என் மலர்tooltip icon

    அழகுக் குறிப்புகள்

    • புதுப்புடவைகளின் வரவிற்கு அளவே இல்லை என்று சொல்லலாம்.
    • பெண்களுக்கு விதவிதமான புடவைகள் என்றால் மிகவும் பிடிக்கும்.

    ஒவ்வொரு பண்டிகை காலத்திற்கும் புதுவிதமான துணி வகைகள் அறிமுகப்படுத்தப்பட்டுக் கொண்டு இருக்கின்றன. அதுவும் தீபாவளி, பொங்கல் சமயம் என்றால் புதுப்புடவைகளின் வரவிற்கு அளவே இல்லை என்று சொல்லலாம். சரி இந்த பொங்களுக்கு என்னென்ன புடவைகள் வந்திருக்கின்றன. என்னுடன் ஷாப்பிங் வரத் தயாரா?

    * சினியா சில்க் புடவைகள் : மிகவும் மென்மையான, குறைந்த எடை கொண்ட இந்தப் புடவைகள் பனாரசி பார்டர்களுடன் வந்திருக்கும் ப்யூர் சில்க் புடவைகள் ஆகும். இந்த புடவைகளில் ஷார்ட் அண்ட் லாங் பார்டர்களுடன் பாரம்பரிய வண்ணங்களில் ப்ரோக்கேட் மற்றும் ஜியாமெட்ரிக் டிசைன்களில் ஏராளமான புதுவரவுகள் வந்திருக்கின்றன. பார்டரும், பல்லுவும் ஒரே நிறத்தில் இருக்க அதற்கு கான்ட்ராஸ்ட் நிறத்தில் உடல் பகுதியானது இருப்பதுபோல் வடிவமைக்கப்பட்டு இருப்பது மிகவும் அழகாக உள்ளது. உடல் பாகம் சிவப்பு நிறத்திலும் பார்டர் மற்றும் பல்லு பச்சை நிறத்தில் இருப்பது போலவும், உடலுக்கு கிளி பச்சை நிறம் என்றால் பார்டர் மற்றும் பல்லு மஜந்தா நிறத்தில் இருப்பது போலவும்,உடல் பாகம் மஞ்சள் நிறத்தில் இருந்தால் பார்டர் மற்றும் பல்லு பச்சை நிறத்தில் இருப்பது போலவும் ,உடலுக்கு பீச் கிரீன் நிறம் என்றால் பார்டர் மற்றும் பல்லு கத்தரிப்பூ நிறத்தில் இருப்பது போலவும் கான்ட்ராஸ்ட்டாக வண்ணங்களை கொடுத்து இந்தப் புடவைகளை மிகவும் அற்புதமாக வடிவமைத்திருக்கிறார்கள். இந்தப் புடவைகள் அனைத்திற்கும் பிளெயின் வண்ணத்தில் பிளவுஸ் இணைக்கப் பட்டிருப்பது கூடுதல் சிறப்பாக இருக்கின்றது.

    இந்த சினியா சில்க் புடவைகளிலேயே காப்பர் மற்றும் சில்வர் பார்டர்களுடன் வரும் டிஜிட்டல் பிரிண்டிங் புடவைகள் பார்வைக்கு எளிமையாகவும் அதே நேரத்தில் எந்த ஒரு நிகழ்ச்சிக்கும் அணிவதற்கு நேர்த்தியாகவும் இருப்பதுபோல் வடிவமைக்கப்பட்டு விற்பனைக்கு வந்திருப்பது அனைவரையும் கவரும் விதத்தில் இருக்கின்றது.இந்த புடவைகளின் மேல் மற்றும் கீழ் பகுதியில் மிகவும் சிம்பிளான சரிகை பார்டர்கள் கொடுக்கப்பட்டிருப்பது அழகுக்கு அழகு சேர்க்கும் விதமாக உள்ளது.

    *செமி பேம்பு புடவைகள் : எடை குறைவாக இருக்கும் இந்தப் புடவைகள் பத்திக் டிசைன்களுடன் எளிமையான கடி சரிகை பார்டர்களுடன் பல்வேறு வண்ணங்களில் வாங்கக் கூடிய விலையில் வந்திருப்பது வரவேற்கும் விதத்தில் இருக்கின்றது. உடல் பகுதி மற்றும் பல்லு ஒரே வண்ணத்திலும் , உடல் பகுதியும் பல்லுவும் காண்ட்ராஸ்ட் வண்ணத்தில் இருப்பது போன்றும் புடவைகள் வந்துள்ளன.

    *செமி ரா சில்க் புடவைகள் : வேறுபட்ட வண்ணங்கள் மற்றும் வித்தியாசமான டிசைன்களில் பார்டர்கள் இல்லாமல் வரும் இந்த செமி ரா சில்க் புடவைகளின் அழகைக் கூற வார்த்தைகளே இல்லை எனலாம்.எம்ப்ராய்டரி செய்யப்பட்ட ஃபிளோரல் டிசைன்கள் உடல் பகுதியிலும் பல்லுவிலும் இருப்பதுபோல் வடிவமைக்கப்பட்டு கண்கவர் வண்ணங்களில் வந்திருக்கும் இந்த புடவைகளை உடுத்திப் பார்க்கும் பொழுதுதான் அதனுடைய அழகு முற்றிலுமாகத் தெரியும்.சரிகை மற்றும் நூலினால் நெய்யப்பட்டிருக்கும் டிசைன்கள்,பார்ப்பவர்களை வாங்கத் தூண்டும் வண்ணங்களில் வந்திருக்கும் இந்தப் புடவைகளை மிகவும் அட்டகாசம் என்று சொல்லலாம்.

    *பனாரசி ஜார்ஜெட் புடவைகள்: அனைத்து வகையான விழாக்களுக்கும் அணிந்து கொள்ளும் விதத்தில் ரிச் ஆன்டிக் பார்டர்கள் மற்றும் கான்ட்ராஸ்ட் வண்ணங்களில் அசத்தலாக வந்திருக்கும் இந்தப் புடவைகள் நம்மிடம் கட்டாயம் இருக்க வேண்டிய புடவைகளில் ஒன்று என்று உறுதியாகச் சொல்லலாம். ஆரஞ்சு வண்ணத்திற்கு வெளிர் நீலம், க்ரீம் வண்ணத்திற்கு மஜந்தா, மஞ்சள் வண்ணத்திற்கு மஜந்தா,க்ரீம் வண்ணத்திற்கு கருப்பு என ஆன்டிக் பார்டர்களுடன் வரும் இந்தப் புடவைகள் விருந்து உபச்சார நிகழ்ச்சிகள், வரவேற்பு நிகழ்ச்சிகள், திருமண விழாக்கள் என அனைத்திற்கும் உடுத்திச்செல்வதற்கு ஏற்றவை.

    *செமி லினன் புடவைகள் : மென்மையாகவும், உடுத்துவதற்கு எளிதாகவும், எடை குறைவாகவும், சிறு நிகழ்ச்சிகளுக்கு அணிந்து செல்வதற்கு ஏற்றவையாகவும் இருக்கும் இந்த புடவைகளில் பாந்தினி, கலம்காரி மற்றும் அஜ்ராக் என பலவிதமான பிரிண்ட்கள் செய்யப்பட்டு வருகின்றன.கடி ஜரி பார்டர்,மதுபானி பிரிண்டட் பார்டர், பைப்பிங் பார்டர் மற்றும் எளிமையான ஜரி பார்டர்கள் என இந்தப் புடவைகளை அருமையாக வடிவமைத்திருக்கிறார்கள்.அனைவரும் வாங்கக் கூடிய விலையில் இந்தப் புடவைகள் இருப்பது மற்றொரு சிறப்பாகும்.

    *பியூர் ஜூட் சில்க் : ஜரி மற்றும் சில்க் த்ரெட்டில் உடலில் சிறு எம்பிராய்டரியும், பார்டரில் அதைவிட சற்று பெரிய அளவில் எம்பிராய்டரி செய்யப்பட்டு எளிமையான பல்லுவுடன் வந்திருக்கும் இந்த ஜூட் சில்க் புடவைகள் உடுத்துவதற்கு எளிதாகவும் நேர்த்தியான தோற்றத்தைத் தருபவையாகவும் இருக்கின்றன. பல்லுவில் டாசில்ஸ் வைத்து வருவது புடவைக்கு கூடுதல் அழகைத் தருகிறது. ஜூட் சில்கில் ஜகார்ட் மற்றும் பார்டர்களுடன் வரும் புடவைகள் அருமையாக இருக்கின்றன.

    • முகப்பரு போன்ற சரும பிரச்சினைகளும் ஏற்படாமல் இருக்கும்.
    • சருமத்தை பிளீச்சிங் செய்வதற்கு சாத்துக்குடியை பயன்படுத்தலாம்.

    'சுவீட் லைம்' என அழைக்கப்படும் சாத்துக்குடி பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை கொண்டது. இனிப்பு, புளிப்பு என இரு வகை சுவை கொண்ட இந்த பழத்தில் பொட்டாசியம், இரும்பு, கால்சியம், வைட்டமின்கள் ஏ, சி மற்றும் பி 1 ஆகிய ஊட்டச்சத்துக்கள் நிரம்பி உள்ளன. சருமத்திற்கு நலம் சேர்க்கும் தாதுக்களும் அதில் நிரம்பியுள்ளன.

    சருமத்தை உறுதியாகவும் வலுவாகவும் வைத்திருக்க உதவும் புரதமான கொலாஜன் தயாரிக்க வைட்டமின் சி அவசியம். சாத்துக்குடியில் வைட்டமின் சி அதிகம் இருப்பதால் அது சரும பராமரிப்பில் முக்கிய பங்கு வகிக்கும். மேலும் ஆன்டி ஆக்சிடென்டுகளும் அதிகம் உள்ளன. வயது அதிகரிக்கும்போது சருமத்தில் ஏற்படும் மாற்றங்களை எதிர்த்து போராடவும் உதவும்.

    சாத்துக்குடியில் பிளாவனாய்டுகளின் அளவும் அதிகம் உள்ளது. இவை செரிமான நொதிகள், அமிலங்கள் மற்றும் பித்தங்களின் சுரப்பை அதிகரிக்கச் செய்யக்கூடியவை. அதனால் செரிமான மண்டலத்தின் செயல்பாடு தொய்வின்றி நடைபெறும். மேலும் வயிற்றில் உற்பத்தி செய்யப்படும் அமில செரிமான நொதிகளை நடுநிலையாக்கும்.

    உடலில் இருக்கும் நச்சுகளை அகற்றும் செயல்முறை சீரான இடைவெளியில் நடக்க வேண்டியது அவசியமானது. அப்படி நடந்தால்தான் சருமத்திற்கு சரியான ஊட்டம் கிடைக்கும். சருமத்திற்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. முகப்பரு போன்ற சரும பிரச்சினைகளும் ஏற்படாமல் இருக்கும்.

    சாத்துக்குடியில் உள்ளடங்கி இருக்கும் பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் ஆக்சிஜனேற்ற பண்புகள் கண்புரை உருவாகும் அபாயத்தை குறைக்க உதவும். சாத்துக்குடி ஜூஸை பருகுவதோடு சருமத்திற்கு பேஷியலாகவும் உபயோகப்படுத்தலாம். சருமத்தில் படியும் கறைகளை அகற்ற உதவும். சருமத்தை பிளீச்சிங் செய்வதற்கும் சாத்துக்குடியை பயன்படுத்தலாம்.

    • இந்தப் புடவைகளை மிகவும் அற்புதமாக வடிவமைத்திருக்கிறார்கள்.
    • எந்த ஒரு நிகழ்ச்சிக்கும் அணிவதற்கு ஏற்ற வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
    மிகவும் மென்மையான, குறைந்த எடை கொண்ட இந்தப் புடவைகள் பனாரசி பார்டர்களுடன் வந்திருக்கும் ப்யூர் சில்க் புடவைகள் ஆகும். இந்த புடவைகளில் ஷார்ட் அண்ட் லாங் பார்டர்களுடன் பாரம்பரிய வண்ணங்களில் ப்ரோக்கேட் மற்றும் ஜியாமெட்ரிக் டிசைன்களில் ஏராளமான புதுவரவுகள் வந்திருக்கின்றன. பார்டரும், பல்லுவும் ஒரே நிறத்தில் இருக்க அதற்கு கான்ட்ராஸ்ட் நிறத்தில் உடல் பகுதியானது இருப்பதுபோல் வடிவமைக்கப்பட்டு இருப்பது மிகவும் அழகாக உள்ளது.

    உடல் பாகம் சிவப்பு நிறத்திலும் பார்டர் மற்றும் பல்லு பச்சை நிறத்தில் இருப்பது போலவும், உடலுக்கு கிளி பச்சை நிறம் என்றால் பார்டர் மற்றும் பல்லு மஜந்தா நிறத்தில் இருப்பது போலவும், உடல் பாகம் மஞ்சள் நிறத்தில் இருந்தால் பார்டர் மற்றும் பல்லு பச்சை நிறத்தில் இருப்பது போலவும், உடலுக்கு பீச் கிரீன் நிறம் என்றால் பார்டர் மற்றும் பல்லு கத்தரிப்பூ நிறத்தில் இருப்பது போலவும் கான்ட்ராஸ்ட்டாக வண்ணங்களை கொடுத்து இந்தப் புடவைகளை மிகவும் அற்புதமாக வடிவமைத்திருக்கிறார்கள்.

    இந்தப் புடவைகள் அனைத்திற்கும் பிளெயின் வண்ணத்தில் பிளவுஸ் இணைக்கப்பட்டிருப்பது கூடுதல் சிறப்பாக இருக்கின்றது. இந்த சினியா சில்க் புடவைகளிலேயே காப்பர் மற்றும் சில்வர் பார்டர்களுடன் வரும் டிஜிட்டல் பிரிண்டிங் புடவைகள் பார்வைக்கு எளிமையாகவும் அதே நேரத்தில் எந்த ஒரு நிகழ்ச்சிக்கும் அணிவதற்கு நேர்த்தியாகவும் இருப்பதுபோல் வடிவமைக்கப்பட்டு விற்பனைக்கு வந்திருப்பது அனைவரையும் கவரும் விதத்தில் இருக்கின்றது. இந்த புடவைகளின் மேல் மற்றும் கீழ் பகுதியில் மிகவும் சிம்பிளான சரிகை பார்டர்கள் கொடுக்கப்பட்டிருப்பது அழகுக்கு அழகு சேர்க்கும் விதமாக உள்ளது.

    • ஒரு நகையுடன் மற்றொரு நகையை சேர்த்து வைக்கக் கூடாது.
    • முத்து நகைகளை மற்ற நகைகளுடன் அணிவதைத் தவிர்க்க வேண்டும்.

    தங்கம், வைரம், வைடூரியம், முத்து, பவளம் என எந்த நகைகளாக இருந்தாலும் அவற்றை உரிய முறையில் பராமரித்து பாதுகாத்தால் மட்டுமே அவை பல தலைமுறைகளையும் தாண்டி மிகவும் பிரகாசமாகவும், உறுதியாகவும் நம்முடன் பயணம் செய்யும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.தலைமுறைகளைத் தாண்டி பயணம் செய்வதற்கு மட்டுமல்லாமல் நாம் அவற்றை உபயோகப்படுத்தும் காலத்திலேயே அவை பழைய நகைகள் போன்ற தோற்றத்தை தராமல் இருப்பதற்கு அவற்றுக்கு சரியான பராமரிப்பை வழங்க வேண்டியது அவசியமாகும்.

    தங்க நகைகள்

    தங்கத்தினால் செய்த நகைகளை அன்றாடம் உபயோகப்படுத்தும் பொழுது அவற்றில் நாம் தலைக்குத் தேய்த்துக் கொள்ளும் எண்ணை,முகத்திற்கு பயன்படுத்தும் ஒப்பனைப் பொருட்கள் போன்றவை படிந்து விரைவிலேயே பொலிவிழந்து பழைய நகை போன்ற தோற்றத்தை தரத் துவங்கிவிடும். அழுக்குப் படிந்து பொலிவிழந்து இருக்கும் நகைகளை மாதம் ஒருமுறையாவது வெதுவெதுப்பான நீரில் சிறிதளவு மிக மென்மையான ஷாம்பு கலந்து அதில் ஊறவைத்து மென்மையான பிரஷ் கொண்டு தேய்த்துக் கழுவலாம்.

    அதேபோல் நகைகளை அடிக்கடி சுத்தம் செய்வதும், கடினமான பிரஷ் கொண்டு கழுவுவதும், துணி துவைக்கும் சோப்பை உபயோகப்படுத்தி சுத்தம் செய்வதும் கூடாது.மிகவும் நவீன தோற்றத்துடன் வரும் நகைகளை வெளியில் அணிந்து சென்று வந்த பிறகு மெல்லிய பருத்தித் துணியில் துடைத்து, ஆறவைத்து பின்பு நகைகளை தனித்தனியாக வைப்பதற்கு என்று இருக்கும் பெட்டிகளில் வைக்க வேண்டும்.

    எப்பொழுதும் ஒரு நகையுடன் மற்றொரு நகையை சேர்த்து வைக்கக் கூடாது. நகைகளை சேர்த்து வைக்கும் பொழுது அவை ஒன்றுடன் ஒன்று உரசி தேய்மானத்தை ஏற்படுத்திவிடும்.அதுமட்டுமல்லாமல் அவை ஒன்றுடன் ஒன்று பிணைந்து அவற்றை எடுக்கும் பொழுது சேதாரத்தை ஏற்படுத்துவதற்கும் வாய்ப்புகள் அதிகம். எனவே நகைகளை ஒரே பெட்டியில் வைக்க நேரிட்டாலும் ஒவ்வொன்றையும் தனித்தனியாக மெல்லிய துணிகளில் சுற்றி ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கி வைத்துக் கொள்ளலாம்.

    முத்து நகைகள்

    எப்பொழுதுமே முத்து நகைகளை மற்ற நகைகளுடன் அணிவதைத் தவிர்க்க வேண்டும்.முத்துக்கள் மிகவும் மென்மையானவை. எனவே முத்துக்களில் எளிதில் சிராய்ப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது.முத்தினால் செய்த மாலைகள், நெக்லஸ்கள் மற்றும் ஹாரம் போன்றவற்றை தொங்கிய நிலையிலேயே வைக்கக்கூடாது. இவ்வாறு தொங்கவிடும் பொழுது முத்துச் சரங்கள் தளர்வடைய வாய்ப்புள்ளது.முத்து நகைகளை சாதாரண குளோரின் கலந்த நீரில் கழுவுவதை தவிர்த்து சுத்தமாக காய்ச்சி வடிகட்டிய நீரில் கழுவலாம்.முத்து நகைகளை அணிந்து கொண்டு ஹேர் டிரையர் உபயோகிப்பது, ஒப்பனை செய்து கொள்வது போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.ஒப்பனை பொருட்களில் இருக்கும் ரசாயனங்களும், ஹேர் டிரையரில் இருந்து வரும் அதிகப்படியான சூடான காற்று முத்துக்கள் நிறம் மாறுவதற்கும், விரிசல் அடைந்து உடைவதற்கும் காரணமாக அமைந்துவிடும்.

    பவள நகைகள்

    இந்த நகைகள் நேரடியான சூரிய வெயில் மற்றும் அதிகப் படியான சூட்டினால் நிறம் மாற வாய்ப்புள்ளது. நாம் உபயோகிக்கும் அழகு சாதனப்பொருட்கள், வாசனைத் திரவியங்கள், கூந்தல் எண்ணெய் மற்றும் ஸ்பிரே, துணிகளுக்கு உபயோகிக்கும் சோப்பு மற்றும் ரசாயனங்கள் பவள நகைகளில் படாமல் பார்த்துக் கொள்வது மிகவும் முக்கியமான ஒன்றாகும்.பவள நகைகளில் அழுக்கு படிந்திருந்தால் மென்மையான சோப்பு கலந்த நீரில் துணி அல்லது மென்மையான பிரஷ்ஷை உபயோகப்படுத்தி அழுக்கை அகற்றலாம்.

    கல் வைத்த நகைகள்

    வைரம், ரூபி, எமரால்டு,நீலக்கல், புஷ்பராகம், சாலிடர் போன்ற கற்கள் பதித்த நகைகளை மற்ற நகைகளுடன் அணிவதை தவிர்க்க வேண்டும். இவ்வாறு தனியாக அணியும் பொழுது அவற்றில் உராய்வு ஏற்படுவது தவிர்க்கப்படுகிறது. கற்கள் பதித்த நகைகளில் நுணுக்கமான வேலைப்பாடுகள் இருப்பதால் வெகு சீக்கிரமாகவே அழுக்கு படிந்து நாளடைவில் அவற்றை நாம் சரிவர சுத்தம் செய்ய மறந்தால் நகையின் பிரகாசம் மங்கி பித்தளை போல தோன்றி விடக்கூடிய ஆபத்துகள் அதிகம் இருக்கின்றது.

    எனவே குறிப்பிட்ட கால இடைவெளியில் இந்த நகைகளை கவனித்து அவற்றைச் சுத்தம் செய்து பத்திரமாக அவற்றிற்கென பிரத்யேகமாக இருக்கும் பெட்டிகளில் வைக்க வேண்டும்.நகைகளை வெளியில் அணிந்து சென்று விட்டு வந்த பிறகு அப்படியே சுருட்டி மடக்கி பைகளிலோ அல்லது பெட்டிகளிலோ வைக்கக்கூடாது.இவ்வாறு மடக்கி வைக்கும் பொழுது விரைவிலேயே நகைகள் உடைந்து போவதற்கான வாய்ப்புகள் அதிகம். எனவே நகைகளை பாதுகாப்பாக வைப்பதற்கு தரமான சாட்டின் துணியால் வடிவமைக்கப்பட்ட நகைபெட்டிகளைப் பயன்படுத்துங்கள்.

    நகைகளை அணிந்துகொண்டே குளிப்பது, துணிகளை துவைப்பது, பாத்திரங்களை கழுவுவது போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.குறிப்பாக நீச்சல் குளங்களில் குளிக்கும் பொழுது அங்கிருக்கும் குளோரின் கலந்த நீரானது நகைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் நகைகளை கழற்றி வைத்துவிட்டு குளிப்பது நல்லது.அதேபோல் நகைகளில் அதிகப்படியான அழுக்குகள் படிந்திருந்தால் அவற்றை நகை கடைகளில் கொடுத்து தரமான முறையில் சுத்தம் செய்து வாங்கிக் கொள்வது சிறந்தது. அதை விடுத்து, காணொளிகளைப் பார்த்து நாமாகவே நகைகளை சுத்தம் செய்யும் பொழுது அதில் பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது.

    நகைகளை அணிந்துகொண்டு அதன் பின்னர் வாசனை திரவியங்களை நகைகளில் படும்படி ஸ்பிரே செய்து கொள்வதை தவிர்க்க வேண்டும். இந்த ரசாயன திரவங்கள் நகைகளின் மீது படும்பொழுது மோசமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும். இதனால், தரமான தங்கத்தினால் செய்யப்பட்ட நகைகளாக இருந்தாலும் அவை நிறம் மாறுவதற்கும், வலுவின்றி தொய்வடைந்து அறுபடுவதற்கும் வாய்ப்புகள் அதிகம். நகைகளை அணிந்துகொண்டு உடற்பயிற்சி செய்வதையும் தவிர்க்க வேண்டும். உடற்பயிற்சி செய்யும் போது வெளிப்படும் அதிகப்படியான வியர்வையானது நகைகளில் படிந்து நகைகளின் பொலிவைக் குறைத்துவிடும்.சிறிய நகையாகவே இருந்தாலும் உடற்பயிற்சியின்போது அவற்றை அணிவதை தவிர்க்க வேண்டும்.

    இப்பொழுது வளையல், கம்மல், மோதிரம், நெக்லஸ் மற்றும் மாலைகளை வைப்பதற்கு தனித்தனியாக வடிவமைக்கப்பட்ட நகை பெட்டிகளை நகைக்கடைகளிலேயே விற்பனை செய்வதைப் பார்க்க முடிகின்றது.நான்கு ஜோடி கம்மல் முதல் ஆறு ஜோடி, 12 ஜோடி என பல ஜோடிகளை ஒரே பெட்டியில் பாதுகாப்பாக வைத்துக் கொள்வது போல் நகை பெட்டிகள் விற்பனை செய்யப்படுகின்றன. இவற்றை மடக்கி வைத்துக் கொள்வது போல் வடிவமைத்திருக்கிறார்கள். இவ்வாறு மடக்கும் பொழுது கம்மல்கள் ஒன்றுடனொன்று உரசாமல் இருப்பதுபோல் அதன் வடிவமைப்பு இருக்கின்றது.

    மேலும் இடத்தை அடைக்காமல் சிறிய இடத்திலேயே இதுபோன்ற பெட்டிகளில் அதிகமான நகைகளை வைத்துக்கொள்ள முடியும். மேலும் வெளியூர்களுக்கு நகைகளை எடுத்துச் செல்லும் பொழுதும் இந்தப் பெட்டிகள் மிகவும் கனக்கச்சிதமாக நம்முடைய கைப்பைகளில் அடங்கிவிடும்.இதேபோல் வளையல்கள், மோதிரம், மூக்குத்தி, நெக்லஸ் போன்றவற்றை ஒரே பெட்டியில் தனித்தனியாக வைத்துக் கொள்வதற்கு உண்டான இடங்களுடன் வந்திருக்கும் பெட்டிகளும் நம்முடைய நகைகளை பாதுகாப்பாக எடுத்துச் செல்வதற்கும், வீட்டில் எந்தச் சேதமும் ஏற்படாமல் வைத்துக் கொள்வதற்கும் உண்டான சிறந்த வழிகளில் ஒன்றாகும்.எவ்வளவு அவசரமாக இருந்தாலும் தங்க நகைகளை, இமிடேஷன் நகைகளுடன் வைப்பதை தவிர்க்க வேண்டும்.ஆண்டுக்கு ஒரு முறையாவது அனைத்து நகைகளையும் சரிபார்த்து அவற்றுக்கு பாலிஷ் தேவைப்பட்டால் கடைகளில் கொடுத்து பாலிஷ் செய்து வைத்துக்கொள்ளலாம்.

    • சருமத்தை எவ்வித பக்க விளைவுகள் இன்றி அழகாக மாற்றலாம்.
    • சிவப்பு சந்தனத்தை எப்படி, எதனுடன் சேர்த்து பயன்படுத்துவது என்று காண்போம்.

    சிவப்பு சந்தனத்தில் சருமத்திற்கு தேவையான அனைத்து சத்துக்களும் ஏராளமாக நிறைந்துள்ளன. எனவே இவற்றைக் கொண்டு தினமும் முகத்திற்கு மாஸ்க் போட்டு வந்தால், சருமத்தில் ஏற்படும் பல பிரச்சினைகளைத் தடுக்கலாம்.

    • உங்கள் சருமம் ஆரோக்கியமான முறையில் காட்சியளிக்க வேண்டுமானால், சரும செல்களுக்கு போதிய ஊட்டச்சத்துக்களை வழங்க வேண்டியது அவசியம். அச்செயலை சிவப்பு சந்தனம் சிறப்பாக செய்யும். எனவே 2 தேக்கரண்டி சிவப்பு சந்தனப் பொடியை தண்ணீர் சேர்த்து பேஸ்ட் செய்து, தினமும் முகம், கை, கால்களுக்கு தடவி வர, உங்கள் சருமம் நன்கு ஆரோக்கியமாக காட்சியளிக்கும்.

    • உங்கள் முகம் எப்போதும் பொலிவிழந்து சோர்வாக காணப்படுகிறதா? அதைத் தடுக்க சிவப்பு சந்தனத்தைப் பயன்படுத்துங்கள். அதற்கு ஒரு பௌலில் 2 தேக்கரண்டி தயிர் அல்லது பாலை ஊற்றி, அதில் 1 தேக்கரண்டிசிவப்பு சந்தனப் பொடி மற்றும் 1/2 தேக்கரண்டிமஞ்சள் தூள் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 1/2 மணிநேரம் ஊற வைத்து கழுவ வேண்டும்.

    • பருக்களால் வந்த தழும்புகள் முக அழகைக் கெடுக்கும். அதனை சிவப்பு சந்தனம் கொண்டு எளிதில் போக்கலாம். அதற்கு 4 தேக்கரண்டி தேங்காய் பாலில், 2 தேக்கரண்டி பாதாம் எண்ணெய் மற்றும் 4 தேக்கரண்டி சந்தனப் பொடி சேர்த்து கலந்து தினமும் முகத்திற்கு தடவி வந்தால், சருமத்தில் உள்ள தழும்புகள் விரைவில் மறையும்.

    • சிலருக்கு முகத்தில் எண்ணெய் அதிகம் வழியும். அத்தகையவர்கள் அந்த எண்ணெய் பசையை நீக்க, 1 தேக்கரண்டிசிவப்பு சந்தனப் பொடியில், 1 எலுமிச்சையின் சாற்றினை சேர்த்து கலந்து, முகத்தில் தடவி சிறிது நேரம் ஊற வைத்து பின் கழுவ வேண்டும். இதனால் சருமத் துளைகள் இறுக்கமடைந்து, எண்ணெய் பசை நீங்கும்.

    • வெயிலில் அதிகம் சுற்றி சருமம் கருமையாக இருந்தால், அதனை எளிதில் நீக்க சிவப்பு சந்தனம் உதவும். அதற்கு தினமும் 2 தேக்கரண்டி சந்தன பொடியில், தயிர் சேர்த்து நன்கு பேஸ்ட் செய்து, முகம், கை, கால்களில் தடவி 1/2 மணிநேரம் ஊற வைத்து கழுவுங்கள். இதனால் நல்ல மாற்றத்தைக் காணலாம்.

    • சிலர் முகப்பருவால் அதிகம் அவஸ்தைப்படுவார்கள். அத்தகையவர்கள் தினமும் சிவப்பு சந்தனப் பொடியை நீர் அல்லது ரோஸ் வாட்டர் சேர்த்து பேஸ்ட் செய்து முகத்தில் தடவி ஊற வைத்து கழுவி வர, அப்பிரச்சினையில் இருந்து விடுபடலாம்.

    • சிலருக்கு முகத்தில் அங்கும் இங்குமாக பல இடத்தில் கருந்திட்டுகள் இருக்கும்.
    • கருந்திட்டுகள் பிரச்சனைக்கு சித்த மருத்துவத்தில் நிரந்தர தீர்வு உண்டு.

    முகத்தில் உள்ள கருமை நிறத் திட்டுகள் நீங்க உதவும் சித்த மருந்து குங்குமாதி லேபம். இதை இரவு நேரங்களில் முகத்தில் பூசி வர வேண்டும். அடுத்து, ஒரு ஜாதிக்காய், 2 பாதாம் பருப்பு எடுத்து நன்றாக பொடி செய்து அரைத்து அதை கருந்திட்டு உள்ள இடத்தில் பூசி வர வேண்டும்.

    ஜாதிக்காயிலுள்ள 'மிரிஸ்டிசின்' என்னும் சத்து, தோல் கருமை, தோல் சுருக்கம் ஏற்படாமல் தடுத்து, முதுமையிலும் இளமையான தோற்றத்தை தரும். வாரம் இருமுறை சோற்றுக் கற்றாழை ஜெல்லுடன் எலுமிச்சைச் சாறு கலந்து, முகத்தை மசாஜ் செய்ய வேண்டும். இது முகத்திற்கு இயற்கை சூரிய எதிர்ப்பு கவசமாகத் திகழும். இதனால் முகத்தில் ஏற்படும் கருந்திட்டுகள் மறையும்.

    100 மில்லி அளவு தேங்காய் எண்ணெய் எடுத்து அதில் குங்குமப்பூ ஒரு கிராம் சேர்த்து அரைத்து வைத்துக்கொள்ள வேண்டும். சூரியக்கதிர்கள் உடலில் படும் இடங்களான முகம், கழுத்து, கை, கால்களில் இதை தினமும் தடவி வர வேண்டும். இதன்மூலம் சூரியக் கதிரினால் வரும் கருமையை நீக்கி தோலுக்கு இளமையான வசீகரத்தைப்பெறலாம்.

    வைட்டமின் ஏ சத்துள்ள உணவுகள் தோலின் கொலாஜன் மற்றும் எலாஸ்டிக் தன்மையை அதிகப்படுத்தும். இவற்றிலுள்ள ரெட்டினாய்டுகள் தோலுக்கு பளபளப்பைக் கொடுக்கும். ஆகவே, வைட்டமின் ஏ சத்து நிறைந்த மாம்பழம், பப்பாளி, கேரட், முருங்கைக்காய், கீரை, முட்டை, மீன், இறைச்சி, பால் மற்றும் தர்ப்பூசணி பழம், வெள்ளரிக்காய் இவைகளை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். முகத்தை அடிக்கடி தண்ணீரில் கழுவி வர வேண்டும்.

    சித்த மருத்துவ    நிபுணர் டாக்டர் ஒய். ஆர். மானக்சா, எம்.டி. (சித்தா)

    மின்னஞ்சல்: doctor@dt.co.in,

    வாட்ஸ் அப்: 7824044499

    • நகைகளை அணிந்துகொண்டு உடற்பயிற்சி செய்வதையும் தவிர்க்க வேண்டும்.
    • நகைகளை பிரத்யேகமாக இருக்கும் பெட்டிகளில் வைக்க வேண்டும்.

    வைரம், ரூபி, எமரால்டு,நீலக்கல், புஷ்பராகம், சாலிடர் போன்ற கற்கள் பதித்த நகைகளை மற்ற நகைகளுடன் அணிவதை தவிர்க்க வேண்டும். இவ்வாறு தனியாக அணியும் பொழுது அவற்றில் உராய்வு ஏற்படுவது தவிர்க்கப்படுகிறது. கற்கள் பதித்த நகைகளில் நுணுக்கமான வேலைப்பாடுகள் இருப்பதால் வெகு சீக்கிரமாகவே அழுக்கு படிந்து நாளடைவில் அவற்றை நாம் சரிவர சுத்தம் செய்ய மறந்தால் நகையின் பிரகாசம் மங்கி பித்தளை போல தோன்றி விடக்கூடிய ஆபத்துகள் அதிகம் இருக்கின்றது.

    எனவே குறிப்பிட்ட கால இடைவெளியில் இந்த நகைகளை கவனித்து அவற்றைச் சுத்தம் செய்து பத்திரமாக அவற்றிற்கென பிரத்யேகமாக இருக்கும் பெட்டிகளில் வைக்க வேண்டும். நகைகளை வெளியில் அணிந்து சென்று விட்டு வந்த பிறகு அப்படியே சுருட்டி மடக்கி பைகளிலோ அல்லது பெட்டிகளிலோ வைக்கக்கூடாது.இவ்வாறு மடக்கி வைக்கும் பொழுது விரைவிலேயே நகைகள் உடைந்து போவதற்கான வாய்ப்புகள் அதிகம். எனவே நகைகளை பாதுகாப்பாக வைப்பதற்கு தரமான சாட்டின் துணியால் வடிவமைக்கப்பட்ட நகைபெட்டிகளைப் பயன்படுத்துங்கள்.

    நகைகளை அணிந்துகொண்டே குளிப்பது, துணிகளை துவைப்பது, பாத்திரங்களை கழுவுவது போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.குறிப்பாக நீச்சல் குளங்களில் குளிக்கும் பொழுது அங்கிருக்கும் குளோரின் கலந்த நீரானது நகைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் நகைகளை கழற்றி வைத்துவிட்டு குளிப்பது நல்லது.அதேபோல் நகைகளில் அதிகப்படியான அழுக்குகள் படிந்திருந்தால் அவற்றை நகை கடைகளில் கொடுத்து தரமான முறையில் சுத்தம் செய்து வாங்கிக் கொள்வது சிறந்தது.

    அதை விடுத்து, காணொளிகளைப் பார்த்து நாமாகவே நகைகளை சுத்தம் செய்யும் பொழுது அதில் பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது.நகைகளை அணிந்துகொண்டு அதன் பின்னர் வாசனை திரவியங்களை நகைகளில் படும்படி ஸ்பிரே செய்து கொள்வதை தவிர்க்க வேண்டும். இந்த ரசாயன திரவங்கள் நகைகளின் மீது படும்பொழுது மோசமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும்.

    இதனால், தரமான தங்கத்தினால் செய்யப்பட்ட நகைகளாக இருந்தாலும் அவை நிறம் மாறுவதற்கும், வலுவின்றி தொய்வடைந்து அறுபடுவதற்கும் வாய்ப்புகள் அதிகம். நகைகளை அணிந்துகொண்டு உடற்பயிற்சி செய்வதையும் தவிர்க்க வேண்டும். உடற்பயிற்சி செய்யும் போது வெளிப்படும் அதிகப்படியான வியர்வையானது நகைகளில் படிந்து நகைகளின் பொலிவைக் குறைத்துவிடும்.சிறிய நகையாகவே இருந்தாலும் உடற்பயிற்சியின்போது அவற்றை அணிவதை தவிர்க்க வேண்டும்.

    இப்பொழுது வளையல், கம்மல், மோதிரம், நெக்லஸ் மற்றும் மாலைகளை வைப்பதற்கு தனித்தனியாக வடிவமைக்கப்பட்ட நகை பெட்டிகளை நகைக்கடைகளிலேயே விற்பனை செய்வதைப் பார்க்க முடிகின்றது.நான்கு ஜோடி கம்மல் முதல் ஆறு ஜோடி, 12 ஜோடி என பல ஜோடிகளை ஒரே பெட்டியில் பாதுகாப்பாக வைத்துக் கொள்வது போல் நகை பெட்டிகள் விற்பனை செய்யப்படுகின்றன. இவற்றை மடக்கி வைத்துக் கொள்வது போல் வடிவமைத்திருக்கிறார்கள். இவ்வாறு மடக்கும் பொழுது கம்மல்கள் ஒன்றுடனொன்று உரசாமல் இருப்பதுபோல் அதன் வடிவமைப்பு இருக்கின்றது.

    மேலும் இடத்தை அடைக்காமல் சிறிய இடத்திலேயே இதுபோன்ற பெட்டிகளில் அதிகமான நகைகளை வைத்துக்கொள்ள முடியும். மேலும் வெளியூர்களுக்கு நகைகளை எடுத்துச் செல்லும் பொழுதும் இந்தப் பெட்டிகள் மிகவும் கனக்கச்சிதமாக நம்முடைய கைப்பைகளில் அடங்கிவிடும்.இதேபோல் வளையல்கள், மோதிரம், மூக்குத்தி, நெக்லஸ் போன்றவற்றை ஒரே பெட்டியில் தனித்தனியாக வைத்துக் கொள்வதற்கு உண்டான இடங்களுடன் வந்திருக்கும் பெட்டிகளும் நம்முடைய நகைகளை பாதுகாப்பாக எடுத்துச் செல்வதற்கும், வீட்டில் எந்தச் சேதமும் ஏற்படாமல் வைத்துக் கொள்வதற்கும் உண்டான சிறந்த வழிகளில் ஒன்றாகும்.

    எவ்வளவு அவசரமாக இருந்தாலும் தங்க நகைகளை, இமிடேஷன் நகைகளுடன் வைப்பதை தவிர்க்க வேண்டும்.ஆண்டுக்கு ஒரு முறையாவது அனைத்து நகைகளையும் சரிபார்த்து அவற்றுக்கு பாலிஷ் தேவைப்பட்டால் கடைகளில் கொடுத்து பாலிஷ் செய்து வைத்துக்கொள்ளலாம்.

    • முத்துக்கள் மிகவும் மென்மையானவை.
    • சில சோதனைகளைச் செய்தால் கண்டுபிடித்து விடலாம்.

    ஒரிஜினலுக்கும் போலிக்கும் பார்க்கும் போது வித்தியாசம் தெரியாது. சில சோதனைகளைச் செய்தால் கண்டுபிடித்து விடலாம். முதல் டெஸ்ட், முன் பற்களில் முத்தை வைத்து மெதுவாக பிரஷ் செய்வது போல தேய்க்க வேண்டும். பற்களில் 'கரகர' என்ற மெல்லிய சத்தத்துடன் உராய்வுத் தன்மை தெரிந்தால் அது ஒரிஜினல். வழுக்கிக் கொண்டு ஓடினால் சந்தேகமே

    இல்லாமல் அது பிளாஸ்டிக். 2வது டெஸ்ட் இரண்டு முத்துகளை எடுத்து உரசுங்கள். உராய்வுத் தன்மை இருந்தால் ஒரிஜினல். வழுக்கிக் கொண்டு ஓடினால் அது போலி. 

    இதிலும் திருப்தி ஏற்படாவிட்டால் 3வது கட்ட சோதனையைச் செய்யலாம். அதாவது, முத்தை உடைத்துப் பார்ப்பது. உடைத்ததும் உள் பக்கம் அடுக்கடுக்காக இருந்தால் அது ஒரிஜினல். ஒழுங்கற்ற வடிவத்தில் இருந்தால் அது போலி. இதற்கும் அடுத்த கட்டம் லேப்புக்கு எடுத்துச் சென்று சோதனை செய்து பார்ப்பது. கடைசியாக உள்ள இரண்டு சோதனைகளைச் செய்ய வேண்டிய தேவை அதிகம் ஏற்படாது. முதல் இரு கட்ட சோதனையிலேயே போலியின் சாயம் வெளுத்து விடும். இது தவிர, ஒரிஜினல் முத்தின் எடை அதிகமாக இருக்கும். போலியின் எடை குறைவாக இருக்கும். இப்போது சிலர், எடையை அதிகப்படுத்தி ஒரிஜினல் மாதிரியே விற்கிறார்கள். அவை செராமிக் மற்றும் கண்ணாடியில் உருவாக்கப்பட்டவை. பிளாஸ்டிக்கால் ஆன முத்து வெயிட்லெஸ் ஆக இருக்கும்... விலை குறைவாகவும் இருக்கும்.

    எப்பொழுதுமே முத்து நகைகளை மற்ற நகைகளுடன் அணிவதைத் தவிர்க்க வேண்டும். முத்துக்கள் மிகவும் மென்மையானவை. எனவே முத்துக்களில் எளிதில் சிராய்ப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது. அப்படி வைத்தால், உராய்வு ஏற்பட்டு முத்து நகைகள் சீக்கிரமே பாழாகிவிடும். முத்தினால் செய்த மாலைகள், நெக்லஸ்கள் மற்றும் ஹாரம் போன்றவற்றை தொங்கிய நிலையிலேயே வைக்கக்கூடாது.

    இவ்வாறு தொங்கவிடும் பொழுது முத்துச் சரங்கள் தளர்வடைய வாய்ப்புள்ளது. முத்து நகைகளை சாதாரண குளோரின் கலந்த நீரில் கழுவுவதை தவிர்த்து சுத்தமாக காய்ச்சி வடிகட்டிய நீரில் கழுவலாம். முத்து நகைகளை அணிந்து கொண்டு ஹேர் டிரையர் உபயோகிப்பது, ஒப்பனை செய்து கொள்வது போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.

    உடைகளை அணிந்து, மேக்கப் எல்லாம் போட்டு முடித்த பிறகுதான் முத்து நகைகளை அணிய வேண்டும். அதே போல் வீட்டுக்கு வந்ததும் அவற்றைக் கழற்றி வைத்த பிறகுதான் மற்ற வேலைகளைத் தொடர வேண்டும்.

    ஒப்பனை பொருட்களில் இருக்கும் ரசாயனங்களும், ஹேர் டிரையரில் இருந்து வரும் அதிகப்படியான சூடான காற்று முத்துக்கள் நிறம் மாறுவதற்கும், விரிசல் அடைந்து உடைவதற்கும் காரணமாக அமைந்துவிடும்.

    பெர்ஃப்யூம், சோப் போன்ற ரசாயனப் பொருட்கள் முத்து நகைகள் மீது படாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது அவசியம்.

    முத்து நகைகளை ஒரு வெள்ளைத் துணியில் சுற்றி வைத்திருப்பது நல்லது. இப்படிச் செய்தால் முத்து, நீண்ட நாட்கள் உழைக்கும்.

    • தலைமுடியை தினமும் சீவுவது முடியை பளபளப்பாக வைக்க உதவும்.
    • தலைமுடி ஆரோக்கியமாக இருக்க உதவும்.

    தினமும் பல் துவக்குவது, குளிப்பது போன்று தலைமுடியையும் தவறாமல் சீவுவது அவசியம் மற்றும் முக்கியம் என்பது தெரியுமா?

    காலை ஒருமுறை, இரவு தூங்கும் முன் ஒருமுறை என சராசரியாக நாளொன்றுக்கு 2 முறை தலைமுடியை முறையாக சீவ நிபுணர்கள் பரிந்துரைக்கிறார்கள்.

    தினம் சீப்பை வைத்து தலைமுடியை சீவினால் அது உச்சந்தலையில் ரத்த ஓட்டத்தை ஊக்குவித்து முடி வேர்களை பலமாக்கும்.

    உச்சந்தலையில் காணப்படும் செபாசியஸ் சுரப்பிகள் sebum-த்தை உற்பத்தி செய்கின்றன. இயற்கையாகவே முடியை நிலைநிறுத்தி பாதுகாக்க இந்த sebum உதவுகிறது. தினமும் 2 முறை அல்லது அதற்கு மேல் தலை சீவும் போது செபாசியஸ் சுரப்பிகள் தூண்டப்பட்டு சருமத்தில் இருந்து முடியின் வேர் வரை இயற்கை எண்ணெய்கள் சரியாக செல்வது உறுதி செய்யப்படுகிறது.

    தலைமுடியை தினமும் சீவுவது முடியை பளபளப்பாக வைக்க உதவும்.

    தினமும் தவறாமல் தலை சீவி வருவது பழைய முடி, இறந்த சரும செல்கள், ஹேர் ப்ராடக்டின் மிச்சங்கள், அழுக்கு, முடி மற்றும் உச்சந்தலையில் உள்ள மற்ற படிந்துள்ள தேவையற்றவற்றை சுத்தம் செய்ய உதவுகிறது.

    அவ்வப்போது தலைமுடியை சீவினால் அது முடியின் அளவை அதிகரிக்கவும், தலைமுடி ஆரோக்கியமாகவும், புத்துணர்ச்சியாகவும் இருக்க உதவி புரிகின்றது. 

    • கூந்தலுக்கு செயற்கை சாயம் பூசும் போது முகம் கருத்துப்போகும்.
    • இதை தவிர்க்க நீங்கள் வீட்டிலேயே இயற்கை சாயம் தயாரிக்கலாம்.

    வயதாகும் போதும், சில சத்துக்கள் குறைபாடு மற்றும் பரம்பரை அறிகுறிகள் காரணமாகவும் தலைமுடி நரைப்பதுண்டு. இதற்கு சந்தையில் கிடைக்கும் தைலங்கள், பவுடர்களில் ரசாயனம் கலந்திருக்கும். இது பலருக்கு தோல் அலர்ஜி மற்றும் பாதிப்புகளை ஏற்படுத்தும். ரசாயனம் கலந்த செயற்கை சாயம் பூசும் போது முகம் கருத்துப்போகும். இதை தவிர்த்து நீங்கள் வீட்டிலேயே இயற்கை சாயம் தயாரித்து நரை முடியில் பூசி கருப்பாக மாற்றலாம்.

    தேவையான பொருட்கள்:

    அவுரி இலை சாறு, கறிவேப்பிலை சாறு, மருதோன்றி இலை சாறு, பீட்ரூட் சாறு, தேயிலை டிக்காஷன் போன்றவற்றை சம அளவில் எடுத்துக்கொள்ளுங்கள். இத்துடன் 5 முதல் 10 செம்பருத்தி பூவை அரைத்து கலந்து கொள்ளுங்கள். இதை ஒரு பாத்திரத்தில் ஊற்றி அடுப்பில் வைத்து தண்ணீர் வற்றும்வரை நன்றாக கொதிக்க வைக்க வேண்டும். களிம்பு பதத்திற்கு வந்ததும், அடுப்பில் இருந்து இறக்கி நன்றாக ஆற வைக்கவும். பின்னர் தேவையான அளவு எடுத்து தலைமுடியில் நன்றாக தேய்த்து ஒரு மணி நேரம் ஊறவைத்த பின்னர் குளிக்க வேண்டும். இவ்வாறு வாரம் தோறும் செய்து வந்தால் நரை முடி நிறம் மாறும், இதனால் உடல் சூடும் குறையும், கண்கள் குளிர்ச்சி பெறும்.

    சித்த மருத்துவ நிபுணர் டாக்டர் ஒய்.ஆர். மானக்சா எம்.டி. (சித்தா)

    மின்னஞ்சல்: doctor@dt.co.in,

    வாட்ஸ் அப்: 7824044499

    • கான்ட்ராஸ்டாக சேலைகளை அணிந்து செல்வதே இன்றைய டிரெண்ட் என்று சொல்லலாம்.
    • பிளவுஸ்களுக்கென்று தனிக்கவனத்தை பெண்கள் கொடுத்து வருகிறார்கள்.

    மணப்பெண் பிளவுஸ்களுக்கென்றே பிரத்யேகமான டிசைன்களும், அதைத் தைப்பதற்கென்றே சிறப்பான தையல் கலைஞர்களும் உள்ளனர் என்பதைக் கேட்கும்போதே அதை தெரிந்துக் கொள்ள ஆர்வமாக இருக்கிறதல்லவா?

    கடந்த சில வருடங்களாகவே புடவைக்கு அணியும் ஜாக்கெட் (பிளவுஸ்)களுக்கென்று தனிக்கவனத்தை பெண்கள் கொடுத்து வருகிறார்கள். விதவிதமான வேலைப்பாடுகளுடன் அருமையாகத் தைத்து அதற்கேற்றாற்போல் கான்ட்ராஸ்டாக சேலைகளை அணிந்து செல்வதே இன்றைய டிரெண்ட் என்று சொல்லலாம்.

    இப்படி டிரெண்டான விஷயங்களை, யூ-டியூப் வீடியோவாக மாற்றி, தனக்கென லட்சக்கணக்கான ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி இருக்கிறார், சத்யா பாலசுப்பிரமணியன். சென்னையைச் சேர்ந்தவரான இவர், எம்.எஸ்சி பட்டதாரி. தையல் கலை, இவரது குடும்பத் தொழில் என்பதால், அதில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு, அதில் நுழையும் நவீனங்களை, யூ-டியூப் மூலமாக குடும்ப தலைவிகளுக்கு விளக்குகிறார். இவரது சமூக வலைத்தளங்களில், தையல் கலை சம்பந்தமான எல்லா நுணுக்கங்களும், அதன் செய்முறைகளும் விளக்கமாக கொடுக்கப்பட்டிருப்பதால், தையல் கலை பயில ஆர்வமாக இருப்பவர்களுக்கு பெரும் உதவியாக இருக்கிறது.

    தையல் கலையின் புதுமைகளை, பிளவுஸ் வேலைபாட்டின் நுணுக்கங்களை... யூ-டியூப்பில் விளக்கி வரும் சத்யாவிடம், பிளவுஸ் பற்றிய பல கேள்விகளை எழுப்பினோம். அவர், பதிலளித்தவை இதோ....

    * பிளவுஸ் அன்றும் இன்றும் எப்படி மேம்பட்டிருக்கிறது?

    முன்பு குறிப்பிட்ட சில வகை கழுத்து வகைகள் (நெக்) மட்டுமே பிரபலமாக இருந்தன. பலர், தங்களுக்கு பொருத்தமான நெக் வகைகளை மட்டுமே, எல்லா கொண்டாட்டங்களிலும் தைத்து அணிந்தனர். ஆனால் இப்போது அப்படி இல்லை. புதிது புதிதான நெக் வகைகளையும், பெண்கள் அணிந்து பார்க்க ஆசைப்படுவதால், நிறைய நெக் வகைகள் அறிமுகமாகி இருக்கின்றன. கூடவே சிலீவ் வகைகள் ஏராளமாக வந்துகொண்டே இருக்கின்றன.

    * சமீப காலமாக புடவைக்கு செலவழிப்பது போல, பிளவுஸ் விஷயத்திலும் பாரபட்சமில்லாமல் செலவழிக்கிறார்கள். சிறப்பான வேலைப்பாடுகளுடன் பிளவுஸ் அணிகிறார்கள். அது ஏன்?

    பெண்கள் பொதுவாக தங்களை அழகாக காட்டிக் கொள்வதில் அதிக அக்கறை காட்டுகிறார்கள். இதன் காரணமாக, மற்றவர்களிடத்தில் இருந்து தங்களை வேறுபடுத்தி, சிறப்பாக காட்சிப்படுத்திக் கொள்வதற்காகவே, பிளவுஸ் வகைகளை புதுப்புது வேலைபாடுகளில் அலங்கரிக்கிறார்கள். சிலர் சேலைக்கு நிகரான செலவில், பிளவுஸையும் அலங்கரித்து அணிகிறார்கள்.

    * பிளவுஸை, எப்படியெல்லாம் அழகாக்கலாம்?

    புதுமையான கழுத்து வகைகளை வைத்து, தையல் கலையிலேயே பிளவுஸ் வகைகளை பிரமாண்டமாக தைக்கலாம். இதுபோக, ஆரி வேலைபாடுகள், பிளவுஸை நேர்த்தியாக்கும். திருமணங்கள், விழா கொண்டாட்டங்களில் கலந்துகொள்ளும் பெண்கள், ஆரி வேலைப்பாடுகள் கொண்ட பிளவுஸ் வகைகளையே அதிகம் விரும்புகிறார்கள். ஆரி வேலைப்பாடுகளில், மெஷின் வேலைப்பாடு மற்றும் கைகளில் செய்யப்படும் வேலைப்பாடு என மதிப்பும், அதன் தரமும் வேறுபடும். இவை கூடவே, பெயிண்டிங் மற்றும் எம்ப்ராய்டரி வேலைப்பாடுகளும் இப்போது பிளவுஸ்களை அலங்கரிக்கின்றன.

    * பிளவுஸ் மோகம் நகரங்களுக்கும், கிராமங்களுக்கும் இடையே வேறுபடுகிறதா?

    நிச்சயமாகவே வேறுபடுகிறது. நகரங்களில் அதிகமாக பயன்படுத்தப்படும் பிரின்சஸ்கட் பிளவுஸ் மற்றும் சிலீவ்லெஸ், பேன்சி பிளவுஸ் வகைகள் கிராமப்புற பெண்களிடையே அதிக வரவேற்பு பெறுவதில்லை. அதேசமயம் நகர பெண்கள், எல்லா வகையான பிளவுஸ் டிசைன்களையும் அணிந்து கொள்ள ஆர்வமாக இருக்கிறார்கள்.

    * என்னென்ன பிளவுஸ் வகைகள் இருக்கின்றன?

    பிளவுஸ் என்பதற்குள் எண்ணிலடங்கா மாடல்கள் இருக்கின்றன. பொதுவாக அதை வகைப்படுத்தி சொல்லும்போது பிளைன் பிளவுஸ், லைனிங் பிளவுஸ், பிரின்சஸ் கட் பிளவுஸ், பிரின்சஸ் கட் வித் கப் பிளவுஸ், சிங்கிள் கட்டோரி பிளவுஸ், டபுள் கட்டோரி பிளவுஸ், டிசைனர் பிளவுஸ், பிரெய்டல் பிளவுஸ், பேன்சி பிளவுஸ், காலர் பிளவுஸ், போட் நெக் பிளவுஸ்... இப்படி நிறைய வகைகள் இருக்கின்றன.

    * விழாக்கள், அலுவலகம், கேஷ்வல் என நிகழ்வுகளுக்கு ஏற்ப அணியும் பிளவுஸ் வகைகள் மாறுபடுமா?

    ஆம். மாறுபடும். வரவேற்பு மற்றும் பார்ட்டி கொண்டாட்டங்களுக்கு டிசைனர் பிளவுஸ் மற்றும் பேன்சி பிளவுஸ் சிறப்பாக இருக்கும். கல்யாணம், திருவிழா மற்றும் தெய்வீக விழாக்களுக்கு பாரம்பரிய முறைப்படி பிளவுஸ் அணிவது உகந்ததாக இருக்கும். இதற்கு கிளாசிக் பிளவுஸ் சிறந்தது. அலுவலகங்களுக்கு காட்டன் சேலையுடன் கூடிய காட்டன் பிளவுஸ் வகைகள் சரியாக இருக்கும்.

    * காட்டன் சேலைகளுக்கு அணியக்கூடிய காட்டன் பிளவுஸ் வகைகள் பற்றி கூறுங்கள்?

    போட் நெக், சைனீஸ் காலர் நெக், ஸ்லீவ்லெஸ் பிளவுஸ், ப்ளோர் டைப் ஸ்லீவ் பிளவுஸ், ஷர்ட் டைப், வெல்வெட் பிளவுஸ், பின்புற நெக் டிசைன்... இப்படி காட்டன் வகைகளில் நிறைய பிளவுஸ் வகைகள் இருக்கின்றன.

    * பிளவுஸ் வகைகளில் சமீபத்திய புது வரவு எது?

    போட் நெக் பிரின்சஸ் கட் பிளவுஸ் மற்றும் ஆரி ஒர்க் பிளவுஸ்தான் சமீபத்திய டிரெண்ட் பிளவுஸ்கள்.

    * டீன் ஏஜ் பெண்கள் மத்தியில் டிரெண்டான பிளவுஸ் வகை எது? ஏன்?

    போட் நெக் வகையில் தயாரான பிரின்சஸ் கட் பிளவுஸ் டீன் ஏஜ் பெண்கள் மத்தியில் ரொம்பவும் பிரபலம். அதேபோல, சிலீவ்லெஸ் பிளவுஸ் வகைகளும், இளம் பெண்களின் பிடித்தமான பட்டியலில் முக்கிய இடம் பிடிக்கிறது. இவை இரண்டும், பார்ப்பதற்கு எப்போதும் டிரெண்டாகவே இருக்கும். அதேபோல இளமையான தோற்றத்திற்கு வழிவகுக்கும் என்பதால், டீன் ஏஜ் பெண்கள் இவற்றை விரும்புகிறார்கள்.

    * பிளவுஸ் தையல் கலை எத்தகைய வளர்ச்சியை பெற்றிருக்கிறது?

    உடை நாகரிகத்தின் வளர்ச்சிக்கு ஏற்ப பிளவுஸ் தையல் கலையும், தன்னைத் தானே புதுப்பித்துக் கொள்கிறது. நவீனமாக அறிமுகமாகும், சேலை வகை களுக்கு ஏற்ப, பிளவுஸ் வகைகளையும் நவீனமாக்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது என்பதால், புதுமையான கலை வடிவங்களை பிளவுஸ் வேலைபாடுகளில் புகுத்தி வருகிறோம்.

    * பெரும்பாலான குடும்ப தலைவிகள் பிளவுஸ் தையல் கலை பயில ஆர்வம் காட்டுவது ஏன்?

    டெய்லரிங் கலை அனைவராலும் எளிதாக கற்றுக்கொள்ளக்கூடிய கலை என்பதாலும், இதற்கு பெரிய உபகரணங்களோ, பெரிய முதலீடோ தேவைப்படாது என்பதாலும், இந்தக் கலையை கற்க, குடும்ப தலைவிகள் ஆர்வம் காட்டுகிறார்கள். மேலும் இதை கற்றுக்கொள்வதால், தங்களுடைய பிளவுஸ் தேவையையும் பூர்த்தி செய்துகொண்டு, வேலைப்பாடுகளுக்கு ஏற்ப கணிசமான வருவாயையும் ஈட்டமுடியும்.

    • சருமத்தில் சுருக்கங்கள் குறையும்.
    • முடி கொட்டுவதும் நிற்கும்.

    பாசிப்பருப்பு, கடலை மாவு, ரோஜா மொட்டு, வெட்டி வேர், கோரைக் கிழங்கு மற்றும் கஸ்தூரி மஞ்சளுடன் ஆவாரம்பூவைச் சம அளவு சேர்த்துச் சிறிதளவு வசம்பும் சேர்த்து அரைத்துக்கொள்ளவும். சோப்புக்குப் பதில் இந்த மூலிகைக் கலவையைத் தேய்த்துக் குளிப்பதன்மூலம் சருமம் பொன் நிறமாக மாறும். அத்துடன் சருமம் சுத்தமடைந்து தேமல், கரும்புள்ளிகள் மறையும். தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் சருமத்தில் சுருக்கங்கள் குறையும்.

    ஆவாரம் பூ பொடியை மேனிக்கு பயன்படுத்தினால் மேனி பொன் நிறமாகும். இதனை குளியல் பொடியுடன் சேர்த்து பயன்படுத்தலாம். அல்லது ஆவாரம் பூ தேநீர் குடித்தாலும் இரத்தம் சுத்தமாகி மேனி தங்க நிறம் பெரும்.

    ஆவாரம் பூவுடன் ஊறவைத்த பாசிப்பயறு சேர்த்து அரைத்து குளித்தால் நமைச்சல் துர்நாற்றம் நீங்கும்.

    ஆவாரம் பூவுடன் சிறு வெங்காயம், பருப்பு சேர்த்து கூட்டு செய்து வாரம் ஒரு முறை உண்டு வர உடல் அழகு பெறும். வடிக்கட்டி வைத்துள்ள ஆவாரம் பூவின் தண்ணீரைக் கொண்டு முடியை அலச பளபளவென்றிருக்கும். இதனால் உடல் நிறமும் கூடுவதுடன் புத்துணர்வாகவும் இருக்கும்.

    ஒரு கைப்பிடி அளவு ஆவாரம் பூவை அரைத்து சாறெடுத்து, சுண்ட காய்ச்சி அத்துடன் தேங்காய் எண்ணெய் கலந்து தினமும் தடவி வர தலையில் வழுக்கை ஏற்படுவதைத் தடுத்து முடி நன்கு வளர தொடங்கும். முடி கொட்டுவதும் நிற்கும்.

    ஆவாரம்பூ நாட்டு மருந்து கடையில் கிடைக்கும். அதனையும் வெதுவெதுப்பான நீரில் கலந்து குடித்தால் சருமம் பொலிவு பெறும்.

    பெண்களுக்கு முகத்திலுள்ள தேவையில்லாத முடிகளை நீக்க, கோரைக்கிழங்கு, உலர்ந்த ஆவாரம் பூ, பூலான் கிழங்கு இம்மூன்றையும் சம அளவு எடுத்து பசை போன்று செய்து தினமும் முகத்தில் தேய்த்து குளித்து வர முகத்திலுள்ள தேவையில்லாத முடிகள் உதிர்ந்து பார்ப்பதற்கு வசீகரமாக இருக்கும்.

    ஆவாரம் பூவுடன் வெள்ளரி விதை, கசகசா, பால் சேர்த்து உடலில் தேய்த்து உலர்ந்த பின் கடலைமாவைக் கொண்டு கழுவி வர உடலில் உள்ள வறட்சி நீங்கி மென்மையாகவும், பளிச்சென்றும் இருக்கும்.

    ×