என் மலர்tooltip icon

    அழகுக் குறிப்புகள்

    • ஸ்வெட்ஷர்ட் இளைஞர்களிடையே பிரபலமாகி வருகின்றது
    • ஸ்வெட்ஷர்ட் நாகரீகமாக அணிய இதோ சில வழிமுறைகள்...

    ஸ்வெட்ஷர்ட்களை உடற்பயிற்சி செய்யும்பொழுது அணியக்கூடிய வசதியான ஆடை என்று குறிப்பிடுவது கடந்த காலத்தின் ஒரு விஷயம் எனலாம். இப்போது, அவை சாதாரண உடைகள் மற்றும் வீதிகளில் நடந்து செல்பவர்களில் பலர் அணியக்கூடிய ஆடை வகையின் ஒரு பகுதியாக இருக்கின்றது. அன்றாடும் உடுத்தக் கூடியஸ்வெட்ஷர்ட்களை எப்படி அணிவது என்று நீங்கள் யோசிக்கிறீர்களா?அவற்றை நாகரீகமாக அணிய இதோ சில வழிமுறைகள் !

    1.வெளியில் தோழிகளுடன் ஹோட்டலுக்குச் செல்லும் பொழுது சிறிய ஸ்கேட்டர் ஸ்கர்ட் மற்றும் மாறுபட்ட ஸ்வெட்ஷர்ட் மற்றும் ஒரு ஜோடி கணுக்கால் பூட்ஸை அணிந்து செல்லலாம். அங்கிருக்கும் அனைவரின் கவனமும் உங்களின் மீது இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

    2.ஸ்லிம்-ஃபிட் ஜீன்ஸ் மற்றும் உங்கள் சிறந்த ஜோடி ஸ்னீக்கர்களுடன் ஆண்கள் ஸ்வெட்ஷர்ட்களை இணைத்து அணியும் பொழுது ஆண், பெண் என்ற பாகுபாடு இல்லை என்று சொல்லத் தோன்றும்.

    3.ஒரு சட்டையின் மேல் புறம் ஸ்வெட்ஷர்ட்டை அணியும் பொழுது அவை பல அடுக்குகளாகத் தோன்றினாலும் குளிர்காலத்தில் வெளியே செல்லும்போது அணிவதற்கு ஏற்ற ஆடையாக இவை இருக்கும்.

    4.ஸ்வெட்ஷர்ட்டுக்கு மேல் டி-ஷர்ட்டு அணிவதும் இப்பொழுது இளைஞர்களிடையே பிரபலமாகி வருகின்றது. இதனால் மந்தமாக இருக்கும் டி-ஷர்ட்டும் பளிச்சென்ற தோற்றத்தை தருவதாக இருக்கும்.இவ்வாறு அணியும் பொழுது அனைவராலும் நம்முடைய ஆடை அணியும் பாணி பாராட்டப்படுவதற்கு வாய்ப்புகள் அதிகம் என்பதை மறக்காதீர்கள்.

    5.சரியான ஜோடி ஷார்ட்ஸ் அல்லது அழகான சிறிய பாவாடையுடன், நீங்கள் ஒரு ஸ்வெட்ஷர்ட்டை உடுத்தும்போது ஒரு புதிய ஃபேஷனை நீங்கள் அறிமுகப்படுத்துபவராக இருப்பீர்கள்.

    6.ஒரு நல்ல ஜோடி ஸ்னீக்கர்களுடன் ஷார்ட்ஸ் மற்றும் ஸ்வெட்ஷர்ட் அணியும் பொழுது அது ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் ஒட்டுமொத்த தோற்றத்தையும் மிகவும் அழகானதாக மாற்றிவிடும். லோஃபர்கள் அல்லது ஃபிளிப் ஃப்ளாப்புகளும் ஸ்வெட்ஷர்ட்களுடன் அணிவதற்கு ஒரு நல்ல தேர்வாக இருக்கும்.

    கோடையில் ஸ்வெட்ஷர்ட் அணியலாமா?

    கோடையில் ஸ்வெட்ஷர்ட் அணியலாமா அல்லது வேண்டாமா என்பது அவரவர் விருப்பம் மற்றும் வசதியைப் பொறுத்ததாகும்.ஸ்வெட்ஷர்ட்கள் வியர்வையை உறிஞ்சுவதற்கு ஏற்றாற்போல் வடிவமைக்கப்பட்டுள்ளன. எனவே அவை நம் உடலை கதகதப்பாக வைத்திருக்க உதவுகின்றன.எதுவாக இருந்தாலும், ஸ்வெட்ஷர்ட் அணிவதை விட கோடையில் ஸ்வெட்டர்களை அணிவது நடைமுறைக்கு பொருந்தாது என்பது அனைவரும் அறிந்ததே. அதிலும் குறிப்பாக உடற்பயிற்சி செய்யும்பொழுது உடல் முழுவதும் வியர்வையால் நனைந்து ஈரமான ஆடைகளை அணிவதிலிருந்து நமக்கு விடுதலை தரக்கூடியவையாக இந்த ஸ்வெட்ஷர்ட்டுகள் செயல்படும் என்று உறுதியாக நம்பலாம்.

    ஸ்வெட்டருக்கும் ஸ்வெட்ஷர்ட்டுக்கும் என்ன வித்தியாசம்?

    ஒரு ஸ்வெட் டருக்கும் ஸ்வெட்ஷர்ட்டுக்கும் உள்ள மிக அடிப்படையான வேறுபாடு, அவை தயாரிக்கப்படும் விதம்.ஸ்வெட்டர் முற்றிலும் பின்னப்பட்டு தயாரிக்கப்படுகின்றது.ஆனால் ஸ்வெட்ஷர்ட் அப்படி தயாரிக்கப்படுவதில்லை. ஸ்வெட்ஷர்ட் கனமான பருத்தியால் தயாராகின்றது. ஸ்வெட்டர்கள் குளிர்காலத்தில் நம் உடலை சூடாக வைத்திருக்க உதவுகின்றன. ஸ்வெட்ஷர்ட்டுகள் நம் உடலை கதகதப்பாக வைத்திருப்பதோடு நம் உடலில் ஏற்படும் வியர்வையையும் உறிஞ்சுகின்றது. இதன் காரணமாகவே உடற்பயிற்சி செய்பவர்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள் ஸ்வெட்ஷர்ட்களை அதிகம் விரும்பி அணிவதைப் பார்க்க முடிகின்றது. ஒரு ஸ்வெட்ஷர்ட்டில் முன்புறம் திறந்து அணிந்துகொள்வது போன்ற வசதி இருக்காது. ஆனால் ஒரு ஸ்வெட்டரின் வடிவமைப்பு அல்லது பாணியைப் பொறுத்து திறந்து மூடக்கூடிய வசதியானது இருக்கலாம் அல்லது இல்லாமலும் இருக்கலாம்.

    • அடிக்கடியோ, பலமுறையோ குளிப்பது எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்திவிடும்.
    • குளிக்கும்போது சோப் அல்லது ஷாம்பு பயன்படுத்தினால் ஆபத்து இரண்டு மடங்காக அதிகரிக்கும்.

    தினமும் குளிப்பது நல்ல பழக்கம். அது சருமத்திற்கும் நன்மை பயக்கும். ஆனால் சிலர் ஒரு நாளைக்கு பல முறை குளிப்பார்கள். அப்படி உடல் சுத்தத்தை பராமரிப்பது ஆரோக்கியமான பழக்கம் என்றாலும் அது சருமத்திற்கு பாதுகாப்பானது அல்ல. ஏனெனில் உடலில் சென்சிட்டிவ் எனப்படும் அதிக உணர் திறன் கொண்ட பகுதிகளில் சருமமும் ஒன்றாகும். ஒரு நாளைக்கு ஒன்றுக்கு மேற்பட்ட முறையோ, அடிக்கடியோ குளித்தால் சரும செல்கள் எளிதில் பாதிக்கப்படலாம். வாரத்திற்கு 7 முறைக்கு மேல் குளிப்பதும் ஒவ்வொரு முறையும் சோப் அல்லது கிளென்சர் பயன்படுத்துவதும் சருமத்தில் படர்ந்திருக்கும் இயற்கை எண்ணெய் தன்மையை அகற்றி பாதுகாப்பு அடுக்கை சேதப்படுத்தும். சரும தொற்றுக்கும் வழிவகுத்துவிடும்.

    எத்தனை முறை குளிக்கலாம்?

    வாரத்திற்கு 10 முறை குளிப்பது தவறில்லை. ஆனால் ஏற்கனவே சரும பிரச்சினை கொண்டிருப்பவர்கள் வாரத்திற்கு 5 முறைக்கு மேல் குளிப்பது தீங்கு விளைவிக்கும் என்பது சரும நிபுணர்களின் கருத்தாக இருக்கிறது. சருமத்தின் தன்மையை பரிசோதித்துவிட்டு மருத்துவரிடம் எத்தனை தடவை குளிப்பது பொருத்தமானது என்று ஆலோசனை கேட்கலாம்.

    அதிகமாக குளித்தால் சருமத்திற்கு என்ன பாதிப்பு நேரும்?

    பாக்டீரியா, கிருமிகள் மற்றும் வறட்சி போன்றவை தாக்காமல் இருக்க சருமத்தில் இயற்கையாகவே பாதுகாப்பு அடுக்கு உருவாக்கப்பட்டிருக்கும். ஒரு நாளைக்கு ஒருமுறை குளிப்பது சருமத்தை சுத்தமாக வைத்திருக்க உதவும். இறந்த செல்களை நீக்குவதற்கு வித்திடும். ஆனால் ஒரு நாளில் அடிக்கடியோ, பலமுறையோ குளிப்பது எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்திவிடும்.

    அப்படி குளிக்கும்போது ஒவ்வொரு முறையும் சோப் அல்லது ஷாம்பு பயன்படுத்தினால் ஆபத்து இரண்டு மடங்காக அதிகரிக்கும். அதாவது சருமம் வறட்சி அடைவது, சரும எரிச்சல், சரும தொற்று போன்ற பாதிப்புகள் உண்டாகும். அதிக நேரம் குளிப்பதன் காரணமாக ஒவ்வாமை, நோய்த்தொற்று கூட ஏற்படலாம். அடிக்கடி குளிக்கும் செயல்முறையின்போது உடலை அதிகமாக சுத்தம் செய்தால், சருமத்தை பாதுகாப்பதற்காக ஆன்டிபாடிகளாக செயல்படும் நல்ல பாக்டீரியாக்கள் மற்றும் கிருமிகள் உடலில் இருந்து நீங்கிவிடும். மேலும் பாக்டீரியா எதிர்ப்பு சோப்புகளை அதிகம் பயன்படுத் துவது, சரும நோய்த்தொற்றுக்கான வாய்ப்புகளை அதிகரிக்கும். நல்ல நுண்ணுயிரிகளை உடலில் இருந்து அகற்றிவிடும்.

    குளிக்கும் நேரத்தை குறையுங்கள்

    ஒன்றுக்கு மேற்பட்ட தடவை குளிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தால், குளிக்கும் நேரத்தை குறையுங்கள். உதாரணமாக, தினமும் 10 நிமிடங்கள் குளித்தால், அதை 5 நிமிடங்களாக குறையுங்கள். எவ்வளவு குறைவாக சருமத்தில் தண்ணீர் படிகிறதோ அவ்வளவு குறைவாக சரும பிரச்சினைகள் ஏற்படும்.

    சூடான நீரை தவிருங்கள்:

    அதிகமாக குளித்தால், சுடுநீரை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். சுடுநீர் சருமத்தில் உள்ள இயற்கை எண்ணெய்களை அகற்றி, சருமத்தை வறண்டு போகச் செய்து விடும். வெதுவெதுப்பான அல்லது சாதாரண நீரை பயன்படுத்துவதை உறுதி செய்யுங்கள். அதிலும் குளிர்ந்த நீரை பயன்படுத்துவது மிகவும் நல்லது. ஏனெனில் குளிர்ந்த நீர் ரத்த ஓட்டத்தை அதிகரிக்க செய்யும். சரும ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும். சரும வறட்சி, அரிப்பு, வீக்கம் போன்ற பாதிப்புகளை குறைக்கும். சரும துளைகள் திறப்பதை தடுக்கும். கூடுமானவரை15 நிமிடங் களுக்கு மேல் குளிப்பதை தவிர்க்க வேண்டும்.

    மென்மையான குளியல் சோப்பைப் பயன் படுத்துங்கள்:

    குளிப்பதற்கு பயன்படுத்தும் சோப் உள்ளிட்டவை ரசாயன கலப்பு அதிகம் அல்லாமல் இயற்கை தயாரிப்புகளாக இருப்பது நல்லது. இரண்டாவது முறை குளிக்க விரும்பினால் சோப்பை தவிர்த்துவிட்டு தண்ணீரில் அப்படியே குளிப்பதுதான் நல்லது. சருமத்தை மென்மையாகவும் ஈரப்பதமாகவும் வைத்திருக்க மென்மையான அல்லது பால் கலந்த ஈரப்பதமூட்டும் சோப்பை பயன்படுத்தலாம். இது அதிகப்படியான குளியலால் ஏற்படக்கூடிய தோல் பிரச்சினைகளை குறைக்கும்.

    உடலை உலர வையுங்கள்:

    குளித்து முடித்ததும் உடலை உலர்வடைய செய்வதற்கு டவலை கொண்டு அழுத்தமாக தேய்க்கக்கூடாது. அது சருமத்தில் உராய்வை, எரிச்சல் உணர்வை ஏற்படுத்தும். உடலில் இருக்கும் இயற்கையான ஈரப்பதத்தை அகற்றி விடும். டவலை கொண்டு மென்மையாக துடைப்பதுதான் சரியானது. உடலில் படிந்திருக்கும் அதிகப்படியான நீரை அகற்றும் விதத்தில்தான் துடைக்க வேண்டும். குளித்து முடித்ததும் 'பாத் ரோப்' எனப்படும் மென்மையான உடையை அணிவது நல்லது. சருமம் மென்மையாகவும், மிருதுவாகவும், ஈரப்பதமாகவும் இருக்க வேண்டுமெனில், மாய்ஸ்சுரைசர் பயன்படுத்துவது அவசியமானது.

    • ஸ்வெட்ஷர்ட்டுகள் உட்புறம் கம்பளியை ஒத்த ஃப்ளீஸ் என்ற துணியால் ஆனது.
    • ஃபேஷன் உலகின் ஆசீர்வாதம் என்று ஸ்வெட்ஷர்ட்டுகளைச் சொன்னால் அது மிகையாகாது.

    சில காலகட்டங்களில் ஒரு குறிப்பிட்ட ஆடைகளின் பெயர்கள் அதிகமாக அனைவராலும் உச்சரிக்கப்பட்டும்,அணியப்பட்டும் மிகவும் பிரபலமடைந்திருப்பதை நாம் அறிந்திருப்போம்.ஷார்ட்ஸ், முக்கால் பேண்ட், கார்கோ பேண்ட் போன்றவற்றை உதாரணமாகச் சொல்லலாம். இப்போது இதுபோன்ற ஆடைகளின் வரிசையில் அனைவராலும் அதிகம் உச்சரிக்கப்படும் ஒரு பெயர் ஸ்வெட்ஷர்ட் என்பதாகும்.

    ஸ்வெட்ஷர்ட் என்றால் என்ன?

    ஃபேஷன் உலகின் ஆசீர்வாதம் என்று ஸ்வெட்ஷர்ட்டுகளைச் சொன்னால் அது மிகையாகாது. சிலர் அந்தந்த காலகட்டத்திற்கு ஏற்ற புது பாணிகளில் நமக்கு அணிவதற்கு வசதியான ஆடைகளையும், இன்னும் சிலர் உடற்பயிற்சிகளின் போது அணிவதற்கு ஏற்றார் போன்ற ஆடைகளையும் தேர்ந்தெடுத்து அணிவதைப் பார்க்க முடியும். இந்த ஃபேஷன் ஆடையானது நம் வாழ்க்கையை மிகவும் எளிதாக்குகிறது.

    ஸ்வெட்ஷர்ட்டுகள் உட்புறம் கம்பளியை ஒத்த ஃப்ளீஸ் என்ற துணியால் ஆனது. அதேநேரம் அந்த கம்பளியை பிரஷ் செய்து மிகவும் மென்மையாக கொடுக்கிறார்கள். இதில் இருக்கும் ஃபிளீஸ் லைனிங் போன்று கொடுக்கப்பட்டு ஒரு மென்மையான, சூடான உணர்வைத் தந்து அணிபவருக்கு கம்பளியை அணிந்தது போன்ற உணர்வைத் தருகின்றது.இவை ஸ்வெட்டர் போன்று பெரிதாக அல்லது தளர்வாக வந்தாலும் இவை ஸ்வெட்டர் அல்ல ஸ்வெட்ஷர்ட்கள்தான் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

    உண்மையில் ஸ்வெட்டர் வகைகளின் கீழ் வந்தாலும் இவை ஸ்வெட்டரிலிருந்து மாறுபட்டவை.அதேபோல் ஸ்வெட்ஷர்ட் அணிந்து வேலை செய்யலாம் ஆனால் குளிர்காலம் தவிர மற்ற காலங்களில் ஸ்வெட்டர் அணிய முடியாது.ஸ்வெட்டருக்கும் ஸ்வெட்ஷர்ட்டுக்கும் உள்ள முக்கிய வேறுபாடு இதுதான்.கோடைக்காலத்தில் அணியக்கூடிய பல ஆடைகளில் ஸ்வெட்ஷர்ட்டும் கட்டாயம் தனக்கென ஒரு இடத்தை பிடிக்கக் கூடியதாக இருக்கின்றது. சிலர் ஸ்வெட்ஷர்ட்களை ஹூடிகள் என்றும் குறிப்பிடுகிறார்கள். எல்லா ஸ்வெட்ஷர்ட்களும் ஹூடி அமைப்புடன் வருவதில்லை.தடிமனான பருத்தித் துணியில் உட்புறம் ஈரப்பதத்தை உறிஞ்சுவதற்கு லைனிங் கொடுக்கப்பட்டு வருவது ஸ்வெட்ஷர்ட்டாகும்.

    அவை உங்கள் உடற்பகுதி மற்றும் கைகளை மறைக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளன, இதனால் நீங்கள் உடற்பயிற்சி செய்யும்பொழுது இடையூறு செய்யும் அதிகப்படியான வியர்வைக்கு விடை கொடுக்கும் வகையில் இவை வடிவமைக்கப்பட்டுள்ளன.

    • சருமத்தினை ஆரோக்கியமாக வைக்க சில அழகுக் குறிப்புகளைப் பின்பற்ற வேண்டும்.
    • சருமத்தில் உள்ள இறந்த செல்களை அகற்றி புதிய செல்களை ஊக்குவிக்கிறது.

    ஃபேஸ் பேக்குகளில் கிரீன் டீயை பயன்படுத்தும் போது உங்கள் சருமத்தை ஒளிரச் செய்து பளபளக்கச் செய்கிறது. கிரீன் டீ சருமத்தில் ஆரோக்கியமான செல்களை உருவாக்குகிறது. இதனால் எளிதில் அல்லது இளம் வயதில் ஏற்படும் வயதான தோற்றத்தினை தடுக்கிறது. கிரீன் டீயில் டானின்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள் உள்ளதால் கண்களுக்குக் கீழ் ஏற்படும் கரு வளையங்கள் மற்றும் கண்களைச் சுற்றியுள்ள வீக்கத்தைக் குறைக்க உதவுகின்றன. கிரீன் டீயில் இருக்கும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் முகப்பருவைக் குறைத்து வடுக்களைத் தடுக்கின்றன. கிரீன் டீ பயன்படுத்தி ஃபேஸ் பேக் போடும் போது சருமத்தில் இருக்கும் சிறு சிறு துளைகளைச் சரி செய்கிறது.

    இரண்டு தேக்கரண்டியளவு அரிசி மாவு, ஒரு தேக்கரண்டியளவு கிரீன் டீ தூள் மற்றும் ஒரு தேக்கரண்டி எலுமிச்சை சாறு எடுத்து ஒன்றாகக் கலந்து கலவையாக்கிக் கொள்ளுங்கள். அதனை உங்கள் முகத்தில் அப்ளை செய்யுங்கள். ஆனால் கலவையைக் கண்கள் மற்றும் வாய் பகுதியைச் சுற்றி அப்ளை செய்யாதீர்கள். இந்த கலவையை முகத்தில் 15 நிமிடங்கள் அல்லது கலவை காயும் வரை வைத்து பின்னர் குளிர்ந்த நீரில் அலசுங்கள். இதனை வாரத்திற்கு ஒன்று அல்லது இரண்டு முறை செய்யலாம்.

    எலுமிச்சை சாறு சருமத்தில் எண்ணெய் உற்பத்தியைக் கட்டுப்படுத்த உதவும். எலுமிச்சை சாறு முகப்பருவுக்குத் தீர்வளித்து முகத்தில் இருக்கும் வடுக்களைச் சரி செய்யவும் உதவுகிறது. உங்களுக்கு எலுமிச்சை சாறு கிடைக்க விட்டால் தேன் பயன்படுத்தலாம்.

    அரிசி மாவு சருமத்தில் இருக்கும் எண்ணெய் உறிஞ்சும் பண்புகளைக் கொண்டுள்ளது. எண்ணெய் சருமத்திற்கு ஒரு அற்புதமான எக்ஸ்போலியேட்டராக அரிசி மாவு உதவும். மேலும் முகத்தில் இருக்கும் டனை அகற்றுவதற்கு அரிசி மாவு சிறந்த தீர்வாகும். அரிசி மாவு வைட்டமின் பி இன் மூலமாக இருப்பதால் சருமத்தில் உள்ள இறந்த செல்களை அகற்றி புதிய செல்களை ஊக்குவிக்கிறது.

    • கருவளையங்களை சரிசெய்ய அன்னாசி பழச்சாறு உதவும்.
    • பருவால் ஏற்பட்ட தழும்புகள் மறைய அன்னாசி பழத்தை டோனராக பயன்படுத்தலாம்.

    அன்னாசி பழத்தில் வைட்டமின் ஏ மற்றும் சி இரண்டும் அதிகமாக இருக்கின்றன. இவையிரண்டுமே சரும ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும். குறிப்பாக நார்மல் ஸ்கின் மற்றும் ஆயில் ஸ்கின் இரண்டுக்கும் மிகப் பொருத்தமாக இருக்கும். சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்குவது தொடங்கி முகத்தை பளபளப்பாக்கவும் மாசு மருவற்ற சருமத்தை பெறவும் பல வழிகளில் அன்னாசியை பயன்படுத்த முடியும்.

    க்ளியர் சருமத்துக்கு அன்னாசி பழம்

    அன்னாசியில் வைட்டமின் சி நிறைந்திருப்பதால் இது பருக்களுக்கு எதிராக போராடும் தன்மையை கொண்டிருக்கிறது. பருக்களும் பருவால் ஏற்பட்ட தழும்புகளும் அதிகமாக இருந்தால் அதை சரிசெய்ய அன்னாசி பழத்தை டோனராக பயன்படுத்துங்கள்.

    அன்னாசி பழத்தின் சாறை சிறிதளவு எடுத்துக் கொண்டு முகம் மற்றும் பருக்கள் உள்ள இடங்களில் டோனராக ஸ்பிரே செய்து கொள்ள வேண்டும். அதை அப்படியே 15 நிமிடங்கள் வரை உலர விடுங்கள். பின் குளிர்ந்த நீரால் முகத்தை கழுவிக் கொள்ள வேண்டும். இப்படி செய்யும்போது விரைவிலேயே பருக்களும் பருவால் வந்த தழும்புகளும் மறைந்து க்ளியர் சருமத்தை பெற முடியும்.

    கருவளையம் நீங்க அன்னாசி

    அதிகப்படியான சோர்வு, வயதாவது போன்ற காரணங்களால் கண்களைச் சுற்றிலும் அடிப்பகுதியிலும் கருவளையங்கள் தோன்றும். இந்த கருவளையங்களை சரிசெய்ய அன்னாசி பழச்சாறு உதவும்.

    அன்னாசி பழத்தில் அதிகப்படியான ஆன்டி - ஆக்சிடண்ட்டுகள் இருக்கின்றன. இது வயதாவதால் உண்டாகும் கண் சுருக்கங்களை சரிசெய்ய உதவும். சிறிதளவு அன்னாசி பழத்தின் சாறினை எடுத்து அதை காட்டனில் நனைத்து கண்களின் மேல் வைத்து பத்து நிமிடங்கள் வரை கண்களை மூடி ஓய்வெடுங்கள். இதை தினமும் கூட செய்து வரலாம். இப்படி செய்து வரும்போது கண்களைச் சுற்றிலும் உண்டாகிற கருவளையங்கள் மற்றும் சுருக்கங்களை நீக்கச் செய்யும்.

    ஆரோக்கியமான நகங்களுக்கு அன்னாசி

    நகங்கள் அதிகமாக வறட்சியாவது, உடைதல் போன்ற பிரச்சினைகள் சிலருக்கு அடிக்கடி ஏற்படும். நகங்கள் ஆரோக்கியமில்லாமல் இருப்பதற்கு வைட்டமின் ஏ மற்றும் பி பற்றாக்குறை முக்கியக் காரணமாக சொல்லப்படுகிறது.

    நகங்களில் ஏற்படும் இதுபோன்ற பிரச்சினைகளுக்கு அன்னாசி பழச்சாறு மிகச்சிறந்த தீர்வாக இருக்கும். பைனாப்பிள் ஜூஸை குடிப்பதன் மூலம் வைட்டமின் பற்றாக்குறை சரிசெய்யப்படும். அதேபோல அந்த சாறினை நகங்களில் அப்ளை செய்யலாம். இப்படி செய்வதால் நகங்கள் உறுதியாகவும் அழகாகவும் மாறும்.

    அழகான பற்களுக்கு அன்னாசி

    அன்னாசி பழத்தில் உள்ள வைட்டமின் சி பற்களை ஆரோக்கியமாகவும் அழகாகவும் பராமரிக்க உதவுகிறது.

    முகம் எவ்வளவு அழகாக இருந்தாலும் பற்கள் மஞ்சள் கறை இல்லாமல் பளிச்சென வெண்மையாக இருந்தால் தான் முகத்தின் பளபளப்பு இன்னும் கூடும். இதற்கு அன்னாசி பழம் மிக உதவியாக இருக்கும்.

    அன்னாசி பழத்தின் சாறில் ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து கலந்து, அதை டூத் பிரஷில் தொட்டு நன்கு பல் தேய்க்க வேண்டும். இப்படி வாரத்தில் இரண்டு நாட்கள் மட்டும் செய்தால் போதும். பற்கள் முத்து போல ஜொலிக்கும். அடிக்கடி செய்தால் இதிலுள்ள அமிலத்தன்மை பல் ஈறுகளில் எரிச்சலை உண்டாக்கும்.

    • கீரையை சமைத்து சாப்பிடுவதுபோல் ஜூஸாக தயாரித்தும் பருகலாம்.
    • இஞ்சி மற்றும் எலுமிச்சை சாறு கலந்த பானத்தை பெண்கள் பலரும் தவறாமல் பருகுவார்கள்.

    அழகான, பளபளப்பான சருமத்தை விரும்பாதவர்கள் எவரும் இல்லை. சரும அழகை பேணுவதற்கு ரசாயன அழகு சாதன பொருட்களை பலரும் சார்ந்திருக்கிறார்கள். அவை எல்லோருடைய சருமத்திற்கும் ஒத்துக்கொள்வதில்லை.

    சரும பிரச்சினையால் பாதிக்கப்பட்டிருப்பவர்கள் காய்கறி, பழங்களின் சாறுகளை தொடர்ந்து பருகி வந்தால் நிவாரணம் பெறலாம். அவை இயற்கையாகவே சரும நலன் காக்க உதவுவதோடு பளபளப்பான, பளிச் தோற்றத்திற்கும் வித்திடும்.

    ஒரு டம்ளர் பழ ஜூஸ் அல்லது காய்கறி சாறு சருமத்தில் என்ன மாற்றத்தை ஏற்படுத்திவிடப்போகிறது என்று யோசித்துக்கொண்டிருக்கிறீர்களா? உண்மை என்னவென்றால், பழங்கள் மற்றும் காய்கறிகள் இரண்டிலும் ஆன்டிஆக்சிடெண்டுகள் உள்ளன. அவை சருமத்திற்கு சேதம் விளைவிக்கும் ப்ரீ ரேடிக்கல்களை அகற்ற உதவும். வீட்டிலேயே எளிதாக தயாரித்து பருகிவிட முடியும்.

    வெள்ளரிக்காய் சாறு சருமத்தில் ஈரப்பதத்தை தக்க வைக்க உதவும். பளபளப்பான தோற்ற பொலிவுக்கும் வித்திடும். அதில் உள்ளடங்கி இருக்கும் அஸ்கார்பிக் அமிலம் மற்றும் காபிக் அமிலம் சருமத்தில் நீர் தேங்கி நிற்பதை தடுக்கும்.

    இதனால் முகம் வீங்கி இருப்பது தவிர்க்கப்பட்டு பொலிவுடன் காட்சி அளிக்கும்.

    கீரையை சமைத்து சாப்பிடுவதுபோல் ஜூஸாக தயாரித்தும் பருகலாம். இதில் வைட்டமின் கே மற்றும் இரும்பு சத்து நிறைந்துள்ளது. இவை சரும அழகை மேம்படுத்தும். கீரை ஜூஸ் சுவையாக இருக்காது என்பதால் பலரும் அதனை விரும்புவதில்லை. அதனை பருகுவது உடலில் தீங்கு விளைவிக்கும் வைரஸ்களை எதிர்த்துப் போராடுவதற்கு துணை புரியும்.

    கேரட் மற்றும் பீட்ரூட் ஜூஸ் இவற்றை தனியாகவோ அல்லது ஒன்றாகவோ தயாரித்து பருகி வரலாம். இந்த ஜூஸை தொடர்ந்து பருகிவந்தால் முகப்பரு, பொலிவற்ற, மென்மையற்ற சரும தோற்றம் போன்ற பிரச்சினைகளை மறந்துவிடலாம். சருமம் சார்ந்த அனைத்து பிரச்சினைகளையும் விரட்டியத்து மென்மையாகவும், பொலிவாகவும் உணர வைக்கும்.

    இஞ்சி மற்றும் எலுமிச்சை சாறு கலந்த பானத்தை பெண்கள் பலரும் தவறாமல் பருகுவார்கள். இந்த சாற்றில் பொட்டாசியம் மற்றும் நியாசின் அதிகம் கலந்திருக்கும். மேலும் முக்கியமான தாதுக்களை தக்கவைத்து, சருமத்தை மேம்படுத்த உதவும்.

    • கொத்தமல்லியில் வைட்டமின் ஈ அதிக அளவில் உள்ளது.
    • கொத்தமல்லியை எந்தெந்த சருமப் பிரச்சினைகளுக்கு எப்படி பயன்படுத்தலாம் என்று பார்க்கலாம்.

    கருப்பாக இருந்தாலும் சிவப்பாக இருந்தாலும் முகம் பளிச்சென்று பளிங்கு போல இருக்க வேண்டுமென்று தான் அதிகம் விரும்புவார்கள். அதற்கு வீட்டில் சமைக்க வைத்திருக்கும் ஒரு கைப்பிடி கொத்தமல்லி இலை போதும்.

    கொத்தமல்லி இலையில் பல்வேறு ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருக்கின்றன. இதன் தண்டு, இலை, விதை ஆகியவற்றில் மருத்துவ குணங்கள் நிறைந்திருக்கின்றன. கால்சியம், இரும்புச்சத்து ஆகியவை நிறைந்திருக்கும் கொத்தமல்லியில் வைட்டமின் ஈ யும் அதிக அளவில் நிறைந்திருக்கிறது. இது சருமப் பராமரிப்புக்கு மிகவும் மிகுந்தது.

    மாசுக்கள் மற்றும் தூசுகளால் சருமப் பிரச்சினைகள் அதிகம் உண்டாகின்றன.சூரிய ஒளியின் அதிகப்படியான வெப்பத்தால், புறஊதாக் கதிர்களின் தாக்கத்தால் சருமம் பாதிப்படைகிறது.சருமத்தில் அதிகப்படியான எண்ணெய் சுரப்பதனால் முகத்தில் பருக்கள், கரும்புள்ளிகள் உண்டாகும்.

    இந்த பிரச்சினைகளைச் சரிசெய்ய கொத்தமல்லி இலை மிகவும் பயனுள்ளதாக இருக்கும். கொத்தமல்லி இலையை எந்தெந்த சருமப் பிரச்சினைகளுக்கு எப்படி பயன்படுத்தலாம் என்று பார்க்கலாம்.

    மூக்கு, வாய்க்குக் கீழ்ப்பகுதி மற்றும் நெற்றியில் அதிக அளவில் கரும்புள்ளிகள் இருக்கும். அவற்றைக் குறைக்க கொத்தமல்லி பெரிதும் உதவும்.

    2 ஸ்பூன் கொத்தமல்லி சாறெடுத்து அதனுடன் 1 ஸ்பூன் எலுமிச்சை சாறைக் கலந்து முகத்தில் கரும்புள்ளிகள் உள்ள இடங்களில் அப்ளை செய்து, 15 நிமிடங்கள் கழித்து கழுவ வேண்டும். வாரத்தில் இதை இரண்டு முறை செய்து வந்தால் முகத்தில் கரும்புள்ளிகள் குறையும்.

    சருமத்தில் கருந்திட்டுக்கள், முகம் முழுக்க ஒரே நிறமாக இல்லாமல் அன் ஈவன் டோனுடன் இருப்பவர்கள் சருமத்தின் நிறத்தைக் கூட்டவும் கருந்திட்டுக்களைக் களையவும் கொத்தமல்லி இலை சருமத்தில் சிறப்பாகச் செயலாற்றும்.

    கொத்தமல்லி இலையின் சாறுடன் சிறிது கற்றாழை ஜெல்லும் அதனுடன் தயிரும் சேர்த்து நன்கு கலந்து முகத்தில் அப்ளை செய்ய வேண்டும். 10 நிமிடங்கள் கழித்து நன்கு வட்ட வடிவில் மசாஜ் செய்யுங்கள். பின்பும் முகத்தை வெதுவெதுப்பான நீரில் கழுவ முகம் நல்ல கலராகும். குறிப்பாக, எண்ணெய் சருமம் உள்ளவர்களுக்கு இது மிகச்சிறந்த பலனைக் கொடுக்கும்.

    ஒரு மிக்ஸி ஜாரில் சுத்தம் செய்த 1 கப் கொத்தமல்லி இலைகளைச் சேர்த்து தண்ணீர் சேர்க்காமல் நன்கு அரைத்துச் சாறு பிழிந்து கொள்ளுங்கள்.

    அடுத்து அதில் (1 ஸ்பூன்) எலுமிச்சை சாறும், (1 ஸ்பூன்)கற்றாழை ஜெல், (1 ஸ்பூன்)ரோஸ் வாட்டர் ஆகியவற்றைக் கலந்து பேஸ்ட்டாக்கி முகத்தில் அப்ளை செய்து, 20 நிமிடங்கள் வரை உலர விடுங்கள். பின்பு குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவுங்கள். முதல் முறை பயன்படுத்தியதுமே நல்ல வித்தியாசத்தை உங்களால் உணர முடியும்.

    • இந்த ஆப், ஆடைகளுக்கான ஒரு சமூக வலைத்தளம் போல செயல்படுகிறது.
    • இளம்பெண்களின் பேஷன் தாகத்தை தீர்க்கக்கூடிய செயலிகளை பார்க்கலாம்.

    பேஷன் சம்பந்தமான தகவல்களும், ஆலோசனைகளும் இப்போது அப்ளிகேஷன்களிலேயே கிடைக்கிறது. உங்களுக்கு எந்த மாதிரியான உடைகள் சிறப்பாக இருக்கும்?, எந்த நிறத்திலான உடை பொருந்தும், இந்த காலத்து டிரெண்டிங் உடை எது?, எங்கு வாங்கலாம் என்பது போன்ற, பேஷன் உடைகள் சம்பந்தப்பட்ட அத்தனை தகவல்களையும், ஒருசில செயலிகள் வழங்கி கொண்டிருக்கின்றன. அப்படி இளைஞர்/இளம்பெண்களின் பேஷன் தாகத்தை தீர்க்கக்கூடிய செயலிகளை பார்க்கலாம்.

    வார்டுரோப் அசிஸ்டெண்ட்

    திறமையான பேஷன் டிசைனரை, நம்முடன் வைத்திருக்கும் உணர்வை இந்த செயலி அளிக்கிறது. ஏனெனில், இது உங்கள் ஆடைகளை வகைப்படுத்துவதோடு மட்டுமல்லாமல், காலநிலைக்கு ஏற்ற உடை எது என்று தினமும் தெரிவிக்கும். மேலும் உலகளவிலான டிரெண்டிங் ஆடைகள் மற்றும் டிசைனர்களின் அப்டேட்களையும் அறியலாம். இதில் ஆடைகளை நல்ல விலைக்கு விற்கும் வசதியும் உள்ளது. அதாவது, நீங்கள் ஓரிரு முறை பயன்படுத்திய அல்லது வாங்கியபின் அளவு, நிறம் போன்றவை பொருந்தாததால் மீண்டும் விற்க நினைக்கும் ஆடைகளை, இந்த 'ஆப்'பின் வாடிக்கையாளர்களிடையே விற்கலாம். நீங்களும் அதுபோல் மற்றவர்களிடம் இருந்து வாங்கலாம்

    பேஷன் குளோசட்

    இந்த செயலியை 'ஆன்' செய்து, தனித்தனியாக தலைப்புகளில் சேமிக்கப்பட்டுள்ள உடைகளில் பிடித்தவற்றை தேர்வுசெய்து, அதன் பின்புல நிறத்தை மாற்றி மேட்சிங் பார்க்கலாம். பேஸ்புக், டிவிட்டர், இ-மெயில் என தோழிகளுடன் பகிர்ந்து கருத்து கேட்கும் வசதியும் உள்ளது.

    ஷிசிமோ

    நாளைக்கு கல்லூரியில்/ அலுவலகத்தில் முக்கியமான நிகழ்ச்சி. டிரெண்டியான உடையை எப்படி கண்டுபிடிப்பது? எங்கு வாங்குவது என குழப்பமா? விடுங்கள் கவலையை! கல்லூரி பெண்களுக்கென்றே பிரத்யேகமாக உருவாக்கப்பட்டுள்ள இந்த ஆப், இதைப் பயன்படுத்தும் லட்சக்கணக்கான பெண்களிடமிருந்து உங்களுக்குப் பல்வேறு பேஷன் ஐடியாக்களைப் பெற்றுத் தரும். நீங்களும் உங்கள் ஆடைப் பரிந்துரைகள் மற்றும் ஆல்பங்களை மற்ற பெண்களுடன் பகிர்ந்து, கருத்து பெறலாம்!

    ஸ்மார்ட் குளோசட்

    ஆடைகளை மேட்ச் செய்து பார்ப்பது மட்டுமல்லாமல், கல்ச்சுரல்ஸ், செமினார், அவுட்டிங் என எந்தெந்த ஆடையை எப்போது அணியலாம் என்று இந்த `ஆப்'பில் உள்ள பிரத்யேகக் காலண்டரில் குறித்துவைத்துக்கொள்ளலாம்; நண்பர்களுக்கும் பகிரலாம்.

    பாலிவோர்

    இந்த ஆப், ஆடைகளுக்கான ஒரு சமூக வலைத்தளம் போல செயல்படுகிறது. அதாவது இதில் உங்கள் ஆடைகளுக்கான பரிந்துரைகள் கிடைக்கப்பெறுவதோடு, சந்தையில் உள்ள டிரெண்டிங் ஆடைகளைப் பார்க்கலாம், வாங்கலாம், மற்றும் பிறரின் கருத்துகளையும் பெறலாம். மேலும், இதில் உள்ள ஆயிரக்கணக்கான பிராண்டட் மற்றும் டிசைனர் ஆடைகளில் உங்களுக்குப் பிடித்தவற்றைத் தேர்வு செய்து, பிறகு வாங்குவதற்கென அந்தப் புகைப்படங்களை சேமித்தும் வைக்கலாம்.

    • பெண்கள் உடுத்தும் ஆடைகளின் கைப்பகுதிகள், அவர்களின் தோற்றத்தை மேம்படுத்திக் காட்டும்
    • அழகுக்கு அழகு சேர்க்கும் சில 'ஸ்லீவ்' வகைகளை இங்கே காணலாம்:

    பெண்கள் உடுத்தும் ஆடைகளின் கைப்பகுதிகள், அவர்களின் தோற்றத்தை மேம்படுத்திக் காட்டும் தன்மை கொண்டவை. 'ஸ்லீவ்' என்று அழைக்கப்படும் கைப்பகுதியை, அணிபவர்களின் உருவத்திற்கு ஏற்றவாறு பலவிதமாக மாற்றி அமைக்கலாம். ஆடைகளில் கைப்பகுதியின் நிறம், அமைப்பு, வடிவம் மற்றும் அளவு ஆகியவற்றைப் பொறுத்து, பருமனான உடல்வாகு கொண்டவர்களையும் பிட்டாக காட்ட முடியும். அவ்வாறு அழகுக்கு அழகு சேர்க்கும் சில 'ஸ்லீவ்' வகைகளை இங்கே காணலாம்:

    பட்டர்பிளை ஸ்லீவ்: பட்டாம்பூச்சியின் இறகுகள் போல வளைந்து வருவதால் இவ்வாறு அழைக்கப்படுகிறது. தோள்பட்டையில் இருந்து ஆரம்பிக்கும் பட்டர்பிளை ஸ்லீவ் ¾ பகுதி அளவு கொண்டது. இந்த டிசைனை சுடிதார், குர்த்தி, பிளவுஸ் போன்றவற்றில் பொருத்தி அணிந்து கொள்ளலாம். நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும்போது அணியும் உடைகளுக்கு இது சரியான தேர்வாகும்.

    பெல் ஸ்லீவ்: பெல் ஸ்லீவ் டிசைன், தோள்பட்டையில் இருந்து மணிக்கட்டு வரை அகலமாக விரிவடைந்து, கடைசியில் 'பெல்' போன்று அதாவது 'மணி' போன்ற வடிவத்துடன் இருக்கும். இந்த வகையான கைப்பகுதியை, பல அளவுகளிலும், பலவித ஆடைகளுடன் சேர்த்து அணியலாம்.

    கப் ஸ்லீவ்: பார்ப்பதற்கு சட்டையின் கைப்பகுதியை மேலே சுருட்டி விட்டது போல காட்சி தரும், 'கப் ஸ்லீவ்' பல பெண்களின் தேர்வாகும். உடையை உருவாக்கும் பொழுதே இந்த ஸ்லீவை சுருட்டி தைத்து, அதன் மேலே ஒரு பட்டனைப் பொருத்தி விடுவார்கள். நீண்ட டாப்ஸ், க்ராப் டாப்ஸ் மற்றும் பாரம்பரிய குர்திகளில் இது பொருத்தமாக இருக்கும்.

    லாங் ஸ்லீவ்: தோள்பட்டை முதல் மணிக்கட்டு வரை நீண்டு வரும் லாங் ஸ்லீவ், டாப்ஸ், பிளவுஸ் என அனைத்து ஆடைகளுக்கும் ஏற்றது. பல பெண்களின் முதல் தேர்வாக இருக்கும் இதை கருப்பு, வெள்ளை, பச்சை ஆகிய ஒரே நிறங்களாலான ஆடைகளில், வைத்து அணிந்தால் அழகாக இருக்கும்.

    ஓபன் ஸ்லீவ்: கை உள்ள உடை அணிய விரும்பாதவர்களுக்கு ஓபன் ஸ்லீவ் பரிந்துரைக்கப்படுகிறது. இது தோள்பட்டைக்கு அழகான தோற்றம் கொடுக்கும். பலரும் விரும்பி அணியும் 'போட் நெக்' உள்ள ஆடைகளில் இந்த ஸ்லீவ் பொருத்தமாக இருக்கும்.

    ஸ்பிலிட் ஸ்லீவ்: ஸ்பிலிட் ஸ்லீவ் டிசைன், ¾ அளவு ஸ்லீவாகவும், முழு ஸ்லீவாகவும் அவரவர் விருப்பத்திற்கு ஏற்றவாறு அணிந்து கொள்ளலாம். 'ஸ்பிலிட்' என்றால் 'பிளவு' என்று அர்த்தம். இந்த வகை கைப்பகுதியில் 'பிளவு' போன்ற அமைப்பு இருக்கும். அது முடியும் இடத்தில் துணி அல்லது பட்டன் கொண்டு பொருத்திக்கொள்ளும் அம்சத்துடன் வருகிறது.

    பெட்டல் ஸ்லீவ்: 'பெட்டல்' என்றால் 'பூவின் இதழ்' என்று அர்த்தமாகும். இந்த வகை கைப்பகுதி சிறியதாக இதழ் போன்ற வடிவமைப்புடன் இருக்கும். அதை மேலும் மெருகேற்ற, அதன் பார்டரில் துணியின் நிறத்துக்கு ஏற்றவாறு, உதாரணத்திற்கு மஞ்சள் நிறம் கொண்ட டாப்பிற்கு, கருப்பு நிற பார்டர் வைத்து தைப்பார்கள்.

    • கண்ணுக்கு கீழ் கருவளையம் இருப்பவர்கள் மனஅழுத்தத்தைக் குறைப்பது அவசியம்.
    • வாரம் ஒரு முறை சருமத்தில் படிந்திருக்கும் இறந்த செல்களை நீக்குவது அவசியம்.

    திருமணத்துக்கு தயாராகும் மணப்பெண்கள் அனைவரும் சந்தோஷம், பரபரப்பு, எதிர்பார்ப்பு, குழப்பம் என பல்வேறு உணர்வுகள் கலந்த மனநிலையில் இருப்பார்கள். மேலும் திருமணத்துக்கு தேவையான பொருட்கள் வாங்குவதில் ஏற்படும் அலைச்சல் மற்றும் பணிச்சுமை ஆகியவையும் சிரமத்தை தரும். இந்த பாதிப்புகள் அவர்களின் சருமத்தில் பிரதிபலிக்கக்கூடும். எனவே, 3 மாதத்திற்கு முன்பாகவே, சருமப் பராமரிப்பில் முழுக்கவனம் செலுத்த வேண்டும்.

    இதோ சில சரும பராமரிப்பு முறைகள்:

    * சருமப் பராமரிப்பில் முதலில் செய்ய வேண்டியது, நிறைய தண்ணீர் குடித்தல் மற்றும் நார்ச்சத்து நிறைந்த பழங்களை உணவில் சேர்த்துக்கொள்ளுதல் ஆகும். இதன் மூலம் உடலில் தேங்கி இருக்கும் நச்சுத்தன்மை மற்றும் கழிவுகள் வெளியேறி சருமம் பொலிவு பெறும்.

    * தினமும் காலை மற்றும் மாலை வேளைகளில் மென்மையான, ரசாயனம் சேர்க்காத சோப்பு கொண்டு முகத்தைக் கழுவிய பின்பு டோனர் அல்லது ரோஜா பன்னீரை சுத்தமான பஞ்சில் நனைத்து முகம் முழுவதும் துடைக்கவும். இது முகத்தில் படிந்திருக்கும் அழுக்குகளை நீக்கும். அதன் பின்னர் மாய்ஸ்சுரைசர் அல்லது கற்றாழை ஜெல் தடவி முகத்தை எப்போதும் ஈரப்பதத்துடன் வைத்திருப்பது அவசியம்.

    * வாரம் ஒரு முறை சருமத்தில் படிந்திருக்கும் இறந்த செல்களை நீக்குவது அவசியம். காபி தூளுடன் தேங்காய் எண்ணெய் கலந்து சருமத்தில் மென்மையாக மசாஜ் செய்து சிறிது நேரம் கழித்து குளிக்கவும். தண்ணீரில் ஊற வைத்தக் கொண்டைக்கடலையுடன் தேங்காய் எண்ணெய் கலந்து கொரகொரப்பாக அரைத்து, அதனை முகத்தில் தடவி 5 நிமிடம் மென்மையாக மசாஜ் செய்யவும். இதனால் இறந்த செல்கள் அகன்று புதிய செல்கள் உருவாகி சருமத்தை பொலிவுடன் வைத்திருக்க உதவும்.

    * கண்ணுக்கு கீழ் கருவளையம் இருப்பவர்கள் மனஅழுத்தத்தைக் குறைப்பது அவசியம். இரவில் 8 மணி நேரம் ஆழ்ந்த தூக்கம் முக்கியமானது. கூடுதலாக 'ஐ கிரீம்' பயன்படுத்தலாம் அல்லது கற்றாழை ஜெல்லை கண்களைச் சுற்றி உள்ள சருமத்தில் தடவி 10 நிமிடம் கழித்து கழுவி விடலாம். இது கருவளையங்கள் நீங்கி கண்கள் பளிச்சிட உதவும். திருமணம் நெருங்கும் நாட்களில், சரும பராமரிப்பு முறைகள் மற்றும் மேக்கப் போன்றவற்றில் எதையும் புதிதாக முயற்சி செய்து பார்க்க வேண்டாம். சந்தைகளில் கிடைக்கும் அழகு சாதனப் பொருட்களை பயன்படுத்துவதாக இருந்தால், 3 மாதத்திற்கு முன்பாகவே பயன்படுத்த ஆரம்பிப்பது நல்லது.

    • வைட்டமின் ஈ நிரம்பிய பொருட்கள் சரும சுருக்கங்களை கட்டுப்படுத்தும்.
    • வயதுக்கு ஏற்பவே புரதங்களை சருமம் உற்பத்தி செய்கிறது.

    30 வயதை கடந்ததுமே சருமத்தில் சுருக்கங்கள் எட்டிப்பார்க்கக் கூடும். வயதுக்கு ஏற்பவே கொலாஜன் மற்றும் எலாஸ்டின் என்ற புரதங்களை சருமம் உற்பத்தி செய்கிறது. அவை சருமத்தை குண்டாகவும், இறுக்கமாகவும், மீள்தன்மையுடனும், இளமையுடனும் வைத்திருக்க உதவுகிறது. வயது அதிகரிக்கும்போது இவற்றின் உற்பத்தி குறைந்துவிடும். அதனால் சருமம் மெல்லியதாக மாறிவிடக்கூடும். அதுவே சுருக்கங்கள் எட்டிப்பார்க்க காரணமாகிவிடுகிறது.

    ஒருசில முக பயிற்சிகள் மற்றும் உணவு பழக்கவழக்கங்களை பின்பற்றுவதன் மூலம் விரைவாகவே சருமத்தில் சுருக்கங்கள் தோன்றுவதை தவிர்த்துவிடலாம். கண்களைச் சுற்றியுள்ள தோல் முகத்தின் மற்ற பகுதிகளை விட மெல்லியதாக இருப்பதால், முதுமைக்கான அறிகுறிகளான சுருக்கங்களை சட்டென்று வெளிப்படுத்த தொடங்கிவிடும்.

    பயிற்சி 1: தாடை எலும்பை உறுதியாக வைத்துக்கொண்டு, இரு கண்களையும் வலமிருந்து இடமாகவும், பின்பு இடமிருந்து வலமாகவும், மேலிருந்து கீழாகவும், கீழிருந்து மேலாகவும் சுழலவிடவும். கண்களைச் சுற்றியுள்ள சுருக்கங்களைத் தடுக்க உதவும் இந்த பயிற்சியை ஒவ்வொரு திசையிலும் ஐந்து முறை செய்யவும்.

    பயிற்சி 2: இரு விரல்களை கண்களின் உள் மற்றும் வெளிப்புற மூலைகளிலும், மற்ற விரல்களை தாடைப்பகுதியிலும் வைக்கவும். பின்பு கண்களை மூடி இறுக்கமாக அழுத்தவும். இதற்கிடையில், விரல்களை பயன்படுத்தி, கண்களின் வெளிப்புற மூலைகளை வெளிப்புறமாகவும் சற்று மேல்நோக்கியும் அழுத்தி தேய்க்கவும். இந்த நிலையில் சுமார் 5-10 விநாடிகள் வைக்கவும். பின்பு ஓய்வெடுக்கவும். அது போன்று 10 முதல் 25 முறை செய்யவும்.

    மல்லார்ந்த நிலையில் தூங்குவது முக தசைகளுக்கு அழுத்தம் கொடுப்பதை தவிர்க்க உதவும். சுருக்கங்களும் எட்டிப்பார்க்காது. மென்மையான தலையணையையும் உபயோகிக்கலாம். பட்டு துணியிலான தலையணை சிறந்தது.

    சுருக்கங்களை தடுக்கும் உணவுகள்: வெண்ணெய், ஆளிவிதை, சோயாபீன் போன்ற ஒமேகா-3 கொழுப்பு அமிலம் கொண்ட உணவு பொருட்கள், கருப்பு எள், பூசணி விதை போன்ற சருமத்தை அழகுபடுத்தும் ஊட்டச்சத்துக்கள், குறைந்த கொழுப்புள்ள பாலாடைக்கட்டி, பருப்பு வகைகள், முட்டைகள் மற்றும் கரும் பச்சை இலை கீரைகள், மிளகுத்தூள், ஆரஞ்சு, பப்பாளி மற்றும் ஸ்ட்ராபெர்ரி போன்ற வைட்டமின் சி உள்ளடங்கிய பொருட்கள், ஆலிவ் எண்ணெய், முழு கோதுமை, பாதாம், காலே போன்ற வைட்டமின் ஈ நிரம்பிய பொருட்களை உட்கொள்வதன் மூலம் சரும சுருக்கங்களை கட்டுப்படுத்தலாம்.

    சருமத்திற்கான மசாஜ்: தேங்காய் எண்ணெய் அல்லது பாதாம் எண்ணெய் கொண்டு முகத்தை மசாஜ் செய்து வரலாம். கற்றாழை ஜெல்லையும் சருமத்திற்கு உபயோகிக்கலாம். முட்டையின் வெள்ளைக்கருவை சருமத்தில் தடவுவதும் சுருக்கங்களை விரட்டக்கூடும். வாழைப்பழத்தை மசித்து சருமத்தில் தடவலாம். வெள்ளரிக்காயை சிறு துண்டுகளாக நறுக்கி 'பேஸ் பேக்'காக பயன் படுத்தலாம். காய்ச்சாத பாலில் பருத்தி பஞ்சுவை முக்கியும் சருமத்தில் பூசி வரலாம்.

    சரும சுருக்கத்தை தடுக்கும் வழிகள்: சருமத்தை எப்போதும் ஈரப்பதமாக வைத்திருங்கள். சருமம் எண்ணெய் பசை தன்மையுடன் இருந்தால் மாய்ஸ்சுரைசர் பயன்படுத்துங்கள். அது உங்கள் சரும வகைக்கு ஏற்றதாக இருக்க வேண்டும். வெளியே செல்லும்போது குறிப்பாக வெயிலின் ஆதிக்கம் நிலவும் சமயங்களில் மறக்காமல் சன்ஸ்கிரீனை உபயோகியுங்கள். கெட்டுப்போகாத ஆரோக்கியமான உணவை உண்ணுங்கள். உடலில் போதுமான அளவு நீர்ச்சத்தை பேணுங்கள். மதுப்பழக்கம், புகைப்பழக்கத்தை தவிருங்கள். அடிக்கடி முகம் சுளிப்பது, பற்களை கடிப்பது போன்ற பழக்கங்களை தவிருங்கள்.

    • வெட்டிவேர் மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது.
    • சருமத்தின் அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு தருகிறது.

    பழுப்பு நிறமும், பரவசமூட்டும் நறுமணமும் கொண்ட வெட்டிவேரின் வேர்ப்பகுதி மட்டுமே மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது.

    கோடை காலமோ, குளிர்காலமோ ஒரு சிலருக்கு எப்போது பார்த்தாலும் வியர்த்து, எண்ணெய் வழியும். இதனால் பருக்களும் அதிகமாக இருக்கும். அவர்களுக்கு வாசனையான பேக் போடலாம். வெட்டிவேர், ரோஜா மொட்டு, மகிழம்பூ, செண்பகப்பூ, சம்பங்கி விதை.. இவற்றை சம அளவு எடுத்து மெஷினில் கொடுத்து அரைத்து சலித்து வைத்துக்கொள்ளுங்கள். இந்தப் பவுடரை தண்ணீரில் குழைத்து முகத்தில் பூசி, கழுவுங்கள். வெட்டிவேர் முகத்தில் உள்ள தேவையற்ற எண்ணெய் பசையை எடுத்துவிடும். சம்பங்கி விதை முகத்துக்கு புத்துணர்ச்சியை கொடுக்கும். சோர்வைப் போக்கி நிறத்தைக் கொடுக்கிறது ரோஜா மொட்டு. மகிழம்பூவும், செண்பகப்பூவும் வியர்வை நாற்றத்தைப் போக்கி வாசனையை கொடுக்கிறது.

    வெட்டி வேர் (vettiver) எண்ணெய்யை கொண்டு நீண்ட நாட்களாக ஆறாமல் இருக்கும் வடுக்கள் மீது தடவி வந்தால் அவை மறைந்துவிடும். இந்த எண்ணெய்யை உடலில் தேய்த்து தினமும் குளிக்கலாம். 

    வெட்டி வேர் தூளுடன் தண்ணீர் சேர்த்து குலைத்து முகத்தில் பூசி 15 நிமிடங்கள் உலரவிட வேண்டும். பிறகு குளிர்ந்த நீரில் முகத்தைக் கழுவி மென்மையான பருத்தித் துண்டால் துடைக்க வேண்டும். இரண்டு நாட்களுக்கு ஒருமுறை இப்படி 'பேக்' போட்டு வந்தால் பருக்கள் நீங்கி முகம் வசீகரமாகும்.

    சுத்தமான தேங்காய் எண்ணெயுடன், வெட்டி வேர் சேர்த்து ஊறவைத்து தலைமுடிக்கு தேய்த்துவர வேண்டும். தலைமுடியின் வேர்க்கால்களில் படும்படி தேய்க்க வேண்டும். இதனை வாரம் ஒரு முறை இப்படி செய்து வந்தால் முடி உதிர்வது குறைந்து கருமையாக முடி வளரும். கண்களும் குளிர்ச்சியடையும். 

    தலைக்கு தேய்த்து குளிக்கும் சீயக்காய்க்கு பதிலாக வெட்டி வேர் பவுடரை பயன்படுத்தலாம். வெட்டி வேர் தூளை தலைக்கு தேய்த்து குளிப்பதால், முகத்தில் எண்ணெய் வழியாது. முகம் கூடுதல் அழகுடன் காணப்படும்.

    வெட்டி வேரை சிறு சிறு துண்டுகளாக்கி, அதனுடன் கொட்டை நீக்கிய கடுக்காய் ஒன்றையும் முதல் நாள் இரவே கொதிநீரில் ஊறவைக்க வேண்டும். மறுநாள் அதை அரைத்து விழுதை பருக்கள் மீது தடவி வந்தால் பருக்கள் இருந்த வடுவே தெரியாமல் அழிந்து விடும்.

    பாசிப்பயறு 100 கிராம் ,வெட்டிவேர் 50 கிராம் எடுத்து அந்த இரண்டையும் சேர்த்து நன்றாக அரைத்து கொள்ள வேண்டும். இந்தப் பவுடரை உடலுக்கு தேய்த்துக் தினமும் குளித்து வந்தாலே உடம்பில் வரும் சிறு சிறு உஷ்ணக் கட்டிகளும் , உடல் விரிவதனால் ஏற்படும் வரிகளும் மறைந்து போகும்.

    வெட்டி வேர், ரோஜா மொட்டு, மகிழம்பூ, செண்பகப்பூ, சம்பங்கி விதை இவற்றை சம அளவு எடுத்து மெஷினில் கொடுத்து அரைத்து கொள்ளுங்கள். இந்தப் பவுடரை தண்ணீரில் குழைத்து முகத்தில் பூசி வர இயற்கையாக முகம் அழகு பெறும். 

    வெட்டிவேரினை சிறு துண்டுகளாக்கி ஒரு ஸ்பூன் அளவிற்கு எடுத்துக்கொள்ளவும். கொட்டை நீக்கிய கடுக்காய் ஒன்றை எடுத்துக்கொள்ளவும். இரண்டையும் முதல்நாள் இரவே கொதிக்கும் நீரில் ஊறவைக்கவும். மறுநாள் காலையில் நன்றாக மைய அரைத்து அந்த விழுதினை பருக்கள் மீது மறைப்பதுபோல பூசவும். ஒரு நாள் விட்டு ஒருநாள் இப்படிச் செய்து வந்தாலே பருக்கள் உதிர்ந்துவிடும். பருக்கள் இருந்த வடுவும் தெரியாது.

    பருக்கள் வந்து காய்ந்தாலும் ஒரு சிலருக்கு தழும்புகள் மட்டும் போகாது. இதனாலேயே முகம் கரடு முரடாக மாறிவிடும். அந்த தழும்புகள் மறைய ஒரு பிடி வெட்டிவேரை சிறு துண்டுகளாக்கி வெந்நீரில் போட்டு மூடுங்கள். ஒரு இரவு இது ஊறட்டும். மறுநாள் ஒரு பாத்திரத்தில் தண்ணீரை கொதிக்க விடுங்கள். முந்தின நாள் ஊறவைத்த வெட்டிவேரையும் தண்ணீரையும் தனியே பிரித்து வையுங்கள். இப்போது கொதிநீரில் வெட்டிவேரைப் போட்டு ஆவி பிடியுங்கள். அப்படியே முகத்தைத் துடைக்காமல், வெட்டிவேர் ஊறின தண்ணீரில் சுத்தமான வெள்ளைத் துணியை அமிழ்த்தி பிழிந்து முகத்தை ஒற்றி எடுங்கள். வாரம் இரு முறை இப்படிச் செய்து வந்தால், தழும்புகள் மறைந்துவிடும்.

    ×