என் மலர்tooltip icon

    கிச்சன் கில்லாடிகள்

    இந்த கிருஷ்ண ஜெயந்திக்கு கிருஷ்ணருக்கு நைவேத்தியம் செய்யும் இனிப்பு, கார வகைகளை பற்றி பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    அரிசிமாவு - 2 கப்
    பொட்டு கடலை மாவு - 1/2 கப்
    வரமிளகாய் - 12 (காரத்துக்கேற்ப)
    வெண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்
    சீரகம் - 1 டேபிள்ஸ்பூன்
    எள்ளு - 1 டேபிள்ஸ்பூன்
    உப்பு
    தண்ணீர்
    எண்ணெய்

    செய்முறை :

    * மிளகாயை இரண்டு மணி நேரம் தண்ணீரில் ஊறவைத்து, கொஞ்சமா தண்ணீர் விட்டு நைசாக அரைத்துக் கொள்ளவும்.

    * தண்ணீர் தவிர மற்ற பொருட்கள் அனைத்தையும் ஒரு பாத்திரத்தில் எடுத்து, கொஞ்சம் தண்ணீர், 2 டேபிள்ஸ்பூன் காய்ந்த(சூடான) எண்ணெய் விட்டு பிசைந்துகொள்ளவும்.

    * கடாயை அடுப்பில் வைத்து சூடானதும் முறுக்கு அச்சில் மாவை போட்டு வட்டமாக பிழிந்து சூடான எண்ணெயில் முறுக்குகளைப் போட்டு பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும்.

    * சுவையான முறுக்கு தயார்.

    * எண்ணெய் மிதமான சூட்டில் காய்ந்தால் போதும். எல்லா முறுக்குகளும் சுட்டு எடுக்கும் வரை தீயின் அளவை ஒரேமாதிரி வைக்கவும். காற்றுப்புகாத டப்பாக்களில் எடுத்துவைக்கவும்.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    பான்கேக்குகளை சாதாரணமாகவோ அல்லது சர்க்கரைத் தூள் தூவப்பட்ட வெண்ணையுடன் சேர்த்தோ அல்லது க்ரீம் வகையுடன் சேர்த்தோ அல்லது சீஸ், பழம் போன்றவற்றை சேர்த்ததோ சாப்பிடலாம்.
    தேவையான பொருட்கள் :

    மைதா மாவு - 2 கப்
    முட்டை - 2
    பால் - 1 1/2 கப்
    பேக்கிங் பவுடர் - 1/2 டீஸ்பூன்
    வெண்ணெய்/எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
    சர்க்கரை - 5 டேபிள் ஸ்பூன்
    வாழைப்பழம் - 3

    செய்முறை :

    * ஒரு பௌலில் முட்டைகளை உடைத்து ஊற்றி, நன்கு பொங்கி வரும் படி அடித்துக் கலக்குங்கள்.

    * வெண்ணெயை உருக்கவும். வாழைப்பழத்தை நன்றாக மசித்து கொள்ளவும்

    * பின் அத்துடன், மைதா மாவு, பேக்கிங் பவுடர், சர்க்கரை, மசித்த வாழைப்பழம், வெண்ணெய் மற்றும் சிறிது பாலையும் சேர்த்து நன்கு கலக்குங்கள்.

    * ரொம்பவும் மென்மையாகும் வரை கலக்கக்கூடாது. கட்டி கட்டியாக துண்டுகள் இருந்தால், அது அப்படியே இருக்கட்டும். அப்போது தான் பான்கேக் நன்கு உப்பி வரும், இல்லையேல் கடினமாக தட்டையாக வரும்.

    * தட்டையான நான்ஸ்டிக் வாணலியை அடுப்பில் வைத்து, சூடானதும் வெண்ணையை வாணலியில் தடவிக் கொள்ளவும். பின்னர் அதில் கால் கப் மாவை எடுத்து, வாணலியில் ஊற்றி வட்டமாக தேய்க்கவும்.

