என் மலர்
அழகுக் குறிப்புகள்
அணியும் ஆடை, அலங்கார பொருட்களில் அழுக்கு, பிசிறு, பழமை தெரியாமல் இருப்பது நல்லது. இவையெல்லாம் சரியாக இருந்தால் வேலைகளில் முழுமையாக கவனம் செலுத்தலாம்.
வேலைக்கு செல்லும் பெண்கள் ஆடை தேர்வு விஷயத்தில் அதிக ஆர்வம் செலுத்துவார்கள். நேர்த்தியான விதத்தில் ஆடை அணிந்து செல்வது தேவையற்ற பிரச்சினைகள் ஏற்படுவதை தவிர்க்கும். சக ஊழியர்கள், அதிகாரிகள் மத்தியில் நல்ல மரியாதையை பெற்றுத் தரும்.
அலுவலகத்துக்கு எந்த மாதிரியான ஆடை அணிவது, அலங்காரம் செய்துகொள்வது என்று பார்க்கலாமா?
* வீடு, வெளியிடம், ஷாப்பிங் மால் போன்றவற்றுடன் அலுவலகத்தை ஒப்பிட்டு குழப்பிக்கொள்ளாதீர்கள். ஆடை என்பது நேர்த்தியாய் தைக்கப்பட்டதாய் இருக்கட்டும். கசகசவென்ற டிசைன், ‘பளிச்’ நிறம் வேண்டாம். ஆடைகள் நளினமான டிசைனோடு அழகாக காட்சியளிக்கலாம். ஆனால் மற்றவர்கள் முகம் சுளிக்கும் அளவிற்கு பிரதிபலிக்கக்கூடாது. எம்பிராய்டரி போன்ற ஜிகினா வேலைப்பாடுகள் அதிகம் இல்லாமல் இருப்பதே நல்லது.
* உள்ளாடை விஷயத்திலும் உரிய கவனம் செலுத்துவது அவசியம். வெளியே ‘பளிச்’சென்று தெரியும் நிறத்திலான, அலங்காரமான பட்டைகள் கொண்ட பிரா வகைகளை தவிர்க்க வேண்டும். உடலழகை உயர்த்திக் காட்டும் விதத்திலான ஆடைகளை அலுவலகத்திற்கு அணிந்து செல்லக்கூடாது. உயர்தர பன்னாட்டு நிறுவனம் என்றால் நவநாகரிக பேஷன் உடைகளை உடுத்தலாம். ஆனால் சாதாரண நிறுவனங்களுக்கு அவை சரிப்பட்டு வராது.
* பெண்களின் தோற்றத்தை மெருகூட்டிக்காட்டுவதில் காலணிகளுக்கும், ‘பேக்’களுக்கும் முக்கிய இடம் இருக்கிறது. ஆதலால் தரமான பேக், காலணிகளை தேர்வு செய்யுங்கள். அவை மிதமான நிறங்களில் இருப்பது சிறந்தது. தற்போது டிரெண்டிங்கில் இருக்கும் பேஷனை முயற்சித்து பார்க்கலாம். ஆனால் அவையும் அனைத்து தரப்பினரும் ஏற்றுக்கொள்ளும் பேஷனாக அமைந்திருக்க வேண்டும். அன்றன்று அணியும் ஆடைக்கு பொருத்தமான பேக், காலணிகளை வாங்கிக் கொள்ள முடியும் என்றால், தாராளமாக வாங்கலாம்.
* நகை தேர்வு விஷயத்திலும் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. அது சிம்பிளாக, அதிக டிசைன்கள் இல்லாததாக இருக்க வேண்டும். ஒரு மோதிரம், ஒரு சாதாரண செயின் அணிவது போதுமானது. கம்மலும் காதுகளை ஒட்டிய நிலையில் இருந்தால் போதும். கைநிறைய கலகலவென வளையல்கள் அணிவதையும் தவிர்க்க வேண்டும். அலங்கார தோடுகள், பட்டையான நெக்லஸ், அனைத்து விரல்களிலும் மோதிரங்கள் அணிவது போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.
* ஆடை, அலங்காரம் சம்பந்தப்பட்ட நிறுவனத்தில் வேலை பார்த்தால் மேக்கப் அதிகம் போடுவதை தவிர்க்க வேண்டும். எளிமையான, அவசிய தேவையான ‘மேக்கப்’ போடுவது எப்படி என்பதை அழகு நிபுணர்களிடம் கலந்தாலோசித்து, தெரிந்துகொள்ளுங்கள்.
* மேக்கப்பில் பிரகாசமான வண்ணங்களை தவிர்த்து விடுங்கள். உதடுகளைப் பளபளக்க செய்யும் விதமான லிப் பாம்களையும் தவிர்த்துவிடுங்கள்.
* நகங்களை முறையாக வெட்டிப் பராமரியுங்கள். அதிக வாசம் கொண்ட ‘சென்ட்’ வகைகளையும் தவிர்த்து விடுங்கள். கூந்தல் அலங்காரம் கூட மற்றவர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் அமைந்துவிடக்கூடாது. பின்னலிட்டோ, கொண்டையிட்டோ இருக்கட்டும்.
* அணியும் ஆடை, அலங்கார பொருட்களில் அழுக்கு, பிசிறு, பழமை தெரியாமல் இருப்பது நல்லது. இவையெல்லாம் சரியாக இருந்தால் வேலைகளில் முழுமையாக கவனம் செலுத்தலாம்.
அலுவலகத்துக்கு எந்த மாதிரியான ஆடை அணிவது, அலங்காரம் செய்துகொள்வது என்று பார்க்கலாமா?
* வீடு, வெளியிடம், ஷாப்பிங் மால் போன்றவற்றுடன் அலுவலகத்தை ஒப்பிட்டு குழப்பிக்கொள்ளாதீர்கள். ஆடை என்பது நேர்த்தியாய் தைக்கப்பட்டதாய் இருக்கட்டும். கசகசவென்ற டிசைன், ‘பளிச்’ நிறம் வேண்டாம். ஆடைகள் நளினமான டிசைனோடு அழகாக காட்சியளிக்கலாம். ஆனால் மற்றவர்கள் முகம் சுளிக்கும் அளவிற்கு பிரதிபலிக்கக்கூடாது. எம்பிராய்டரி போன்ற ஜிகினா வேலைப்பாடுகள் அதிகம் இல்லாமல் இருப்பதே நல்லது.
* உள்ளாடை விஷயத்திலும் உரிய கவனம் செலுத்துவது அவசியம். வெளியே ‘பளிச்’சென்று தெரியும் நிறத்திலான, அலங்காரமான பட்டைகள் கொண்ட பிரா வகைகளை தவிர்க்க வேண்டும். உடலழகை உயர்த்திக் காட்டும் விதத்திலான ஆடைகளை அலுவலகத்திற்கு அணிந்து செல்லக்கூடாது. உயர்தர பன்னாட்டு நிறுவனம் என்றால் நவநாகரிக பேஷன் உடைகளை உடுத்தலாம். ஆனால் சாதாரண நிறுவனங்களுக்கு அவை சரிப்பட்டு வராது.
* பெண்களின் தோற்றத்தை மெருகூட்டிக்காட்டுவதில் காலணிகளுக்கும், ‘பேக்’களுக்கும் முக்கிய இடம் இருக்கிறது. ஆதலால் தரமான பேக், காலணிகளை தேர்வு செய்யுங்கள். அவை மிதமான நிறங்களில் இருப்பது சிறந்தது. தற்போது டிரெண்டிங்கில் இருக்கும் பேஷனை முயற்சித்து பார்க்கலாம். ஆனால் அவையும் அனைத்து தரப்பினரும் ஏற்றுக்கொள்ளும் பேஷனாக அமைந்திருக்க வேண்டும். அன்றன்று அணியும் ஆடைக்கு பொருத்தமான பேக், காலணிகளை வாங்கிக் கொள்ள முடியும் என்றால், தாராளமாக வாங்கலாம்.
* நகை தேர்வு விஷயத்திலும் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. அது சிம்பிளாக, அதிக டிசைன்கள் இல்லாததாக இருக்க வேண்டும். ஒரு மோதிரம், ஒரு சாதாரண செயின் அணிவது போதுமானது. கம்மலும் காதுகளை ஒட்டிய நிலையில் இருந்தால் போதும். கைநிறைய கலகலவென வளையல்கள் அணிவதையும் தவிர்க்க வேண்டும். அலங்கார தோடுகள், பட்டையான நெக்லஸ், அனைத்து விரல்களிலும் மோதிரங்கள் அணிவது போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.
* ஆடை, அலங்காரம் சம்பந்தப்பட்ட நிறுவனத்தில் வேலை பார்த்தால் மேக்கப் அதிகம் போடுவதை தவிர்க்க வேண்டும். எளிமையான, அவசிய தேவையான ‘மேக்கப்’ போடுவது எப்படி என்பதை அழகு நிபுணர்களிடம் கலந்தாலோசித்து, தெரிந்துகொள்ளுங்கள்.
* மேக்கப்பில் பிரகாசமான வண்ணங்களை தவிர்த்து விடுங்கள். உதடுகளைப் பளபளக்க செய்யும் விதமான லிப் பாம்களையும் தவிர்த்துவிடுங்கள்.
* நகங்களை முறையாக வெட்டிப் பராமரியுங்கள். அதிக வாசம் கொண்ட ‘சென்ட்’ வகைகளையும் தவிர்த்து விடுங்கள். கூந்தல் அலங்காரம் கூட மற்றவர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் அமைந்துவிடக்கூடாது. பின்னலிட்டோ, கொண்டையிட்டோ இருக்கட்டும்.
* அணியும் ஆடை, அலங்கார பொருட்களில் அழுக்கு, பிசிறு, பழமை தெரியாமல் இருப்பது நல்லது. இவையெல்லாம் சரியாக இருந்தால் வேலைகளில் முழுமையாக கவனம் செலுத்தலாம்.
பேன்கள் நமது உச்சந்தலையில் எரிச்சலையும் நமைச்சலையும் ஏற்படுத்துகிறது. இரவுநேரங்களில் தூக்கமின்மைக்கு பேன்கள் கூட ஒரு காரணமாக இருக்க முடியும்.
பேன்கள் தலை, முடி, முதுகு மற்றும் கழுத்து மீது ஊர்ந்து, நமது ரத்தத்தை உறிஞ்சுகின்றன. பேன்களின் முட்டைகள் நிட்ஸ் என்று அழைக்கப்படுகின்றன, இது முடியுடன் ஒட்டிக்கொள்கிறது, மேலும் இது அரிப்பை ஏற்படுத்துகிறது.
ஒருவரின் தலை தொடர்பிலிருந்து மற்றொருவருக்கு பேன்கள் உருவாகின்றன. பேனால் குதிக்கவோ அல்லது பறக்கவோ முடியாது. ஆனால் முடியின் வழியாக பேன் மற்றொருவருக்கு பரவுகிறது. பேன்கள் கருப்பு, பழுப்பு மற்றும் வெள்ளை நிறத்தில் இருக்கும். தலையில் பேன் என்பது கெட்ட மற்றும் சுகாதாரமின்மை பிரச்சினை அல்ல.
பேன்கள் நமது உச்சந்தலையில் எரிச்சலையும் நமைச்சலையும் ஏற்படுத்துகிறது. பேன் பிரச்சினையால் பாதிக்கப்பட்ட ஒருவர், தலையை அடிக்கடி சொறிந்து கொண்டிருப்பார். பேன் இரவில் மிகவும் சுறுசுறுப்பாக இயங்கும். மேலும் இரவுநேரங்களில் தூக்கமின்மைக்கு பேன்கள் கூட ஒரு காரணமாக இருக்க முடியும்.
3 வகை பேன்கள் உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. சீப்புகள், கேப்ஸ், தூரிகைகள் போன்ற கூந்தல் பராமரிப்பு பொருட்களை வெந்நீரில் ஊற வைத்து கழுவவும், வாரத்திற்கு ஒரு முறையாவது இவ்வாறு சுத்தம் செய்வதை வழக்கமாக்கி கொள்ளவும்.
சீப்புகள், முடி தூரிகை போன்ற பொருட்களை பகிர்ந்து கொள்வதை நிறுத்துங்கள். முடிந்தவரை அடிக்கடி உங்கள் படுக்கை விரிப்புகளை மாற்றவும். உங்கள் துணிகளை வெந்நீரில் ஊற வைத்து கழுவவும், இதனால் பேன்களை அகற்றி, பேன்கள் பரவுவதை தடுக்க முடியும்.
தலை மற்றும் முடிக்கு வெதுவெதுப்பான தேங்காய் எண்ணெயை தடவவும். தேங்காய் எண்ணெயில் பூஞ்சை எதிர்ப்பு மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் உள்ளன. இது பேன்களை அழிக்க உதவும்.
ஒருவரின் தலை தொடர்பிலிருந்து மற்றொருவருக்கு பேன்கள் உருவாகின்றன. பேனால் குதிக்கவோ அல்லது பறக்கவோ முடியாது. ஆனால் முடியின் வழியாக பேன் மற்றொருவருக்கு பரவுகிறது. பேன்கள் கருப்பு, பழுப்பு மற்றும் வெள்ளை நிறத்தில் இருக்கும். தலையில் பேன் என்பது கெட்ட மற்றும் சுகாதாரமின்மை பிரச்சினை அல்ல.
பேன்கள் நமது உச்சந்தலையில் எரிச்சலையும் நமைச்சலையும் ஏற்படுத்துகிறது. பேன் பிரச்சினையால் பாதிக்கப்பட்ட ஒருவர், தலையை அடிக்கடி சொறிந்து கொண்டிருப்பார். பேன் இரவில் மிகவும் சுறுசுறுப்பாக இயங்கும். மேலும் இரவுநேரங்களில் தூக்கமின்மைக்கு பேன்கள் கூட ஒரு காரணமாக இருக்க முடியும்.
3 வகை பேன்கள் உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. சீப்புகள், கேப்ஸ், தூரிகைகள் போன்ற கூந்தல் பராமரிப்பு பொருட்களை வெந்நீரில் ஊற வைத்து கழுவவும், வாரத்திற்கு ஒரு முறையாவது இவ்வாறு சுத்தம் செய்வதை வழக்கமாக்கி கொள்ளவும்.
சீப்புகள், முடி தூரிகை போன்ற பொருட்களை பகிர்ந்து கொள்வதை நிறுத்துங்கள். முடிந்தவரை அடிக்கடி உங்கள் படுக்கை விரிப்புகளை மாற்றவும். உங்கள் துணிகளை வெந்நீரில் ஊற வைத்து கழுவவும், இதனால் பேன்களை அகற்றி, பேன்கள் பரவுவதை தடுக்க முடியும்.
தலை மற்றும் முடிக்கு வெதுவெதுப்பான தேங்காய் எண்ணெயை தடவவும். தேங்காய் எண்ணெயில் பூஞ்சை எதிர்ப்பு மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் உள்ளன. இது பேன்களை அழிக்க உதவும்.
பால், பழங்கள், பூக்கள் கலந்து பயன்படுத்துவதால் இந்த ‘பேஸ் பேக்’, சருமத்தை மிருதுவாகவும், மென்மையாகவும், ‘பளிச்’ என்ற தோற்றத்தோடும் வைக்க உதவும்.
மலர் போன்ற மென்மையான முக அழகை விரும்பும் பெண்கள், மலர்களைக் கொண்டு ‘பேஸ் பேக்’ போடலாம். பூக்கள் பல்வேறு மருத்துவ தன்மைகளைக் கொண்டவை. எந்த விதமான பாதிப்பையும் ஏற்படுத்தாமல், இயற்கையான அழகைக் கொடுக்கக்கூடியவை.
பால், பழங்கள், பூக்கள் கலந்து பயன்படுத்துவதால் இந்த ‘பேஸ் பேக்’, சருமத்தை மிருதுவாகவும், மென்மையாகவும், ‘பளிச்’ என்ற தோற்றத்தோடும் வைக்க உதவும். மேலும் முகத்தில் இருக்கும் பருக்கள், கரும்புள்ளிகள் போன்றவற்றை அகற்றும் என்பதால் தயக்கமில்லாமல் இதை பயன்படுத்த முடியும்.
முகம் அழகாக ஜொலிப்பதற்கு எந்த வகை பூக்களை, எவ்வாறு பயன்படுத்தலாம் என்று பார்ப்போம்.
ஆவாரம் பூ பேஸ் பேக்:
தேவையானவை:
ஆவாரம் பூ - 15
அரிசி மாவு - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - ¼ டீஸ்பூன்
ரோஜா பன்னீர் - தேவையான அளவு
வெயிலில் செல்வதால் கறுத்துப்போகும் சருமத்தை பழைய நிலைமைக்கு கொண்டுவருவதற்கு ஆவாரம் பூ உதவும். மேலே குறிப்பிடப்பட்டிருக்கும் பொருட்கள் அனைத்தையும் ஒன்றாகக் கலந்து பசை போல அரைக்கவும். இதை முகத்திலும், கழுத்திலும் தடவி, 15 நிமிடங்கள் கழித்து மென்மையாக மசாஜ் செய்தால் சரும நிற மாற்றத்தை உணர்வீர்கள். வாரம் ஒரு முறை இதைச் செய்யலாம்.
ரோஜா பூ பேஸ் பேக்:
தேவையானவை:
ரோஜா பூ - 1
பால் - 1 டீஸ்பூன்
கோதுமைத் தவிடு - 1 டீஸ்பூன்
முதலில் ரோஜா பூவின் இதழை நன்றாக அரைத்துக் கொள்ளவும். பின்பு அதனுடன் கோதுமைத் தவிடு, பால் கலந்து நன்றாக அரைக்கவும். இந்தக் கலவையை முகத்தில் பூசி மசாஜ் செய்யவும். பின் 15 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவினால் முகம் பொலிவு அடையும்.
செம்பருத்தி பூ பேஸ் பேக்:
தேவையானவை:
செம்பருத்தி பூ - 1
தயிர் - 1 டீஸ்பூன்
முல்தானி மெட்டி - 2 டீஸ்பூன்
ரோஜா பூ - 1
முதலில் ரோஜா மற்றும் செம்பருத்தி இதழ்களை சேர்த்து அரைத்துக்கொள்ளவும். பின்பு அதில் தயிர் மற்றும் முல்தானி மெட்டி கலந்து முகத்தில் தடவவும். 20 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரால் கழுவினால் முகம் மிருதுவாகும். கரும்புள்ளிகள், அழுக்குகள் நீங்கி ‘பளிச்’ என்று மாறும்.
மல்லிகை பேஸ் பேக்:
தேவையானவை:
மல்லிகைப்பூ இதழ்கள் - கால் கப்
கெட்டித் தயிர் - கால் கப்
இரண்டையும் தண்ணீர் சேர்க்காமல் மிக்சியில் நன்றாக அரைத்துக்கொள்ளவும். அதை முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் பூசவும். 20 நிமிடங்கள் கழித்து நீரால் கழுவவும். வறண்ட சருமம் கொண்டவர்களுக்கு இந்த பேஸ் பேக் சிறந்தது.
பால், பழங்கள், பூக்கள் கலந்து பயன்படுத்துவதால் இந்த ‘பேஸ் பேக்’, சருமத்தை மிருதுவாகவும், மென்மையாகவும், ‘பளிச்’ என்ற தோற்றத்தோடும் வைக்க உதவும். மேலும் முகத்தில் இருக்கும் பருக்கள், கரும்புள்ளிகள் போன்றவற்றை அகற்றும் என்பதால் தயக்கமில்லாமல் இதை பயன்படுத்த முடியும்.
முகம் அழகாக ஜொலிப்பதற்கு எந்த வகை பூக்களை, எவ்வாறு பயன்படுத்தலாம் என்று பார்ப்போம்.
ஆவாரம் பூ பேஸ் பேக்:
தேவையானவை:
ஆவாரம் பூ - 15
அரிசி மாவு - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - ¼ டீஸ்பூன்
ரோஜா பன்னீர் - தேவையான அளவு
வெயிலில் செல்வதால் கறுத்துப்போகும் சருமத்தை பழைய நிலைமைக்கு கொண்டுவருவதற்கு ஆவாரம் பூ உதவும். மேலே குறிப்பிடப்பட்டிருக்கும் பொருட்கள் அனைத்தையும் ஒன்றாகக் கலந்து பசை போல அரைக்கவும். இதை முகத்திலும், கழுத்திலும் தடவி, 15 நிமிடங்கள் கழித்து மென்மையாக மசாஜ் செய்தால் சரும நிற மாற்றத்தை உணர்வீர்கள். வாரம் ஒரு முறை இதைச் செய்யலாம்.
ரோஜா பூ பேஸ் பேக்:
தேவையானவை:
ரோஜா பூ - 1
பால் - 1 டீஸ்பூன்
கோதுமைத் தவிடு - 1 டீஸ்பூன்
முதலில் ரோஜா பூவின் இதழை நன்றாக அரைத்துக் கொள்ளவும். பின்பு அதனுடன் கோதுமைத் தவிடு, பால் கலந்து நன்றாக அரைக்கவும். இந்தக் கலவையை முகத்தில் பூசி மசாஜ் செய்யவும். பின் 15 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவினால் முகம் பொலிவு அடையும்.
செம்பருத்தி பூ பேஸ் பேக்:
தேவையானவை:
செம்பருத்தி பூ - 1
தயிர் - 1 டீஸ்பூன்
முல்தானி மெட்டி - 2 டீஸ்பூன்
ரோஜா பூ - 1
முதலில் ரோஜா மற்றும் செம்பருத்தி இதழ்களை சேர்த்து அரைத்துக்கொள்ளவும். பின்பு அதில் தயிர் மற்றும் முல்தானி மெட்டி கலந்து முகத்தில் தடவவும். 20 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரால் கழுவினால் முகம் மிருதுவாகும். கரும்புள்ளிகள், அழுக்குகள் நீங்கி ‘பளிச்’ என்று மாறும்.
மல்லிகை பேஸ் பேக்:
தேவையானவை:
மல்லிகைப்பூ இதழ்கள் - கால் கப்
கெட்டித் தயிர் - கால் கப்
இரண்டையும் தண்ணீர் சேர்க்காமல் மிக்சியில் நன்றாக அரைத்துக்கொள்ளவும். அதை முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் பூசவும். 20 நிமிடங்கள் கழித்து நீரால் கழுவவும். வறண்ட சருமம் கொண்டவர்களுக்கு இந்த பேஸ் பேக் சிறந்தது.
பட்டுச்சோலைகளை தோய்ப்பது, காய வைப்பது, மடிப்பது என்று ஒவ்வொன்றையும் கவனமாக கருத்தோடு செய்தால் தான் பல வருடங்களுக்கு அச்சேலைகளை புதியது போல் பாதுகாத்து வைத்துக் கொள்ள முடியும்.
ஆசையாய் பார்த்து பார்த்து அதிக விலை கொடுத்து பட்டு சேலைகளை வாங்குகிறோம். திருமணம் போன்ற விசேஷங்களுக்குத்தான் அச்சேலைகளை நாம் உடுத்துகிறோம். எனவேதான் பட்டுச்சேலைகளை பராமரிப்பது என்பது மிகவும் முக்கியமான ஒன்றாகவே இருக்க வேண்டும். பட்டுச்சேலை பராமரிப்பது என்பதே ஒரு கலைதான். அவற்றை தோய்ப்பது, காய வைப்பது, மடிப்பது என்று ஒவ்வொன்றையும் கவனமாக கருத்தோடு செய்தால் தான் பல வருடங்களுக்கு அச்சேலைகளை புதியதுபோல் பாதுகாத்து வைத்துக் கொள்ள முடியும்.
புடவையை அப்படியே மடித்து வைக்காமல் ஒரு காட்டன் துணியில் சுற்றி வைக்க வேண்டும். புடவையை கடையில் போட்டு கொடுக்கும் அட்டை பெட்டியில் வைத்திருக்கக்கூடாது. அதேபோல் ஹேங்கர்களில் தொங்க விடவும் கூடாது. அப்படி செய்தால் நாளாவட்டத்தில் இழைகள் விலகி துணி பாழாகி விடும்.
நீண்ட காலங்களுக்கு அடிக்கடி உபயோகிக்காமல் வைத்திருக்கும் புடவைகளை ஆறு மாதங்களுக்கு ஒரு முறையாவது வெயிலில் கொஞ்ச நேரம் காய வைத்து மடித்து வைக்க வேண்டும். இதனால் அதன் நிறமும் பளபளப்பும் பாதுகாக்கப்படும். அயர்ன் செய்த பட்டுப்புடவையை ஒரே மாதிரி மடிப்புடன் நீண்ட நாட்கள் வைத்திருந்தால் மடிப்பு உள்ள இடங்களில் கிழிந்துவிடும். எனவே புடவையை சுருட்டி வைப்பதோ, மாற்றி மடித்து வைப்பதோ வேண்டும்.
சரிகை அதிகமுள்ள புடவையாக இருந்தால் ஜரிகை உட்புறம் இருக்குமாறு மடித்து வைக்க வேண்டும். இல்லையென்றால் ஜரிகையின் உலோகம் காற்று பட்டு மங்கிவிடும். பட்டு புடவைகளை உடுத்தி முடித்த உடன் ஒவ்வொரு முறையும் தோய்க்க வேண்டிய அவசியமில்லை. நன்றாக காற்றாட போட்டு வைத்து மடித்து வைக்கலாம். ட்ரை க்ளினிங் கொடுத்து வாங்கி வைத்துக் கொள்வதும் சிறந்தது. வீட்டில் துவைப்பதை முடிந்தவரை தவிர்ப்பது ஜரிகை அதிகமுள்ள புடவைகளுக்கு ஒன்றிற்கு மேற்பட்ட நிறங்கள் கொண்ட புடவைகளுக்கும் நல்லது.
அப்படியே வீட்டில் துவைப்பதாக இருந்தால் தலைக்கு போடும் ஷாம்பு, பாடி வாஷ் அல்லது கடலைமாவு போட்டு லேசாக கசக்கி நிறைய நீர்விட்டு அலசி நிழலில் காய வைக்க வேண்டும். உடுத்துவதற்கு முன்பு அயர்ன் செய்துக் கொள்வதும் நல்லது. கடலை மாவு அல்லது பயத்தம் மாவு போட்டு தோய்த்தால் நிறைய தண்ணீர் விட்டு அலச வேண்டும். இப்படி தோய்க்கும் புடவைகள் சற்று மினுமினுப்பாகவும், மொறமொறவென்றும் இருக்கும்.
பூச்சி வராமல் இருப்பதற்கு ரசக்கற்பூரம் (நேப்தலின் பால்ஸ்) போன்றவைகளை பட்டுச் சேலை வைக்கும் கப்போர்டில் போட்டு வைக்க வேண்டும். வேப்பிலைகளை கூட போட்டு வைக்கலாம். பட்டுப்புடவையில் எண்ணெய் பட்டுவிட்டால் டேல்கம் பவுடர் உலர்ந்த கோதுமை அல்லது கடலை மாவை அதன் மீது தேய்த்து வைத்து பிறகு மென்மையான டிட்டர்ஜென்ட் கொண்ட சோப் அல்லது ஷாம்பு போட்டு அலசி விடலாம்.
ஜரிகை அதிகமுள்ள புடவைகளுக்கு சாரி ஃபால் தைப்பது நல்லது. பட்டு ப்ளவுஸ் அணியும்போது வியர்வையை உறிஞ்சும் ஸ்வெட் பேட்டை உபயோகிப்பது ப்ளவுஸின் ஆயுளை அதிகரிக்க உதவும்.
புடவையை அப்படியே மடித்து வைக்காமல் ஒரு காட்டன் துணியில் சுற்றி வைக்க வேண்டும். புடவையை கடையில் போட்டு கொடுக்கும் அட்டை பெட்டியில் வைத்திருக்கக்கூடாது. அதேபோல் ஹேங்கர்களில் தொங்க விடவும் கூடாது. அப்படி செய்தால் நாளாவட்டத்தில் இழைகள் விலகி துணி பாழாகி விடும்.
நீண்ட காலங்களுக்கு அடிக்கடி உபயோகிக்காமல் வைத்திருக்கும் புடவைகளை ஆறு மாதங்களுக்கு ஒரு முறையாவது வெயிலில் கொஞ்ச நேரம் காய வைத்து மடித்து வைக்க வேண்டும். இதனால் அதன் நிறமும் பளபளப்பும் பாதுகாக்கப்படும். அயர்ன் செய்த பட்டுப்புடவையை ஒரே மாதிரி மடிப்புடன் நீண்ட நாட்கள் வைத்திருந்தால் மடிப்பு உள்ள இடங்களில் கிழிந்துவிடும். எனவே புடவையை சுருட்டி வைப்பதோ, மாற்றி மடித்து வைப்பதோ வேண்டும்.
சரிகை அதிகமுள்ள புடவையாக இருந்தால் ஜரிகை உட்புறம் இருக்குமாறு மடித்து வைக்க வேண்டும். இல்லையென்றால் ஜரிகையின் உலோகம் காற்று பட்டு மங்கிவிடும். பட்டு புடவைகளை உடுத்தி முடித்த உடன் ஒவ்வொரு முறையும் தோய்க்க வேண்டிய அவசியமில்லை. நன்றாக காற்றாட போட்டு வைத்து மடித்து வைக்கலாம். ட்ரை க்ளினிங் கொடுத்து வாங்கி வைத்துக் கொள்வதும் சிறந்தது. வீட்டில் துவைப்பதை முடிந்தவரை தவிர்ப்பது ஜரிகை அதிகமுள்ள புடவைகளுக்கு ஒன்றிற்கு மேற்பட்ட நிறங்கள் கொண்ட புடவைகளுக்கும் நல்லது.
அப்படியே வீட்டில் துவைப்பதாக இருந்தால் தலைக்கு போடும் ஷாம்பு, பாடி வாஷ் அல்லது கடலைமாவு போட்டு லேசாக கசக்கி நிறைய நீர்விட்டு அலசி நிழலில் காய வைக்க வேண்டும். உடுத்துவதற்கு முன்பு அயர்ன் செய்துக் கொள்வதும் நல்லது. கடலை மாவு அல்லது பயத்தம் மாவு போட்டு தோய்த்தால் நிறைய தண்ணீர் விட்டு அலச வேண்டும். இப்படி தோய்க்கும் புடவைகள் சற்று மினுமினுப்பாகவும், மொறமொறவென்றும் இருக்கும்.
பூச்சி வராமல் இருப்பதற்கு ரசக்கற்பூரம் (நேப்தலின் பால்ஸ்) போன்றவைகளை பட்டுச் சேலை வைக்கும் கப்போர்டில் போட்டு வைக்க வேண்டும். வேப்பிலைகளை கூட போட்டு வைக்கலாம். பட்டுப்புடவையில் எண்ணெய் பட்டுவிட்டால் டேல்கம் பவுடர் உலர்ந்த கோதுமை அல்லது கடலை மாவை அதன் மீது தேய்த்து வைத்து பிறகு மென்மையான டிட்டர்ஜென்ட் கொண்ட சோப் அல்லது ஷாம்பு போட்டு அலசி விடலாம்.
ஜரிகை அதிகமுள்ள புடவைகளுக்கு சாரி ஃபால் தைப்பது நல்லது. பட்டு ப்ளவுஸ் அணியும்போது வியர்வையை உறிஞ்சும் ஸ்வெட் பேட்டை உபயோகிப்பது ப்ளவுஸின் ஆயுளை அதிகரிக்க உதவும்.
வீட்டின் சமையலறையில் உள்ள பொருட்களை கொண்டே எண்ணெய் சருமத்திற்கு எளிமையான முறையில் தீர்வு கண்டுவிடலாம். அதற்கு செய்ய வேண்டிய பேஸ் பேக் உங்கள் பார்வைக்கு...
குளிர் காலத்தில் சரும பராமரிப்புக்கு கூடுதல் நேரமும், கவனமும் செலுத்த வேண்டியிருக்கும். எண்ணெய் சருமம் கொண்டவர்கள்தான் அதிக அவஸ்தைகளை அனுபவிக்க நேரிடும். ஏனெனில் முகத்தில் படியும் எண்ணெய் பசை சரும துளைகளை அடைத்துவிடும். இறுதியில் முகப்பரு பிரச்சினையை உண்டாக்கிவிடும். சருமத்திற்கு ஒவ்வாத ரசாயனம் அதிகம் கலந்த அழகு சாதன பொருட்களை உபயோகித்தால் பாதிப்பு அதிகமாகிவிடும். வீட்டின் சமையலறையில் உள்ள பொருட்களை கொண்டே எண்ணெய் சருமத்திற்கு எளிமையான முறையில் தீர்வு கண்டுவிடலாம். அதற்கு செய்ய வேண்டிய பேஸ் பேக்குகள் உங்கள் பார்வைக்கு...
கடலை மாவு-மஞ்சள்:
தேவையான பொருட்கள்:
கடலை மாவு -1 கப்
பொடித்த மஞ்சள்: சிறிதளவு
பால்- சிறிதளவு
செய்முறை:
மஞ்சளை நன்கு தூளாக்கிக்கொள்ளவும். கடலை மாவு, மஞ்சளுடன் பால் சேர்த்து பசை போல் குழப்பிக்கொள்ளவும். இந்த கலவையை முகம், கழுத்து பகுதியில் பூசிவிட்டு 20 நிமிடங்கள் உலர விடவும். பின்பு வெதுவெதுப்பான நீரில் டவலை முக்கி முகத்தில் படிந்திருக்கும் பேஸ் பேக்கை துடைத்தெடுக்கவும். பின்பு முகம் மற்றும் கழுத்து பகுதியை நன்கு கழுவவும். பின்னர் ஜெல் அல்லது ஈரப்பதமான மாய்ஸ்சுரைசர் பயன்படுத்தவும். குளிர் காலத்தில் இரண்டு நாட்களுக்கு ஒருமுறை இவ்வாறு செய்து வரலாம். எண்ணெய் பசை நீங்கி சருமம் பொலிவுடன் காட்சி தரும்.
கடலை மாவு-மஞ்சள்:
தேவையான பொருட்கள்:
கடலை மாவு -1 கப்
பொடித்த மஞ்சள்: சிறிதளவு
பால்- சிறிதளவு
செய்முறை:
மஞ்சளை நன்கு தூளாக்கிக்கொள்ளவும். கடலை மாவு, மஞ்சளுடன் பால் சேர்த்து பசை போல் குழப்பிக்கொள்ளவும். இந்த கலவையை முகம், கழுத்து பகுதியில் பூசிவிட்டு 20 நிமிடங்கள் உலர விடவும். பின்பு வெதுவெதுப்பான நீரில் டவலை முக்கி முகத்தில் படிந்திருக்கும் பேஸ் பேக்கை துடைத்தெடுக்கவும். பின்பு முகம் மற்றும் கழுத்து பகுதியை நன்கு கழுவவும். பின்னர் ஜெல் அல்லது ஈரப்பதமான மாய்ஸ்சுரைசர் பயன்படுத்தவும். குளிர் காலத்தில் இரண்டு நாட்களுக்கு ஒருமுறை இவ்வாறு செய்து வரலாம். எண்ணெய் பசை நீங்கி சருமம் பொலிவுடன் காட்சி தரும்.
தூங்கச் செல்வதற்கு முன்பு மஸ்காரா பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். மற்ற ஒப்பனைகளோடு சேர்த்து மஸ்காராவையும் முழுவதுமாக நீக்கிய பின்பே தூங்க வேண்டும்.
முகத்திற்கு உண்மையான அழகைத்தருவது கண்கள். இதன் காரணமாகவே முகத்துக்கு ஒப்பனை செய்யும் போது கண்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பார்கள் அந்த காலத்து பெண்கள். கண்களுக்கு இயற்கையாக வீட்டில் தயாரித்த மையை தீட்டி அழகு பார்த்தார்கள். இப்போது கண்களை அழகுபடுத்த விதவிதமான அழகு சாதனப்பொருட்கள் வந்துவிட்டன. ஐ லைனர், காஜல், மஸ்காரா போன்ற பல பொருட்களை பெண்கள் உபயோகப்படுத்துகின்றனர்.
கண்களை அழகுப்படுத்துவதில் மஸ்காரா முக்கிய பங்கு வகிக்கிறது. எந்த ஒப்பனையும் இல்லாமல் வெளியே செல்பவர்கள் கண்களுக்கு மஸ்காரா மட்டும் பயன்படுத்தலாம். இது கண்களின் அழகை மேம்படுத்துவதன் மூலம் முகத்துக்கு கூடுதல் அழகை தரும். மஸ்காரா தீட்டுவதால் கண்கள் அகலமாகவும் பெரிதாகவும் காட்சி அளிக்கும்.
மஸ்காரா பல நிறங்களில் கிடைக்கும். நமது சரும நிறத்திற்கு ஏற்றவற்றை தேர்ந்தெடுப்பது நல்லது. நாம் அணியும் உடைகளின் நிறத்திற்கு தகுந்தவாறும் மஸ்காராவை தேர்ந்தெடுக்கலாம். கருப்பு மற்றும் பழுப்பு நிறங்கள் பெரும்பாலானோர் பயன்படுத்துவதாகும்.
மஸ்காரா தீட்டும் போது மேல்நோக்கி பார்த்தபடி மஸ்காரா தீட்டுவதற்கான குச்சியை கண் இமைக்கு நெருக்கமாக கொண்டு வர வேண்டும். கண்களை சிமிட்டாமல் இமை முடிகளுக்கு மஸ்காராவை தடவ வேண்டும். தீட்டிய பின்பு மெதுவாக மஸ்காரா குச்சியை எடுக்க வேண்டும். பின்னர் இமைகளை 30 நொடிகள் உலர வைக்க வேண்டும்.
மஸ்காரா தீட்டும் சமயத்தில் தண்ணீர் எண்ணெய் போன்ற பொருட்களை தொடக்கூடாது.
தூங்கச் செல்வதற்கு முன்பு மஸ்காரா பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். மற்ற ஒப்பனைகளோடு சேர்த்து மஸ்காராவையும் முழுவதுமாக நீக்கிய பின்பே தூங்க வேண்டும். இல்லையெனில் கண்களில் ஒவ்வாமை, இமைகளில் கொப்புளங்கள் போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம். மேலும் கண்களுக்கு பயன்படுத்தும் அழகுசாதனபொருட்கள் தரமானவையா? என்பதை உறுதி செய்த பிறகே பயன்படுத்த வேண்டும்.
கண்களை அழகுப்படுத்துவதில் மஸ்காரா முக்கிய பங்கு வகிக்கிறது. எந்த ஒப்பனையும் இல்லாமல் வெளியே செல்பவர்கள் கண்களுக்கு மஸ்காரா மட்டும் பயன்படுத்தலாம். இது கண்களின் அழகை மேம்படுத்துவதன் மூலம் முகத்துக்கு கூடுதல் அழகை தரும். மஸ்காரா தீட்டுவதால் கண்கள் அகலமாகவும் பெரிதாகவும் காட்சி அளிக்கும்.
மஸ்காரா பல நிறங்களில் கிடைக்கும். நமது சரும நிறத்திற்கு ஏற்றவற்றை தேர்ந்தெடுப்பது நல்லது. நாம் அணியும் உடைகளின் நிறத்திற்கு தகுந்தவாறும் மஸ்காராவை தேர்ந்தெடுக்கலாம். கருப்பு மற்றும் பழுப்பு நிறங்கள் பெரும்பாலானோர் பயன்படுத்துவதாகும்.
மஸ்காரா தீட்டும் போது மேல்நோக்கி பார்த்தபடி மஸ்காரா தீட்டுவதற்கான குச்சியை கண் இமைக்கு நெருக்கமாக கொண்டு வர வேண்டும். கண்களை சிமிட்டாமல் இமை முடிகளுக்கு மஸ்காராவை தடவ வேண்டும். தீட்டிய பின்பு மெதுவாக மஸ்காரா குச்சியை எடுக்க வேண்டும். பின்னர் இமைகளை 30 நொடிகள் உலர வைக்க வேண்டும்.
மஸ்காரா தீட்டும் சமயத்தில் தண்ணீர் எண்ணெய் போன்ற பொருட்களை தொடக்கூடாது.
தூங்கச் செல்வதற்கு முன்பு மஸ்காரா பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். மற்ற ஒப்பனைகளோடு சேர்த்து மஸ்காராவையும் முழுவதுமாக நீக்கிய பின்பே தூங்க வேண்டும். இல்லையெனில் கண்களில் ஒவ்வாமை, இமைகளில் கொப்புளங்கள் போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம். மேலும் கண்களுக்கு பயன்படுத்தும் அழகுசாதனபொருட்கள் தரமானவையா? என்பதை உறுதி செய்த பிறகே பயன்படுத்த வேண்டும்.
ஆரஞ்சு பழத்தில் வைட்டமின் C மற்றும் ஆண்டிஆக்ஸைட் அதிகளவு உள்ளதால் இவற்றின் தோலை முக அழகிற்கு பயன்படுத்தும் போது சருமம் பொலிவுடனும், வெண்மையாகவும் காணப்படும்.
அழகு குறிப்பு: 1
ஆரஞ்சு பழத்தோலை இனி தூக்கி எரியாமல் வெயிலில் நன்றாக காயவைத்து, பொடி செய்து வைத்துக்கொள்ளவும். இந்த ஆரஞ்சு பழத்தோல் பொடியை ஒரு ஸ்பூன் எடுத்து கொள்ளவும், பின்பு பாதாம் பருப்பையும் நன்றாக அரைத்து பொடி செய்து ஒரு ஸ்பூன் எடுத்து கொள்ளவும்.
இரண்டையும் ஒன்றாக கலந்து கொள்ளவும். பின்பு அதனுடன் இரண்டு ஸ்பூன் பசும்பால் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும். இந்த கலவையை முகத்தில் தடவி, நன்றாக மசாஜ் செய்து 10 நிமிடம் முதல் 15 நிமிடம் வரை முகத்தில் இந்த கலவையை வைத்திருந்து, பின்பு குளிர்ந்த நீரால் சருமத்தை கழுவ, சருமம் பொலிவுடனும், ஆரோக்கியமாகவும், வெண்மையாவும் காணப்படும்.
அழகு குறிப்பு: 2
ஆரஞ்சு பழத்தோலை காயவைத்து பொடி செய்து வைத்து கொள்ளவும். ஒரு பவுலில் இரண்டு ஸ்பூன் ஆரஞ்சு தோலை எடுத்துக்கொள்ளவும், அதனுடன் ஒரு ஸ்பூன் பசும்பால் மற்றும் ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் ஆகியவற்றை ஒன்றாக கலந்து, முகத்தில் தடவி மசாஜ் செய்து 20 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரால் முகத்தை கழுவவும்.
இந்த முறையை வாரத்தில் மூன்று முறை செய்து வந்தால், சருமத்தில் ஏற்படும் கரும்புள்ளிகள், எண்ணெய் பசை கொண்ட சருமம், மேடுபள்ளம் கொண்ட சருமம் மற்றும் பருக்கள் ஆகிய பிரச்சனைகளை சரி செய்யும். அதுமட்டும் இன்றி சருமத்தை எப்போதும் ஈரப்பதத்துடன் வைத்திருக்கும். இதனால் சருமம் எப்பொழுதும் பொலிவுடன் காணப்படும்.
அழகு குறிப்பு: 3
ஆரஞ்சு பழத்தோல் மற்றும் வேப்பிலை(ஆரஞ்சு தோல் பவுடர் பயன்கள்): ஆரஞ்சு தோலை அரைத்து கொள்ளவும். பின்பு வேப்பிலையை அரைத்து பேஸ்ட்டாக வைத்து கொள்ளவும்.
ஒரு ஸ்பூன் ஆரஞ்சு தோல், இரண்டு ஸ்பூன் வேப்பிலை பேஸ்ட் மற்றும் சிறிதளவு தேங்காய் எண்ணெய் ஆகியவற்றை ஒன்றாக கலந்து இந்த கலவையை சருமத்தில் தடவி மசாஜ் செய்து, 15 நிமிடம் வரை காத்திருந்து பின்பு குளிர்ந்த நீரால் சருமத்தை கழுவ வேண்டும்.
இவ்வாறு வாரத்தில் இரண்டு முறை செய்து வந்தால் சருமத்தில் ஏற்படும் எண்ணெய் பசை பிரச்சனை சரியாகும். மேலும் சருமத்தை எப்போதும் அழகாகவும் பொலிவுடனும் வைத்திட இந்த முறை மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இந்த முறையை வாரத்தில் இரண்டு அல்லது மூன்று முறை செய்து வரலாம்.
ஆரஞ்சு பழத்தோலை இனி தூக்கி எரியாமல் வெயிலில் நன்றாக காயவைத்து, பொடி செய்து வைத்துக்கொள்ளவும். இந்த ஆரஞ்சு பழத்தோல் பொடியை ஒரு ஸ்பூன் எடுத்து கொள்ளவும், பின்பு பாதாம் பருப்பையும் நன்றாக அரைத்து பொடி செய்து ஒரு ஸ்பூன் எடுத்து கொள்ளவும்.
இரண்டையும் ஒன்றாக கலந்து கொள்ளவும். பின்பு அதனுடன் இரண்டு ஸ்பூன் பசும்பால் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும். இந்த கலவையை முகத்தில் தடவி, நன்றாக மசாஜ் செய்து 10 நிமிடம் முதல் 15 நிமிடம் வரை முகத்தில் இந்த கலவையை வைத்திருந்து, பின்பு குளிர்ந்த நீரால் சருமத்தை கழுவ, சருமம் பொலிவுடனும், ஆரோக்கியமாகவும், வெண்மையாவும் காணப்படும்.
அழகு குறிப்பு: 2
ஆரஞ்சு பழத்தோலை காயவைத்து பொடி செய்து வைத்து கொள்ளவும். ஒரு பவுலில் இரண்டு ஸ்பூன் ஆரஞ்சு தோலை எடுத்துக்கொள்ளவும், அதனுடன் ஒரு ஸ்பூன் பசும்பால் மற்றும் ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் ஆகியவற்றை ஒன்றாக கலந்து, முகத்தில் தடவி மசாஜ் செய்து 20 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரால் முகத்தை கழுவவும்.
இந்த முறையை வாரத்தில் மூன்று முறை செய்து வந்தால், சருமத்தில் ஏற்படும் கரும்புள்ளிகள், எண்ணெய் பசை கொண்ட சருமம், மேடுபள்ளம் கொண்ட சருமம் மற்றும் பருக்கள் ஆகிய பிரச்சனைகளை சரி செய்யும். அதுமட்டும் இன்றி சருமத்தை எப்போதும் ஈரப்பதத்துடன் வைத்திருக்கும். இதனால் சருமம் எப்பொழுதும் பொலிவுடன் காணப்படும்.
அழகு குறிப்பு: 3
ஆரஞ்சு பழத்தோல் மற்றும் வேப்பிலை(ஆரஞ்சு தோல் பவுடர் பயன்கள்): ஆரஞ்சு தோலை அரைத்து கொள்ளவும். பின்பு வேப்பிலையை அரைத்து பேஸ்ட்டாக வைத்து கொள்ளவும்.
ஒரு ஸ்பூன் ஆரஞ்சு தோல், இரண்டு ஸ்பூன் வேப்பிலை பேஸ்ட் மற்றும் சிறிதளவு தேங்காய் எண்ணெய் ஆகியவற்றை ஒன்றாக கலந்து இந்த கலவையை சருமத்தில் தடவி மசாஜ் செய்து, 15 நிமிடம் வரை காத்திருந்து பின்பு குளிர்ந்த நீரால் சருமத்தை கழுவ வேண்டும்.
இவ்வாறு வாரத்தில் இரண்டு முறை செய்து வந்தால் சருமத்தில் ஏற்படும் எண்ணெய் பசை பிரச்சனை சரியாகும். மேலும் சருமத்தை எப்போதும் அழகாகவும் பொலிவுடனும் வைத்திட இந்த முறை மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இந்த முறையை வாரத்தில் இரண்டு அல்லது மூன்று முறை செய்து வரலாம்.
ரசாயனங்கள் சேர்க்காமல் இயற்கையான பொருட்களைக் கொண்டு எண்ணெய் சருமம், வறண்ட சருமம் என அனைத்து சருமத்திற்கும் ஏற்ற வகையில், பக்க விளைவு ஏற்படுத்தாத ‘மாய்ஸ்சுரைசர்’ தயாரிப்பதைப் பற்றி பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
கிரீன் டீ - 3 தேக்கரண்டி
பாதாம் எண்ணெய் - 1 தேக்கரண்டி
கற்றாழை ஜெல் - 3 தேக்கரண்டி
தேன் மெழுகு - 2 தேக்கரண்டி
கிரீன் டீ எசென்ஷியல் எண்ணெய் - 1 தேக்கரண்டி
செய்முறை:
ஒரு சிறிய பாத்திரத்தில் பாதாம் எண்ணெய், தேன் மெழுகு இரண்டையும் கலந்து, கொதிக்கும் நீரின் மேல் வைக்கவும். தேன் மெழுகு உருகியதும் சிறிது குளிரவைத்து, கிரீன் டீ, கற்றாழை ஜெல், கிரீன் டீ எசென்ஷியல் எண்ணெய் ஆகியவற்றை ஒன்றன்பின் ஒன்றாக சேர்த்து கிரீம் பதம் வரும்வரை கலந்து குளிர்சாதனப் பெட்டியில் குளிர வைக்கவும்.
இதனை தினமும் அல்லது வாரத்தில் 5 நாட்கள் போட்டு வந்தால் நல்ல மாற்றம் தெரிவதை காணலாம்.
கிரீன் டீ, கற்றாழை ஆகியவை வெயிலால் வறண்ட சருமத்தைக் குளிர்ச்சியாக்கும் தன்மை கொண்டவை. தேன் மெழுகு சருமத்தை மென்மையாக மாற்றும். பாதாம் எண்ணெய் சருமத்தைப் பொலிவாக்கும்.
கிரீன் டீ - 3 தேக்கரண்டி
பாதாம் எண்ணெய் - 1 தேக்கரண்டி
கற்றாழை ஜெல் - 3 தேக்கரண்டி
தேன் மெழுகு - 2 தேக்கரண்டி
கிரீன் டீ எசென்ஷியல் எண்ணெய் - 1 தேக்கரண்டி
செய்முறை:
ஒரு சிறிய பாத்திரத்தில் பாதாம் எண்ணெய், தேன் மெழுகு இரண்டையும் கலந்து, கொதிக்கும் நீரின் மேல் வைக்கவும். தேன் மெழுகு உருகியதும் சிறிது குளிரவைத்து, கிரீன் டீ, கற்றாழை ஜெல், கிரீன் டீ எசென்ஷியல் எண்ணெய் ஆகியவற்றை ஒன்றன்பின் ஒன்றாக சேர்த்து கிரீம் பதம் வரும்வரை கலந்து குளிர்சாதனப் பெட்டியில் குளிர வைக்கவும்.
இதனை தினமும் அல்லது வாரத்தில் 5 நாட்கள் போட்டு வந்தால் நல்ல மாற்றம் தெரிவதை காணலாம்.
கிரீன் டீ, கற்றாழை ஆகியவை வெயிலால் வறண்ட சருமத்தைக் குளிர்ச்சியாக்கும் தன்மை கொண்டவை. தேன் மெழுகு சருமத்தை மென்மையாக மாற்றும். பாதாம் எண்ணெய் சருமத்தைப் பொலிவாக்கும்.
குங்குமப்பூ, வெயிலால் ஏற்படும் சிறு சிறு கட்டிகளை குணமாக்கும், சரும சுருக்கங்களை நீக்கும். மேலும் புற ஊதாக் கதிர்களில் இருந்து சருமத்தைப் பாதுகாக்கும்.
தேவையான பொருட்கள்
குங்குமப்பூ - 1 தேக்கரண்டி
பன்னீரில் ஊறவைத்த பாதாம் - 4
கற்றாழை ஜெல் - 2 தேக்கரண்டி
கிளிசரின் - 1 தேக்கரண்டி
வைட்டமின் ஈ எண்ணெய் - 1 தேக்கரண்டி
செய்முறை:
ஊறவைத்த பாதாமை தோல் நீக்கி, சிறிது பன்னீர் சேர்த்து அரைத்து வடிகட்டி பால் எடுத்துக் கொள்ளவும். ஒரு சிறிய பாத்திரத்தில் கற்றாழை ஜெல், குங்குமப்பூ, வைட்டமின் ஈ எண்ணெய் மற்றும் கிளிசரின் சேர்த்துக் கலந்து ஒரு சிறிய கண்ணாடி குமிழில் வைக்கவும்.
இந்த மாய்ஸ்சுரைசரை தினமும் போட்டு வந்தால் சருமத்தில் ஏற்படும் அனைத்து பிரச்சனைகளும் படிப்படியாக தீரும்.
குங்குமப்பூ, வெயிலால் ஏற்படும் சிறு சிறு கட்டிகளை குணமாக்கும், சரும சுருக்கங்களை நீக்கும். மேலும் புற ஊதாக் கதிர்களில் இருந்து சருமத்தைப் பாதுகாக்கும். கிளிசரின் மற்றும் வைட்டமின் ஈ எண்ணெய் சருமத்தை நீரேற்றத்துடன் வைத்திருக்க முக்கியப் பங்காற்றும்.
வறண்ட சருமத்தை குணப்படுத்துவதில் செம்பருத்திப்பூ மற்றும் ரோஜா முக்கியப் பங்காற்றும். கற்றாழை ஜெல், ஆலிவ் எண்ணெய், தேங்காய் எண்ணெய் உடலை ஈரப்பதத்துடன் வைக்க உதவும்.
தேவையான பொருட்கள்
செம்பருத்திப்பூ தூள் - 2 தேக்கரண்டி
ரோஜா பொடி - 1 தேக்கரண்டி
கற்றாழை ஜெல் - 2 தேக்கரண்டி
ஆலிவ் எண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய் - 1 தேக்கரண்டி
செய்முறை:
சிறிய பாத்திரத்தில் செம்பருத்திப்பூ தூள், ரோஜா பொடி மற்றும் கற்றாழை ஜெல் சேர்த்து கலக்கவும். பின்பு ஆலிவ் எண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய் சேர்த்து நன்றாகக் கலந்து கண்ணாடி குமிழில் மூடி வைக்கவும்.
இந்த மாய்ஸ்சுரைசரை தினமும் முகத்தில் போட்டு வந்தால் வறண்ட சருமம் படிப்படியாக சரியாகும்.
வறண்ட சருமத்தை குணப்படுத்துவதில் செம்பருத்திப்பூ மற்றும் ரோஜா முக்கியப் பங்காற்றும். கற்றாழை ஜெல், ஆலிவ் எண்ணெய், தேங்காய் எண்ணெய் உடலை ஈரப்பதத்துடன் வைக்க உதவும்.
செம்பருத்திப்பூ தூள் - 2 தேக்கரண்டி
ரோஜா பொடி - 1 தேக்கரண்டி
கற்றாழை ஜெல் - 2 தேக்கரண்டி
ஆலிவ் எண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய் - 1 தேக்கரண்டி
செய்முறை:
சிறிய பாத்திரத்தில் செம்பருத்திப்பூ தூள், ரோஜா பொடி மற்றும் கற்றாழை ஜெல் சேர்த்து கலக்கவும். பின்பு ஆலிவ் எண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய் சேர்த்து நன்றாகக் கலந்து கண்ணாடி குமிழில் மூடி வைக்கவும்.
இந்த மாய்ஸ்சுரைசரை தினமும் முகத்தில் போட்டு வந்தால் வறண்ட சருமம் படிப்படியாக சரியாகும்.
வறண்ட சருமத்தை குணப்படுத்துவதில் செம்பருத்திப்பூ மற்றும் ரோஜா முக்கியப் பங்காற்றும். கற்றாழை ஜெல், ஆலிவ் எண்ணெய், தேங்காய் எண்ணெய் உடலை ஈரப்பதத்துடன் வைக்க உதவும்.
பொதுவாக ஆண்களுக்கு அலுவலகம் போட்டுச் செல்லவும் வீட்டில் போட்டுக் கொள்ளவும் விழாக்களுக்கு அணிந்து கொள்ளவும் ஏற்ற ஷர்ட்களாக லினென் இருப்பது குறிப்பிடத்தக்கது.
குளிர்காலம் முடியத் தொடங்கி வரும் வசந்த காலம் மற்றும் வெயில் காலம் முழுவதும் நமக்கு அணிந்துகொள்ள வசதியாக இருக்கும் ஓர் துணி வகைதான் லினென். லினென் துணிகள் பார்ப்பதற்கு அழகாகவும் கம்பீரமான தோற்றத்தை கொடுக்க கூடியதாகவும் நளினமாகவும் மென்மையாகவும் இருக்கக் கூடியவை. பொதுவாக ஆண்களுக்கு அலுவலகம் போட்டுச் செல்லவும் வீட்டில் போட்டுக் கொள்ளவும் விழாக்களுக்கு அணிந்து கொள்ளவும் ஏற்ற ஷர்ட்களாக லினென் இருப்பது குறிப்பிடத்தக்கது. லினென் துணிகளின் நன்மைகளைப் பற்றி கீழ்வருமாறு பார்ப்போம்.
லினனின் நீடித்து உழைக்கும் தன்மை:
இயற்கையாகக் கிடைக்கும் தாவர இழைகளில் மிகவும் வலுவானது லினென். துணியை துவைக்க துவைக்க மேலும் இறுகி மேலும் வலுவாக மாறுகிறது. இந்த இழைகள் கிமு 8000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே உபயோகத்தில் இருந்து வந்ததாக தெரிகிறது. எகிப்திய கரன்சி லினென் இழைகளை கொண்டு பயன்படுத்தப்பட்டது இதற்கு சான்றாகும்.
லினென் இழைகள் சுற்றுச்சூழலுக்கு உகந்தது:
ஆளி (பிளாக்ஸ்) செடிகளின் தாள்களில் இருந்து தான் லினென் இழைகள் தயாரிக்கப்படுகின்றன. இந்த ஆளி செடிகள் சுமாரான மண்களிலும், எந்த விதமான உரமும் இன்றி வளரக்கூடியதும், இதற்கு அதிகமான தண்ணீரும் தேவையில்லை. பருத்தி செடிகளை விட இதற்கு தண்ணீர் குறைவாக தேவைப்படுவதுடன் பராமரிப்பும் குறைவாகவே தேவைப்படும். இந்த ஆளி செடியின் எல்லா பகுதிகளுமே உபயோகப்படுத்தப்படுகிறது. இந்த ஆளி விதைகள் நம் உடலுக்கு ஆண்டி ஆக்சிடென்டாகவும், மலமிளக்கியாகவும் பயன்படுகிறது. இந்த ஆளி விதைகளில் இருந்து எடுக்கப்படும் எண்ணெய் பல உணவு தயாரிப்பு நிறுவனங்களில் பயன்படுத்தப்படுகிறது. மேலும் இந்த லிெனன் இழைகள் இயற்கையாய் மக்கக்கூடிய தன்மை கொண்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.
லினன் துணிகள் காற்றோட்டம் கொண்டவை:
லினன் துணிகள் காற்றோட்டம் கொண்டவையாகவும் ஈரப்பதத்தை உறிந்துக் கொள்ளக் கூடியதாகவும் இருக்கிறது. இந்த ஆடைகளை நாம் அணியும் போது நம் உடலுக்கு காற்றோட்டம் நன்றாக கிடைக்கிறது என்பதால் நம் உடலிலிருந்து வெளியாகும் வெப்பம் எளிதாக இவ்வாறு கடந்துவிடும். அதேபோல் வெளியிலிருந்த காற்றும் ஆடைக்குள் நுழைந்து உடலை தழுவும் பொது குளிர்ச்சியாக இருக்கும். இந்த துணிகள் காற்றிலுள்ள ஈரப்பதத்தை அதிக அளவில் உறிந்து கொள்ளக் கூடியதாய் இருந்தாலும் ஈரமாக உணரச் செய்வதில்லை. எனவே இந்த துணி நல்ல வெயில் காலங்களிலும் நாம் வியர்வைக் கறையின்றி அணிந்து கொள்ள வசதியாக இருக்கிறது.
லினென் துணிகளில் பூச்சி அண்டுவதில்லை:
இயற்கையான லினென் இழைகள் பூச்சிகள் மற்றும் பூஞ்சைகளை எதிர்க்கும் ஆற்றல் கொண்டதாக இருக்கிறது. எனவே நாம் நீண்ட காலம் உபயோகிக்காமல் வைத்திருந்தாலும் புதிது போலவே தோற்றம் அளிப்பதாக இருக்கிறது. துர்நாற்றமும் இதிலிருந்து வெளிப்படுவதில்லை.
லினென் துணிகள் விலை உயர்ந்தவை:
ஆளி செடிகளின் தாள்கள் தரையிலிருந்து முழு நீளத்துடன் அறுந்து விடாமல் உருவப்படுகிறது. பிறகு இந்தச் செடிகள் வயல்களில் பரப்பி வைக்கப்பட்டு காய வைக்கப்படுகிறது. அப்படிக் காய வைக்கும்பொழுது இந்த இழைகள் மென்மையாக மாறுகிறது. பிறகு இந்தத் தாள்கள் சேகரிக்கப்பட்டு மெஷினில் சுருட்டப்பட்டு மூன்று மாதங்களுக்கு மேலாக சேமிக்கப்படுகிறது. இந்த மூன்று மாத காலத்தில் இந்த இழைகள் மேலும் மென்மையாக மாறியபின் அவை முறுக்கப்பட்டு பின்பு சுழலச் செய்யும் தொழில்நுட்பம் மூலம் இழைகளாக பிரிக்கப்படுகின்றது. ஆளி செடியிலிருந்து இழைகளை பிரிக்கும் தொழில்நுட்பம் சற்றே சற்று கடினமானதாக இருப்பதால் இந்த துணிகள் விலை உயர்ந்ததாக இருக்கிறது.
லினன் துணிகளில் ஆண்கள் பெண்கள் அணிந்து கொள்ளும் வகையில் ஷாட்டுகள், டீ சர்ட்கள், ஜாக்கெட்டுகள், டாப் என்று பலவித ஆடைகள் உள்ளன. இவை அணிந்து கொள்பவர்களுக்கு வசதியாக மற்றும் பார்ப்பதற்கு கம்பீரமாகவும் அழகாகவும் தோற்றமளிக்க உதவுகிறது. லினென் துணிகளில் புடவைகளும் கூட இந்திய சந்தைகளில் அதிக அளவில் கிடைக்கிறது. இந்த புடவைகளும் நீடித்து உழைக்க கூடியதாகவும் லேசான ஒரு விரைப்பு தன்மை கொண்டதாகவும் கஞ்சி போடாமலே அணியக் கூடியதாகவும் மிகவும் கவர்ச்சியாகவும் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
லினனின் நீடித்து உழைக்கும் தன்மை:
இயற்கையாகக் கிடைக்கும் தாவர இழைகளில் மிகவும் வலுவானது லினென். துணியை துவைக்க துவைக்க மேலும் இறுகி மேலும் வலுவாக மாறுகிறது. இந்த இழைகள் கிமு 8000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே உபயோகத்தில் இருந்து வந்ததாக தெரிகிறது. எகிப்திய கரன்சி லினென் இழைகளை கொண்டு பயன்படுத்தப்பட்டது இதற்கு சான்றாகும்.
லினென் இழைகள் சுற்றுச்சூழலுக்கு உகந்தது:
ஆளி (பிளாக்ஸ்) செடிகளின் தாள்களில் இருந்து தான் லினென் இழைகள் தயாரிக்கப்படுகின்றன. இந்த ஆளி செடிகள் சுமாரான மண்களிலும், எந்த விதமான உரமும் இன்றி வளரக்கூடியதும், இதற்கு அதிகமான தண்ணீரும் தேவையில்லை. பருத்தி செடிகளை விட இதற்கு தண்ணீர் குறைவாக தேவைப்படுவதுடன் பராமரிப்பும் குறைவாகவே தேவைப்படும். இந்த ஆளி செடியின் எல்லா பகுதிகளுமே உபயோகப்படுத்தப்படுகிறது. இந்த ஆளி விதைகள் நம் உடலுக்கு ஆண்டி ஆக்சிடென்டாகவும், மலமிளக்கியாகவும் பயன்படுகிறது. இந்த ஆளி விதைகளில் இருந்து எடுக்கப்படும் எண்ணெய் பல உணவு தயாரிப்பு நிறுவனங்களில் பயன்படுத்தப்படுகிறது. மேலும் இந்த லிெனன் இழைகள் இயற்கையாய் மக்கக்கூடிய தன்மை கொண்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.
லினன் துணிகள் காற்றோட்டம் கொண்டவை:
லினன் துணிகள் காற்றோட்டம் கொண்டவையாகவும் ஈரப்பதத்தை உறிந்துக் கொள்ளக் கூடியதாகவும் இருக்கிறது. இந்த ஆடைகளை நாம் அணியும் போது நம் உடலுக்கு காற்றோட்டம் நன்றாக கிடைக்கிறது என்பதால் நம் உடலிலிருந்து வெளியாகும் வெப்பம் எளிதாக இவ்வாறு கடந்துவிடும். அதேபோல் வெளியிலிருந்த காற்றும் ஆடைக்குள் நுழைந்து உடலை தழுவும் பொது குளிர்ச்சியாக இருக்கும். இந்த துணிகள் காற்றிலுள்ள ஈரப்பதத்தை அதிக அளவில் உறிந்து கொள்ளக் கூடியதாய் இருந்தாலும் ஈரமாக உணரச் செய்வதில்லை. எனவே இந்த துணி நல்ல வெயில் காலங்களிலும் நாம் வியர்வைக் கறையின்றி அணிந்து கொள்ள வசதியாக இருக்கிறது.
லினென் துணிகளில் பூச்சி அண்டுவதில்லை:
இயற்கையான லினென் இழைகள் பூச்சிகள் மற்றும் பூஞ்சைகளை எதிர்க்கும் ஆற்றல் கொண்டதாக இருக்கிறது. எனவே நாம் நீண்ட காலம் உபயோகிக்காமல் வைத்திருந்தாலும் புதிது போலவே தோற்றம் அளிப்பதாக இருக்கிறது. துர்நாற்றமும் இதிலிருந்து வெளிப்படுவதில்லை.
லினென் துணிகள் விலை உயர்ந்தவை:
ஆளி செடிகளின் தாள்கள் தரையிலிருந்து முழு நீளத்துடன் அறுந்து விடாமல் உருவப்படுகிறது. பிறகு இந்தச் செடிகள் வயல்களில் பரப்பி வைக்கப்பட்டு காய வைக்கப்படுகிறது. அப்படிக் காய வைக்கும்பொழுது இந்த இழைகள் மென்மையாக மாறுகிறது. பிறகு இந்தத் தாள்கள் சேகரிக்கப்பட்டு மெஷினில் சுருட்டப்பட்டு மூன்று மாதங்களுக்கு மேலாக சேமிக்கப்படுகிறது. இந்த மூன்று மாத காலத்தில் இந்த இழைகள் மேலும் மென்மையாக மாறியபின் அவை முறுக்கப்பட்டு பின்பு சுழலச் செய்யும் தொழில்நுட்பம் மூலம் இழைகளாக பிரிக்கப்படுகின்றது. ஆளி செடியிலிருந்து இழைகளை பிரிக்கும் தொழில்நுட்பம் சற்றே சற்று கடினமானதாக இருப்பதால் இந்த துணிகள் விலை உயர்ந்ததாக இருக்கிறது.
லினன் துணிகளில் ஆண்கள் பெண்கள் அணிந்து கொள்ளும் வகையில் ஷாட்டுகள், டீ சர்ட்கள், ஜாக்கெட்டுகள், டாப் என்று பலவித ஆடைகள் உள்ளன. இவை அணிந்து கொள்பவர்களுக்கு வசதியாக மற்றும் பார்ப்பதற்கு கம்பீரமாகவும் அழகாகவும் தோற்றமளிக்க உதவுகிறது. லினென் துணிகளில் புடவைகளும் கூட இந்திய சந்தைகளில் அதிக அளவில் கிடைக்கிறது. இந்த புடவைகளும் நீடித்து உழைக்க கூடியதாகவும் லேசான ஒரு விரைப்பு தன்மை கொண்டதாகவும் கஞ்சி போடாமலே அணியக் கூடியதாகவும் மிகவும் கவர்ச்சியாகவும் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
முடி உதிர்வு பிரச்சினையை எதிர்கொள்பவர்கள் ஒரு சில பழக்கவழக்கங்களை தவறாமல் பின்பற்றுவதன் மூலம் இயற்கையாகவே முடி வளர்ச்சியை அதிகரிக்கச் செய்துவிடலாம்.
வயது, மரபணு மற்றும் உணவு முறை ஆகியவற்றை பொறுத்து மனிதர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் சுமார் ஆறு அங்குலம் வரை முடி வளரும். அதனால் முடி உதிர்வு பிரச்சினையை எதிர்கொள்பவர்கள் ஒரு சில பழக்கவழக்கங்களை தவறாமல் பின்பற்றுவதன் மூலம் இயற்கையாகவே முடி வளர்ச்சியை அதிகரிக்கச் செய்துவிடலாம். அதற்கு பயன்படுத்த வேண்டிய பொருட்கள்:
ஆளி விதைகள்: இதில் நார்ச்சத்து மற்றும் புரதம் நிறைந்துள்ளது. அவை உடலுக்கு மட்டுமல்ல, தலைமுடிக்கும் நன்மை பயக்கும். இரண்டு டேபிள் ஸ்பூன் ஆளி விதைகளில் 6,400 மில்லி கிராம் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் உள்ளடங்கி இருப்பது ஆய்வுகள் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது. இது முடியை வலுப்படுத்தவும், நீளமாகவும் அடர்த்தியாகவும் வளர வழிவகை செய்யும்.
நெல்லிக்காய்: இது பல்வேறு விதமான மருத்துவ குணங்களை கொண்டது. முடி வளர்ச்சிக்கும் துணை புரியக்கூடியது. இதில் வைட்டமின் சி நிறைந்துள்ளது. மேலும் இதில் உள்ள கொலோஜன் அடர்த்தியாகவும் நீளமாகவும் முடி வளர்வதற்கு உதவும்.
கறிவேப்பிலை: சமையலில் தவறாமல் இடம் பெறும் இதனை முடி வளர்ச்சிக்கும் தவறாமல் பயன்படுத்தி வரலாம். இதில் உள்ள பீட்டா கரோட்டின் மற்றும் வைட்டமின் ஈ போன்றவை தலைமுடி நீளமாக வளர உதவும். கூந்தல் பளபளப்பாக காட்சி தருவதற்கும் வழிவகுக்கும். ஒரு டம்ளர் காய்கறி சாற்றில் 10-15 கறிவேப்பிலைகளையும் சேர்த்து பருகி வரலாம். அதன் மூலம் முடி வளர்ச்சி அதிகரிக்கலாம்.
ஆளி விதைகள்: இதில் நார்ச்சத்து மற்றும் புரதம் நிறைந்துள்ளது. அவை உடலுக்கு மட்டுமல்ல, தலைமுடிக்கும் நன்மை பயக்கும். இரண்டு டேபிள் ஸ்பூன் ஆளி விதைகளில் 6,400 மில்லி கிராம் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் உள்ளடங்கி இருப்பது ஆய்வுகள் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது. இது முடியை வலுப்படுத்தவும், நீளமாகவும் அடர்த்தியாகவும் வளர வழிவகை செய்யும்.
நெல்லிக்காய்: இது பல்வேறு விதமான மருத்துவ குணங்களை கொண்டது. முடி வளர்ச்சிக்கும் துணை புரியக்கூடியது. இதில் வைட்டமின் சி நிறைந்துள்ளது. மேலும் இதில் உள்ள கொலோஜன் அடர்த்தியாகவும் நீளமாகவும் முடி வளர்வதற்கு உதவும்.
கறிவேப்பிலை: சமையலில் தவறாமல் இடம் பெறும் இதனை முடி வளர்ச்சிக்கும் தவறாமல் பயன்படுத்தி வரலாம். இதில் உள்ள பீட்டா கரோட்டின் மற்றும் வைட்டமின் ஈ போன்றவை தலைமுடி நீளமாக வளர உதவும். கூந்தல் பளபளப்பாக காட்சி தருவதற்கும் வழிவகுக்கும். ஒரு டம்ளர் காய்கறி சாற்றில் 10-15 கறிவேப்பிலைகளையும் சேர்த்து பருகி வரலாம். அதன் மூலம் முடி வளர்ச்சி அதிகரிக்கலாம்.






