என் மலர்tooltip icon

    கிச்சன் கில்லாடிகள்

    எளிய முறையில் மீன் சூப் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    வஞ்சிர மீன் - 4 துண்டுகள்
    பெரிய வெங்காயம் - 2
    மிளகுத்தூள் - 3/4 டீஸ்பூன்
    மிளகாய்தூள் - 1/2 டீஸ்பூன்
    உப்பு - சுவைக்கு
    இஞ்சி - சிறிது துண்டு
    எண்ணெய் - 1 ஸ்பூன்
    கொத்தமல்லி தழை - சிறிதளவு
    எலுமிச்சை சாறு - 1 ஸ்பூன்

    செய்முறை:

    * பெரிய வெங்காயம், கொத்தமல்லி தழையை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    * இஞ்சியை தோல் நீக்கி துருவிக் கொள்ளவும்.

    * வஞ்சிரம் மீனை நன்றாக கழுவி பொடியாக நறுக்கிகொள்ளவும்.

    * வஞ்சிர மீன் துண்டுகள், பெரிய வெங்காயம், மிளகுத்தூள், துருவிய இஞ்சி, மிளகாய்தூள், உப்பு, எண்ணெய், 5 டம்ளர் தண்ணீர் ஊற்றி மைக்ரோவேவ் ஓவனில் ஹை பவரில் 8 - 10 நிமிடங்கள் வைக்கவும்.

    * இரண்டு நிமிடம் ஸ்டாண்டிங் டைம் விட்டு இறக்கவும்.

    * இதில் எலுமிச்சை சாறு, கொத்தமல்லி தழை சேர்த்து சூடாக பரிமாறவும்.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    இட்லி சாப்பிட குழந்தைகளுக்கு பிடிக்காது. மாலையில் பள்ளியில் இருந்து வரும் குழந்தைகளுக்கு இட்லியை இப்படி செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள்.
    தேவையான பொருட்கள் :

    இட்லி - 6
    காஷ்மீரி மிளகாய்த்தூள் - அரை ஸ்பூன்
    கார்ன்ஃப்ளார் மாவு - 25 கிராம்
    இஞ்சி - பூண்டு விழுது - 1 ஸ்பூன்
    கறிவேப்பிலை - 15 இலை
    மைதா மாவு - 40 கிராம்
    சோயா சாஸ் - 1 ஸ்பூன்
    சீரகத்தூள் - அரை டேபிள்ஸ்பூன்
    கரம் மசாலாத்தூள் - அரை டீஸ்பூன்
    ஓமப்பொடி - அரை டீஸ்பூன்
    எண்ணெய் - 100 மில்லி
    உப்பு - தேவையான அளவு
    எலுமிச்சைப் பழம் - ஒன்றில் பாதி
    பெரிய வெங்காயத் துண்டுகள் - அலங்கரிக்க

    செய்முறை :

    * ஒவ்வொரு இட்லியையும் தலா ஆறு துண்டுகளாக்கிக் கொள்ளவும்.

    * ஒரு பாத்திரத்தில் மைதா மாவு, கார்ன்ஃப்ளார் மாவு, உப்பு, சீரகத்தூள், சோயா சாஸ், காஷ்மீரி மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள், ஓமப்பொடி, இஞ்சி-பூண்டு விழுது, சிறிது தண்ணீர் சேர்த்து நன்கு கலக்கிக் கொள்ளவும்.

    * இந்தக் கலவையில் இட்லித் துண்டுகளை சேர்த்துக் உடையாமல் மெதுவாக கலக்கவும்.

    * கடாயில் அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் மசாலா பிரட்டி வைத்த இட்லிகளை எண்ணெயில் போட்டு பொரித்தெடுக்கவும்.

    * கறிவேப்பிலையைத் தனியாக பொரித்தெடுக்கவும்.