    * அந்த பான்கேக்கை 2 நிமிடங்களுக்கு அல்லது பான்கேக் பொன்னிறத்தில் வரும் வரை வேக வைக்கவும். பான்கேக்கின் ஒரத்தில் முறுகலாக வரும் போது கவனமாக திருப்பி போடவும். அவ்வாறு திருப்பியதும், அதன் மறுபக்கமும் பொன்னிறமாக முறுகலாக வரும் போது எடுத்துக் கொள்ளவும்.

    * இதோ சுவையான பான் கேக் தயார்!!!

    * வெண்ணெய், வேர்க்கடலை வெண்ணெய், சிரப், ஜெல்லி, சாக்லேட் சிப்ஸ் அல்லது பழங்கள் என்று நீங்கள் விரும்பும் ஐட்டங்களுடன், இந்த பான்கேக்கை சாப்பிடலாம்.

    குறிப்பு :

    * எலுமிச்சை சாறு மற்றும் சர்க்கரைத்தூள் சேர்த்து டாப்பிங் செய்தால் அருமையாக இருக்கும்.

    * பான்கேக் கலவையை கல்லில் ஊற்றப்போகும் முன் கொஞ்சம் எலுமிச்சைச்சாறு, கொஞ்சம் சர்க்கரையை சேர்க்கலாம்.

    * டாப்பிங்கிற்கு பயன்படுத்தும் சாக்லேட் சிப்ஸ், ஸ்ட்ராபெர்ரி, வாழைப்பழத்துண்டுகள், ப்ளூபெர்ரி போன்றவற்றை நேரடியாக பான்கேக் மாவிலேயே கலந்துவிடலாம்.

    * பான்கேக் கல்லில் ஒட்டாமல் வரவேண்டுமெனில் சன்ஃப்ளவர் எண்ணெயையும் பயன்படுத்தலாம்.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    வீட்டில் எளிய முறையில் மில்க்மெய்டு சாக்லேட் பர்ஃபி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    மில்க்மெய்டு - அரை டேபிள்ஸ்பூன்
    முந்திரி - ஒரு டேபிள்ஸ்பூன்
    பாதாம் - ஒரு டேபிள்ஸ்பூன்
    வெண்ணெய் - அரை கப்
    சர்க்கரை - அரை கப்
    கோகோ - மூன்று டேபிள் ஸ்பூன்

    செய்முறை :

    * முந்திரி, பாதாமை இரண்டாக உடைத்து கொள்ளவும்.

    * அடிகனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து மில்க்மெய்டு, வெண்ணெய், சர்க்கரை, கோகோ ஆகியவற்றை சேர்த்து மிதமான சூட்டில் கிளறவும்.

    * கெட்டியாகி பாத்திரத்தில் ஒட்டாமல் வரும். அந்த பக்குவம் வந்ததும் இறக்கி, நெய் தடவிய தட்டில் கொட்டி சமன்படுத்தி, மேலே முந்திரி, பாதாம் தூவி ஆறவிடவும்.

    * ஆறியதும் துண்டுகள் போட்டு பரிமாறவும்.

    * குழந்தைகள் இந்த மில்க்மெய்டு சாக்லேட் பர்ஃபி விரும்பி சாப்பிடுவார்கள்.

    * உங்களுக்கு விருப்பமான நட்ஸ் அனைத்தையும் இதில் சேர்த்து கொள்ளலாம்.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    எளிய முறையில் இனிப்பான பலாப்பழ அல்வா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பலாச்சுளை - 16
    சீனி - ஒன்றரை கப்
    நெய் - 4 மேசைக்கரண்டி
    முந்திரி, திராட்டை - தேவைக்கு
    ஏலக்காய் - 3

    செய்முறை :

    * ஏலக்காயை பொடித்து கொள்ளவும்.

    * பலாச்சுளையை கொட்டை மற்றும் உள் தோலை நீக்கி விட்டு பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

    * கடாயை அடுப்பில் வைத்து சூடானதும் முந்திரி, திராட்சையை போட்டு வறுத்து வைத்து கொள்ளவும்.

    * ஒரு அடிகனமான வாணலியில் நறுக்கிய பலாச்சுளையை போட்டு சீனி சேர்த்து அடுப்பில் வைத்து சீனி கரையும் வரை கைவிடாமல் கிளறி கொண்டே இருக்கவும். இடை இடையே நெய் விட்டுக்கொண்டே இருக்கவும்.

    * 20 நிமிடம் கழித்து வறுத்த முந்திரி, திராட்டை, ஏலக்காய் தூள் சேர்த்து மீதி உள்ள நெய்யை சேர்க்கவும்.

    * அல்வா பக்கும் வந்து நெய் மேலே வரும் போது அடுப்பை அணைத்து சூடான பரிமாறவும்.

    * சுவையான பலாப்பழ அல்வா ரெடி.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    குழந்தைகளுக்கு விருப்பமான பிரெட் வெஜிடபிள் சீஸ் ரோல்ஸ் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பிரெட் - 10
    கேரட் - ஒன்று
    உருளைக்கிழங்கு - 2
    வெங்காயம் - 2
    கறிவேப்பிலை - ஒரு கொத்து
    பச்சை மிளகாய் - 1
    கடுகு - அரை தேக்கரண்டி
    மிளகு தூள் - கால் தேக்கரண்டி
    மிளகாய் தூள் - அரை தேக்கரண்டி
    கரம் மசாலா தூள் - கால் தேக்கரண்டி
    உப்பு - ஒரு தேக்கரண்டி
    துருவிய சீஸ் - தேவைக்கு

    செய்முறை :

    * வெங்காயம், கேரட், உருளைக்கிழங்கு, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    * குக்கரில் தண்ணீர் ஊற்றி கேரட், உருளைக்கிழங்கை போட்டு வேக விடவும். வெந்ததும் எடுத்து மசித்து வைத்துக் கொள்ளவும்.

    * ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, கறிவேப்பிலை தாளித்த பின் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

    * வெங்காயம் நன்றாக வதங்கியதும் மிளகாய் தூள், கரம் மசாலா தூள், மிளகு தூள், உப்பு சேர்த்து கிளறவும்.

    * அடுத்து அதில் மசித்த உருளைக்கிழங்கு, கேரட் கலவையை சேர்த்து பிரட்டவும்.

    * கலவை ஒன்று சேர்ந்ததும் ஆறவைத்து கொழுக்கட்டைகள் போல் உருட்டிக் கொள்ளவும்.

    * பிரெட்டின் ஓரங்களை நீக்கி விடவும். கையை தண்ணீரில் நனைத்து பிரெட்டின் இரு புறங்களிலும் வைத்து அழுத்தவும்.

    * பிரெட்டின் மேல் சீஸை தூவி விடவும். பிரெட்டின் ஒரு ஓரத்தில் மசாலா கலவையை வைத்து அப்படியே சுருட்டவும், பின்னர் இரண்டு ஓரங்களையும் தண்ணீர் தொட்டு கொண்டு மூடி விடவும்.

    * வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் செய்து வைத்திருக்கும் பிரெட் ரோலை ஒவ்வொன்றாக போட்டு பொரித்து எடுக்கவும்.

    * சுவையான மொறுமொறு பிரெட் வெஜிடபிள் சீஸ் ரோல்ஸ் ரெடி.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    குழந்தைகளுக்கு இந்த வாழைப்பழ பணியாரம் மிகவும் பிடிக்கும். அதை எப்படி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    சிவப்பு அரிசி - அரை கப்
    மைதா மாவு - அரை கப்
    வெல்லம் - 1 கப்
    பெரிய கனிந்த வாழைப்பழம் - 2
    ஏலக்காய் - 3
    தேங்காய் துருவல் - கால் கப்
    இட்லி சோடா - ஒரு பின்ச்
    எண்ணெய் - தேவையான அளவு
    பாதம் பொடித்தது - ஒரு தேக்கரண்டி
    சுக்கு பொடி - அரை தேக்கரண்டி
    உப்பு - ஒரு சிட்டிகை

    செய்முறை :

    * சிவப்பு அரிசியை இரண்டு மணிநேரம் ஊறவைக்கவும்.

    * பாதாமை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    * ஊறிய அரிசியை மிக்சியில் நைசாக அரைத்து அத்துடன் ஒரு சிட்டிகை உப்பு, ஏலக்காய், மைதா சேர்த்து அரைக்கவும். கடைசியாக வாழைப்பழத்தை நறுக்கி சேர்த்து அரைக்கவும்.

    * வெல்லத்தை பொடித்து அதில் சிறிது தண்ணீர் சேர்த்து கொதிக்கவிட்டு ஆறியதும் வடிகட்டிகொள்ளவும்.

    * மாவில் இட்லி சோடா, பொடித்த பாதம், சுக்குபொடி, தேங்காய் துருவல், வெல்ல கரைசலை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.

    * குழி பணியார சட்டியை காயவைத்து லேசாக எண்ணெய் ஒரு துளி விட்டால் போதும். மாவை ஊற்றி தீயின் தனலை மிதமாக வைத்து மூடிபோட்டு 3 நிமிடம் வேக விடவும். மறுபுறம் திருப்பி போட்டு மேலும் சிறிது எண்ணெய் விட்டு மூடி போட்டு 3 நிமிடம் வேகவிடவும்.

    * சுவையான வாழைப்பழ குழிப்பணியாரம் ரெடி.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    பிரட் குலாப் ஜாமூன் செய்வதை போல்தான் இதையும் செய்ய வேண்டும். இப்போது பிரட் ட்ரை குலாப் ஜாமூன் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பால் பிரட் - 8 துண்டுகள்
    மைதா - 1 டேபிள் ஸ்பூன்
    பால் - 1/4 கப்
    ரோஸ் எசன்ஸ் - 2 துளிகள்
    பொடித்த சர்க்கரை - அரை கப்
    சோடா உப்பு - 1/4 டீஸ்பூன்
    எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு

    சர்க்கரை பாகுவிற்கு...

    சர்க்கரை - அரை கப்
    தண்ணீர் - அரை கப்
    குங்குமப்பூ - 1 சிட்டிகை
    ஏலக்காய் - 1/4 டீஸ்பூன்

    செய்முறை:

    * ஒரு பாத்திரத்தில் சர்க்கரை, தண்ணீர், குங்குமப்பூ மற்றும் ஏலக்காய் பொடி சேர்த்து அடுப்பில் வைத்து, சர்க்கரை கரையும் வரை சூடேற்ற வேண்டும். நீரில் உள்ள சர்க்கரை முழுவதும் கரைந்து, சர்க்கரைப் பாகு ஓரளவு கெட்டியாக ஆரம்பிக்கும் போது, அடுப்பை அணைத்துவிட வேண்டும்.

    * சர்க்கரை பாகு குளிர்ந்து வெதுவெதுப்பானதும், அதில் ரோஸ் எசன்ஸ் சேர்த்து கலந்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

    * பிரட் துண்டுகளை எடுத்து அதன் பக்கவாட்டில் உள்ள ப்ரௌன் நிற பகுதியை நீக்கிவிட்டு, பின் ஒவ்வொரு பிரட் துண்டுகளையும் எடுத்து பாலில் நனைத்து பிழிந்து, மிக்ஸியில் போட்டு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

    * அரைத்த பிரட்டை ஒரு பாத்திரத்தில் போட்டு, அத்துடன் சோடா உப்பு, மைதா சேர்த்து கைகளில் ஒட்டாத அளவில் நன்கு மென்மையாக பிசைந்து, பின் அதனை சிறு உருண்டைகளாக மென்மையாக உருட்டி தனியாக ஒரு தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும்.

    * ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், உருட்டி வைத்துள்ள உருண்டைகளைப் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.

    * அனைத்து உருண்டைகளையும் பொரித்ததும், அவற்றை சர்க்கரை பாகுவில் போட்டு, 2 மணிநேரம் ஊற வைக்க வேண்டும்.

    * இறுதியில் அந்த உருண்டைகளை சர்க்கரை பாகில் இருந்து எடுத்து, பொடித்த சர்க்கரையில் உருட்டினால், தட்டில் வைக்கவும்.

    * சுவையான பிரட் ட்ரை குலாப் ஜாமூன் ரெடி!!!

    * பொடித்த சர்க்கரை அல்லது தேங்காய் துருவலிலும் பிரட்டி வைக்கலாம்.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ஆந்திரா ஸ்டைல் அசைவ குழம்புகளுள் ஒன்றான மட்டன் குழம்பை எப்படி எளிதில் வீட்டில் செய்வது என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    மட்டன் - 500 கிராம்
    வெங்காயம் - 2
    தக்காளி - 2
    இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன்
    மிளகு - 10 பச்சை
    ஏலக்காய் - 5
    சோம்பு - 1/2 டீஸ்பூன்
    கசகசா - 1 டீஸ்பூன்
    தனியா - 1 டீஸ்பூன்
    சீரகம் - 1 டீஸ்பூன்
    பட்டை - 1 இன்ச்
    கிராம்பு - 5
    மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
    மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
    மிளகு தூள் - 1 டீஸ்பூன்
    கறிவேப்பிலை - சிறிது
    கொத்தமல்லி தழை - சிறிதளவு
    உப்பு - தேவையான அளவு
    எண்ணெய் - தேவையான அளவு

    செய்முறை :

    * வெங்காயம், கொத்தமல்லி தழை, தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    * மட்டன் துண்டுகளை நன்கு சுத்தமாக கழுவிக் கொள்ள வேண்டும்.

    * குக்கரை அடுப்பில் வைத்து, அதில் கழுவிய மட்டனை போட்டு, உப்பு, மஞ்சள் தூள் மற்றும் 3 கப் தண்ணீர் ஊற்றி, 5 விசில் விட்டு இறக்க வேண்டும்.

    * பின்னர் மற்றொரு அடுப்பில் வாணலியை வைத்து, அதில் சீரகம், கசகசா, தனியா, மிளகு, கிராம்பு, ஏலக்காய், பட்டை மற்றும் சோம்பு சேர்த்து வறுத்துக் ஆற வைத்து, மிக்ஸியில் போட்டு நைஸாக பொடித்து கொள்ளவும்.

    * ஒரு அகன்ற வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கறிவேப்பிலை போட்டு தாளித்து, நறுக்கிய வெங்காயத்தை போட்டு பொன்னிறமாக வதக்கிய, பின் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து 2 நிமிடம் வதக்க வேண்டும்.

    * அடுத்து அதில் நறுக்கிய தக்காளி மற்றும் உப்பு சேர்த்து, தக்காளி நன்கு வதங்கும் வரை கிளறி விட வேண்டும்.

    * பின் வேக வைத்துள்ள மட்டன் கலவையை ஊற்றி, அரைத்து வைத்துள்ள பொடி, மிளகு தூள் மற்றும் மிளகாய் தூள் சேர்த்து, நன்கு கிளறி, 2 கப் தண்ணீர் ஊற்றி, பச்சை வாசனை போகும் வரை மூடி 15 நிமிடம் கொதிக்க விட்டு கொத்தமல்லி தழை தூவி இறக்க வேண்டும்.

    * இப்போது சுவையான ஆந்திரா ஸ்டைல் மட்டன் குழம்பு ரெடி!!!

    * இதனை சாதம் அல்லது சப்பாத்தியுடன் சாப்பிட்டால் நன்றாக இருக்கும்.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    உள்ளே காரமும், மேலே இனிப்பும் கொண்ட பிரெட் உருளைக்கிழங்கு போண்டா செய்வது எப்படி என்று பார்ப்போம்.
    தேவையான பொருட்கள் :

    பிரெட் - 10 துண்டுகள்
    உருளைக்கிழங்கு - 2 பெரியது
    பெரியவெங்காயம் - 1 பெரியது
    பச்சை மிளகாய் - 2
    மிளகுப்பொடி - 1/2 மேசைக்கரண்டி
    கரம்மசாலாபொடி - 1/2 தேக்கரண்டி
    மிளகாய்த்தூள் - காரத்திற்கேற்ப
    உப்பு - தேவையான அளவு
    பூண்டு - - 5 பற்கள்
    மஞ்சள் தூள் - சிறிதளவு
    கறிவேப்பிலை - 2 இணுக்கு
    கொத்தமல்லி இலை - சிறிதளவு
    எண்ணெய் - பொரிப்பதற்கு

    செய்முறை :

    * உருளைக்கிழங்கை நன்றாக வேகவைத்து மசித்துக்கொள்ளவும்.

    * பச்சை மிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லி, பூண்டு, வெங்காயத்தை பொடியாக நறுக்கி வைக்கவும்.

    * வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி காய்ந்தவுடன் சோம்பு தாளித்து, பெரிய வெங்காயம் கறிவேப்பிலை, பூண்டு போட்டு வதக்கவும்.

    * வெங்காயம் நிறம் மாறியதும், உருளைகிழங்கைப்போட்டு வதக்கவும்.

    * அடுத்து அதில் மிளகுப்பொடி, கரம்மசாலாபொடி, மிளகாய்த்தூளை, தேவையான அளவு உப்பு போட்டு நன்கு கிளறவும். பாத்திரத்தில் ஒட்டாமல் வரும்பொழுது அடுப்பை அணைத்து விடவும்.

    * கைபொறுக்கும் சூடு வந்தவுடன் சிறு உருண்டைகளாகப் பிடித்து வைக்கவும்.



    * ஒரு வாயகன்ற பாத்திரத்தில் நீரை விட்டு அதில் பிரெட் துண்டு ஒன்றை எடுத்து நீரில் நனைத்து, இரண்டு கைகளுக்கும் நடுவில் வைத்து தண்ணீரை நன்றாக பிழிந்து விட்டு பிரட்டின் நடுவில் உருளைக்கிழங்கு உருண்டையை வைத்து நன்கு உருண்டையாக உருட்டவும். இதே போல் அனைத்து பிரெட் துண்டுகளையும் செய்து வைக்க வேண்டும்.

    * வாணலியில் எண்ணெய் ஊற்றி, சூடானவுடன் பிரெட் உருண்டை போட்டு பொரித்து எடுக்கவும்.

    * எண்ணெய் நன்கு காய்ந்து சரியான நேரத்தில் போட்டு எடுத்தால், ஒரு துளி கூட போண்டா எண்ணெயே குடிப்பதில்லை.

    * பிடித்த சட்னி அல்லது சாஸுடன் பாரிமாறலாம்.

    குறிப்பு:

    பிரெட் துண்டினை நீரில் நனைத்தவுடன் விரைவாக எடுக்கவில்லையெனில், அதிகப்படியான நீரை உறிஞ்சி உருண்டை பிடிக்கும் பொழுது உருளை கலவை வெளியே வந்துவிடும்.

    * கிழங்குடன் நமக்கு பிடித்தமான பட்டாணி, கேரட், கோஸ் போன்றவற்றையும் சேர்த்து வதக்கி செய்யலாம்.

    * இஞ்சி பூண்டு பேஸ்ட் போட்டும் வதக்கி செய்யலாம்.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ஆப்பம் சாப்பிட்டு இருப்பீர்கள். முட்டை ஆப்பம் மிகவும் சுவையாக இருக்கும். இதை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
    ஆப்பம் செய்ய தேவையான பொருட்கள் :

    பச்சரிசி - மூன்று டம்ளர்
    தேங்காய் துருவல் - 2  கப்
    உளுந்து - 3 தேக்கரண்டி
    வெந்தயம் - 1 தேக்கரண்டி
    சமையல் சோடா - 3 சிட்டிகை
    உப்பு  சிறிதளவு

    முட்டை மசலாவிற்கு :

    முட்டை - மூன்று
    சர்க்கரை - அரை தேக்கரண்டி
    மிளகுத் தூள் - 2 தேக்கரண்டி
    எண்ணெய் - ஐந்து மேசைக்கரண்டி
    நெய் - இரண்டு மேசைக்கரண்டி

    செய்முறை :

    * ஒரு கிண்ணத்தில் முட்டையை உடைத்து ஊற்றி அத்துடன் சர்க்கரை, மிளகுத் தூள் சேர்த்து நன்றாக அடித்து கலந்து வைக்கவும்.

    * அரிசியுடன், உளுந்தையும், வெந்தயத்தையும் சேர்த்து 2 அல்லது 3 மணிநேரம் ஊற வைக்கவும். பின்னர் நன்கு கழுவி விட்டு, தேங்காய் துருவல் சேர்த்து கொஞ்சமாக தண்ணீர்விட்டு கெட்டியாக அரைத்துக் கொள்ளவும். பிறகு அதில் தேவையான அளவிற்கு உப்பு சேர்த்து தோசை மாவு பதத்திற்கு கரைத்து புளிக்க விடவும். ஆப்பத்திற்கு புளித்தால்தான் சாஃப்ட்டாகவும், சாப்பிட நன்றாகவும் இருக்கும்.

    * ஆப்பம் ஊற்றுவதற்கு முன்பு மாவில் சமையல் சோடாவைக் கரைத்து கலந்து விட்டு, ஆப்பக்கடாயில் சிறிது எண்ணெய்த் தடவி, ஒரு வெங்காயத்தைப் பாதியாக நறுக்கி தேய்த்துவிட்டு மாவைச் சட்டியில் ஊற்றி, சட்டியை இரண்டு கையால் பிடித்து சுழற்றவும்.

    * பின்னர் அதில் அடித்து வைத்திருக்கும் முட்டைக் கலவையை ஒரு குழி கரண்டி எடுத்து மாவின் நடுவில் ஊற்றி மறுபடியும் ஒரு முறை சுழற்றி, சுற்றிலும் நெய் ஊற்றி மூடி வேக வைத்து சுட்டெடுக்கவும்.

    * சுவையான முட்டை ஆப்பம் ரெடி.

    * இத்துடன் காரச் சட்னி, சன்னா மசாலா வைத்து சாப்பிட சுவையாக இருக்கும்.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    சில்லி சிக்கன் செய்வதை போல் மீனில் சில்லி மீன் வறுவல் செய்தால் மிகவும் சுவையாக இருக்கும். இதை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
    தேவையான பொருள்கள் :

    வஞ்சிரம் வறுவல் ஸ்லைஸ் - 10
    குடமிளகாய் - 1
    வெங்காயம் - 1
    சோயாசாஸ் - 1 டீஸ்பூன்
    கிரீன்சில்லி சாஸ் - 2 டீஸ்பூன்
    ரெட்சில்லி சாஸ் - 1 டீஸ்பூன்
    டொமேட்டோ கெட்சப் - 2 டேபிள்ஸ்பூன்
    மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்
    உப்பு - சிறிது
    எண்ணெய் - தேவைக்கு
    கார்ன் மாவு -1/2 டீஸ்பூன்
    எலுமிச்சை - 1

    செய்முறை :

    * மீனை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும்.
     
    * ஒரு பாத்திரத்தில் மீனை போட்டு அதில் மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து நன்றாக பிரட்டி 1/2 மணி நேரம் ஊற விடவும்.

    * தவாவில் சிறிது எண்ணெய் விட்டு மீனை போட்டு இரண்டு பக்கமும் சிவக்கும் வரை பொரித்துக்கொள்ளவும்.

    * வெங்காயத்தை நான்கு துண்டுகளாக வெட்டி இதழ் இதழாக பிரிக்கவும்.

    * குடமிளகாயை 1 இன்ச் நீளத்திற்கு சதுரமாக நறுக்கவும்.

    * வாணலியை அடுப்பில் வைத்து இரண்டு குழிக்கரண்டி அளவு எண்ணெய் விட்டு வெங்காயத்தை போட்டு சிவந்து விடாமல் வதக்கவும்.

    * அடுத்து அதில் நறுக்கிய குட மிளகாய் சேர்த்து வதக்கவும்.

    * அடுத்து அதில் அனைத்து சாஸ் வகைகளையும் ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து நன்றாக கலக்கவும்.

    * 1/4 டம்ளர் நீரில் கார்ன் மாவை கரைத்து கொதிக்கும் கலவையில் சேர்த்து கெட்டியாகும் வரை கிளறி அடுப்பை அணைக்கவும்.

    * சர்விங் பவுலில் மீன்களை வைத்து, கிரேவியை தேவையான அளவு அதன் மேல் ஊற்றவும்.

    * எலுமிச்சையை எட்டாக நறுக்கி பிளேட்டின் ஓரத்தில் வைத்து விரும்பினால் வெங்காயத்தை வட்டவடிவில் வெட்டி அலங்கரித்து பரிமாறவும்.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    மஷ்ரூமில் குழப்பு, தொக்கு செய்வதற்கு பதிலாக மஷ்ரூம் ஆட்லெட் செய்து கொடுத்தால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். மஷ்ரூம் ஆம்லெட் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    காளான் - 200 கிராம்
    முட்டை - 6
    பெரிய வெங்காயம் - 50 கிராம்
    பச்சைமிளகாய் - 3
    தக்காளி - 50 கிராம்
    இஞ்சி - ஒரு சிறிய துண்டு
    பூண்டு - 3 பல்
    கொத்தமல்லித்தழை - சிறிதளவு
    கரம் மசாலாத்தூள் - ஒரு டீஸ்பூன்
    மிளகாய்த்தூள் - ஒன்றரை டீஸ்பூன்
    மிளகுத்தூள் - சிறிதளவு
    உப்பு - தேவையான அளவு
    எண்ணெய் - சிறிதளவு



    செய்முறை :

    * காளானை தண்ணீரில் கழுவி சுத்தம் செய்து செய்து ஒவ்வொரு காளானையும் நான்கு துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும்.

    * வெங்காயம், தக்காளி, பச்சைமிளகாய், இஞ்சி, பூண்டு ஆகியவற்றைப் பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.

    * வாணலியில் சிறிதளவு எண்ணெய் சேர்த்து, நறுக்கிய காளான், வெங்காயம், தக்காளி, பச்சைமிளகாய், இஞ்சி, பூண்டு ஆகியவற்றை ஒன்றன் பின் ஒன்றாகச் சேர்த்து நன்கு வதக்கவும்.

    * அனைத்தும் நன்றாக வதங்கியதும் அத்துடன் கரம் மசாலாத்தூள், மிளகாய்த்தூள், மிளகு தூள், கொத்தமல்லித்தழை, உப்பு ஆகியவற்றைச் சேர்த்து வதக்கி, கலவையை இறக்கி ஆறவிடவும்.

    * ஒரு பவுலில் முட்டைகளை உடைத்து ஊற்றி, சிறிதளவு உப்பு சேர்த்து நன்றாக அடித்துக்கொள்ளவும்.

    * தோசைக்கல்லை சூடாக்கி, சிறிதளவு எண்ணெய் தேய்த்து அடித்து வைத்திருக்கும் முட்டையை ஊற்றி, இதன் மேல் வதக்கிய கலவையைப் பரவ விட்டு சிறிது நேரம் வேக விடவும், பின்பு, ஆம்லெட்டை இரண்டாக மடித்து, திருப்பிப் போட்டு வேகவிட்டு எடுக்கவும்.

    * ஆம்லெட்டின் மேல் மிளகுத்தூள் தூவி சூடாகப் பரிமாறவும்.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ×