என் மலர்tooltip icon

    கிச்சன் கில்லாடிகள்

    வட இந்தியாவில் விநாயகர் சதுர்த்தி மற்றும் நவராத்தியின் போது ஜவ்வரிசி வடை செய்யப்படுகிறது. வடக்கே சாபுதானா வடா என்றழைக்கப்படும் இந்த வடை நன்கு முறுகலாகவும் நல்ல சுவையாகவும் இருக்கும்.
    தேவையான பொருட்கள் :

    ஜவ்வரிசி - 1 கப்
    உருளைக்கிழங்கு - 4,
    வேர்க்கடலை - 1/2கப்
    சீரகம் - 1 டீஸ்பூன்,
    பச்சைமிளகாய் - 2,
    துருவிய இஞ்சி - 1 டீஸ்பூன்,
    எலுமிச்சை சாறு - 2 டீஸ்பூன்,
    கொத்துமல்லி - சிறிதளவு,
    சர்க்கரை - 2 டீஸ்பூன்,
    கோதுமை மாவு - 3 டேபிள் ஸ்பூன்
    உப்பு - தேவைக்கு

    செய்முறை:

    * உருளைக்கிழங்கை வேகவைத்து தோல் உரித்து மசித்து வைக்கவும்.

    * ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    * வேர்க்கடலையை வறுத்து கொரகொரப்பாக பொடித்து கொள்ளவும்.

    * ஜவ்வரிசியை குறைந்தது 5 மணி நேரம் ஊற வைக்க வேண்டும், பிறகு நீரை முழுவதுமாக வடித்து விட வேண்டும்.

    * ஒரு பாத்திரத்தில் வேக வைத்த உருளைக்கிழங்கை ஜவ்வரிசியுடன் சேர்த்து பிசைந்து கொள்ளவேண்டும்.

    * இத்துடன் வறுத்து பொடித்த வேர்க்கடலை, கொத்தமல்லி, சீரகம், எலுமிச்சைசாறு, கோதுமை மாவு, உப்பு, சர்க்கரை, துருவிய இஞ்சி, ப.மிளகாய் சேர்த்து நன்கு கலந்துக்கொள்ளவேண்டும்.

    * நன்கு கலந்த மாவை சிறு உறுண்டையாக பிடித்து உள்ளங்கையில் வைத்து வடையாக தட்டி சூடான எண்ணெயில் பொரித்து எடுக்க வேண்டும்.

    * பொன் நிறமாக பொரித்து எடுத்த ஜவ்வரிசி வடையை சூடாக இருக்கும் போதே சாப்பிடலாம். சர்க்கரை சேர்த்து கலந்த தயிருடன் தொட்டு சாப்பிட இந்த ஜவ்வரி வடை பிரமாதமாக இருக்கும்.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    கொழுக்கட்டையில் பல வெரைட்டிகள் உள்ளன. விநாயகர் சதுர்த்தியன்று விநாயகருக்கு படைக்க பல வகையான கொழுக்கட்டைகளை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    மாவு பச்சரிசி - 1 கப்
    தேங்காய் -1 மூடி
    வெல்லம் - 150 கிராம்
    ஏலக்காய் - 5
    உப்பு, எண்ணெய் - தேவைக்கேற்ப

    செய்முறை :

    * மாவை பச்சரிசியை களைந்து நீர் வடித்து பின் ஒரு மணி நேரம் மூடி வைத்திருந்து பின் மிக்ஸியில் நைஸாக மாவாக அரைக்கவும்.

    * மாவு எத்தனை கப் உள்ளதோ அந்த அளவு தண்ணீரில் இரண்டு டீஸ்பூன் நல்லெண்ணெய் ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து கொதிக்க விட்டு, நிதானமான தீயில் மாவை சிறிது சிறிதாக தூவி கட்டிகளின்றி கிளறி இறக்கி ஆறிய பின் கையினால் அழுத்தி பிசைய வேண்டும். எல்லா வகை பூர்ணம் கொழுக்கட்டைகளுக்கும் மாவு தயாரிக்கும் விதம் இதுதான்.

    * கொதி நீரில் கரைத்து வடிகட்டிய வெல்ல நீருடன் தேங்காய் பூ சேர்த்து கிளறி ஏலக்காய் பொடி சேர்த்து தண்ணீர் வற்றி வரும் போது இறக்கவும்.

    * மாவை வாழையிலையில் தட்டி நடுவில் பூர்ணம் வைத்து கிண்ணம் போல் குவித்து மூட வேண்டும்.

    * இட்லித்தட்டில் வைத்து ஆவியில் 10 நிமிடங்கள் வேக வைக்க எடுக்க வேண்டும்.

    * தேங்காய் பூர்ண கொழுக்கட்டை ரெடி.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    கொழுக்கட்டையில் பல வெரைட்டிகள் உள்ளன. விநாயகர் சதுர்த்தியன்று விநாயகருக்கு படைக்க பல வகையான கொழுக்கட்டைகளை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்:

    அரிசி மாவு - 3/4 கப்
    தண்ணீர் - தேவையான அளவு
    நெய் - 2 டீஸ்பூன்
    எண்ணெய் - தேவையான அளவு
    உப்பு - சிறிது

    பூர்ணத்திற்கு...

    பாசிப்பருப்பு - 1/2 கப்
    வெல்லம் - 3/4 கப்
    தண்ணீர் - 1/2 கப்
    ஏலக்காய் பொடி - 1 சிட்டிகை

    செய்முறை:

    * வெல்லத்தை வெதுவெதுப்பான நீரில் போட்டு கரைத்துக் கொள்ள வேண்டும். பின் அதனை அடுப்பில் வைத்து, ஓரளவு கெட்டியாக வந்ததும், அதனை இறக்கி வடிகட்டிக் கொள்ள வேண்டும்.

    * ஒரு பௌலில் அரிசி மாவு, உப்பு சேர்த்து கிளறி, சுடுநீரை கொஞ்சமாக ஊற்றி கரண்டியின் பிடியைக் கொண்டு கிளறி விட வேண்டும். பின்பு மாவானது சற்று வெதுவெதுப்பான நிலைக்கு வந்த பின்னர், கையால் மென்மையாக பிசைந்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

    * ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பாசிப்பருப்பை சேர்த்து குறைவான தீயில் பொன்னிறமாக வறுத்து அதில் தண்ணீரை ஊற்றி, மென்மையாக வேக வைக்க வேண்டும்.

    * பின் அதனை நன்கு மசித்து, பின் அதில் வெல்லப் பாகு சேர்த்து மிதமான தீயில் நன்கு கொதிக்க விட வேண்டும். அப்படி கொதிக்க விடும் போது, அதில் உள்ள நீர் முற்றிலும் வற்றியதும், நெய் சேர்த்து பிரட்டி சிறிது நேரம் பிரட்டி குளிர விட வேண்டும்.

    * வாழை இலையை சதுரங்களாக வெட்டி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

    * ஒரு வாழை இலையை எடுத்து, அதில் எண்ணெய் சிறிது தடவி, எலுமிச்சை அளவு பிசைந்து வைத்துள்ள மாவை எடுத்து உருண்டையாக உருட்டி, அதை இலையில் வைத்து வட்டமாக தட்டி, அதன் ஒரு பாதியில் மட்டும் பாசிப்பருப்பு கலவை சிறிது வைத்து, வாழை இலையுடன் சேர்த்து மடித்துக் கொள்ள வேண்டும். அப்படி மடிக்கும் போது, முனைகளை நன்கு ஒட்டி விட வேண்டும். இதேப் போல் அனைத்து மாவையும் செய்ய வேண்டும்.

    * இட்லி பாத்திரத்தில் சிறிது தண்ணீர் ஊற்றி, கொதிக்க விட வேண்டும். இட்லி தட்டில் மடித்து வைத்துள்ள வாழை இலைகளை வைத்து, இட்லி பாத்திரத்தினுள் வைத்து, மூடி வைத்து 12 நிமிடம் வேக வைத்து இறக்கினால், வாழை இலைக் கொழுக்கட்டை ரெடி!!!

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    கொழுக்கட்டையில் பல வெரைட்டிகள் உள்ளன. விநாயகர் சதுர்த்தியன்று விநாயகருக்கு படைக்க பல வகையான கொழுக்கட்டைகளை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்:

    பால் - 5 கப்
    சர்க்கரை - 1 கப்
    கெட்டியான தேங்காய் பால் - 1 கப்
    ஏலக்காய் பொடி - 1 டீஸ்பூன்

    கொழுக்கட்டைக்கு...

    ராகி மாவு - 1 கப்
    அரிசி மாவு - 1/2 கப்
    பால் - 1 கப்
    நெய் - 1 டீஸ்பூன்
    உப்பு - 1/4 டீஸ்பூன்
    தண்ணீர் - 1/2 கப்

    செய்முறை:

    * ஒரு பௌலில் ராகி மாவு, அரிசி மாவு, உப்பு, தண்ணீர் மற்றும் பால் ஆகியவற்றை நீர் போன்று கலந்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.

    * பின்னர் ஒரு வாணலியில் அதை ஊற்றி, ஓரளவு கெட்டியாகும் வரை கைவிடாமல் கிளறி, கடைசியில் நெய் சேர்த்து பிசைந்து, ஒட்டாமல் வரும் போது சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ள வேண்டும்.

    * மற்றொரு வாணலியில் பால் ஊற்றி சர்க்கரை சேர்த்து நன்கு கொதிக்க விட்டு, பின் அதில் ராகி உருண்டைகளை சேர்த்து 10 நிமிடம் வேக வைக்க வேண்டும்.

    * பிறகு அதில் தேங்காய் பால், ஏலக்காய் பொடி சேர்த்து கிளறி இறக்கி, 15 நிமிடம் கழித்து பரிமாற வேண்டும்.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    கொழுக்கட்டையில் பல வெரைட்டிகள் உள்ளன. விநாயகர் சதுர்த்தியன்று விநாயகருக்கு படைக்க பல வகையான கொழுக்கட்டைகளை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    அரிசி மாவு - 1/2 கப்
    வெல்லம் - 1/4 கப்
    தண்ணீர் - 1 மற்றும் 1/4 கப்
    துருவிய தேங்காய் - கால் கப்
    ஏலக்காய் பொடி - 1 சிட்டிகை
    எண்ணெய் - சிறிது

    செய்முறை :

    * வெல்லத்தை தட்டி நீரில் போட்டு அடுப்பில் வைத்து, கரைய வைக்க வேண்டும். வெல்லம் கரைந்ததும், அதனை இறக்கி வடிகட்டி, ஒரு அகன்ற பாத்திரத்தில் ஊற்றி, மீண்டும் அடுப்பில் வைத்து சூடேற்ற வேண்டும்.

    * பாகு நன்கு கொதிக்கும் போது, அதில் ஏலக்காய் பொடி தூவி மீண்டும் கொதிக்க விடவும். பின்பு தீயை குறைத்து, அதில் அரிசி மாவை மெதுவாக தூவிக் கொண்டே, கட்டிகள் சேராதவாறு தொடர்ந்து கைவிடாமல் கிளறி விட வேண்டும்.

    * ஒரு கட்டத்தில் மாவானது பாத்திரத்தில் ஒட்டாமல் திரண்டு வரும் வேளையில் அடுப்பை அனைத்து, குளிர வைக்க வேண்டும்.
    * மாவானது வெதுவெதுப்பான நிலையில் இருக்கும் போது, கைகளில் எண்ணெயைத் தடவிக் கொண்டு, அந்த மாவை சிறிது எடுத்து, கொழுக்கட்டை போன்று கைகளால் பிடித்து, இட்லி தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும்.

    * பின்னர் அந்த இட்லி தட்டை இட்லி பாத்திரத்தில் வைத்து, 10 நிமிடம் வேக வைத்து இறக்கினால், பிடி கொழுக்கட்டை ரெடி!!!

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    எளிய முறையில் சுவையான கருவாடு தொக்கு செய்வது எப்படி என்று கீழே பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    வஞ்சிரம் மீன் (கருவாடு) - கால் கிலோ
    சிறிய வெங்காயம் - இரண்டு கைபிடியளவு
    தக்காளி - 2
    பூண்டு - பத்து பல்
    காய்ந்த மிளகாய் - ஐந்து
    நல்லெண்ணெய் - ஒரு குழிகரண்டி
    உப்பு - தேவையான அளவு
    மிளகாய் தூள் - 1 ஸ்பூன்
    கடுகு - சிறிதளவு

    செய்முறை :

    * தக்காளி, சின்ன வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    * வஞ்சிரம் மீன் கருவாடு துண்டுகளை நன்றாக கழுவி சுத்தம் செய்து வைக்கவும்.

    * பூண்டை ஒன்றும் பாதிகாய தட்டிச்கொள்ளவும்.

    * எண்ணெய் காய்ந்ததும் கடுகு, காய்ந்த மிளகாய் போட்டு தாளிக்கவும்.

    * இதனுடன் வெங்காயம், பூண்டு சேர்த்து நன்கு வதக்கிய பின்னர் தக்காளி, மிளகாய் தூள் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.

    * அடுத்து அதில் சுத்தம் செய்த கருவாடு துண்டுகளை சேர்த்து எண்ணெயிலேயே நன்கு வதக்கவும். ஏற்கனவே கருவாட்டில் உப்பு இருப்பதால் உப்பு சேர்க்க தேவையில்லை.

    * இந்த கருவாட்டு தொக்கு சாதத்தில் போட்டு புரட்டி சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.

    * விருப்பப்பட்டால் முருங்கைக்காய் சேர்த்து கொள்ளலாம்.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    செட்டிநாடு ஸ்டைல் முட்டை குழம்பு செய்வது மிகவும் ஈஸி. இப்போது இந்த குழம்பை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்:

    முட்டை - 5
    வெங்காயம் - 1
    தக்காளி - 1
    கொத்தமல்லி - 1 டேபிள் ஸ்பூன்
    கரம் மசாலா - 1 டீஸ்பூன்
    உப்பு - தேவையான அளவு
    எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்

    தாளிப்பதற்கு...

    பட்டை - 1/2 இன்ச்
    கறிவேப்பிலை - சிறிது
    கிராம்பு - 1

    அரைப்பதற்கு...

    துருவிய தேங்காய் - 2 டேபிள் ஸ்பூன்
    வரமிளகாய் - 2
    பூண்டு - 4-5 பற்கள்
    இஞ்சி - 1/2 இன்ச்
    கொத்தமல்லி - 1/2 டீஸ்பூன்
    மிளகு - 1 டீஸ்பூன்
    சீரகம் - 1 டீஸ்பூன்

    செய்முறை :

    * தக்காளி, வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    * ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி, அதில் முட்டைகளைப் போட்டு, வேக வைத்து, முட்டையின் ஓட்டை நீக்கிவிட்டு, பின் அதனை நீளவாக்கில் இரண்டாக வெட்டிக் கொள்ள வேண்டும்.

    * ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் அரைக்க கொடுத்த அனைத்து பொருட்களையும் போட்டு லேசாக வறுத்து இறக்கி, ஆற வைத்து, மிக்ஸியில் போட்டு தண்ணீர் ஊற்றி பேஸ்ட்டாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

    * மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பட்டை, கறிவேப்பிலை மற்றும் கிராம்பு சேர்த்து தாளித்து, பின் அதில் நறுக்கி வைத்துள்ள வெங்காயம் போட்டு நன்றாக வதக்கிய பின்னர், தக்காளி சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும்.

    * அடுத்து அதில் உப்பு மற்றும் அரைத்து வைத்துள்ள பேஸ்ட் சேர்த்து கிளறி, 5 நிமிடம் கொதிக்க விடவும்.

    * பின் அதில் 1 கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க விட்டு கரம்மசாலா மற்றும் வேக வைத்துள்ள முட்டைகளை சேர்த்து, 10 நிமிடம் மிதமான தீயில் கொதிக்கவிட்டு இறக்கினால், சுவையான செட்டிநாடு ஸ்டைல் முட்டை குழம்பு ரெடி!!!

    * முட்டையை அவித்து செய்வதற்கு பதிலாக உடைத்து ஊற்றியும் முட்டை குழம்பு செய்யலாம்.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    சிக்கனை விட உடலுக்கு மிகவும் நல்லது காடை. இதை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    காடை - 4
    எலுமிச்சைசாறு - 2 ஸ்பூன்
    இஞ்சி பூண்டு விழுது  - 3 ஸ்பூன்
    மஞ்சள் தூள்   - 1 ஸ்பூன்
    கரம்மசாலாத்தூள்  - 2 ஸ்பூன்
    தயிர்  - 2 ஸ்பூன்
    மிளகாய் தூள்  - 2 ஸ்பூன்
    எண்ணெய்  - பொரிக்க
    உப்பு - தேவையான அளவு

    செய்முறை :

    * காடையை சுத்தம் செய்து 4 துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.

    * ஒரு பாத்திரத்தில் சுத்தம் செய்த காடையை போட்டு அதனுடன் எலுமிச்சைசாறு, இஞ்சி, பூண்டுவிழுது, மஞ்சள் தூள், கரம்மசாலாத்தூள், தயிர், மிளகாய் மற்றும் சிறிதளவு உப்பு சேர்த்து நன்றாக கலந்து ஒரு மணி நேரம் ஊற வைக்கவும்.

    * ஒரு காடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் காடை துண்டை ஒவ்வொன்றாக போட்டு பொரிக்கவும்.

    * சுவையான காடை வறுவல் தயார்.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    பள்ளிக்கு செல்லும் குழந்தைகளுக்கு முட்டை சப்பாத்தி செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். இதை எப்படி செய்து என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    சப்பாத்தி - 2
    முட்டை - 3
    கடலை மாவு - 4 தேக்கரண்டி
    வெங்காயம் - 1
    பச்சை மிளகாய் - 1
    மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
    உப்பு - தேவையான அளவு
    கொத்தமல்லி - சிறிது
    எண்ணெய் - தேவையான அளவு

    செய்முறை :

    * வெங்காயம், ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    * கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் வெங்காயம், பச்சைமிளகாய் சேர்த்து லேசாக வதக்கிக் கொள்ளவும்.

    * ஒரு பாத்திரத்தில் வதக்கிய வெங்காயம், கடலைமாவு, மஞ்சள்தூள், உப்பு, கொத்தமல்லி சேர்த்து அத்துடன் முட்டை உடைத்து ஊற்றி நன்கு அடித்துக் கொள்ளவும்.

    * தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடேற்றி, ஒரு சப்பாத்தியை எடுத்து கல்லில் போட்டு, கலந்து வைத்துள்ள முட்டை கலவையைத் சப்பாத்தியில் முழுவதும் படும்மாறு ஊற்றி சுற்றி எண்ணெய் ஊற்றி வெந்ததும் திருப்பி போடவும்.



    * திருப்பி போட்டு அந்த பகுதியிலும் முட்டை கலவையை ஊற்றி வேக வைத்து எடுத்தால் முட்டை சப்பாத்தி ரெடி.

    * சுவையான முட்டை சப்பாத்தி ரெடி.

    * சப்பாத்தி மீதி இருந்தால் இப்படி செய்து கொடுத்தால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    மசாலா முட்டை புர்ஜி செய்வது மிகவும் சுலபமானது. இப்போது அந்த மசாலா முட்டை புர்ஜியை எப்படி செய்வதென்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    முட்டை - 4
    தக்காளி - 2
    வெங்காயம் - 2
    ப.மிளகாய் - 2
    இஞ்சி - 1 துண்டு
    கொத்தமல்லி - சிறிதளவு
    தக்காளி சாஸ் - 2 ஸ்பூன்
    கரம் மசாலா - அரை ஸ்பூன்
    மிளகாய் தூள் - 1 ஸ்பூன்
    மஞ்சள் தூள் - அரை சிட்டிகை
    சாட் மசாலா - 1 ஸ்பூன்
    உப்பு, எண்ணெய் - தேவையான அளவு

    செய்முறை :

    * தக்காளி, வெங்காயம், ப.மிளகாய், இஞ்சி, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    * முட்டையை ஒரு கிண்ணத்தில் ஊற்றி நன்றாக அடித்து கொள்ளவும்.

    * அடுப்பில் கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் வெங்காயம், ப.மிளகாய் போட்டு நன்றாக வதக்கவும்.

    * வெங்காயம் நன்கு வதங்கிய பின்னர் இஞ்சி சேர்த்து வதக்கி தக்காளி, கொத்தமல்லியை சேர்த்து நன்றாக வதக்கவும்.

    * அடுத்து அதில் மிளகாய் தூள், மஞ்சள் தூள், சேர்த்து வதக்கிய பின் தக்காளி சாஸ் சேர்த்து நன்றாக கிளறவும்.

    * இப்போது உப்பு சேர்த்து கிளறிய பிறகு முட்டையை ஊற்றி நன்றாக கிளறவும் (அடுப்பை மிதமான தீயில் வைக்கவும்).

    * முட்டை நன்றாக வெந்து உதிரியாக வரும் போது கரம் மசாலா தூள் தூவி இறக்கவும்.

    * இந்த  முட்டை புர்ஜியை தோசை, சாண்விச், சப்பாத்தியுடன் சாப்பிட நன்றாக இருக்கும்.

    * டயட்டில் இருப்பவர்கள் முட்டையின் வெள்ளைக்கருவை மட்டும் சேர்த்து செய்து சாப்பிடலாம். மற்றவர்கள் மஞ்சள் கருவுடன் சேர்த்து சமைக்கலாம்.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    கடலைப் பருப்பை வைத்து எப்படி சுவையான பக்கோடா செய்வது என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    கடலைப் பருப்பு - 1 கப்,
    சின்ன வெங்காயம் - 200 கிராம்,
    இஞ்சி - 1 துண்டு,
    பச்சை மிளகாய்  -  2,
    பூண்டு -  4 பல்,
    புதினா, கொத்தமல்லித்தழை,
    கறிவேப்பிலை - தலா சிறிதளவு,
    சோம்பு  -  அரை ஸ்பூன்,
    உப்பு  -  சுவைக்கேற்ப,
    எண்ணெய்  -  தேவையான அளவு.  

    செய்முறை :

    * வெங்காயம், கறிவேப்பிலை, புதினா, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    * இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாயை சேர்த்து நசுக்கிக் கொள்ளுங்கள்.

    * சோம்பைப் பொடித்துக்கொள்ளுங்கள்.

    * கடலைப் பருப்பை ஒரு மணி நேரம் ஊறவைத்து கரகரப்பாக அரைத்து கொள்ளவும்.

    * அரைத்த மாவை ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலை, புதினா, கொத்தமல்லி, நசுக்கிய இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் சோம்பு, உப்பு சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளவும்.

    * கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் மாவை சிறிது சிறிதாக எடுத்து போட்டு வேக விட்டு பொரித்து எடுக்கவும்.

    * சுவையான கடலைப் பருப்பு பக்கோடா ரெடி.

    * இதை சிற்றுண்டியாக சாப்பிடுவதற்கும் காரக்குழம்பு, மோர்க்குழம்பில் போடுவதற்கும் ஏற்ற பக்கோடா இது. 

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    கேரள உணவான வாழையிலை மசாலா மீனை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    வஞ்சீரம் (அ) வவ்வால் மீன் - 2 துண்டுகள்
    வெங்காயம் - ஒன்று
    தக்காளி - ஒன்று
    இஞ்சி, பூண்டு விழுது - 2 தேக்கரண்டி
    மிளகாய்த்தூள் - ஒரு தேக்கரண்டி
    உப்பு - தேவையான அளவு
    புளி - கொட்டைப்பாக்கு அளவு
    தேங்காய் எண்ணெய் - தேவையான அளவு
    வாழை இலை - 2 துண்டுகள்



    செய்முறை:

    * மீனை உப்பு, மிளகாய் தூள் சேர்த்து 30 மணி நேரம் ஊறவைத்த பின் வறுத்து எடுத்துக் கொள்ளவும்.

    * வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    * புளியை சிறிது தண்ணீர் சேர்த்து கரைத்து கொள்ளவும்.

    * வாணலில் தேங்காய் எண்ணெய் ஊற்றி கடுகு தாளித்து, வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

    * வெங்காயம் வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போக வதக்கி, தக்காளி சேர்த்து குழைய வதக்கவும்.

    * அடுத்து அதில் மிளகாய்த்தூள் சேர்த்து பிரட்டி விட்டு, கரைத்த புளியை ஊற்றி கெட்டியானதும் இறக்கவும்.

    * வாழையிலையின் அடிப்பாகத்தை அனலில் காண்பித்து எடுத்து உள்பக்கமாக எண்ணெய் தடவி மசாலாவை அதில் வைக்கவும்.

    * அடுத்து அதன் மேல் வறுத்த மீனை வைத்து மீண்டும் மசாலாவை மேலே வைத்து இலையை நன்றாக மூடி கட்டவும்.

    * தோசை கல்லை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் மீன் வைத்து கட்டிய வாழையிலையை வைத்து மிதமான சூட்டில் வேக வைத்து வாழையிலை சுருங்க வெந்ததும் எடுக்கவும்.

    * சுவையான வாழையிலை மசாலா மீன் தயார்.

    * கேரள உணவான இதை அங்கு பொதியல் மீன் என்று சொல்லுவார்கள்.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ×