என் மலர்
அழகுக் குறிப்புகள்
அதிக வேலைப்பாடுகள் அல்லாத சாதாரண அனார்கலியை அனைத்து வகையான விழாக்களின் போதும் அணிந்து மகிழலாம். இது பெண்களுக்கு கவர்ச்சியான தோற்றத்தையும் ஏற்படுத்தி கொடுக்கும்.
திருமணத்திற்கு..
லெகங்கா :
திருமண நிகழ்ச்சியில் அணிவதற்கு பொருத்தமான ஆடைகளுள் ஒன்றாக லெகங்கா அமைந்திருக்கிறது. பிரமிக்க வைக்கும் வேலைப்பாடுகள் கொண்ட லெகங்காவை தேர்ந்தெடுத்து அணிவது, திருமண வைபவத்தில் தனித்துவமான நபராக காட்சிப்படுத்தும்.
புடவை :
புடவையை போல் பெண்களை அழகாக காண்பிக்கும் உடை வேறு எதுவும் இல்லை. திருமணம் மற்றும் பாரம்பரிய விழாக்களின் போது புடவையை அணிவது அந்த நிகழ்வுக்கு அழகு சேர்க்கும். அணிபவரையும் அழகுடன் மிளிரவைக்கும்.
விருந்து நிகழ்ச்சிகளுக்கு..
சாதாரண அனார்கலி :
அதிக வேலைப்பாடுகள் அல்லாத சாதாரண அனார்கலியை அனைத்து வகையான விழாக்களின் போதும் அணிந்து மகிழலாம். இது பெண்களுக்கு கவர்ச்சியான தோற்றத்தையும் ஏற்படுத்தி கொடுக்கும்.
பேண்ட் ஸ்டைல் சல்வார் :
இன்று உலகம் முழுவதும் பேண்ட் ஸ்டைல் சல்வார் அணிவது பேஷனாக இருக்கிறது. இது ஸ்டைலான தோற்றத்தை மட்டும் கொடுப்பதில்லை. பெண்களுக்கு தன்னம்பிக்கையும் அளிக்கிறது. இது விருந்து நிகழ்வுகள், சுப நிகழ்ச்சிகளுக்கு அணிவதற்கு ஏற்றது.
அலுவலகத்துக்கு
பஞ்சாபி சல்வார் :
சல்வார், பாரம்பரியத்தையும், நவீனத்தையும் ஒருசேர கலந்து பிரதிபலிக்கும் ஆடைகளுள் ஒன்றாக கருதப்படுகிறது. பஞ்சாப் சல்வாரை எல்லா விதமான நிகழ்ச்சிகளுக்கும் அணியலாம். அலுவலகத்திற்கும் உடுத்தி செல்லலாம். அலுவலக பணிக்கு அணிவதற்கு ஏற்ற ஆடைகளுள் சிறந்ததாக இது அமைந்திருக்கிறது.
சுடிதார் :
இது அழகான, அசத்தலான தோற்றத்தை அளிக்கக்கூடியது. அலுவலக பணிக்கு அணிவதற்கு ஏற்ற ஆடைகளுள் சுடிதாரும் ஒன்று. நவநாகரிக தோற்றத்தை கொடுக்கும் ஆடை ரகமாக கருதப்படுகிறது.
லெகங்கா :
திருமண நிகழ்ச்சியில் அணிவதற்கு பொருத்தமான ஆடைகளுள் ஒன்றாக லெகங்கா அமைந்திருக்கிறது. பிரமிக்க வைக்கும் வேலைப்பாடுகள் கொண்ட லெகங்காவை தேர்ந்தெடுத்து அணிவது, திருமண வைபவத்தில் தனித்துவமான நபராக காட்சிப்படுத்தும்.
புடவை :
புடவையை போல் பெண்களை அழகாக காண்பிக்கும் உடை வேறு எதுவும் இல்லை. திருமணம் மற்றும் பாரம்பரிய விழாக்களின் போது புடவையை அணிவது அந்த நிகழ்வுக்கு அழகு சேர்க்கும். அணிபவரையும் அழகுடன் மிளிரவைக்கும்.
விருந்து நிகழ்ச்சிகளுக்கு..
சாதாரண அனார்கலி :
அதிக வேலைப்பாடுகள் அல்லாத சாதாரண அனார்கலியை அனைத்து வகையான விழாக்களின் போதும் அணிந்து மகிழலாம். இது பெண்களுக்கு கவர்ச்சியான தோற்றத்தையும் ஏற்படுத்தி கொடுக்கும்.
பேண்ட் ஸ்டைல் சல்வார் :
இன்று உலகம் முழுவதும் பேண்ட் ஸ்டைல் சல்வார் அணிவது பேஷனாக இருக்கிறது. இது ஸ்டைலான தோற்றத்தை மட்டும் கொடுப்பதில்லை. பெண்களுக்கு தன்னம்பிக்கையும் அளிக்கிறது. இது விருந்து நிகழ்வுகள், சுப நிகழ்ச்சிகளுக்கு அணிவதற்கு ஏற்றது.
அலுவலகத்துக்கு
பஞ்சாபி சல்வார் :
சல்வார், பாரம்பரியத்தையும், நவீனத்தையும் ஒருசேர கலந்து பிரதிபலிக்கும் ஆடைகளுள் ஒன்றாக கருதப்படுகிறது. பஞ்சாப் சல்வாரை எல்லா விதமான நிகழ்ச்சிகளுக்கும் அணியலாம். அலுவலகத்திற்கும் உடுத்தி செல்லலாம். அலுவலக பணிக்கு அணிவதற்கு ஏற்ற ஆடைகளுள் சிறந்ததாக இது அமைந்திருக்கிறது.
சுடிதார் :
இது அழகான, அசத்தலான தோற்றத்தை அளிக்கக்கூடியது. அலுவலக பணிக்கு அணிவதற்கு ஏற்ற ஆடைகளுள் சுடிதாரும் ஒன்று. நவநாகரிக தோற்றத்தை கொடுக்கும் ஆடை ரகமாக கருதப்படுகிறது.
முடி வளர்ச்சி குறைவதோடு, கூந்தலும் பலமிழந்து காணப்படும். புருவத்தில் இருக்கும் முடியும் உதிர்ந்து, புருவம் அடர்த்தியின்றி சிறிதாகிவிடும்.
நமது உடல் சரியாக இயங்குவதற்கு தைராய்டு ஹார்மோன் சீராக சுரந்துகொண்டிருக்கவேண்டும். தைராய்டு ஹார்மோன் சுரப்பதில் சீரற்ற நிலை ஏற்பட்டால் அது உடலில் பல்வேறு நோய்கள் உருவாக காரணமாகி விடும். அதோடு பெண்களுக்கு பல்வேறு விதமான சரும பிரச்சினைகளையும் உருவாக்கும். உடலில் தைராய்டு ஹார்மோன் உற்பத்தி குறைவதை ஹைப்போதைராடிஸம் என்றும், அதிகரிப்பதை ஹைப்பர்தைராடிஸம் என்றும் அழைக்கிறோம்.
ஹைப்போதைராடிஸத்தால் ஏற்படும் சரும பாதிப்புகள்:
சருமம் விளறிய நிலையில் காட்சியளிக்கும். சுருக்கங்களும் அதிகம் தென்படும். இது ‘மிக்ஸெடிமா’ என்று அழைக்கப்படுகிறது.
சருமத்திற்கு செல்லும் ரத்தத்தின் அளவு குறையும். அதை தொடர்ந்து சருமம் குளிர்ச்சித்தன்மையை அடையும்.
கை, கால் சருமம் மிருதுத்தன்மையை இழந்து கெட்டியாகி, வறண்டு காணப்படும். இந்த பாதிப்பை ‘கெராட்டோடெர்மா’ என்று அழைப்பார்கள்.
கை, கால்களின் உள்பகுதி மஞ்சள் நிறத்திற்கு மாறும். இந்த பாதிப்பிற்கு ‘கரோட்டெநிமீயா’ என்று பெயர்.
முடி வளர்ச்சி குறைவதோடு, கூந்தலும் பலமிழந்து காணப்படும். புருவத்தில் இருக்கும் முடியும் உதிர்ந்து, புருவம் அடர்த்தியின்றி சிறிதாகிவிடும்.
நகங்கள் வளர்ச்சி குறைவதோடு பலமிழந்தும் காணப்படும். தைராய்டு ஹார்மோனின் அளவு வெகுவாக குறைந்து போகும்போது உடலில் ஏற்படும் காயங்கள் ஆறுவதற்கும் நாளாகும். உடல் உற்பத்தி செய்யும் வியர்வையின் அளவும் குறைந்துகொண்டிருக்கும். சருமம் பொலிவிழந்து வித்தியாசமாக காட்சியளிக்கும்.
ஹைப்பர்தைராய்டிஸத்தால் ஏற்படும் சரும பாதிப்புகள்:
சருமத்திற்கு வரும் ரத்தத்தின் அளவு அதிகமாக இருக்கும். அதனால் சரும சீதோஷ்ண நிலை சூடாக காணப்படும். முகம், கை கால்களின் உள்பகுதி சிவந்து கெட்டியாக தோன்றும்.
கூந்தல் பார்ப்பதற்கு ஆரோக்கியமாக தோன்றினாலும், கொத்துக்கொத்தாக முடி உதிர்ந்து வழுக்கையாகும் நிலையை அடையும்.
நகம் வளைந்து வித்தியாசமான வடிவத்தில் வளரும். நகம் முழுவதும் ஒரே நிறத்தில் தோன்றாமல் முரண்பாடான நிறங்களுடன் காட்சியளிக்கும்.
உடலில் அதிகமாக வியர்வை தோன்றும். குறிப்பாக உள்ளங்கை, பாதத்தின் உள்பகுதிகளில் வியர்வையின் அளவு அதிகமாக இருக்கும்.
சருமத்தில் மொத்தமாகவோ, ஆங்காங்கோ நிறமாற்றம் காணப்படும்.
கணுக்கால் மற்றும் பாதங்களில் இளம் சிவப்பு அல்லது தவிட்டு நிறத்தில் பருக்கள் தோன்றுதல், இளநரை உருவாகுதல், முடியின் நிறம் மங்குதல் போன்றவைகளும் ஹைப்பர்தைராடிஸத்தின் அறிகுறிகளாகும். முறையான சிகிச்சையால் இந்த பாதிப்புகளில் இருந்து மீளலாம்.
ஹைப்போதைராடிஸத்தால் ஏற்படும் சரும பாதிப்புகள்:
சருமம் விளறிய நிலையில் காட்சியளிக்கும். சுருக்கங்களும் அதிகம் தென்படும். இது ‘மிக்ஸெடிமா’ என்று அழைக்கப்படுகிறது.
சருமத்திற்கு செல்லும் ரத்தத்தின் அளவு குறையும். அதை தொடர்ந்து சருமம் குளிர்ச்சித்தன்மையை அடையும்.
கை, கால் சருமம் மிருதுத்தன்மையை இழந்து கெட்டியாகி, வறண்டு காணப்படும். இந்த பாதிப்பை ‘கெராட்டோடெர்மா’ என்று அழைப்பார்கள்.
கை, கால்களின் உள்பகுதி மஞ்சள் நிறத்திற்கு மாறும். இந்த பாதிப்பிற்கு ‘கரோட்டெநிமீயா’ என்று பெயர்.
முடி வளர்ச்சி குறைவதோடு, கூந்தலும் பலமிழந்து காணப்படும். புருவத்தில் இருக்கும் முடியும் உதிர்ந்து, புருவம் அடர்த்தியின்றி சிறிதாகிவிடும்.
நகங்கள் வளர்ச்சி குறைவதோடு பலமிழந்தும் காணப்படும். தைராய்டு ஹார்மோனின் அளவு வெகுவாக குறைந்து போகும்போது உடலில் ஏற்படும் காயங்கள் ஆறுவதற்கும் நாளாகும். உடல் உற்பத்தி செய்யும் வியர்வையின் அளவும் குறைந்துகொண்டிருக்கும். சருமம் பொலிவிழந்து வித்தியாசமாக காட்சியளிக்கும்.
ஹைப்பர்தைராய்டிஸத்தால் ஏற்படும் சரும பாதிப்புகள்:
சருமத்திற்கு வரும் ரத்தத்தின் அளவு அதிகமாக இருக்கும். அதனால் சரும சீதோஷ்ண நிலை சூடாக காணப்படும். முகம், கை கால்களின் உள்பகுதி சிவந்து கெட்டியாக தோன்றும்.
கூந்தல் பார்ப்பதற்கு ஆரோக்கியமாக தோன்றினாலும், கொத்துக்கொத்தாக முடி உதிர்ந்து வழுக்கையாகும் நிலையை அடையும்.
நகம் வளைந்து வித்தியாசமான வடிவத்தில் வளரும். நகம் முழுவதும் ஒரே நிறத்தில் தோன்றாமல் முரண்பாடான நிறங்களுடன் காட்சியளிக்கும்.
உடலில் அதிகமாக வியர்வை தோன்றும். குறிப்பாக உள்ளங்கை, பாதத்தின் உள்பகுதிகளில் வியர்வையின் அளவு அதிகமாக இருக்கும்.
சருமத்தில் மொத்தமாகவோ, ஆங்காங்கோ நிறமாற்றம் காணப்படும்.
கணுக்கால் மற்றும் பாதங்களில் இளம் சிவப்பு அல்லது தவிட்டு நிறத்தில் பருக்கள் தோன்றுதல், இளநரை உருவாகுதல், முடியின் நிறம் மங்குதல் போன்றவைகளும் ஹைப்பர்தைராடிஸத்தின் அறிகுறிகளாகும். முறையான சிகிச்சையால் இந்த பாதிப்புகளில் இருந்து மீளலாம்.
இன்று புழக்கத்தில் இருக்கும் பெரும்பாலான லிப் க்ளோஸ், லிப்ஸ்டிக்கில் குரோமியம், ஈயம், அலுமினியம், காட்மியம் மற்றும் தீங்கு விளைவிக்கும் பல நச்சு பொருட்கள் இருப்பது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
* லிப்ஸ்டிக்கில் ஒருசில நச்சுப்பொருட்கள் உள்ளன. இந்த நச்சுத்தன்மையை உடல் உறிஞ்சுவதற்கு வாய்ப்புகள் அதிகம். இந்த விஷயம் தெரியாமல் நிறைய பேர் லிப்ஸ்டிக்கை அதிகம் உபயோகிக்கிறார்கள். லிப்ஸ்டிக் வாங்குவதற்கு முன்பு அதில் உள்ளடங்கி இருக்கும் பொருட்களை கவனியுங்கள். அவற்றை எந்த அளவுக்கு பயன்படுத்துவது பாதுகாப்பானது என்பதை தெரிந்துகொள்ளுங்கள்.
* லிப்ஸ்டிக் பயன்படுத்தும்போது உதடுகளில் திடீரென்று அரிப்பு ஏற்பட்டால் அசட்டையாக இருந்துவிடக்கூடாது. அது ஒவ்வாமை பாதிப்புக்கு வழிவகுத்துவிடும். லிப்ஸ்டிக்கில் பிஸ்மத் ஆக்ஸி குளோரைடு என்ற ரசாயனம் உள்ளது. இந்த மூலப்பொருள் புற்றுநோய்க்கு வித்திடக்கூடியது. அதனால் எச்சரிக்கையுடன் கையாள வேண்டும். ஏனெனில் பெரும்பாலான ரசாயன பொருட்கள் புற்றுநோயை ஏற்படுத்தும் தன்மை கொண்டவை என்பதால், லிப்ஸ்டிக் மூலம் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பு அதிகம். லிப்ஸ்டிக் கெட்டுப்போகாமல் பாதுகாக்க பயன்படுத்தப்படும் ரசாயனங்கள் இருமல், கண் எரிச்சல், மூச்சுத்திணறல், ஒவ்வாமை போன்ற உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்தக்கூடும்.
* லிப்ஸ்டிக்கில் பெட்ரோ கெமிக்கல்கள் உள்ளன. இவை நாளமில்லா சுரப்பி அமைப்பில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தும். முக்கியமாக அறிவாற்றல் மற்றும் இனப்பெருக்க திறன்களில் சிக்கல்களை எதிர்கொள்ள நேரிடும்.
* தொடர்ந்து லிப்ஸ்டிக் பயன்படுத்துவதன் விளைவாக, சிறுநீரக செயலிழப்பும் ஏற்படலாம். லிப்ஸ்டிக்கில் அதிக அளவு காட்மியம் இருப்பதால் இது ஏற்படுகிறது. வயிற்று கட்டிகளும் இந்த நச்சு ரசாயனத்தின் காரணமாக ஏற்படக்கூடிய மற்றொரு பிரச்சினையாகும்.
* லிப்ஸ்டிக் பயன்படுத்தும்போது உதடுகளில் திடீரென்று அரிப்பு ஏற்பட்டால் அசட்டையாக இருந்துவிடக்கூடாது. அது ஒவ்வாமை பாதிப்புக்கு வழிவகுத்துவிடும். லிப்ஸ்டிக்கில் பிஸ்மத் ஆக்ஸி குளோரைடு என்ற ரசாயனம் உள்ளது. இந்த மூலப்பொருள் புற்றுநோய்க்கு வித்திடக்கூடியது. அதனால் எச்சரிக்கையுடன் கையாள வேண்டும். ஏனெனில் பெரும்பாலான ரசாயன பொருட்கள் புற்றுநோயை ஏற்படுத்தும் தன்மை கொண்டவை என்பதால், லிப்ஸ்டிக் மூலம் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பு அதிகம். லிப்ஸ்டிக் கெட்டுப்போகாமல் பாதுகாக்க பயன்படுத்தப்படும் ரசாயனங்கள் இருமல், கண் எரிச்சல், மூச்சுத்திணறல், ஒவ்வாமை போன்ற உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்தக்கூடும்.
* லிப்ஸ்டிக்கில் பெட்ரோ கெமிக்கல்கள் உள்ளன. இவை நாளமில்லா சுரப்பி அமைப்பில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தும். முக்கியமாக அறிவாற்றல் மற்றும் இனப்பெருக்க திறன்களில் சிக்கல்களை எதிர்கொள்ள நேரிடும்.
* தொடர்ந்து லிப்ஸ்டிக் பயன்படுத்துவதன் விளைவாக, சிறுநீரக செயலிழப்பும் ஏற்படலாம். லிப்ஸ்டிக்கில் அதிக அளவு காட்மியம் இருப்பதால் இது ஏற்படுகிறது. வயிற்று கட்டிகளும் இந்த நச்சு ரசாயனத்தின் காரணமாக ஏற்படக்கூடிய மற்றொரு பிரச்சினையாகும்.
பல காரணங்களால் உங்களின் புருவங்களின் அடர்த்தி குறைகிறது. இதனை சரி செய்ய இந்த மூன்று எண்ணெய்களை பயன்படுத்தி உங்களின் புருவங்களின் அடர்த்தியை சரிசெய்யலாம்.
புருவங்கள் பெரும்பாலும் முகத்திற்கு அழகு தருகிறது. பல காரணங்களால் உங்களின் புருவங்களின் அடர்த்தி குறைகிறது. இதனை சரி செய்ய இந்த மூன்று எண்ணெய்களை பயன்படுத்தி உங்களின் புருவங்களின் அடர்த்தியை சரிசெய்யலாம்.
நீங்கள் செய்ய வேண்டியது 50 மில்லி ஆமணக்கு எண்ணெய், 50 மில்லி தேங்காய் எண்ணெய் மற்றும் 50 மில் ஆலிவ் எண்ணெய். இப்போது இந்த மூன்று எண்ணெயையும் கலந்து ஒரு கண்ணாடி பாட்டில் சேமிக்கவும். ஒவ்வொரு இரவும் இந்த எண்ணெய் கலவையின் சில துளிகளால் உங்கள் புருவங்களை மசாஜ் செய்யுங்கள். சில நாட்களுக்குப் பிறகு முடிவைக் கண்டு நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள்.
ஆமணக்கு எண்ணெயில் புரதங்கள் மற்றும் கொழுப்பு அமிலங்கள் உள்ளன, இது முடி இழைகளின் தரத்தை அதிகரிக்க உதவுகிறது மற்றும் முடி வளர்ச்சியை அதிகரிக்கிறது.
தேங்காய் எண்ணெய் புருவங்களைச் சுற்றியுள்ள சருமத்தை சீராக்க உதவுகிறது, இது முடி வளர்ச்சியை அதிகரிக்கும்.
ஆலிவ் எண்ணெயில் வைட்டமின்கள் ஈ மற்றும் கே ஆகியவற்றுடன் கொழுப்பு அமிலங்கள் உள்ளன, அவை மயிர்க்கால்களை சரிசெய்யவும் பாதுகாக்கவும் உதவுகின்றன. எனவே இந்த எண்ணெயை முயற்சி செய்து பாருங்கள்.
நீங்கள் செய்ய வேண்டியது 50 மில்லி ஆமணக்கு எண்ணெய், 50 மில்லி தேங்காய் எண்ணெய் மற்றும் 50 மில் ஆலிவ் எண்ணெய். இப்போது இந்த மூன்று எண்ணெயையும் கலந்து ஒரு கண்ணாடி பாட்டில் சேமிக்கவும். ஒவ்வொரு இரவும் இந்த எண்ணெய் கலவையின் சில துளிகளால் உங்கள் புருவங்களை மசாஜ் செய்யுங்கள். சில நாட்களுக்குப் பிறகு முடிவைக் கண்டு நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள்.
ஆமணக்கு எண்ணெயில் புரதங்கள் மற்றும் கொழுப்பு அமிலங்கள் உள்ளன, இது முடி இழைகளின் தரத்தை அதிகரிக்க உதவுகிறது மற்றும் முடி வளர்ச்சியை அதிகரிக்கிறது.
தேங்காய் எண்ணெய் புருவங்களைச் சுற்றியுள்ள சருமத்தை சீராக்க உதவுகிறது, இது முடி வளர்ச்சியை அதிகரிக்கும்.
ஆலிவ் எண்ணெயில் வைட்டமின்கள் ஈ மற்றும் கே ஆகியவற்றுடன் கொழுப்பு அமிலங்கள் உள்ளன, அவை மயிர்க்கால்களை சரிசெய்யவும் பாதுகாக்கவும் உதவுகின்றன. எனவே இந்த எண்ணெயை முயற்சி செய்து பாருங்கள்.
சருமத்திற்கு பயன்படுத்தும் அழகு சாதனப்பொருட்கள் எண்ணெய் பசை தன்மை கொண்டதா? அவை சருமத்திற்கு பாதுகாப்பானதா? என்பதை கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம்.
நமது சருமம் உடல் இயக்க செயல்பாடுகள் சீராக நடைபெறும் விதத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதனால் அதனை முறையாக பராமரிக்க வேண்டியது அவசியம். சுற்றுச்சூழல் மாசு, புற ஊதா கதிர்வீச்சு போன்றவற்றுக்கு எதிராக பாதுகாப்பை வழங்குவதுதான் சருமத்தின் முதன்மை பணியாக இருக்கிறது.
நோய் கிருமிகளை உருவாக்கும் பாக்டீரியாக்களிடம் இருந்து உடலை பாதுகாப்பதிலும் சருமம் முக்கிய பங்கு வகிக்கிறது. அழுக்கு, எண்ணெய் பசை தன்மை போன்றவற்றை நீக்கி ஈரப்பதத்தை தக்க வைக்கவும் உதவுகிறது. சருமத்தின் வெளிப்புற அடுக்கு எண்ணெய் பொருட்களை எளிதில் செல்களுக்கு இடையே ஊடுருவச்செய்யும் தன்மை கொண்டது.
ஆதலால் சருமத்திற்கு பயன்படுத்தும் அழகு சாதனப்பொருட்கள் எண்ணெய் பசை தன்மை கொண்டதா? அவை சருமத்திற்கு பாதுகாப்பானதா? என்பதை கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம். கூடுமானவரை இயற்கையான மூலிகை அழகு சாதன பொருட்களை சருமத்திற்கு பயன்படுத்துவது நல்லது.
சருமத்தின் வெளிப்பகுதி நீர் புகா தன்மையை கொண்டிருந்தாலும் சரும செல்களுக்கு ஈரப்பதம் தேவையானதாக இருக்கிறது. ஈரப்பதம் இல்லாவி வருவது நல்லது.
சேதமடைந்த செல்களை சரி செய்வது, இறந்த செல்களை அப்புறப்படுத்துவது, புதிய செல்களை உற்பத்தி செய்வது, சூரிய ஒளியை வைட்டமின் டி ஆக மாற்றுவது போன்ற பணிகளையும் செய்கிறது. சருமம் உடலுக்கு கவசமாகவும் விளங்குகிறது. ஆதலால் சருமத்திற்கு பயன்படுத்தும் அழகு சாதன பொருட்கள் அவற்றுக்கு பாதிப்பு தருவதாக அமைந்து விடக்கூடாது.
நோய் கிருமிகளை உருவாக்கும் பாக்டீரியாக்களிடம் இருந்து உடலை பாதுகாப்பதிலும் சருமம் முக்கிய பங்கு வகிக்கிறது. அழுக்கு, எண்ணெய் பசை தன்மை போன்றவற்றை நீக்கி ஈரப்பதத்தை தக்க வைக்கவும் உதவுகிறது. சருமத்தின் வெளிப்புற அடுக்கு எண்ணெய் பொருட்களை எளிதில் செல்களுக்கு இடையே ஊடுருவச்செய்யும் தன்மை கொண்டது.
ஆதலால் சருமத்திற்கு பயன்படுத்தும் அழகு சாதனப்பொருட்கள் எண்ணெய் பசை தன்மை கொண்டதா? அவை சருமத்திற்கு பாதுகாப்பானதா? என்பதை கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம். கூடுமானவரை இயற்கையான மூலிகை அழகு சாதன பொருட்களை சருமத்திற்கு பயன்படுத்துவது நல்லது.
சருமத்தின் வெளிப்பகுதி நீர் புகா தன்மையை கொண்டிருந்தாலும் சரும செல்களுக்கு ஈரப்பதம் தேவையானதாக இருக்கிறது. ஈரப்பதம் இல்லாவி வருவது நல்லது.
சேதமடைந்த செல்களை சரி செய்வது, இறந்த செல்களை அப்புறப்படுத்துவது, புதிய செல்களை உற்பத்தி செய்வது, சூரிய ஒளியை வைட்டமின் டி ஆக மாற்றுவது போன்ற பணிகளையும் செய்கிறது. சருமம் உடலுக்கு கவசமாகவும் விளங்குகிறது. ஆதலால் சருமத்திற்கு பயன்படுத்தும் அழகு சாதன பொருட்கள் அவற்றுக்கு பாதிப்பு தருவதாக அமைந்து விடக்கூடாது.
கண்ணாடி அணிபவர்களின் மூக்கு பகுதியில் பிரேம்கள் அழுத்தமாக பதிவதால் தழும்புகளும், வடுக்களும் ஏற்படுகின்றன. இந்த தழும்பை போக்க வீட்டில் இருக்கும் பொருட்களை கொண்டே தீர்வு காணலாம்.
இன்றைய விஞ்ஞான யுகத்தில் பெரும்பாலான வேலைகள் கணினி சார்ந்த டிஜிட்டல் திரைகளின் வழியாகவே நடக்கின்றன. இது தவிர பெரும்பாலானோர் தங்கள் பொழுதுபோக்குகளுக்கு இணையதளங்களையே சார்ந்திருக்கிறார்கள். அதனால் டிஜிட்டல் சாதனங்களின் பயன்பாடு மிகவும் அதிகரித்துவிட்டது. அவைகளை நீண்ட நேரம் பயன்படுத்துவது கண் சார்ந்த பிரச்சினைகளுக்கு வழிவகுக்கிறது.
கண்ணாடிகள் அணிவதும் தவிர்க்கமுடியாததாகிவிட்டது. அப்படி கண்ணாடி அணிபவர்களின் மூக்கு பகுதியில் பிரேம்கள் அழுத்தமாக பதிவதால் தழும்புகளும், வடுக்களும் ஏற்படுகின்றன. அத்தகைய பாதிப்புகள் ஏற்படாமல் தடுப்பதற்கு கற்றாழையை பயன்படுத்தலாம். கற்றாழையின் தோல் பகுதியை நீக்கி ஜெல்லை எடுத்து வடுக்கள் ஏற்பட்டிருக்கும் பகுதியில் அழுத்தமாக தேய்த்து அரை மணி நேரம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவி வரலாம்.
உருளைக்கிழங்கு சாறையும் பயன்படுத்தலாம். அதிலிருக்கும் கேடகோலேஸ் எனும் நொதி சருமத்தை பிரகாசமாக்கவும், கருமையான புள்ளிகளை அகற்றவும் உதவுகிறது. உருளைக்கிழங்கை நறுக்கி மிக்சியில் அரைத்து அதன் சாற்றை பஞ்சில் முக்கி தழும்புகள் ஏற்பட்டிருக்கும் பகுதியில் தடவ வேண்டும். வாரத்திற்கு நான்கு முறை செய்து வந்தால் விரைவில் தழும்புகள் மறையத் தொடங்கும்.
வெள்ளரிக்காயும் தழும்புகள் மறைவதற்கு உதவும். அதனை மெல்லிய துண்டுகளாக நறுக்கி வடுக்கள் இருக்கும் பகுதியில் வைத்து 30 நிமிடங்கள் கழித்து எடுத்து குளிர்ந்த நீரால் முகத்தை கழுவ வேண்டும்.
எலுமிச்சை சாறில் உள்ள ஆன்டி ஆக்சிடெண்டுகள் வடுக்களை நீக்கும் தன்மை கொண்டது. அதனுடன் சிறிதளவு தேன் சேர்த்து மூக்கு பகுதியை சுற்றி அடுத்தமாக தடவ வேண்டும். அப்போது மூக்கு பகுதியில் குளிர்ச்சி தன்மையை உணர முடியும். குளிர்ச்சி நீங்கியதும் முகத்தை கழுவி விடலாம்.
கண்ணாடிகள் அணிவதும் தவிர்க்கமுடியாததாகிவிட்டது. அப்படி கண்ணாடி அணிபவர்களின் மூக்கு பகுதியில் பிரேம்கள் அழுத்தமாக பதிவதால் தழும்புகளும், வடுக்களும் ஏற்படுகின்றன. அத்தகைய பாதிப்புகள் ஏற்படாமல் தடுப்பதற்கு கற்றாழையை பயன்படுத்தலாம். கற்றாழையின் தோல் பகுதியை நீக்கி ஜெல்லை எடுத்து வடுக்கள் ஏற்பட்டிருக்கும் பகுதியில் அழுத்தமாக தேய்த்து அரை மணி நேரம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவி வரலாம்.
உருளைக்கிழங்கு சாறையும் பயன்படுத்தலாம். அதிலிருக்கும் கேடகோலேஸ் எனும் நொதி சருமத்தை பிரகாசமாக்கவும், கருமையான புள்ளிகளை அகற்றவும் உதவுகிறது. உருளைக்கிழங்கை நறுக்கி மிக்சியில் அரைத்து அதன் சாற்றை பஞ்சில் முக்கி தழும்புகள் ஏற்பட்டிருக்கும் பகுதியில் தடவ வேண்டும். வாரத்திற்கு நான்கு முறை செய்து வந்தால் விரைவில் தழும்புகள் மறையத் தொடங்கும்.
வெள்ளரிக்காயும் தழும்புகள் மறைவதற்கு உதவும். அதனை மெல்லிய துண்டுகளாக நறுக்கி வடுக்கள் இருக்கும் பகுதியில் வைத்து 30 நிமிடங்கள் கழித்து எடுத்து குளிர்ந்த நீரால் முகத்தை கழுவ வேண்டும்.
எலுமிச்சை சாறில் உள்ள ஆன்டி ஆக்சிடெண்டுகள் வடுக்களை நீக்கும் தன்மை கொண்டது. அதனுடன் சிறிதளவு தேன் சேர்த்து மூக்கு பகுதியை சுற்றி அடுத்தமாக தடவ வேண்டும். அப்போது மூக்கு பகுதியில் குளிர்ச்சி தன்மையை உணர முடியும். குளிர்ச்சி நீங்கியதும் முகத்தை கழுவி விடலாம்.
உலர்வான, சிக்கல் நிறைந்த கூந்தலை கொண்டவர்களும் இஞ்சியை உபயோகிக்கலாம். அது கூந்தலுக்கு மென்மையும், மிருதுவான தன்மையும் கொடுக்கும்.
கோடைகாலத்தில் அதிகரிக்கும் வெப்பம் முடிஉதிர்வு பிரச்சினையை அதிகப்படுத்துகிறது. பல்வேறு மருத்துவ குணம் கொண்ட இஞ்சியை பயன்படுத்தி கூந்தல் ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம்.
முடி உதிர்வை இஞ்சி கட்டுப்படுத்தும். இஞ்சியில் மெக்னீசியம், பாஸ்பரஸ், வைட்டமின்கள் அதிகம் உள்ளன. ஒரு டேபிள்ஸ்பூன் இஞ்சி சாறுடன் ஒரு டீஸ்பூன் பாதாம் எண்ணெய் கலந்து தூங்க செல்வதற்கு முன்பு கூந்தலின் மயிர்கால் பகுதிகளில் தேய்த்து மசாஜ் செய்யவும். காலையில் எழுந்ததும் ஷாம்பு கொண்டு கூந்தலை கழுவி விடவும். வாரம் மூன்று முறை இவ்வாறு செய்து வந்தால் முடி உதிர்வு பிரச்சினை முற்றிலும் நீங்கிவிடும்.
பொடுகு பிரச்சினைதான் முடி உதிர்வுக்கு முக்கிய காரணமாக அமைந்திருக்கிறது. தலையில் ஏற்படும் சருமம் சார்ந்த பிரச்சினைதான் பொடுகு தோன்றுவதற்கு காரணமாக இருக்கிறது. இஞ்சியில் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் உள்ளன. இஞ்சி சாற்றை தலையில் தடவும்போது நோயை ஏற்படுத்தும் பாக்டீரியாக்கள் அழிந்துவிடும். தூங்கச் செல்வதற்கு முன்பு இஞ்சி சாறை தலையில் தடவிவிட்டு காலையில் ஷாம்பு கொண்டு கூந்தலை அலசிவிடலாம்.
இஞ்சி சாற்றை தலையில் தடவி மசாஜ் செய்யவேண்டும். அது மயிர்கால்களுக்கு செல்லும் ரத்த ஓட்டத்தை வேகப்படுத்தும். இஞ்சியில் ஜிஞ்சரால் எனும் சிறப்பு சேர்மம் உள்ளது. இது ரத்த நாளங்களில் ஏற்படும் பாதிப்பை குறைத்து, ரத்த ஓட்டத்தை அதிகரிக்க செய்ய உதவும். சிறந்த ரத்த ஓட்டம் கூந்தல் ஆரோக்கியத்திற்கு வலு சேர்க்கும்.
உலர்வான, சிக்கல் நிறைந்த கூந்தலை கொண்டவர்களும் இஞ்சியை உபயோகிக்கலாம். அது கூந்தலுக்கு மென்மையும், மிருதுவான தன்மையும் கொடுக்கும். கூந்தலுக்கு இயற்கையான ஹேர் கண்டிஷனராகவும் இஞ்சி செயல்படும். கூந்தலுக்கு ஜொலிப்பைத் தரும் செபம் எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்கச்செய்யும் சக்தியும் இஞ்சிக்கு இருக்கிறது.
இஞ்சியில் முடிக்கு ஊட்டமளிக்கும் லினோலிக் அமிலம் போன்ற சில கொழுப்பு அமிலங்கள் உள்ளன. ஒரு துண்டு இஞ்சியை சிறு துண்டுகளாக நறுக்கி, தயிரில் கலந்து கூந்தலில் தடவி மசாஜ் செய்ய வேண்டும். அரை மணி நேரம் கழித்து கூந்தலை கழுவிவிடலாம். இவ்வாறு வாரம் ஒரு முறை செய்துவந்தால் கூந்தல் வலிமையாகும்.
முடி உதிர்வை இஞ்சி கட்டுப்படுத்தும். இஞ்சியில் மெக்னீசியம், பாஸ்பரஸ், வைட்டமின்கள் அதிகம் உள்ளன. ஒரு டேபிள்ஸ்பூன் இஞ்சி சாறுடன் ஒரு டீஸ்பூன் பாதாம் எண்ணெய் கலந்து தூங்க செல்வதற்கு முன்பு கூந்தலின் மயிர்கால் பகுதிகளில் தேய்த்து மசாஜ் செய்யவும். காலையில் எழுந்ததும் ஷாம்பு கொண்டு கூந்தலை கழுவி விடவும். வாரம் மூன்று முறை இவ்வாறு செய்து வந்தால் முடி உதிர்வு பிரச்சினை முற்றிலும் நீங்கிவிடும்.
பொடுகு பிரச்சினைதான் முடி உதிர்வுக்கு முக்கிய காரணமாக அமைந்திருக்கிறது. தலையில் ஏற்படும் சருமம் சார்ந்த பிரச்சினைதான் பொடுகு தோன்றுவதற்கு காரணமாக இருக்கிறது. இஞ்சியில் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் உள்ளன. இஞ்சி சாற்றை தலையில் தடவும்போது நோயை ஏற்படுத்தும் பாக்டீரியாக்கள் அழிந்துவிடும். தூங்கச் செல்வதற்கு முன்பு இஞ்சி சாறை தலையில் தடவிவிட்டு காலையில் ஷாம்பு கொண்டு கூந்தலை அலசிவிடலாம்.
இஞ்சி சாற்றை தலையில் தடவி மசாஜ் செய்யவேண்டும். அது மயிர்கால்களுக்கு செல்லும் ரத்த ஓட்டத்தை வேகப்படுத்தும். இஞ்சியில் ஜிஞ்சரால் எனும் சிறப்பு சேர்மம் உள்ளது. இது ரத்த நாளங்களில் ஏற்படும் பாதிப்பை குறைத்து, ரத்த ஓட்டத்தை அதிகரிக்க செய்ய உதவும். சிறந்த ரத்த ஓட்டம் கூந்தல் ஆரோக்கியத்திற்கு வலு சேர்க்கும்.
உலர்வான, சிக்கல் நிறைந்த கூந்தலை கொண்டவர்களும் இஞ்சியை உபயோகிக்கலாம். அது கூந்தலுக்கு மென்மையும், மிருதுவான தன்மையும் கொடுக்கும். கூந்தலுக்கு இயற்கையான ஹேர் கண்டிஷனராகவும் இஞ்சி செயல்படும். கூந்தலுக்கு ஜொலிப்பைத் தரும் செபம் எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்கச்செய்யும் சக்தியும் இஞ்சிக்கு இருக்கிறது.
இஞ்சியில் முடிக்கு ஊட்டமளிக்கும் லினோலிக் அமிலம் போன்ற சில கொழுப்பு அமிலங்கள் உள்ளன. ஒரு துண்டு இஞ்சியை சிறு துண்டுகளாக நறுக்கி, தயிரில் கலந்து கூந்தலில் தடவி மசாஜ் செய்ய வேண்டும். அரை மணி நேரம் கழித்து கூந்தலை கழுவிவிடலாம். இவ்வாறு வாரம் ஒரு முறை செய்துவந்தால் கூந்தல் வலிமையாகும்.
ரோஸ் வாட்டர் சருமத்தில் எளிதில் உறிஞ்சப்படும் தன்மை கொண்டது. அதனால் தினமும் மாய்ஸ்சரைசருடன் ரோஸ்வாட்டரையும் கலந்து சருமத்தில் தடலாம்.
கோடை காலத்தில் சரும பிரச்சினைகள் தலைதூக்குவது தவிர்க்கமுடியாதது. ஏனெனில் நீர்ச்சத்துதான் சரும பராமரிப்பில் முக்கிய அங்கம் வகிக்கிறது. கோடையில் நிலவும் வெப்ப தாக்கத்தின் காரணமாக உடலில் நீர்ச்சத்து குறையும்போது சருமமும் பாதிப்புக்குள்ளாகும். குறிப்பாக சிவத்தல், எரிச்சல், தடிப்புகள் போன்ற பிரச்சினைகளை சருமம் எதிர்கொள்ள நேரிடும்.
இந்த பிரச்சினைக்கு ‘ரோஸ் வாட்டர்’ எனப்படும் ரோஜா நீர் தீர்வு தரும். ரோஜா இதழ்களை நீரில் கொதிக்கவைத்து வடிகட்டி தயாரிக்கப்படும் ரோஸ் வாட்டர், பல ஆரோக்கிய நன்மைகளை உள்ளடக்கியது. பெண்களின் சரும பராமரிப்பு பொருட்களில் இடம் பிடித்திருக்கும் ரோஸ் வாட்டரை கோடை காலத்தில் தவறாமல் பயன்படுத்த வேண்டும். அதற்கான காரணங்கள்:
ரோஸ் வாட்டரில் உள்ள ஆன்டி ஆக்சிடென்ட்டுகள் சருமத்தை பாதுகாக்கவும், நீரேற்றமாக வைத்திருக்கவும் உதவுகிறது. ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தை பேணுவதற்கு தண்ணீர் பருகுவது அவசியம் என்றாலும் சருமத்தின் உள் அடுக்குகளை நீரேற்றத்துடன் வைத்திருப்பதற்கு அது போதுமானதல்ல. ரோஸ் வாட்டர் சருமத்தில் எளிதில் உறிஞ்சப்படும் தன்மை கொண்டது. அதனால் தினமும் மாய்ஸ்சரைசருடன் ரோஸ்வாட்டரையும் கலந்து சருமத்தில் தடலாம். அது சருமத்தில் நீர்ச்சத்தை தக்க வைக்க உதவுவதுடன் சருமத்திற்கு இயற்கையான பளபளப்பையும் அளிக்கும்.
ரோஸ் வாட்டர் அழற்சி எதிர்ப்பு பண்புகளை கொண்டது. மேலும் அதில் உள்ள ஆன்டி ஆக்சிடென்டுகள் சரும நோய்களுக்கு சிகிச்சை அளிக்கக்கூடியது. சரும எரிச்சல், தடிப்புகளை போக்கக்கூடியது. கண்கள் சிவத்தல், வீக்கம் அடைதல் போன்ற பிரச்சினைகளுக்கு ரோஸ் வாட்டர் நிவாரணம் தரும். காட்டன் பஞ்சுவில் ரோஸ் வாட்டரை முக்கி கண்களின் புருவம், அடிப் பகுதியில் தடவுவதன் மூலம் கண் சோர்வை போக்கலாம். வெண் படல அழற்சி, உலர்ந்த கண், கண்புரை போன்ற பிற கண் சார்ந்த நோய்களுக்கு சிகிச்சை அளிக்கவும் ரோஸ் வாட்டர் பயன்படுத்தப்படுகிறது. ரோஸ் வாட்டரில் கிருமி நாசினி பண்புகளும் உள்ளன. இது தவிர பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளையும் கொண்டிருப்பது சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
வெட்டு காயங்கள், வடுக்கள், தீக்காயங்கள் போன்ற பிற காயங்களுக்கு சிகிச்சை அளிக்கவும் ரோஸ் வாட்டர் உதவும். ரோஸ் வாட்டரை சருமத்தில் தடவுவதன் மூலம் சரும செல்கள் வலுப்பெறும். சரும திசுக்களை மீண்டும் உருவாக்கவும் ரோஸ் வாட்டர் உதவும். ரோஸ் வாட்டரின் வாசம் மனநிலையை மேம்படுத்த உதவும். நன்றாக தூங்கவும் உதவும். ஒப்பனையை நீக்கிய பிறகு ரோஸ் வாட்டரை உபயோகிக்கலாம். அது சருமத்தை குளிர்விக்க துணைபுரியும். சருமத்தில் சுரக்கும் அதிகப்படியான எண்ணெய் பசைத்தன்மையை கட்டுப்படுத்தி சருமத்தின் பி.எச். சமநிலையை பராமரிக்கவும் ரோஸ் வாட்டர் உதவும்.
இந்த பிரச்சினைக்கு ‘ரோஸ் வாட்டர்’ எனப்படும் ரோஜா நீர் தீர்வு தரும். ரோஜா இதழ்களை நீரில் கொதிக்கவைத்து வடிகட்டி தயாரிக்கப்படும் ரோஸ் வாட்டர், பல ஆரோக்கிய நன்மைகளை உள்ளடக்கியது. பெண்களின் சரும பராமரிப்பு பொருட்களில் இடம் பிடித்திருக்கும் ரோஸ் வாட்டரை கோடை காலத்தில் தவறாமல் பயன்படுத்த வேண்டும். அதற்கான காரணங்கள்:
ரோஸ் வாட்டரில் உள்ள ஆன்டி ஆக்சிடென்ட்டுகள் சருமத்தை பாதுகாக்கவும், நீரேற்றமாக வைத்திருக்கவும் உதவுகிறது. ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தை பேணுவதற்கு தண்ணீர் பருகுவது அவசியம் என்றாலும் சருமத்தின் உள் அடுக்குகளை நீரேற்றத்துடன் வைத்திருப்பதற்கு அது போதுமானதல்ல. ரோஸ் வாட்டர் சருமத்தில் எளிதில் உறிஞ்சப்படும் தன்மை கொண்டது. அதனால் தினமும் மாய்ஸ்சரைசருடன் ரோஸ்வாட்டரையும் கலந்து சருமத்தில் தடலாம். அது சருமத்தில் நீர்ச்சத்தை தக்க வைக்க உதவுவதுடன் சருமத்திற்கு இயற்கையான பளபளப்பையும் அளிக்கும்.
ரோஸ் வாட்டர் அழற்சி எதிர்ப்பு பண்புகளை கொண்டது. மேலும் அதில் உள்ள ஆன்டி ஆக்சிடென்டுகள் சரும நோய்களுக்கு சிகிச்சை அளிக்கக்கூடியது. சரும எரிச்சல், தடிப்புகளை போக்கக்கூடியது. கண்கள் சிவத்தல், வீக்கம் அடைதல் போன்ற பிரச்சினைகளுக்கு ரோஸ் வாட்டர் நிவாரணம் தரும். காட்டன் பஞ்சுவில் ரோஸ் வாட்டரை முக்கி கண்களின் புருவம், அடிப் பகுதியில் தடவுவதன் மூலம் கண் சோர்வை போக்கலாம். வெண் படல அழற்சி, உலர்ந்த கண், கண்புரை போன்ற பிற கண் சார்ந்த நோய்களுக்கு சிகிச்சை அளிக்கவும் ரோஸ் வாட்டர் பயன்படுத்தப்படுகிறது. ரோஸ் வாட்டரில் கிருமி நாசினி பண்புகளும் உள்ளன. இது தவிர பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளையும் கொண்டிருப்பது சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
வெட்டு காயங்கள், வடுக்கள், தீக்காயங்கள் போன்ற பிற காயங்களுக்கு சிகிச்சை அளிக்கவும் ரோஸ் வாட்டர் உதவும். ரோஸ் வாட்டரை சருமத்தில் தடவுவதன் மூலம் சரும செல்கள் வலுப்பெறும். சரும திசுக்களை மீண்டும் உருவாக்கவும் ரோஸ் வாட்டர் உதவும். ரோஸ் வாட்டரின் வாசம் மனநிலையை மேம்படுத்த உதவும். நன்றாக தூங்கவும் உதவும். ஒப்பனையை நீக்கிய பிறகு ரோஸ் வாட்டரை உபயோகிக்கலாம். அது சருமத்தை குளிர்விக்க துணைபுரியும். சருமத்தில் சுரக்கும் அதிகப்படியான எண்ணெய் பசைத்தன்மையை கட்டுப்படுத்தி சருமத்தின் பி.எச். சமநிலையை பராமரிக்கவும் ரோஸ் வாட்டர் உதவும்.
குட்டை முடி அலங்காரத்தை பின்பற்ற தொடங்கிவிட்டால் ஒவ்வொரு முறையும் 3 முதல் 6 வாரங்களுக்குள் தவறாமல் முடியை கத்தரிக்கும் வழக்கத்தை பின்பற்ற வேண்டும்.
தலை முடி நீளமாக வளர்வதில்லை என்ற வருத்தம் நிறைய பேருக்கு இருக்கிறது. அந்த குறையை போக்க விதவிதமான கூந்தல் அலங்காரங்களை முயற்சித்து பார்க்கிறார்கள். கழுத்து பகுதியை ஒட்டிய நிலையிலோ, ஆண்களை போலவோ கூந்தலை குட்டையாக கத்தரித்து ஸ்டைலாக வலம் வரும் இளம் பெண்களும் இருக்கிறார்கள்.
கூந்தல் நீளமாக இருந்தாலும், குட்டையாக இருந்தாலும் போதிய பராமரிப்பு மேற்கொள்ள வேண்டும். சரியான ஷாம்பு அல்லது கண்டிஷனரை தேர்ந்தெடுப்பது முதல் உச்சந்தலை ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது வரை முடி பராமரிப்பில் பல விஷயங்களை பின்பற்ற வேண்டியிருக்கும்.
கூந்தலை குட்டையாக கத்தரித்துவிட்டால் அதிக பராமரிப்பு தேவைப்படாது என்ற எண்ணம் நிறைய பேருக்கு இருக்கிறது. குட்டை தலைமுடியை பராமரிப்பது எளிதுதான் என்றாலும் சில விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும்.
குட்டை முடி அலங்காரத்தை பின்பற்ற தொடங்கிவிட்டால் ஒவ்வொரு முறையும் 3 முதல் 6 வாரங்களுக்குள் தவறாமல் முடியை கத்தரிக்கும் வழக்கத்தை பின்பற்ற வேண்டும். ஏனெனில் மற்ற கூந்தல் ஸ்டைல்களை விட குட்டை முடிக்கு ‘டிரிம்மிங்’ அதிகம் தேவைப்படும். ஒவ்வொரு முறையும் தலைமுடியின் நீளத்தை கவனத்தில் கொண்டு எவ்வளவு நீளத்திற்கு டிரிம்மிங் செய்தால் நன்றாக இருக்கும் என்பதை சிகை அலங்கார நிபுணரிடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள். கூந்தலை வெப்பம் அடைய செய்யும் சாதனங்களை பயன்படுத்தாதீர்கள்.
குட்டை முடிக்கு சீப்போ, கூந்தல் பிரஸோ அதிகம் தேவைப்படாது. அவை முடியில் சிக்கல் விழுவதற்கு காரணமாகிவிடவும் கூடாது. சில சமயங்களில் விரல்களை பயன் படுத்தியே கூந்தல் அலங்காரத்தை மெருகேற்றிக்கொள்ளலாம். சீப்புக்கு பதிலாக ‘பிரிஸ்டல் பிரஸ்’ எனப்படும் அதிக நெருக்கம் இல்லாத இழைகள் கொண்ட பிரஸை உபயோகிக்கலாம்.
குட்டை முடி என்பதால் குளியலுக்கு பின்பு கூந்தலை உலர வைப்பது எளிது. எனினும் கூந்தலை கழுவுவதற்கு வெவ்வேறு நடைமுறைகளை பரிசோதித்து பார்க்கலாம். சிலர் முடியின் நீளம் குறைவாக இருப்பதால் குறைந்த நீரிலேயே கழுவுவார்கள். அப்படி கழுவுவது தலை முடிக்கு உகந்ததா? என்பதை பரிசோதித்து பார்க்க வேண்டும். அதேபோல் முடியின் நீளம் குறைவாக இருந்தாலும் உச்சந்தலையில் எண்ணெய் உற்பத்தி ஒரே மாதிரிதான் இருக்கும். எனவே அதற்கேற்ப கூந்தலை கழுவும் வழக்கத்தை பின்பற்றுவது நல்லது.
தலைமுடி மற்றும் உச்சந்தலையை சுத்தம் செய்யும்போது ஷாம்பு மற்றும் கண்டிஷனரின் பயன்பாட்டை குறைக்க வேண்டும். ஏனெனில் குட்டை முடிக்கு கண்டி ஷனரின் பயன்பாடு அதிகம் தேவையில்லை. ஷாம்புவை அதிகம் பயன்படுத்துவது உச்சந்தலையில் எரிச்சலை ஏற்படுத்தும். முடியும் உலர்வடையக்கூடும். குட்டை முடிக்கு ஷாம்பு மற்றும் கண்டிஷனரை குறைவாக பயன்படுத்துவதே போதுமானது.
உச்சந்தலை மீது கூடுதல் அக்கறை கொள்வது கூந்தல் பராமரிப்பு முறையின் முக்கிய அங்கமாகும். தலைமுடியின் நீளத்தை குறைத்தால் உச்சந்தலையில் அதிக கவனம் செலுத்த தொடங்குங்கள். ரசாயன பயன்பாடு அதிகம் கொண்ட அழகு மற்றும் கூந்தல் தயாரிப்பு பொருட்களை பயன்படுத்துவதை தவிருங்கள். அதற்கு பதிலாக ஹேர் ஜெல் உபயோகிப்பது கூந்தலுக்கு அழகு சேர்க்கும். ஆனால் அது உச்சந்தலையில் எரிச்சலையும், அரிப்பையும் ஏற்படுத்தக்கூடும். அதனை தவிர்க்க கூந்தலுக்கு அடிக்கடி மசாஜ் செய்யும் வழி முறையை பின்பற்றுவது நல்லது. இத்தகைய வழிமுறைகளை பின்பற்றுவது கூந்தல் அழகுக்கும் வழிவகுக்கும்.
கூந்தல் நீளமாக இருந்தாலும், குட்டையாக இருந்தாலும் போதிய பராமரிப்பு மேற்கொள்ள வேண்டும். சரியான ஷாம்பு அல்லது கண்டிஷனரை தேர்ந்தெடுப்பது முதல் உச்சந்தலை ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது வரை முடி பராமரிப்பில் பல விஷயங்களை பின்பற்ற வேண்டியிருக்கும்.
கூந்தலை குட்டையாக கத்தரித்துவிட்டால் அதிக பராமரிப்பு தேவைப்படாது என்ற எண்ணம் நிறைய பேருக்கு இருக்கிறது. குட்டை தலைமுடியை பராமரிப்பது எளிதுதான் என்றாலும் சில விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும்.
குட்டை முடி அலங்காரத்தை பின்பற்ற தொடங்கிவிட்டால் ஒவ்வொரு முறையும் 3 முதல் 6 வாரங்களுக்குள் தவறாமல் முடியை கத்தரிக்கும் வழக்கத்தை பின்பற்ற வேண்டும். ஏனெனில் மற்ற கூந்தல் ஸ்டைல்களை விட குட்டை முடிக்கு ‘டிரிம்மிங்’ அதிகம் தேவைப்படும். ஒவ்வொரு முறையும் தலைமுடியின் நீளத்தை கவனத்தில் கொண்டு எவ்வளவு நீளத்திற்கு டிரிம்மிங் செய்தால் நன்றாக இருக்கும் என்பதை சிகை அலங்கார நிபுணரிடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள். கூந்தலை வெப்பம் அடைய செய்யும் சாதனங்களை பயன்படுத்தாதீர்கள்.
குட்டை முடிக்கு சீப்போ, கூந்தல் பிரஸோ அதிகம் தேவைப்படாது. அவை முடியில் சிக்கல் விழுவதற்கு காரணமாகிவிடவும் கூடாது. சில சமயங்களில் விரல்களை பயன் படுத்தியே கூந்தல் அலங்காரத்தை மெருகேற்றிக்கொள்ளலாம். சீப்புக்கு பதிலாக ‘பிரிஸ்டல் பிரஸ்’ எனப்படும் அதிக நெருக்கம் இல்லாத இழைகள் கொண்ட பிரஸை உபயோகிக்கலாம்.
குட்டை முடி என்பதால் குளியலுக்கு பின்பு கூந்தலை உலர வைப்பது எளிது. எனினும் கூந்தலை கழுவுவதற்கு வெவ்வேறு நடைமுறைகளை பரிசோதித்து பார்க்கலாம். சிலர் முடியின் நீளம் குறைவாக இருப்பதால் குறைந்த நீரிலேயே கழுவுவார்கள். அப்படி கழுவுவது தலை முடிக்கு உகந்ததா? என்பதை பரிசோதித்து பார்க்க வேண்டும். அதேபோல் முடியின் நீளம் குறைவாக இருந்தாலும் உச்சந்தலையில் எண்ணெய் உற்பத்தி ஒரே மாதிரிதான் இருக்கும். எனவே அதற்கேற்ப கூந்தலை கழுவும் வழக்கத்தை பின்பற்றுவது நல்லது.
தலைமுடி மற்றும் உச்சந்தலையை சுத்தம் செய்யும்போது ஷாம்பு மற்றும் கண்டிஷனரின் பயன்பாட்டை குறைக்க வேண்டும். ஏனெனில் குட்டை முடிக்கு கண்டி ஷனரின் பயன்பாடு அதிகம் தேவையில்லை. ஷாம்புவை அதிகம் பயன்படுத்துவது உச்சந்தலையில் எரிச்சலை ஏற்படுத்தும். முடியும் உலர்வடையக்கூடும். குட்டை முடிக்கு ஷாம்பு மற்றும் கண்டிஷனரை குறைவாக பயன்படுத்துவதே போதுமானது.
உச்சந்தலை மீது கூடுதல் அக்கறை கொள்வது கூந்தல் பராமரிப்பு முறையின் முக்கிய அங்கமாகும். தலைமுடியின் நீளத்தை குறைத்தால் உச்சந்தலையில் அதிக கவனம் செலுத்த தொடங்குங்கள். ரசாயன பயன்பாடு அதிகம் கொண்ட அழகு மற்றும் கூந்தல் தயாரிப்பு பொருட்களை பயன்படுத்துவதை தவிருங்கள். அதற்கு பதிலாக ஹேர் ஜெல் உபயோகிப்பது கூந்தலுக்கு அழகு சேர்க்கும். ஆனால் அது உச்சந்தலையில் எரிச்சலையும், அரிப்பையும் ஏற்படுத்தக்கூடும். அதனை தவிர்க்க கூந்தலுக்கு அடிக்கடி மசாஜ் செய்யும் வழி முறையை பின்பற்றுவது நல்லது. இத்தகைய வழிமுறைகளை பின்பற்றுவது கூந்தல் அழகுக்கும் வழிவகுக்கும்.
தாடிக்கு அழகும், ஆரோக்கியமும் சேர்ப்பதற்கு எண்ணெய் வகைகள் பயன்படுத்தப்படுகின்றன. தாடிக்கு பயன்படுத்தும் எண்ணெய்களை ரசாயன கலப்பு இல்லாமல் வீட்டிலேயே தயாரித்துவிடலாம்.
ஊடரங்கு உத்தரவால் பெண்கள் மட்டுமின்றி ஆண்களும் நேர்த்தியாக சிகை அலங்காரம் செய்துகொள்ள முடியாமல் தவிக்கிறார்கள். ஆண்கள் நிறைய பேர் தாடி வளர்க்கத் தொடங்கிவிட்டார்கள். தாடி வளர்த்தால் அதனை நேர்த்தியாக பராமரிப்பது முக்கியம். இல்லாவிட்டால் முகத்தின் அழகும், ஒட்டுமொத்த தோற்றமும் மாறிப்போய்விடும். தாடிக்கு அழகும், ஆரோக்கியமும் சேர்ப்பதற்கு எண்ணெய் வகைகள் பயன்படுத்தப்படுகின்றன. அவை தாடியை மென்மையாகவும் அழகாகவும் மாற்றி கன்னங்களையும் ஈரப்பதத் தன்மையுடன் வைத்திருக்க உதவும். தாடிக்கு பயன்படுத்தும் எண்ணெய்களை ரசாயன கலப்பு இல்லாமல் வீட்டிலேயே தயாரித்துவிடலாம்.
யூக்கலிப்டஸ் எண்ணெயில் பாக்டீரியா மற்றும் நோய் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன. மேலும் இந்த எண்ணெய் வேகமாக தாடியை வளர்க்க உதவும். ஒரு பாட்டிலில் 6 டீஸ்பூன் ஆலிவ் எண்ணெய்யுடன் 3-4 சொட்டு யூக்கலிப்டஸ் எண்ணெய்யை கலந்தால் தாடி எண்ணெய் தயார். இந்த எண்ணெய்யை தினமும் பயன்படுத்தலாம். முதலில் ஈரமான துணியை கொண்டு முகத்தை நன்கு துடைத்துக்கொள்ளவும். பின்பு 4-5 சொட்டு எண்ணெய்யை உள்ளங்கையில் ஊற்றி தாடியில் தேய்த்து மசாஜ் செய்யவும். அரை மணி நேரம் கழித்து குளிர்ந்த நீரில் தாடியை கழுவிவிடலாம்.
தேங்காய் எண்ணெய்யையும் தாடிக்கு பயன்படுத்தலாம். 50 மி.லி தேங்காய் எண்ணெய்யுடன் பத்து சொட்டு ரோஸ்மேரி எண்ணெய் அல்லது லாவண்டர் எண்ணெய்யை கலந்து கொள்ளலாம். இந்த எண்ணெய் வாசனை மிக்கது. இரவில் தூங்க செல்வதற்கு முன்பு சிறிதளவு எண்ணெய்யை ஸ்பூனில் ஊற்றி மிதமாக சூடாக்கி தாடியில் தேய்த்து மசாஜ் செய்யவேண்டும். காலையில் எழுந்ததும் குளிக்கும்போது தாடியை கழுவிவிடலாம். தாடி மென்மையாகவும், அழகாகவும் காட்சியளிக்கும்.இந்த எண்ணெய் சருமத்திற்கும் நன்மை பயக்கும்.
‘டீ -ட்ரீ’ எண்ணெய்யும் தாடிக்கு நலம் சேர்க்கும். இது பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளையும் கொண்டது. தாடியை அடர்த்தியாகவும், ஈரப்பதமாகவும், பிரகாசமாகவும் வைத்திருக்கஉதவும். சரும நோய்களில் இருந்தும் பாதுகாக்கும். 50 மி.லி பாதாம் எண்ணெய்யுடன் 8 சொட்டு டீ-ட்ரீ எண்ணெய் கலந்து கொள்ளவும். தாடியை நன்றாக சுத்தம் செய்துவிட்டு சிறிதளவு எண்ணெய்யை தேய்த்து மசாஜ் செய்யவும். கால் மணி நேரம் கழித்து முகத்தை நீரில் கழுவிவிடலாம்.
யூக்கலிப்டஸ் எண்ணெயில் பாக்டீரியா மற்றும் நோய் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன. மேலும் இந்த எண்ணெய் வேகமாக தாடியை வளர்க்க உதவும். ஒரு பாட்டிலில் 6 டீஸ்பூன் ஆலிவ் எண்ணெய்யுடன் 3-4 சொட்டு யூக்கலிப்டஸ் எண்ணெய்யை கலந்தால் தாடி எண்ணெய் தயார். இந்த எண்ணெய்யை தினமும் பயன்படுத்தலாம். முதலில் ஈரமான துணியை கொண்டு முகத்தை நன்கு துடைத்துக்கொள்ளவும். பின்பு 4-5 சொட்டு எண்ணெய்யை உள்ளங்கையில் ஊற்றி தாடியில் தேய்த்து மசாஜ் செய்யவும். அரை மணி நேரம் கழித்து குளிர்ந்த நீரில் தாடியை கழுவிவிடலாம்.
தேங்காய் எண்ணெய்யையும் தாடிக்கு பயன்படுத்தலாம். 50 மி.லி தேங்காய் எண்ணெய்யுடன் பத்து சொட்டு ரோஸ்மேரி எண்ணெய் அல்லது லாவண்டர் எண்ணெய்யை கலந்து கொள்ளலாம். இந்த எண்ணெய் வாசனை மிக்கது. இரவில் தூங்க செல்வதற்கு முன்பு சிறிதளவு எண்ணெய்யை ஸ்பூனில் ஊற்றி மிதமாக சூடாக்கி தாடியில் தேய்த்து மசாஜ் செய்யவேண்டும். காலையில் எழுந்ததும் குளிக்கும்போது தாடியை கழுவிவிடலாம். தாடி மென்மையாகவும், அழகாகவும் காட்சியளிக்கும்.இந்த எண்ணெய் சருமத்திற்கும் நன்மை பயக்கும்.
‘டீ -ட்ரீ’ எண்ணெய்யும் தாடிக்கு நலம் சேர்க்கும். இது பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளையும் கொண்டது. தாடியை அடர்த்தியாகவும், ஈரப்பதமாகவும், பிரகாசமாகவும் வைத்திருக்கஉதவும். சரும நோய்களில் இருந்தும் பாதுகாக்கும். 50 மி.லி பாதாம் எண்ணெய்யுடன் 8 சொட்டு டீ-ட்ரீ எண்ணெய் கலந்து கொள்ளவும். தாடியை நன்றாக சுத்தம் செய்துவிட்டு சிறிதளவு எண்ணெய்யை தேய்த்து மசாஜ் செய்யவும். கால் மணி நேரம் கழித்து முகத்தை நீரில் கழுவிவிடலாம்.
பெண்களின் கேஷூவல் உடைகளில் இருந்து சுடிதாரும், சல்வாரும் சற்று பின்வாங்கியதால், பலாஸோ போன்ற இந்தோ- வெஸ்டர்ன் கலப்பு ஆடைகள் அந்த இடத்தை நோக்கி முன்னேறிச் சென்றாலும் துப்பட்டா மட்டும் தனது தனித்துவத்தை இழக்காமல் ஜொலித்துக்கொண்டிருக்கிறது.
தோகை விரித்தாடுவது மயிலுக்கு பேரழகு சேர்ப்பதுபோல், துப்பட்டாக்கள் இப்போது பலவிதமான டிசைன்களில் பெண்களுக்கு பேரழகு சேர்த்துக்கொண்டிருக்கிறது. முன்பு ஜாடிக்கு ஏற்ற மூடி போன்று சாதாரணமாக காணப்பட்ட துப்பட்டாக்கள் இப்போது தனி அழகு பெற்று மிளிர்கிறது. விழாக்காலங்களில் தங்கத்தில் ஒரு சங்கிலி வாங்குவது போன்று, ஒரு ஜோடி கம்மல் வாங்குவது போன்று இதனையும் பெண்கள் பார்த்து பார்த்து தேர்ந்தெடுத்து வாங்கி அணிகிறார்கள். அத்தகைய துப்பட்டாக்கள் ஒட்டுமொத்த உடை அழகையும் மெருகேற்றுவதுதான் அதற்கான காரணம்.
பெண்களின் கேஷூவல் உடைகளில் இருந்து சுடிதாரும், சல்வாரும் சற்று பின்வாங்கியதால், பலாஸோ போன்ற இந்தோ- வெஸ்டர்ன் கலப்பு ஆடைகள் அந்த இடத்தை நோக்கி முன்னேறிச் சென்றாலும் துப்பட்டா மட்டும் தனது தனித்துவத்தை இழக்காமல் ஜொலித்துக்கொண்டிருக்கிறது. பார்ட்டிகளில் பலரையும் கவர காஞ்சிபுரம் அல்லது பனாரஸ் துப்பட்டா போதுமானதாக இருக்கிறது. லெஹங்கா, சல்வாருக்கு மட்டுமின்றி ஆங்கிள் லென்த் அனார்கலிக்கு வின்டேஜ் லுக் கொண்ட ஜரிகை துப்பட்டாவும் இப்போது பேஷனாக இருந்துகொண்டிருக்கிறது. கொஞ்சம் பார்மலாக தோன்றவேண்டும் என்றால் அத்தைகய துப்பட்டாக்கள் போது மானது.
அடர்ந்த நிறங்களிலும், பலவகையான பிரிண்ட்களிலும் வெல்வெட் துப்பட்டாக்கள் கிடைக்கின்றன. அதில் பலவித அலங்காரங்களும் செய்யப் படுகின்றன. டார்க் சாலீட் நிறங்களில் கோல்டன் பீட்ஸ் டிரான்ஸ்பர் பிரிண்ட், பெரிய மோட்டிப்களில் மல்டி கலர் பிரிண்ட் போன்றவைகள் வெல்வெட் மெட்டீரியலில் கிடைக்கின்றன. அதன் ஓரங்களில் `போம்' இணைத்து முத்து, பவளங்களால் அலங்காரம் செய்த லைட் வெயிட் வெல்வெட் துப்பட்டாக்கள் பெண்களுக்கு பேரழகு தருகிறது.
பார்டர் அவுட்.. டீட்டெயிலிங் இன்..
பார்டர் லெஸ் துப்பட்டாக்கள் சமீபகாலமாக அதிக மவுசு பெற்றிருக்கிறது. பிரீச், ப்ளீட்ஸ், கேதர்ஸ், போம் போம், டஸ்சல் இப்படி இந்த புதிய வகை துப்பட்டாக்களுக்கு அழகு சேர்க்க நிறைய விஷயங்கள் இருக்கின்றன. இந்த வகையிலான டீட்டெயிலிங் துப்பட்டாக்களால் பார்டர் துப்பட்டாக்கள் பொலிவிழந்திருக்கின்றன.
டை அன்ட் டைய்
டை அன்ட் டைய் துப்பட்டாக்கள் என்றால் முன்பெல்லாம் வெள்ளை வட்டத்திலான டிசைன்களை கொண்ட சுங்கிடி துப்பட்டாக்கள் மட்டுமே இருந்தன. இப்போது அலங்காரங்களை கொண்ட அபூர்வமான டிசைன்களெல்லாம் இதில் வருகை தந்திருக்கின்றன. இளம் பெண்கள் இதனை விரும்பி வாங்குகிறார்கள். ஷிபோரி, பாந்தினி, க்ளாம்ப் டை, லெகரியா, இக்கத்.. என்று அந்த பட்டியல் நீளுகிறது.
ஹேன்ட் பெயிண்ட்டட் துப்பட்டா
ப்ளோரல் பெயிண்டிங்குகளும், கலம்காரி, மதுபானி, வார்லி, மியூரல் போன்றவைகளும்- மரபுசார்ந்த படங்களும் இந்த வகை துப்பட்டாக்களில் இடம்பெறுகின்றன. கையால் பெயிண்ட் செய்யப்படும் இவைகள் எல்லா காலத்திற்கும் ஏற்றவைகளாக இருக்கின்றன. அதனால் இதனை டீன்ஏஜ் பெண்களும், நடுத்தர வயது பெண்களும் விரும்பி வாங்குகிறார்கள்.
தாபு பிரிண்ட் துப்பட்டா
கண்களை கவரும் மோட்டிப்களும், நிறங்களும் கலந்த சிம்பிள் துப்பட்டாவாக இது திகழ்கிறது. காட்டன், சந்தேரி, டஸர் பாப்ரிக்குகளுக்கு தாபு பிரிண்ட் பொருத்தமானவை. இண்டிகோ அல்லது கலேஷ் என்று கூறப்படுகின்ற கிளே டையில் தாபு பிரிண்ட் பதிக்கப்படுகிறது. பெர்பெக்ஷன் இல்லாத பேட்டன்தான் இதில் அழகு நிறைந்ததாக காட்சியளிக்கிறது. மரபு சார்ந்த பிரிண்டிங் முறை இதில் கையாளப்படுவதால் காலப்போக்கில் நிறம் மங்குவதற்கு வாய்ப்பிருக்கிறது.
பாட்ச் துப்பட்டா
பலவிதமான பாப்ரிக்குகளை இணைத்து தைக்கப்படுவது, பாட்ச் துப்பட்டாவாகும். மேட்சிங் கலர்களில் இணைக்கப்படுவதால் இது பார்ப்பதற்கு வித்தியாசமாக தோன்றும். ஒரே மாதிரியான பாட்ச்களையோ, மாறுபட்ட பாட்ச் களையோ இதில் இணைக்கலாம். நேர்த்தியாக தைப்பதிலும், பொருத்தமான கலர்களை தேர்ந்தெடுப்பதிலும் இதன் அழகு அடங்கியிருக்கிறது. சற்று முரட்டுத் தனமான, வித்தியாசமான லுக்கில் வலம் வர விரும்பும் டீன்ஏஜ் பெண்கள் ஜீன்ஸ்- குர்தாவுடன் இதை அணிந்து வலம் வரலாம்.
பச்மீனா துப்பட்டா
காஷ்மீரி ஆர்ட் ஒர்க் நிறைந்த இந்த வகை துப்பட்டாக்கள் காலம் கடந்தும் புகழ் பெற்றுக்கொண்டிருக்கிறது. 20 முதல் 60 வயது வரை உள்ளவர்கள் இதனை அதிகம் விரும்புவார்கள். ஒரு துப்பட்டாவை தயார் செய்ய ஒருவர் ஒரு மாதம் வரை உழைக்கவேண்டியதிருக்கும். அத்தனை வேலைப்பாடுகள் அதில் உண்டு. இறகு போன்று கனமின்றி காணப்படும் இந்த வகை துப்பட்டாக்கள் எல்லா சீதோஷ்ணநிலைக்கும் ஏற்றதாக இருக்கிறது.
இக்கத் துப்பட்டா
போல்டு அன்ட் சோபஸ்டிகேட்டட் லுக் தேவைப்படும் பெண்கள் இந்த துப்பட்டாவை தேர்ந்தெடுக்கலாம். இதன் அடிப்படை நிறம் பெரும்பாலும் கேரள புடவை போன்று ஐவரியாக இருக்கும். ஆனாலும் கலர்புல்லான பார்டர் பிரிண்டுகளே இக்கத் துப்பட்டாவின் அழகை தூக்கலாக்கிக் காட்டுகிறது. டெரகோட்டா ஆபரணங்கள், பழங்குடி மக்கள் பயன்படுத்தும் ஆபரணங்கள், கையால் தயார்செய்யப்பட்ட பேக்குகள் போன்றவை இந்த வகை துப்பட்டாவிற்கு கூடுதல் அழகு சேர்க்கும்.
டபுள் துப்பட்டா
மணப்பெண்களுக்கான உடை அலங்காரத்திற்கு மிக பொருத்தமாக அமைவது, டபுள் துப்பட்டா. மார்பக பகுதியை கவர் செய்யும் ஒரு துப்பட்டாவோடு- தலையிலோ, வலது தோள்பட்டையிலோ இரண்டாவது துப்பட்டா பரவிக்கிடக்கும். இது ஒரு வித்தியாசமான ஸ்டைலை உருவாக்கும். விலை சற்று அதிகமாக இருந்தாலும் இது கலர்புல்லான, கம்பீரமான அழகைத் தருவதால் மணப்பெண்கள் இதனை விரும்புகிறார்கள்.
பனாரசி சில்க் துப்பட்டா
இந்த வகை துப்பட்டாவில் இரண்டு வகை பிரசித்தி பெற்றதாக இருக்கிறது. சிம்பிள் சில்க் துப்பட்டா ஒரு வகை, இன்டிகேட்டட் டிசைன் இன்னொரு வகை. டிசைன் அதிகம் கொண்ட துப்பட்டாக்களை பார்ட்டிகளுக்கும், முக்கியமான விருந்து நிகழ்ச்சிகளுக்கும் பயன்படுத்திக்கொள்ளலாம். இவை தூக்கலாக காட்சியளிப்பதால் சிம்பிளான உடைகளுக்கும் பொருந்தும். பனாரசி துப்பட்டாக்கள் பெரும்பாலும் அடர்த்தியான நிறங்களை கொண்டிருக்கும். அதனால் கான்ட்ராஸ்ட் நிறமுள்ள உடைகளுக்கும் எடுப்பாக காட்சி தரும். சால்வார் கமீஸ், குர்த்தியுடன் இதை பயன்படுத்தினால் இளம் பெண்களுக்கு பளிச்சிடும் அழகு கிடைக்கும். சிம்பிள் பேஸ்டல் கலரிலும் பனாரசி துப்பட்டாக்கள் கிடைக்கின்றன. அலுவலகத்திற்கு செல்பவர்கள் இதை அணிந்து சென்றால் ஸ்மார்ட் லுக் கிடைக்கும்.
எம்ப்ராய்டரி துப்பட்டா
எவர்கிரீன் டிரெண்டாக இருப்பது எம்ப்ராய்டரி துப்பட்டாக்கள். கிளாசிக் ரீதியிலும், கான்டம்பரரி ரீதியிலும் இதனை வடிவமைக்கிறார்கள். ப்ளோரல் மோட்டிப்களுக்கு மங்காத மவுசு இருந்துகொண்டிருக்கிறது. ஆரி ஒர்க், பீட் ஓர்க், பிரெஞ்ச் நாட் போன்றவைகளை நடுத்தர வயது பெண்களும் விரும்புகிறார்கள். சாதாரண துப்பட்டாவை வசீகரிக்கும் அழகாக மாற்றுவதற்கு எம்ப்ராய்டரிங்கே சிறந்த வழிமுறையாக இருக்கிறது.
இரு பக்க துப்பட்டா
இரு பக்கமும் வெவ்வேறு விதமாக அழகுதரும் வித்தியாசமான துப்பட்டா இது. இருபக்கங்களிலும் கவரும் விதமாக டிசைன் செய்திருப்பார்கள். இருபக்கமும் ஐடன்டிக்கலான காந்தா எம்ப்ராய்டரியை பதித்திருப்பார்கள். இரண்டு பக்கங் களையும் மாற்றி மாற்றி பயன்படுத்திக்கொள்ளலாம். வேலைக்கு செல்லும் பெண்கள் இரண்டு நாட்கள் இதை பயன்படுத்தலாம் என்பதால் விரும்பி தேர்ந்தெடுக்கிறார்கள்.
புடவை முந்தானை துப்பட்டா
இந்த வகை துப்பட்டாக்களை பெண்கள் விருந்து நிகழ்ச்சி களுக்கு விரும்பி அணிகிறார்கள். சாதாரண துப்பட்டாக்களைவிட இதன் நீளமும், அகலமும் அதிகம். பட்டுப்புடவைகளின் முந்தானை டிசைன் போன்று இரண்டு முனைகளிலும் ஜரிகை வேலைப்பாடுகள் செய்யப்பட்டிருப்பது இதற்கு கூடுதல் அழகு தருகிறது.
பெண்களின் கேஷூவல் உடைகளில் இருந்து சுடிதாரும், சல்வாரும் சற்று பின்வாங்கியதால், பலாஸோ போன்ற இந்தோ- வெஸ்டர்ன் கலப்பு ஆடைகள் அந்த இடத்தை நோக்கி முன்னேறிச் சென்றாலும் துப்பட்டா மட்டும் தனது தனித்துவத்தை இழக்காமல் ஜொலித்துக்கொண்டிருக்கிறது. பார்ட்டிகளில் பலரையும் கவர காஞ்சிபுரம் அல்லது பனாரஸ் துப்பட்டா போதுமானதாக இருக்கிறது. லெஹங்கா, சல்வாருக்கு மட்டுமின்றி ஆங்கிள் லென்த் அனார்கலிக்கு வின்டேஜ் லுக் கொண்ட ஜரிகை துப்பட்டாவும் இப்போது பேஷனாக இருந்துகொண்டிருக்கிறது. கொஞ்சம் பார்மலாக தோன்றவேண்டும் என்றால் அத்தைகய துப்பட்டாக்கள் போது மானது.
அடர்ந்த நிறங்களிலும், பலவகையான பிரிண்ட்களிலும் வெல்வெட் துப்பட்டாக்கள் கிடைக்கின்றன. அதில் பலவித அலங்காரங்களும் செய்யப் படுகின்றன. டார்க் சாலீட் நிறங்களில் கோல்டன் பீட்ஸ் டிரான்ஸ்பர் பிரிண்ட், பெரிய மோட்டிப்களில் மல்டி கலர் பிரிண்ட் போன்றவைகள் வெல்வெட் மெட்டீரியலில் கிடைக்கின்றன. அதன் ஓரங்களில் `போம்' இணைத்து முத்து, பவளங்களால் அலங்காரம் செய்த லைட் வெயிட் வெல்வெட் துப்பட்டாக்கள் பெண்களுக்கு பேரழகு தருகிறது.
பார்டர் அவுட்.. டீட்டெயிலிங் இன்..
பார்டர் லெஸ் துப்பட்டாக்கள் சமீபகாலமாக அதிக மவுசு பெற்றிருக்கிறது. பிரீச், ப்ளீட்ஸ், கேதர்ஸ், போம் போம், டஸ்சல் இப்படி இந்த புதிய வகை துப்பட்டாக்களுக்கு அழகு சேர்க்க நிறைய விஷயங்கள் இருக்கின்றன. இந்த வகையிலான டீட்டெயிலிங் துப்பட்டாக்களால் பார்டர் துப்பட்டாக்கள் பொலிவிழந்திருக்கின்றன.
டை அன்ட் டைய்
டை அன்ட் டைய் துப்பட்டாக்கள் என்றால் முன்பெல்லாம் வெள்ளை வட்டத்திலான டிசைன்களை கொண்ட சுங்கிடி துப்பட்டாக்கள் மட்டுமே இருந்தன. இப்போது அலங்காரங்களை கொண்ட அபூர்வமான டிசைன்களெல்லாம் இதில் வருகை தந்திருக்கின்றன. இளம் பெண்கள் இதனை விரும்பி வாங்குகிறார்கள். ஷிபோரி, பாந்தினி, க்ளாம்ப் டை, லெகரியா, இக்கத்.. என்று அந்த பட்டியல் நீளுகிறது.
ஹேன்ட் பெயிண்ட்டட் துப்பட்டா
ப்ளோரல் பெயிண்டிங்குகளும், கலம்காரி, மதுபானி, வார்லி, மியூரல் போன்றவைகளும்- மரபுசார்ந்த படங்களும் இந்த வகை துப்பட்டாக்களில் இடம்பெறுகின்றன. கையால் பெயிண்ட் செய்யப்படும் இவைகள் எல்லா காலத்திற்கும் ஏற்றவைகளாக இருக்கின்றன. அதனால் இதனை டீன்ஏஜ் பெண்களும், நடுத்தர வயது பெண்களும் விரும்பி வாங்குகிறார்கள்.
தாபு பிரிண்ட் துப்பட்டா
கண்களை கவரும் மோட்டிப்களும், நிறங்களும் கலந்த சிம்பிள் துப்பட்டாவாக இது திகழ்கிறது. காட்டன், சந்தேரி, டஸர் பாப்ரிக்குகளுக்கு தாபு பிரிண்ட் பொருத்தமானவை. இண்டிகோ அல்லது கலேஷ் என்று கூறப்படுகின்ற கிளே டையில் தாபு பிரிண்ட் பதிக்கப்படுகிறது. பெர்பெக்ஷன் இல்லாத பேட்டன்தான் இதில் அழகு நிறைந்ததாக காட்சியளிக்கிறது. மரபு சார்ந்த பிரிண்டிங் முறை இதில் கையாளப்படுவதால் காலப்போக்கில் நிறம் மங்குவதற்கு வாய்ப்பிருக்கிறது.
பாட்ச் துப்பட்டா
பலவிதமான பாப்ரிக்குகளை இணைத்து தைக்கப்படுவது, பாட்ச் துப்பட்டாவாகும். மேட்சிங் கலர்களில் இணைக்கப்படுவதால் இது பார்ப்பதற்கு வித்தியாசமாக தோன்றும். ஒரே மாதிரியான பாட்ச்களையோ, மாறுபட்ட பாட்ச் களையோ இதில் இணைக்கலாம். நேர்த்தியாக தைப்பதிலும், பொருத்தமான கலர்களை தேர்ந்தெடுப்பதிலும் இதன் அழகு அடங்கியிருக்கிறது. சற்று முரட்டுத் தனமான, வித்தியாசமான லுக்கில் வலம் வர விரும்பும் டீன்ஏஜ் பெண்கள் ஜீன்ஸ்- குர்தாவுடன் இதை அணிந்து வலம் வரலாம்.
பச்மீனா துப்பட்டா
காஷ்மீரி ஆர்ட் ஒர்க் நிறைந்த இந்த வகை துப்பட்டாக்கள் காலம் கடந்தும் புகழ் பெற்றுக்கொண்டிருக்கிறது. 20 முதல் 60 வயது வரை உள்ளவர்கள் இதனை அதிகம் விரும்புவார்கள். ஒரு துப்பட்டாவை தயார் செய்ய ஒருவர் ஒரு மாதம் வரை உழைக்கவேண்டியதிருக்கும். அத்தனை வேலைப்பாடுகள் அதில் உண்டு. இறகு போன்று கனமின்றி காணப்படும் இந்த வகை துப்பட்டாக்கள் எல்லா சீதோஷ்ணநிலைக்கும் ஏற்றதாக இருக்கிறது.
இக்கத் துப்பட்டா
போல்டு அன்ட் சோபஸ்டிகேட்டட் லுக் தேவைப்படும் பெண்கள் இந்த துப்பட்டாவை தேர்ந்தெடுக்கலாம். இதன் அடிப்படை நிறம் பெரும்பாலும் கேரள புடவை போன்று ஐவரியாக இருக்கும். ஆனாலும் கலர்புல்லான பார்டர் பிரிண்டுகளே இக்கத் துப்பட்டாவின் அழகை தூக்கலாக்கிக் காட்டுகிறது. டெரகோட்டா ஆபரணங்கள், பழங்குடி மக்கள் பயன்படுத்தும் ஆபரணங்கள், கையால் தயார்செய்யப்பட்ட பேக்குகள் போன்றவை இந்த வகை துப்பட்டாவிற்கு கூடுதல் அழகு சேர்க்கும்.
டபுள் துப்பட்டா
மணப்பெண்களுக்கான உடை அலங்காரத்திற்கு மிக பொருத்தமாக அமைவது, டபுள் துப்பட்டா. மார்பக பகுதியை கவர் செய்யும் ஒரு துப்பட்டாவோடு- தலையிலோ, வலது தோள்பட்டையிலோ இரண்டாவது துப்பட்டா பரவிக்கிடக்கும். இது ஒரு வித்தியாசமான ஸ்டைலை உருவாக்கும். விலை சற்று அதிகமாக இருந்தாலும் இது கலர்புல்லான, கம்பீரமான அழகைத் தருவதால் மணப்பெண்கள் இதனை விரும்புகிறார்கள்.
பனாரசி சில்க் துப்பட்டா
இந்த வகை துப்பட்டாவில் இரண்டு வகை பிரசித்தி பெற்றதாக இருக்கிறது. சிம்பிள் சில்க் துப்பட்டா ஒரு வகை, இன்டிகேட்டட் டிசைன் இன்னொரு வகை. டிசைன் அதிகம் கொண்ட துப்பட்டாக்களை பார்ட்டிகளுக்கும், முக்கியமான விருந்து நிகழ்ச்சிகளுக்கும் பயன்படுத்திக்கொள்ளலாம். இவை தூக்கலாக காட்சியளிப்பதால் சிம்பிளான உடைகளுக்கும் பொருந்தும். பனாரசி துப்பட்டாக்கள் பெரும்பாலும் அடர்த்தியான நிறங்களை கொண்டிருக்கும். அதனால் கான்ட்ராஸ்ட் நிறமுள்ள உடைகளுக்கும் எடுப்பாக காட்சி தரும். சால்வார் கமீஸ், குர்த்தியுடன் இதை பயன்படுத்தினால் இளம் பெண்களுக்கு பளிச்சிடும் அழகு கிடைக்கும். சிம்பிள் பேஸ்டல் கலரிலும் பனாரசி துப்பட்டாக்கள் கிடைக்கின்றன. அலுவலகத்திற்கு செல்பவர்கள் இதை அணிந்து சென்றால் ஸ்மார்ட் லுக் கிடைக்கும்.
எம்ப்ராய்டரி துப்பட்டா
எவர்கிரீன் டிரெண்டாக இருப்பது எம்ப்ராய்டரி துப்பட்டாக்கள். கிளாசிக் ரீதியிலும், கான்டம்பரரி ரீதியிலும் இதனை வடிவமைக்கிறார்கள். ப்ளோரல் மோட்டிப்களுக்கு மங்காத மவுசு இருந்துகொண்டிருக்கிறது. ஆரி ஒர்க், பீட் ஓர்க், பிரெஞ்ச் நாட் போன்றவைகளை நடுத்தர வயது பெண்களும் விரும்புகிறார்கள். சாதாரண துப்பட்டாவை வசீகரிக்கும் அழகாக மாற்றுவதற்கு எம்ப்ராய்டரிங்கே சிறந்த வழிமுறையாக இருக்கிறது.
இரு பக்க துப்பட்டா
இரு பக்கமும் வெவ்வேறு விதமாக அழகுதரும் வித்தியாசமான துப்பட்டா இது. இருபக்கங்களிலும் கவரும் விதமாக டிசைன் செய்திருப்பார்கள். இருபக்கமும் ஐடன்டிக்கலான காந்தா எம்ப்ராய்டரியை பதித்திருப்பார்கள். இரண்டு பக்கங் களையும் மாற்றி மாற்றி பயன்படுத்திக்கொள்ளலாம். வேலைக்கு செல்லும் பெண்கள் இரண்டு நாட்கள் இதை பயன்படுத்தலாம் என்பதால் விரும்பி தேர்ந்தெடுக்கிறார்கள்.
புடவை முந்தானை துப்பட்டா
இந்த வகை துப்பட்டாக்களை பெண்கள் விருந்து நிகழ்ச்சி களுக்கு விரும்பி அணிகிறார்கள். சாதாரண துப்பட்டாக்களைவிட இதன் நீளமும், அகலமும் அதிகம். பட்டுப்புடவைகளின் முந்தானை டிசைன் போன்று இரண்டு முனைகளிலும் ஜரிகை வேலைப்பாடுகள் செய்யப்பட்டிருப்பது இதற்கு கூடுதல் அழகு தருகிறது.
பல்வேறு நன்மைகள் நிறைந்த நெய் நமது சருமத்திற்கும் மிகவும் சிறந்தது. தற்போது நெய் நமது சருமத்தில் எவ்வாறு பலனளிக்கிறது என்பதை தெரிந்து கொள்வோம்.
உணவில் பயன்படுத்தும் நெய் சிறந்த ருசியை தருவதோடு நிறைய நன்மைகளையும் நமக்கு அள்ளித் தருகிறது. நமது சருமத்திற்கும் இது மிகவும் சிறந்தது. தற்போது நெய் நமது சருமத்தில் எவ்வாறு பலனளிக்கிறது என்பதை தெரிந்து கொள்வோம்.
வறண்ட சருமம்: உங்கள் சருமம் நாள் முழுவதும் வறண்டு போய் காணப்பட்டால் அதற்கு நெய் ஒரு சிறந்த தீர்வளிக்கிறது. எனவே இதற்கு சில சொட்டுகள் நெய்யை எடுத்து உங்கள் சருமத்தில் தடவிக் கொள்ள வேண்டும். சில நிமிடங்கள் அதைக் கொண்டு மசாஜ் செய்யவும். இது உங்கள் சருமத்திற்கு ஒரு பாதுகாப்பு லேயர் மாதிரி செயல்பட்டு சருமம் வறண்டு போகாமல் தடுக்கிறது.
கருவளையத்தை தடுத்தல்: உங்கள் உணவில் நீங்கள் நெய்யை சேர்த்துக் கொண்டு வந்தால் இளமையாக இருக்கலாம். காரணம் நெய்யில் உள்ள விட்டமின் ஈ உங்கள் சரும சுருக்கங்கள், வயதாகுவதை தடுத்து இளமையை நீடிக்கிறது. தினமும் இரவில் தூங்கச் செல்லும் முன் சில துளி நெய்யை கண்ணின் கருவளையம் உள்ள பகுதியில் அப்ளை செய்து சிறிது நேரம் மசாஜ் செய்து அப்படியே விட்டுவிடுங்கள். அதன்பின் காலையில் எழுந்ததும் வெதுவெதுப்பான நீர் கொண்டு கழுவுங்கள்.
குளியல் எண்ணெய்: பெரும்பாலும் உடம்புக்கு எண்ணெய் தேய்த்துக் குளிப்பதென்றாலே நாம் எள் எண்ணெயான நல்லெண்ணெயைத் தான் பயன்படுத்துவோம். ஆனால் அதைவிடவும் உங்கள் குளியலுக்கு நெய் ஒரு சிறந்த குளியல் எண்ணெய் ஆகும். 5 டேபிள் ஸ்பூன் நெய்யை 10 சொட்டுகள் எஸன்ஷியல் ஆயிலுடன் சேர்த்து உடம்பில் தடவிக் கொண்டு குளியுங்கள். உங்கள் சருமம் மிருதுவாகவும் ஜொலிப்பாகவும் இருக்கும்.
களைப்படைந்த கண்கள்: உங்கள் கண்கள் களைப்படைந்து போய் காணப்பட்டால் சில துளி நெய்யை கண்களை சுற்றி அப்ளே செய்து கொள்ளுங்கள். கண்களுக்கு நெய் சென்று விடாமல் பார்த்துக் கொள்ளுங்கள். அப்படியே லேசாக மசாஜ் செய்து விட்டு பின்னர் கண்களை கழுவி விடுங்கள். கண்கள் ரெம்ப பிரகாசமாக காட்சியளிக்கும்.
பளபளப்பான உதடுகள்: நெய் ஒரு இயற்கையான எண்ணெய் பொருளாகும். இது உங்கள் உதடுகளை பளபளப்பாகவும் மென்மையாகவும் வைத்திருக்க உதவும். அதிலும் குறிப்பாக பனிக்காலத்தில் ஏற்படுகின்ற உதடு வறட்சி, வெடிப்பு ஆகியவற்றை சரிசெய்வதில் மிகச் சிறந்த பலனைத் தருவது நெய் தான். சிலர் தேங்காய் எண்ணெய்யை பயன்படுத்துவார்கள். அது உதட்டைக் கருப்பாக்கிவிடும்.
வறண்ட சருமம்: உங்கள் சருமம் நாள் முழுவதும் வறண்டு போய் காணப்பட்டால் அதற்கு நெய் ஒரு சிறந்த தீர்வளிக்கிறது. எனவே இதற்கு சில சொட்டுகள் நெய்யை எடுத்து உங்கள் சருமத்தில் தடவிக் கொள்ள வேண்டும். சில நிமிடங்கள் அதைக் கொண்டு மசாஜ் செய்யவும். இது உங்கள் சருமத்திற்கு ஒரு பாதுகாப்பு லேயர் மாதிரி செயல்பட்டு சருமம் வறண்டு போகாமல் தடுக்கிறது.
கருவளையத்தை தடுத்தல்: உங்கள் உணவில் நீங்கள் நெய்யை சேர்த்துக் கொண்டு வந்தால் இளமையாக இருக்கலாம். காரணம் நெய்யில் உள்ள விட்டமின் ஈ உங்கள் சரும சுருக்கங்கள், வயதாகுவதை தடுத்து இளமையை நீடிக்கிறது. தினமும் இரவில் தூங்கச் செல்லும் முன் சில துளி நெய்யை கண்ணின் கருவளையம் உள்ள பகுதியில் அப்ளை செய்து சிறிது நேரம் மசாஜ் செய்து அப்படியே விட்டுவிடுங்கள். அதன்பின் காலையில் எழுந்ததும் வெதுவெதுப்பான நீர் கொண்டு கழுவுங்கள்.
குளியல் எண்ணெய்: பெரும்பாலும் உடம்புக்கு எண்ணெய் தேய்த்துக் குளிப்பதென்றாலே நாம் எள் எண்ணெயான நல்லெண்ணெயைத் தான் பயன்படுத்துவோம். ஆனால் அதைவிடவும் உங்கள் குளியலுக்கு நெய் ஒரு சிறந்த குளியல் எண்ணெய் ஆகும். 5 டேபிள் ஸ்பூன் நெய்யை 10 சொட்டுகள் எஸன்ஷியல் ஆயிலுடன் சேர்த்து உடம்பில் தடவிக் கொண்டு குளியுங்கள். உங்கள் சருமம் மிருதுவாகவும் ஜொலிப்பாகவும் இருக்கும்.
களைப்படைந்த கண்கள்: உங்கள் கண்கள் களைப்படைந்து போய் காணப்பட்டால் சில துளி நெய்யை கண்களை சுற்றி அப்ளே செய்து கொள்ளுங்கள். கண்களுக்கு நெய் சென்று விடாமல் பார்த்துக் கொள்ளுங்கள். அப்படியே லேசாக மசாஜ் செய்து விட்டு பின்னர் கண்களை கழுவி விடுங்கள். கண்கள் ரெம்ப பிரகாசமாக காட்சியளிக்கும்.
பளபளப்பான உதடுகள்: நெய் ஒரு இயற்கையான எண்ணெய் பொருளாகும். இது உங்கள் உதடுகளை பளபளப்பாகவும் மென்மையாகவும் வைத்திருக்க உதவும். அதிலும் குறிப்பாக பனிக்காலத்தில் ஏற்படுகின்ற உதடு வறட்சி, வெடிப்பு ஆகியவற்றை சரிசெய்வதில் மிகச் சிறந்த பலனைத் தருவது நெய் தான். சிலர் தேங்காய் எண்ணெய்யை பயன்படுத்துவார்கள். அது உதட்டைக் கருப்பாக்கிவிடும்.






