என் மலர்tooltip icon

    கிச்சன் கில்லாடிகள்

    சாயங்காலம், அதுவும் குளிர் காலத்தில் சூடாக ரவை வைத்து ஒரு போண்டா செய்யலாமா. இப்பொழுது ரவை போண்டா எப்படி செய்யலாம் என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    வெள்ளை ரவை - 100 கிராம்
    அரிசி மாவு - 50 கிராம்
    கெட்டித் தயிர் - 200 கிராம்
    துருவிய தேங்காய் - 1/2 கப்
    பச்சை மிளகாய் - 1
    பெரிய வெங்காயம் - 1
    கறிவேப்பிலை - சிறிது
    பெருங்காயத்தூள் - 1/2 டீஸ்பூன்
    உப்பு - தேவையான அளவு
    இஞ்சி - சிறிது

    செய்முறை :

    * வெங்காயம், ப.மிளகாய், இஞ்சி, கறிவேப்பிலையை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    * ஒரு பாத்திரத்தில் அரிசி மாவு, ரவை மற்றும் தயிரை ஊற்றி நன்கு கலந்துக் கொள்ளவும். பின்னர், அதில் பொடியாக நறுக்கி வெங்காயம், ப.மிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை, உப்பு, பெருங்காயத்தூள், துருவிய தேங்காய் அனைத்தையும் சேர்த்து நன்கு பிரட்டி அதனை ஒரு 15 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.

    * அந்த கலவையை முதலில் பிரட்டும் பொழுது தண்ணீர் கூடுதலாக இருக்கும். ஆனால், 15 நிமிடம் ஊறிய பிறகு ரவை தயிரில் ஊறி சற்று பெரிதாகும். பின்னர், தண்ணீர் சரியாக இருக்கும்.

    * கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் 15 நிமிடம் ஊறிய மாவை சிறிது எடுத்து உருண்டைகளாக உருட்டி எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும்.

    * சுவையான ரவை போண்டா தயார்.

    * இதற்கு வேர்க்கடலை சட்டி, தேங்காய் சட்னி சுவையாக இருக்கும்.

    * அரிசி மாவிற்கு பதிலாக இட்லி மாவையும் பயன்படுத்தலாம்.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    மீதமான சப்பாத்தியை நீங்கள் சப்பாத்தி பிட்சா செய்து கொடுத்தால் மிகவும் அருமையாக இருக்கும். அதனை எப்படி செய்யலாம் என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    குடமிளகாய் - 1 பெரியது
    துருவிய சீஸ் - 1/4 கப்
    சப்பாத்தி - 5

    சாஸ் செய்வதற்கு…

    எண்ணெய் - 1 டீஸ்பூன்
    உப்பு - தேவையான அளவு
    பூண்டு - 12 டீஸ்பூன்
    பெரிய வெங்காயம் - 1
    தக்காளி - 1 (பெரியது)
    தக்காளி சாஸ் - 1 டேபிள்ஸ்பூன்
    சில்லி ப்ளேக்ஸ் - 1 டீஸ்பூன்
    மிளகுத் தூள் - 1/8 டீஸ்பூன்

    செய்முறை :

    * வெங்காயம், குடமிளகாய், பூண்டை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    * கொதிக்கும் நீரில் தக்காளியைப் போட்டு, தக்காளியில் உள்ள தோல் வெளிவரும் வரை வேக வைத்து இறக்கி, ஆறியதும் தோலை உரித்துக் மிக்ஸியில் போட்டு நன்கு மென்மையாக அரைத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

    * ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பூண்டு சேர்த்து பொன்னிறமாக வதக்கி, பின் வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கி விட வேண்டும்.

    * அடுத்து அதில் அரைத்து வைத்துள்ள தக்காளியை சேர்த்து 3 நிமிடம் கொதிக்க விட்டு, பின் தக்காளி சாஸ், மிளகுத் தூள் மற்றும் சில்லி ப்ளேக்ஸ் சேர்த்து சாஸ் போன்று நன்கு கெட்டியாகும் வரை கொதிக்க விட்டு இறக்கி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

    * ஒரு வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி அதில் குடமிளகாயை போட்டு, சிறிது நேரம் வதக்கி தனியாக வைத்து கொள்ளவும்.

    * இறுதியில் ஒவ்வொரு சப்பாத்திகளாக எடுத்து, அதன் மேல் செய்து வைத்துள்ள சாஸை தடவி, மேலே வதக்கி வைத்துள்ள குடைமிளகாய் மற்றும் சீஸ் தூவி, மீண்டும் தோசைக்கல்லில் போட்டு மிதமான தீயில், 5 நிமிடம் மூடி வைத்து இறக்க வேண்டும்.

    * இதேப்போல் அனைத்து சப்பாத்திகளையும் சுட்டு எடுத்தால், சுவையான சப்பாத்தி பிட்சா ரெடி!!!

    குறிப்பு :

    இந்த பிட்சாவில் உங்களுக்கு விருப்பமான அனைத்து கார்ன் மற்றும் காய்கறிகளையும் சேர்த்து கொள்ளலாம்.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    கிரீன் சட்னி, கெட்சப் தடவி செய்யப்படும் ஸ்டஃப்டு பிரட் பஜ்ஜி மாலை நேரம் சாப்பிட மிகவும் அருமையாக இருக்கும்.
    தேவையான பொருட்கள் :

    பிரட் துண்டுகள் - 10
    கிரீன் சட்னி - பிரட்டில் தடவ தேவையான அளவு
    கெட்சப் - பிரட்டில் தடவ தேவையான அளவு
    பஜ்ஜி மாவு - ஒரு கப்
    எண்ணெய் - பொரிக்க

    கிரீன் சட்னி :

    கறிவேப்பிலை, புதினா, கொத்தமல்லி ஒரு கப் அளவு எடுத்து மண்ணில்லாமல் ஆய்ந்து பொடியாக நறுக்கி அத்துட‌ன் இஞ்சி ஒரு துண்டு, ப‌.மிள‌காய் ஒன்று, சின்ன‌ வெங்காய‌ம் மூன்று, உப்பு சிறிது எலுமிச்சை சாறு ஒரு தேக்கரண்டி சேர்த்து மிக்சியில் அரைத்து கொள்ள‌வும்.

    செய்முறை :

    * முதலில் பிரெட் துண்டுகளின் ஓரங்களை வெட்டி விட்டு முக்கோண வடிவில் வெட்டி கொள்ளவும்.

    * ஒரு பாத்திரத்தில் பஜ்ஜி மாவை போட்டு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கரைத்து கொள்ளவும்.

    * ஒரு பிரெட்டின் ஒரு பக்கம் கெட்சப்பையும், இன்னொரு பிரெட்டில் கிரீன் சட்னியையும் தடவி ஒன்றாக மூடி பிறகு பஜ்ஜி மாவில் பிரட்டி எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும்.

    * சுவையான மாலை நேர டிபன் ஸ்டஃப்டு பிரட் பஜ்ஜி ரெடி.

    குறிப்பு :

    * ஸ்டஃப்டு பிரட் பஜ்ஜி எண்ணெய் அவ்வளவா குடிக்காது. இப்படி ஸ்டப் செய்து பொரித்து சாப்பிடுவதால் புளிப்பு, இனிப்பு, காரம் என்று கூடுதல் சுவை.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    சிக்கனின் மசாலா வாடை அதிகமாக இல்லாமலும் இருக்கணும்னு விரும்புறவங்க ஈஸியா இந்த ஆனியன் சிக்கன் வறுவல் செய்து சாப்பிடலாம்.
    தேவையான பொருட்கள்:

    சிக்கன் - 1/4 கிலோ
    சின்ன வெங்காயம் - 150 கிராம்
    இஞ்சி, பூண்டு விழுது - 1 டீ ஸ்பூன்
    காய்ந்த மிளகாய் - 2
    கரம் மசாலாத்தூள் - 1 டீ ஸ்பூன்
    மிளகுத்தூள் - 2 டீ ஸ்பூன்
    எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
    கொத்தமல்லித்தழை - சிறிதளவு

    செய்முறை :

    * சின்ன வெங்காயத்தை நீளவாக்கில் வெட்டிக்கொள்ளவும்.

    * காய்ந்த மிளகாயை 2 ஆக கிள்ளி வைக்கவும்.

    * சிக்கனை நன்கு சுத்தம் செய்து விட்டு சிறு சிறுத் துண்டுகளாக்கி கொள்ளவும்.

    * ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் முக்கால்வாசி வெங்காயத்தை போட்டு சிறிது வதக்கிய பின்னர் இஞ்சி பூண்டு விழுதினை சேர்த்து வதக்கவும்.

    * அடுத்து அதில் சிக்கனை போட்டு வதக்கவும்.

    * பின்பு மசாலாத் தூள்களை சேர்த்து சிறிது நேரம் வதக்கி உடனே தேவையான அளவு உப்பு சேர்த்து சிறிதளவு தண்ணீர் ஊற்றி மூடி போட்டு மிதமான தீயிலேயே பத்து நிமிடம் வேக விடவும். (இடையில் கிளறி கொள்ளவும்.)

    * சிக்கன் வெந்து, தண்ணீர் வற்றியதும் நறுக்கி வைத்திருக்கும் மீதி வெங்காயத்தை சேர்த்து பிரட்டி இரண்டு நிமிடத்தில் கொத்தமல்லித்தழை தூவி இறக்கி விடவும்.

    * இதை சாம்பார், தயிர் சாதத்திற்கும் தொட்டுக் கொள்ளலாம். இதனுடன் குடைமிளகாயையும் வெங்காயம் போல் நறுக்கி சேர்க்கலாம். இன்னும் நல்ல சுவையுடன் இருக்கும்.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    மாலையில் பள்ளியிலிருந்து வரும் குழந்தைகளுக்கு விருப்பான ஸ்நாக்ஸ் ஸ்வீட் கார்ன் சீஸ் ரோல் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    ஸ்வீட் கார்ன் - ஒன்றரை கப்
    ரவை - ஒரு கப்
    துருவிய சீஸ் - அரை கப்
    வெங்காயம் - ஒன்று
    கொத்தமல்லித் தழை - சிறிதளவு
    கரம் மசாலா தூள் - ஒரு தேக்கரண்டி
    மிளகாய்த் தூள் - ஒரு தேக்கரண்டி
    சாட் மசாலா - ஒரு தேக்கரண்டி
    பால் - 2 கப்
    மைதா - 1 கப்
    பிரெட் தூள் - தேவையான அளவு
    உப்பு - தேவையான அளவு
    எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு

    செய்முறை :

    * கொத்தமல்லி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    * ரவையை வறுத்தெடுத்து பால் ஊற்றி நன்கு கெட்டியாகும் வரை வேகவிடவும்.

    * அதனுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம், கார்ன், சீஸ், கரம் மசாலா தூள், சாட் மசாலா, மிளகாய் தூள், உப்பு மற்றும் கொத்தமல்லித் தழை சேர்க்கவும். அனைத்தையும் ஒன்றாகச் சேர்த்துப் பிசைந்து கொள்ளவும்.

    * ஒரு பாத்திரத்தில் மைதா மாவு, சிறிது உப்பு, தேவையான தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்தில் பிசைந்து, அரை மணிநேரம் அப்படியே வைக்கவும்.

    * பிறகு அந்த மாவை சிறியதாக எடுத்து சப்பாத்தி போல் உருட்டி அதன் நடுவே ரெடி செய்து வைத்துள்ள மசாலா கலவையை வைத்து ரோல் போல செய்து கொள்ளவும். இப்படி அனைத்தையும் செய்து கொள்ளவும்.

    * இந்த மசாலா ரோலை பிரெட் க்ரம்ஸில் பிரட்டி எடுக்கவும். இதேபோல் மீதமுள்ள கலவையிலும் ரோல்லைத் தயார் செய்து கொள்ளவும்.

    * வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் ரோல்களை ஒவ்வொன்றாக போட்டு பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும்.

    * டேஸ்டியான ஸ்வீட் கார்ன் சீஸ் ரோல் தயார்.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    மீனைக் குழம்பு, வறுவல் என விதவிதமாக சமைத்திருப்பீர்கள். ஆனால் மீனில் வடை செய்திருக்கிறீர்களா? இல்லையா… அப்ப மீன் வடை செய்வது எப்படி என்று பாருங்கள்.
    தேவையான பொருட்கள் :

    மீன் துண்டுகளாக - 500 கிராம் (முள் இல்லாத மீன்)
    முட்டை - 1
    உருளைக்கிழங்கு - 100 கிராம்
    மிளகாய்த்தூள் - 1 தேக்கரண்டி
    பச்சைமிளகாய் - 3
    வெங்காயம் - 1
    இஞ்சி - சிறிய துண்டு
    பூண்டு - 3 பல்
    கொத்தமல்லி - சிறிதளவு
    உப்பு, எண்ணெய் - தேவையான அளவு

    செய்முறை :

    * வெங்காயம், இஞ்சி, பூண்டு, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    * மீனைச் சிறிது நீர்விட்டு வேகவைத்து முள், தோல் நீக்கி நன்கு பிசையவும்.

    * உருளைக்கிழங்கை வேகவைத்து, தோல் உரித்து நன்கு மசித்து கொள்ளவும்.

    * ஒரு பாத்திரத்தில் மீன், மசித்த உருளைக்கிழங்கு, மிளகாய்த் தூள், வெட்டிய வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லி, இஞ்சி, பூண்டு, உப்பு, முட்டை எல்லாம் சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும்.

    * அடுப்பில் கடாய் வைத்து சூடானதும் மாவை சிறுசிறு வடைகளாகத் தட்டிப் போட்டு இருபுறமும், சிவந்ததும் எடுக்கவும்.

    * ருசியான மீன் வடை தயார்.

    * உருளைக்கிழங்கிற்குப் பதிலாக இரண்டு தேக்கரண்டி அரிசி மாவு கலந்தும் மீன் வடை செய்யலாம்.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    இந்த கிருஷ்ண ஜெயந்திக்கு கிருஷ்ணருக்கு நைவேத்தியம் செய்யும் இனிப்பு, கார வகைகளை பற்றி பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    ரவை - 1 கப்
    நெய் - 5 ஸ்பூன்
    சர்க்கரை - 1/2 கப்
    ஏலக்காய் பொடி- 1/4 ஸ்பூன்
    திராட்சை- 10
    முந்திரி - 10
    பால் - 1/4 கப்

    செய்முறை :

    * கடாயில் நெய்யை ஊற்றி சூடானதும் அதில் முந்திரி திராட்சையை போட்டு வறுத்து தனியே எடுத்துவைக்கவும்.

    * அதே நெய்யில் ரவையை போட்டு நன்றாக வறுத்துகொள்ளவும். ரவை பச்சை வாடை போகும் வரை வறுக்கவும்.

    * அடுத்து அதில் ரவையில் வறுத்த முந்திரி திராட்சை, ஏலக்காய் பொடி, பொடித்த சர்க்கரை சேர்த்து கலக்கவும்.

    * இந்த கலவையில் பாலை சிறிது சிறிதாக ஊற்றி கலக்கவும்.

    * அதை சிறு சிறு உருண்டைகளாக பிடித்து வைக்கவும்.

    * சுவையான ரவா லட்டு ரெடி.

    குறிப்பு:

    * உருண்டை பிடிக்கும் அளவுக்கு பால் ஊற்றினால் போதும்.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    கிருஷ்ணருக்குப் பிடித்தமானவற்றில் அவலும் ஒன்று. அந்த அவல் லட்டை செய்வது எப்படி என்று பார்ப்போம்...
    தேவையானப் பொருட்கள் :

    சிவப்பு அவல் - 1 கப்
    பொட்டுக் கடலை (உடைத்தக் கடலை) - 1/2 கப்
    முந்திரி - 6
    திராட்சை - 6
    ஏலப்பொடி
    பால் - அரை கப்
    சர்க்கரை - 1 கப்
    நெய்
    தேங்காய் துருவல் - 2 கப்

    செய்முறை :

    * அவல், பொட்டுக்கடலை இரண்டையும் சுத்தம் செய்து தனித்தனியே வெறுமனே வறுத்து பொடித்து வைத்தக் கொள்ளவும்.
    * வாணலியில் சிறிது நெய் விட்டு முந்திரி, தேங்காய் துருவல், காய்ந்த திராட்சையை வறுத்து பொடித்துக் கொள்ளவும்.

    * சர்க்கரையையும் பொடித்து வைத்துக் கொள்ளவும்.

    * அகலமான பாத்திரத்தில் எல்லாவற்றையும் போட்டு ஏலப்பொடி, பால், சூடான நெய் சேர்த்து நன்கு கிளறி தேவையான அளவில் லட்டுகளாக பிடிக்கவும்.

    * சுவையான அவல் லட்டு ரெடி.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    இனிப்புகளில் பால் பாயாசம் மிகவும் சிறப்பானது. இந்த கிருஷ்ண ஜெயந்திக்கு கிருஷ்ணருக்கு நைவேத்தியம் செய்ய பால் பாயாசம் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்:

    பால் - 1/2 லிட்டர்
    சேமியா - 50 கிராம்
    ஏலக்காய் - 4
    ஜவ்வரிசி - ஒரு கைப்பிடி
    சர்க்கரை - 2 கப்
    முந்திரி - 10
    பாதாம் - 10
    உலர் திராட்சை - 10
    குங்குமப்பூ - சிறிது
    நெய் - தேவையான அளவு

    செய்முறை :

    * அடுப்பில் கடாய் வைத்து சூடானதும் சிறிது நெய் விட்டு சேமியாவை சிவக்க வறுத்து கொள்ளவும்.

    * ஒரு வாணலியில் தண்ணீர் விட்டு, தண்ணீர் நன்கு கொதித்ததும் அதில் ஜவ்வரிசி, வறுத்த சேமியாவை சேர்த்து, ஓரளவு வேக வைக்கவும்.

    * பின் அந்த சேமியாவில் உள்ள நீரை வடித்து விடவும்.

    * மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து, நெய்யை ஊற்றி, காய்ந்ததும் அதில் முந்திரி, உலர் திராட்சை மற்றும் பாதாம் சேர்த்து நன்று பொன்னிறமாக வறுத்து எடுத்துக் கொள்ளவும்.

    * ஒரு பாத்திரத்தில் பாலை விட்டு, அதில் ஏலக்காயை நன்கு தட்டி போட்டு நன்கு கொதிக்க விட வேண்டும். பாலானது நன்கு கொதித்ததும் அதில் சர்க்கரையை போட்டு, சர்க்கரை கரையும் வரை கொதிக்கவிடவும்.

    * பின்பு அதில் குங்குமப்பூவை சேர்த்து, தீயை சிம்மில் 2 நிமிடம் வைக்கவும்.

    * அதன் பின் அதில் சேமியா மற்றும் ஜவ்வரிசி சேர்த்து நன்கு கொதிக்கவிடவும்.

    * கடைசியாக அதில் நெய்யில் வறுத்த முந்திரி, திராட்சை மற்றும் பாதாமை சேர்த்து, ஒரு கொதி விட்டு இறக்கவும்.

    * இப்போது கிருஷ்ண ஜெயந்திக்கு ஏற்ற சுவையான பால் பாயாசம் ரெடி!!!

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    கிருஷ்ண ஜெயந்திக்கு கிருஷ்ணருக்கு நைவேத்தியம் செய்யும் இனிப்பு, கார வகைகளை பற்றி பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்:

    அரிசி மாவு - 2 கப்
    உளுத்தம் பருப்பு மாவு - 2 டேபிள் ஸ்பூன்
    மிளகாய் தூள் - தேவையான அளவு
    கடலைப் பருப்பு - 2 டேபிள் ஸ்பூன்
    கறிவேப்பிலை - சிறிது
    உப்பு - தேவையான அளவு
    பெருங்காயத் தூள் - 1/4 டீஸ்பூன்
    வெண்ணெய் - 2 டீஸ்பூன்
    எண்ணெய் - தேவையான அளவு (பொரிப்பதற்கு)

    செய்முறை:

    * முதலில் கடலைப் பருப்பை நீரில் 1 மணிநேரம் ஊற வைத்து, கழுவி காய வைக்க வேண்டும்.

    * பின்னர் ஒரு பாத்திரத்தில் அரிசி மாவு, உளுத்தம் பருப்பு மாவு, மிளகாய் தூள், கடலைப் பருப்பு, கறிவேப்பிலை, உப்பு, பெருங்காயத் தூள் மற்றும் வெண்ணெய் போட்டு கலந்து, சிறிது தண்ணீர் ஊற்றி, மாவை ஓரளவு கெட்டியாக பிசைந்து கொள்ள வேண்டும்.

    * பின்பு ஒரு பிளாஸ்டிக் ஷீட்டில் எண்ணெய் தடவி, ஒரு சிறிய எலுமிச்சை அளவு மாவை எடுத்து, அதில் வைத்து தட்டையாக தட்டிக் கொள்ள வேண்டும்.

    * பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், அதில் தட்டி வைத்துள்ள தட்டையைப் போட்டு பொன்னிறமாக முன்னும் பின்னும் பொரித்து எடுக்க வேண்டும்.

    * இதேப் போன்று அனைத்து மாவையும் தட்டி, பொரித்து எடுக்க வேண்டும்.

    * இப்போது சுவையான கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல் தட்டை ரெடி.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    இந்த கிருஷ்ண ஜெயந்திக்கு கிருஷ்ணருக்கு நைவேத்தியம் செய்யும் இனிப்பு, கார வகைகளை பற்றி பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பச்சரிசி - 2 கப்
    உளுத்த மாவு - ஒரு பிடி ( வறுத்து அரைத்தது )
    வெல்லம் - 1 1/2 கப்  
    எள் - கொஞ்சம்
    ஏலப்பொடி பொடி - 1/4 டீ ஸ்பூன்
    நெய் -  1 டேபிள் ஸ்பூன்
    பொறிக்க - எண்ணெய்

    செய்முறை :

    * முதலில் அரிசியை களைந்து உலர்த்தவும். இதை முதல் நாளே கூட செய்து வைக்கலாம். அரிசி காய்ந்ததும், மிக்சியில் மாவாக அரைத்து, சலித்து வைக்கவும். சலித்த மாவை வெறும் வாணலியில் வறுக்கவும்.

    * எள்ளை சுத்தம் செய்து வைக்கவும்.

    * ஒரு பாத்திரத்தில் தண்ணீர் விட்டு தூள் செய்த வெல்லத்தை போட்டு நன்றாக கலக்கவும். வெல்லம் கரைந்ததும், வடிகட்டி மீண்டும் அடுப்பில் வைத்து நன்கு கொதிக்கும் போது, எள், ஏலப்பொடி எல்லாம் போட்டு நன்கு கலக்கவும்.

    * பின் அரிசிமாவு, வறுத்து அரைத்த உளுத்தம் மாவு, நெய் போட்டு இறக்கி வைத்து நன்கு கிளறவும்.

    * கொஞ்சம் ஆறினதும் அழுத்தி பிசையவும்.

    * ஒரு வெள்ளை துணி அல்லது எண்ணெய் தடவிய தாம்பாளத்தில் சின்ன சின்னதாக ஆனால் உப்பு சீடையை விட சற்று பெரியதாக மொத்த மாவையும் உருட்டி வைக்கவும்.

    * அடுப்பில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கொஞ்சம் கொஞ்சமாக சீடைகளை அதில் போட்டு பொரித்து எடுக்கவும்.

    * 'கரகர' ப்பான 'வெல்ல சீடை' ரெடி.

    குறிப்பு:

    இதில் துளி கல் மண் இருந்தாலும் சீடை வெடிக்கும். சீடை கொஞ்சம் ஆறினதும் கையால் அழுத்தி பார்க்கணும். உடனே  உடைந்தால் நல்லா வந்திருக்கு என்று அர்த்தம். இல்லா விட்டால் இன்னும் கொஞ்ச நேரம் அடுப்பில் வைத்து எடுக்க வேண்டும் என்று அர்த்தம்.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    இந்த கிருஷ்ண ஜெயந்திக்கு கிருஷ்ணருக்கு நைவேத்தியம் செய்யும் இனிப்பு, கார வகைகளை பற்றி பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பச்சரிசி - 2 கப்
    உளுத்த மாவு - ஒரு பிடி ( வறுத்து அரைத்தது )
    தேங்காய் துருவல் - 2 டேபிள் ஸ்பூன்
    எள் - கொஞ்சம்
    பெருங்காயப்பொடி - 1/4 டீ ஸ்பூன்
    வெண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
    உப்பு - தேவைக்கு
    எண்ணெய் - பொரிக்க


    செய்முறை :

    * முதலில் அரிசியை நன்றாக கழுவி தண்ணீரை முழுவதுமாக வடித்து விட்டு உலர்த்தி வைக்கவும். இதை முதல் நாளே கூட செய்து வைக்கலாம். அரிசி காய்ந்ததும், மிக்சியில் அல்லது மிஷினில் கொடுத்து மாவாக அரைத்து, சலித்து வைக்கவும்.

    * எள்ளை சுத்தம் செய்து வைக்கவும்

    * ஒரு பெரிய பாத்திரத்தில் அரிசிமாவு, வறுத்து அரைத்த உளுத்தம் மாவு, எள், தேங்காய் துருவல், பெருங்காயப்பொடி, உப்பு, வெண்ணெய் எல்லாம் போட்டு தண்ணீர் விடாமல் நன்கு கலக்கவும். வெண்ணெய் நன்கு கலந்ததும், துளி தண்ணீர் விட்டு பிசையவும். மாவு நல்ல கெட்டியாக இருக்கணும். (சப்பாத்தி மாவை விட கெட்டியாக).

    * ஒரு வெள்ளை துணி அல்லது எண்ணெய் தடவிய தட்டில் சின்ன சின்னதாக ‘சீடை’ யாக மொத்த மாவையும் உருட்டி வைக்கவும்.

    * அடுப்பில் கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி, சூடானதும் கொஞ்சம் கொஞ்சமாக சீடைகளை அதில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.

    * ‘கரகர’ ப்பான ‘மொறு மொறு’ ப்பான ‘உப்பு சீடை’ ரெடி.

    குறிப்பு:

    * இதில் துளி கல், மண் இருந்தாலும் சீடை வெடிக்கும். ரொம்ப ஜாக்கிரதையாக செய்யவேண்டிய பக்ஷணம் இது.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ×