என் மலர்tooltip icon

    அழகுக் குறிப்புகள்

    சருமத்தின் அழகை பாதுகாக்க சருமத்தில் அழுக்கு சேர விடாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது அவசியம். அதற்கு வெள்ளரிக்காயை எப்படி பயன்படுத்தலாம் என்பதை பாப்போம்.
    வெள்ளரிக்காயில் பல மருத்துவ குணங்கள் உள்ளது. இது உடலுக்கு தேவையான நீர்ச்சத்தை தருகிறது. உடலில் உள்ள தேவையற்ற நச்சுக்களை நீக்குகிறது. வெள்ளரிக்காய் உடலுக்கு மட்டுமல்ல. சருமத்திற்கும் பல நன்மைகளை தருகிறது.

    சருமத்தை அழகாக வைத்துக்கொள்ள வேண்டும் என்பதே அனைவரின் விருப்பம். சருமத்தில் அழுக்கு சேர விடாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது அவசியம். அதற்கு வெள்ளரிக்காயை எப்படி பயன்படுத்தலாம் என்பதை பாப்போம்.

    வெள்ளரிக்காயை அரைத்து சருமத்தில் தடவி வந்தால் சருமத்தில் ஏற்படும் அரிப்பு மற்றும் எரிச்சல் ஆகியவை நீங்கும். சருமத்தில் சுரக்கும் அதிகப்படியான எண்ணெய் கட்டுப்படும். மேலும் சரும துளைகளில் இருக்கும் அழுக்குகளை வெளியேற்றும்.

    வெள்ளரிக்காயை பொடியாக நறுக்கி தண்ணீரில் ஊற வைக்க வேண்டும். பிறகு இரண்டு மணி நேரம் கழித்து அந்த தண்ணீரில் அரை ஸ்பூன் மஞ்சள் தூள், ஒரு ஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து முகத்திற்கு ஃபேஸ் மாஸ்க் போடலாம்.

    வெள்ளரிக்காயின் தோலை நீக்கி பொடியாக நறுக்கி கொள்ளவும். அதில் தயிர் சேர்த்து நன்றாக பேஸ்ட் செய்து முகத்தில் தடவ வேண்டும். அரை மணி நேரம் கழித்து முகத்தை கழுவ வேண்டும். இதனை இரண்டு நாட்களுக்கு ஒரு முறை செய்ய வேண்டும்.

    சருமத்தில் உள்ள கரும்புள்ளியை நீக்க சிறிதளவு தண்ணீரில் ஒரு ஸ்பூன் பேக்கிங் சோடாவை கலந்து அதனுடன் தோல் சீவிய ஆப்பிள் மற்றும் வெள்ளரி கலந்து அரைத்து எடுத்து வைத்துக்கொள்ளவும். அதனுடன் சிறிது தேன் கலந்து ஒரு மணி நேரம் ஃபிரிட்ஜில் வைக்க வேண்டும். பிறகு அந்த கலவையை முகத்தில் தடவி இருபது நிமிடங்கள் கழித்து கழுவ வேண்டும்.

    ஒரு ஸ்பூன் எலுமிச்சை சாறுடன் வெள்ளரிச்சாறு ஒரு ஸ்பூன் கலந்து முகத்தில் அப்ளை செய்து கொள்ளவும். ஐந்து நிமிடங்கள் கழித்து கழுவி விடவும். இவ்வாறு செய்வதால் சருமத்தில் உள்ள அழுக்குகள் நீங்கி சருமம் பிரகாசிக்கும்.
    ஆரோக்கியமான உணவு பழக்கத்தை கடைப்பிடிப்பது எவ்வளவு முக்கியமோ அதே அளவுக்கு அவற்றை சரிவிகித உணவாக உட்கொள்வதும் அவசியமானது.
    அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பார்கள். உள்ளம் புத்துணர்வோடு இருந்தால்தான் முகமும் பொலிவு பெற்று புறத்தோற்றத்தில் அதன் அழகு வெளிப்படும். வயது அதிகரித்தாலும் இளமைப் பொலிவை தக்கவைத்துக்கொள்வதற்கு அகம், புறம் இரண்டையும் பேணி வந்தால் போதும். அதற்கு செய்ய வேண்டிய விஷயங்கள் குறித்து பார்ப்போம். வயதானாலும்... இளமையை தக்க வைக்கும் டிப்ஸ்..!உணவு பழக்கம்முகத்திற்கு அழகு சேர்க்கும் அம்சங்கள்:

    அழகு என்றதும் நிறைய பேர் முகப்பொலிவுக்கும், நிறத்துக்கும் மட்டுமே முக்கியத்துவம் கொடுப்பார்கள். அதற்காக அழகுசாதன பொருட்களை மட்டுமே சார்ந்திருப்பார்கள். அப்படி இருக்காமல் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த காய்கறிகள், பழங்கள், முழு தானியங்கள், நட்ஸ் வகைகள் போன்ற ஆரோக்கியமான உணவு பழக்கத்தை பின்பற்ற வேண்டும். அவையும் அழகை மெருகேற்றும் தன்மை கொண்டவை. தண்ணீரும் போதுமான அளவு பருக வேண்டும்.

    உடல் எடையில் கவனம்

    ஆரோக்கியமான உணவு பழக்கத்தை கடைப்பிடிப்பது எவ்வளவு முக்கியமோ அதே அளவுக்கு அவற்றை சரிவிகித உணவாக உட்கொள்வதும் அவசியமானது. உடல் எடையை கட்டுக்கோப்புடன் வைத்திருக்க தேவையற்ற துரித உணவுகளை தவிர்ப்பதுடன், சீரான உடற்பயிற்சியை மேற்கொள்ளவும் வேண்டும்.

    மன நலம் காப்போம்

    தேவையற்ற மன அழுத்தமும் சரும பொலிவுக்கு எதிரியாக மாறிவிடும். மனதில் ஏதேனும் குழப்பங்கள் குடி கொண்டிருந்தால் அதன் தாக்கம் முகத்திலும் எதிரொலிக்கும். பொலிவும் மங்கிவிடும். மன அழுத்தத்திற்கு இடம் கொடுக்காமல் இருப்பதுடன், வாரம் ஒருமுறை சிறிதளவு எண்ணெய் கொண்டு முகத்திற்கு மசாஜ் செய்து வரலாம். தினமும் தியானம் செய்து வருவதும் மனதை புத்துணர்வாக்கும். மனம் ஆரோக்கியமாக இருந்தால்தான் வெளித்தோற்றமும் ஆரோக்கியமாக இருக்கும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

    * உருளைக்கிழங்கை சாறு எடுத்து இரவில் தூங்குவதற்கு முன்பு முகத்தில் தடவி,15 நிமிடம் உலரவிட்டு, பின்பு குளிர்ந்த நீரில் கழுவவும். இவ்வாறு தினமும் இரவில் செய்து வருவதன் மூலம் கருவளையங்கள் நீங்குவதுடன் ஆழ்ந்த தூக்கமும் கிடைக்கும்.

    * தினமும் குளிப்பதற்கு அரை மணி நேரத்திற்கு முன்பு பாதாம் எண்ணெய்யை முகத்தில் தடவி, குளித்து வந்தால் நாளடைவில் முகம் பொலிவு பெறும்.

    * புதினா இலையை விழுதாக அரைத்து சாறு பிழிந்து அதனுடன் கடலை மாவு சேர்த்து குழைத்து முகத்தில் பூசிவிட்டு, 10 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரால் கழுவி விடலாம். இவ்வாறு செய்வதன் மூலம் முகத்தில் உள்ள அழுக்குகள் நீங்கும். ‘பளிச்’ தோற்றத்தையும் பெறலாம்.

    * ஒரு வாழைப்பழம், இரண்டு டீஸ்பூன் தேங்காய்ப் பால், ஒரு டீஸ்பூன் வெள்ளரிச்சாறு இவை மூன்றையும் ஒன்றாக சேர்த்து குழைத்து முகத்தில் பூசினால் கூடுதல் பொலிவு கிடைக்கும்.

    * கற்றாழை ஜெல்லுடன் தேன் கலந்து பூசி வர முகச் சுருக்கம் நீங்குவதுடன் முகம் பொலிவுறும்.

    * அதிக அளவில் மேக்கப் செய்து கொள்ளாமல், உடலுக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தாத அழகு சாதனப் பொருட்களை மட்டும் பயன்படுத்தி வந்தால் சரும சுருக்கம் மூலம் இளம் வயதில் ஏற்படும் முதிர்ச்சியான தோற்றத்தை தவிர்க்கலாம்.
    சருமத்தில் தண்ணீர்த்தன்மையை நிலைநிறுத்த துணைபுரிவது, மாய்ஸ்சரைசர். எந்த வகை சருமமாக இருந்தாலும் அதில் மாய்ஸ்சரைசர் பயன்படுத்தலாம்.
    தினமும் காலை நேரங்களில் முகம் மற்றும் கூந்தல் அலங்காரம் செய்துகொள்ளும் பெண்களில் பலருக்கும் தெரியாத விஷயம் ஒன்று இருக்கிறது. அதாவது இரவில் சருமம் மற்றும் கூந்தலில் சில பராமரிப்பு செயல்களை மேற்கொண்டால் அது காலை நேர மேக்கப்பை விட கூடுதல் பலன்தரும். சருமமும், கூந்தலும் ஆரோக்கியமாகவும் திகழும்.

    இரவில் தூங்கச் செல்வதற்கு முன்பு அழகில் செலுத்தவேண்டிய அக்கறை என்னென்ன தெரியுமா?

    இரவில் நன்றாக தூங்கி எழும்போது மனது புத்துணர்ச்சி பெறுவது போன்று, தூங்கி எழும்போது அன்றாடம் சருமமும் புத்துணர்ச்சி பெறும். தூங்கும் இரவு நேரத்தில் தூசுவோ, அழுக்கோ சருமத்தில் படாது. அசுத்தக்காற்றும் அண்டாது. வெயில், சூடு எதுவும் படாமல் சருமம் இரவு நேரத்தில் பாதுகாக்கப்படுகிறது. இத்தகைய பலன்கள் இரவில் சருமத்திற்கு கிடைப்பதால், தூங்கச் செல்வதற்கு முன்னால் சருமத்தை சுத்தப்படுத்தி தயார்படுத்துவதற்கு மறந்துவிடக்கூடாது.

    காலை நேரத்தில் முகத்தில் கிரீம் பூசி மேக்கப் போட்டிருப்பீர்கள். அதை முழுமையாக நீக்குவதற்கு கிளன்சிங் செய்வது மிக அவசியம். சருமம் நன்றாக சுவாசிப்பதற்காகவும், தானே புதுப்பித்துக்கொள்வதற்காகவும் இதை செய்யவேண்டும். முகத்தில் இருக்கும் தொற்றுக்கள், தூசுக்கள், எண்ணெய்த் தன்மை போன்றவைகளை போக்கி சருமத்தை சுத்தமாக்கும் பணியை கிளன்சிங் செய்கிறது. சருமத்திற்கு பொருத்தமான ‘பேஸ் வாஷ்’ பயன்படுத்தி முகத்தை சுத்தப்படுத்தவேண்டும்.

    பெண்கள் கிளன்சரை வீட்டிலேயே தயார் செய்துகொள்ளலாம். மூன்று பாதாம் பருப்பையும், இரண்டு பெரிய தேக்கரண்டி அரிசியையும் கலந்து நன்றாக அரைத்து தூளாக்குங்கள். அதனை காற்றுப்புகாத பாத்திரத்தில் அடைத்து வைத்துக்கொண்டு தேவைக்கு தக்கபடி பயன்படுத்தவேண்டும். அதில் சிறிதளவு பால் கலந்து கிளன்சராக பயன்படுத்த வேண்டியதுதான்.

    பசும்பாலை கொதிக்கவைக்காமல் அப்படியே குளிரச்செய்து அதனை பயன்படுத்தி இரவில் முகத்தில் தேய்த்து, சிறிது நேரம் கழித்து கழுவலாம். வறண்ட சருமம் கொண்டவர்களுக்கு இது சிறந்த கிளன்சராக பயன்படும். எண்ணெய்த்தன்மை நிறைந்த சருமத்தைகொண்டவர்கள் தேன் மற்றும் எலுமிச்சை சாறு சம அளவு எடுத்து முகத்திற்கு கிளன்சராக பயன்படுத்தலாம். சாதாரண சருமமாக இருந்தால் எலுமிச்சை சாறுக்கு பதில் பால் சேர்த்துக்கொள்ளலாம்.

    சருமத்தில் இருக்கும் பி.எச்.அளவு சீரற்ற நிலையில் இருந்தால், சரும பிரச்சினைகள் தோன்றும். அதனால் சருமத்தில் ‘டோனிங்’ செய்து பி.எச். அளவை சீராக்கவேண்டும். இரவில் தூங்கச் செல்வதற்கு முன்னால் முகத்தை நன்றாக கழுவினாலும் சரும துவாரங்களில் அழுக்குகள் சேர்ந்திருக்கத்தான் செய்யும். அதனை முழுமையாக நீக்கினால்தான் முக அழகை பாதுகாக்கமுடியும். இதற்கு டோனிங் துணைபுரியும்.

    வறண்ட சருமத்திற்கும், எண்ணெய்த்தன்மையான சருமத்திற்கும் பொருத்தமான ‘டோனர்’களை அழகு சாதன பொருட்களை விற்கும் கடைகளில் வாங்கலாம். அதில் ஆல்கஹால் கலக்காததை தேர்வு செய்யவேண்டும்.

    கொதித்து ஆறிய நீரை சிறிய பாத்திரத்தில் எடுத்து, அதில் இரண்டு ரோஜா இதழ்களை போட்டு சூரிய வெளிச்சத்தில் ஒரு நாள் முழுக்க வைத்திருங்கள். பின்பு அந்த நீரை வடிகட்டி எடுங்கள். இதுதான் ரோஸ்வாட்டர். இரவில் தூங்கச் செல்வதற்கு முன்பு இதில் பஞ்சை முக்கி, நன்றாக முகத்தை தேய்த்து சுத்தப்படுத்துங்கள். பிரிட்ஜில் குளிரவைத்த கிரீன் டீ அல்லது வெள்ளரிக்காய் சாறு போன்றவற்றையும் ஸ்கின் டோனராக பயன்படுத்தலாம்.

    இரவில் நீங்கள் கூந்தலை அவிழ்த்துவிட்டபடி தூங்குபவர்களாக இருந்தால், உங்களுக்கு கூந்தல் மீது அக்கறை இல்லை என்று அர்த்தம். தினமும் இரண்டு முறையாவது தலைமுடியை சீப்பால் நன்றாக சீவவேண்டும். மண்டை ஓட்டில் ரத்த ஓட்டம் அதிகரிக்கவும், கூந்தலின் ஆரோக்கியத்திற்கும் இது ஏற்றது.

    கூந்தலை சீவிவிடாமல் இருந்தால் பொடுகு அதிகரிக்கும். பிளாஸ்டிக் சீப்பிற்கு பதில் மரத்தாலான சீப்பை பயன்படுத்தினால் முடி உடைந்துபோவதை ஓரளவு தடுக்கலாம். முடியை நன்றாக சீவி கட்டிவைத்துக்கொண்டு தூங்கவேண்டும். கூந்தலை அவிழ்த்துவிட்டபடி தூங்கினால் தலையணை, போர்வையில் முடி உரசி, உடைந்துபோகும்.

    சருமத்தில் தண்ணீர்த்தன்மையை நிலைநிறுத்த துணைபுரிவது, மாய்ஸ்சரைசர். எந்த வகை சருமமாக இருந்தாலும் அதில் மாய்ஸ்சரைசர் பயன்படுத்தலாம். முகத்தில் சுருக்கம் ஏற்பட்டு முதுமை தெரியாமல் இருக்க சருமத்திற்கு தண்ணீர்த்தன்மை மிக முக்கியம். வறண்ட சருமத்தினர் கிரீமை அடிப்படையாகக் கொண்டவற்றையும், எண்ணெய் சருமத்தினர் ஜெல்லை அடிப்படையாகக் கொண்டவற்றையும் வாங்கி பயன்படுத்த வேண்டும். டோனரை சருமம் நன்றாக உறிஞ்சிய பின்பு மாய்ஸ்சரைசரை பயன்படுத்தவேண்டும். ஒரு பெரிய தேக்கரண்டி நிறைய தேங்காய் எண்ணெய்யை எடுத்து அதில் மூன்று துளி வைட்டமின் ஈ ஆயில் கலந்து மாய்ஸ்சரைசராக முகத்தில் பூசலாம்.
    கூடுமானவரை நெயில் பாலிஷை அடிக்கடி பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். சில வகை நெயில் பாலிஷ்களை பயன்படுத்தும்போது நகங்கள் உலர்ந்து மஞ்சள் நிறத்திற்கு மாறத்தொடங்கிவிடும்.
    கை மற்றும் கால் விரல்களின் நகங்களை நெயில் பாலிஷ் கொண்டு அழகுப்படுத்தி பார்ப்பது பெரும்பாலான பெண்களுக்கு பிடித்தமான பொழுதுபோக்காக இருக்கிறது. உடுத்தும் ஆடைகளுக்கு பொருத்தமாகவும் நெயில் பாலிஷ்களை தீட்டி அழகுபார்ப்பார்கள்.

    அதில் இருந்து வெளிப்படும் வாசனையும் பலருக்கு பிடிக்கும். அதனை நுகர்ந்து பார்த்து ரசிக்கவும் செய்வார்கள். ஆனால் நெயில் பாலிஷ்கள் உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்கும் தன்மை கொண்டவை என்பதை பலரும் அறிவதில்லை. அதன் வாசனை உடல் ஆரோக்கியத்திற்கு கேடு பயக்கும்.

    கூடுமானவரை நெயில் பாலிஷை அடிக்கடி பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். சில வகை நெயில் பாலிஷ்களை பயன்படுத்தும்போது நகங்கள் உலர்ந்து மஞ்சள் நிறத்திற்கு மாறத்தொடங்கிவிடும். அதில் சேர்க்கப்படும் பார்மாலிடிகைடு, டிபூட்டல் பத்தாலேட், டோலுன் போன்ற ரசாயனங்கள் உடல் நலத்திற்கு கடும் பாதிப்புகளையும் ஏற்படுத்தக் கூடியவை.

    மென்மை தன்மையை தக்கவைப்பதற்கும், நிறங்களின் பொலிவுக்கும் டோலுன் பயன்படுத்தப்படுகிறது. எனினும் இது நகத்தின் வழியே ஊடுருவி உடல்நல பாதிப்புகளையும் ஏற்படுத்திவிடும். தொடர்ந்து பயன்படுத்தும்போது நரம்பு மண்டலம், மூளை போன்றவை பாதிப்புக்குள்ளாகக்கூடும். தலைவலி, மயக்கம், தலைச்சுற்று, குமட்டல், உடல் பலவீனம் போன்ற பிரச்சினைகளையும் எதிர்கொள்ள நேரும்.

    நக பாலிஷ்களின் ஆயுட்காலத்தை நீட்டிப்பதற்கு பார்மாலிடிகைடு எனும் ரசாயனம் சேர்க்கப்படுகிறது. ஒவ்வாமை பிரச்சினை கொண்டவர்கள் பார்மாலிடிகைடு கலந்திருக்கும் நக பாலிஷை தவிர்ப்பது நல்லது. தோல் நோய்கள், மன அழுத்தம், புற்றுநோய், இதயம் சார்ந்த நோய் பாதிப்புகளும் ஏற்பட காரணமாகிவிடும்.

    டிபூட்டல் பத்தாலேட் என்ற ரசாயனம் சாயங்கள் மற்றும் பெயிண்டிங் போல செயல்பட்டு நக பாலிஷுக்கு பொலிவு சேர்க்கும் தன்மை கொண்டது. இதுவும் நாளமில்லா சுரப்பிகள், சுவாச கோளாறுகள் சார்ந்த பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும். ஆதலால் இத்தகைய ரசாயனங்கள் கலந்த நக பாலிஷ்களை தவிர்க்க வேண்டும்.

    ‘5 பிரீ நெயில் பாலிஷ், 3 பிரீ நெயில் பாலிஷ்’ போன்ற ரசாயன கலப்பு அதிகம் இல்லாத நெயில் பாலிஷ்களை தேர்ந்தெடுத்து பயன் படுத்தலாம். நக பாலிஷ்களை அடிக்கடி உபயோகப்படுத்தாமல் விஷேச நாட்களில் மட்டும் பயன்படுத்தலாம். அன்று இரவே நக பாலிஷை அகற்றி நகங்களை சுத்தப்படுத்தி விடுவதும் நல்லது.
    வெள்ளை சர்க்கரையுடன் வெண்ணெய் சேர்த்து நன்றாக குழைத்து, வாரம் மூன்று முறை உதட்டில் தடவி வந்தால் உதடுகள் பொலிவு பெறும்.
    வெப்பத்தின் காரணமாக புற ஊதாக்கதிர் வீச்சுகளின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்பதால் பெண்களின் உதடுகள் பொலிவிழந்து நிறம் மாறத்தொடங்கும். ஒருசில சமையல் பொருட்களை பயன்படுத்தியே உதடுகளை இயல்பான நிறத்திற்கு கொண்டுவந்துவிடலாம். உதடுகளில் உள்ள இறந்த செல்களை அப்புறப்படுத்துவதற்கு வெள்ளை சர்க்கரையை பயன்படுத்தலாம். வெள்ளை சர்க்கரையுடன் வெண்ணெய் சேர்த்து நன்றாக குழைத்து, வாரம் மூன்று முறை உதட்டில் தடவி வந்தால் உதடுகள் பொலிவு பெறும்.

    உதட்டில் படர்ந்திருக்கும் கருமையை போக்குவதில் தேனுக்கும் முக்கிய பங்களிப்பு இருக்கிறது. இரவில் தூங்க செல்வதற்கு முன்பு தினமும் உதட்டில் தேன் தடவிவரலாம். சில வாரங்களிலேயே நல்ல பலன் கிடைக்கும். உதடும் மிருதுவாகி விடும். எலுமிச்சை சாறையும் உதடுகளில் தடவியும் மசாஜ் செய்து வரலாம். அது உதட்டு கருமையை விரட்டி அடிக்கும் தன்மை கொண்டது.

    எலுமிச்சை சாறை இரவில் சிறிது நேரம் உதட்டில் தடவி மசாஜ் செய்துவிட்டு நீரில் கழுவி விட வேண்டும். பீட்ரூட்டை சாறு எடுத்தும் உதட்டில் தடவி வரலாம். அடிக்கடி அதனை தடவி வந்தால் கருமை நிறம் மறையத்தொடங்கிவிடும். ஐஸ் கட்டிகளையும் பயன்படுத்தலாம்.

    உதடு வறட்சி, உதடு வெடிப்பு போன்ற பிரச்சினைக்கு ஐஸ்கட்டிகள் நிவாரணம் தரும். அவை உதட்டில் ஈரப்பதத்தை தக்கவைத்து உதடு பொலிவுக்கு வித்திடும். ஸ்ட்ராபெர்ரி, ராஸ்பெர்ரி பழங்களை மசித்து அதனுடன் தேன் மற்றும் கற்றாழை ஜூஸ் சேர்த்து உதட்டில் தடவிவிட்டு, ஐந்து நிமிடங்கள் கழித்து கழுவ வேண்டும். ஆலிவ் ஆயிலும் உதட்டு பொலிவுக்கு உதவும்.
    எளிமையான முறையில் செலவே இல்லாமல் வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே வளையல் ஸ்டாண்ட் செய்வது எப்படி என்பதை இங்கே பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    பழைய செய்தித்தாள் - 1
    கத்திக்கோல் - 1
    தண்ணீர் புகாத பசை - 1
    அட்டை உருளை - 1
    கத்தி - 1
    நீளமான குச்சிகள் - தேவைக்கேற்ப

    செய்முறை

    1. செய்தித்தாளை கத்திரித்து ஒரு தாளை மட்டும் தனியாக எடுக்கவும்.

    2. அதை நான்கு பகுதியாக அழுத்தி மடிக்கவும்.

    3. நான்கு துண்டுகளையும் தனித்தனியாக வெட்டிக்கொள்ளவும்..

    4. வெட்டிய துண்டுத்தாளின் ஒரு ஓரத்தில் படத்தில் காட்டியவாறு ஒரு நீளமாக குச்சியை வைத்து சுருட்டவும். சுருட்டும் போது இடையிடையே சிறிது பசை தடவவும்.

    5. குச்சியுடன் சேர்த்து சுருட்டிய பின்பு குச்சியை வெளியே எடுத்து விடவும்.

    6. இவ்வாறு தேவைக்கேற்ப செய்தித்தாள் குழல்களை சுருட்டி வைத்து கொள்ளவும்.

    7. சுருடடி வைத்திருக்கும் செய்தித்தாளை குழல்களை அட்டை உருளையின் அடிப்பகுதியில் படத்தில் காட்டியுள்ளவாறு சுற்றிக்கொள்ளவும்.

    8. சுற்றும் போது பசைத்தடவவும்

    9. தொடர்ந்து 4 செய்தித்தாள் குழல்களை உருளையின் அடியில் ஒட்டவும்.

    10 அட்டை உருளையின் தேவையான இடங்களில் துளை இடுவதற்காக பென்சிலால் குறித்து கொள்ளவும்.

    11. குறித்துக்கொண்ட இடத்தில் துளையிட்டு வெட்டிக்கொள்ளவும். பின்பு நீளவாக்கில் சுருட்டிய 5 செய்தித்தாள் குழல்களை ஒன்றாக சேர்த்து ஒட்டவும். அதன் அடியில் தண்ணீர் புகாத பசையை தடவவும்.

    12. பசைத்தடவிய செய்தித்தாள் குழல்களை அட்டை உருளையில் ஏற்படுத்திய துளையில் படத்தில் காட்டியுள்ளவாறு சொருகி வெளியே வராதவாறு பசைக்கொண்டு நன்றாக ஒட்டவும்.

    13. அட்டை உருளையில் உள்ள எல்லா துளைகளிலும் மேற்கூறிபடியே பின்பற்றவும்.

    14. பின்பு அட்டை உருளை முழுவதும் சிறுசிறு செய்தித்தாள் குழல்களை சுருட்டி ஒட்டி விடவும். இதற்கு பதிலாக வண்ணக் காகிதங்களையும் பயன்படுத்தலாம்.

    இப்பொழுது உங்களுக்கான வளையல் ஸ்டாண்ட் தயார்.
    சூரிய கதிர்வீச்சுகளில் இருந்து வெளிப்படும் புற ஊதாக்கதிர்கள் வயதான தோற்றத்திற்கு முக்கிய காரணமாக அமைந்திருக்கின்றன. அவற்றில் இருந்து சருமத்தை தற்காத்துக்கொள்வதற்கு சன் ஸ்கிரீன் உபயோகிக்கலாம்.
    சருமத்தில் ஏற்படும் சுருக்கங்களே வயதான தோற்றத்திற்கு அடிப்படை காரணமாக அமைந்திருக்கிறது. ஒமேகா 3 கொழுப்பு அமிலம் கலந்த உணவுகளை சாப்பிடுவது சுருக்கங்களை தடுக்கும். இளமையாக தோன்ற விரும்புபவர்கள் குளிர்பானங்கள், ஜூஸ் போன்ற திரவ உணவு வகைகளை பருகுவதற்கு ஸ்ட்ராக்களை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். அவைகளை கொண்டு உறிஞ்சும்போது உதடுகளை சுற்றியுள்ள கோடுகளுக்குபாதிப்பு நேரும். முகத்திலும் சுருக்கங்கள் ஏற்படத்தொடங்கிவிடும். அதேபோல் புகைப்பிடிக்கும் பழக்கம் உடையவர்களுக்கு விரைவாகவே சரும சுருக்கம் ஏற்படும்.

    தலையணையில் முகத்தை அழுத்தமாக பதித்து தூங்குவதை தவிர்க்க வேண்டும். அவ்வாறு தூங்குவதை பழக்கமாக கொண்டிருந்தால் முகத்தில் சுருக்கங்கள் ஏற்படுவது தவிர்க்கமுடியாததாகிவிடும். மல்லாந்து படுத்து தூங்குவதே நல்லது. முதுகெலும்பு வளையும் அளவிற்கு சாய்ந்தவாறு உட்கார்ந்து லேப்டாப் பார்ப்பது, வேலை செய்வது கூடாது. அவ்வாறு செய்தால் எலும்புகளுக்கும், தசைகளுக்கும் பாதிப்பு ஏற்படும். அதன் தாக்கமாக வலி, சோர்வு போன்ற பிரச்சினைகளும் உருவாகும்.

    சூரிய கதிர்வீச்சுகளில் இருந்து வெளிப்படும் புற ஊதாக்கதிர்கள் வயதான தோற்றத்திற்கு முக்கிய காரணமாக அமைந்திருக்கின்றன. அவற்றில் இருந்து சருமத்தை தற்காத்துக்கொள்வதற்கு சன் ஸ்கிரீன் உபயோகிக்கலாம். அதேவேளையில் தினமும் சன் ஸ்கிரீன் உபயோகிப்பதையும் தவிர்க்க வேண்டும். வெளி இடங்களுக்கு செல்லும்போதும், வெயில் அதிகமாக சருமத்தில் படும்போதும் சன்ஸ்கிரீன் உபயோகித்தால் போதுமானது.

    குளிர்காலத்தில் நெருப்பை பற்ற வைத்து அருகில் அதிக நேரம் அமர்ந்திருப்பதும் கூடாது. செயற்கையாக உருவாக்கப்படும் அத்தகைய வெப்பம் சருமத்தையும், கூந்தலையும் வறட்சிக்குள்ளாக்கிவிடும். சரும சுருக்கத்திற்கும் வழிவகுத்துவிடும். மிதமான சூடுதான் சருமத்திற்கு நல்லது.

    குளித்துமுடித்த பிறகு ‘ஹேர் டிரையர்’ பயன்படுத்தி கூந்தலை உலர வைப்பதாக இருந்தால் 6 அங்குலம் இடைவெளி விட்டே உலர்த்த வேண்டும். இல்லாவிட்டால் கூந்தல் பாதிப்புக்குள்ளாகிவிடும். அதுவும் வயதான தோற்ற பொலிவுக்கு காரணமாகிவிடும்.

    சாப்பிடும் உணவுகள், பலகாரங்களில் சர்க்கரை அதிகம் இடம்பெறுவதை தவிர்க்க வேண்டும்.

    ஒரே இடத்தில் அதிக நேரம் அமர்ந்து டி.வி. பார்ப்பதை தவிர்க்க வேண்டும். அமர்ந்திருக்கும் இடத்தை விட்டு அரை மணி நேரத்திற்கு ஒருமுறை எழுந்து சிறிது தூரம் நடைப்பயிற்சி மேற்கொள்வது நல்லது.

    தினமும் குறைந்தபட்சம் 7 மணி நேரமாவது தூங்க வேண்டும். தூங்கும் நேரம் குறைவதால் சோர்வு ஏற்படுவதோடு ஆயுளும் குறையும்.

    மன அழுத்த பாதிப்பும் வயதான தோற்றத்திற்கு வழிவகுக்கிறது.
    சருமத்தில் ஏற்படும் கரும்புள்ளிகளுக்கும், எண்ணெய் சருமத்திற்கும் கோதுமை மாவை கொண்டு தீர்வு காண முடியும். கோதுமை மாவில் பேஸ் பேக் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    எண்ணெய் சருமத்திற்கு...

    தேவையான பொருட்கள்:

    கோதுமை மாவு - 4 டீஸ்பூன்

    தேன் - 2 டீஸ்பூன்

    ஆடை நீக்கிய பால்

    (ஸ்கிம்டு மில்க்) - 3 டீஸ்பூன்

    ரோஸ் வாட்டர் - 2 டீஸ்பூன்

    செய்முறை: அகன்ற பாத்திரத்தில் பாலை நன்கு காய்ச்சி, ஆற வைத்துக்கொள்ளவும். பின்பு ஆறிய பாலில் ரோஸ் வாட்டர், தேன் சேர்த்து நன்கு கலக்கவும். அதனுடன் கோதுமை மாவை சேர்த்து பசை போல் குழைத்துக்கொள்ளவும். அதனை முகத்தில் பூசி மசாஜ் செய்யவும். இந்த பேஸ் பேக் நன்கு உலர்ந்ததும், வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவிவிடலாம். தொடர்ந்து இவ்வாறு செய்து வந்தால் சருமம் பொலிவடையும்.

    கரும்புள்ளி நீங்குவதற்கு...

    தேவையானவை:

    கோதுமை மாவு - 2 டீஸ்பூன்

    மில்க் கிரீம் - 3 டீஸ்பூன்

    ரோஸ் வாட்டர் - 1 டீஸ்பூன்

    செய்முறை: அகன்ற கிண்ணத்தில் கோதுமை மாவை கொட்டி அதனுடன் மில்க் கிரீம் கலந்து குழைத்துக்கொள்ளவும். ரோஸ் வாட்டரையும் சேர்த்து நன்றாக பிசைந்து முகத்தில் பூசவும். நன்கு உலர்ந்ததும் வெதுவெதுப்பான நீரில் கழுவி விடலாம். இவ்வாறு தினமும் தொடர்ந்து செய்து வந்தால் இரண்டு வாரத்தில் நல்ல மாற்றத்தை காணலாம்.
    பெரும்பாலான பெண்கள் விளம்பரம் செய்யப்படும் விதவிதமான பொருட்களை வாங்கி பயன்படுத்தினாலே தங்கள் கூந்தல் அடர்த்தியும், வளர்ச்சியும் பெற்றுவிடும் என்று நினைக்கிறார்கள்.
    பெண்கள் இப்போது அழகியல் விஷயத்தில் இயற்கையை அதிகமாகவே சார்ந்திருக்க தொடங்கிவிட்டார்கள். பக்கவிளைவுகள் இல்லாத அழகிற்கு, இயற்கை மூலிகைகளில் தயார் செய்யப்படும் அழகு சாதனப் பொருட்களே சிறந்தது என்ற முடிவுக்கும் வந்துவிட்டார்கள். அதனால் இயற்கை அழகு சாதனப்பொருட்களின் விற்பனை அதிகரித்துக்கொண்டிருக்கிறது.

    பெண்கள் அதிக அளவில் பயன்படுத்தும் அழகு சாதனப்பொருட்களில் கூந்தலுக்கானவையும், சருமத்திற்கானவையும் முக்கிய இடங்களை வகிக்கின்றன. ரசாயனம் கலந்த பொருட்களை கூந்தலுக்கு பயன்படுத்தும்போது, காலப்போக்கில் முடி பாதிக்கப்படுகிறது. குறிப்பிட்டுச் சொன்னால் வறண்டு போகுதல், இறுதிப் பகுதியில் அறுந்து போகுதல், பிளந்து விடுதல் போன்றவைகளோடு கூந்தலுக்கு பல்வேறு விதமான ஆரோக்கிய பிரச்சினைகளும் ஏற்படுகின்றன. அத்தகைய கூந்தல் பிரச்சினைகளுக்கு தீர்வாக பெண்கள் இப்போது ‘ஆர்கானிக் கரோட்டின் ட்ரீட்மென்ட்டை’ நம்புகிறார்கள். இயற்கை மூலிகைகளில் இருந்து பெறும் கரோட்டினை முடியிலும், முடிவேரிலும் பூசி இந்த அழகு சிகிச்சையை கொடுக்கிறார்கள். வேரில் இருந்து தொடங்குவதால், ஒவ்வொரு முடியிலும் மோயிஸ்சரைஸ் செய்வதால், கூந்தலுக்கு மென்மையும், ஜொலிப்பும் கிடைக்கிறது.

    முதலில் புரோட்டீன் ஜெல்லை முடியின் வேர் பகுதியில் பூசி, பத்து நிமிடங்கள் மசாஜ் செய்யவேண்டும். இது வேரில் இருந்து செயல்பட்டு முடிக்கு பலம் கொடுக்கும். ஐந்து நிமிடங்கள் கழித்து கரோட்டின் ஆயில் தேய்க்கவேண்டும். இது முடியை மென்மையாக்கும். ஐந்து நிமிடங்கள் தொடர்ச்சியாக மசாஜ் செய்துவிட்டு, அடுத்து ஐந்து நிமிடங்கள் ஆவிபிடிக்கவேண்டும். அதன் பிறகு மண்டை ஓட்டு சருமத்தில் கெரா புரோட்டீன் மாஸ்க் பூசவேண்டும். இது கூந்தலுக்கு ஜொலிப்பு தரும். இருபது நிமிடங்கள் கடந்த பிறகு கெரோட்டின் ஷாம்புவும், கண்டிஷனரும் பயன் படுத்தி மண்டைஓட்டு சருமப்பகுதியையும், கூந்தலையும் கழுவ வேண்டும். ஒவ்வொருவரின் கூந்தலுக்கு தக்கபடி இந்த சிகிச்சையை இரண்டு அல்லது மூன்று முறை பெறவேண்டும். இந்த அழகு சிகிச்சையை தொடரும்போதே ஊட்டச்சத்து நிறைந்த உணவையும் உண்ணவேண்டும். கூந்தலையும் நன்றாக பராமரிக்கவேண்டும்.

    பெரும்பாலான பெண்கள் விளம்பரம் செய்யப்படும் விதவிதமான பொருட்களை வாங்கி பயன்படுத்தினாலே தங்கள் கூந்தல் அடர்த்தியும், வளர்ச்சியும் பெற்றுவிடும் என்று நினைக்கிறார்கள். அது தவறு. கூந்தலை சுத்தமாக பராமரித்தால் மட்டுமே அது ஆரோக்கியமான வளர்ச்சியை பெறும். அதனால் கூந்தலை முதலில் இயற்கையான முறையில் சுத்தமாக பராமரியுங்கள். பின்பு தேவைக்கு தக்கபடி மட்டும் எண்ணெய், ஜெல், கிரீம், ஷாம்பு போன்றவைகளை பயன் படுத்துங்கள்.

    இயற்கை ஷாம்புவை நீங்கள் வீட்டிலே தயாரிக்கலாம். ஒரு கிலோ பச்சை பயறு மாவு, வேப்பிலையை காயவைத்து அரைத்த தூள் அரை கிலோ, ஒரு கிலோ சீயக்காய்தூள், துளசி இலையை காயவைத்து அரைத்த தூள் அரை கிலோ ஆகியவைகளை கலந்து காற்று புகாத பாட்டிலில் அடைத்து வையுங்கள். இதனை தேவைக்கு தக்கபடி எடுத்து ஒரு கப் தண்ணீரில் கலக்கி, ஷாம்புபோல் பயன்படுத்தவேண்டும்.

    பொடுகை அகற்றும் பவுடரையும் வீட்டிலே தயாரிக்கலாம். உளுந்து மாவு அரை கிலோ, வெந்தயதூள் கால் கிலோ, உலரவைத்த ஆரஞ்சு தோல் தூள் நூறு கிராம் ஆகியவைகளை கலந்து ஒரு பாட்டிலில் அடைத்து வைத்துக் கொள்ளுங்கள். பயன்படுத்தும் போது அதில் சிறிதளவு எடுத்து அரை கப் நீரில் கலக்கி, அரை மணி நேரம் வைத்திருங்கள். அதை தலையில் தேய்த்து 20 நிமிடங்கள் கழித்து, சீயக்காய் தூள் கலந்து தலையை கழுவுங்கள். பொடுகு நீங்கும்.
    வடஇந்தியாவில் மட்டுமே பிரபலமான இவ்வகை சேலைகள் மெல்ல மெல்ல தென்னிந்தியப் பெண்களின் மனதையும் வசீகரிக்கத் துவங்கி விட்டது என்றே சொல்லலாம்.
    இந்தியக் கலைகளில் பிரபலமான ஒன்று மதுபானி பெயிண்டிங் என்று சொன்னால் அது மிகையாகாது. பீகாரின் மிதிலா நகரத்தைப் பிறப்பிடமாகக் கொண்டவை மதுபானி பெயிண்டிங்குகளாகும்.

    இராமாயாணத்தில் ஜனக மஹாராஜா தனது மகள் சீதாவின் திருமணத்திற்கு ஓவியர்களை வரவழைத்து மதுபானி ஓவியங்களை வரைய வைத்ததாக புராணங்கள் கூறுகின்றன. முதலில் சுவர்களையும், தரையையும் அலங்கரித்த இவ்வகை ஓவியங்கள் மெல்ல மெல்ல காகிதங்கள் மற்றும் துணிகளில் இடம் பெற ஆரம்பித்தன.

    இவ்வகை ஓய்வியங்கள் பெரும்பாலும் ஏதாவது கருப்பொருளை விளக்கும் விதமாகவே வரையப்படுகின்றன. பெரும்பாலும், கிருஷ்ணர், ராமர், லஷ்மி, சிவன், துர்கா, சரஸ்வதி, சூரியன் மற்றும் சந்திர உருவங்களானது முக்கிய பாத்திரங்களாக வரையப்படுகின்றன. இவை மட்டுமல்லாமல் ஜயாமெட்ரிகள் மற்றும் மேத்தமேட்டிகல் வடிவங்களும் மதுபானி ஓவியத்திற்கு மேலும் சிறப்பைச் சேர்க்கின்றன.

    இவ்வகை ஓவியங்கள் சேலைகளில் இடம் பெறும் போது அவற்றை மக்கள் பெரிதும் விரும்பி வாங்குவதற்கான காரணம் அதன் எளிமை மற்றும் இயற்கையான மூலப்பொருள்களான அரிசித்தூள், மஞ்சள், மகரந்தத்தூள் அவுரி இலைச்சாறு பல்வேறு பூக்கள், சந்தனம் மற்றும் தாவரங்கள் மற்றும் மரங்களின் இலைகளிலிருந்து பெறப்பட்ட வண்ணங்களை கொண்டு ஓவியம் தீட்டப்படுவதுமாகும்.

    இவ்வகை வண்ணங்கள் மிகவும் அடர்த்தியாக இருப்பதுடன் பளிச்சென்றும் காட்சியளிக்கின்றன. மேலும், பர்ஷர்களுக்கு பதிலாக குச்சிகள் (தாவர), தீக்குச்சிகள் மற்றும் விரல்களையும் ஓவியங்களையும் உருவாக்கப் பயன்படுத்தப்படுகிறார்கள்.

    தந்திரிக், கோபர், பர்னி, கோத்னா மற்றும் கட்சினி என வேறுபட்ட ஸ்டைல்களைக் கொண்டவை இவ்வகை ஓவியங்களாகும்.

    மதுபானி ஓவியங்களானது காட்டன் மற்றும் சில்க் சேலைகளில் மிகவும் அற்புதமாக தயாரிக்கப்படுவதுடன் பெண்களால் பெரிதும் விரும்பி வாங்கக்கூடிய சேலையாகவும் உள்ளது.

    மதுபானி வேலைப்பாடானது சேலையின் முந்தி, ப்ளஸ்ட் மற்றும் பார்டர்களில் பிரிண்ட் செய்யப்பட்டு வருவது பார்ப்பதற்குக் கண்கொள்ளாக் காட்சியாக உள்ளது.

    செமி சில்க் சேலைகளில் சிக்கலான மதுபானி ஓவியங்களை கைகளால் வண்ணம் பூசி முந்தி மற்றும் பார்டரில் அட்டகாசமாகத் தயாரிக்கப்படும் சேலைகளின் அழகை வார்த்தைகளால் கூற முடியாது.

    இக்கத் மற்றும் மதுபானி ஓவியங்களை கைகளால் தீட்டி தயாரிக்கப்படும் பிரத்யேகமான சந்தேரி சேலைகளும் அற்புதம் என்றே சொல்லலாம்.

    தூய டஸ்ஸர் சில்க் சேலைகளில் கைகலால் மதுபானி ஓவியங்கள் தீட்டப்பட்டு, முந்தி மற்றும் ப்ளட்ஸானது காட்டன் சில்க்கில் உருவாக்கப்படும் சேலைகளும் அழகுக்கு அழகு சேர்க்கின்றன.

    உடல் நிறம் கருப்பு, பார்டர் மற்றும் முந்தியானது இரத்தச் சிவப்பு இதில் ஆங்காங்கே கோல்டன் மற்றும் சிவப்பு நிறங்களில் மதுபானி ஓவியங்களைக் கைகளால் தீட்டி தயாரிக்கப்படும் சேலைகளை திருமண வரவேற்பு மற்றும் பார்ட்களுக்கு அணிந்து சென்றால் அனைவரின் கவனமும் நம் பக்கம் திரும்பும் என்பதில் சந்தேகம் வேண்டாம்.

    சேலையின் மேற்புறம் மதுபானி ஓவியங்கள் சேலையின் கீழ்ப்புறம் இக்கத் பார்டர்களுடன் ஆரஞ்சு மற்றும் கருமை நிறத்தில் வரும் சேலைகளின் அழகை வர்ணிக்க வார்த்தைகள் இல்லை.

    கைத்தறி கோட்டா சேலகளில் உடல் ஒரு நிறம் பார்டர் ஒரு நிறமாக இருக்க முந்தியில் மட்டும் மதுபானி ஓவியங்கள் அச்சிடப்பட்டு இணைக்கப்பட்டிருப்பது புதுமையாகவும் அழகாகவும் உள்ளது.

    மதுபானி ஓவியங்களைத் தீட்டி வண்ணம் பூசிய பின்னரும், பிளெயினாக இருக்கும் இடங்களில் வண்ணங்களைப் பூசி நிரப்புவது அந்த ஓவியர் மற்றும் ஓவியத்தின் தனிச் சிறப்பாாகக் கூறப்படுகின்றது.

    மதுபானி ஓவியத்தை எம்ராய்டிங் செய்தும் பிரிண்ட் செய்தும் சேலைகளில் பார்க்கும் பொழுது அது ஒருவிதமான அழகைப் பிரதிபலிப்பதாகவே உள்ளது.

    வடஇந்தியாவில் மட்டுமே பிரபலமான இவ்வகை சேலைகள் மெல்ல மெல்ல தென்னிந்தியப் பெண்களின் மனதையும் வசீகரிக்கத் துவங்கி விட்டது என்றே சொல்லலாம். அதற்குக் காரணம் டிசைனர் சேலைகளிலும் இந்த ஓவியங்கள் தனது முத்திரையைப் பதிக்கத் துவங்கி விட்டன.
    விரும்பிய வண்ணம் நீளமாக நகம் வளர்ப்பது சாத்தியமானதுதான். ஒருசில எளிமையான வழிமுறைகளை பின்பற்றினாலே போதும். அவை என்னவென்று பார்ப்போமா?
    நகங்கள் கைகளை அழகாகக் காண்பிக்கக்கூடியவை. பெரும்பாலான பெண்கள் நீண்ட, வலுவான நகங்கள் தங்கள் கைகளை அலங்கரிக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். அப்படி நகங்கள் வளர்க்க ஆசைப்பட்டாலும் அது சாத்தியமாவதில்லை. ஆசை ஆசையாய் வளர்க்கும் நகங்கள் சில நாட்களிலோ, சில வாரங்களிலோ உடைந்துபோய்விடுவதை பார்த்து வேதனை அடைபவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். விரும்பிய வண்ணம் நீளமாக நகம் வளர்ப்பது சாத்தியமானதுதான். ஒருசில எளிமையான வழிமுறைகளை பின்பற்றினாலே போதும். அவை என்னவென்று பார்ப்போமா?

    உடலில் நீர்ச்சத்தை தக்கவைப்பது சருமத்திற்கும், கூந்தலுக்கும் மட்டுமல்ல நகங்களின் வளர்ச்சிக்கும் உதவும். இளநீர், பழ ஜூஸ்கள் உள்ளிட்ட திரவ உணவுகளை உட்கொள்ளலாம். உடலில் நீர்ச்சத்தை போதுமான அளவு தக்கவைக்க முடியாத சூழலில் நகங்களுக்கு ஈரப்பதமூட்டும் கிரீம்களை உபயோகிக்கலாம்.

    நகங்கள் எளிதில் உடையக்கூடிய வகையில் பலவீனமாக இருந்தால் புரதம் உட்கொள்வதை அதிகரிக்க வேண்டியிருக்கும். நீண்ட மற்றும் வலிமையான நகங்களை பெறுவதற்கு போதுமான அளவு புரதச்சத்துள்ள உணவை உட்கொள்வதை உறுதி செய்து கொள்ள வேண்டும். காலை உணவில் முட்டை மற்றும் பால் பொருட்களை சேர்த்துக்கொள்ளலாம்.

    நகங்களின் அடி விளிம்பு பகுதியில் அமைந்துள்ள தோல் அடுக்கான கியூடிக்கிள் ஆரோக்கியமாக இருக்க வேண்டியது அவசியமானது. ஆணி படுக்கை என்று அழைக்கப்படும் இது நகங்களின் வேர் பகுதியில் இருந்து வளரும் புதிய நக அடுக்கை பாக்டீரியாக்களிடம் இருந்து பாதுகாக்கும். கியூட்டிக்கிள் பகுதியை ஈரப்பதமாக வைத்திருப்பதற்கு கியூட்டிக்கிள் ஆயில் உபயோகிக்கலாம். அது நகம் உடைவதை தடுக்கும். எனினும் இதனை அதிகம் உபயோகிக்கக்கூடாது.

    நகங்களை வட்ட வடிவில் வளர்ப்பதே சிறப்பானது. மற்ற வடிவங்களுடன் ஒப்பிடுகையில் வட்ட வடிவ நகங்கள்தான் எளிதில் உடைந்து போகாது. மேலும் நகங்களை நீளமாக வளர்ப்பதற்கும் உதவியாக இருக்கும். ஒருவேளை உடையக்கூடிய நகங்களாக இருந்தால் அவற்றை அடிக்கடி வெட்டி ஒழுங்குபடுத்தி வரலாம். அப்படி வெட்டி ஒழுங்கமைப்பது நகங்கள் வலுவாக வளர்வதற்கு உதவும்.

    நகங்களுக்கு அடிக்கடி விதவிதமான வண்ணங்களில் நெயில் பாலிஷ் செய்ய விரும்புபவர்கள் ரசாயனம் கலக்காத இயற்கை நெயில் பாலீஷ் ரிமூவர்களை பயன்படுத்துவது நல்லது. ஏனெனில் நகங்களில் இருந்து நெயில் பாலீஷை எளிதாக அகற்றுவதற்கு ஏதுவாக நெயில் பாலிஷ் ரிமூவரில் கலக்கப்படும் அசிட்டோன் என்னும் ரசாயனம் நகங்களின் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். நகங்களின் வளர்ச்சியையும் தடுக்கும். குறிப்பாக நகங்களின் ஆரோக்கியத்திற்கு முக்கிய பங்கு வகிக்கும் இயற்கை எண்ணெய் தன்மையை அசிட்டோன் அகற்றிவிடும்.
    ஆரஞ்சுத் தோல் கிருமி எதிர்ப்பு மற்றும் நுண்ணுயிர் தொற்றுத் தன்மைகளை கொண்டுள்ளதால் உங்களுடைய எண்ணெய் பசை மற்றும் பருக்கள் நிறைந்த சருமத்திற்கு நல்ல பலன் தரும்.
    ஆரஞ்சுப் பழத்தோலில் உள்ள வைட்டமின் சி சத்து தவிர, ஆரஞ்சுப் பழத்தோலில் அதிக அளவு ஆன்டி ஆக்சிடென்டுகள் நிறைந்திருப்பதால் இவற்றை ஸ்கின் பேக் எனப்படும் முகத்தின் பொலிவைக் கூட்டி வெண்மையாக்கும் சருமப் பராமரிப்பு பூச்சுகளில் மற்றும் மாஸ்க்குகளில் பயன்படுத்தலாம்.

    சிலருக்கு தூசிகளால் முகம் களையிழந்து கருத்து போய்விடும். அவர்கள் ஆரஞ்சு தோலை துண்டுகளாக்கி காய வைத்து பின் பவுடராக்கிக் கொள்ளுங்கள். இந்தப் பவுடர், முல்தானிமட்டி, சந்தனம் மூன்றும் சம அளவு எடுத்து தயிருடன் கலந்து முகத்துக்குப் பேக் போட்டு பத்து நிமிடம் கழித்து கழுவ வேண்டும்.

    ஆரஞ்சுத் தோல் கிருமி எதிர்ப்பு மற்றும் நுண்ணுயிர் தொற்றுத் தன்மைகளை கொண்டுள்ளதால் உங்களுடைய எண்ணெய் பசை மற்றும் பருக்கள் நிறைந்த சருமத்திற்கு நல்ல பலன் தரும்.

    ஆரஞ்சுத் தோலை வாரம் ஒரு முறை முகத்துக்கு போட்டு வர முகத்திற்கு பேஷியல் செய்தது போல் முகம் பிரகாசமாக ஜொலிக்க ஆரம்பிக்கும். தயிருக்கு பதிலாக ஆரஞ்சு பழச்சாறையும் பயன்படுத்தலாம். மிருதுவான சருமத்திற்கு வெளியில் செல்லும் முன் சன் பிளாக் கிரீமை தவறாமல் பயன்படுத்த வேண்டும். இவ்வாறு செய்து வந்தால் முக சருமம் பாதுகாக்கப்படும்.

    ஒவ்வொருவருக்கும் 2 வகையான சருமம் உள்ளது. ஒன்று உலர்ந்த சருமம், மற்றொன்று எண்ணெய் சருமம். உலர்ந்த சருமத்திற்கு கேரட்டை நன்றாக அரைத்து அதை ஒரு ஸ்பூன் தேன் கலந்து 20 நிமிடம் உடலில் பூசி பின் குளிர்ந்த நீரில் கழுவிவிட வேண்டும். இதே போல் எண்ணெய் வழியும் சருமத்திற்கு மருந்து கடைகளில் இருந்து மூலிகை கலந்த பவுடரை வாங்கி பூசி வரலாம். இதன் மூலம் முகம் படிப்படியாக ஜொலிக்க ஆரம்பிக்கும்.

    ஆரஞ்சுத் தோல் மற்றும் தயிர் கலவை ஒரு அற்புதமான சருமப் பராமரிப்பிற்கு உதவும். இது சுருக்கங்களையும் கோடுகளையும் நீக்குவதோடு உங்கள் சருமத்தின் இறந்த செல்களை நீக்க உதவுகிறது.

    ஆரஞ்சுத் தோல் மற்றும் வேம்புக் கலவை பருவை எதிர்த்துப் போராட உதவும். இந்த ஸ்கின் பேக் மூலம் எண்ணெய் பசை மிகுந்த மற்றும் பருக்கள் ஏற்படக்கூடிய சருமத்திற்கு நல்ல பலனை பெற முடியும்.
    ×