினமானதால், பருத்தியை விட விலை அதிகமாக இருக்கும். லினன் ஆடைகள் நூலிழைகளின் நடுவே மிகுந்த இடைவெளியுடன் காணப்படும். அதிகம் உறிஞ்சும் தன்மை மற்றும் விரைவில் உலரும் தன்மை கொண்டதால் வெப்ப பிரதேசத்தல் உள்ளவர்கள் உடுத்தஏற்ற ஆடை ரகமாகும். லினன் ஆடைகள் வேலைக்கு செல்பவர்கள் அணிய உகந்தவை.
அழகை பொறுத்தவரையில் முகம் மற்றும் கைகளுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை கால்களுக்கு கொடுக்க மறந்து விடுவோம். இந்த வழிமுறைகளையெல்லாம் கடைப்பித்து வந்தால் கால்களை அழகாக வைத்து கொள்ளலாம்.
நாம் அனைவரும் எப்போதும் அழகாக இருக்க வேண்டும் என்று தான் நினைப்போம். ஆனால் அழகை பொறுத்தவரையில் முகம் மற்றும் கைகளுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை கால்களுக்கு கொடுக்க மறந்து விடுவோம். நமது உடலின் பாரத்தை சுமப்பதே கால்கள் தான். அத்தகைய கால்களை எப்போதும் பொலிவோடு வைத்துக்கொள்ள ஒரு சில டிப்ஸ்...
அழுக்குகள் இருப்பதால் தான் கால்கள் பெரும்பாலும் பொலிவிழந்து காணப்படுகின்றன. கால்களுக்கான ஸ்கிரப்பர் போட்டு ஊற வைத்து தேய்க்கும் போது இறந்த செல்கள் நீங்கி, நன்கு சுத்தமாக இருக்கும். கல் உப்பு மற்றும் மஞ்சள் கலந்த வெதுவெதுப்பான நீரில் அரை மணி நேரம் கால்களை ஊறவைத்து பின்பு நன்றாக தேய்த்து கழுவினால் நல்ல பலன் கிடைக்கும்.
காலணிகளை தேர்வு செய்வதில் மிகவும் கவனமாக இருகக வேண்டும். ஸ்டைலுக்காக தேர்ந்தெடுக்கும் காலணிகளால் கூட கால்களுக்கு அதிகமான பிரச்சனைகள் வரலாம். நாம் நடப்பதற்கு ஏதுவான வகையில் காலணிகளை தேர்ந்தேடுக்க வேண்டும்.
பாதங்களை அதிகமாக பாதிப்பவை, பித்த வெடிப்புகளும், விரல் இடுக்குகளில் ஏற்படும் புண்களும் தான். மருதாணி இலைகளை நன்றாக அரைத்து பித்த வெடிப்பு உள்ள இடங்களில் தேய்த்து உலர விட வேண்டும். பின்பு தண்ணீரால் கழுவி விட வேண்டும். இவ்வாறு செய்தால் நாளடைவில் பித்த வெடிப்பு குணமாகும்.
மருத்துவ மூலிகைகளான மஞ்சளும், வேம்பும் பாதங்களை பாதுகாப்பபதில் மிக முக்கியமானவை, வேப்பிலை, மஞ்சளுடன் சிறிதளவு சுண்ணாம்பு சேர்த்து அரைக்க வேண்டும். இந்த கலவையில் விளக்கெண்ணெய் சேர்த்து பித்த வெடிப்பு உள்ள இடங்களில் பூசலாம்.
கால்கள் தாங்கும் அளவிற்று தண்ணீரை சூடுபடுத்தி அதில் சிறிதளவு உப்பு மற்றும் எலுமிச்சை சாறு சேர்க்க வேண்டும், அந்த தண்ணீரில் பாதத்தை சிறிது நேரம்வைத்திருந்து பின் ஸ்கிரப்பர் போட்டு தேய்த்து கழுவினால்பாதத்தில் இருக்கும் இறந்த செல்கள் உதிர்ந்து விடும். இதனால் பித்த வெடிப்பு ஏற்படுவது தவிர்க்கப்படுவதோடு பாதம் பட்டு போன்று மென்மையாக காணப்படும்.
குளித்து முடித்ததும் பாதங்களை ஈரமில்லாதவாறு துணியால் துடைக்க வேண்டும். இரவு நேரத்தில் உறங்கபோகும் முன் பாதங்களை நன்றாக தேய்த்து கழுவி சிறிது தேங்காய் எண்ணெய் தடவி விட வேண்டும். இந்த வழிமுறைகளையெல்லாம் கடைப்பித்து வந்தால் கால்களை அழகாக வைத்து கொள்ளலாம்.
அழுக்குகள் இருப்பதால் தான் கால்கள் பெரும்பாலும் பொலிவிழந்து காணப்படுகின்றன. கால்களுக்கான ஸ்கிரப்பர் போட்டு ஊற வைத்து தேய்க்கும் போது இறந்த செல்கள் நீங்கி, நன்கு சுத்தமாக இருக்கும். கல் உப்பு மற்றும் மஞ்சள் கலந்த வெதுவெதுப்பான நீரில் அரை மணி நேரம் கால்களை ஊறவைத்து பின்பு நன்றாக தேய்த்து கழுவினால் நல்ல பலன் கிடைக்கும்.
காலணிகளை தேர்வு செய்வதில் மிகவும் கவனமாக இருகக வேண்டும். ஸ்டைலுக்காக தேர்ந்தெடுக்கும் காலணிகளால் கூட கால்களுக்கு அதிகமான பிரச்சனைகள் வரலாம். நாம் நடப்பதற்கு ஏதுவான வகையில் காலணிகளை தேர்ந்தேடுக்க வேண்டும்.
பாதங்களை அதிகமாக பாதிப்பவை, பித்த வெடிப்புகளும், விரல் இடுக்குகளில் ஏற்படும் புண்களும் தான். மருதாணி இலைகளை நன்றாக அரைத்து பித்த வெடிப்பு உள்ள இடங்களில் தேய்த்து உலர விட வேண்டும். பின்பு தண்ணீரால் கழுவி விட வேண்டும். இவ்வாறு செய்தால் நாளடைவில் பித்த வெடிப்பு குணமாகும்.
மருத்துவ மூலிகைகளான மஞ்சளும், வேம்பும் பாதங்களை பாதுகாப்பபதில் மிக முக்கியமானவை, வேப்பிலை, மஞ்சளுடன் சிறிதளவு சுண்ணாம்பு சேர்த்து அரைக்க வேண்டும். இந்த கலவையில் விளக்கெண்ணெய் சேர்த்து பித்த வெடிப்பு உள்ள இடங்களில் பூசலாம்.
கால்கள் தாங்கும் அளவிற்று தண்ணீரை சூடுபடுத்தி அதில் சிறிதளவு உப்பு மற்றும் எலுமிச்சை சாறு சேர்க்க வேண்டும், அந்த தண்ணீரில் பாதத்தை சிறிது நேரம்வைத்திருந்து பின் ஸ்கிரப்பர் போட்டு தேய்த்து கழுவினால்பாதத்தில் இருக்கும் இறந்த செல்கள் உதிர்ந்து விடும். இதனால் பித்த வெடிப்பு ஏற்படுவது தவிர்க்கப்படுவதோடு பாதம் பட்டு போன்று மென்மையாக காணப்படும்.
குளித்து முடித்ததும் பாதங்களை ஈரமில்லாதவாறு துணியால் துடைக்க வேண்டும். இரவு நேரத்தில் உறங்கபோகும் முன் பாதங்களை நன்றாக தேய்த்து கழுவி சிறிது தேங்காய் எண்ணெய் தடவி விட வேண்டும். இந்த வழிமுறைகளையெல்லாம் கடைப்பித்து வந்தால் கால்களை அழகாக வைத்து கொள்ளலாம்.
நீங்கள் கடுமையான வறண்ட சருமத்தால் பாதிக்கப்படுகிறீர்கள் எனில் நெய் சிறந்த தீர்வாக இருக்கும். நல்ல சுத்தமான நெய் வாங்கி உணவில் மட்டுமல்லாது, உங்கள் சருமத்திற்கும் உபயோகித்து பெரும் பயன் பெறுங்கள்.
உதடு காய்ந்து, கருமையாக இருந்தால், நெய் தடவி வாருங்கள். மிருதுவான, ரோஸ் நிறத்தில் மாறிவிடும். கண்களைச் சுற்றி உள்ள கருமையைப் போக்க, பயப்படாமல் நெய் தடவலாம். கண்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படுத்தாது. நல்ல விளைவையும் தரும். உங்களுக்கு வறண்ட சருமம் இருந்தால், குளிப்பதற்கு முன் நன்றாக தடவி ஊறவைத்து 15 நிமிடங்கள் களித்து குளித்துக்கொள்ளுங்கள். மிருதுவான, மென்மையான சருமம் கிடைக்கும்.
1. பாலுடன், கடலைமாவு மற்றும் நெய் சேர்த்து கலந்து கொள்ளுங்கள். முகத்தில் பூசி 20 நிமிடம் ஊறவைத்து, கழுவுங்கள். அழகான பொலிவான முகம் கிடைத்துவிடும்.
2. ஒரு தேக்கரண்டி நெய்யோடு, ஒரு தேக்கரண்டி தேன் சேர்த்துக்கொள்ளுங்கள். பின்னர் இதில் பச்சைப்பாலை கலந்து கொள்ளுங்கள். குளிர்காலங்களில் சருமம் வறண்டு போனால் இந்தக் முகப்பூச்சு உபயோகித்தால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
3. ஆயுர்வேத மருத்துவத்தில் மிக அதிகமாக பங்குபெரும் நெய், புண்களுக்கும், சருமத்தில் உள்ள கரைகளுக்கும் எப்படி தீர்வாகும் என்று பார்க்கலாம். 100 கிராம் நெய்யில் சிறிது தண்ணீர் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள், பின்னர் நீரை மட்டும் வடித்து விடுங்கள். மீண்டும் சிறிது தண்ணீர் சேர்த்து மேலும் நன்றாக கலக்குங்கள். பின்னர் நீரை மட்டும் வடித்து விடுங்கள். இந்த முறையை எவ்வளவு முறை வேண்டுமானாலும் செய்யலாம். ப்ளெண்டர் பயன்படுத்தலாம். 20 முறை குறைந்தது செய்ய வேண்டும். இப்படி செய்யும்போது, நெய் நிறம் மாறி வெள்ளை நிறமாகும். இதை உடலின் வெளிப்புறத்தில் மட்டுமே பயன்படுத்த வேண்டும். உட்கொள்ளக்கூடாது.
வெயிலில் சென்று கருத்த தோள்(skin), பருக்களால் ஏற்பட்ட கருமை, தழும்பு, அரிப்பு போன்ற எந்த சரும பிரச்சனைக்கும் இதைப் பயன்படுத்தலாம்.
நீங்கள் கடுமையான வறண்ட சருமத்தால் பாதிக்கப்படுகிறீர்கள் எனில் நெய் சிறந்த தீர்வாக இருக்கும். ஒரு துளி நெய் எடுத்து முகத்தில், கை, கால்களில் அப்ளை செய்து சில நிமிடங்களுக்கு மசாஜ் செய்யுங்கள். இதனால் சருமம் ஈரப்பதத்தை உறிஞ்சி வறட்சி இல்லாமல் பாதுகாக்கும்.
முகத்தில் சுருக்கங்கள் இருப்பின் நெய் தினமும் தடவ சுருக்கங்கள் நீங்கும். நெய்யில் விட்டமின் ஈ இருப்பதால் சருமத்தின் அழகை மேம்படுத்தும்.
குளிப்பதற்கு முன் வாசனை எண்ணெயுடன் 10 சொட்டு நெய் கலந்து கைகால்களில் தேய்த்து ஒரு மணி நேரம் கழித்து குளிக்க சூப்பர் ஃபிரெஷாக உணர்வீர்கள்.
சருமம் பொலிவிழந்து களையிழந்து காணப்பட்டால் நெய் தடவி மசாஜ் செய்தால் முகம் பிரெஷான பொலிவு பெறும். கண்களை சுற்றி கருவளையம் இருந்தாலும் நெய் தடவலாம்.
வறண்ட உதடுடன் போராடுகிறீர்கள் எனில் தினமும் நெய் தடவி வாருங்கள். வறட்சி மட்டுமன்றி பிங் உதடும் கிடைக்கும். தூங்கும் முன் தினமும் உதட்டில் நெய் தடவி மசாஜ் செய்யலாம். இதனால் இரத்த ஓட்டம் அதிகரித்து கருமையான உதடு மாறும்.
1. பாலுடன், கடலைமாவு மற்றும் நெய் சேர்த்து கலந்து கொள்ளுங்கள். முகத்தில் பூசி 20 நிமிடம் ஊறவைத்து, கழுவுங்கள். அழகான பொலிவான முகம் கிடைத்துவிடும்.
2. ஒரு தேக்கரண்டி நெய்யோடு, ஒரு தேக்கரண்டி தேன் சேர்த்துக்கொள்ளுங்கள். பின்னர் இதில் பச்சைப்பாலை கலந்து கொள்ளுங்கள். குளிர்காலங்களில் சருமம் வறண்டு போனால் இந்தக் முகப்பூச்சு உபயோகித்தால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
3. ஆயுர்வேத மருத்துவத்தில் மிக அதிகமாக பங்குபெரும் நெய், புண்களுக்கும், சருமத்தில் உள்ள கரைகளுக்கும் எப்படி தீர்வாகும் என்று பார்க்கலாம். 100 கிராம் நெய்யில் சிறிது தண்ணீர் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள், பின்னர் நீரை மட்டும் வடித்து விடுங்கள். மீண்டும் சிறிது தண்ணீர் சேர்த்து மேலும் நன்றாக கலக்குங்கள். பின்னர் நீரை மட்டும் வடித்து விடுங்கள். இந்த முறையை எவ்வளவு முறை வேண்டுமானாலும் செய்யலாம். ப்ளெண்டர் பயன்படுத்தலாம். 20 முறை குறைந்தது செய்ய வேண்டும். இப்படி செய்யும்போது, நெய் நிறம் மாறி வெள்ளை நிறமாகும். இதை உடலின் வெளிப்புறத்தில் மட்டுமே பயன்படுத்த வேண்டும். உட்கொள்ளக்கூடாது.
வெயிலில் சென்று கருத்த தோள்(skin), பருக்களால் ஏற்பட்ட கருமை, தழும்பு, அரிப்பு போன்ற எந்த சரும பிரச்சனைக்கும் இதைப் பயன்படுத்தலாம்.
நீங்கள் கடுமையான வறண்ட சருமத்தால் பாதிக்கப்படுகிறீர்கள் எனில் நெய் சிறந்த தீர்வாக இருக்கும். ஒரு துளி நெய் எடுத்து முகத்தில், கை, கால்களில் அப்ளை செய்து சில நிமிடங்களுக்கு மசாஜ் செய்யுங்கள். இதனால் சருமம் ஈரப்பதத்தை உறிஞ்சி வறட்சி இல்லாமல் பாதுகாக்கும்.
முகத்தில் சுருக்கங்கள் இருப்பின் நெய் தினமும் தடவ சுருக்கங்கள் நீங்கும். நெய்யில் விட்டமின் ஈ இருப்பதால் சருமத்தின் அழகை மேம்படுத்தும்.
குளிப்பதற்கு முன் வாசனை எண்ணெயுடன் 10 சொட்டு நெய் கலந்து கைகால்களில் தேய்த்து ஒரு மணி நேரம் கழித்து குளிக்க சூப்பர் ஃபிரெஷாக உணர்வீர்கள்.
சருமம் பொலிவிழந்து களையிழந்து காணப்பட்டால் நெய் தடவி மசாஜ் செய்தால் முகம் பிரெஷான பொலிவு பெறும். கண்களை சுற்றி கருவளையம் இருந்தாலும் நெய் தடவலாம்.
வறண்ட உதடுடன் போராடுகிறீர்கள் எனில் தினமும் நெய் தடவி வாருங்கள். வறட்சி மட்டுமன்றி பிங் உதடும் கிடைக்கும். தூங்கும் முன் தினமும் உதட்டில் நெய் தடவி மசாஜ் செய்யலாம். இதனால் இரத்த ஓட்டம் அதிகரித்து கருமையான உதடு மாறும்.
உங்களுக்கு சாதத்தில் நெய் ஊற்றி சாப்பிடுவது என்றால் மிகவும் பிடிக்குமா..? அப்போ நிச்சயம் அதன் நன்மைகளையும் தெரிந்துகொள்ளுங்கள். கூந்தலில் நெய் எப்படி எல்லாம் பயன்படுத்தலாம் என்று பார்க்கலாம்.
உங்களுக்கு சாதத்தில் நெய் ஊற்றி சாப்பிடுவது என்றால் மிகவும் பிடிக்குமா..? அப்போ நிச்சயம் அதன் நன்மைகளையும் தெரிந்துகொள்ளுங்கள். கூந்தலில் நெய் எப்படி எல்லாம் பயன்படுத்தலாம் என்று பார்க்கலாம்.
நெய்யை லேசாக சூடு செய்து, தலையில் தேய்த்து ஊறவைத்து குளித்துக்கொள்ளுங்கள். கூந்தலை கூடுதல் மிருதுவாகவும், பொலிவாகவும் வைக்க உதவும். கூந்தல் நன்றாக வளரும். கூந்தலுக்கு நல்ல கண்டிஷன் செய்ததுபோல இருக்கும். கூந்தலை வறண்டு போகாமல், ஆரோக்கியமாக ஈரப்பதமாக வைத்துக்கொள்ளும்,.
1. பொடுகுத் தொல்லை : நெய் மற்றும் பாதாம் எண்ணெய் இரண்டையும் நன்றாக கலந்து கொள்ளுங்கள். இந்தக் கலவையை தலையில் நன்றாக தேய்த்துக் கொண்டு ஊறவைக்கவும். பின்னர் கழுவி விடுங்கள்.
2. கூந்தல் நிறம் குறைந்திருந்தால் : எலுமிச்சை சாறுடன் நெய் சேர்த்து கூந்தலில் தேய்த்துக்கொள்ளுங்கள். பத்து நிமிடம் ஊறியதும் குளித்து விடுங்கள். உங்கள் கூந்தலில் இயற்கையான பொலிவைப் பார்க்கலாம்.
3. இளநரை மற்றும் சொரியாசிஸ் : இளநரை மற்றும் சொரியாசிஸ் உள்ளவர்கள், மருத்துவ குணம் கொண்ட நெய் தடவி மசாஜ் செய்து வந்தால், நல்ல தீர்வு கிடைக்கும்.
4. கூந்தல் அடர்திக்கு : நெய்யோடு, நெல்லிக்காய் ஜூஸ் மற்றும் வெங்காயச்சாறு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள். தலையில் தேய்த்து நன்றாக மசாஜ் செய்யுங்கள். விரைவில் உங்கள் கூந்தல் உதிர்வது குறைந்து நன்றாக வளரும்.
நெய்யை லேசாக சூடு செய்து, தலையில் தேய்த்து ஊறவைத்து குளித்துக்கொள்ளுங்கள். கூந்தலை கூடுதல் மிருதுவாகவும், பொலிவாகவும் வைக்க உதவும். கூந்தல் நன்றாக வளரும். கூந்தலுக்கு நல்ல கண்டிஷன் செய்ததுபோல இருக்கும். கூந்தலை வறண்டு போகாமல், ஆரோக்கியமாக ஈரப்பதமாக வைத்துக்கொள்ளும்,.
1. பொடுகுத் தொல்லை : நெய் மற்றும் பாதாம் எண்ணெய் இரண்டையும் நன்றாக கலந்து கொள்ளுங்கள். இந்தக் கலவையை தலையில் நன்றாக தேய்த்துக் கொண்டு ஊறவைக்கவும். பின்னர் கழுவி விடுங்கள்.
2. கூந்தல் நிறம் குறைந்திருந்தால் : எலுமிச்சை சாறுடன் நெய் சேர்த்து கூந்தலில் தேய்த்துக்கொள்ளுங்கள். பத்து நிமிடம் ஊறியதும் குளித்து விடுங்கள். உங்கள் கூந்தலில் இயற்கையான பொலிவைப் பார்க்கலாம்.
3. இளநரை மற்றும் சொரியாசிஸ் : இளநரை மற்றும் சொரியாசிஸ் உள்ளவர்கள், மருத்துவ குணம் கொண்ட நெய் தடவி மசாஜ் செய்து வந்தால், நல்ல தீர்வு கிடைக்கும்.
4. கூந்தல் அடர்திக்கு : நெய்யோடு, நெல்லிக்காய் ஜூஸ் மற்றும் வெங்காயச்சாறு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள். தலையில் தேய்த்து நன்றாக மசாஜ் செய்யுங்கள். விரைவில் உங்கள் கூந்தல் உதிர்வது குறைந்து நன்றாக வளரும்.
வயதுக்குதக்கபடிதான் பெண்கள் அழகுசாதனப் பொருட்களை பயன்படுத்தி அலங்காரம் செய்துகொள்ளவேண்டும். அழகில் பெண்கள் தவிர்க்கவேண்டிய முக்கியமான ஐந்து விஷயங்கள் என்னவென்று பார்க்கலாம்.
பெண்களுக்கு அழகு மிகவும் அவசியம். அதனால் அவர்கள் இயற்கையான முறையில் அழகை மேம்படுத்தலாம். ஆனால் செயற்கையான அழகுக்கு அடிமையாகிவிடக்கூடாது. மேலும் வயதுக்குதக்கபடிதான் பெண்கள் அழகுசாதனப் பொருட்களை பயன்படுத்தி அலங்காரம் செய்துகொள்ளவேண்டும். இளம் பருவத்திலேயே தேவையற்ற அழகு சிகிச்சைகளை மேற்கொள்வது எதிர்காலத்துக்கு ஏற்புடையதல்ல.
அழகில் பெண்கள் தவிர்க்கவேண்டிய முக்கியமான ஐந்து விஷயங்கள்!
1. பேஷியல் 30 வயதுக்கு முன்பு வேண்டாம்
பெண்களின் முகத்தில் பொலிவையும், மென்மையையும் உருவாக்க துணைபுரிவதுதான் ‘பேஷியல்’. பலவகையான பேஷியல்கள் இப்போது நடைமுறையில் உள்ளன. அதை பார்த்து பெண்களும் ஈர்க்கப்படுகிறார்கள். ஆனால் 15 முதல் 30 வயதுக்கு உள்பட்ட பெண்களுக்கு பேஷியல் தேவையில்லை. ஏன்என்றால் இந்த வயதில் பெண்களின் முகம் இயல்பாகவே அழகாகவும், மென்மையாகவும் இருக்கும். 30 வயதுக்கு மேல் பேஷியல் செய்துகொள்ளலாம். இரவுப் பணி செய்யும் பெண்களின் முகத்தில் முப்பது வயதுக்கு மேல் சுருக்கமும், இறுக்கமும் தோன்றும். அவர்களுக்கு பேஷியல் பொலிவைத் தரும். பழங்களை பயன்படுத்தி செய்யும் புரூட் பேஷியல் சிறந்தது.
2. வாக்சிங் செய்வதை குறையுங்கள்
நரையை மறைப்பதற்காக செய்யப்படும் ‘டை’, புற்றுநோயை உருவாக்கும் என்று மருத்துவ ஆய்வுகள் வெளிப்படுத்துகின்றன. டையில் இருக்கும் ரசாயனங்கள் முடியை பலவீனமாக்குகின்றன. சிலருக்கு அலர்ஜியை உருவாக்குகிறது. மேலும் அடிக்கடி டை பூசினால், சருமத்தின் நிறமும் மாறும். அதனால் டை பூசுவதை குறையுங்கள். தேவைப்பட்டால் ஹெர்பல் டையை பயன்படுத்துங்கள்.
வாக்சிங் செய்யும் பெண்கள் சருமத்திற்கு நான்கு முதல் 6 வாரங்கள் வரை இடைவேளை கொடுக்கலாம். முடி துளிர்த்த உடனே வாக்சிங் செய்யவேண்டும் என்ற அவசியம் இல்லை. அடிக்கடி வாக்சிங் செய்வது சருமத்தில் அலர்ஜியையும், பருக்களையும் தோற்றுவிக்கும்.
3. கூந்தலுக்கு வேண்டாம் ரசாயனம்
கூந்தல் நீண்டு மினுமினுப்பாக காட்சியளிக்க பெண்களில் சிலர் ஸ்ட்ரெயிட்டனிங் மற்றும் ஸ்மூத்னிங் போன்றவைகளை செய்கிறார்கள். ஆனால் இவைகளுக்காக பயன்படுத்தப்படும் ரசாயனம் மற்றும் அயர்னிங் போன்றவை கூந்தலை பலவீனப்படுத்தி வறண்ட தன்மையை உருவாக்குகிறது. முடி விரைவாக முறிந்துபோகவும் செய்யும். இவைகளை அடிக்கடி செய்தால் மண்டை ஓட்டின் ஆரோக்கியம் பாதிக்கப்பட்டு சொறி போன்றவையும் தோன்றும். ரசாயனத்தால் மயிர்க்கால்கள் பாதிக்கப்பட்டு முடி அதிகமாக உதிரவும் செய்யும். அதனால் கூந்தலுக்கு ரசாயன பயன்பாட்டை குறைத்திடுங்கள்.
4. அழகு நிலைய சிகிச்சைகள் அவசியமில்லை
முகத்தில் தோன்றும் புள்ளிகள், பருக்கள், படைகள் போன்ற பலவற்றையும் பல்வேறு அழகு நிலையங்களில் நீக்குகிறார்கள். ஆனால் இதை எல்லாம் சரும நோய் டாக்டர்கள் செய்வதுதான் மருத்துவரீதியிலான அணுகுமுறையாக இருக்கும். இதற்கான சிகிச்சைகளுக்கு மின்சாரத்தில் இயங்கும் உபகரணங்களை பயன்படுத்துவார்கள். அவைகளை மிகுந்த சுத்தத்தோடும், கவனத்தோடும் பராமரிக்கவேண்டும். அதனால் இத்தகைய சரும சிகிச்சைகளில் பெண்கள் அதிக கவனத்தை செலுத்தவேண்டியது அவசியம்.
5. பிளீச்சிங் அடிக்கடி வேண்டாம்
பெண்களின் முகத்தில் இருக்கும் கறுப்பு ரோமங்களுக்கு நிற வித்தியாசத்தை உருவாக்குவது, பிளீச்சிங். முகத்திற்கு நல்ல நிறம் கிடைக்கவும் இது உதவும் என்றாலும், இதில் சேர்க்கப்பட்டிருக்கும் ரசாயனப் பொருட்கள் முக சருமத்திற்கு கெடுதல் உருவாக்குபவைகளாக இருக்கின்றன. அது தற்காலிகமாக நிறத்தை தந்தாலும், அடிக்கடி உபயோகித்தால் முகத்தில் கறுப்பு நிற படைகள் போன்று தோன்றும். இயற்கையான மிருதுத்தன்மை பாதிக்கப்பட்டு சருமம் கெட்டியாகிவிடும். அடிக்கடி பிளீச் செய்தால் முகத்தில் குழி போன்றும் உருவாகும். பிளீச்சிங் ஏஜெண்டில் இருக்கும் ரசாயனங்கள் கண்களுக்கும் எரிச்சலையும் தோற்றுவிக்கும். அதனால் பிளீச்சிங்கை தவிர்ப்பது நல்லது.
அழகில் பெண்கள் தவிர்க்கவேண்டிய முக்கியமான ஐந்து விஷயங்கள்!
1. பேஷியல் 30 வயதுக்கு முன்பு வேண்டாம்
பெண்களின் முகத்தில் பொலிவையும், மென்மையையும் உருவாக்க துணைபுரிவதுதான் ‘பேஷியல்’. பலவகையான பேஷியல்கள் இப்போது நடைமுறையில் உள்ளன. அதை பார்த்து பெண்களும் ஈர்க்கப்படுகிறார்கள். ஆனால் 15 முதல் 30 வயதுக்கு உள்பட்ட பெண்களுக்கு பேஷியல் தேவையில்லை. ஏன்என்றால் இந்த வயதில் பெண்களின் முகம் இயல்பாகவே அழகாகவும், மென்மையாகவும் இருக்கும். 30 வயதுக்கு மேல் பேஷியல் செய்துகொள்ளலாம். இரவுப் பணி செய்யும் பெண்களின் முகத்தில் முப்பது வயதுக்கு மேல் சுருக்கமும், இறுக்கமும் தோன்றும். அவர்களுக்கு பேஷியல் பொலிவைத் தரும். பழங்களை பயன்படுத்தி செய்யும் புரூட் பேஷியல் சிறந்தது.
2. வாக்சிங் செய்வதை குறையுங்கள்
நரையை மறைப்பதற்காக செய்யப்படும் ‘டை’, புற்றுநோயை உருவாக்கும் என்று மருத்துவ ஆய்வுகள் வெளிப்படுத்துகின்றன. டையில் இருக்கும் ரசாயனங்கள் முடியை பலவீனமாக்குகின்றன. சிலருக்கு அலர்ஜியை உருவாக்குகிறது. மேலும் அடிக்கடி டை பூசினால், சருமத்தின் நிறமும் மாறும். அதனால் டை பூசுவதை குறையுங்கள். தேவைப்பட்டால் ஹெர்பல் டையை பயன்படுத்துங்கள்.
வாக்சிங் செய்யும் பெண்கள் சருமத்திற்கு நான்கு முதல் 6 வாரங்கள் வரை இடைவேளை கொடுக்கலாம். முடி துளிர்த்த உடனே வாக்சிங் செய்யவேண்டும் என்ற அவசியம் இல்லை. அடிக்கடி வாக்சிங் செய்வது சருமத்தில் அலர்ஜியையும், பருக்களையும் தோற்றுவிக்கும்.
3. கூந்தலுக்கு வேண்டாம் ரசாயனம்
கூந்தல் நீண்டு மினுமினுப்பாக காட்சியளிக்க பெண்களில் சிலர் ஸ்ட்ரெயிட்டனிங் மற்றும் ஸ்மூத்னிங் போன்றவைகளை செய்கிறார்கள். ஆனால் இவைகளுக்காக பயன்படுத்தப்படும் ரசாயனம் மற்றும் அயர்னிங் போன்றவை கூந்தலை பலவீனப்படுத்தி வறண்ட தன்மையை உருவாக்குகிறது. முடி விரைவாக முறிந்துபோகவும் செய்யும். இவைகளை அடிக்கடி செய்தால் மண்டை ஓட்டின் ஆரோக்கியம் பாதிக்கப்பட்டு சொறி போன்றவையும் தோன்றும். ரசாயனத்தால் மயிர்க்கால்கள் பாதிக்கப்பட்டு முடி அதிகமாக உதிரவும் செய்யும். அதனால் கூந்தலுக்கு ரசாயன பயன்பாட்டை குறைத்திடுங்கள்.
4. அழகு நிலைய சிகிச்சைகள் அவசியமில்லை
முகத்தில் தோன்றும் புள்ளிகள், பருக்கள், படைகள் போன்ற பலவற்றையும் பல்வேறு அழகு நிலையங்களில் நீக்குகிறார்கள். ஆனால் இதை எல்லாம் சரும நோய் டாக்டர்கள் செய்வதுதான் மருத்துவரீதியிலான அணுகுமுறையாக இருக்கும். இதற்கான சிகிச்சைகளுக்கு மின்சாரத்தில் இயங்கும் உபகரணங்களை பயன்படுத்துவார்கள். அவைகளை மிகுந்த சுத்தத்தோடும், கவனத்தோடும் பராமரிக்கவேண்டும். அதனால் இத்தகைய சரும சிகிச்சைகளில் பெண்கள் அதிக கவனத்தை செலுத்தவேண்டியது அவசியம்.
5. பிளீச்சிங் அடிக்கடி வேண்டாம்
பெண்களின் முகத்தில் இருக்கும் கறுப்பு ரோமங்களுக்கு நிற வித்தியாசத்தை உருவாக்குவது, பிளீச்சிங். முகத்திற்கு நல்ல நிறம் கிடைக்கவும் இது உதவும் என்றாலும், இதில் சேர்க்கப்பட்டிருக்கும் ரசாயனப் பொருட்கள் முக சருமத்திற்கு கெடுதல் உருவாக்குபவைகளாக இருக்கின்றன. அது தற்காலிகமாக நிறத்தை தந்தாலும், அடிக்கடி உபயோகித்தால் முகத்தில் கறுப்பு நிற படைகள் போன்று தோன்றும். இயற்கையான மிருதுத்தன்மை பாதிக்கப்பட்டு சருமம் கெட்டியாகிவிடும். அடிக்கடி பிளீச் செய்தால் முகத்தில் குழி போன்றும் உருவாகும். பிளீச்சிங் ஏஜெண்டில் இருக்கும் ரசாயனங்கள் கண்களுக்கும் எரிச்சலையும் தோற்றுவிக்கும். அதனால் பிளீச்சிங்கை தவிர்ப்பது நல்லது.
குளிர்காலத்தில் தோல் தொடர்பான பிரச்சனைகளும் ஏற்படலாம். சில பழங்களைச் சாப்பிடுவதன் மூலம் சரும ஆரோக்கியத்தைப் பாதுகாக்க முடியும்..
குளிர்காலத்தில் தோல் தொடர்பான பிரச்சனைகளும் ஏற்படலாம். உரியச் சத்துகள் நம் உடலில் இருந்தால் இந்த பாதிப்புகளைத் தவிர்க்க முடியும். சில பழங்களைச் சாப்பிடுவதன் மூலம் சரும ஆரோக்கியத்தைப் பாதுகாக்க முடியும்..
அழகுக்கான இயற்கை தயாரிப்புகளில் நெல்லி அதிகம் பயன்படுத்தப்படுகிறது. இரத்தத்தைச் சுத்திகரிக்க உதவுவதன் மூலம் நச்சுகளை அகற்றுகிறது. இரத்தம் சுத்திகரிக்கப்படுதல் மூலம் சருமம் மிளிரத் தொடங்கும்.
பப்பாய்ன் என்னும் நொதி (என்சைம்) பப்பாளியில் உள்ளது. அது செயல்படாத புரதத்தை உடைக்கிறது. தோலிலுள்ள இறந்த செல்களை அகற்றுகிறது. இது ஆக்ஸிஜனேற்ற தடுப்பானாகவும் (ஆன்ட்டிஆக்ஸிடெண்ட்) செயல்படுகிறது. பப்பாளியில் வைட்டமின் ஏ சத்தும் அதிகம் உள்ளது. பப்பாளி, முதுமை அடையாளத்தைத் தடுக்கவும் உதவுகிறது.
புரதம் மற்றும் ஒமேகா-9 கொழுப்பு அமிலங்கள் அவகோடாவில் அதிகம் அடங்கியுள்ளது. குளிர்காலத்தில் சருமம் வறண்டுவிடாமல் இது தடுக்கிறது. தோலை மிருதுவாக காத்து, மிளிரச் செய்கிறது. அவகோடாவிலுள்ள வைட்டமின் இ, தோலில் சுருக்கம் ஏற்படுவதைத் தடுக்கிறது.
சருமத்திற்குப் புத்துயிர் தரக்கூடிய பழம் மாதுளை. தோலில் சுருக்கம் விழுவதைக் குறைத்து, வயதான தோற்றத்தைத் தவிர்க்கிறது. குளிர்காலத்தில் தோல் விரிவடையும். மாதுளை தோலின் நுண்துளைகள் இறுக்கமாகக் காக்கிறது..
வைட்டமின் சி அதிகம் காணப்படும் பழம் அன்னாசி. நுண்துளைகள் வெடித்து அதில் மாசு தங்குவதால் பருக்கள் மற்றும் கட்டிகள் ஏற்படுகிறது. அன்னாசிப்பழம் ஆக்ஸிஜனேற்ற தடுப்பானாகக் கரும்புள்ளிகளுக்கு எதிராகச் செயல்படுகிறது. தோலின் நுண்துளைகள் சுத்தமாக்குகிறது..
வாழைப்பழத்தில் பொட்டாசியம் அதிகம் உள்ளது. இது வறண்ட சருமத்திற்கு நீர்ச்சத்து அளித்து, ஈரப்பதத்தைக் கூட்டுகிறது. இதிலுள்ள வைட்டமின்கள் இ மற்றும் சி இரண்டும் சருமத்தை மிளிரச் செய்கின்றன. குளிர்காலத்தில் தோல் மங்கலாகத் தோற்றமளிப்பதை இது தடுக்கிறது..
வைட்டமின்கள் ஏ மற்றும் சி ஆகியவை சீத்தாப்பழத்தில் உள்ளன. இவை, உடலிலுள்ள ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய நிலையில்லா அணுக்களுக்கு (ஃப்ரீ ராடிகல்ஸ்) எதிராகச் செயல்படும். சீத்தாப்பழ ஜூஸை தொடர்ந்து பருகி வந்தால் தோலின் அடுக்குகளில் புதிய செல்கள் உருவாகிறதை ஊக்கப்படுத்தும்..
கிவியிலும் அதிக அளவு வைட்டமின் சி உள்ளது. இது கொலோஜின் என்ற சருமத்திற்குத் தேவையான புரதத்தை உடல் உற்பத்தி செய்ய உதவுகிறது. தோலுக்கு ஈரப்பதத்தை அளிக்கக்கூடிய வைட்டமின் இ சத்தும் இதில் உள்ளது..
குளிர்காலத்தில் கிடைக்கக்கூடிய பழம் பிளம். இதில் வைட்டமின்கள் பி மற்றும் இ ஆகியவை உள்ளன. மெக்னீசியம், இரும்பு, கால்சியம் (சுண்ணாம்பு சத்து), ஸிங்க் (துத்தநாகம்) ஆகிய தாது உப்புகளும் இப்பழத்தில் உள்ளன. இது உடலைச் சுத்தப்படுத்தி, தோலின் மீளும் தன்மையைப் பராமரிக்கிறது..
அழகுக்கான இயற்கை தயாரிப்புகளில் நெல்லி அதிகம் பயன்படுத்தப்படுகிறது. இரத்தத்தைச் சுத்திகரிக்க உதவுவதன் மூலம் நச்சுகளை அகற்றுகிறது. இரத்தம் சுத்திகரிக்கப்படுதல் மூலம் சருமம் மிளிரத் தொடங்கும்.
பப்பாய்ன் என்னும் நொதி (என்சைம்) பப்பாளியில் உள்ளது. அது செயல்படாத புரதத்தை உடைக்கிறது. தோலிலுள்ள இறந்த செல்களை அகற்றுகிறது. இது ஆக்ஸிஜனேற்ற தடுப்பானாகவும் (ஆன்ட்டிஆக்ஸிடெண்ட்) செயல்படுகிறது. பப்பாளியில் வைட்டமின் ஏ சத்தும் அதிகம் உள்ளது. பப்பாளி, முதுமை அடையாளத்தைத் தடுக்கவும் உதவுகிறது.
புரதம் மற்றும் ஒமேகா-9 கொழுப்பு அமிலங்கள் அவகோடாவில் அதிகம் அடங்கியுள்ளது. குளிர்காலத்தில் சருமம் வறண்டுவிடாமல் இது தடுக்கிறது. தோலை மிருதுவாக காத்து, மிளிரச் செய்கிறது. அவகோடாவிலுள்ள வைட்டமின் இ, தோலில் சுருக்கம் ஏற்படுவதைத் தடுக்கிறது.
சருமத்திற்குப் புத்துயிர் தரக்கூடிய பழம் மாதுளை. தோலில் சுருக்கம் விழுவதைக் குறைத்து, வயதான தோற்றத்தைத் தவிர்க்கிறது. குளிர்காலத்தில் தோல் விரிவடையும். மாதுளை தோலின் நுண்துளைகள் இறுக்கமாகக் காக்கிறது..
வைட்டமின் சி அதிகம் காணப்படும் பழம் அன்னாசி. நுண்துளைகள் வெடித்து அதில் மாசு தங்குவதால் பருக்கள் மற்றும் கட்டிகள் ஏற்படுகிறது. அன்னாசிப்பழம் ஆக்ஸிஜனேற்ற தடுப்பானாகக் கரும்புள்ளிகளுக்கு எதிராகச் செயல்படுகிறது. தோலின் நுண்துளைகள் சுத்தமாக்குகிறது..
வாழைப்பழத்தில் பொட்டாசியம் அதிகம் உள்ளது. இது வறண்ட சருமத்திற்கு நீர்ச்சத்து அளித்து, ஈரப்பதத்தைக் கூட்டுகிறது. இதிலுள்ள வைட்டமின்கள் இ மற்றும் சி இரண்டும் சருமத்தை மிளிரச் செய்கின்றன. குளிர்காலத்தில் தோல் மங்கலாகத் தோற்றமளிப்பதை இது தடுக்கிறது..
வைட்டமின்கள் ஏ மற்றும் சி ஆகியவை சீத்தாப்பழத்தில் உள்ளன. இவை, உடலிலுள்ள ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய நிலையில்லா அணுக்களுக்கு (ஃப்ரீ ராடிகல்ஸ்) எதிராகச் செயல்படும். சீத்தாப்பழ ஜூஸை தொடர்ந்து பருகி வந்தால் தோலின் அடுக்குகளில் புதிய செல்கள் உருவாகிறதை ஊக்கப்படுத்தும்..
கிவியிலும் அதிக அளவு வைட்டமின் சி உள்ளது. இது கொலோஜின் என்ற சருமத்திற்குத் தேவையான புரதத்தை உடல் உற்பத்தி செய்ய உதவுகிறது. தோலுக்கு ஈரப்பதத்தை அளிக்கக்கூடிய வைட்டமின் இ சத்தும் இதில் உள்ளது..
குளிர்காலத்தில் கிடைக்கக்கூடிய பழம் பிளம். இதில் வைட்டமின்கள் பி மற்றும் இ ஆகியவை உள்ளன. மெக்னீசியம், இரும்பு, கால்சியம் (சுண்ணாம்பு சத்து), ஸிங்க் (துத்தநாகம்) ஆகிய தாது உப்புகளும் இப்பழத்தில் உள்ளன. இது உடலைச் சுத்தப்படுத்தி, தோலின் மீளும் தன்மையைப் பராமரிக்கிறது..
சுரைக்காயை சமையலுக்கு பயன்படுத்துவதோடு ஜூஸாகவும் தயாரித்து பருகலாம். அதன் மூலம் சருமத்திற்கு ஏராளமான நன்மைகளை பெற முடியும்.
பழ வகைகள் இனிப்பு சுவையும், ருசியும் கொண்டிருப்பதால் அதனை ஜூஸ் தயாரித்து பருக நிறைய பேர் விரும்புவர். காய்கறிகளில் இனிப்பு சுவை இல்லாததால் அதனை ஜூஸாக பருகுவதற்கு ஆர்வம் காட்டமாட்டார்கள். ஆனால் காய்கறிகளிலும் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் நிரம்பி இருக்கின்றன. சுரைக்காயை சமையலுக்கு பயன்படுத்துவதோடு ஜூஸாகவும் தயாரித்து பருகலாம். அதன் மூலம் ஏராளமான நன்மைகளை பெற முடியும்.
* சரும செல்களுக்கு வயதாகும்போது, சுருக்கங்கள் தோன்றும். சுரைக்காயில் இருக்கும் வைட்டமின் சி யும், துத்தநாகமும் முன்கூட்டியே முதுமை வருவதை தாமதப்படுத்தும் தன்மை கொண்டவை. சரும செல்கள் முதுமை அடைவதையும் தடுத்து நிறுத்தும். முகத்தில் சுருக்கங்கள் இருந்தால் அதனையும் போக்கும். தொடர்ந்து சுரைக்காய் ஜூஸ் பருகி வந்தால் முன்கூட்டியே வயதான தோற்றம் உண்டாவதை தவிர்க்கலாம்.
* சுரைக்காயில் வைட்டமின்கள், தாதுக்கள், ஆன்டிஆக்சிடென்டுகள் அதிகம் இருப்பதால் இயற்கையாகவே முகத்தில் பளபளப்பு தன்மையை ஏற்படுத்தும். சுரைக்காய் ஜூஸை தினமும் குடித்துவந்தால் உடல் இயக்க செயல்பாடுகள் சீராவதோடு, சருமத்திற்கு புத்துணர்வும் கிடைக்கும்.
* காலையில் எழும்போது கண்களில் வீக்கம் இருந்தால் சுரைக்காய் ஜூஸ் பருகலாம். சுரைக்காய் சருமத்தை குளிரூட்டும் தன்மை கொண்டது. வீங்கிய கண்கள் மீது சுரைக்காய் துண்டுகளை கால் மணி நேரம் வைத்திருந்து முகத்தை கழுவி வரலாம்.
* கூந்தல் பராமரிப்புக்கும் சுரைக்காய் ஜூஸை பயன்படுத்தலாம். இது முடி நரைப்பதை தடுக்கும். உச்சந்தலையில் சுரைக்காய் ஜூஸை தடவி மசாஜ் செய்து வரலாம். முடி நிறம் மாறுவதை கட்டுப்படுத்து வதோடு முடி உதிர்வதை குறைக்கும்.
* சருமத்தில் படிந்திருக்கும் அழுக்குகள், நச்சுகள், தூசுகளை அப்புறப்படுத்தும் சுத்திகரிப்பானாகவும் சுரைக்காய் விளங்குகிறது. முகப்பரு பிரச்சினைக்கும் நிவாரணம் தரும். எண்ணெய் பசை சருமம் கொண்டவர்கள் சுரைக்காய் ஜூஸ் ருசிக்கலாம்.
* இரத்தத்தை சுத்திகரிக்கும் தன்மை சுரைக்காய்க்கு இருக்கிறது. சருமம் மிருதுவாக மாறவும் இது வழி வகுக்கும். உடலின் உள் உறுப்புகளை சுத்திகரிக்க துணைபுரிவதால் ஏராளமான உடல்நல பிரச்சினைகளை தவிர்க்கலாம். சுரைக்காய் ஜூஸ் பருக விருப்பம் இல்லாவிட்டால் சிறிதளவு கடலைமாவு, தயிருடன் சுரைக்காய் ஜூஸ் கலந்து பசைபோல் குழப்பி வாரம் இருமுறை முகத்தில் பூசி வரலாம்.
* சரும செல்களுக்கு வயதாகும்போது, சுருக்கங்கள் தோன்றும். சுரைக்காயில் இருக்கும் வைட்டமின் சி யும், துத்தநாகமும் முன்கூட்டியே முதுமை வருவதை தாமதப்படுத்தும் தன்மை கொண்டவை. சரும செல்கள் முதுமை அடைவதையும் தடுத்து நிறுத்தும். முகத்தில் சுருக்கங்கள் இருந்தால் அதனையும் போக்கும். தொடர்ந்து சுரைக்காய் ஜூஸ் பருகி வந்தால் முன்கூட்டியே வயதான தோற்றம் உண்டாவதை தவிர்க்கலாம்.
* சுரைக்காயில் வைட்டமின்கள், தாதுக்கள், ஆன்டிஆக்சிடென்டுகள் அதிகம் இருப்பதால் இயற்கையாகவே முகத்தில் பளபளப்பு தன்மையை ஏற்படுத்தும். சுரைக்காய் ஜூஸை தினமும் குடித்துவந்தால் உடல் இயக்க செயல்பாடுகள் சீராவதோடு, சருமத்திற்கு புத்துணர்வும் கிடைக்கும்.
* காலையில் எழும்போது கண்களில் வீக்கம் இருந்தால் சுரைக்காய் ஜூஸ் பருகலாம். சுரைக்காய் சருமத்தை குளிரூட்டும் தன்மை கொண்டது. வீங்கிய கண்கள் மீது சுரைக்காய் துண்டுகளை கால் மணி நேரம் வைத்திருந்து முகத்தை கழுவி வரலாம்.
* கூந்தல் பராமரிப்புக்கும் சுரைக்காய் ஜூஸை பயன்படுத்தலாம். இது முடி நரைப்பதை தடுக்கும். உச்சந்தலையில் சுரைக்காய் ஜூஸை தடவி மசாஜ் செய்து வரலாம். முடி நிறம் மாறுவதை கட்டுப்படுத்து வதோடு முடி உதிர்வதை குறைக்கும்.
* சருமத்தில் படிந்திருக்கும் அழுக்குகள், நச்சுகள், தூசுகளை அப்புறப்படுத்தும் சுத்திகரிப்பானாகவும் சுரைக்காய் விளங்குகிறது. முகப்பரு பிரச்சினைக்கும் நிவாரணம் தரும். எண்ணெய் பசை சருமம் கொண்டவர்கள் சுரைக்காய் ஜூஸ் ருசிக்கலாம்.
* இரத்தத்தை சுத்திகரிக்கும் தன்மை சுரைக்காய்க்கு இருக்கிறது. சருமம் மிருதுவாக மாறவும் இது வழி வகுக்கும். உடலின் உள் உறுப்புகளை சுத்திகரிக்க துணைபுரிவதால் ஏராளமான உடல்நல பிரச்சினைகளை தவிர்க்கலாம். சுரைக்காய் ஜூஸ் பருக விருப்பம் இல்லாவிட்டால் சிறிதளவு கடலைமாவு, தயிருடன் சுரைக்காய் ஜூஸ் கலந்து பசைபோல் குழப்பி வாரம் இருமுறை முகத்தில் பூசி வரலாம்.
வீட்டில் மீந்து போன கிரீன் டீயை கொண்டு கூந்தல் மற்றும் சருமத்திற்கு அனைத்து விதமான வீட்டு வைத்தியங்களையும் முயற்சி செய்து பார்க்கலாம்.
கோடை காலத்தில் ஒரு கப் டீ குடிப்பது அந்த அளவிற்கு இதமாக இருக்காது. ஆனால் ஒரு வேளை உங்களுக்கு டீ பிடிக்கும் என்றால் நீங்கள் ஐஸ் டீக்கு மாறி விடலாம். இந்த மாற்றத்தை உங்களால் உடனடியாக ஏற்று கொள்ள முடியாது. இருப்பினும் நீங்கள் வழக்கமாக பருகும் டீயை கொஞ்ச காலம் ஒதுக்கி வைத்து விட்டு மூலிகை டீயை பருகுங்கள். வீட்டில் மீந்து போன டீயை கொண்டு கூந்தல் மற்றும் சருத்திற்கு அனைத்து விதமான வீட்டு வைத்தியங்களையும் முயற்சி செய்து பார்க்கலாம்.
1. கிரீன் டீக்கு ஆன்டி மைக்ரோபியல் தன்மை இருப்பதால் அதனை மௌத் வாஷாக தாராளமாக பயன்படுத்தலாம். பற் சொத்தையை ஏற்படுத்துகின்ற ஸ்ட்ரெப்டோகாக்கஸ் மியூட்டன்ஸ் என்ற பாக்டீரியாவை எதிர்த்து போராடும் கேட்டசின் கிரீன் டீயில் உள்ளதால் இது ஒரு சிறந்த மௌத் வாஷ் என தி இந்தியன் சொசைட்டி ஆஃப் பீடோடான்டிக்ஸ் அன்டு பிரிவென்டிவ் டென்டிஸ்ட்ரி) நடத்திய ஆய்வு கூறுகிறது. இதற்கு எந்த கிரீன் டீயை வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். கொதிக்கும் தண்ணீரில் தேயிலையை போட்டு ஒரு நிமிடம் அப்படியே விட்டு ஒரு தேக்கரண்டி பேக்கிங் சோடா சேர்த்து அந்த நீரை கொண்டு வாய் கொப்பளித்து வரலாம்.
2. உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றும் ஆன்டி இன்ஃபிளமேட்டரி தன்மை டீக்கு இருப்பதால் அதனை குளிக்கவும் பயன்படுத்தலாம். நீங்கள் குளிக்கும் தண்ணீரில் இரண்டு அல்லது மூன்று டீ பையை போட்டு ஊற வைத்து விடுங்கள்.
3. காய வைத்து இடித்து எடுத்த டீ இலைகளை கொண்டு வீட்டிலே சோப்பு செய்யலாம். 400 கிராம் அளவிற்கு டபுள் ஸ்ட்ராங்கான கிரீன் டீயை தயாரித்து கொள்ளுங்கள். அதற்கு பயன்படுத்திய இலைகளை தூக்கி எறியாமல் சேகரித்து வையுங்கள். யூக்கலிப்டஸ் எண்ணெய், 4 – 8 தேக்கரண்டி கிரீன் டீ இலைகளை செய்து வைத்த கிரீன் டீ ஆறிய பின் சேர்த்து சோப்பு செய்யும் மோல்டில் ஊற்றி வையுங்கள். இதனை ஒரு மாதம் வரை பயன்படுத்தலாம்.
4.கிரீன் டீயை கொண்டு நீங்களே உங்களுக்கான பாடி ஸ்கிரப்பை தயாரித்து கொள்ளலாம். சொரசொரப்பாக இருக்கும் கிரீன் டீ இலைகள் சருமத்தில் உள்ள இறந்த அணுக்களை நீக்க உதவுகிறது. அதோடு இந்த இலைகளில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்டுகள் உங்கள் சருமத்தை புதுப்பிக்க செய்கிறது.
5. நல்ல ஒரு ஆரோக்கியமான மற்றும் தற்காலிகமான ஹேர் டையாக டீ பயன்படுகிறது. நல்ல ஸ்ட்ராங்கான டீயை தயாரித்து கொள்ளவும். இது நன்றாக ஆறிய பின் ஒரு துணியை அதில் முக்கி உங்களுக்கு தேவையான கலர் கிடைக்கும் வரை தலைமுடியில் தடவுங்கள்.
1. கிரீன் டீக்கு ஆன்டி மைக்ரோபியல் தன்மை இருப்பதால் அதனை மௌத் வாஷாக தாராளமாக பயன்படுத்தலாம். பற் சொத்தையை ஏற்படுத்துகின்ற ஸ்ட்ரெப்டோகாக்கஸ் மியூட்டன்ஸ் என்ற பாக்டீரியாவை எதிர்த்து போராடும் கேட்டசின் கிரீன் டீயில் உள்ளதால் இது ஒரு சிறந்த மௌத் வாஷ் என தி இந்தியன் சொசைட்டி ஆஃப் பீடோடான்டிக்ஸ் அன்டு பிரிவென்டிவ் டென்டிஸ்ட்ரி) நடத்திய ஆய்வு கூறுகிறது. இதற்கு எந்த கிரீன் டீயை வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். கொதிக்கும் தண்ணீரில் தேயிலையை போட்டு ஒரு நிமிடம் அப்படியே விட்டு ஒரு தேக்கரண்டி பேக்கிங் சோடா சேர்த்து அந்த நீரை கொண்டு வாய் கொப்பளித்து வரலாம்.
2. உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றும் ஆன்டி இன்ஃபிளமேட்டரி தன்மை டீக்கு இருப்பதால் அதனை குளிக்கவும் பயன்படுத்தலாம். நீங்கள் குளிக்கும் தண்ணீரில் இரண்டு அல்லது மூன்று டீ பையை போட்டு ஊற வைத்து விடுங்கள்.
3. காய வைத்து இடித்து எடுத்த டீ இலைகளை கொண்டு வீட்டிலே சோப்பு செய்யலாம். 400 கிராம் அளவிற்கு டபுள் ஸ்ட்ராங்கான கிரீன் டீயை தயாரித்து கொள்ளுங்கள். அதற்கு பயன்படுத்திய இலைகளை தூக்கி எறியாமல் சேகரித்து வையுங்கள். யூக்கலிப்டஸ் எண்ணெய், 4 – 8 தேக்கரண்டி கிரீன் டீ இலைகளை செய்து வைத்த கிரீன் டீ ஆறிய பின் சேர்த்து சோப்பு செய்யும் மோல்டில் ஊற்றி வையுங்கள். இதனை ஒரு மாதம் வரை பயன்படுத்தலாம்.
4.கிரீன் டீயை கொண்டு நீங்களே உங்களுக்கான பாடி ஸ்கிரப்பை தயாரித்து கொள்ளலாம். சொரசொரப்பாக இருக்கும் கிரீன் டீ இலைகள் சருமத்தில் உள்ள இறந்த அணுக்களை நீக்க உதவுகிறது. அதோடு இந்த இலைகளில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்டுகள் உங்கள் சருமத்தை புதுப்பிக்க செய்கிறது.
5. நல்ல ஒரு ஆரோக்கியமான மற்றும் தற்காலிகமான ஹேர் டையாக டீ பயன்படுகிறது. நல்ல ஸ்ட்ராங்கான டீயை தயாரித்து கொள்ளவும். இது நன்றாக ஆறிய பின் ஒரு துணியை அதில் முக்கி உங்களுக்கு தேவையான கலர் கிடைக்கும் வரை தலைமுடியில் தடவுங்கள்.






