என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
லைஃப்ஸ்டைல்
X
சருமத்தில் குங்குமப்பூ எண்ணெய் செய்யும் அதிசயங்கள்
Byமாலை மலர்12 March 2021 4:26 AM GMT (Updated: 12 March 2021 4:26 AM GMT)
தினமும் இரவில் நீங்கள் உறங்கும் முன் முகத்தில் குங்குமப்பூ எண்ணெயை தடவி கொள்ளுங்கள். அப்புறம் பாருங்க மாற்றத்தை, நீங்களே அசந்து போடுவீங்க...
முன்னோர்கள் காலத்தில் முகத்துக்கும் சருமத்துக்கும் கூந்தலுக்கும் என்று எந்த விதமான பராமரிப்பு மேற்கொள்ளாமலே அழகை பேணி பாதுகாத்தார்கள். இப்போது இளவயதிலேயே சருமத்தில் சுருக்கங்களும், பொலிவு குறைந்த தோற்றமும் பெரும்பாலும் வந்துவிடுகிறது.
இந்த எண்ணெயில் உள்ள ஆன்டி ஆக்சிடென்ட்கள் முகத்தில் உள்ள பிரீ ரேடிக்கல்ஸை தாக்கி அழிக்கிறது. இதனால் சருமம் சேதம் அடையாமல் பாதுகாக்கப்படுகிறது. மேலும் ப்ளாக் ஹெட்ஸ்களை நீக்கி சருமத்துளைகளை நீக்குகிறது. குறிப்பிட்ட இயற்கை பொருள்கள் அழகை சற்றும் குலைக்காமல் மெருகேற்றி வைக்க உதவும். அப்படியான பொருள்களில் ஒன்றுதான் குங்குமப்பூ. இதை கொண்டு குங்குமப்பூ எண்ணெய் தயாரிப்பது எப்படி என்பதையும் அதை பயன்படுத்தும் முறையையும் பார்க்கலாம்.
குங்குமப்பூ எண்ணெய் தயாரிக்க
பாதாம் எண்ணெய் - அரை கப்
குங்குமப்பூ இதழ்கள் - இரண்டு தேக்கரண்டி.
பாதாம் எண்ணெயில் குங்குமப்பூவை நன்றாக கலக்கவும். அதன் பின்னர் ஐந்து நிமிடங்களுக்கு அப்படியே வைத்திருங்கள். ஒரு தவாவில் நீரூற்றி கொதிக்க விடுங்கள். நன்றாக நீர் கொதிக்கும் போது எடுத்து வைத்துள்ள பாதாம் குங்குமப்பூ எண்ணெயை அந்த நீரின் மேல் வையுங்கள். 30 நிமிடங்கள் மிதமான சூட்டில் நீர் கொதித்தபடியே இருக்கட்டும்.
பின்னர் ஆறிய உடன் எடுத்து குங்குமப்பூக்களை வடிகட்டி விட்டு நீங்கள் அதனை ஒரு பாட்டிலில் சேமியுங்கள். தேவையெனில் குங்குமப்பூவை வடிகட்டி சேகரிக்கலாம். அல்லது குங்குமப்பூவோடு வைத்தும் பயன்படுத்தலாம்.
இதுதான் குங்குமப்பூ எண்ணெய். உங்கள் முக அழகை மேம்படுத்தும் அற்புத பொருள். தினமும் இரவில் நீங்கள் உறங்கும் முன் முகத்தில் தடவி கொள்ளுங்கள். காலையில் முகத்தை பாசிப்பயிறு கொண்டு கழுவி வாருங்கள். ஒரே மாதத்தில் சிவந்து போய் இருக்கும் உங்கள் முகத்தை பார்த்து நீங்களே ஆச்சரியப்படுவீர்கள்.
குங்குமப்பூவில் நிறம் தரும் குணங்களோடு இயற்கையாக ப்ளீச்சிங் தன்மையும் படர்ந்திருக்கிறது. அதனால் இவை சருமத்தில் இருக்கும் அழுக்கை நீக்கவும் பயன்படுகிறது.
இந்த எண்ணெயில் உள்ள ஆன்டி ஆக்சிடென்ட்கள் முகத்தில் உள்ள பிரீ ரேடிக்கல்ஸை தாக்கி அழிக்கிறது. இதனால் சருமம் சேதம் அடையாமல் பாதுகாக்கப்படுகிறது. மேலும் ப்ளாக் ஹெட்ஸ்களை நீக்கி சருமத்துளைகளை நீக்குகிறது. குறிப்பிட்ட இயற்கை பொருள்கள் அழகை சற்றும் குலைக்காமல் மெருகேற்றி வைக்க உதவும். அப்படியான பொருள்களில் ஒன்றுதான் குங்குமப்பூ. இதை கொண்டு குங்குமப்பூ எண்ணெய் தயாரிப்பது எப்படி என்பதையும் அதை பயன்படுத்தும் முறையையும் பார்க்கலாம்.
குங்குமப்பூ எண்ணெய் தயாரிக்க
பாதாம் எண்ணெய் - அரை கப்
குங்குமப்பூ இதழ்கள் - இரண்டு தேக்கரண்டி.
பாதாம் எண்ணெயில் குங்குமப்பூவை நன்றாக கலக்கவும். அதன் பின்னர் ஐந்து நிமிடங்களுக்கு அப்படியே வைத்திருங்கள். ஒரு தவாவில் நீரூற்றி கொதிக்க விடுங்கள். நன்றாக நீர் கொதிக்கும் போது எடுத்து வைத்துள்ள பாதாம் குங்குமப்பூ எண்ணெயை அந்த நீரின் மேல் வையுங்கள். 30 நிமிடங்கள் மிதமான சூட்டில் நீர் கொதித்தபடியே இருக்கட்டும்.
பின்னர் ஆறிய உடன் எடுத்து குங்குமப்பூக்களை வடிகட்டி விட்டு நீங்கள் அதனை ஒரு பாட்டிலில் சேமியுங்கள். தேவையெனில் குங்குமப்பூவை வடிகட்டி சேகரிக்கலாம். அல்லது குங்குமப்பூவோடு வைத்தும் பயன்படுத்தலாம்.
இதுதான் குங்குமப்பூ எண்ணெய். உங்கள் முக அழகை மேம்படுத்தும் அற்புத பொருள். தினமும் இரவில் நீங்கள் உறங்கும் முன் முகத்தில் தடவி கொள்ளுங்கள். காலையில் முகத்தை பாசிப்பயிறு கொண்டு கழுவி வாருங்கள். ஒரே மாதத்தில் சிவந்து போய் இருக்கும் உங்கள் முகத்தை பார்த்து நீங்களே ஆச்சரியப்படுவீர்கள்.
குங்குமப்பூவில் நிறம் தரும் குணங்களோடு இயற்கையாக ப்ளீச்சிங் தன்மையும் படர்ந்திருக்கிறது. அதனால் இவை சருமத்தில் இருக்கும் அழுக்கை நீக்கவும் பயன்படுகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X