    * பொரித்த இட்லித் துண்டுகளின் மேலே கறிவேப்பிலையைத் தூவி எலுமிச்சை மற்றும் வட்டமாக நறுக்கிய வெங்காய்த்துண்டுகளுடன் பரிமாறவும்.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    சில குழந்தைகளுக்கு அவித்த முட்டை பிடிக்காது, அவர்களுக்கு இப்படி பஜ்ஜியாக செய்து கொடுக்கலாம்.
    தேவையான‌ பொருட்க‌ள் :

    முட்டை - 3
    கடலை மாவு - அரை டம்ளர்
    அரிசி மாவு - ஒரு மேசை கரண்டி
    காஷ்மீரி சில்லி பொடி - அரை தேக்கரண்டி
    உப்பு - தேவைக்கு
    இஞ்சி பூண்டு பேஸ்ட் ‍ - கால் தேக்கரண்டி
    மிளகு தூள் - சிறிது
    ரெடி கலர் பொடி - கால் தேக்கரண்டி
    இட்லி சோடா - சிறிது

    செய்முறை :

    * முட்டையை வேகவைத்து ஆறியதும் ஒவ்வொரு முட்டையையும் 2 துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.

    * க‌ட் செய்த‌ முட்டையில் சிறிது மிளகு தூள், உப்பு தூவி கொள்ள‌வும்.

    * ஒரு பாத்திரத்தில் க‌ட‌லைமாவு, அரிசி மாவு, உப்பு, மிள‌காய் தூள், இஞ்சி பூண்டு பேஸ்ட், இட்லி சோடா, ரெடிக‌ல‌ர் பொடி அனைத்தையும் ஒன்றாக‌ போட்டு சிறிது தண்ணீர் சேர்த்து ப‌ஜ்ஜி மாவு ப‌த‌த்தில் க‌ரைத்து கொள்ளவும்.

    * அடுப்பில் கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் ஒவ்வொரு முட்டையாக‌ மெதுவாக‌ உடையாம‌ல் போட்டு எடுத்து பஜ்ஜி மாவுவில் முக்கி எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்க‌வும்.

    * சுவையான‌ முட்டை ப‌ஜ்ஜி ரெடி.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    மட்டன் சொதி தோசை, சப்பாத்திக்கு தொட்டு கொள்ள அருமையாக இருக்கும். இதை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    மட்டன் - 300 கிராம்
    இஞ்சி விழுது - 30 கிராம்
    பூண்டு விழுது - 30 கிராம்
    பச்சை மிளகாய் - 6
    தேங்காய்ப்பால் (இரண்டாம் முறை எடுத்தது) - 200 மில்லி
    தேங்காய்ப்பால் (முதல் முறை எடுத்தது) - 100 மில்லி
    மஞ்சள்தூள் - 5 கிராம்
    எலுமிச்சைப்பழம் - 1
    கறிவேப்பிலை - தேவையான அளவு
    தேங்காய் எண்ணெய் - தேவைக்கு
    பட்டை - 10 கிராம்
    ஏலக்காய் - 3
    கிராம்பு - 3
    உப்பு - தேவையான அளவு

    செய்முறை :

    * ப.மிளகாயை நீளவாக்கில் வெட்டி கொள்ளவும்

    * எலுமிச்சை பழத்திலிருந்து சாறு பிழிந்து கொள்ளவும்.

    * ஒரு பாத்திரத்தில் மட்டன், பச்சை மிளகாய், மஞ்சள் தூள், எலுமிச்சைச்சாறு, உப்பு, இரண்டாம் தேங்காய்ப்பால் சேர்த்து 2 மணி நேரம் ஃபிரிட்ஜில் வைக்கவும். பிறகு வெளியில் எடுக்கவும்.

    * ஆட்டுக்கறி சமநிலைக்கு வந்ததும், குக்கரில் போட்டு 6 விசில் போட்டு இறக்கி ஆற விடவும்.

    * கடாயில் சிறிதளவு தேங்காய் எண்ணெய் ஊற்றி, இதில் கறிவேப்பிலை, பட்டை, ஏலக்காய், கிராம்பு, இஞ்சி, பூண்டு விழுதைப் போட்டு பச்சை மணம் போகும் வரை வதக்கவும்.

