என் மலர்
அழகுக் குறிப்புகள்
இந்த வகை ஃபேஸ் பேக்கை அடிக்கடி முகத்தில் பூசி வந்தால் தோலில் காணப்படும் கரும்புள்ளிகள் நீங்கும். வீட்டிலேயே எளிமையான முறையில் செய்யக்கூடிய சருமத்தைப் பாதுகாக்கும் ஃபேஸ்பேக்குகளை பார்க்கலாம்!
பாதி எலுமிச்சைப் பழத்தின் சாறு, அரை வெள்ளரிக்காய் மற்றும் ஒரு டேபிள்ஸ்பூன் பச்சைப் பயறு மாவு ஆகியவற்றை எடுத்துக்கொள்ளவும். அனைத்தையும் ஒன்றாகக் கலந்து அதை முகத்தில் தடவ வேண்டும். 20 நிமிடங்களுக்குப் பிறகு முகத்தைக் கழுவலாம்.
பலன்கள்: எண்ணெய்ப் பசை நீங்கி, முகம் பளபளக்கும். பருக்கள் நீங்கும். முகம் பளபளப்புடன் காணப்படும்.
ஒரு முட்டையின் வெள்ளைக் கரு, ஒரு டேபிள்ஸ்பூன் தேன், ஒரு டீஸ்பூன் கற்றாழை (Aloe vera) ஆகியவற்றைச் சேர்த்து மிக்ஸியில் அடித்துக்கொள்ளவும். இந்தக் கலவையை முகத்தில் பூசி, 20 நிமிடங்கள் ஊறியதும், வெதுவெதுப்பான தண்ணீரில் முகத்தைக் கழுவ வேண்டும்.
பலன்கள்: இந்த மாஸ்க்கை முகத்தில் பூசுவதால், வறண்ட தன்மை நீங்கி முகத்துக்குப் பொலிவு கிடைக்கும். இது சருமத்தில் காணப்படும் அதிகப்படியான வறண்ட தன்மையை உறிஞ்சுவதோடு அழுக்கையும் அகற்றும்.
இரண்டு டேபிள்ஸ்பூன் தேங்காய்ப்பால், ஒரு டேபிள்ஸ்பூன் பச்சைப் பயறு மற்றும் ஒரு பழுத்த வாழைப்பழம் ஆகியவற்றைச் சிறிது தண்ணீர் சேர்த்து அரைத்துகொள்ளவும். பிறகு இந்தக் கலவையை முகத்தில் பூசி 20 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான தண்ணீரில் கழுவ வேண்டும்.
பலன்கள்: நேச்சுரல் மாய்ஸ்ச்சரைசர் தரும் பேக் இது. மிருதுவாக, மென்மையாகச் சருமம் மாறும். சூரியக் கதிர்களால் பாதித்த சருமத்துக்கு மிகவும் நல்லது.
ஒரு கப் பழுத்த பப்பாளி, ஒரு கப் பழுத்த வாழைப்பழம், ஒரு டேபிள்ஸ்பூன் பால் பவுடர் ஆகியவற்றைத் தண்ணீருடன் சேர்த்து அரைக்கவும். இந்த விழுதை முகத்தில் தடவ வேண்டும். 20 நிமிடங்கள் கழித்துத் தண்ணீரால் முகத்தைக் கழுவலாம்.
பலன்கள்: சருமம் புத்துணர்வாகும். ஈரப்பதத்துடன், மென்மையாகவும் இளமையாகவும் காணப்படும். இந்த வகை ஃபேஸ் பேக்கை அடிக்கடி முகத்தில் பூசி வந்தால் தோலில் காணப்படும் கரும்புள்ளிகள் நீங்கும்.
பலன்கள்: எண்ணெய்ப் பசை நீங்கி, முகம் பளபளக்கும். பருக்கள் நீங்கும். முகம் பளபளப்புடன் காணப்படும்.
ஒரு முட்டையின் வெள்ளைக் கரு, ஒரு டேபிள்ஸ்பூன் தேன், ஒரு டீஸ்பூன் கற்றாழை (Aloe vera) ஆகியவற்றைச் சேர்த்து மிக்ஸியில் அடித்துக்கொள்ளவும். இந்தக் கலவையை முகத்தில் பூசி, 20 நிமிடங்கள் ஊறியதும், வெதுவெதுப்பான தண்ணீரில் முகத்தைக் கழுவ வேண்டும்.
பலன்கள்: இந்த மாஸ்க்கை முகத்தில் பூசுவதால், வறண்ட தன்மை நீங்கி முகத்துக்குப் பொலிவு கிடைக்கும். இது சருமத்தில் காணப்படும் அதிகப்படியான வறண்ட தன்மையை உறிஞ்சுவதோடு அழுக்கையும் அகற்றும்.
இரண்டு டேபிள்ஸ்பூன் தேங்காய்ப்பால், ஒரு டேபிள்ஸ்பூன் பச்சைப் பயறு மற்றும் ஒரு பழுத்த வாழைப்பழம் ஆகியவற்றைச் சிறிது தண்ணீர் சேர்த்து அரைத்துகொள்ளவும். பிறகு இந்தக் கலவையை முகத்தில் பூசி 20 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான தண்ணீரில் கழுவ வேண்டும்.
பலன்கள்: நேச்சுரல் மாய்ஸ்ச்சரைசர் தரும் பேக் இது. மிருதுவாக, மென்மையாகச் சருமம் மாறும். சூரியக் கதிர்களால் பாதித்த சருமத்துக்கு மிகவும் நல்லது.
ஒரு கப் பழுத்த பப்பாளி, ஒரு கப் பழுத்த வாழைப்பழம், ஒரு டேபிள்ஸ்பூன் பால் பவுடர் ஆகியவற்றைத் தண்ணீருடன் சேர்த்து அரைக்கவும். இந்த விழுதை முகத்தில் தடவ வேண்டும். 20 நிமிடங்கள் கழித்துத் தண்ணீரால் முகத்தைக் கழுவலாம்.
பலன்கள்: சருமம் புத்துணர்வாகும். ஈரப்பதத்துடன், மென்மையாகவும் இளமையாகவும் காணப்படும். இந்த வகை ஃபேஸ் பேக்கை அடிக்கடி முகத்தில் பூசி வந்தால் தோலில் காணப்படும் கரும்புள்ளிகள் நீங்கும்.
ரோஸ் வாட்டர் டோனரை முகத்தில் ஒரு முறை ஸ்பிரே செய்தால் போதும் வெயிலுக்கு புத்துணர்வை அளிக்கும். ரோஸ் வாட்டர் டோனரை வீட்டிலேயே தயாரிப்பது எப்படி என்று பார்க்கலாம்.
ரோஸ் வாட்டர் டோனரை முகத்தில் ஒரு முறை ஸ்பிரே செய்தால் போதும் வெயிலுக்கு புத்துணர்வை அளிக்கும். ரோஸ் வாட்டர் டோனரை வீட்டிலேயே தயாரிப்பது அத்தனை சிரமம் இல்லை. எளிதாக எப்படி தயாரிப்பது என்று பார்க்கலாம்.
ஒரு பவுல் நிறைய ரோஜா இதழ்களை எடுத்துக்கொள்ளுங்கள்.
அதை ஒரு பாத்திரத்தில் பவுல் அளவு தண்ணீர் ஊற்றி , ரோஜா இதழ்களையும் சேர்த்து நன்குக் கொதிக்க விடுங்கள்.
10 நிமிடங்கள் கொதித்ததும் அடுப்பை அணைத்துவிடுங்கள். தற்போது பார்த்தால் தெரியும் ரோஜாவின் நிறம் வெளிர்ந்து அதன் நிறங்கள் தண்ணீரில் கரைந்திருக்கும்.
அதை அப்படியே சூடு ஆற காற்றோட்டமாக வையுங்கள். சூடு தணிந்ததும் ஸ்பிரே பாட்டிலில் ஊற்றி முகத்தில் ஸ்பிரே செய்து பயன்படுத்துங்கள்.
இதனால் முகத்திற்கு ஈரப்பதம், பருக்கள் இன்மை, கருமையின்மை, எண்ணெய் இல்லா சருமம் என பல நன்மைகளைப் பெறலாம்.
ஒரு பவுல் நிறைய ரோஜா இதழ்களை எடுத்துக்கொள்ளுங்கள்.
அதை ஒரு பாத்திரத்தில் பவுல் அளவு தண்ணீர் ஊற்றி , ரோஜா இதழ்களையும் சேர்த்து நன்குக் கொதிக்க விடுங்கள்.
10 நிமிடங்கள் கொதித்ததும் அடுப்பை அணைத்துவிடுங்கள். தற்போது பார்த்தால் தெரியும் ரோஜாவின் நிறம் வெளிர்ந்து அதன் நிறங்கள் தண்ணீரில் கரைந்திருக்கும்.
அதை அப்படியே சூடு ஆற காற்றோட்டமாக வையுங்கள். சூடு தணிந்ததும் ஸ்பிரே பாட்டிலில் ஊற்றி முகத்தில் ஸ்பிரே செய்து பயன்படுத்துங்கள்.
இதனால் முகத்திற்கு ஈரப்பதம், பருக்கள் இன்மை, கருமையின்மை, எண்ணெய் இல்லா சருமம் என பல நன்மைகளைப் பெறலாம்.
பெண்கள் அதிகம் விரும்புவது கூந்தல் அடர்த்தியாக, உதிராமல் இருக்க வேண்டும் என்பதுதான். பெண்கள் கூந்தலை பாதுகாக்கவும், அழகைப் பேணவும் சில ஆலோசனைகள்.
கூந்தல் பளபளப்புடன் இருக்க வாரம் ஒரு முறை ஆலிவ் எண்ணெயைக் கொதிக்க வைத்துத் தலையில் நன்றாகத் தேய்க்க வேண்டும். சுத்தமான ஆலிவ் எண்ணெய் மருந்துக் கடைகளில் கிடைக்கும். தலையில் தடவுவதற்கு எத்தனையோ விதம் விதமான ஹேர் ஆயில்கள் இன்று இருக்கின்றன. இந்த ஹேர் ஆயில்களெல்லாம் தலைமுடியின் ஆயுளைக் குறைத்து விடுகின்றன.
சுத்தமான நல்லெண்ணெயையும் சுத்தமான தேங்காய் எண்ணெயையும் தவிர வேறு எதையும் தலையில் படவிடக் கூடாது. சிறிது சாதம் வடித்த கஞ்சியில் ஷாம்பூவை ஊற்றி கலந்து தலையில் தேய்த்து குளித்துப் பாருங்கள் எண்ணெய்ப் பசை மற்றும் அழுக்கு நீங்கி கூந்தல் பட்டுப் போல் பளபளக்கும்.
தலைமுடி வறண்டு, சீராக இல்லாமல் இருந்தால் முகத்தின் தோற்றப் பொலிவும் குறையும். ஆகவே மறுநாள் காலையில் விழா என்றால் முதல் நாள் இரவில் கூந்தலை சீராக்குவது அவசியம். முதல் நாள் மாலையில் கூந்தலை எப்போதும் போல் ஷாம்பு மற்றும் சீயக்காய் வைத்து அலசி விடவும். அடுத்தநாள் கூந்தலை அலசி, துடைத்து விட்டு அலங்காரம் செய்தால் கூந்தல் பளிச்சென இருக்கும். முகமும் தோற்றப் பொலிவுடன் அனைவரையும் கவரும்.
அழகு நிலையங்களுக்கு சென்று தலை முடியை கலரிங் செய்து விட்டு, ஷாம்பு மூலம் சுத்தம் செய்யும் போது கூந்தலில் உள்ள சில சத்துக்கள் அழிந்து போகும். இதற்கு வீட்டில் ஷாம்பு போட்டு முடித்த பின்னர், தண்ணீரில் கொஞ்சம் வினிகரை கலக்கி கூந்தலை கழுவி அலசவும். இதனால் கூந்தல் பளபளப்பாகும்.
சுத்தமான நல்லெண்ணெயையும் சுத்தமான தேங்காய் எண்ணெயையும் தவிர வேறு எதையும் தலையில் படவிடக் கூடாது. சிறிது சாதம் வடித்த கஞ்சியில் ஷாம்பூவை ஊற்றி கலந்து தலையில் தேய்த்து குளித்துப் பாருங்கள் எண்ணெய்ப் பசை மற்றும் அழுக்கு நீங்கி கூந்தல் பட்டுப் போல் பளபளக்கும்.
தலைமுடி வறண்டு, சீராக இல்லாமல் இருந்தால் முகத்தின் தோற்றப் பொலிவும் குறையும். ஆகவே மறுநாள் காலையில் விழா என்றால் முதல் நாள் இரவில் கூந்தலை சீராக்குவது அவசியம். முதல் நாள் மாலையில் கூந்தலை எப்போதும் போல் ஷாம்பு மற்றும் சீயக்காய் வைத்து அலசி விடவும். அடுத்தநாள் கூந்தலை அலசி, துடைத்து விட்டு அலங்காரம் செய்தால் கூந்தல் பளிச்சென இருக்கும். முகமும் தோற்றப் பொலிவுடன் அனைவரையும் கவரும்.
அழகு நிலையங்களுக்கு சென்று தலை முடியை கலரிங் செய்து விட்டு, ஷாம்பு மூலம் சுத்தம் செய்யும் போது கூந்தலில் உள்ள சில சத்துக்கள் அழிந்து போகும். இதற்கு வீட்டில் ஷாம்பு போட்டு முடித்த பின்னர், தண்ணீரில் கொஞ்சம் வினிகரை கலக்கி கூந்தலை கழுவி அலசவும். இதனால் கூந்தல் பளபளப்பாகும்.
நகங்களை பராமரிக்க கால்சியம் சத்துள்ள உணவுகள் உண்பது மிக அவசியம். நகங்களை எளிய முறையில் பராமரிப்பதும், பாதுகாப்பதும் எப்படி என்று அறிந்து கொள்ளலாம்.
நகங்களைப் பாதுகாப்பது மிகவும் முக்கியமானது. ஆனால், பலர் நகங்களைக் கடிக்கிறார்கள்; கடினமான டிடர்ஜென்ட்களைப் பயன்படுத்துவதால் நகங்கள் சேதமடைகின்றன; கடினமானவற்றை உரிப்பது, திறப்பது என நகங்களை உடைத்துக்கொள்கிறார்கள். இவற்றுடன், நகங்களின் வேரும் பாதிப்படைந்துகொண்டே வரும். நகங்கள் வளராமல் இருப்பதற்கு அதுதான் காரணம். நகங்களுடைய ரூட் வலிமையிழந்துவிட்டால் நகங்கள் வளராது.
நகங்களை வெட்டும் முன் அவற்றின் மேல் கொஞ்சம் எண்ணெய் தடவி கொண்டால் சுலபமாக வெட்டலாம்.
நல்லெண்ணெய்யை சூடுபடுத்தி மசாஜ் செய்தால் நகங்கள் பளபளப்பாக இருக்கும்.
இளஞ்சூடான தண்ணீரில் துளசி, புதினா மற்றும் வேப்ப இலையை போட்டு நகங்கள் மூழ்குமாறு -10-15 நிமிடங்கள் வைத்தால் கிருமிகள் அழிந்து நகம் சுத்தமாகும்.
ஆரஞ்சுப்பழத்தோலை காயவைத்து பொடியாக்கி கொஞ்சம் உப்பு சேர்த்து எண்ணெயில் குழைத்து நகங்களில் தடவி வந்தால் பளபளப்பு கூடும்.
மிதமான சூடுள்ள பாலில் பஞ்சை நனைத்து நகத்தை சுத்தப்படுத்தினால் பளபளவென்று இருக்கும்.
நகங்களை பராமரிக்க கால்சியம் சத்துள்ள உணவுகள் உண்பது மிக அவசியம்.
எலுமிச்சைச்சாறு சிறிதளவு எடுத்து நகங்களில் அப்ளை செய்ய வேண்டும். தொடர்ந்து அப்படிச் செய்துவர நகங்கள் வலிமை பெறும். எலுமிச்சையில் உள்ள கால்சியம் மற்றும் வைட்டமின் சி நகங்களின் ஆரோக்கியத்துக்கு உதவும்.
ஆயில் மசாஜ் நகங்களுக்கு மிகவும் நல்லது. ஒரு டீஸ்பூன் ஆலிவ் ஆயிலை எடுத்து லேசாகச் சூடுபடுத்திக்கொள்ள வேண்டும். அதை ஒவ்வொரு நகத்தின் வேர்ப் பகுதியிலும் விட்டு மசாஜ் பண்ண வேண்டும். ஒவ்வொரு விரலுக்கும் இருபது விநாடிகள் மசாஜ் கொடுத்தால் போதும். மசாஜ் செய்துவிட்டு அரை மணி நேரம் கழித்துக் கைகளைக்கழுவிக் கொள்ளவும். இதனால் நகங்கள் ஆரோக்கியமாக வளர்வதுடன் நகங்களைச் சுற்றியுள்ள க்யூட்டிகிள் பிளவுபடாமல் ஆரோக்கியமாக இருக்கும். நகங்கள் மஞ்சள் நிறத்தில் மாறாமலும் இருக்கும்.
நகங்களை வெட்டும் முன் அவற்றின் மேல் கொஞ்சம் எண்ணெய் தடவி கொண்டால் சுலபமாக வெட்டலாம்.
நல்லெண்ணெய்யை சூடுபடுத்தி மசாஜ் செய்தால் நகங்கள் பளபளப்பாக இருக்கும்.
இளஞ்சூடான தண்ணீரில் துளசி, புதினா மற்றும் வேப்ப இலையை போட்டு நகங்கள் மூழ்குமாறு -10-15 நிமிடங்கள் வைத்தால் கிருமிகள் அழிந்து நகம் சுத்தமாகும்.
ஆரஞ்சுப்பழத்தோலை காயவைத்து பொடியாக்கி கொஞ்சம் உப்பு சேர்த்து எண்ணெயில் குழைத்து நகங்களில் தடவி வந்தால் பளபளப்பு கூடும்.
மிதமான சூடுள்ள பாலில் பஞ்சை நனைத்து நகத்தை சுத்தப்படுத்தினால் பளபளவென்று இருக்கும்.
நகங்களை பராமரிக்க கால்சியம் சத்துள்ள உணவுகள் உண்பது மிக அவசியம்.
எலுமிச்சைச்சாறு சிறிதளவு எடுத்து நகங்களில் அப்ளை செய்ய வேண்டும். தொடர்ந்து அப்படிச் செய்துவர நகங்கள் வலிமை பெறும். எலுமிச்சையில் உள்ள கால்சியம் மற்றும் வைட்டமின் சி நகங்களின் ஆரோக்கியத்துக்கு உதவும்.
ஆயில் மசாஜ் நகங்களுக்கு மிகவும் நல்லது. ஒரு டீஸ்பூன் ஆலிவ் ஆயிலை எடுத்து லேசாகச் சூடுபடுத்திக்கொள்ள வேண்டும். அதை ஒவ்வொரு நகத்தின் வேர்ப் பகுதியிலும் விட்டு மசாஜ் பண்ண வேண்டும். ஒவ்வொரு விரலுக்கும் இருபது விநாடிகள் மசாஜ் கொடுத்தால் போதும். மசாஜ் செய்துவிட்டு அரை மணி நேரம் கழித்துக் கைகளைக்கழுவிக் கொள்ளவும். இதனால் நகங்கள் ஆரோக்கியமாக வளர்வதுடன் நகங்களைச் சுற்றியுள்ள க்யூட்டிகிள் பிளவுபடாமல் ஆரோக்கியமாக இருக்கும். நகங்கள் மஞ்சள் நிறத்தில் மாறாமலும் இருக்கும்.
கோடை காலத்தில் சூரிய கதிர்வீச்சுக்களின் தாக்கத்தில் இருந்து சருமத்தை பாதுகாக்க எண்ணெய் வகைகளை உபயோகப்படுத்த வேண்டியது அவசியமானது. இந்த 5 எண்ணெய்களை தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம் சரும பாதிப்புகள் ஏற்படாமல் தடுக்கலாம்.
கோடை காலத்தில் சூரிய கதிர்வீச்சுக்களின் தாக்கத்தால் சருமம் பாதிப்புக்குள்ளாகும். நோய் தொற்றுகளாலும் சருமத்தில் பிரச்சினை உண்டாகும். அதனை தவிர்க்க எண்ணெய் வகைகளை உபயோகப்படுத்த வேண்டியது அவசியமானது. லாவண்டர், ரோஸ்மேரி, சந்தனம், தேங்காய் எண்ணெய், ஆலிவ் எண்ணெய் போன்றவை சரும நலனுக்கு ஏற்றது. அதனை தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம் சரும பாதிப்புகள் ஏற்படாமல் தடுக்கலாம்.
* லாவண்டர் எண்ணெய் பல்வேறு பிரச்சினைகளுக்கு விரைவான நிவாரணம் தரும். விபத்தில் ஏற்படும் காயங்கள், தீக்காயங்கள், தோல் அரிப்பு போன்ற பிரச்சினைகளை போக்கும். இந்த எண்ணெய்யை நுகர்ந்தால் மன அழுத்தமும் கட்டுப்படும்.
* கோடை காலத்தில் வியர்வை அதிகமாக வெளியேறும். அவை உடலில் படியும்போது நோய் கிருமிகள் அதிக அளவில் உருவாகிவிடும். ரோஸ்மேரி எண்ணெய்யுடன் தண்ணீரையோ அல்லது தேங்காய் எண்ணெய்யையோ சிறிது கலந்து வியர்வை வெளியேறும் பகுதியில் தடவி வரலாம். எண்ணெயின் வாசத்தில் நோய் பரப்பும் கிருமிகள் அழிந்துவிடும். மனதுக்கும் புத்துணர்ச்சி கிடைக்கும்.
* சந்தனம் உடலுக்கு குளிர்ச்சியை ஏற்படுத்தும். முகப்பரு பிரச்சினையால் அவதிப்படுபவர்கள் சந்தனத்தை தூள் செய்து பருக்கள் இருக்கும் இடத்தில் தடவி வரலாம். சருமத்தில் சிவப்பு நிற திட்டுக்கள் இருந்தால் அதற்கும் சந்தனத்தூள் நிவாரணம் தரும். சந்தன எண்ணெய் வெப்ப தாக்கத்தில் இருந்து சருமத்தை காக்கும். வீக்கத்தை குறைக்கவும் உதவும். வெளியே செல்லும்போது சருமத்தில் சந்தன எண்ணெய் தடவலாம்.
* புதினா எண்ணெய் உடலுக்கு குளிர்ச்சி ஏற்படுத்தும் தன்மை கொண்டது. வீக்கம் மற்றும் குமட்டலையும் போக்கும். கழுத்து பகுதியில் புதினா எண்ணெய்யை தடவினால் குளிர்ச்சியை உணரலாம்.
* கோடை காலத்தில் எலுமிச்சையின் பயன்பாடு அதிகமிருக்கும். எலுமிச்சை சாறையும் சருமத்திற்கு பயன்படுத்தலாம். அவை சருமத்திற்கு கூடுதல் பொலிவு சேர்க்கும். முகப்பரு, சரும வறட்சி உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு நிவாரணம் தரும்.
* லாவண்டர், ரோஸ்மேரி, சந்தனம், புதினா போன்ற எண்ணெய்களை அப்படியே பயன்படுத்தக்கூடாது. அவைகளுடன் தேங்காய், ஆலிவ் போன்ற ஏதாவதொரு எண்ணெய்யை கலந்து பயன்படுத்துவது நல்லது.
* லாவண்டர் எண்ணெய் பல்வேறு பிரச்சினைகளுக்கு விரைவான நிவாரணம் தரும். விபத்தில் ஏற்படும் காயங்கள், தீக்காயங்கள், தோல் அரிப்பு போன்ற பிரச்சினைகளை போக்கும். இந்த எண்ணெய்யை நுகர்ந்தால் மன அழுத்தமும் கட்டுப்படும்.
* கோடை காலத்தில் வியர்வை அதிகமாக வெளியேறும். அவை உடலில் படியும்போது நோய் கிருமிகள் அதிக அளவில் உருவாகிவிடும். ரோஸ்மேரி எண்ணெய்யுடன் தண்ணீரையோ அல்லது தேங்காய் எண்ணெய்யையோ சிறிது கலந்து வியர்வை வெளியேறும் பகுதியில் தடவி வரலாம். எண்ணெயின் வாசத்தில் நோய் பரப்பும் கிருமிகள் அழிந்துவிடும். மனதுக்கும் புத்துணர்ச்சி கிடைக்கும்.
* சந்தனம் உடலுக்கு குளிர்ச்சியை ஏற்படுத்தும். முகப்பரு பிரச்சினையால் அவதிப்படுபவர்கள் சந்தனத்தை தூள் செய்து பருக்கள் இருக்கும் இடத்தில் தடவி வரலாம். சருமத்தில் சிவப்பு நிற திட்டுக்கள் இருந்தால் அதற்கும் சந்தனத்தூள் நிவாரணம் தரும். சந்தன எண்ணெய் வெப்ப தாக்கத்தில் இருந்து சருமத்தை காக்கும். வீக்கத்தை குறைக்கவும் உதவும். வெளியே செல்லும்போது சருமத்தில் சந்தன எண்ணெய் தடவலாம்.
* புதினா எண்ணெய் உடலுக்கு குளிர்ச்சி ஏற்படுத்தும் தன்மை கொண்டது. வீக்கம் மற்றும் குமட்டலையும் போக்கும். கழுத்து பகுதியில் புதினா எண்ணெய்யை தடவினால் குளிர்ச்சியை உணரலாம்.
* கோடை காலத்தில் எலுமிச்சையின் பயன்பாடு அதிகமிருக்கும். எலுமிச்சை சாறையும் சருமத்திற்கு பயன்படுத்தலாம். அவை சருமத்திற்கு கூடுதல் பொலிவு சேர்க்கும். முகப்பரு, சரும வறட்சி உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு நிவாரணம் தரும்.
* லாவண்டர், ரோஸ்மேரி, சந்தனம், புதினா போன்ற எண்ணெய்களை அப்படியே பயன்படுத்தக்கூடாது. அவைகளுடன் தேங்காய், ஆலிவ் போன்ற ஏதாவதொரு எண்ணெய்யை கலந்து பயன்படுத்துவது நல்லது.
சுகாதாரத்தில் அக்கறை செலுத்தவில்லை என்றாலும் அல்லது ஒவ்வாமை காரணமாகவும் கழுத்தை சுற்றிலும் கருமை வரலாம். அப்படி வந்துவிட்டால் எப்படி நீக்குவது என்று பார்க்கலாம்.
கற்றாழையில் சதையை மட்டும் தனியாக எடுத்து தினமும் முகத்தில் தேய்த்து மசாஜ் செய்து ஊற வையுங்கள். இப்படி தொடர்ந்து செய்து வந்தால் சரியாகும்.
ஆப்பிள் சிடர் வினிகரில் பஞ்சை நனைத்து கழுத்தை சுற்றிலும் தடவி வர கருமை நீங்கும்.
பாதாம் எண்ணெயை இரவு தூங்கும் முன் கழுத்தை சுற்றிலும் தேய்த்து மசாஜ் செய்துவிட்டு அப்படியே தூங்கிவிடுங்கள். மறுநாள் காலை சுடுதண்ணீரில் கழுவிவிடுங்கள். தொடர்ந்து செய்தால் பலன் கிடைக்கும்.
தயிரை கழுத்தை சுற்றிலும் தடவிக்கொள்ளுங்கள். 20 நிமிடங்கள் கழித்து கழுவிவிடுங்கள். தினமும் செய்ய கருமை நீங்கும்.
கருமை நிறத்தை நீக்குவதில் உருளைக்கிழங்கு சாறு ஆற்றல் மிக்கது. எனவே உருளைக்கிழங்கு சாறை கழுத்தை சுற்றிலும் தேய்த்து 20 நிமிடங்கள் ஊற வையுங்கள். பின் தண்ணீரில் கழுவிவிடுங்கள்.
ஆப்பிள் சிடர் வினிகரில் பஞ்சை நனைத்து கழுத்தை சுற்றிலும் தடவி வர கருமை நீங்கும்.
பாதாம் எண்ணெயை இரவு தூங்கும் முன் கழுத்தை சுற்றிலும் தேய்த்து மசாஜ் செய்துவிட்டு அப்படியே தூங்கிவிடுங்கள். மறுநாள் காலை சுடுதண்ணீரில் கழுவிவிடுங்கள். தொடர்ந்து செய்தால் பலன் கிடைக்கும்.
தயிரை கழுத்தை சுற்றிலும் தடவிக்கொள்ளுங்கள். 20 நிமிடங்கள் கழித்து கழுவிவிடுங்கள். தினமும் செய்ய கருமை நீங்கும்.
கருமை நிறத்தை நீக்குவதில் உருளைக்கிழங்கு சாறு ஆற்றல் மிக்கது. எனவே உருளைக்கிழங்கு சாறை கழுத்தை சுற்றிலும் தேய்த்து 20 நிமிடங்கள் ஊற வையுங்கள். பின் தண்ணீரில் கழுவிவிடுங்கள்.
உடலுக்கு தேவையான பல்வேறு சத்துக்கள் நிறைந்துள்ள வாழை இலையை சரும ஆரோக்கியத்திற்கும், அழகிற்கும் எப்படி பயன்படுத்தலாம் என்பதை இங்கே காண்போம்.
வாழை இலையில் உடலுக்கு நன்மை தரும் பல்வேறு சத்துக்கள் உள்ளன என்பது நம் அனைவருக்கும் தெரியும். இவை தவிர சரும ஆரோக்கியத்திற்கும், அழகிற்கும் வாழை இலையை பயன்படுத்தலாம் என்பதை இங்கே காண்போம்.
சரும பிரச்சனைகளான பொடுகுத் தொல்லை, சொறி, சிரங்கு மற்றும் தீப்புண் போன்றவற்றிற்கு வாழையிலையை அரைத்து பூசி வந்தால், நல்ல பலன் கிடைக்கும். வடிகட்டிய வாழையிலை சாற்றினை குளிர்பதன பெட்டியில் உறைய வைத்து ஐஸ்கட்டியாக்கி அதனை சருமத்தில் தேய்த்தால் சருமம் மென்மையடையும்.
வாழையிலையில் அழகை கூட்டும் அலட்டாயின் எனும் சத்து உள்ளது. அரைத்த வாழையிலையுடன் தயிர் அல்லது பன்னீர் சேர்த்து சருமத்தில் பூசி வந்தால் சரும பொலிவு அதிகரிக்கும். மேலும் வாழையிலையில் அதிக அளவு ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் காணப்படுகின்றன. இவை சருமப் பிரச்சனைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து வயதான தோற்றம் ஏற்படுவதை தடுக்கின்றன.
வாழையிலை சாற்றை தலையில் தடவி குளித்து வந்தால், பொடுகு தொல்லை நீங்கும். வெயிலினால் சரும பாதிப்பு ஏற்பட்டு இருந்தால் அந்த இடத்தில் வாழை இலை விழுதை தடவினால் விரைவாகவே குணமாகும்.
சரும பிரச்சனைகளான பொடுகுத் தொல்லை, சொறி, சிரங்கு மற்றும் தீப்புண் போன்றவற்றிற்கு வாழையிலையை அரைத்து பூசி வந்தால், நல்ல பலன் கிடைக்கும். வடிகட்டிய வாழையிலை சாற்றினை குளிர்பதன பெட்டியில் உறைய வைத்து ஐஸ்கட்டியாக்கி அதனை சருமத்தில் தேய்த்தால் சருமம் மென்மையடையும்.
வாழையிலையில் அழகை கூட்டும் அலட்டாயின் எனும் சத்து உள்ளது. அரைத்த வாழையிலையுடன் தயிர் அல்லது பன்னீர் சேர்த்து சருமத்தில் பூசி வந்தால் சரும பொலிவு அதிகரிக்கும். மேலும் வாழையிலையில் அதிக அளவு ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் காணப்படுகின்றன. இவை சருமப் பிரச்சனைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து வயதான தோற்றம் ஏற்படுவதை தடுக்கின்றன.
வாழையிலை சாற்றை தலையில் தடவி குளித்து வந்தால், பொடுகு தொல்லை நீங்கும். வெயிலினால் சரும பாதிப்பு ஏற்பட்டு இருந்தால் அந்த இடத்தில் வாழை இலை விழுதை தடவினால் விரைவாகவே குணமாகும்.
இன்றைய காலகட்டத்தில் கூந்தல் உதிர்வு பிச்சனை ஆண், பெண் இருவரையும் பாடாய் படுத்துகிறது. அந்த வகையில் இன்று எந்த வகையான கூந்தலுக்கு என்ன பராமரிப்பு செய்ய வேண்டும் என்று அறிந்து கொள்ளலாம்.
சாதாரண கூந்தல்
வாரத்தில் மூன்று முறை கூந்தலை அலசி, கண்டிஷனர் உபயோகியுங்கள்.
வைட்டமின் மற்றும் தாதுச்சத்துகள் நிறைந்த உணவுகளை அதிகம் சேர்த்துக்கொள்ளுங்கள்.
பச்சைக் காய்கறிகளையும் பழங்களையும் ஒருவேளை முழுமையான உணவாக மாற்றிக்கொள்ளுங்கள்.
நிறைய தண்ணீர் அருந்துங்கள்.
எண்ணெய்ப் பசையான கூந்தல்
வெதுவெதுப்பான நீரில் கூந்தலை அலசுங்கள்.
மைல்டான, ஹெர்பல் ஷாம்பூ பயன்படுத்துங்கள்.
கண்டிஷனர் உபயோகிக்க மறக்காதீர்கள். ஷாம்பூவுடன் சேர்ந்த கண்டிஷனரை தவிர்த்து ஷாம்பூவையும் கண்டிஷனரையும் தனித்தனியே பயன்படுத்துங்கள்.
கொழுப்பு அதிகமுள்ள உணவுகளைத் தவிருங்கள்.
வறண்ட கூந்தல்
லேசாக சூடுசெய்த எண்ணெயால் கூந்தலை மசாஜ் செய்து சிறிது நேரம் ஊறிய பிறகே கூந்தலை அலசவும். அப்படி ஆயில் மசாஜ் செய்யும்போது சீப்பால் கூந்தலை நுனிவரை வாரிவிடவும். உடைந்த நுனிகளுக்கு இது ஊட்டம் தரும்.
சாதாரண கண்டிஷனர் தவிர்த்து இன்டென்சிவ் கண்டிஷனர் எனக் கேட்டு வாங்கிப் பயன்படுத்துங்கள்.
துத்தநாகச்சத்து அதிகமுள்ள உணவுகளை அதிகம் சேர்த்துக்கொள்ளுங்கள்.
வாரத்தில் மூன்று முறை கூந்தலை அலசி, கண்டிஷனர் உபயோகியுங்கள்.
வைட்டமின் மற்றும் தாதுச்சத்துகள் நிறைந்த உணவுகளை அதிகம் சேர்த்துக்கொள்ளுங்கள்.
பச்சைக் காய்கறிகளையும் பழங்களையும் ஒருவேளை முழுமையான உணவாக மாற்றிக்கொள்ளுங்கள்.
நிறைய தண்ணீர் அருந்துங்கள்.
எண்ணெய்ப் பசையான கூந்தல்
வெதுவெதுப்பான நீரில் கூந்தலை அலசுங்கள்.
மைல்டான, ஹெர்பல் ஷாம்பூ பயன்படுத்துங்கள்.
கண்டிஷனர் உபயோகிக்க மறக்காதீர்கள். ஷாம்பூவுடன் சேர்ந்த கண்டிஷனரை தவிர்த்து ஷாம்பூவையும் கண்டிஷனரையும் தனித்தனியே பயன்படுத்துங்கள்.
கொழுப்பு அதிகமுள்ள உணவுகளைத் தவிருங்கள்.
வறண்ட கூந்தல்
லேசாக சூடுசெய்த எண்ணெயால் கூந்தலை மசாஜ் செய்து சிறிது நேரம் ஊறிய பிறகே கூந்தலை அலசவும். அப்படி ஆயில் மசாஜ் செய்யும்போது சீப்பால் கூந்தலை நுனிவரை வாரிவிடவும். உடைந்த நுனிகளுக்கு இது ஊட்டம் தரும்.
சாதாரண கண்டிஷனர் தவிர்த்து இன்டென்சிவ் கண்டிஷனர் எனக் கேட்டு வாங்கிப் பயன்படுத்துங்கள்.
துத்தநாகச்சத்து அதிகமுள்ள உணவுகளை அதிகம் சேர்த்துக்கொள்ளுங்கள்.
தினமும் இரவில் நீங்கள் உறங்கும் முன் முகத்தில் குங்குமப்பூ எண்ணெயை தடவி கொள்ளுங்கள். அப்புறம் பாருங்க மாற்றத்தை, நீங்களே அசந்து போடுவீங்க...
முன்னோர்கள் காலத்தில் முகத்துக்கும் சருமத்துக்கும் கூந்தலுக்கும் என்று எந்த விதமான பராமரிப்பு மேற்கொள்ளாமலே அழகை பேணி பாதுகாத்தார்கள். இப்போது இளவயதிலேயே சருமத்தில் சுருக்கங்களும், பொலிவு குறைந்த தோற்றமும் பெரும்பாலும் வந்துவிடுகிறது.
இந்த எண்ணெயில் உள்ள ஆன்டி ஆக்சிடென்ட்கள் முகத்தில் உள்ள பிரீ ரேடிக்கல்ஸை தாக்கி அழிக்கிறது. இதனால் சருமம் சேதம் அடையாமல் பாதுகாக்கப்படுகிறது. மேலும் ப்ளாக் ஹெட்ஸ்களை நீக்கி சருமத்துளைகளை நீக்குகிறது. குறிப்பிட்ட இயற்கை பொருள்கள் அழகை சற்றும் குலைக்காமல் மெருகேற்றி வைக்க உதவும். அப்படியான பொருள்களில் ஒன்றுதான் குங்குமப்பூ. இதை கொண்டு குங்குமப்பூ எண்ணெய் தயாரிப்பது எப்படி என்பதையும் அதை பயன்படுத்தும் முறையையும் பார்க்கலாம்.
குங்குமப்பூ எண்ணெய் தயாரிக்க
பாதாம் எண்ணெய் - அரை கப்
குங்குமப்பூ இதழ்கள் - இரண்டு தேக்கரண்டி.
பாதாம் எண்ணெயில் குங்குமப்பூவை நன்றாக கலக்கவும். அதன் பின்னர் ஐந்து நிமிடங்களுக்கு அப்படியே வைத்திருங்கள். ஒரு தவாவில் நீரூற்றி கொதிக்க விடுங்கள். நன்றாக நீர் கொதிக்கும் போது எடுத்து வைத்துள்ள பாதாம் குங்குமப்பூ எண்ணெயை அந்த நீரின் மேல் வையுங்கள். 30 நிமிடங்கள் மிதமான சூட்டில் நீர் கொதித்தபடியே இருக்கட்டும்.
பின்னர் ஆறிய உடன் எடுத்து குங்குமப்பூக்களை வடிகட்டி விட்டு நீங்கள் அதனை ஒரு பாட்டிலில் சேமியுங்கள். தேவையெனில் குங்குமப்பூவை வடிகட்டி சேகரிக்கலாம். அல்லது குங்குமப்பூவோடு வைத்தும் பயன்படுத்தலாம்.
இதுதான் குங்குமப்பூ எண்ணெய். உங்கள் முக அழகை மேம்படுத்தும் அற்புத பொருள். தினமும் இரவில் நீங்கள் உறங்கும் முன் முகத்தில் தடவி கொள்ளுங்கள். காலையில் முகத்தை பாசிப்பயிறு கொண்டு கழுவி வாருங்கள். ஒரே மாதத்தில் சிவந்து போய் இருக்கும் உங்கள் முகத்தை பார்த்து நீங்களே ஆச்சரியப்படுவீர்கள்.
குங்குமப்பூவில் நிறம் தரும் குணங்களோடு இயற்கையாக ப்ளீச்சிங் தன்மையும் படர்ந்திருக்கிறது. அதனால் இவை சருமத்தில் இருக்கும் அழுக்கை நீக்கவும் பயன்படுகிறது.
இந்த எண்ணெயில் உள்ள ஆன்டி ஆக்சிடென்ட்கள் முகத்தில் உள்ள பிரீ ரேடிக்கல்ஸை தாக்கி அழிக்கிறது. இதனால் சருமம் சேதம் அடையாமல் பாதுகாக்கப்படுகிறது. மேலும் ப்ளாக் ஹெட்ஸ்களை நீக்கி சருமத்துளைகளை நீக்குகிறது. குறிப்பிட்ட இயற்கை பொருள்கள் அழகை சற்றும் குலைக்காமல் மெருகேற்றி வைக்க உதவும். அப்படியான பொருள்களில் ஒன்றுதான் குங்குமப்பூ. இதை கொண்டு குங்குமப்பூ எண்ணெய் தயாரிப்பது எப்படி என்பதையும் அதை பயன்படுத்தும் முறையையும் பார்க்கலாம்.
குங்குமப்பூ எண்ணெய் தயாரிக்க
பாதாம் எண்ணெய் - அரை கப்
குங்குமப்பூ இதழ்கள் - இரண்டு தேக்கரண்டி.
பாதாம் எண்ணெயில் குங்குமப்பூவை நன்றாக கலக்கவும். அதன் பின்னர் ஐந்து நிமிடங்களுக்கு அப்படியே வைத்திருங்கள். ஒரு தவாவில் நீரூற்றி கொதிக்க விடுங்கள். நன்றாக நீர் கொதிக்கும் போது எடுத்து வைத்துள்ள பாதாம் குங்குமப்பூ எண்ணெயை அந்த நீரின் மேல் வையுங்கள். 30 நிமிடங்கள் மிதமான சூட்டில் நீர் கொதித்தபடியே இருக்கட்டும்.
பின்னர் ஆறிய உடன் எடுத்து குங்குமப்பூக்களை வடிகட்டி விட்டு நீங்கள் அதனை ஒரு பாட்டிலில் சேமியுங்கள். தேவையெனில் குங்குமப்பூவை வடிகட்டி சேகரிக்கலாம். அல்லது குங்குமப்பூவோடு வைத்தும் பயன்படுத்தலாம்.
இதுதான் குங்குமப்பூ எண்ணெய். உங்கள் முக அழகை மேம்படுத்தும் அற்புத பொருள். தினமும் இரவில் நீங்கள் உறங்கும் முன் முகத்தில் தடவி கொள்ளுங்கள். காலையில் முகத்தை பாசிப்பயிறு கொண்டு கழுவி வாருங்கள். ஒரே மாதத்தில் சிவந்து போய் இருக்கும் உங்கள் முகத்தை பார்த்து நீங்களே ஆச்சரியப்படுவீர்கள்.
குங்குமப்பூவில் நிறம் தரும் குணங்களோடு இயற்கையாக ப்ளீச்சிங் தன்மையும் படர்ந்திருக்கிறது. அதனால் இவை சருமத்தில் இருக்கும் அழுக்கை நீக்கவும் பயன்படுகிறது.
கொய்யா பழம் உடல் நலத்திற்கு பல நன்மைகளை தருகிறது எனில் அதன் இலைகள் சருமத்தைப் பாதுகாக்க பல நன்மைகளை தருகின்றன. கொய்யா இலையை சருமத்திற்கு எவ்வாறு பயன்படுத்துவது என்று பார்க்கலாம்.
முகப்பருக்களில் இருக்கும் பாக்டீரியாக்களை அழித்து அதன் பரவலை தடுக்க கொய்யா இலைகளை கொஞ்சம் தண்ணீர் விட்டு அரைத்து முகத்தில் அப்ளை செய்யுங்கள். இதை தொடர்ந்து செய்து வர பருக்கள் மறையலாம்.
கொய்யா இலை, சிட்டிகை மஞ்சள் மற்றும் கற்றாழை மூன்றையும் சேர்த்து மைய அரைத்து அதை முகம் கழுத்து என தடவி 20 நிமிடங்கள் கழித்து கழுவுங்கள். வாரம் 2 முறை செய்து வாருங்கள் பலன் கிடைக்கும்.
எண்ணெய் சருமம் கொண்டவர்களுக்கு இருக்கும் பெரிய தொல்லை எண்ணெய் பிசுபிசுப்புதான். அதை அகற்ற கொய்யா இலைகள், எலுமிச்சை சாறு சேர்த்து மைய அரைத்து முகம் கழுத்து என தடவி 30 நிமிடங்கள் காய்ந்ததும் கழுவி விடுங்கள் எண்ணெய் பிசுக்கு போய்விடும்.
கொய்யா இலைகளை காயவைத்து அரைத்து கொள்ளுங்கள். அதனை நீருடன் கலந்து பேஸ்ட் போல முகத்தில் தடவினால் முகச்சுருக்கங்கள் மறையும். இளமை ததும்பும்.
கொய்யா இலைகளை ஒரு சிட்டிகை மஞ்சள் சேர்த்து அரைத்து முகத்தில் பூசவும். 15 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவி விடவும். இவ்வாறு தொடர்நது செய்து வந்தால் அழகு அள்ளும்.
கற்றாழை சாறுடன் கொய்யா இலையை சேர்த்து அரைத்து முகத்தில் பூசி வந்தால் முகம் எப்போதும் புத்துணர்ச்சியுடன் இருக்கும்.
கொய்யா இலை, பாதாம் பருப்பு இரண்டையும் அரைத்து பூசி வந்தால் முகத்தில் புதிய செல்கள் உற்பத்தியாகி அழகு கூடும்.
கொய்யா இலை, சிட்டிகை மஞ்சள் மற்றும் கற்றாழை மூன்றையும் சேர்த்து மைய அரைத்து அதை முகம் கழுத்து என தடவி 20 நிமிடங்கள் கழித்து கழுவுங்கள். வாரம் 2 முறை செய்து வாருங்கள் பலன் கிடைக்கும்.
எண்ணெய் சருமம் கொண்டவர்களுக்கு இருக்கும் பெரிய தொல்லை எண்ணெய் பிசுபிசுப்புதான். அதை அகற்ற கொய்யா இலைகள், எலுமிச்சை சாறு சேர்த்து மைய அரைத்து முகம் கழுத்து என தடவி 30 நிமிடங்கள் காய்ந்ததும் கழுவி விடுங்கள் எண்ணெய் பிசுக்கு போய்விடும்.
கொய்யா இலைகளை காயவைத்து அரைத்து கொள்ளுங்கள். அதனை நீருடன் கலந்து பேஸ்ட் போல முகத்தில் தடவினால் முகச்சுருக்கங்கள் மறையும். இளமை ததும்பும்.
கொய்யா இலைகளை ஒரு சிட்டிகை மஞ்சள் சேர்த்து அரைத்து முகத்தில் பூசவும். 15 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவி விடவும். இவ்வாறு தொடர்நது செய்து வந்தால் அழகு அள்ளும்.
கற்றாழை சாறுடன் கொய்யா இலையை சேர்த்து அரைத்து முகத்தில் பூசி வந்தால் முகம் எப்போதும் புத்துணர்ச்சியுடன் இருக்கும்.
கொய்யா இலை, பாதாம் பருப்பு இரண்டையும் அரைத்து பூசி வந்தால் முகத்தில் புதிய செல்கள் உற்பத்தியாகி அழகு கூடும்.
வந்த கருவளையத்தை போக்க அன்றாட உணவில் கொஞ்சம் அக்கறை காட்டினாலே போதும். அதனுடன் இந்த இயற்கை வழிமுறைகளை பின்பற்றினால் ஒரே வாரத்தில் கருவளையத்தை விரட்டி அடிக்கலாம்.
உங்களை பளிச்சென்று காட்டுவது முகஅழகு தான். அந்த முகத்தில் வசீகரமான அழகை தருவது கண்கள் தான். சில பெண்களுக்கு அந்த கண்களே மைனஸ் பாயிண்ட் ஆக அமைந்து விடுவது உண்டு. அதற்கு காரணம் கண்ணைச் சுற்றிலும் திடீரென்று தோன்றும் கருவளையம்.
உருளைக்கிழங்கை அரைத்து கண்களை சுற்றி பூசி வந்தால் கருவளையம் படிப்படியாக மறையும்.
கண்களை குளிர்விக்கும் வகையில் கேரட் அல்லது வெள்ளரிக்காய் பிஞ்சை நறுக்கி வாரம் ஒன்றிரண்டு முறை கண்களின் மேல் வைத்தால் நல்ல பலனளிக்கும்.
தக்காளி சாறு மற்றும் எலுமிச்சை சாறை கலந்து கருவளையத்தின் மீது பூசி வர வேண்டும். பூசிய 10-15 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரினால் கழுவி வந்தால் படிப்படியாக கருவளையம் நீங்கி அழகு பெறலாம்.
இரவில் கண்களை சுற்றி பாதாம் எண்ணெய் பூசிக்கொண்டு மறுநாள் காலையில் எழுந்தவுடன் குளிர்ந்த நீரினால் கண்களை கழுவி வந்தால் கருவளையத்திலிருந்து விடுதலை பெறலாம்.
வெற்றிலை போட பயன்படுத்தும் சுண்ணாம்பை ஒரு பட்டாணி அளவு எடுத்துக் கொள்ளுங்கள். அதை ஒரு கப் குளிர்ந்த நீரில் கரைத்து சுமார் ஒரு மணி நேரம் அப்படியே வைத்து விடுங்கள். அந்த சுண்ணாம்பு நீரானது தெளிந்தவுடன், அதில் இருந்து 2 ஸ்பூன் தெளிந்த தண்ணீரை வேறொரு கிண்ணத்தில் பிரித்தெடுத்துக் கொள்ளுங்கள்.
பிரித்தெடுத்த தண்ணீரின் அளவுக்கு எலுமிச்சைச் சாறும் பிழிந்து வடிகட்டிக் கொள்ளுங்கள். தொடர்ந்து, இரண்டையும் ஒன்றாக கலந்து, அதை ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை கண்ணை சுற்றி பூசுங்கள். கண்விழியில் பட்டுவிடக்கூடாது.
இப்படி தொடர்ந்து செய்து வந்தால் சில நாட்களில் கண் கருவளையம் மறைந்து விடும். அதன் பின்னர் கருவளையமே வரக்கூடாது என்று நீங்கள் விரும்பினால், உணவு முறையில் தான் மாற்றம் கொண்டுவர வேண்டும். அதாவது, இரும்புச்சத்து அதிகம் உள்ள காய்கறிகளை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
மேலும் நல்ல தூக்கமும், கண்களுக்கு தேவையான அளவு ஓய்வும் கொடுத்தால் கருவளையத்திற்கு சீக்கிரமே டாட்டா சொல்லிவிடலாம்.
உருளைக்கிழங்கை அரைத்து கண்களை சுற்றி பூசி வந்தால் கருவளையம் படிப்படியாக மறையும்.
கண்களை குளிர்விக்கும் வகையில் கேரட் அல்லது வெள்ளரிக்காய் பிஞ்சை நறுக்கி வாரம் ஒன்றிரண்டு முறை கண்களின் மேல் வைத்தால் நல்ல பலனளிக்கும்.
தக்காளி சாறு மற்றும் எலுமிச்சை சாறை கலந்து கருவளையத்தின் மீது பூசி வர வேண்டும். பூசிய 10-15 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரினால் கழுவி வந்தால் படிப்படியாக கருவளையம் நீங்கி அழகு பெறலாம்.
இரவில் கண்களை சுற்றி பாதாம் எண்ணெய் பூசிக்கொண்டு மறுநாள் காலையில் எழுந்தவுடன் குளிர்ந்த நீரினால் கண்களை கழுவி வந்தால் கருவளையத்திலிருந்து விடுதலை பெறலாம்.
வெற்றிலை போட பயன்படுத்தும் சுண்ணாம்பை ஒரு பட்டாணி அளவு எடுத்துக் கொள்ளுங்கள். அதை ஒரு கப் குளிர்ந்த நீரில் கரைத்து சுமார் ஒரு மணி நேரம் அப்படியே வைத்து விடுங்கள். அந்த சுண்ணாம்பு நீரானது தெளிந்தவுடன், அதில் இருந்து 2 ஸ்பூன் தெளிந்த தண்ணீரை வேறொரு கிண்ணத்தில் பிரித்தெடுத்துக் கொள்ளுங்கள்.
பிரித்தெடுத்த தண்ணீரின் அளவுக்கு எலுமிச்சைச் சாறும் பிழிந்து வடிகட்டிக் கொள்ளுங்கள். தொடர்ந்து, இரண்டையும் ஒன்றாக கலந்து, அதை ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை கண்ணை சுற்றி பூசுங்கள். கண்விழியில் பட்டுவிடக்கூடாது.
இப்படி தொடர்ந்து செய்து வந்தால் சில நாட்களில் கண் கருவளையம் மறைந்து விடும். அதன் பின்னர் கருவளையமே வரக்கூடாது என்று நீங்கள் விரும்பினால், உணவு முறையில் தான் மாற்றம் கொண்டுவர வேண்டும். அதாவது, இரும்புச்சத்து அதிகம் உள்ள காய்கறிகளை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
மேலும் நல்ல தூக்கமும், கண்களுக்கு தேவையான அளவு ஓய்வும் கொடுத்தால் கருவளையத்திற்கு சீக்கிரமே டாட்டா சொல்லிவிடலாம்.
சில நேரங்களில் தேநீர் அல்லது காபி கைதவறி ஆடையில் பட்டுவிட்டால் உங்களுக்கு பிடித்த ஆடையை நீங்கள் இழக்கக்கூடும். ஒரு சில வீட்டு குறிப்புகளை பின்பற்றினால் இக்கறைகளில் இருந்து எளிதில் விடுபடலாம்.
சில நேரங்களில் தேநீர் அல்லது காபி கைதவறி ஆடையில் பட்டுவிட்டால் உங்களுக்கு பிடித்த ஆடையை நீங்கள் இழக்கக்கூடும். ஏனெனில் இந்த கறைகள் விரைவில் மறையாது. ஒரு சில வீட்டு குறிப்புகளை பின்பற்றினால் இக்கறைகளில் இருந்து எளிதில் விடுபடலாம். அவை என்னென்ன என்பது குறித்து இங்கு தெரிந்துகொள்வோம்.
ஒரு கோப்பையில் வெதுவெதுப்பான நீரை எடுத்து கறை மீது நேரடியாக ஊற்றவும். தொடர்ந்து 10-15 விநாடிகளுக்கு மெதுவாக ஊற்றிக் கொண்டே இருங்கள், பின்னர் சலவை சோப்பு கொண்டு துவையுங்கள். கறை மங்கிவிடும் வரை சோப்பு தேய்க்கவும். கடைசியாக, சாதாரண தண்ணீரில் அலசுங்கள், கறை மறைந்துவிடும்.
வினிகர் உடல் எடையை குறைக்க மட்டுமின்றி உங்கள் துணிகளில் படிந்திருக்கும் கறைகளை அகற்றவும் உதவுகிறது. ஒரு ஸ்ப்ரே பாட்டில் ½ கப் வினிகர் மற்றும் ½ கப் தண்ணீர் எடுத்து நன்கு கலக்கவும். பின்னர் இந்த கலவையை கறை மீது நேரடியாக தெளிக்கவும். 5-7 நிமிடங்கள் அப்படியே வைத்துவிட்டு மீண்டும் தெளிக்கவும். இப்போது உங்கள் துணியை தண்ணீரில் நனைத்து, நன்கு தேய்த்து அலசவும். தேநீர் அல்லது காபி கறைகள் சுத்தமாக நீங்கி விடுவதை நீங்கள் காண்பீர்கள்.
பேக்கிங் சோடா ஒரு இயற்கை சுத்திகரிப்பானாக செயல்படுகிறது. உண்மையில், பிடிவாதமான தேநீர் கறையில் இருந்து விடுபட பேக்கிங் சோடாவை பயன்படுத்தலாம். இருப்பினும், மென்மையான துணிகளில் இதை முயற்சிக்க வேண்டாம். இதற்கு முதலில் அரை வாளி தண்ணீரை மிதமாக சூடு செய்து கொள்ளவும். இந்த தண்ணீரில் உங்கள் கறை துணியை 5-10 நிமிடங்கள் ஊற வைக்கவும். இதில் 1 தேக்கரண்டி பேக்கிங் சோடாவை நேரடியாக கறை மீது போடவும். கறையை அகற்ற துணியை நன்கு இரண்டு கைகளால் தேய்க்கவும். பின்னர் அந்த துணியை சாதாரண தண்ணீரில் அலசி விடுங்கள் கறை மறைந்துவிடும்.
ஒரு கோப்பையில் வெதுவெதுப்பான நீரை எடுத்து கறை மீது நேரடியாக ஊற்றவும். தொடர்ந்து 10-15 விநாடிகளுக்கு மெதுவாக ஊற்றிக் கொண்டே இருங்கள், பின்னர் சலவை சோப்பு கொண்டு துவையுங்கள். கறை மங்கிவிடும் வரை சோப்பு தேய்க்கவும். கடைசியாக, சாதாரண தண்ணீரில் அலசுங்கள், கறை மறைந்துவிடும்.
வினிகர் உடல் எடையை குறைக்க மட்டுமின்றி உங்கள் துணிகளில் படிந்திருக்கும் கறைகளை அகற்றவும் உதவுகிறது. ஒரு ஸ்ப்ரே பாட்டில் ½ கப் வினிகர் மற்றும் ½ கப் தண்ணீர் எடுத்து நன்கு கலக்கவும். பின்னர் இந்த கலவையை கறை மீது நேரடியாக தெளிக்கவும். 5-7 நிமிடங்கள் அப்படியே வைத்துவிட்டு மீண்டும் தெளிக்கவும். இப்போது உங்கள் துணியை தண்ணீரில் நனைத்து, நன்கு தேய்த்து அலசவும். தேநீர் அல்லது காபி கறைகள் சுத்தமாக நீங்கி விடுவதை நீங்கள் காண்பீர்கள்.
பேக்கிங் சோடா ஒரு இயற்கை சுத்திகரிப்பானாக செயல்படுகிறது. உண்மையில், பிடிவாதமான தேநீர் கறையில் இருந்து விடுபட பேக்கிங் சோடாவை பயன்படுத்தலாம். இருப்பினும், மென்மையான துணிகளில் இதை முயற்சிக்க வேண்டாம். இதற்கு முதலில் அரை வாளி தண்ணீரை மிதமாக சூடு செய்து கொள்ளவும். இந்த தண்ணீரில் உங்கள் கறை துணியை 5-10 நிமிடங்கள் ஊற வைக்கவும். இதில் 1 தேக்கரண்டி பேக்கிங் சோடாவை நேரடியாக கறை மீது போடவும். கறையை அகற்ற துணியை நன்கு இரண்டு கைகளால் தேய்க்கவும். பின்னர் அந்த துணியை சாதாரண தண்ணீரில் அலசி விடுங்கள் கறை மறைந்துவிடும்.






