என் மலர்tooltip icon

    பெண்கள் உலகம்

    கடலைப் பருப்பு பக்கோடா செய்வது எப்படி
    X

    கடலைப் பருப்பு பக்கோடா செய்வது எப்படி

    கடலைப் பருப்பை வைத்து எப்படி சுவையான பக்கோடா செய்வது என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    கடலைப் பருப்பு - 1 கப்,
    சின்ன வெங்காயம் - 200 கிராம்,
    இஞ்சி - 1 துண்டு,
    பச்சை மிளகாய்  -  2,
    பூண்டு -  4 பல்,
    புதினா, கொத்தமல்லித்தழை,
    கறிவேப்பிலை - தலா சிறிதளவு,
    சோம்பு  -  அரை ஸ்பூன்,
    உப்பு  -  சுவைக்கேற்ப,
    எண்ணெய்  -  தேவையான அளவு.  

    செய்முறை :

    * வெங்காயம், கறிவேப்பிலை, புதினா, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    * இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாயை சேர்த்து நசுக்கிக் கொள்ளுங்கள்.

    * சோம்பைப் பொடித்துக்கொள்ளுங்கள்.

    * கடலைப் பருப்பை ஒரு மணி நேரம் ஊறவைத்து கரகரப்பாக அரைத்து கொள்ளவும்.

    * அரைத்த மாவை ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலை, புதினா, கொத்தமல்லி, நசுக்கிய இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் சோம்பு, உப்பு சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளவும்.

    * கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் மாவை சிறிது சிறிதாக எடுத்து போட்டு வேக விட்டு பொரித்து எடுக்கவும்.

    * சுவையான கடலைப் பருப்பு பக்கோடா ரெடி.

    * இதை சிற்றுண்டியாக சாப்பிடுவதற்கும் காரக்குழம்பு, மோர்க்குழம்பில் போடுவதற்கும் ஏற்ற பக்கோடா இது. 

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×