என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
லைஃப்ஸ்டைல்
X
சரும பிரச்சினைகளில் இருந்து தற்காத்துக்கொள்ள உதவும் தேங்காய் எண்ணெய்
Byமாலை மலர்17 April 2020 8:34 AM GMT (Updated: 17 April 2020 8:34 AM GMT)
சருமத்தின் ஈரத்தன்மையை தக்கவைப்பதற்கு, தேங்காய் எண்ணெய்யை முகத்தில் தடவி வரலாம். சரும பிரச்சினைகளில் இருந்து தற்காத்துக்கொள்ளவும் தேங்காய் எண்ணெய் உதவும்.
தேங்காய் எண்ணெய்யை, கூந்தலுக்கும், சருமத்திற்கும் பயன்படுத்துகிறார்கள். சிலர் அதை சமையலுக்கும் உபயோகிக்கிறார்கள். தேங்காய் எண்ணெய்யில் இன்னும் என்ன சிறப்புகள் உள்ளன என்பதை இங்கே பார்க்கலாம்..
சூரியனில் இருந்து வெளிப்படும் புற ஊதாக் கதிர்வீச்சுகளின் தாக்கம் அதிகரிக்கும்போது, சரும புற்றுநோய், தோல் சுருக்கங்கள், கருமை புள்ளிகள் போன்ற பாதிப்புகள் ஏற்படக்கூடும். சூரியனில் இருந்து வெளிப்படும் புற ஊதாக்கதிர்களை 20 சத வீதம் வரை தடுக்கும் தன்மை தேங்காய் எண்ணெய்க்கு இருக்கிறது.
தேங்காய் எண்ணெய் பாக்டீரியாவுக்கு எதிராக போராடும் சக்தி வாய்ந்தது. பற்களை தூய்மையாக பராமரிக்காவிட்டால் பற்களில் பாக்டீரியாக்கள் ஊடுருவி ஈறுகளை பாதிக்கும். பற் சிதைவையும் உருவாக்கும். தினமும் பல் துலக்கும்போது தேங்காய் எண்ணெய் பயன்படுத்தினால் பற்கள் சார்ந்த பிரச்சினைகளில் இருந்து விடுபடலாம்.
சரும பிரச்சினைகளில் இருந்து தற்காத்துக்கொள்ளவும் தேங்காய் எண்ணெய் உதவும். தோல் அலர்ஜி பாதிப்புக்குள்ளான 47 சதவீத குழந்தைகளுக்கு தேங்காய் எண்ணெய் சிறந்த நிவாரணியாக செயல்பட்டிருப்பது ஆய்வு ஒன்றில் கண்டறியப்பட்டுள்ளது.
சருமத்தின் ஈரத்தன்மையை தக்கவைப்பதற்கு, தேங்காய் எண்ணெய்யை முகத்தில் தடவி வரலாம். அதேவேளையில் சருமம் அதிக எண்ணெய்ப்பசை தன்மையுடன் இருந்தால் தேங்காய் எண்ணெய் பயன்படுத்த வேண்டியதில்லை.
சூரியனில் இருந்து வெளிப்படும் புற ஊதாக் கதிர்வீச்சுகளின் தாக்கம் அதிகரிக்கும்போது, சரும புற்றுநோய், தோல் சுருக்கங்கள், கருமை புள்ளிகள் போன்ற பாதிப்புகள் ஏற்படக்கூடும். சூரியனில் இருந்து வெளிப்படும் புற ஊதாக்கதிர்களை 20 சத வீதம் வரை தடுக்கும் தன்மை தேங்காய் எண்ணெய்க்கு இருக்கிறது.
தேங்காய் எண்ணெய் பாக்டீரியாவுக்கு எதிராக போராடும் சக்தி வாய்ந்தது. பற்களை தூய்மையாக பராமரிக்காவிட்டால் பற்களில் பாக்டீரியாக்கள் ஊடுருவி ஈறுகளை பாதிக்கும். பற் சிதைவையும் உருவாக்கும். தினமும் பல் துலக்கும்போது தேங்காய் எண்ணெய் பயன்படுத்தினால் பற்கள் சார்ந்த பிரச்சினைகளில் இருந்து விடுபடலாம்.
சரும பிரச்சினைகளில் இருந்து தற்காத்துக்கொள்ளவும் தேங்காய் எண்ணெய் உதவும். தோல் அலர்ஜி பாதிப்புக்குள்ளான 47 சதவீத குழந்தைகளுக்கு தேங்காய் எண்ணெய் சிறந்த நிவாரணியாக செயல்பட்டிருப்பது ஆய்வு ஒன்றில் கண்டறியப்பட்டுள்ளது.
சருமத்தின் ஈரத்தன்மையை தக்கவைப்பதற்கு, தேங்காய் எண்ணெய்யை முகத்தில் தடவி வரலாம். அதேவேளையில் சருமம் அதிக எண்ணெய்ப்பசை தன்மையுடன் இருந்தால் தேங்காய் எண்ணெய் பயன்படுத்த வேண்டியதில்லை.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X