என் மலர்tooltip icon

    அழகுக் குறிப்புகள்

    கருமை நிறத்திற்கு மாறிய உதடுகளை வீட்டு உபயோகப்பொருட்களை கொண்டே இயல்பு நிலைக்கு கொண்டு வந்துவிடலாம்.
    உதடுகள் நாளுக்குநாள் கருமையாவதாக நினைக்கிறீர்களா? மிருதுவான தன்மையையும், இளஞ்சிவப்பு நிறத்தையும் இழந்துவிட்டதாக கருதுகிறீர்களா? ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை, உணவு பழக்கம், புகைப்பிடிக்கும் பழக்கம், சுகாதார பிரச்சினைகள் தான் இதற்கு காரணம். மேலும் புற ஊதாக்கதிர் வீச்சுகள், அழகுசாதனப் பொருட்கள் பயன்பாடு, உதடுகள் உலர்தல் போன்றவையும் பொதுவான காரணங்களாகும். கருமை நிறத்திற்கு மாறிய உதடுகளை வீட்டு உபயோகப்பொருட்களை கொண்டே இயல்பு நிலைக்கு கொண்டு வந்துவிடலாம்.

    * மஞ்சளில் இருக்கும் குர்குமின், சருமத்திற்கு இயற்கையான நிறத்தை வழங்கும். அரை டீஸ்பூன் மஞ்சள் தூளை அதே அளவு ரோஸ் வாட்டரில் கலந்து கொள்ள வேண்டும். முதலில் இரண்டு டீஸ்பூன் சர்க்கரையுடன் ஒரு டீஸ்பூன் தேன் கலந்து உதட்டில் தடவி 10 நிமிடங்கள் கழித்து கழுவ வேண்டும். இது உதட்டில் இருக்கும் இறந்த செல்களை நீக்கும். பின்பு மஞ்சள் பேஸ்டை உதட்டில் பூசி அரை மணிநேரம் கழித்து கழுவிவிடலாம். இதுபோல் தினமும் இரண்டு முறை செய்யுங்கள்.

    * உதடுகள் வறட்சியாகவோ, கடின தன்மையுடனோ இருந்தால் தேங்காய் எண்ணெய் பயன்படுத்தலாம். இது ஈரப்பதத்தை தக்கவைக்கும். தேன், சர்க்கரை கொண்டு உதட்டை சுத்தப்படுத்தியப்பின்பு தேங்காய் எண்ணெய் தடவலாம். தினமும் இரண்டு முறை செய்துவந்தால் விரைவில் நல்ல பலன் கிடைக்கும்.

    * இளஞ்சிவப்பு நிற உதடு கொண்டிருந்தவர்கள் மீண்டும் உதட்டு நிறத்தை மீட்டெடுக்க மாதுளை பழத்தை உபயோகிக்கலாம். ஒரு டீஸ்பூன் மாதுளை பழச்சாறுடன் அதே அளவு பீட்ரூட் சாற்றை கலந்து உதட்டில் தினமும் 2 முறை தடவி வர வேண்டும்.

    * கற்றாழை இயற்கையாகவே தோல் நிறமிகளை அகற்றும் தன்மை கொண்டது. கற்றாழை ஜெல்லை எடுத்து உதட்டில் தடவி, உலர்ந்ததும் கழுவி விடலாம். இதை தினமும் இரண்டு, மூன்று முறை செய்து வரலாம்.

    * எலுமிச்சை பழம் இயற்கையாகவே சருமத்தை சுத்தப்படுத்தும். ஒரு டீஸ்பூன் எலுமிச்சை சாறுடன் அரை டீஸ்பூன் தேன் கலந்து உதட்டில் தடவி மென்மையாக மசாஜ் செய்ய வேண்டும். பின்னர் உதட்டை கழுவிவிடலாம்.

    கோடை வெயிலின் தாக்கம் அதிகம் என்பதால் பகல் 12 மணியில் இருந்து மாலை 4 மணி வரை கூடுமானவரை வெளியில் செல்லாமல் இருப்பதுதான் சருமத்துக்கு நாம் தருகின்ற பாதுகாப்பு.
    தமிழகத்தில் பருவ நிலை மாற்றத்தால் வழக்கமாக பெய்யும் பருவ மழையும் சரியாக பெய்யவில்லை. இதனால் கோடைகாலம் தொடங்குவதற்கு முன்னதாகவே வெயில் சுட்டெரிக்க தொடங்கியுள்ளது. கோடைகாலத்தில் வெயிலின் தாக்கம் ஒரு புறம் இருந்தால் அதனால் ஏற்படும் உடல் உபாதைகள் மற்றும் சரும நோய்கள் மற்றொரு புறம் பாடுபடுத்த தொடங்கி விடுகிறது. வெயிலில் வெளியே சென்றால் உடலில் அதிக அளவு வியர்வை வெளியேறும்.

    இதனால் வியர்வையில் இருந்து ஒரு விதமான துர்நாற்றம் வீசும். உடலில் வேர்க்குரு கட்டிகள் அரிப்பு அழுக்கு தேமல் போன்றவை ஏற்படும். வெயிலின் தாக்கத்தால் சின்னம்மை வருவதற்கும் வாய்ப்புள்ளது. மேலும் சூரிய கதிர்கள் நேரடியாக உடல் மீது தாக்கினால் தோல்கள் கருப்பாக மாறிவிடும். வெயிலால் ஏற்படும் பாதிப்புகள் குறைய தண்ணீர் மற்றும் ஜூஸ் வகையை அதிகமாக குடிக்க வேண்டும்.

    உணவில் அதிகமாக காய்கறிகளை சேர்த்துக் கொள்ள வேண்டும். அசைவ உணவு சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். மீன் சாப்பிடலாம். முடிந்தவரை மெல்லிய பருத்தி ஆடைகளை உடுத்துவது நல்லது. இதனால் வியர்வை அதிகமாக வெளியேறுவதை தடுக்க முடியும். கோடைகாலத்தில் பெரியவர்களைவிட குழந்தைகளே அதிகமாக பாதிக்கப்படுகின்றனர்.

    எனவே 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை வெளியே அழைத்துச் செல்லும்போது துணியால் மூடி அழைத்து செல்ல வேண்டும். இதனால் சூரிய வெப்பத்தின் நேரடி தாக்குதலில் இருந்து குழந்தைகளை பாதுகாக்க முடியும். அதே போல வீட்டில் பச்சிளம் குழந்தைகளுக்கு ஆடைகளை போடக்கூடாது. சருமத்துக்கு போதிய பாதுகாப்பு இல்லாமல் வெயிலில் அதிக நேரம் அலைகிறவர்களுக்கு சருமம் கருப்பாகி விடுவதை கவனித்திருப்பீர்கள். இதற்கு காரணம் சூரிய கதிர்கள் அதிக வெப்பத்துடன் நேரடியாக சருமத்தை தாக்கும்போது அதிலுள்ள ‘பி’ வகை புறஊதா கதிர்கள் சருமத்தின் செல்களிலுள்ள டி.என்.ஏ.க்களை அழிக்கின்றன.

    அந்த அழிவை ஈடுகட்டுவதற்காக சருமத்துக்கு கருப்பு நிறம் தருகின்ற மெலனின் நிறமிகள் அதிக அளவில் உற்பத்தியாகின்றன. இதன் விளைவால் சருமம் கருத்துவிடுகிறது. சருமம் தன்னைத்தானே சூரிய ஒளியிலிருந்து பாதுகாத்து கொள்வதற்காக எடுத்துக்கொள்கிற தற்காப்பு நடவடிக்கை என்றுதான் இதைச் சொல்ல வேண்டும். சருமம் கருப்பாவதை தடுக்கக் கடுமையான வெயிலில் தொடர்ந்து 2 மணி நேஇஇரத்துக்கு மேல் அலையக் கூடாது. கோடை வெயிலின் தாக்கம் அதிகம் என்பதால் பகல் 12 மணியில் இருந்து மாலை 4 மணி வரை கூடுமானவரை வெளியில் செல்லாமல் இருப்பதுதான் சருமத்துக்கு நாம் தருகின்ற பாதுகாப்பு.

    உடலில் தேவையற்ற முடிகளை நீக்க பலரும் வீட்டிலேயே வேக்ஸிங் செய்துகொள்கின்றனர். எனவே செய்ய வேண்டியவை செய்யக்கூடாதவை என்ன என்று பார்க்கலாம்.
    உடலில் தேவையற்ற முடிகளை நீக்க பலரும் வீட்டிலேயே வேக்ஸிங் செய்துகொள்கின்றனர். ஒருவகையில் இதுவும் ஆபத்தான விஷயம்தான். எனவே செய்ய வேண்டியவை செய்யக்கூடாதவை என்ன என்று பார்க்கலாம்.

    செய்ய வேண்டியவை :


    வேக்ஸிங் கிரீம், லோஷன், ஸ்ட்ரிப் என வாங்கினால் அவற்றின் பின்குறிப்புகளை படித்துவிட்டு உங்கள் சருமத்திற்கு ஏற்ப வாங்குங்கள். அதில் கொடுக்கப்பட்டுள்ள
    பின்குறிப்புகளை முறையாகப் பின்பற்றுங்கள்.

    வேக்ஸிங் செய்யும் முன் முடி உள்ள இடத்தை எண்ணெய், பிசுபிசுப்பு, அழுக்குகள் இல்லாமல் சுத்தம் செய்துவிட்டு தொடங்குங்கள். அதேபோல் வேக்ஸிங் செய்த பிறகு மாய்ஸ்சரைஸர் அப்ளை செய்வதை மறவாதீர்கள். இது எரிச்சலைக் கட்டுப்படுத்துத்துவதோடு, ஈரப்பதம் அளிக்கும்.

    வேக்சிங் செய்யும் முன் ஸ்கிரப்பிங் அல்லது மசாஜ் செய்தால் முடியின் வேர்கள் சிலிர்த்து இரத்த ஓட்டம் இருக்கும். இதனால் எளிமையாக முடிகளை நீக்கிவிடலாம்.வலியும் இருக்காது.

    எண்ணெய் சருமம் கொண்டவர்களுக்கு முடி எளிதில் வெளியேறாது. அவர்கள் வேக்ஸிங் ஸ்ட்ரிப் பயன்படுத்தினால் அந்த இடத்தில் பவுடர் தேய்த்துவிட்டு செய்தால் எண்ணெய் இருக்காது.

    வேக்ஸிங் செய்யும் போது பொறுமை மிக அவசியம். ஒரு இடத்தில் அமர்ந்து நேரம் ஒதுக்கி பொறுமையாக செய்ய வேண்டும்.

    செய்யக் கூடாதவை :

    மிகவும் சிறிய அதாவது 1/4 இஞ்ச் கொண்ட முடிகளை வேக்ஸிங் மூலம் அகற்ற முயற்சிக்காதீர். இது கடுமையான வலியை ஏற்படுத்தும்.

    வேக்ஸிங் கிரீம், லோஷனை பயன்படுத்தும்போது அதன் வெப்பநிலை எவ்வாறு உள்ளது என டெஸ்ட் செய்துவிட்டு முழுவதும் அப்ளை செய்யவும். கடுமையான எரிச்சல்,
    வெப்பநிலை சருமத்தை பொசுக்கிவிடும். சரும நிறத்தை மாற்றிவிடும்.

    புண், காயங்கள் இருந்தால் வேக்ஸிங் செய்வதை தவிருங்கள்.

    தலை முடி உதிர்வு, வழுக்கை, சொட்டை, இளநரை, செம்பட்டை புழுவெட்டு என்று பலவகைகளில் நமக்கு தொல்லைதரும். இந்த பிரச்சனைகள் அனைத்துக்கும் கைவசம் தீர்வுகள் இயற்றை வைத்திய முறையில் இருக்கின்றன.
    ஆண், பெண் இருவருக்கும் தலைமுடி (hair fall) பிரச்சனைகள் வேற பலவிதமாக நமக்கு தொல்லையை தருகின்றது. தலை முடி உதிர்வு, வழுக்கை, சொட்டை, இளநரை, செம்பட்டை புழுவெட்டு என்று பலவகைகளில் நமக்கு தொல்லைதரும். இந்த பிரச்சனைகள் அனைத்துக்கும் கைவசம் தீர்வுகள் இயற்றை வைத்திய முறையில் இருக்கின்றன.

    * வேப்பிலை ஒரு கைப்பிடி எடுத்து நீரில் வேகவைத்து, ஒரு நாள் கழித்து வேகவைத்த நீரை கொண்டு தலை குளித்து வந்தால் முடி கொட்டுவது நின்று விடும்.

    * கடுக்காய், தான்றிக்காய், நெல்லிக்காய் பொடிகளை கலந்து இரவில் தண்ணீரில் காய்ச்சி ஊறவைத்து காலையில் எலுமிச்சை பழச்சாறு கலந்து கலக்கி தலையில் தேய்த்து குளித்து வர முடி உதிர்வது நிற்கும்.

    * வெந்தயம்  பொடி செய்து தேங்காய் எண்ணெயில் ஊறவைத்து ஒரு வாரத்திற்கு பின் தினமும் தேய்த்து வந்தால் முடி உதிர்வது நிற்கும்.

    * கீழாநெல்லி வேரை சுத்தம் செய்து சிறிய துண்டாக நறுக்கி தேங்காய் எண்ணெயில் போட்டு காய்ச்சி, தலைக்கு தடவி வந்தால் வழுக்கை விழுந்த இடத்தில் முடி நன்றாக வளரும்.

    * நெல்லிக்கனியை தினமும் உணவில் சேர்த்து வர இளநரை பிரச்சனை சரியாகும்.

    * ஆலமரத்தின் இளம்பிஞ்சு வேர், செம்பருத்தி பூ இடித்து தூள் செய்து தேங்காய் எண்ணெயில் காய்ச்சி ஊறவைத்து தலைக்கு தேய்த்து வர முடி கருப்பாகும். காய்ந்த நெல்லிக்காயை பவுடராக்கி தேங்காய் எண்ணெயுடன் கலந்து கொதிக்க வைத்து வடிகட்டி தேய்த்துவர முடி கருமையாகும்.

    * அதிமதுரம் 20 கிராம், 5 மில்லி தண்ணீரில் காய்ச்சி ஆறிய பின் பாலில் ஊறவத்து 15 நிமிடம் கழித்து, கூந்தலில் தடவி ஒரு மணி நேரம் ஊற வைத்து குளிக்க வேண்டும்.

    * மரிக்கொழுந்து இலையையும் நிலாவரை இலையையும் சம அளவு எடுத்து அரைத்து தலைக்கு தடவினால் செம்பட்டை முடி நிறம் மாறும்.

    * தாமரை பூ கஷாயம் வைத்து காலை, மாலை தொடர்ந்து குடித்து வந்தால் நரை மாறிவிடும்.

    * கறிவேப்பிலையை நன்றாக அரைத்து, தேங்காய் எண்ணெயில் காய்ச்சி தினமும் தலையில் தடவி வர முடி நன்றாக வளரும். கேரட் மற்றும் எலுமிச்சை பழசாறு ஆகியவற்றை தேங்காய் எண்ணெயில் கலந்து நன்றாக காய்ச்சி தடவி வந்தாலும் முடி நன்றாக வளரும்.

    * நேர்வாளங்கொட்டையை உடைத்து பருப்பை எடுத்து நீர் விட்டு மைய அரைத்து சொட்டை உள்ள இடத்தில் தடவிவர முடிவளரும்.
    முகத்தில் பருக்களை அகற்றிய பின் அதன் தழும்புகள் போகாமல் அப்படியே இருக்கும். அவை கரும்புள்ளிகளாக மாறி முக அழகைக் கெடுத்துவிடும். இதை போக்க இந்த வீட்டுக் குறிப்புகளை செய்து பாருங்கள்.
    முகத்தில் பருக்களை அகற்றிய பின் அதன் தழும்புகள் போகாமல் அப்படியே இருக்கும். அவை கரும்புள்ளிகளாக மாறி முக அழகைக் கெடுத்துவிடும். இதை போக்க இந்த வீட்டுக் குறிப்புகளை செய்து பாருங்கள்.

    ரோஸ் வாட்டர் : முகத்தை நன்றாக சுத்தம் செய்த பிறகு ரோஸ் வாட்டரை பஞ்சில் முக்கி அதை முகத்தில் தேய்த்து மசாஜ் செய்யலாம்.

    தக்காளி : தக்காளி சாறை பஞ்சில் முக்கி பருக்கள் உள்ள இடங்களில் தேய்க்கலாம்.

    எலுமிச்சை சாறு : எலுமிச்சை சாறு பிழிந்து பஞ்சில் முக்கி முகத்தில் பாதிக்கப்பட்ட இடங்களில் தேய்க்கலாம்.

    விட்டமின் E oil : விட்டமின் E ஆயில் கேப்சியூல் மெடிக்கல் கடைகளில் கிடைக்கும். அதை வாங்கி முகத்தில் தேய்த்து மசாஜ் செய்து ஊற வைத்து கழுவ தழும்புகள் நீங்கும்.

    உருளைக்கிழங்கு சாறு : உருளைக்கிழங்கு சாறை பஞ்சில் முக்கி முகத்தில் தேய்க்கலாம்.
    இந்த இயற்கை பீட்ருட் ஹேர் டை இளநரை மற்றும் நரை முடி உள்ளவர்கள் தொடர்ந்து மூன்று வாரங்கள் பயன்படுத்தி வந்தால் கண்டிப்பாக இளநரை மற்றும் நரை முடி பிரச்சனை உடனே சரியாகும்.
    இந்த இயற்கை பீட்ருட் ஹேர் டை இளநரை மற்றும் நரை முடி உள்ளவர்கள் தொடர்ந்து மூன்று வாரங்கள் பயன்படுத்தி வந்தால் கண்டிப்பாக இளநரை மற்றும் நரை முடி பிரச்சனை உடனே சரியாகும்.

    தேவைப்படும் பொருட்கள்:

    கறிவேப்பில்லை – ஒரு கப்
    சிவப்பு செம்பருத்தி பூ – 10
    எலுமிச்சை சாறு – ஒரு ஸ்பூன்
    தண்ணீர் – 200 மில்லி
    பீட்ருட் – ஒன்று
    காபி தூள் – மூன்று ஸ்பூன்

    அடுப்பில் ஒரு இரும்பு கடாயை வைக்கவும். அவற்றில் 200 மில்லி தண்ணீர் ஊற்றி இரண்டு நிமிடங்கள் வரை சூடுபடுத்தவும். தண்ணீர் நன்றாக சூடாகியதும், அவற்றில் மூன்று ஸ்பூன் காபி தூள் சேர்த்து நன்றாக கிளறி விடவும். காபித்தூள் கொதிக்கும் தண்ணீரில் சேர்க்கும் போது நன்றாக நுரை கிளம்பும் என்பதால் அடுப்பை மிதமான சூட்டில் வைத்து கொள்ளவும்.

    மிக்சி ஜாரில் தோல் நீக்கி சிறு சிறு துண்டுகளாக பீட்ருட்டை நறுக்கி போட்டு  அதனுடன் ஒரு கப் கறிவேப்பிலை, 10 சிகப்பு செம்பருத்தி பூ ஆகியவற்றை சேர்த்து தண்ணீர் ஊற்றாமல் நன்றாக அரைத்து கொள்ளவும்.

    பின்பு இந்த கலவையை அடுப்பில் வைத்துள்ள காபித்தூள் கலவையுடன் சேர்த்து நன்றாக கிளறி விடவும். ஒரு 10 நிமிடங்கள் வரை அடுப்பை மிதமான சூட்டில் வைத்து எடுக்கவும்.

    இந்த கலவை ஒரு மணி நேரத்துக்குள் நன்றாக ஆறிவிடும் என்றாலும், குறைந்தது 12 மணி நேரம் வரை வைத்திருந்து பின்பு தான் இந்த ஹேர் டையை தலைக்கு பயன்படுத்த வேண்டும்.  எனவே இந்த கலவையை மாலை நேரங்களில் தயாரித்து இரவு முழுவதும் வைத்திருந்து மறுநாள் காலையில், இந்த பீட்ருட் ஹேர் டையை பயன்படுத்தவும்.

    தயாரித்து வைத்துள்ள இந்த ஹேர் டையை வடித்து அல்லது அப்படியே கூட பயன்படுத்தலாம். வடிகட்டி பயன்படுத்தும்போது, தலை அலசுவதற்கு மிகவும் எளிதாக இருக்கும். இந்த ஹேர் டையை தலைக்கு பயன்படுத்துவதற்கு முன் ஒரு ஸ்பூன் எலுமிச்சை சாறை கலந்து பின்பு ஹேர் டையாக பயன்படுத்தவும்.

    இவற்றில் சேர்க்கப்பட்டுள்ள பொருட்கள் அனைத்தும் இயற்கையானது என்பதால், தலை முடிகளுக்கு எந்த ஒரு பக்க விளைவுகளும் ஏற்பட வாய்ப்பில்லை. குறிப்பாக இந்த கலவையில் சேர்க்கப்பட்டுள்ள கறிவேப்பிலை அதிகளவு இரும்பு சத்துள்ளது, மேலும் முடி வளர்ச்சியை தூண்டுகிறது, தலை முடி வேர்களுக்கு நல்ல வலிமை அளிக்கிறது.

    மேலும் செம்பருத்தில் உள்ள கொலுஜான் தலை முடிக்கு நல்ல போஷாக்கை அளிக்கிறது. எலுமிச்சை தலையில் உள்ள பொடுகை அகற்ற பெரிதும் உதவுகிறது. அதேபோல் பீட்ருட் இளநரை மற்றும் நரை முடிகளுக்கு நிரந்தரமான கருமை நிறத்தை அளிக்க பெரிதும் பயன்படுகிறது.

    இந்த பீட்ருட் ஹேர் டையைதொடர்ந்து மூன்று வாரங்கள் வரை பயன்படுத்தி வந்தால் நரை முடி மறைய ஆரமித்துவிடும்.
    கண்களுக்கு கீழ் உள்ள சருமம் மிகவும் சென்சிடிவ்வான பகுதியாக இருப்பதினால் இதற்கு அதிக கவனம் செலுத்தவேண்டியது மிகவும் அவசியம்.
    கண்களுக்கு கீழ் உள்ள சருமம் மிகவும் சென்சிடிவ்வான பகுதியாக இருப்பதினால் இதற்கு அதிக கவனம் செலுத்தவேண்டியது மிகவும் அவசியம்.  ஆனால் நாமோ இந்த பகுதிக்கு அதிகமான கவனத்தை செலுத்துவது இல்லை. இதனால் கருவளையங்கள், வீங்கிய கண்கள், கண் சுருக்கம்மற்றும் சோர்வான கண்கள் போன்ற பிரச்சனைகள் ஏற்படுவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது.

    கண் சுருக்கங்கள் நீங்க ஆரஞ்சு பழத்தோல் மற்றும் வேப்ப எண்ணெய் இரண்டும் பயன்படுகிறது. ஆரஞ்சு பழம் தோல் சருமத்தில் உள்ள கொலாஜன் உற்பத்தியை மேம்படுத்த உதவுவதால், கண்களில் உள்ள சுருக்கத்தை சரிசெய்ய பயன்படுகிறது. மேலும் வேப்ப எண்ணெய் அழற்சி எதிர்ப்பு மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் அதிகம் உள்ளதால், கண்களை பாதுகாக்க பயன்படுகிறது. சரி இதை இரண்டையும் பயன்படுத்தி செய்யக்கூடிய அழகு குறிப்பு பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க.

    தேவையான பொருட்கள்:

    ஜோஜோபா எண்ணெய் -     1 தேக்கரண்டியளவு
    அரைத்த ஆரஞ்சு தோல் பவுடர் -     1 தேக்கரண்டி
    வேப்ப எண்ணெய் -     3 முதல் 4 துளி

    இந்த மூன்று பொருட்களையும் ஒன்றாக கலந்து கண்களை சுற்றி மெதுவாக மசாஜ் செய்யுங்கள். பின் இரண்டு அல்லது மூன்று மணி நேரம் கழித்துக் கழுவுங்கள். இந்த முறையை ஒரு நாள் விட்டு ஒரு நாள் செய்யலாம். இவ்வாறு செய்வதினால் கண் சுருக்கம் நீங்க ஆரமிக்கும்.

    சிலருக்கு கண்கள் எப்பொழுதும் பொலிவிழந்து மிகவும் சோர்வாக காணப்படும். அவர்களுக்கான அழகு குறிப்பு டிப்ஸ் இதோ.

    ஜோஜோபா எண்ணெய் - 2 தேக்கரண்டியளவு,
    தேங்காய் எண்ணெய் -1 தேக்கரண்டியளவு
    அப்ரிகாட் கர்னல் எண்ணெய் - 2 தேக்கரண்டியளவு ,
    அவோகேடா எண்ணெய் - 2 தேக்கரண்டியளவு

    அனைத்தையும் ஒன்றாகச் சேர்த்துக் கலக்கி கண்களைச் சுற்றித் தடவிவிட்டு படுகைக்குச் செல்லுங்கள். அடுத்த நாள் காலையில் எழுந்து கழுவுங்கள். இதனைத் தினமும் இரவு செய்யலாம். இவ்வாறு தினமும் செய்து வருவதினால் கண் சோர்வு நீங்க ஆரம்பிக்கும்.
    சருமம் எத்தனை முறை உதிரும் என்பது சருமத்தின் தன்மையை பொறுத்தது. சருமத்தை அழகுபடுத்த மெனக்கெடுபவர்களின் ஏக்கத்தை, இந்த செல் உதிர்வு போக்குகிறது.
    கைவிரல்களில் உள்ள சரும செல்கள் நிறைய பேருக்கு உதிர்ந்து கொண்டே இருக்கும். உடலில் மற்ற உறுப்புகளில் எப்போதாவதுதான் இந்த பிரச்சினை ஏற்படும். தோல் உரிதல் என்பது சரும வளர்சிதை மாற்றங்களில் முக்கிய அங்கமாகும். சீரான இடைவெளியில் சரும செல் அடுக்குகள், உதிர்ந்து புதிய செல்களை உருவாக்கிக்கொண்டே இருக்கும். அதன் மூலம் சருமத்தில் படிந்திருக்கும் அழுக்குகள் நீங்க வழி ஏற்படும்.

    இதுகுறித்து சரும நல நிபுணர் அஜய் ராணா கூறுகையில், ‘‘நமது சருமமே அதனை சுயமாக அழகுபடுத்திக் கொள்கிறது. சருமத்திற்கு பளபளப்பு சேர்க்கும் எளிய வழிமுறையாக இது அமைந்திருக்கிறது. சருமத்தை அழகுபடுத்த மெனக்கெடுபவர்களின் ஏக்கத்தை, இந்த செல் உதிர்வு போக்குகிறது. சருமம் எத்தனை முறை உதிரும் என்பது சருமத்தின் தன்மையை பொறுத்தது. சிலருக்கு வாரத்தில் இரண்டு முறைகூட சரும செல்கள் உதிரும். இந்த செயல்முறை இறந்த செல்களின் அடுக்குகளை நீக்க உதவும். அதோடு சருமம் கூடுதல் பொலிவும் பெறும்’’ என்கிறார்.

    வறண்ட சருமம் கொண்டவர்கள், வாரத்தில் ஒன்று அல்லது இரண்டு முறை சருமத்தில் படிந்திருக்கும் இறந்த செல்களை நீக்குவதற்கு முயற்சி செய்யலாம். ஏற்கனவே அவர்களுடைய சருமம் வறண்டு இருப்பதால் அழுத்தம் கொடுத்து துடைக்க வேண்டியதில்லை. சருமம் எண்ணெய் தன்மையுடனோ, முகப்பரு பாதிப்புடனோ இருந்தால், வாரத்திற்கு மூன்று முறை துடைத்தெடுக்கலாம்.

    சரும எரிச்சல், சருமம் சிவப்பு நிறத்தில் காணப்படுதல், நமைச்சல் போன்ற அறிகுறிகள் தென்பட்டால் சருமத்திற்கு அழுத்தம் கொடுக்கக்கூடாது. இறந்துபோன சரும செல்களை வெளியேற்றுவதற்கு சருமத்தை நன்றாக கழுவி சுத்தம் செய்ய வேண்டும். அது சருமத்தில் படிந்திருக்கும் தூசு, துகள்களை அகற்ற உதவும். முகத்தை கைகளை கொண்டு வட்ட வடிவத்தில் சில நிமிடங்கள் தேய்த்து கழுவி சுத்தப்படுத்தலாம். சருமம் எப்போதும் ஈரப்பதமாக இருக்க வேண்டியது அவசியம்.
    ஆண்களில் 90 சதவீதம் பேருக்கு அதிக கவலையை ஏற்படுத்தும் விஷயம் என்ன தெரியுமா? வழுக்கை தலை. ஆண்களில் பலரும், தங்கள் தலை வழுக்கையாகிவிடக்கூடாது என்று கருதினாலும், நடப்பது நேர் எதிராகத்தான் இருக்கிறது.
    ஆண்களில் 90 சதவீதம் பேருக்கு அதிக கவலையை ஏற்படுத்தும் விஷயம் என்ன தெரியுமா? வழுக்கை தலை. தங்கள் தலை வழுக்கையாகிவிட்டால், அழகே குலைந்துபோய் விட்டதாகவும், வயது திடீரென்று அதிகமாகிவிட்டது போலவும் உணர்கிறார்கள்.

    ஆண்களில் பலரும், தங்கள் தலை வழுக்கையாகிவிடக்கூடாது என்று கருதினாலும், நடப்பது நேர் எதிராகத்தான் இருக்கிறது. வழுக்கைக்கு காரணமான முடி உதிர்வு, ஆண்கள் 30 வயதை கடக்கும்போதே தொடங்கிவிடுகிறது. 87 சதவீத ஆண் களுக்கு இந்த காலகட்டத்தில்தான், முடி அடர்த்தி குறைந்து வழுக்கைக்கான ஆரம்ப அறிகுறி தென்படுவதாக புதிய ஆய்வுகள் தெரிவிக்கின்றன. முன்பு 40 வயதுகளில் தெரிந்த இத்தகைய அறிகுறிகள் தற்போது 20 வயதிலே சிலருக்கு தெரிவது கவனிக்கத்தக்கது. நெற்றியின் அருகில் உள்ள முடி குறைந்து, மேல் பகுதி முடியின் அடர்த்தி குறைவதை கருத்தில் கொண்டு பெரும்பாலான இளைஞர்கள், தங்களும் எதிர்காலத்தில் வழுக்கைத் தலையர்களாகி விடுவோமோ என்று கவலை கொள்கிறார்கள்.

    வழுக்கைத் தலை உள்ளவர்களின் தேவையை உணர்ந்து, இப்போது தலையில் முடியை நட்டு வைக்கும் சிகிச்சைகள் நடந்துகொண்டிருந்தாலும் இளைய தலைமுறையினர் வழுக்கைத்தலை ஆகும் முன் காப்பதே சிறந்தது. உங்கள் தலை வழுக்கையாகிவிடாமல் தடுக்க புதிய ஆய்வுகள் சொல்லும் கருத்துக்களை கவனியுங்கள்.

    தலைப்பகுதியை, குறிப்பாக மண்டை ஓட்டை எப்போதும் சுத்தமாக வைத்திருக்க முயற்சி செய்யுங்கள். தொலைதூர பயணங்கள் சென்று வந்தால் உடனடியாக குளியுங்கள். மண்டை ஓட்டுப் பகுதியையும் கழுவி சுத்தம் செய்யுங்கள்.

    பொடுகு சாதாரண அளவில் இருந்தால் பிரச்சினை இல்லை. கூடுதலாக பற்றிப்பிடித்த நிலையில் இருந்தாலோ, சிவப்பாகவும்-தடித்தும் காணப்பட்டாலோ, அரிப்புத் தன்மை அதிகமாக தோன்றினாலோ, சரும நோய் டாக்டரின் ஆலோசனையைப் பெறுங்கள்.

    முடி நன்றாகவும், அடர்த்தியாகவும் காணப்பட வேண்டும் என்பதற்காக, விளம்பரங்களில் பார்த்த எண்ணெய், கிரீம், ஜெல், ஷாம்பு போன்றவைகளை பயன்படுத்தாதீர்கள். அவை இருக்கிற முடிக்கும் பாதிப்பை உருவாக்கிவிடலாம்.

    உணவிலும் அதிக அக்கறை காட்டுங்கள். போதுமான அளவில் சத்தான உணவுகளை உண்ண வேண்டும். உடலில் சத்துக்கள் குறைந்தால், அது முடி உதிர்தலுக்கு காரணமாகிவிடும்.

    மன அமைதியும் தேவை. வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சினைகளை நினைத்து வருந்தி, புலம்பிக்கொண்டிருந்தால் மன அழுத்தம் தோன்றும். அதனாலும் முடி உதிரும். மன அழுத்தத்தை உங்களால் குறைக்க முடியாவிட்டால் அதற்குரிய நிபுணரின் கவுன்சலிங் பெறுங்கள்.

    வழுக்கையை போக்குவதற்கு பலவிதமான சிகிச்சைகள் இருந்தாலும், அவை களின் பலன் தாமதமாகத்தான் கிடைக்கும். அத்தகைய சிகிச்சைகளில் சில பின் விளைவுகளும் உண்டு.

    ஆண்மை ஹார்மோனான ‘டை ஹைட்ரோ டெஸ்டோஸ்டிரான்’ தாக்கமே, வழுக்கைக்குக் காரணமாக இருக்கிறது. இதனை கட்டுப்படுத்தும் மருந்தினை கொடுக்கும்போது முடி உதிர்வது குறையும். மூன்று மாதங்கள் தொடர்ச்சியாக இந்த மருந்தினை சாப்பிட்டால்தான் ஓரளவாவது பலன் கிடைக்கத் தொடங்கும். ஆனால் இதற்கான மருந்தை அதிக நாட்கள் சாப்பிடும்போது ஆண் களுக்கு மார்பக வளர்ச்சி ஏற்படலாம். அவர்களுக்கு பாலியல் ஆர்வம் குறைவதோடு, மன அழுத்தம் ஏற்படவும் இடமுண்டு.

    மண்டை ஓட்டில் பூசுவதற்கான மருந்துகளும் இருக்கின்றன. அவை முடியின் வேர்க்காலில் செயல்பட்டு வளர்ச்சியைத் தூண்டும். ஆனால் அந்த மருந்துகள் சிலருக்கு தலைவலியையும் அலர்ஜியையும் தோற்றுவிக்கும்.

    வழுக்கையை மறைக்க தற்காலிக நிவாரணங்களும் இருக்கின்றன. ‘விக்’ வைத்து வழுக்கையை மறைக்க முடியும். ஆனால் மற்றவர்கள் எளிதாக கண்டுபிடித்து விடுவார்கள் என்பதால் பலரும் இதை பயன்படுத்துவதில்லை. ‘ஹேர் வீவிங்’ என்பது இருக்கிற முடியில் ‘கிளிப்’ மூலம் கூடுதல் முடிகளை இணைப்பது. ஆனால் ‘கிளிப்’களின் பயன்பாட்டால் இருக்கிற முடியும் பாதிக்கப்படலாம்.

    ‘ஹேர் பிக் ஷிங்’ என்பது ஒருவித பசை மூலம் கூடுதல் முடிகளை ஓட்டுவது. இதை எளிதாக மற்றவர்களால் கண்டறிய முடியாது என்றாலும், இதை தினமும் ஒட்டுவது கடினமாக கருதப்படுகிறது. அந்த பசை ரசாயன கலப்பு கொண்டது. அதனால் அலர்ஜியும் ஏற்படலாம்.

    இந்த பிரச்சினைகளுக்கு ஆராய்ச்சியாளர்கள் இரண்டு விதமான தீர்வினை சொல்கிறார்கள். ஒன்று: தொடக்கத்திலேயே கவனம் செலுத்தி வழுக்கை விழாமல் தவிர்ப்பது. இரண்டு: வழுக்கை வந்துவிட்டால் அதை ‘புருஷ லட்சணம்’ என்று ஏற்றுக்கொண்டு மகிழ்ச்சியாக வாழ்வது. வேற வழி இல்லைங்க..
    உலகின் எந்த மூலையில் நடக்கும் இந்தியத் திருமணம் என்றாலும் அதற்குப் பாந்தமான மற்றும் பொருத்தமான உடை என்று எத்னிக் ஆடைகளைச் சொல்லலாம்.
    திருமண வரவேற்பு, திருமணம், பிறந்த நாள் விழா, நவராத்திரி விழா, தீபாவளி பார்ட்டி, அலுவலக பார்ட்டி, குடும்ப விழாக்கள் என எந்த ஒரு நிகழ்ச்சிக்கும் அழைப்பு என்று வந்து விட்டால் நம்மை அறியாமலேயே உற்சாகமும், என்ன அணிந்து செல்வது? என்ற மிகப் பெரிய கேள்வியும் எழும். அதுவும் திருமண விழா என்று வந்து விட்டால் கல்யாண வீட்டுக்காரர்களை விட விருந்தினர்களாகச் செல்லும் நமக்குத்தான் என்ன அணிந்து கொள்வது? என்பதே புரிபடாது.

    உலகின் எந்த மூலையில் நடக்கும் இந்தியத் திருமணம் என்றாலும் அதற்குப் பாந்தமான மற்றும் பொருத்தமான உடை என்று எத்னிக் ஆடைகளைச் சொல்லலாம். சேலைகள், சல்வார் சூட்டுகள் மற்றும் லெஹங்கா சோளி என ஒவ்வொரு சமூகக் கலாச்சாரத்திற்கு ஏற்றாற்போல் நாம் உடைகளை அணிந்து செல்லலாம்.

    * வட இந்தியத் திருமணங்கள் பொதுவாகவே ஆடல் பாடல் என்று அமர்க்களமாகவும், பிரகாசமாகவும் இருக்கும். எனவே, மெட்டாலிக் கோல்டன் பட்டிஸ்களுடன் இருக்கும் ப்ரொகேட் லெஹங்காக்கள் மற்றும் பிரகாசமான ராணி இளஞ்சிவப்பு சேலைகளை அணிந்தால் அவை ஆடம்பரமான தோற்றத்தைத் தருவதாக இருக்கும். கிறிஸ்டல் பதித்த நெக்லைன்ஸ் மற்றும் சங்கி அலங்காரத்துடன் நாம் விழாவில் நுழைந்தால் அனைவரது தம்ஸ் அப் நமக்கே என்பதில் சந்தேகமே வேண்டாம்.

    * வட இந்தியத் திருமணங்களை ஒப்பிடும்பொழுது தென்னிந்தியத் திருமணங்கள் மாறுபட்டவை. ஆனால், உடை விஷயத்தில் பாரம்பரிய நெசவுப் புடவைகளான காஞ்சிப் பட்டு மற்றும் பட்டின் பல வகைகளை அணிந்து கொள்வதைப் பெருமிதமாக நினைக்கிறார்கள். எனவே, இதுபோன்ற திருமணங்களுக்கு பட்டுச் சேலைகள் அல்லது அணிந்து கொள்ள வசதியான பட்டு சல்வார் சூட், பிளெயின் ஜ்யார்ஜெட் சூட்டுடன் டிசைனர் துப்பட்டாவை அணிந்து செல்லலாம்.

    இரவு நேரத் திருமணம் அல்லது வரவேற்பு நிகழ்ச்சிகளுக்குச் செல்வதாக இருந்தால் நாம் அணியும் ஆடைக்குத் தகுந்தாற் போல் வைர, அமெரிக்கன் டைமண்ட், ஜெர்க்கான் கற்கள் பதித்த நகைகளை அணியலாம்.

    * இஸ்லாமிய கலாசாரத்தின் திருமண விழாவான நிக்கா’ என்றால் அணிந்து செல்லக்கூடிய ஆடைகளின் வண்ணங்கள் மற்றும் ஸ்டைலில் சிறிதளவு மாறுபாடுகள் இருக்கும். ஷராரா சூட்ஸ், அனார்கலி சூட்ஸ் மற்றும் இந்தோ-வெஸ்டர்ன் லெஹங்கா ஆடைகளை அணிந்து செல்லலாம்.

    * கிறிஸ்துவத் திருமணங்களில் லாங் குர்த்திஸ், லாங் ஃப்ராக், சுடிதார்கள், லெஹங்காக்கள் என அணியலாம். திருமணப் பெண் அழகிய வெள்ளை நிற ஃப்ராக்கில் வரும்பொழுது அந்தத் திருமணத்திற்குச் செல்லும் நாமும் லாங் ஃப்ராக் போன்றவற்றை அணிந்தால் மிகவும் பொருத்தமாக இருக்கும். லாங் ஃப்ராக் அணியும் பொழுது மிகவும் மெல்லிய செயின், மெல்லிய ப்ரேஸ்லெட், மாடர்ன் காதணி போன்றவற்றை அணிந்து சென்றால் அனைவரது கவனத்தையும் ஈர்ப்பராக நாம் இருப்போம்.

    நீங்கள் விரும்பினால் தவிர உங்கள் உடையை ஒட்டுமொத்த சமூகத்துடன் உங்களால் தொடர்பு படுத்த முடியாது. ஒரு விருந்தினராக தென்னிந்தியத் திருமணத்திற்கு ஷராராவும், வட இந்தியத் திருமணத்திற்கு காஞ்சிபுரம் பட்டுச் சேலையும் அணிந்து செல்வது நம்முடைய விருப்பம் மற்றும் வசதியைச் சார்ந்ததாகும். இதில் மனதில் கொள்ள வேண்டியது என்னவென்றால் உடையானது பாரம்பரியமாகவும், அடக்கமாகவும் இருக்க வேண்டும்.

    வண்ணங்கள்

    இந்தியத் திருமணங்களில் அணியக்கூடிய எத்னிக் ஆடைகள் மிகவும் வண்ணமயமானதாக இருக்கும். ட்ரெஸ் கோட் அல்லது கலர் தீம் போன்றவை இல்லை என்றால் பிரகாசமான பிங்க், உயிரோட்டமான பச்சை, அடர் நீலம் எனப் பட்டாம்பூச்சி போல் பல்வேறு வண்ணங்களில் அணியலாம்.

    அடர்ந்த சிவப்பு / மெரூன் புடவைகள் மற்றும் லெஹங்கா சோளிகளை மணப்பெண்கள் பெரும்பாலும் அணிவதால் அவற்றை நாம் தவிர்க்கலாம். அதேபோல் முழு வெள்ளை மற்றும் கருப்பு நிற ஆடைகளை இதுபோன்ற மங்கள நிகழ்ச்சிகளுக்கு அணிந்து செல்வதை (திருமண வீட்டார் விரும்பாத பட்சத்தில்) தவிர்க்கலாம்.

    அணிகலன்கள்

    ஆடைக்கேற்ற ஆபரணங்கள் என்பவை தவிர்க்க முடியாத ஒன்றாகி விட்டது. தங்க, வைர நகைகள் மட்டுமல்லாமல் இமிடேஷன் நகைகளும் திகைப்பூட்டும் அளவிற்கு அணிந்தால் ஆடம்பரமான தோற்றத்தைத் தருவதாக வந்து விட்டன.

    நெக்லஸ், ஹாரம், சோக்கர், அட்டிகை, பிப் நெக்லஸ், ஆத் நெக்லஸ், காலர் நெக்லஸ், குந்தன் ஜ்வல்லரி, கோல்ட் ஜ்வல்லரி, டெம்பிள் ஜ்வல்லரி, காசுமாலை, ஃப்லிக்ரீ ஜ்வல்லரி, ஆன்டிக் ஜ்வல்லரி, நவரத்ன அணிகலன், மாங்கா மாலை, மீனாகாரி ஜ்வல்லரி என எதை வேண்டுமானாலும் நம் நடைக்குப் பொருத்தமானதைத் தேர்ந்தெடுத்து அணியலாம்.

    சில உடைகளுக்கு மிகப்பெரிய ஜிமிக்கிகளை அணியும் பொழுது பார்ப்பவரை கவரக்கூடியதாக இருக்கும்.

    இவ்வளவு அழகான ஆடைகள் மற்றும் அணிகலன்களை அணியும்பொழுது அதற்கு ஏற்றாற்போன்ற காலணிகளை மிகவும் கவனத்துடன் தேர்ந்தெடுத்து அணிய வேண்டும். எம்ப்ராய்டரி ஜுட்டில், வண்ணமயமான சப்பல்கள், கட் ஷூக்கள் மற்றும் கற்கள் பதித்த குதிகால் செப்பல்களை தேர்வு செய்து அணியலாம்.

    அதே போல் காலணிகளை முதன் முதலாக நாம் செல்லும் விழாக்களுக்கு அணிந்து செல்வதைத் தவிர்க்க வேண்டும். ஏனென்றால், சில நேரங்களில் புதிய காலணிகள் கால்களுக்கு ஒத்துழைக்காமல் பிரச்சனையைத் தரும். அதுபோன்ற சந்தர்ப்பங்களில் எவ்வளவு நேர்த்தியாக உடை உடுத்தி அலங்காரம் செய்திருந்தாலும் காலணி ஒத்துவரவில்லை என்றால் அந்த விழாவில் நாம் முழுமனதுடன் உற்சாகமாக இருக்க முடியாது.

    காலணி மட்டுமல்ல உடைகளைக்கூட முதன் முதலாக விழாவிற்குப் செல்லும் நேரத்தில் அணிவதை விட முன்னதாகவே அணிந்து பார்த்து அவை நமக்கு எல்லா விதத்திலும் சரியாக இருக்கிறதா என்பதை உறுதி செய்து கொள்வது நல்லது.
    சருமத்தின் ஈரத்தன்மையை தக்கவைப்பதற்கு, தேங்காய் எண்ணெய்யை முகத்தில் தடவி வரலாம். சரும பிரச்சினைகளில் இருந்து தற்காத்துக்கொள்ளவும் தேங்காய் எண்ணெய் உதவும்.
    தேங்காய் எண்ணெய்யை, கூந்தலுக்கும், சருமத்திற்கும் பயன்படுத்துகிறார்கள். சிலர் அதை சமையலுக்கும் உபயோகிக்கிறார்கள். தேங்காய் எண்ணெய்யில் இன்னும் என்ன சிறப்புகள் உள்ளன என்பதை இங்கே பார்க்கலாம்..

    சூரியனில் இருந்து வெளிப்படும் புற ஊதாக் கதிர்வீச்சுகளின் தாக்கம் அதிகரிக்கும்போது, சரும புற்றுநோய், தோல் சுருக்கங்கள், கருமை புள்ளிகள் போன்ற பாதிப்புகள் ஏற்படக்கூடும். சூரியனில் இருந்து வெளிப்படும் புற ஊதாக்கதிர்களை 20 சத வீதம் வரை தடுக்கும் தன்மை தேங்காய் எண்ணெய்க்கு இருக்கிறது.

    தேங்காய் எண்ணெய் பாக்டீரியாவுக்கு எதிராக போராடும் சக்தி வாய்ந்தது. பற்களை தூய்மையாக பராமரிக்காவிட்டால் பற்களில் பாக்டீரியாக்கள் ஊடுருவி ஈறுகளை பாதிக்கும். பற் சிதைவையும் உருவாக்கும். தினமும் பல் துலக்கும்போது தேங்காய் எண்ணெய் பயன்படுத்தினால் பற்கள் சார்ந்த பிரச்சினைகளில் இருந்து விடுபடலாம்.

    சரும பிரச்சினைகளில் இருந்து தற்காத்துக்கொள்ளவும் தேங்காய் எண்ணெய் உதவும். தோல் அலர்ஜி பாதிப்புக்குள்ளான 47 சதவீத குழந்தைகளுக்கு தேங்காய் எண்ணெய் சிறந்த நிவாரணியாக செயல்பட்டிருப்பது ஆய்வு ஒன்றில் கண்டறியப்பட்டுள்ளது.

    சருமத்தின் ஈரத்தன்மையை தக்கவைப்பதற்கு, தேங்காய் எண்ணெய்யை முகத்தில் தடவி வரலாம். அதேவேளையில் சருமம் அதிக எண்ணெய்ப்பசை தன்மையுடன் இருந்தால் தேங்காய் எண்ணெய் பயன்படுத்த வேண்டியதில்லை.
    இந்த கற்றாழை ஜெல்லை பயன்படுத்தி உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை நம் உடலை அழகாக்க, சில அழகு குறிப்புகள் இந்த பகுதியில் நாம் படித்து கொள்வோம் வாங்க.
    கற்றாழை ஒரு குளிர்ச்சி தன்மையுடைய பொருள் என்று நம் அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான். இந்த கற்றாழை ஜெல், பல மருத்துவ பயன்களை கொண்டது. பல ஆரோக்கிய பிரச்சனைக்கு தீர்வாக அமைகின்றது.

    சரி இந்த கற்றாழை ஜெல்லை பயன்படுத்தி உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை நம் உடலை அழகாக்க, சில அழகு குறிப்புகள்  இந்த பகுதியில் நாம் படித்து கொள்வோம் வாங்க.

    வெள்ளரிக்காயை அரைத்து, அத்துடன் ஓட்ஸ் பொடி மற்றும் கற்றாழை ஜெல் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 5 நிமிடம் ஸ்கரப் செய்து, 10 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இப்படி செய்து வர, முகத்தில் உள்ள இறந்த செல்கள் முழுமையாக வெளியேறி, முகம் பிரகாசமாக இருக்கும்.

    பொடுகு பிரச்சனை, முடி உதிர்வு பிரச்சனை நீங்க கற்றாழை ஜெல்மிகவும் பயன்படுகிறது. மேலும் தலைமுடி அடர்த்தியாக வளர்வதற்கு கற்றாழை ஜெல் பெரிதும் பயன்படுகிறது.

    தலைமுடி நன்கு வளர ஒரு மடல் கற்றாழையை எடுத்து அவற்றில் உள்ள தோல் பகுதியை நீக்கிவிட்டு, அவற்றில் இதுக்கும் ஜெல்லை எடுத்து மிக்சியில் தண்ணீர் சேர்க்காமல் நன்றாக கட்டிகள் இல்லாதவாறு அரைத்து கொள்ளவும். பின்பு அரைத்த இந்த கற்றாழை ஜெல்லை ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி வைத்து கொள்ளவும்.

    இப்பொழுது இந்த ஸ்ப்ரே பாட்டிலை எடுத்து தலைமுடியின் வேர்பகுதில் நன்றாக ஸ்ப்ரே செய்து, நன்றாக மசாஜ் செய்ய வேண்டும். பின்பு சிறிது நேரம் கழித்து தலை அலச வேண்டும்.

    இவ்வாறு செய்வதினால் தலைமுடி நன்றாக வளரும், பொடுகு பிரச்சனை இருக்காது, முடி உதிர்வு பிரச்சனை இருக்காது. இருப்பினும் இந்த முறையை வாரத்தில் இரண்டு முறை செய்ய வேண்டும். கற்றாழை ஜெல் முகத்தில் உள்ள கருவளையங்களை மறைய செய்ய ரொம்பவே பயன்படுகிறது.

    எனவே கற்றாழை ஜெல்லை கண்களில் உள்ள கருவளையங்களின் மீது அப்ளை செய்து சிறிது நேரம் மசாஜ் செய்ய வேண்டும். இவ்வாறு செய்வதினால் முகத்தில் உள்ள கருவளையங்கள் மறையும் இருப்பினும் இந்த முறையை தொடர்ந்து 10 நாட்கள் வரை செய்து வர வேண்டும்.

    மேலும் சருமத்தில் கரும்புள்ளிகள் மற்றும் பருக்கள் இருந்தால் இந்த கற்றாழை ஜெல்லை முகத்தில் அப்ளை செய்யலாம். சில பேருக்கு கழுத்து பகுதி மிகவும் கருப்பாக இருக்கும். அவர்கள் இந்த கற்றாழை ஜெல்லை கழுத்து பகுதில் நன்றாக அப்ளை செய்து, கொஞ்ச நேரம் வரை மசாஜ் செய்ய வேண்டும்.

    இப்படி செய்வதினால் கழுத்து பகுதில் உள்ள கருமை நிறம் மறைந்து விடும். இருப்பினும் இந்த முறையை தினமும் செய்து வந்தால் மிகவும் நல்லது.

    பல பேருக்கு இருக்கின்ற ஒரு பிரச்சனை, பாதவெடிப்பு பிரச்சனை  என்று சொல்லலாம். இந்த பாத வெடிப்பு மறைய கற்றாழை ஜெல்லினை பாத வெடிப்பு உள்ள இடத்தில் நன்றாக தேய்த்து சிறிது நேரம் மசாஜ் செய்ய வேண்டும். இவ்வாறு இந்த முறையை தொடர்ந்து செய்து வர பாத வெடிப்பு பிரச்சனை உடனே சரியாகும்.
    ×