என் மலர்tooltip icon

    பெண்கள் உலகம்

    விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்: ஜவ்வரிசி வடை
    X

    விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்: ஜவ்வரிசி வடை

    வட இந்தியாவில் விநாயகர் சதுர்த்தி மற்றும் நவராத்தியின் போது ஜவ்வரிசி வடை செய்யப்படுகிறது. வடக்கே சாபுதானா வடா என்றழைக்கப்படும் இந்த வடை நன்கு முறுகலாகவும் நல்ல சுவையாகவும் இருக்கும்.
    தேவையான பொருட்கள் :

    ஜவ்வரிசி - 1 கப்
    உருளைக்கிழங்கு - 4,
    வேர்க்கடலை - 1/2கப்
    சீரகம் - 1 டீஸ்பூன்,
    பச்சைமிளகாய் - 2,
    துருவிய இஞ்சி - 1 டீஸ்பூன்,
    எலுமிச்சை சாறு - 2 டீஸ்பூன்,
    கொத்துமல்லி - சிறிதளவு,
    சர்க்கரை - 2 டீஸ்பூன்,
    கோதுமை மாவு - 3 டேபிள் ஸ்பூன்
    உப்பு - தேவைக்கு

    செய்முறை:

    * உருளைக்கிழங்கை வேகவைத்து தோல் உரித்து மசித்து வைக்கவும்.

    * ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    * வேர்க்கடலையை வறுத்து கொரகொரப்பாக பொடித்து கொள்ளவும்.

    * ஜவ்வரிசியை குறைந்தது 5 மணி நேரம் ஊற வைக்க வேண்டும், பிறகு நீரை முழுவதுமாக வடித்து விட வேண்டும்.

    * ஒரு பாத்திரத்தில் வேக வைத்த உருளைக்கிழங்கை ஜவ்வரிசியுடன் சேர்த்து பிசைந்து கொள்ளவேண்டும்.

    * இத்துடன் வறுத்து பொடித்த வேர்க்கடலை, கொத்தமல்லி, சீரகம், எலுமிச்சைசாறு, கோதுமை மாவு, உப்பு, சர்க்கரை, துருவிய இஞ்சி, ப.மிளகாய் சேர்த்து நன்கு கலந்துக்கொள்ளவேண்டும்.

    * நன்கு கலந்த மாவை சிறு உறுண்டையாக பிடித்து உள்ளங்கையில் வைத்து வடையாக தட்டி சூடான எண்ணெயில் பொரித்து எடுக்க வேண்டும்.

    * பொன் நிறமாக பொரித்து எடுத்த ஜவ்வரிசி வடையை சூடாக இருக்கும் போதே சாப்பிடலாம். சர்க்கரை சேர்த்து கலந்த தயிருடன் தொட்டு சாப்பிட இந்த ஜவ்வரி வடை பிரமாதமாக இருக்கும்.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×