என் மலர்tooltip icon

    பெண்கள் உலகம்

    சூப்பரான வஞ்சிரம் மீன் கருவாடு தொக்கு
    X

    சூப்பரான வஞ்சிரம் மீன் கருவாடு தொக்கு

    எளிய முறையில் சுவையான கருவாடு தொக்கு செய்வது எப்படி என்று கீழே பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    வஞ்சிரம் மீன் (கருவாடு) - கால் கிலோ
    சிறிய வெங்காயம் - இரண்டு கைபிடியளவு
    தக்காளி - 2
    பூண்டு - பத்து பல்
    காய்ந்த மிளகாய் - ஐந்து
    நல்லெண்ணெய் - ஒரு குழிகரண்டி
    உப்பு - தேவையான அளவு
    மிளகாய் தூள் - 1 ஸ்பூன்
    கடுகு - சிறிதளவு

    செய்முறை :

    * தக்காளி, சின்ன வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    * வஞ்சிரம் மீன் கருவாடு துண்டுகளை நன்றாக கழுவி சுத்தம் செய்து வைக்கவும்.

    * பூண்டை ஒன்றும் பாதிகாய தட்டிச்கொள்ளவும்.

    * எண்ணெய் காய்ந்ததும் கடுகு, காய்ந்த மிளகாய் போட்டு தாளிக்கவும்.

    * இதனுடன் வெங்காயம், பூண்டு சேர்த்து நன்கு வதக்கிய பின்னர் தக்காளி, மிளகாய் தூள் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.

    * அடுத்து அதில் சுத்தம் செய்த கருவாடு துண்டுகளை சேர்த்து எண்ணெயிலேயே நன்கு வதக்கவும். ஏற்கனவே கருவாட்டில் உப்பு இருப்பதால் உப்பு சேர்க்க தேவையில்லை.

    * இந்த கருவாட்டு தொக்கு சாதத்தில் போட்டு புரட்டி சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.

    * விருப்பப்பட்டால் முருங்கைக்காய் சேர்த்து கொள்ளலாம்.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×