    * பின்னர் குக்கரில் வேக வைத்த மட்டனை இதில் சேர்க்கவும்.

    * இப்பொழுது முதல்முறை எடுத்த தேங்காய்ப்பாலை ஊற்றி, உப்பை சரி செய்யவும்.

    * லேசாகக் கொதி வந்தவுடன் இறக்கி சூடாகப் பரிமாறவும். (அதிக நேரம் கொதிக்க வைத்தால், திரிந்து விடும்).

    * சுவையான மட்டன் சொதி ரெடி. அதை இடியாப்பம், இட்லி, தோசை, சப்பாத்திக்கு தொட்டு கொள்ள சுவையாக இருக்கும்.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    உப்பு சீடை செய்வது மிகவும் சுலபமானது. இதை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பச்சரிசி - 2 கப்
    உளுத்த மாவு - ஒரு பிடி ( வறுத்து அரைத்தது )
    தேங்காய் துருவல் - 2 டேபிள் ஸ்பூன்
    எள் - கொஞ்சம்
    பெருங்காயப்பொடி - 1/4 டீ ஸ்பூன்
    வெண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
    உப்பு - தேவைக்கு
    எண்ணெய் - பொரிக்க

    செய்முறை :

    * முதலில் அரிசியை நன்றாக கழுவி தண்ணீரை முழுவதுமாக வடித்து விட்டு உலர்த்தி வைக்கவும். இதை முதல் நாளே கூட செய்து வைக்கலாம். * அரிசி காய்ந்ததும், மிக்சியில் அல்லது மிஷினில் கொடுத்து மாவாக அரைத்து, சலித்து வைக்கவும்.

    * எள்ளை சுத்தம் செய்து வைக்கவும்

    * ஒரு பெரிய பாத்திரத்தில் அரிசிமாவு, வறுத்து அரைத்த உளுத்தம் மாவு, எள், தேங்காய் துருவல், பெருங்காயப்பொடி, உப்பு, வெண்ணை எல்லாம் போட்டு தண்ணீர் விடாமல் நன்கு கலக்கவும்.
    வெண்ணெய் நன்கு கலந்ததும், துளி தண்ணீர் விட்டு பிசையவும். மாவு நல்ல கெட்டியாக இருக்கணும். (சப்பாத்தி மாவை விட கெட்டியாக).

    * ஒரு வெள்ளை துணி அல்லது துளி எண்ணெய் தடவிய தட்டில் சின்ன சின்னதாக ‘சீடை’ யாக மொத்த மாவையும் உருட்டி வைக்கவும்.

    * அடுப்பில் கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி, சூடானதும் கொஞ்சம் கொஞ்சமாக சீடைகளை அதில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.

    * ‘கரகர’ ப்பான ‘மொறு மொறு’ ப்பான ‘உப்பு சீடை’ ரெடி.

    குறிப்பு:

    * இதில் துளி கல், மண் இருந்தாலும் சீடை வெடிக்கும். ரொம்ப ஜாக்கிரதையாக செய்யவேண்டிய பக்ஷணம் இது.

    * இதை காற்று புகாத டப்பாவில் போட்டு வைத்து 1 வாரம் வரை உபயோகப்படுத்தலாம்.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    கேரமல் கஸ்டர்டு புட்டிங் சாப்பிட ஹோட்டலுக்கு செல்ல வேண்டும் என்பதில்லை. வீட்டிலேயே எளிய முறையில் செய்யலாம்.
    தேவையான பொருட்கள் :

    பால் - 1 லிட்டர்
    முட்டை - 4
    சீனி - 2 கப்
    வெனிலா எசன்ஸ் - 1 டீஸ்பூன்
    உப்பு - சிட்டிகை

    செய்முறை :

    * பாலை நன்கு காய்ச்சி அதில் 1 1/2 கப் சீனியைப் போட்டு ஆற வைக்க வேண்டும்.

    * 4 முட்டையை நன்றாக அடித்து வைக்கவும்.

    * ஆறிய பின் அதில் வெனிலா எசன்ஸ் சேர்த்து, அதனுடன் அடித்து வைத்த முட்டைகளையும், உப்பையும் சேர்த்து நன்கு அடித்து பாலில் ஊற்றி கலக்கவும்.

    * மீதமுள்ள 1/2 கப் சீனியை ஒரு அடிகனமான பாத்திரத்தில் போட்டு மிதமான தீயில் வறுக்க வேண்டும்.

    * சீனி உருகி கோல்டன் ப்ரவுன் கலர் சிரப்பாக மாறும் வரை கரண்டியால் கைவிடாமல் கிளறிக் கொண்டே இருக்கவும்.

    * சீனி கேரமல் சிரப்பாக ஆனவுடன் அதனை பேக்கிங் ட்ரேயில் எல்லாப் பக்கமும் படுமாறு ஊற்றவும்.

    * கேரமல் சிரப் கெட்டியானவுடன் கலந்து வைத்துள்ள பால் கலவையை பேக்கிங் ட்ரேயில் ஊற்றி பேக் செய்ய வேண்டும். இல்லையெனில் ட்ரேயை அலுமினிய foil - ஆல் மூடி ஆவியில் வேக வைக்கவும்.

    * மூடவில்லையென்றால் தண்ணீர் புட்டிங்கிற்குள் போய் விடும்.

    * நன்றாக வெந்தவுடன் புட்டிங்கை ஃப்ரிட்ஜில் வைக்கவும்.

    * பரிமாறுகையில் புட்டிங்கை கவிழ்த்துப் பரிமாறவும். புட்டிங்கின் மேல் பாகத்தில் கேரமல் அழகாக பரவியிருக்கும்.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ஓட்டல்களில் இந்த டீப் ஃபிரை எக்(Deep Fried Eggs) மிகவும் பிரபலம். இதை எளிய முறையில் வீட்டில் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    முட்டை - 5
    சோள மாவு - 2 ஸ்பூன்
    பிரட் தூள் (Panko Breadcrumbs) - அரை கப்
    துருவிய சீஸ் - அரை கப்
    எண்ணெய் - பொரிக்க
    மிளகு தூள் - அரை தேக்கரண்டி
    உப்பு - சிறிதளவு

    செய்முறை :

    * 1 முட்டையை ஒரு கிண்ணத்தில் உடைத்து ஊற்றி நன்றாக அடிக்கவும்.

    * இன்னொரு கிண்ணத்தில் சோள மாவு, சிறிது உப்பு, மிளகு தூள் கலந்து வைக்கவும்.

    * மற்றொரு கிண்ணத்தில் துருவிய சீஸ், பிரட் தூள், கலந்து வைக்கவும்.

    * 4 முட்டையை வேகவைத்து ஓட்டை உடைத்து வைக்கவும்.

    * கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடாக்கவும்.

    * முட்டையை ஒவ்வொன்றாக எடுத்து அதை சோள மாவில் பிரட்டி, முட்டை கலவையில் முக்கி, சீஸ் கலவையில் பிரட்டி எண்ணெய் போட்டு பொரிக்கவும்.

    * சுவையான டீப் ஃபிரை எக் ரெடி.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    பலாப்பழ வறுவல் செய்வது மிகவும் சுலபமானது. அதை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பலாச்சுளை - 10,  
    எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு,
    உப்பு, மிளகாய்த்தூள் - தேவையான அளவு.

    செய்முறை:

    * பலாச்சுளை சற்று காயாக இருக்கும்படி எடுத்துக் கொண்டு, கொட்டைகளை நீக்கிவிட்டு, நீளவாக்கில் மெல்லிய குச்சி போல நறுக்கவும்.

    * எண்ணெயை காய வைத்து பலாச்சுளைகளை உதிர்த்தது போல் தூவி நன்றாக பொரிக்கவும்..

    * வறுத்ததில் உப்பு, மிளகாய்த்தூள் சேர்த்துக் நன்றாக குலுக்கவும்.

    * சுவையான பலாப்பழ வறுவல் ரெடி.

    * இதை காற்று போகாத டப்பாவில் போட்டு வைத்து ஒருவாரம் வரை பயன்படுத்தலாம்.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    மாலை நேர ஸ்நாக்ஸ் ஆக இந்த சிக்கன் ஸ்டஃப் ரோல் சாப்பிட சூப்பராக இருக்கும். இதை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    கோதுமை மாவு - 100 கிராம்
    முட்டை - 2
    கொத்திய எலும்பு நீக்கிய கறி - 100 கிராம்
    சோயா சாஸ் - 1/4 ஸ்பூன்
    அஜினோமோடா - 1/4 ஸ்பூன்
    எண்ணெய் - தேவையான அளவு
    உப்பு - தேவையான அளவு

    செய்முறை :

    * கோதுமை மாவில் முட்டை, உப்பு, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து சப்பாத்திக்கு மாவுக்கு பிசைவது போல் பிசைந்து அரை மணிநேரம் அப்படியே வைக்கவும்.

    * கடாயில் அடுப்பில் வைத்து சிறிது எண்ணெய் ஊற்றி சிக்கன் கொத்தகறியை போட்டு பாதியளவு வெந்ததும் அதில் அஜினோ மோடா, சோயா சாஸ், உப்பு சேர்த்து கலந்து ஆறவைக்கவும்.

    * மாவை சப்பாத்திகளாக உருட்டி சதுர வடிவில் வெட்டிக்கொள்ளவும்.

    * ஒவ்வொரு சப்பாத்தி சதுரத்தின் மீதும் கொஞ்சம் கோழிக்கறி கலவையை வைத்து நீளவடிவில் உருட்டி வைக்கவும். அனைத்தையும் இவ்வாறு செய்து வைக்கவும்.

    * கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் உருட்டி வைத்துள்ள சிக்கன் ஸ்டஃப் ரோல்களை எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.

    * சுவையான சிக்கன் ஸ்டஃப் ரோல் ரெடி.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    கேரளாவில் பலாப்பழ பாயாசம் மிகவும் பிரபலம். நாம் இதை எப்படி எளிய முறையில் செய்வது என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பலாப்பழம் - 20
    தேங்காய் பால் - 2 கப்
    வெல்லம் - 150 கிராம்
    ஏலக்காய் - 6
    முந்திரி - தேவையான அளவு
    பிஸ்தா - தேவையான அளவு
    நெய் - தேவைக்கு

    செய்முறை :


    * பலாப்பழத்தில் இருந்து கொட்டைகளை நீக்கி விட்டு தனியாக வைக்கவும்.

    * ஒரு பலாப்பழத்தை மட்டும் பொடியாக நறுக்கி வைக்கவும்.

    * ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி பலாப்பழத்தை வேக வைத்து ஆற வைக்கவும். ஆறியதும் மிக்சியில் போட்டு அரைத்து கொள்ளவும்.

    * ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி வெல்லம் போட்டு நன்றாக கரைந்ததும் வடிகட்டி எடுத்துக் கொள்ளவும்.

    * கடாயில் நெய் ஊற்றி முந்திரி, பிஸ்தாவை வறுத்து வைக்கவும்.

    * ஒரு பாத்திரத்தில் வெல்லப் பாகை ஊற்றி ஒரு நன்றாக கொதிக்க ஆரம்பித்ததும் மசித்து வைத்த பலாப்பழ விழுதை போட்டு அதன்பின் ஏலத்தூள், தேங்காய் பால் ஊற்றி ஒரு கொதிநிலை வந்தவுடன் நெய்யில் வறுத்த முந்திரி, பிஸ்தா, பொடியாக நறுக்கிய பலாப்பழத்தை போட்டு இறுதியில் ஒரு தேக்கரணடி நெய் சேர்த்து இறக்கி பரிமாறவும்.

    * சுவையான இனிப்பான பலாப்பழம் பாயாசம் ரெடி.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ரவைக்கு பதிலான சேமியாவில் கேசரி செய்தால் மிகவும் சுவையாக இருக்கும். சேமியா கேசரி எப்படி செய்யலாம் என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    சேமியா  -  500 கிராம்
    சர்க்கரை  -  400 கிராம்
    தண்ணீர்  -  400 மி.லி.
    நெய்  -  தேவையான அளவு
    முந்திரி பருப்பு  - தேவையான அளவு
    திராட்சை - தேவையான அளவு
    ஏலக்காய்  -  3
    கேசரி பவுடர்  -  சிறிதளவு

    செய்முறை :

    * சேமியா, முந்திரிப்பருப்பு, திராட்சையை தனித்தனியாக நெய்யில் வறுத்து தனியாக வைக்கவும்.

    * கடாயை அடுப்பில் வைத்து தண்ணீர் ஊற்றி கொதித்ததும் சிறிது சிறிதாக சேமியா போட்டு கிளறி வேகவிடவும். கட்டி விழாமல் இருக்க கைவிடாமல் கிளற வேண்டும்.

    * சேமியா வெந்ததும் சர்க்கரை, கேசரி பவுடர், ஏலக்காய் தூள் சேர்த்து நன்றாக கிளறவும்.

    * எல்லாம் ஒன்று சேர்ந்து வரும் போது கடைசியாக முந்திரிபருப்பு, திராட்சை, மீதியுள்ள நெய் ஆகியவற்றை போட்டு நன்றாக கிளறி இறக்கவும்.

    * பின்னர் தட்டில் கொட்டி சற்று ஆறியதும் வில்லைகளாக நறுக்கிப் பறிமாறவும்.

    * சுவையான சேமியா கேசரி தயார்.

    * இதில் உங்களுக்கு பிடித்தமான நட்ஸ் எதை வேண்டுமானதும் சேர்த்து கொள்ளலாம்.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    மீன் குழம்பு, வறுவல் என்று சாப்பிட்டவர்கள் வித்தியாசமாக ரோஸ்ட் செய்து சாப்பிட்டு பாருங்கள். மிகவும் சுவையாக இருக்கும். இதை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    மீன் - 2 பெரிய துண்டுகள் ( 200 கிராம் )
    மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
    தனியா தூள் - 2 டீஸ்பூன்
    சீரக தூள் - 1/2 டீஸ்பூன்
    மிளகு தூள் - 1/4 டீஸ்பூன்
    உப்பு - தேவைக்கு

    தாளிக்க:


    சோம்பு - 2 டீஸ்பூன்
    கறிவேப்பிலை - சிறிது
    எண்ணெய் - 4 டீஸ்பூன்

    செய்முறை :

    * மீனை நன்கு கழுவி மஞ்சள் தூள், உப்பு சேர்த்து பிரட்டி மீண்டும் கழுவி வைக்கவும்.

    * தூள் வகைகள் மற்றும் உப்பினை சிறிது தண்ணீர் விட்டு கலந்து மீனுடன் சேர்த்து நன்றாக பிரட்டவும்.

    * இப்போது மசாலா கலந்த மீனை ப்ரீசரில் அரை மணி நேரம் வைக்கவும்.

    * ஒரு கடாயில் எண்ணெய் விட்டு சோம்பு, கறிவேப்பிலை தாளித்த பின் அதில் மீனை போட்டு வேக விடவும்.

    * அடுப்பை மிதமான தீயில் வைத்து கொள்ளவும். அடிக்கடி எண்ணெய் ஊற்றி மீன் நன்கு முறுகலாகும் வரை வேகவிடவும்.

    * இப்பொழுது சுவையான மீன் ரோஸ்ட் தயார்.

    குறிப்பு :

    * மீன் ரோஸ்ட் ரெடி ஆனவுடன் சிறிது பூண்டை நசுக்கி போட்டு இறக்கினால் இன்னும் சுவை கூடும்.

    * அடிக்கடி மேலே சிறிது சிறிதாக எண்ணெய் ஊற்றினால் நன்கு முறுகலாக வரும்.

    * இதனை எல்லா வகையான சாதத்திற்கும் பரிமாறலாம்.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ×