என் மலர்
உடற்பயிற்சி
கொரோனா பாதிப்பால் ஏற்பட்ட ஊரடங்கு காலத்தில் சைக்கிளின் பயன்பாடு அதிகரித்திருக்கிறது. ‘சைக்கிளிங்கை’ உடற்பயிற்சியாக கருதி தொடர்கிறவர்கள் மனதில் கொள்ள வேண்டிய முக்கியமான விஷயங்கள்.
கொரோனா பாதிப்பால் ஏற்பட்ட ஊரடங்கு காலத்தில் பொது போக்குவரத்து முடக்கப்பட்டதால், நிறைய பேர் குறுகிய தூர பயணங்களுக்கு சைக்கிளை பயன்படுத்தினார்கள். அதை தொடர்ந்து சைக்கிளின் பயன்பாடு அதிகரித்திருக்கிறது. பணநெருக்கடி நிறைந்த இந்த காலகட்டத்தில், எரிபொருளுக்கான செலவு தேவைப்படாததால் சைக்கிள் பயணம் கைமேல் பலன் அளித்திருக்கிறது. கூடவே அது உடலுக்கு சிறந்த பயிற்சியாகவும் அமைந்துவிட்டது. அதனால் பலரும் சைக்கிள் பயணத்தை பின்பற்றுகிறார்கள். ‘சைக்கிளிங்கை’ உடற்பயிற்சியாக கருதி தொடர்கிறவர்கள் மனதில் கொள்ள வேண்டிய முக்கியமான விஷயங்கள்:
ஒரு மணி நேரம் நீங்கள் மிதமான வேகத்தில் சைக்கிளை ஓட்டிச்சென்றால், உங்கள் உடலில் இருந்து 300 முதல் 350 கலோரி செலவாகும். 50 கிலோ எடைகொண்டவரைவிட 80 கிலோ எடை கொண்டவருக்கு சைக்கிள் பயிற்சி அதிக பலன் தரும். ஒரு மணி நேரம் 10 மைல் வேகத்தில் 50 வயது கொண்டவர் சைக்கிள் ஓட்டும்போது அவரது உடலில் இருந்து 200 கலோரி செலவாகும். அதே நேரத்தில் 80 கிலோ எடைகொண்டவர் உடலில் இருந்து 300-க்கும் மேற்பட்ட கலோரி செலவாகும்.
தற்போது நிறைய பேர் மனஅழுத்தத்துடன் காணப்படுகிறார்கள். அவர்கள் தொடர்ந்து சைக்கிளிங் பயிற்சி பெற்றால் மனஅழுத்தம் குறையும். சைக்கிள் ஓட்டிச்செல்லும்போது உச்சி முதல் பாதம் வரை அனைத்து உடல் உறுப்புகளும் ஒருங்கிணைந்து செயல்படுகின்றன. அதனால் உடலோடு சேர்ந்து உள்ளமும் இலகுவாகி, அழுத்தத்தில் இருந்து விடுபடுகிறது.
அழகு மீது அக்கறை கொண்ட பெண்கள் அதிக அளவில் சைக்கிளிங் பயிற்சி பெறுகிறார்கள். அவர்கள் வாரத்தில் மூன்று நாட்கள் ஒரு மணி நேரம் வீதம் பயிற்சி பெற்றால் சரும சுருக்கம் மறைந்து, இளமையான தோற்றத்தை பெறுவார்கள்.
பொதுவாக நடுத்தர வயதை கடக்கும்போது பலரும் நினைவாற்றல் குறைபாட் டால் அவதிப்படுகிறார்கள். அந்த குறை பாட்டில் இருந்து விடுதலை பெற சைக்கிளிங் பயிற்சி மேற்கொள்ளலாம். இதனை தினமும் செய்துவந்தால், மூளைக்கு செல்லும் ரத்த ஓட்டம் அதிகரிக்கும். அப்போது மூளையில் உள்ள ஹிப்போகேம்பஸ் என்னும் பகுதி சுறுசுறுப்பாக செயல்பட்டு புதிய செல்களை உருவாக்கி, நினைவாற்றலை மேம்படச் செய்யும். அதுபோல் பள்ளிக்குழந்தைகளும் தங்கள் வீட்டுப் பகுதியிலே சைக்கிள் ஓட்டும் பயிற்சி மேற்கொண்டால், அவர்களது நினைவுத்திறனும் மேம்படும்.
இந்த பயிற்சியால் கால், முதுகெலும்பு, அடிவயிறு, கைகள், கழுத்து என அதிக இயக்கம்கொண்ட உறுப்புகள் அனைத்தும் வலுப்பெறுகின்றன. ஆனால் சைக்கிளின் இருக்கை அமைப்பு சரியாக அமைவது மிக அவசியம். சரியாக அமையாவிட்டால் உடலில் வலி ஏற்படும்.
இந்த பயிற்சி மூலம் உடலில் உடனடி மாற்றங்கள் எதுவும் ஏற்பட்டுவிடாது. அதனால் தொடர்ச்சியாக மூன்று மாதங்கள் பயிற்சியை தொய்வின்றி மேற் கொள்ளவேண்டும். அப்போதுதான் அதன் பலனை அனுபவிக்க முடியும்.
சாப்பிட்டு இரண்டு மணி நேரம் கழித்து இந்த பயிற்சியை தொடங்கவேண்டும். வெறும் வயிற்றில் ஒருபோதும் சைக்கிளிங் பயிற்சியை செய்யக்கூடாது.
சாலைகளில் சைக்கிள் ஓட்டி பயிற்சி பெறும்போது பாதுகாப்பில் மிகுந்த விழிப்போடு இருங்கள். பெரும்பாலான சாலைகளில் போக்குவரத்து நெருக்கடி இருப்பதால் கவனமாக ஓட்டவேண்டும். பிரத்யேக ஹெல்மெட் அணிந்துகொள்வதும் அவசியம். சக்கரத்தின் ஸ்போக், பெடல் மற்றும் சைக்கிளின் முன்புறத்திலும், பின்புறத்திலும் பிரதிபலிக்கக்கூடிய ஸ்டிக்கர்களை ஒட்டிக்கொண்டு இரவு நேர பயிற்சியை பெறுங்கள்.
ஒரு மணி நேரம் நீங்கள் மிதமான வேகத்தில் சைக்கிளை ஓட்டிச்சென்றால், உங்கள் உடலில் இருந்து 300 முதல் 350 கலோரி செலவாகும். 50 கிலோ எடைகொண்டவரைவிட 80 கிலோ எடை கொண்டவருக்கு சைக்கிள் பயிற்சி அதிக பலன் தரும். ஒரு மணி நேரம் 10 மைல் வேகத்தில் 50 வயது கொண்டவர் சைக்கிள் ஓட்டும்போது அவரது உடலில் இருந்து 200 கலோரி செலவாகும். அதே நேரத்தில் 80 கிலோ எடைகொண்டவர் உடலில் இருந்து 300-க்கும் மேற்பட்ட கலோரி செலவாகும்.
தற்போது நிறைய பேர் மனஅழுத்தத்துடன் காணப்படுகிறார்கள். அவர்கள் தொடர்ந்து சைக்கிளிங் பயிற்சி பெற்றால் மனஅழுத்தம் குறையும். சைக்கிள் ஓட்டிச்செல்லும்போது உச்சி முதல் பாதம் வரை அனைத்து உடல் உறுப்புகளும் ஒருங்கிணைந்து செயல்படுகின்றன. அதனால் உடலோடு சேர்ந்து உள்ளமும் இலகுவாகி, அழுத்தத்தில் இருந்து விடுபடுகிறது.
அழகு மீது அக்கறை கொண்ட பெண்கள் அதிக அளவில் சைக்கிளிங் பயிற்சி பெறுகிறார்கள். அவர்கள் வாரத்தில் மூன்று நாட்கள் ஒரு மணி நேரம் வீதம் பயிற்சி பெற்றால் சரும சுருக்கம் மறைந்து, இளமையான தோற்றத்தை பெறுவார்கள்.
பொதுவாக நடுத்தர வயதை கடக்கும்போது பலரும் நினைவாற்றல் குறைபாட் டால் அவதிப்படுகிறார்கள். அந்த குறை பாட்டில் இருந்து விடுதலை பெற சைக்கிளிங் பயிற்சி மேற்கொள்ளலாம். இதனை தினமும் செய்துவந்தால், மூளைக்கு செல்லும் ரத்த ஓட்டம் அதிகரிக்கும். அப்போது மூளையில் உள்ள ஹிப்போகேம்பஸ் என்னும் பகுதி சுறுசுறுப்பாக செயல்பட்டு புதிய செல்களை உருவாக்கி, நினைவாற்றலை மேம்படச் செய்யும். அதுபோல் பள்ளிக்குழந்தைகளும் தங்கள் வீட்டுப் பகுதியிலே சைக்கிள் ஓட்டும் பயிற்சி மேற்கொண்டால், அவர்களது நினைவுத்திறனும் மேம்படும்.
இந்த பயிற்சியால் கால், முதுகெலும்பு, அடிவயிறு, கைகள், கழுத்து என அதிக இயக்கம்கொண்ட உறுப்புகள் அனைத்தும் வலுப்பெறுகின்றன. ஆனால் சைக்கிளின் இருக்கை அமைப்பு சரியாக அமைவது மிக அவசியம். சரியாக அமையாவிட்டால் உடலில் வலி ஏற்படும்.
இந்த பயிற்சி மூலம் உடலில் உடனடி மாற்றங்கள் எதுவும் ஏற்பட்டுவிடாது. அதனால் தொடர்ச்சியாக மூன்று மாதங்கள் பயிற்சியை தொய்வின்றி மேற் கொள்ளவேண்டும். அப்போதுதான் அதன் பலனை அனுபவிக்க முடியும்.
சாப்பிட்டு இரண்டு மணி நேரம் கழித்து இந்த பயிற்சியை தொடங்கவேண்டும். வெறும் வயிற்றில் ஒருபோதும் சைக்கிளிங் பயிற்சியை செய்யக்கூடாது.
சாலைகளில் சைக்கிள் ஓட்டி பயிற்சி பெறும்போது பாதுகாப்பில் மிகுந்த விழிப்போடு இருங்கள். பெரும்பாலான சாலைகளில் போக்குவரத்து நெருக்கடி இருப்பதால் கவனமாக ஓட்டவேண்டும். பிரத்யேக ஹெல்மெட் அணிந்துகொள்வதும் அவசியம். சக்கரத்தின் ஸ்போக், பெடல் மற்றும் சைக்கிளின் முன்புறத்திலும், பின்புறத்திலும் பிரதிபலிக்கக்கூடிய ஸ்டிக்கர்களை ஒட்டிக்கொண்டு இரவு நேர பயிற்சியை பெறுங்கள்.
உடல் ஆரோக்கியத்தை அதிகரிக்க இவை இரண்டில் எது சிறந்தது, யோகாவா அல்லது நடைபயிற்சியா? இதற்கான விடையை அறிந்து கொள்ள இந்த பதிவை தொடர்ந்து படியுங்கள்.
நடைபயிற்சி உடல் ஆரோக்கியத்தை அதிகரிக்கும் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. யோகா மூலமாகவும் உடல் ஆரோக்கியத்தை அதிகரிக்கலாம் என்பதும் நாம் அனைவரும் அறிந்ததே. ஆனால் உடல் ஆரோக்கியத்தை அதிகரிக்க இவை இரண்டில் எது சிறந்தது, யோகாவா அல்லது நடைபயிற்சியா? இதற்கான விடையை அறிந்து கொள்ள இந்த பதிவை தொடர்ந்து படியுங்கள்.
யோகா மற்றும் நடைபயிற்சி , இரண்டுமே உடல் ஆரோக்கியத்திற்கு நன்மை தருவதாகும். இவை, உங்கள் உடல் எடையை குறைக்கவும், எடையை நிர்வகிக்கவும் உதவுகிறது. நீரிழிவை கட்டுப்படுத்த இவை உதவுகின்றன. ஆனால் இவை இரண்டையும் நிலையாக ஒப்பிடும்போது, நடைபயிற்சியை விட சிறந்ததாக யோகா கருதப்படுகிறது. ஒரு மணி நேரம் நடைபயிற்சி செய்வதால் உடலில் 242 கலோரிகள் எரிக்கப்படுவதாக தரவுகள் தெரிவிக்கின்றன. அதே சமயம், ஒரு மணி நேரம் யோகா செய்வதால் 340 கலோரிகள் எரிக்கப்படுவதாக கூறப்படுகின்றன. ஆகவே, எடை மேலாண்மை மற்றும் நீரிழிவு கட்டுப்பாட்டில், நடைபயிற்சியை விட யோகா சிறந்தது என்பதை நாம் இதன் மூலம் அறிந்து கொள்ள முடியும்.
யோகா, உடல் மற்றும் மனநலத்திற்கு சிறந்தது. நடைபயிற்சி என்பது ஒரு வகையான உடற்பயிற்சி மட்டுமே. ஆனால் இது உடல் மற்றும் மனநலத்திற்கு நன்மை புரிகிறது. ஆனால் யோகா செய்வதன் மூலம், ஆன்மீக ரீதியாகவும் நன்மை கிடைக்கிறது. நல்ல வழியில் நடக்க வேண்டும் என்ற உணர்வைத் தருவது யோகா. பதட்டம் மற்றும் கோபத்தை குறைக்க உதவுவது யோகா. ஆன்மீக யோகாசனம் , உங்கள் சுவாசத்தை மேம்படுத்துகிறது. யோகாவை பயிற்சி செய்வதால் உங்கள் ஐம்புலன்கள் (நுகர்தல், தொடுதல், கேட்டல், பார்த்தல் மற்றும் உணர்தல்) போன்றவற்றின் மீது ஒரு சிறந்த கட்டுப்பாடு தோன்றுகிறது.
பலர் அதிகாலையில் நடைபயிற்சி மேற்கொள்கின்றனர். இதனால் இரத்த சர்க்கரை அளவு குறைகிறது. இது மிகவும் உண்மை. மற்றும் நடைபயிற்சியால் பல்வேறு நன்மைகள் உடலுக்கு கிடைக்கிறது. நடைபயிற்சி இரத்த சர்க்கரை அளவில் வளர்சிதை மாற்றத்தை ஏற்படுத்தி அதன் அளவைக் குறைக்க உதவுகிறது. ஆனால் இந்த செயல்பாடு நடைபயிற்சியை விட யோகாவில் அதிகம் உண்டு. இரத்த சர்க்கரை அளவை வளர்சிதை மாற்றத்தின் மூலம் குறைப்பது யோகாவில் இன்னும் சிறப்பாக செயலாற்றல் பெரும். நீரிழிவு நோயாளிகளுக்காகவே சில சிறப்பு யோகா பயிற்சிகள் உண்டு. இதனை இவர்கள் மேற்கொள்வதால் இரத்த சர்க்கரை அளவு எளிதில் குறைகிறது.
மன அழுத்தத்தை சிறந்த முறையில் நிர்வகிப்பது நடைபயிற்சி அல்லது யோகா, இந்த இரண்டில் எது என்பதை இப்போது பார்க்கலாம். மன நிலையை உயர்த்தி, அழுத்தத்தைக் குறைக்க நடைபயிற்சி உதவுகிறது. ஆனால் யோகா பயிற்சி செய்வதால், உங்கள் மன நிலையில் உயர்வு ஏற்பட்டு, கவனமும் அதிகரிக்கிறது. இதனால் உங்கள் நன்னடத்தை அதிகரிக்கிறது. அழுத்தம் உண்டான தசைகள், திசுக்கள் மற்றும் மூளைக்கு நெகிழ்வைத் தரும் தன்மை யோகாவிற்கு உண்டு. யோகாவை தினமும் பயிற்சி செய்வதால் நல்ல ஆழ்ந்த தூக்கம் கிடைக்கும். இதனால் தூக்க கோளாறுகள் நீக்கப்பட்டு தூக்கம் மேம்படும். ஆகவே, யோகாவின் மூலம் ஒட்டுமொத்த மனித நல் வாழ்க்கை மேம்படும்.
யோகா, உங்கள் அழகை நிர்வகிக்கவும் உதவுகிறது. அழகாகவும் இளமையாகவும் இருக்க விரும்பினால் தினமும் தொடர்ந்து யோகா பயிற்சியை மேற்கொள்ளலாம். உங்கள் சருமத்தை மினுமினுப்பாகவும் துடிப்பாகவும் வைக்க யோகா உதவுகிறது. மூளையில் இயல்பான இரசாயன சமநிலையை நிலைநிறுத்த யோகாசனங்கள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இதன் காரணமாக இரத்தத்தில் ஆக்சிஜன் வழங்குதல் அதிகரிக்கப்படும். ஆக்சிஜன் அதிகம் உள்ள இரத்தம், அணுக்களையும் திசுக்களையும் சுறுசுறுப்புடன் இயங்க வைக்கும். யோகா பயிற்சி தொடர்ந்து செய்து வருவதால், சருமத்தின் மேல்புறம் உள்ள கொலோஜென் நார்கள் வலிமையாகும். இதனால் உங்கள் சருமம் களங்கமில்லாமல் பொலிவாக இருக்கும். ஆகவே யோகா பயிற்சியால் உங்கள் சருமம் ஆரோக்கியமாகவும் இளமையாகவும் இருக்கும்.
இப்போது யோகா மற்றும் நடைபயிற்சியில் எது சிறந்தது என்பது பற்றிய ஒரு தெளிவு உங்களுக்கு கிடைத்திருக்கும். நடைபயிற்சி, உங்கள் உடல் மற்றும் மன நல ஆரோக்கியத்தை அதிகரித்தாலும், யோகவே சிறந்த விளைவுகளைத் தருகிறது. இதனால் நீங்கள் நடைபயிற்சி மேற்கொள்ள வேண்டாம் என்று கூறவில்லை. நடைபயிற்சியுடன் யோகாவையும் இணைத்துக் கொள்ளலாம் என்று அறிவுறுத்தப்படுகிறது. இதனால் இந்த இரண்டின் நன்மைகளும் உங்களுக்கு கிடைக்கும். எல்லா வயதினருக்கும் இந்த இரண்டு பயிற்சிகளும் ஏற்புடையது. ஜிம் சென்று பயிற்சிகள் செய்வது மிகவும் விலை உயர்ந்த பயிற்சியாகும் . இதனை விட இவை இரண்டும் அதிக பலன் தருபவையாகும். ஆனால், இந்த இரண்டில் எது சிறப்பானது என்று தேர்ந்தெடுத்தால் அது யோகா தான். யோகாவின் மூலம் சிறப்பான நன்மைகள் உடலுக்கு கிடைக்கிறது.
யோகா மற்றும் நடைபயிற்சி , இரண்டுமே உடல் ஆரோக்கியத்திற்கு நன்மை தருவதாகும். இவை, உங்கள் உடல் எடையை குறைக்கவும், எடையை நிர்வகிக்கவும் உதவுகிறது. நீரிழிவை கட்டுப்படுத்த இவை உதவுகின்றன. ஆனால் இவை இரண்டையும் நிலையாக ஒப்பிடும்போது, நடைபயிற்சியை விட சிறந்ததாக யோகா கருதப்படுகிறது. ஒரு மணி நேரம் நடைபயிற்சி செய்வதால் உடலில் 242 கலோரிகள் எரிக்கப்படுவதாக தரவுகள் தெரிவிக்கின்றன. அதே சமயம், ஒரு மணி நேரம் யோகா செய்வதால் 340 கலோரிகள் எரிக்கப்படுவதாக கூறப்படுகின்றன. ஆகவே, எடை மேலாண்மை மற்றும் நீரிழிவு கட்டுப்பாட்டில், நடைபயிற்சியை விட யோகா சிறந்தது என்பதை நாம் இதன் மூலம் அறிந்து கொள்ள முடியும்.
யோகா, உடல் மற்றும் மனநலத்திற்கு சிறந்தது. நடைபயிற்சி என்பது ஒரு வகையான உடற்பயிற்சி மட்டுமே. ஆனால் இது உடல் மற்றும் மனநலத்திற்கு நன்மை புரிகிறது. ஆனால் யோகா செய்வதன் மூலம், ஆன்மீக ரீதியாகவும் நன்மை கிடைக்கிறது. நல்ல வழியில் நடக்க வேண்டும் என்ற உணர்வைத் தருவது யோகா. பதட்டம் மற்றும் கோபத்தை குறைக்க உதவுவது யோகா. ஆன்மீக யோகாசனம் , உங்கள் சுவாசத்தை மேம்படுத்துகிறது. யோகாவை பயிற்சி செய்வதால் உங்கள் ஐம்புலன்கள் (நுகர்தல், தொடுதல், கேட்டல், பார்த்தல் மற்றும் உணர்தல்) போன்றவற்றின் மீது ஒரு சிறந்த கட்டுப்பாடு தோன்றுகிறது.
பலர் அதிகாலையில் நடைபயிற்சி மேற்கொள்கின்றனர். இதனால் இரத்த சர்க்கரை அளவு குறைகிறது. இது மிகவும் உண்மை. மற்றும் நடைபயிற்சியால் பல்வேறு நன்மைகள் உடலுக்கு கிடைக்கிறது. நடைபயிற்சி இரத்த சர்க்கரை அளவில் வளர்சிதை மாற்றத்தை ஏற்படுத்தி அதன் அளவைக் குறைக்க உதவுகிறது. ஆனால் இந்த செயல்பாடு நடைபயிற்சியை விட யோகாவில் அதிகம் உண்டு. இரத்த சர்க்கரை அளவை வளர்சிதை மாற்றத்தின் மூலம் குறைப்பது யோகாவில் இன்னும் சிறப்பாக செயலாற்றல் பெரும். நீரிழிவு நோயாளிகளுக்காகவே சில சிறப்பு யோகா பயிற்சிகள் உண்டு. இதனை இவர்கள் மேற்கொள்வதால் இரத்த சர்க்கரை அளவு எளிதில் குறைகிறது.
மன அழுத்தத்தை சிறந்த முறையில் நிர்வகிப்பது நடைபயிற்சி அல்லது யோகா, இந்த இரண்டில் எது என்பதை இப்போது பார்க்கலாம். மன நிலையை உயர்த்தி, அழுத்தத்தைக் குறைக்க நடைபயிற்சி உதவுகிறது. ஆனால் யோகா பயிற்சி செய்வதால், உங்கள் மன நிலையில் உயர்வு ஏற்பட்டு, கவனமும் அதிகரிக்கிறது. இதனால் உங்கள் நன்னடத்தை அதிகரிக்கிறது. அழுத்தம் உண்டான தசைகள், திசுக்கள் மற்றும் மூளைக்கு நெகிழ்வைத் தரும் தன்மை யோகாவிற்கு உண்டு. யோகாவை தினமும் பயிற்சி செய்வதால் நல்ல ஆழ்ந்த தூக்கம் கிடைக்கும். இதனால் தூக்க கோளாறுகள் நீக்கப்பட்டு தூக்கம் மேம்படும். ஆகவே, யோகாவின் மூலம் ஒட்டுமொத்த மனித நல் வாழ்க்கை மேம்படும்.
யோகா, உங்கள் அழகை நிர்வகிக்கவும் உதவுகிறது. அழகாகவும் இளமையாகவும் இருக்க விரும்பினால் தினமும் தொடர்ந்து யோகா பயிற்சியை மேற்கொள்ளலாம். உங்கள் சருமத்தை மினுமினுப்பாகவும் துடிப்பாகவும் வைக்க யோகா உதவுகிறது. மூளையில் இயல்பான இரசாயன சமநிலையை நிலைநிறுத்த யோகாசனங்கள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இதன் காரணமாக இரத்தத்தில் ஆக்சிஜன் வழங்குதல் அதிகரிக்கப்படும். ஆக்சிஜன் அதிகம் உள்ள இரத்தம், அணுக்களையும் திசுக்களையும் சுறுசுறுப்புடன் இயங்க வைக்கும். யோகா பயிற்சி தொடர்ந்து செய்து வருவதால், சருமத்தின் மேல்புறம் உள்ள கொலோஜென் நார்கள் வலிமையாகும். இதனால் உங்கள் சருமம் களங்கமில்லாமல் பொலிவாக இருக்கும். ஆகவே யோகா பயிற்சியால் உங்கள் சருமம் ஆரோக்கியமாகவும் இளமையாகவும் இருக்கும்.
இப்போது யோகா மற்றும் நடைபயிற்சியில் எது சிறந்தது என்பது பற்றிய ஒரு தெளிவு உங்களுக்கு கிடைத்திருக்கும். நடைபயிற்சி, உங்கள் உடல் மற்றும் மன நல ஆரோக்கியத்தை அதிகரித்தாலும், யோகவே சிறந்த விளைவுகளைத் தருகிறது. இதனால் நீங்கள் நடைபயிற்சி மேற்கொள்ள வேண்டாம் என்று கூறவில்லை. நடைபயிற்சியுடன் யோகாவையும் இணைத்துக் கொள்ளலாம் என்று அறிவுறுத்தப்படுகிறது. இதனால் இந்த இரண்டின் நன்மைகளும் உங்களுக்கு கிடைக்கும். எல்லா வயதினருக்கும் இந்த இரண்டு பயிற்சிகளும் ஏற்புடையது. ஜிம் சென்று பயிற்சிகள் செய்வது மிகவும் விலை உயர்ந்த பயிற்சியாகும் . இதனை விட இவை இரண்டும் அதிக பலன் தருபவையாகும். ஆனால், இந்த இரண்டில் எது சிறப்பானது என்று தேர்ந்தெடுத்தால் அது யோகா தான். யோகாவின் மூலம் சிறப்பான நன்மைகள் உடலுக்கு கிடைக்கிறது.
சைக்கிளிங் செய்வதன் மூலமும் கால்கள் வலுப்பெறுகின்றன. தினமும் சைக்கிள் பயிற்சி செய்வதால் இந்த நோய்கள் வராமல் நம்மை காத்துக்கொள்ள முடியும்.
சைக்கிளிங் செய்வதன் மூலமும் கால்கள் வலுப்பெறுகின்றன. துடுப்பு படகு பயிற்சியானது உடல் முழுவதையும் சீர்படுத்துகிறது. இவ்வாறு தொடர்ந்து உடற்பயிற்சிகள் செய்வதன் மூலம், உடல் வளையும் தன்மை, வலிமை, எதையும் தாங்கும் உடல் திறன் பெறலாம். கால்களால் பெடல் செய்வது போன்ற பயிற்சிகள் கால்களை வலுவானதாக ஆக்குகிறது. ‘லாட் புல் டவுன்‘ கருவியில் பயிற்சி செய்வதால் மார்பு பகுதிகள் நன்கு விரிவடையும். ஸ்மித், ஆப்ஸ் கருவிகள் உடலின் பல பகுதிகளுக்கும் பயிற்சி செய்ய பயன்படுகிறது.
1. சைக்கிள் ஓட்டும்போது, இதயத்துடிப்பு சீராகும். வயது முதிர்வு காரணமாக ஏற்படும் இதய வலுவிழப்பு, இதய அடைப்பு போன்ற பிரச்னைகள் தடுக்கப்படும்.
2. டைப் -1, டைப் -2 சர்க்கரை நோயாளிகளுக்கு சர்க்கரையின் அளவு கட்டுக்குள் இருக்கும்.
3. தினமும் அரை மணி நேரம் சைக்கிள் ஓட்டினால், மூளையின் செயல்பாடுகள் அதிகரித்துச் சுறுசுறுப்பு உண்டாகும்.
4. சைக்கிள் ஓட்டுவதால் கால் தசைகள், தொடைப்பகுதி தசைகள், எலும்புப் பகுதிகள், முதுகுத் தண்டுவடம், இடுப்புப் பகுதி போன்றவை வலிமைபெறும்.
5. ரத்த அழுத்தம் தொடர்பான பிரச்னைகள் வராது.
6. உடல் எடையைக் குறைக்க உதவும்.
7. சைக்கிள் ஓட்டுபவர்களது மூளையின் செயல்திறன் அதிகரிக்கும்.
8. மனதளவில் புத்துணர்ச்சி கிடைக்கும்.
9. மனஅழுத்தம், மனச்சோர்வு போன்ற பிரச்னை இருப்பவர்களுக்கு சிறந்த தீர்வு கிடைக்கும்.
9. அதிக வியர்வை வெளிப்படுவதால், உடலிலுள்ள கெட்ட கொழுப்புகள் குறையும்.
10. மார்பகப் புற்றுநோய், கர்ப்பப்பை வாய் புற்றுநோய் போன்றுவற்றுக்கான முக்கியமான காரணி, உடல்பருமன். சைக்கிள் ஓட்டுவதன்மூலம் உடல்பருமன் தடுக்கப்படுவதுடன் புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகளும் குறைகிறது.
1. சைக்கிள் ஓட்டும்போது, இதயத்துடிப்பு சீராகும். வயது முதிர்வு காரணமாக ஏற்படும் இதய வலுவிழப்பு, இதய அடைப்பு போன்ற பிரச்னைகள் தடுக்கப்படும்.
2. டைப் -1, டைப் -2 சர்க்கரை நோயாளிகளுக்கு சர்க்கரையின் அளவு கட்டுக்குள் இருக்கும்.
3. தினமும் அரை மணி நேரம் சைக்கிள் ஓட்டினால், மூளையின் செயல்பாடுகள் அதிகரித்துச் சுறுசுறுப்பு உண்டாகும்.
4. சைக்கிள் ஓட்டுவதால் கால் தசைகள், தொடைப்பகுதி தசைகள், எலும்புப் பகுதிகள், முதுகுத் தண்டுவடம், இடுப்புப் பகுதி போன்றவை வலிமைபெறும்.
5. ரத்த அழுத்தம் தொடர்பான பிரச்னைகள் வராது.
6. உடல் எடையைக் குறைக்க உதவும்.
7. சைக்கிள் ஓட்டுபவர்களது மூளையின் செயல்திறன் அதிகரிக்கும்.
8. மனதளவில் புத்துணர்ச்சி கிடைக்கும்.
9. மனஅழுத்தம், மனச்சோர்வு போன்ற பிரச்னை இருப்பவர்களுக்கு சிறந்த தீர்வு கிடைக்கும்.
9. அதிக வியர்வை வெளிப்படுவதால், உடலிலுள்ள கெட்ட கொழுப்புகள் குறையும்.
10. மார்பகப் புற்றுநோய், கர்ப்பப்பை வாய் புற்றுநோய் போன்றுவற்றுக்கான முக்கியமான காரணி, உடல்பருமன். சைக்கிள் ஓட்டுவதன்மூலம் உடல்பருமன் தடுக்கப்படுவதுடன் புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகளும் குறைகிறது.
மாணவர்கள் தான் உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்று இல்லை. மாணவிகளும் எளிமையான உடற்பயிற்சி செய்யலாம். உடற்பயிற்சி செய்வதன் மூலம் மனம் புத்துணர்ச்சி பெறுகிறது. உடல் வலிமை பெறும். கோபம் குறையும். ரத்த ஓட்டம் சீராகிறது.
உடற்பயிற்சி செய்வதன் மூலம், உடல் வளமும், மன வளமும் மேம்படும். ஊக்கம், சுய கட்டுப்பாடு போன்ற அரிய பண்பு நலன்களுக்கு காரணமாய் அமைவதும் உடற்பயிற்சி ஆகும். இன்றைக்கு கொரோனா வைரசால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால் 3 மாதத்துக்கும் மேலாக மாணவ-மாணவிகள் வீடுகளிலேயே முடங்கி கிடக்கிறார்கள். அவர்கள், தொலைக்காட்சி பார்ப்பது, செல்போன்களை பயன்படுத்துவது, கேரம், செஸ் விளையாடுவது என்றே பொழுதை கழிக்கிறார்கள்.
இதனால், அவர்கள் மனதளவில் பாதிப்புக்கு உள்ளாகிறார்கள். இதனை தவிர்க்க வீடுகளில் சிறு, சிறு உடற்பயிற்சி செய்யலாம். மாணவர்கள்தான் உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்று இல்லை. மாணவிகளும் எளிமையான உடற்பயிற்சி செய்யலாம். உடற்பயிற்சி செய்வதன்மூலம் மனம் புத்துணர்ச்சி பெறுகிறது. உடல் வலிமை பெறும். கோபம் குறையும். ரத்த ஓட்டம் சீராகிறது.
உடற்பயிற்சி செய்யும் போது சத்தான உணவு வகைகளை எடுத்துக் கொள்வது அவசியம் ஆகும். அதேபோல யோகாவும் செய்ய கற்றுக் கொள்ளுங்கள். சுவர் இல்லாமல் சித்திரம் எழுத இயலாது. பிள்ளைகளுக்கு சரீர பலம் ஏற்படுத்தாமல் வெறுமனே படிப்பு மாத்திரம் கொடுப்பதால் அவர்களுக்கு நாளுக்கு நாள் ஆரோக்கியம் குறையும். அவர்களது தீராத துக்கத்திற்கும் இரையாகும்படி நேரிடும் என்று பாரதியார் தம், சரீரபயிற்சி என்ற கட்டுரையில் கூறியுள்ளார்.
இளைஞர்களே பலம் உள்ளவர்களாக திகழுங்கள் என்று அறிவுரை கூறியுள்ளார் விவேகானந்தர். ஆகவே, மாணவ-மாணவிகள் உடற்பயிற்சி செய்து உடலை கட்டுக்கோப்பாக வைத்திருந்து படிப்பிலும் கவனம் செலுத்தி பட்டம் வாங்கி விட்டால் ராணுவம், காவல்துறை போன்றவற்றில் தேர்வாகி விட்டால் இந்த நாட்டு மக்களுக்கு நம் கடமையை செய்ய முடியும். ஆகவே, உடற்பயிற்சி செய்யுங்கள். வாழ்க்கையில் சாதித்து காட்டுங்கள்.
இதனால், அவர்கள் மனதளவில் பாதிப்புக்கு உள்ளாகிறார்கள். இதனை தவிர்க்க வீடுகளில் சிறு, சிறு உடற்பயிற்சி செய்யலாம். மாணவர்கள்தான் உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்று இல்லை. மாணவிகளும் எளிமையான உடற்பயிற்சி செய்யலாம். உடற்பயிற்சி செய்வதன்மூலம் மனம் புத்துணர்ச்சி பெறுகிறது. உடல் வலிமை பெறும். கோபம் குறையும். ரத்த ஓட்டம் சீராகிறது.
உடற்பயிற்சி செய்யும் போது சத்தான உணவு வகைகளை எடுத்துக் கொள்வது அவசியம் ஆகும். அதேபோல யோகாவும் செய்ய கற்றுக் கொள்ளுங்கள். சுவர் இல்லாமல் சித்திரம் எழுத இயலாது. பிள்ளைகளுக்கு சரீர பலம் ஏற்படுத்தாமல் வெறுமனே படிப்பு மாத்திரம் கொடுப்பதால் அவர்களுக்கு நாளுக்கு நாள் ஆரோக்கியம் குறையும். அவர்களது தீராத துக்கத்திற்கும் இரையாகும்படி நேரிடும் என்று பாரதியார் தம், சரீரபயிற்சி என்ற கட்டுரையில் கூறியுள்ளார்.
இளைஞர்களே பலம் உள்ளவர்களாக திகழுங்கள் என்று அறிவுரை கூறியுள்ளார் விவேகானந்தர். ஆகவே, மாணவ-மாணவிகள் உடற்பயிற்சி செய்து உடலை கட்டுக்கோப்பாக வைத்திருந்து படிப்பிலும் கவனம் செலுத்தி பட்டம் வாங்கி விட்டால் ராணுவம், காவல்துறை போன்றவற்றில் தேர்வாகி விட்டால் இந்த நாட்டு மக்களுக்கு நம் கடமையை செய்ய முடியும். ஆகவே, உடற்பயிற்சி செய்யுங்கள். வாழ்க்கையில் சாதித்து காட்டுங்கள்.
இந்த உடற்பயிற்சி முன்பக்க தொடை மற்றும் பின்பக்கம், இடுப்பு பகுதியில் உள்ள தேவையற்ற கொழுப்பை கரைத்து, ஃபிட்டாக்கும்.
தற்போதுள்ள இளம் தலைமுறையினருக்கு உடல் உழைப்பு இல்லாததால் உடல் பருமனால் அவதிப்படுகின்றனர். அதிலும் பெண்கள் குறிப்பாக தொடை, இடுப்பு, பின்பக்கம் போன்ற பகுதிகளில் அதிகப்படியான சதையால் அவதிப்படுவதோடு பார்க்கவும் அசிங்கமான தோற்றத்தை அளிக்கின்றனர்.
இவர்கள் தினமும் வீட்டில் இருந்தபடியே 20 நிமிடம் பயிற்சி செய்தால் போதுமானது. இந்த வீட்டில் இருந்தபடியே செய்யலாம். இந்த பயிற்சி செய்ய முதலில் விரிப்பில் நேராக நின்று, நடப்பது போல ஒரு காலை முன்பக்கமாவும் மற்றொரு காலை பின்பக்கமாகவும் வைத்துக்கொள்ள வேண்டும்.
இப்போது முன்பக்க காலை மடித்து நிற்பது போல் வைத்துக் கொண்டு, பின்பக்க கால் முட்டியை தரையை நோக்கி (ஆனால் தரையில் படக்கூடாது) கொண்டு வர வேண்டும். பின்னர் பழைய நிலைக்கு திரும்ப வேண்டும்.
இது போல் மற்றொரு காலுக்கும் செய்ய வேண்டும். இதே போல இரு கால்களுக்கும் தலா 20 முறை செய்ய வேண்டும். பின்னர் படிப்படியாக எண்ணிக்கையின் அளவை அதிகரித்து கொள்ளலாம். தினமும் இந்த பயிற்சியை தொடர்ந்து செய்து வந்தால் விரைவில் நல்ல பலன் கிடைப்பதை காணலாம்.
பயன்கள் :
முன்பக்க தொடை மற்றும் பின்பக்கம், இடுப்பு பகுதியில் உள்ள தேவையற்ற கொழுப்பை கரைத்து, ஃபிட்டாக்கும்.
இவர்கள் தினமும் வீட்டில் இருந்தபடியே 20 நிமிடம் பயிற்சி செய்தால் போதுமானது. இந்த வீட்டில் இருந்தபடியே செய்யலாம். இந்த பயிற்சி செய்ய முதலில் விரிப்பில் நேராக நின்று, நடப்பது போல ஒரு காலை முன்பக்கமாவும் மற்றொரு காலை பின்பக்கமாகவும் வைத்துக்கொள்ள வேண்டும்.
இப்போது முன்பக்க காலை மடித்து நிற்பது போல் வைத்துக் கொண்டு, பின்பக்க கால் முட்டியை தரையை நோக்கி (ஆனால் தரையில் படக்கூடாது) கொண்டு வர வேண்டும். பின்னர் பழைய நிலைக்கு திரும்ப வேண்டும்.
இது போல் மற்றொரு காலுக்கும் செய்ய வேண்டும். இதே போல இரு கால்களுக்கும் தலா 20 முறை செய்ய வேண்டும். பின்னர் படிப்படியாக எண்ணிக்கையின் அளவை அதிகரித்து கொள்ளலாம். தினமும் இந்த பயிற்சியை தொடர்ந்து செய்து வந்தால் விரைவில் நல்ல பலன் கிடைப்பதை காணலாம்.
பயன்கள் :
முன்பக்க தொடை மற்றும் பின்பக்கம், இடுப்பு பகுதியில் உள்ள தேவையற்ற கொழுப்பை கரைத்து, ஃபிட்டாக்கும்.
உடற்பயிற்சியோ, யோகாசனங்களோ செய்ய முடியாதவர்கள் சூரிய நமஸ்காரம் செய்து வரலாம். இது எளிய பயிற்சி முறைகளை கொண்டிருப்பதோடு ஏராளமான உடல்நல நன்மைகளுக்கும் காரணமாக அமைந்திருக்கிறது.
சூரியனை வழிபடும் முறையாக கடைப்பிடிக்கப்படும் சூரிய நமஸ்காரம் 12 யோகா போஸ்களை உள்ளடக்கியது. உடல், மனம், சுவாசம் ஆகிய மூன்றையும் ஒருங்கிணைத்து செய்யும் பயிற்சி முறையாக இது அமைந்திருக்கிறது. உடற்பயிற்சியோ, யோகாசனங்களோ செய்ய முடியாதவர்கள் சூரிய நமஸ்காரம் செய்து வரலாம். இது எளிய பயிற்சி முறைகளை கொண்டிருப்பதோடு ஏராளமான உடல்நல நன்மைகளுக்கும் காரணமாக அமைந்திருக்கிறது.
* சூரிய நமஸ்காரம் செய்வதற்கு எடை அதிகம் கொண்ட உடற்பயிற்சி சாதனங்கள் தேவையில்லை. யோகாசன அசைவுகளை சுலபமாக மேற்கொண்டு பயிற்சி பெறலாம். தொடர்ந்து சூரிய நமஸ்காரம் செய்து வந்தால் வயிற்றை சுற்றியுள்ள கொழுப்பு கரைய தொடங்கும். உடலும் கட்டுக்கோப்பான வடிவத்திற்கு மாறும்.
* தினமும் சூரிய நமஸ்காரம் செய்வதன் மூலம் உடலில் 400 கலோரிகளுக்கு மேல் எரிக்க செய்துவிடலாம்.
* அன்றாட உடல் இயக்கத்திற்கு ஈடு கொடுத்து சரிவர செயல்படாமல் இருக்கும் சுரப்பிகளை தூண்டுவதற்கு இந்த பயிற்சிமுறை உதவும். குறிப்பாக தைராய்டு சுரப்பிகளுக்கு ஊக்கம் அளிக்கும். மேலும் ஹார்மோன்களின் சுரப்பை அதிகரிக்கச் செய்துவிடும்.
* மாதவிடாய் சுழற்சியை ஒழுங்குபடுத்துவதில் சூரிய நமஸ்காரத்தின் பங்களிப்பு முக்கியமானது. மாதவிடாய் பிரச்சினையால் அவதிப்படும் பெண்கள் தவறாமல் சூரிய நமஸ்காரம் செய்து வருவது பலன் தரும். பிரசவம் சுமூகமாக நடைபெறவும் துணைபுரியும்.
* பெண்கள் சூரிய நமஸ்காரத்தை தவறாமல் செய்துவந்தால் சருமம் பளபளப்புடன் காட்சி அளிக்கும். அதற்கு காரணம் உடலில் ரத்த ஓட்டம் நன்றாக இருப்பதற்கு சூரிய நமஸ்காரம் உதவும்.
* சூரிய நமஸ்காரத்தில் மேற்கொள்ளப்படும் 23 பயிற்சி முறைகள் உடல் உறுப்புகளின் செயல்பாடுகளை மேம்படுத்தவும் உதவும்.
* எந்த நேரத்திலும் சூரிய நமஸ்காரம் செய்யலாம். இருப்பினும் பலர் சூரிய உதயத்தின்போது செய்வதற்கு விரும்புகிறார்கள். அதுதான் சிறப்பானது. மற்ற வேளைகளில் மேற்கொள்வதாக இருந்தால் சாப்பிட்ட பிறகு இரண்டு மணி நேரம் கழித்து செய்ய வேண்டும்.
* சூரிய நமஸ்கார பயிற்சியை பத்து நிமிடத்திற்குள் செய்து முடித்துவிடலாம். எனினும் பயிற்சிக்கான நேரத்தை நிர்ணயிப்பது ஒவ்வொருவருடைய தனிப்பட்ட விருப்பத்தை பொறுத்தது. சிலர் உடல் நெகிழ்வுதன்மை பெறுவதற்காக மெதுவாக பயிற்சிகளை மேற்கொள்வார்கள். சிலர் உடல் எடையை குறைப்பதற்காக வேகவேகமாக செய்து முடிப்பார்கள்.
* சூரிய நமஸ்காரத்தில் மேற்கொள்ளப்படும் உடல் அசைவுகள் அனைத்தும் வார்ம் அப், ஆசனங்கள் போன்றவற்றின் கலவையாகும். “இது ஒரு முழுமையான உடற்பயிற்சி. முதுகு தசைகளை பலப்படுத்தும். ரத்தத்தில் சர்க்கரை அளவை குறைக்கும். இந்த பயிற்சிகள் அனைத்தும் வளர்சிதை மாற்றம் மற்றும் ரத்த ஓட்ட அளவை மேம்படுத்துவதற்கும், மாதவிடாய் சுழற்சியை ஒழுங்குபடுத்துவதற்கும் உதவுகின்றன” என்கிறார், உடற்பயிற்சியாளர் பிரியங்கா மேத்தா.
* சூரிய நமஸ்காரம் பயிற்சியை திறந்தவெளியிலோ, தனி அறையிலோ மேற்கொள்ளலாம். நான்கு சதுர மீட்டர் இடமும், அதே அளவுக்கு துணியோ, போர்வையோ போதுமானது. ஆரம்பத்தில் உடற்பயிற்சியாளர்களிடம் பயிற்சி பெற்றுவிட்டு பின்பு தனியாக செய்து பழகிவிடலாம். முதுகு, இடுப்பு எலும்பு பிரச்சினை இருப்பவர்கள், கர்ப்பிணிகள் தவிர்ப்பது நல்லது.
* சூரிய நமஸ்காரம் செய்வதற்கு எடை அதிகம் கொண்ட உடற்பயிற்சி சாதனங்கள் தேவையில்லை. யோகாசன அசைவுகளை சுலபமாக மேற்கொண்டு பயிற்சி பெறலாம். தொடர்ந்து சூரிய நமஸ்காரம் செய்து வந்தால் வயிற்றை சுற்றியுள்ள கொழுப்பு கரைய தொடங்கும். உடலும் கட்டுக்கோப்பான வடிவத்திற்கு மாறும்.
* தினமும் சூரிய நமஸ்காரம் செய்வதன் மூலம் உடலில் 400 கலோரிகளுக்கு மேல் எரிக்க செய்துவிடலாம்.
* அன்றாட உடல் இயக்கத்திற்கு ஈடு கொடுத்து சரிவர செயல்படாமல் இருக்கும் சுரப்பிகளை தூண்டுவதற்கு இந்த பயிற்சிமுறை உதவும். குறிப்பாக தைராய்டு சுரப்பிகளுக்கு ஊக்கம் அளிக்கும். மேலும் ஹார்மோன்களின் சுரப்பை அதிகரிக்கச் செய்துவிடும்.
* மாதவிடாய் சுழற்சியை ஒழுங்குபடுத்துவதில் சூரிய நமஸ்காரத்தின் பங்களிப்பு முக்கியமானது. மாதவிடாய் பிரச்சினையால் அவதிப்படும் பெண்கள் தவறாமல் சூரிய நமஸ்காரம் செய்து வருவது பலன் தரும். பிரசவம் சுமூகமாக நடைபெறவும் துணைபுரியும்.
* பெண்கள் சூரிய நமஸ்காரத்தை தவறாமல் செய்துவந்தால் சருமம் பளபளப்புடன் காட்சி அளிக்கும். அதற்கு காரணம் உடலில் ரத்த ஓட்டம் நன்றாக இருப்பதற்கு சூரிய நமஸ்காரம் உதவும்.
* சூரிய நமஸ்காரத்தில் மேற்கொள்ளப்படும் 23 பயிற்சி முறைகள் உடல் உறுப்புகளின் செயல்பாடுகளை மேம்படுத்தவும் உதவும்.
* எந்த நேரத்திலும் சூரிய நமஸ்காரம் செய்யலாம். இருப்பினும் பலர் சூரிய உதயத்தின்போது செய்வதற்கு விரும்புகிறார்கள். அதுதான் சிறப்பானது. மற்ற வேளைகளில் மேற்கொள்வதாக இருந்தால் சாப்பிட்ட பிறகு இரண்டு மணி நேரம் கழித்து செய்ய வேண்டும்.
* சூரிய நமஸ்கார பயிற்சியை பத்து நிமிடத்திற்குள் செய்து முடித்துவிடலாம். எனினும் பயிற்சிக்கான நேரத்தை நிர்ணயிப்பது ஒவ்வொருவருடைய தனிப்பட்ட விருப்பத்தை பொறுத்தது. சிலர் உடல் நெகிழ்வுதன்மை பெறுவதற்காக மெதுவாக பயிற்சிகளை மேற்கொள்வார்கள். சிலர் உடல் எடையை குறைப்பதற்காக வேகவேகமாக செய்து முடிப்பார்கள்.
* சூரிய நமஸ்காரத்தில் மேற்கொள்ளப்படும் உடல் அசைவுகள் அனைத்தும் வார்ம் அப், ஆசனங்கள் போன்றவற்றின் கலவையாகும். “இது ஒரு முழுமையான உடற்பயிற்சி. முதுகு தசைகளை பலப்படுத்தும். ரத்தத்தில் சர்க்கரை அளவை குறைக்கும். இந்த பயிற்சிகள் அனைத்தும் வளர்சிதை மாற்றம் மற்றும் ரத்த ஓட்ட அளவை மேம்படுத்துவதற்கும், மாதவிடாய் சுழற்சியை ஒழுங்குபடுத்துவதற்கும் உதவுகின்றன” என்கிறார், உடற்பயிற்சியாளர் பிரியங்கா மேத்தா.
* சூரிய நமஸ்காரம் பயிற்சியை திறந்தவெளியிலோ, தனி அறையிலோ மேற்கொள்ளலாம். நான்கு சதுர மீட்டர் இடமும், அதே அளவுக்கு துணியோ, போர்வையோ போதுமானது. ஆரம்பத்தில் உடற்பயிற்சியாளர்களிடம் பயிற்சி பெற்றுவிட்டு பின்பு தனியாக செய்து பழகிவிடலாம். முதுகு, இடுப்பு எலும்பு பிரச்சினை இருப்பவர்கள், கர்ப்பிணிகள் தவிர்ப்பது நல்லது.
பெண்களுக்கு குறைந்த நேரத்தில் செய்யக்கூடிய உடற்தகுதி குறிப்புகள் மற்றும் பயிற்சி பற்றி பார்க்கலாம்.
பெண்களுக்கு குறைந்த நேரத்தில் செய்யக்கூடிய உடற்தகுதி குறிப்புகள் மற்றும் பயிற்சி பற்றி பார்க்கலாம்.
மன அழுத்தத்தை குறைக்கும் பயிற்சிகள்:
* மூச்சுப்பயிற்சி: மூச்சை ஆழமாக இழுத்து விடுங்கள். கண்களை மூடிக்கொண்டு, நாசி வழியாக பத்து முறை ஆழமான சுவாசத்தை உள்ளே இழுத்து வெளியே விடுங்கள். ஒவ்வொருமுறை சுவாசத்தை உள்ளே இழுத்து வெளியே விடும் பொழுது அதை மிகவும் மெதுவாக வெளியேற்றுங்கள். இது மன அழுத்தத்தைக் குறைத்து உங்களை நிதானப்படுத்தும்.
* கழுத்தைச் சுற்றும் பயிற்சி: உங்கள் கழுத்தை நன்றாக நிமிர்த்தி மெதுவாக இடது, வலது, முன்னோக்கி மற்றும் பின்னால் மெதுவாக நீட்டவும். இதுபோல் ஐந்து முறை செய்யவும்.
சுறுசுறுப்பு மற்றும் நெகிழ்வுப் பயிற்சிகள்
* தசை நீட்சிப் பயிற்சி: நம் உடலில் உள்ள தசை நார்கள் வயதாகும் பொழுது உலர்ந்து, தளர்ந்து, நீரிழந்து மிகவும் மிருதுவாகவும் சட்டென்று காயம் ஏற்படும் வகையிலும் மாறி விடுகின்றன. தசை நீட்சிப் பயிற்சி மேற்கொள்ளும் பொழுது அது திசுக்களில் மசகு எண்ணையை உற்பத்தி செய்து எலும்புகளில் நீரிழப்பு மற்றும் விறைப்பு செயல்முறையைக் குறைக்கின்றது.
கழுத்து, தோள்பட்டை, ட்ரைசெப்ஸ், இடுப்பு மற்றும் கால்களை நீட்டி மடக்கி பயிற்சியை செய்யலாம். சிறுசிறு உடற்பயிற்சிகளுக்கு என்றிருக்கும் புத்தகம் மற்றும் குருந்தகடுகளில் சொல்லி இருப்பதை பின்பற்றி பயிற்சிகளைச் செய்யலாம்.
* ஜம்ப் ரோப் பயிற்சி: இப்பயிற்சிக்கு ‘ஸ்கிப்பிங்’ என்று மற்றொரு பெயரும் உண்டு. ஒவ்வொரு கைகளிலும் கயிற்றின் கைப்பிடிகளைப் பிடித்துக் கொண்டு உங்கள் தலைக்கு மேல் கயிற்றைச் சுழற்றி அவை கீழே வரும் பொழுது கால்களால் அவற்றைத் தாண்ட வேண்டும். தொடங்கும் பொழுது பதினைந்து முறையாகத் தொடங்கி நாட்கள் செல்லச் செல்ல மேலும் பத்து பத்தாக அதிகரிக்க வேண்டும்.
ஆஸ்டியோ போராசிஸ் அபாயத்தை குறைப்பதற்கான பயிற்சிகள்:
மெதுவான ஓட்டம், குதித்தல் அல்லது நடைப்பயிற்சியானது உங்களது எலும்புகளை பலப்படுத்தி, எலும்பு அடர்த்தியை வலுப்படுத்துகின்றன.
மாற்று கால் மற்றும் கையை உயர்த்தி நீட்டுவது. விலங்குகளைப் போல் இரண்டு கால் மற்றும் இரண்டு கைகளையும் உபயோகித்து குனிந்து நின்று கொண்டு செய்யப்படும் இப்பயிற்சியினால் முதுகெலும்பு, இடுப்பு மற்றும் கைகளில் வலிமை மற்றும் சமநிலையானது உருவாகின்றது. இது கைகள், கால்கள் மற்றும் அடிவயிற்றையும் டோன் செய்கின்றன.
சரியான நிலையில் நிமிர்ந்து நிற்பது உட்காருவது மற்றும் நடப்பது போன்ற பயிற்சியை கவனத்துடன் செய்யும் பொழுது அது உங்கள் முதுகெலும்புகளை ஆரோக்கியமாகவும், வலுவாகவும் நெகிழ்வாகவும் வைத்திருக்கிறது. இது எந்த நேரம் வேண்டுமானாலும் செய்யக்கூடிய பயிற்சியாகும்.
ஜூம்பா நடனப் பயிற்சி
இது போன்ற நடனப் பயிற்சியானது அடுக்குமாடிக் குடியிருப்புகளில் பயிற்சியாளரை வரவழைத்தோ அல்லது குடியிருப்புகளுக்கு அருகிலிருக்கும் பயிற்சி பள்ளியிலோ நடத்தப்படுகின்றன. நடன அசைவுகளின் மூலம் உடல் எடையைக் குறைப்பதற்கு ஏற்ற பயிற்சியாக இது உள்ளது.
யோகாப் பயிற்சிகள்
முதலில் சிறந்த பயிற்சியாளரை கொண்டு பயிற்சி பெற்ற பின் வீட்டிலேயே நாம் யோகாப் பயிற்சியை செய்ய முடியும். இதிலும் பவர் யோகா, யோகாவின் மாற்று வடிவமான பிலேட்ஸ் போன்றவை வந்து விட்டன.
யோகாப் பயிற்சியில் குறைந்தபட்சம் சூர்ய நமஸ்காரம் என்று சொல்லப்படும் யோகாசனத்தை மட்டும் செய்தால் கூட பெரும்பாலான நன்மைகளைப் பெற முடியும்.
“பெண்கள் வீட்டின் கண்கள்” என்று சும்மாவா சொன்னார்கள். எனவே பெண்கள் தங்கள் ஆரோக்கியத்திற்கென்றும் சிறிதளவு நேரத்தை ஒதுக்கி உடற்பயிற்சிகளைச் செய்து தன்னை மட்டுமல்லாமல் தன் குடும்பத்தையும் நன்றாக வைத்துக் கொள்ள முடியும் என்பதில் சந்தேகமில்லை.
மன அழுத்தத்தை குறைக்கும் பயிற்சிகள்:
* மூச்சுப்பயிற்சி: மூச்சை ஆழமாக இழுத்து விடுங்கள். கண்களை மூடிக்கொண்டு, நாசி வழியாக பத்து முறை ஆழமான சுவாசத்தை உள்ளே இழுத்து வெளியே விடுங்கள். ஒவ்வொருமுறை சுவாசத்தை உள்ளே இழுத்து வெளியே விடும் பொழுது அதை மிகவும் மெதுவாக வெளியேற்றுங்கள். இது மன அழுத்தத்தைக் குறைத்து உங்களை நிதானப்படுத்தும்.
* கழுத்தைச் சுற்றும் பயிற்சி: உங்கள் கழுத்தை நன்றாக நிமிர்த்தி மெதுவாக இடது, வலது, முன்னோக்கி மற்றும் பின்னால் மெதுவாக நீட்டவும். இதுபோல் ஐந்து முறை செய்யவும்.
சுறுசுறுப்பு மற்றும் நெகிழ்வுப் பயிற்சிகள்
* தசை நீட்சிப் பயிற்சி: நம் உடலில் உள்ள தசை நார்கள் வயதாகும் பொழுது உலர்ந்து, தளர்ந்து, நீரிழந்து மிகவும் மிருதுவாகவும் சட்டென்று காயம் ஏற்படும் வகையிலும் மாறி விடுகின்றன. தசை நீட்சிப் பயிற்சி மேற்கொள்ளும் பொழுது அது திசுக்களில் மசகு எண்ணையை உற்பத்தி செய்து எலும்புகளில் நீரிழப்பு மற்றும் விறைப்பு செயல்முறையைக் குறைக்கின்றது.
கழுத்து, தோள்பட்டை, ட்ரைசெப்ஸ், இடுப்பு மற்றும் கால்களை நீட்டி மடக்கி பயிற்சியை செய்யலாம். சிறுசிறு உடற்பயிற்சிகளுக்கு என்றிருக்கும் புத்தகம் மற்றும் குருந்தகடுகளில் சொல்லி இருப்பதை பின்பற்றி பயிற்சிகளைச் செய்யலாம்.
* ஜம்ப் ரோப் பயிற்சி: இப்பயிற்சிக்கு ‘ஸ்கிப்பிங்’ என்று மற்றொரு பெயரும் உண்டு. ஒவ்வொரு கைகளிலும் கயிற்றின் கைப்பிடிகளைப் பிடித்துக் கொண்டு உங்கள் தலைக்கு மேல் கயிற்றைச் சுழற்றி அவை கீழே வரும் பொழுது கால்களால் அவற்றைத் தாண்ட வேண்டும். தொடங்கும் பொழுது பதினைந்து முறையாகத் தொடங்கி நாட்கள் செல்லச் செல்ல மேலும் பத்து பத்தாக அதிகரிக்க வேண்டும்.
ஆஸ்டியோ போராசிஸ் அபாயத்தை குறைப்பதற்கான பயிற்சிகள்:
மெதுவான ஓட்டம், குதித்தல் அல்லது நடைப்பயிற்சியானது உங்களது எலும்புகளை பலப்படுத்தி, எலும்பு அடர்த்தியை வலுப்படுத்துகின்றன.
மாற்று கால் மற்றும் கையை உயர்த்தி நீட்டுவது. விலங்குகளைப் போல் இரண்டு கால் மற்றும் இரண்டு கைகளையும் உபயோகித்து குனிந்து நின்று கொண்டு செய்யப்படும் இப்பயிற்சியினால் முதுகெலும்பு, இடுப்பு மற்றும் கைகளில் வலிமை மற்றும் சமநிலையானது உருவாகின்றது. இது கைகள், கால்கள் மற்றும் அடிவயிற்றையும் டோன் செய்கின்றன.
சரியான நிலையில் நிமிர்ந்து நிற்பது உட்காருவது மற்றும் நடப்பது போன்ற பயிற்சியை கவனத்துடன் செய்யும் பொழுது அது உங்கள் முதுகெலும்புகளை ஆரோக்கியமாகவும், வலுவாகவும் நெகிழ்வாகவும் வைத்திருக்கிறது. இது எந்த நேரம் வேண்டுமானாலும் செய்யக்கூடிய பயிற்சியாகும்.
ஜூம்பா நடனப் பயிற்சி
இது போன்ற நடனப் பயிற்சியானது அடுக்குமாடிக் குடியிருப்புகளில் பயிற்சியாளரை வரவழைத்தோ அல்லது குடியிருப்புகளுக்கு அருகிலிருக்கும் பயிற்சி பள்ளியிலோ நடத்தப்படுகின்றன. நடன அசைவுகளின் மூலம் உடல் எடையைக் குறைப்பதற்கு ஏற்ற பயிற்சியாக இது உள்ளது.
யோகாப் பயிற்சிகள்
முதலில் சிறந்த பயிற்சியாளரை கொண்டு பயிற்சி பெற்ற பின் வீட்டிலேயே நாம் யோகாப் பயிற்சியை செய்ய முடியும். இதிலும் பவர் யோகா, யோகாவின் மாற்று வடிவமான பிலேட்ஸ் போன்றவை வந்து விட்டன.
யோகாப் பயிற்சியில் குறைந்தபட்சம் சூர்ய நமஸ்காரம் என்று சொல்லப்படும் யோகாசனத்தை மட்டும் செய்தால் கூட பெரும்பாலான நன்மைகளைப் பெற முடியும்.
“பெண்கள் வீட்டின் கண்கள்” என்று சும்மாவா சொன்னார்கள். எனவே பெண்கள் தங்கள் ஆரோக்கியத்திற்கென்றும் சிறிதளவு நேரத்தை ஒதுக்கி உடற்பயிற்சிகளைச் செய்து தன்னை மட்டுமல்லாமல் தன் குடும்பத்தையும் நன்றாக வைத்துக் கொள்ள முடியும் என்பதில் சந்தேகமில்லை.
சிலருக்கு இடுப்பு பகுதியில் அதிகப்படியான சதை இருக்கும். அவர்கள் இந்த பயிற்சியை தொடர்ந்து செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
சிலருக்கு இடுப்பு பகுதியில் அதிகப்படியான சதை இருக்கும். அவர்கள் இந்த பயிற்சியை தொடர்ந்து செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும். விரிப்பில நேராக நின்று கொண்டு கைகளை பின்னால் கட்டிக்கொள்ள வேண்டும். இப்போது வலது காலை மட்டும் முன்பக்கமாக சற்று மேலே உயர்த்தி மெதுவாக வட்டமாகச் சுழற்றி பழைய நிலைக்கு வரவேண்டும்.
இதேபோல் இடது காலுக்கு செய்ய வேண்டும். இரு கால்களுக்கும் தலா 20 முறை செய்ய வேண்டும். ஆரம்பத்தில் இந்த பயிற்சி செய்யும் போது இடுப்பு பகுதியில் வலி இருக்கும். படிப்படியாக எண்ணிக்கையின் அளவை அதிகரித்து 30 முறை செய்யலாம். ஆரம்பத்தில் நேராக நின்று இந்த பயிற்சி செய்ய முடியாதவர்கள் சுவற்றை பிடித்து கொண்டு செய்யலாம்.
பலன்கள் :
இது இடுப்பு மற்றும் தொடைப் பகுதிக்கான பயிற்சி. இடுப்பு பகுதியில் உள்ள கொழுப்பை கரைத்து ஃபிட்டாக்கும். அதே போல் தொடையின் பக்கவாட்டு சதை மற்றும் உள் சதையை வலிமைப்படுத்தி ஃபிட்டாக்கும்.
இதேபோல் இடது காலுக்கு செய்ய வேண்டும். இரு கால்களுக்கும் தலா 20 முறை செய்ய வேண்டும். ஆரம்பத்தில் இந்த பயிற்சி செய்யும் போது இடுப்பு பகுதியில் வலி இருக்கும். படிப்படியாக எண்ணிக்கையின் அளவை அதிகரித்து 30 முறை செய்யலாம். ஆரம்பத்தில் நேராக நின்று இந்த பயிற்சி செய்ய முடியாதவர்கள் சுவற்றை பிடித்து கொண்டு செய்யலாம்.
பலன்கள் :
இது இடுப்பு மற்றும் தொடைப் பகுதிக்கான பயிற்சி. இடுப்பு பகுதியில் உள்ள கொழுப்பை கரைத்து ஃபிட்டாக்கும். அதே போல் தொடையின் பக்கவாட்டு சதை மற்றும் உள் சதையை வலிமைப்படுத்தி ஃபிட்டாக்கும்.
யோகா என்பது நாம் எப்படி ஆரோக்கியமாகவும், எப்போதும் சுறுசுறுப்பாகவும், எல்லாவற்றையும் சரியான நேரத்தில் சரியான முறையில் செய்து வெற்றிபெற வேண்டும் என்பதை கூறும் ஒரு அறிவியல் ஆகும்.
உலக நாடுகள் அனைத்துக்கும் ஒரு மிகப்பெரிய சவாலாக விளங்கிக் கொண்டிருக்கும் இந்தக் கொரோனா நோய் மக்களின் அன்றாட வாழ்க்கையை பாதிப்புக்கு உள்ளாக்கி இருக்கிறது. இந்த வைரசால் ஏற்படும் அவஸ்தைகளும், துயரங்களும், மரணங்களும் தொடர்கதையாக இருக்கிறது. லட்சக்கணக்கான உயிர்களை காவு வாங்கும் இந்த கொரோனா நோயை கட்டுப்படுத்த அல்லது குணப்படுத்த இன்றுவரை மருந்து கண்டுபிடிக்க முடியவில்லை என்பதே உண்மை.
பல வளர்ந்த நாடுகள் இந்த நோயை குணப்படுத்த அவரவர் வாழும் சூழ்நிலைக்கேற்ப பல்வேறு வகையான மருந்துகளை கண்டுபிடிக்கக் கூடிய முயற்சியில் இருந்தாலும், நம் பிரதமர் மட்டும்தான் இந்த நோயை விரட்டுவதில் யோகாசனத்துக்கு மிக முக்கிய பங்கு உண்டு என்று கூறி இருக்கிறார்.
சுவாச மண்டலத்தையும், நுரையீரலையும், மனித உடம்பில் இயற்கையாக இருக்கும் நோய் எதிர்ப்பு சக்தியையும் இந்த கொரோனா வைரஸ் தாக்கி மிக கடுமையான பாதிப்பை உண்டாக்கும் என்ற காரணத்தினால்தான் யோகசனமும், அதைச்சார்ந்த மூச்சுப் பயிற்சியும் இந்த நோயை விரட்டுவதற்கு ஒரு மாற்றுத் தீர்வாக அமையும் என்று கருத்தையும் சொல்லி இருக்கிறார்.
தினமும் யோகாசனப் பயிற்சியும், மூச்சுப் பயிற்சியும் அதனுடன் இணைந்து தியானப் பயிற்சியையும் ஒருசேர செய்யும்போது, இயற்கையான முறையில் நம் உடம்பில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். அதன் காரணாமாக கொரோனா மட்டும் அல்ல, வேறு எந்த ஒரு நோயும் வராது. இந்த பயிற்சிகளை தொடர்ந்து செய்யும்போது இருக்கின்ற நோயும் கட்டுப்படும் அல்லது வெகு சீக்கிரத்தில் குணமாகும்.
ஆசனம் என்பது உடலை உறுதியாக்கி ஒரு நிலைப்படுத்துவது, மூச்சுப் பயிற்சி என்பது உள் மற்றும் வெளி மூச்சை ஒருமுகப்படுத்துவது, தியானம் என்பது மனதை ஒருமுகப்படுத்தி அமைதி உண்டாக்குவது. இந்த 5 ஆயிரம் ஆண்டு தொன்மையான யோகசனத்தின் உண்மையான அர்த்தம் உடல், மனம் இவற்றை ஒன்றிணைத்து பிரபஞ்ச சக்தியின் ஆற்றலை பெறுவது என்பதாகும். இவ்வாறு பெறப்படும் பிரபஞ்ச சக்தி என்பது நம் உடம்பில் இருக்கும் உயிர் சக்தியுடன் சேரும்போது, அபரிமிதமான நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். யோகா என்பது நாம் எப்படி ஆரோக்கியமாகவும், எப்போதும் சுறுசுறுப்பாகவும், எல்லாவற்றையும் சரியான நேரத்தில் சரியான முறையில் செய்து வெற்றிபெற வேண்டும் என்பதை கூறும் ஒரு அறிவியல் ஆகும். இவற்றை பயிற்சி செய்யும்போது வயிறு காலியாக இருக்க வேண்டும். யோகாசனம் தெரிந்தவரிடமோ அல்லது யோகா பயிற்றுனரிடமோ அல்லது இவர்களது ஆலோசனைகளை கேட்டுத்தான் பயிற்சியை செய்ய வேண்டும். இப்போது வீட்டில் அதிக நேரம் இருப்பதால் காலை, மாலை என இருவேளையும் பயிற்சி செய்ய வேண்டும். முடியாத பட்சத்தில் கலை பொழுதாவது கண்டிப்பாக செய்ய வேண்டும்.
பிரதமர் கூறிய இவ்வளவு சிறப்பு வாய்ந்த யோகாசனத்தில் எல்லோராலும் சுலபமாக செய்யக்கூடிய சிலவற்றை இங்கு பார்க்கலாம்.
அர்த்த சக்ராசனம்:
இதற்கு இன்னொரு பெயர் பிரையாசனம் என்பது. ஒரு சக்கரத்தின் பாதி மற்றும் சந்திர வடிவத்தின் பாதி நிலை எப்படி இருக்குமோ அதை குறிப்பது.
செய்முறை:-
ஒரு விரிப்பின் மீது கால் பாதங்களை ஒன்று சேர்த்து வைத்து கைகள் இரண்டும் வணக்கம் செய்வது போல நிற்க வேண்டும். பின்பு மூச்சை நன்றாக உள்ளிழுத்து கைகள் இரண்டையும் உயரே தூக்கி, முதுகோடு சேர்த்து முடிந்த அளவு பின்னோக்கி வளைக்க வேண்டும். எந்த காரணத்தை கொண்டும் சிரமப்பட்டு செய்யக்கூடாது. மூச்சை அடக்கக் கூடாது.
அதே நேரம் கால் முட்டிகளை வளைக்க கூடாது. அப்படியே 10 எண்ணிக்கையில் இருக்க வேண்டும். சாதாரணமாக மூச்சுவிட வேண்டும். கண்கள் திறந்திருக்க வேண்டும். பின்பு மெதுவாக கைகளை உயர்த்தி பழைய நிலைக்கு வரவேண்டும். எந்த ஆசனமும் முதலில் செய்யும்போது சற்று கடினமாகவும், சிரமமாகவும்தான் இருக்கும். விடாமல் பயிற்சி செய்யும்போது சரியாக செய்ய முடியும்.
பலன்கள்:-
மூச்சை நன்றாக உள்ளிழுப்பதால் நுரையீரல் நன்கு விரிவடைந்து அதிகமான அதிகமான ஆக்ஸிஜன் உள் செல்லும். இதனால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாவதால் சளி, சைனஸ், ஆஸ்துமா முதற்கொண்டு சுவாச சம்பந்தமான அனைத்து பிரச்சினைகளும் தீரும்.
பாத ஹஸ்தாசனம்
பாதம் என்றால் கால்கள், ஹஸ்தம் என்றால் கைகள் என்று பொருள்
அர்த்த சக்ராசனத்துக்கு மாற்று ஆசனம் ஆகும். எந்த ஆசனம் செய்தாலும் அதற்கு மாற்று ஆசனம் செய்ய வேண்டும் என்பது விதி.
செய்முறை:-
ஒரு விரிப்பின் மீது நேராக நிமிர்ந்து நின்று நன்றாக மூச்சை உள்ளிழுத்துக் கொண்டே கைகளை மேலே உயர்த்தவும். பின்பு மூச்சை மெல்ல வெளியிட்டவாறே குனிந்து பாதத்தை தொட வேண்டும். அப்போது வயிறை சற்றே உள்ளிழுக்க வேண்டும். மூட்டு மடங்கக் கூடாது. தலை கால் மூட்டுகளை தொட வேண்டும். முதலில் இது சற்று சிரமம். தொடவில்லையானாலும் பரவாயில்லை. எவ்வளவு முடியுமோ, அந்த அளவுக்கு தொட முயற்சி செய்தால் போதும். கஷ்டப்பட்டு செய்யக்கூடாது. பின்பு கைகள் மற்றும் தலையை மேலே உயர்த்தி பழைய நிலைக்கு வரவேண்டும்.
பலன்கள்:-
நன்றாக உள்ளிழுத்த மூச்சை குனிந்து வெளிவிடும்போது நுரையீரலில் இருந்து மூக்கு வரை உள்ள சுவாச மண்டலம் சுத்தமாகும். அனைத்து மாசுகளும் வெளிவரும். அதிகமான கார்பன்-டை-ஆக்ஸைடு வெளியேறும். அதே சமயத்தில் தலைப்பகுதிக்கு அதிகமான ரத்த ஓட்டம் கிடைக்கும்.
அர்த்தகடி சக்ராசனம்
இரண்டு கால்களையும் சற்று அகல வைத்து மூச்சை மெதுவாக உள்ளிழுத்து வலது பக்கமாக சாய்ந்து வலது கையை முழங்கால் தொடும்படி வைத்துக் கொண்டே உள்ளிழுத்த மூச்சை மெதுவாக வெளியிட வேண்டும். இடது கை தலையின் காதை ஒட்டி இருக்க வேண்டும். 10 எண்ணிக்கை இவ்வாறு இருந்தவுடன் வலது கையை மேலே உயர்த்தி பழைய நிலைக்கு வரவேண்டும். பின்பு இதேபோல இடது பக்கம் செய்ய வேண்டும்.
பலன்கள்:-
பாதங்கள், மூட்டுகள், கைகள், இடுப்பு மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகள் நன்றாக இயக்கம் பெறும். வலது மற்றும் இடது புறம் சாயும்போது நுரையீரல் நன்கு விரிவடைவதால் அதிகமான ஆக்ஸிஜன் கிடைக்கும். அதிகமான சக்தி கிடைக்கும்.
சவாசனம் என்னும் சாந்தி ஆசனம்
எப்போது யோகாசனம் செய்தாலும் உடனே கண்டிப்பாக சவாசனம் செய்துதான் முடிக்க வேண்டும்.
செய்முறை:-
விரிப்பின்மீது மல்லாந்து படுக்க வேண்டும். இரு உள்ளங்கைகள் திறந்த நிலையில், இருபக்கமாக நீட்டி வைக்கவும். கால்களை சற்றை அகல விரித்து வைக்கவும். உள்ளங்கைகள் மேல் நோக்கி இருக்க வேண்டும். இயல்பாக மூக்கு வழியாக சுவாசிக்க வேண்டும். உடல், மனம் ஆகியவற்றின் நினைவின்றி உறக்க நிலையில் இருக்க வேண்டும். அப்போது அலாதியான சாந்த நிலையில், உடல் மற்றும் மனம் தளர்ந்த நிலையில் இருக்கும். 10 நிமிடம் இப்படி இருந்தால், பூரண அமைதி கிட்டும்.
டாக்டர் த.இங்கர்சா யோகாசன நிபுணர்
பல வளர்ந்த நாடுகள் இந்த நோயை குணப்படுத்த அவரவர் வாழும் சூழ்நிலைக்கேற்ப பல்வேறு வகையான மருந்துகளை கண்டுபிடிக்கக் கூடிய முயற்சியில் இருந்தாலும், நம் பிரதமர் மட்டும்தான் இந்த நோயை விரட்டுவதில் யோகாசனத்துக்கு மிக முக்கிய பங்கு உண்டு என்று கூறி இருக்கிறார்.
சுவாச மண்டலத்தையும், நுரையீரலையும், மனித உடம்பில் இயற்கையாக இருக்கும் நோய் எதிர்ப்பு சக்தியையும் இந்த கொரோனா வைரஸ் தாக்கி மிக கடுமையான பாதிப்பை உண்டாக்கும் என்ற காரணத்தினால்தான் யோகசனமும், அதைச்சார்ந்த மூச்சுப் பயிற்சியும் இந்த நோயை விரட்டுவதற்கு ஒரு மாற்றுத் தீர்வாக அமையும் என்று கருத்தையும் சொல்லி இருக்கிறார்.
தினமும் யோகாசனப் பயிற்சியும், மூச்சுப் பயிற்சியும் அதனுடன் இணைந்து தியானப் பயிற்சியையும் ஒருசேர செய்யும்போது, இயற்கையான முறையில் நம் உடம்பில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். அதன் காரணாமாக கொரோனா மட்டும் அல்ல, வேறு எந்த ஒரு நோயும் வராது. இந்த பயிற்சிகளை தொடர்ந்து செய்யும்போது இருக்கின்ற நோயும் கட்டுப்படும் அல்லது வெகு சீக்கிரத்தில் குணமாகும்.
ஆசனம் என்பது உடலை உறுதியாக்கி ஒரு நிலைப்படுத்துவது, மூச்சுப் பயிற்சி என்பது உள் மற்றும் வெளி மூச்சை ஒருமுகப்படுத்துவது, தியானம் என்பது மனதை ஒருமுகப்படுத்தி அமைதி உண்டாக்குவது. இந்த 5 ஆயிரம் ஆண்டு தொன்மையான யோகசனத்தின் உண்மையான அர்த்தம் உடல், மனம் இவற்றை ஒன்றிணைத்து பிரபஞ்ச சக்தியின் ஆற்றலை பெறுவது என்பதாகும். இவ்வாறு பெறப்படும் பிரபஞ்ச சக்தி என்பது நம் உடம்பில் இருக்கும் உயிர் சக்தியுடன் சேரும்போது, அபரிமிதமான நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். யோகா என்பது நாம் எப்படி ஆரோக்கியமாகவும், எப்போதும் சுறுசுறுப்பாகவும், எல்லாவற்றையும் சரியான நேரத்தில் சரியான முறையில் செய்து வெற்றிபெற வேண்டும் என்பதை கூறும் ஒரு அறிவியல் ஆகும். இவற்றை பயிற்சி செய்யும்போது வயிறு காலியாக இருக்க வேண்டும். யோகாசனம் தெரிந்தவரிடமோ அல்லது யோகா பயிற்றுனரிடமோ அல்லது இவர்களது ஆலோசனைகளை கேட்டுத்தான் பயிற்சியை செய்ய வேண்டும். இப்போது வீட்டில் அதிக நேரம் இருப்பதால் காலை, மாலை என இருவேளையும் பயிற்சி செய்ய வேண்டும். முடியாத பட்சத்தில் கலை பொழுதாவது கண்டிப்பாக செய்ய வேண்டும்.
பிரதமர் கூறிய இவ்வளவு சிறப்பு வாய்ந்த யோகாசனத்தில் எல்லோராலும் சுலபமாக செய்யக்கூடிய சிலவற்றை இங்கு பார்க்கலாம்.
அர்த்த சக்ராசனம்:
இதற்கு இன்னொரு பெயர் பிரையாசனம் என்பது. ஒரு சக்கரத்தின் பாதி மற்றும் சந்திர வடிவத்தின் பாதி நிலை எப்படி இருக்குமோ அதை குறிப்பது.
செய்முறை:-
ஒரு விரிப்பின் மீது கால் பாதங்களை ஒன்று சேர்த்து வைத்து கைகள் இரண்டும் வணக்கம் செய்வது போல நிற்க வேண்டும். பின்பு மூச்சை நன்றாக உள்ளிழுத்து கைகள் இரண்டையும் உயரே தூக்கி, முதுகோடு சேர்த்து முடிந்த அளவு பின்னோக்கி வளைக்க வேண்டும். எந்த காரணத்தை கொண்டும் சிரமப்பட்டு செய்யக்கூடாது. மூச்சை அடக்கக் கூடாது.
அதே நேரம் கால் முட்டிகளை வளைக்க கூடாது. அப்படியே 10 எண்ணிக்கையில் இருக்க வேண்டும். சாதாரணமாக மூச்சுவிட வேண்டும். கண்கள் திறந்திருக்க வேண்டும். பின்பு மெதுவாக கைகளை உயர்த்தி பழைய நிலைக்கு வரவேண்டும். எந்த ஆசனமும் முதலில் செய்யும்போது சற்று கடினமாகவும், சிரமமாகவும்தான் இருக்கும். விடாமல் பயிற்சி செய்யும்போது சரியாக செய்ய முடியும்.
பலன்கள்:-
மூச்சை நன்றாக உள்ளிழுப்பதால் நுரையீரல் நன்கு விரிவடைந்து அதிகமான அதிகமான ஆக்ஸிஜன் உள் செல்லும். இதனால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாவதால் சளி, சைனஸ், ஆஸ்துமா முதற்கொண்டு சுவாச சம்பந்தமான அனைத்து பிரச்சினைகளும் தீரும்.
பாத ஹஸ்தாசனம்
பாதம் என்றால் கால்கள், ஹஸ்தம் என்றால் கைகள் என்று பொருள்
அர்த்த சக்ராசனத்துக்கு மாற்று ஆசனம் ஆகும். எந்த ஆசனம் செய்தாலும் அதற்கு மாற்று ஆசனம் செய்ய வேண்டும் என்பது விதி.
செய்முறை:-
ஒரு விரிப்பின் மீது நேராக நிமிர்ந்து நின்று நன்றாக மூச்சை உள்ளிழுத்துக் கொண்டே கைகளை மேலே உயர்த்தவும். பின்பு மூச்சை மெல்ல வெளியிட்டவாறே குனிந்து பாதத்தை தொட வேண்டும். அப்போது வயிறை சற்றே உள்ளிழுக்க வேண்டும். மூட்டு மடங்கக் கூடாது. தலை கால் மூட்டுகளை தொட வேண்டும். முதலில் இது சற்று சிரமம். தொடவில்லையானாலும் பரவாயில்லை. எவ்வளவு முடியுமோ, அந்த அளவுக்கு தொட முயற்சி செய்தால் போதும். கஷ்டப்பட்டு செய்யக்கூடாது. பின்பு கைகள் மற்றும் தலையை மேலே உயர்த்தி பழைய நிலைக்கு வரவேண்டும்.
பலன்கள்:-
நன்றாக உள்ளிழுத்த மூச்சை குனிந்து வெளிவிடும்போது நுரையீரலில் இருந்து மூக்கு வரை உள்ள சுவாச மண்டலம் சுத்தமாகும். அனைத்து மாசுகளும் வெளிவரும். அதிகமான கார்பன்-டை-ஆக்ஸைடு வெளியேறும். அதே சமயத்தில் தலைப்பகுதிக்கு அதிகமான ரத்த ஓட்டம் கிடைக்கும்.
அர்த்தகடி சக்ராசனம்
இரண்டு கால்களையும் சற்று அகல வைத்து மூச்சை மெதுவாக உள்ளிழுத்து வலது பக்கமாக சாய்ந்து வலது கையை முழங்கால் தொடும்படி வைத்துக் கொண்டே உள்ளிழுத்த மூச்சை மெதுவாக வெளியிட வேண்டும். இடது கை தலையின் காதை ஒட்டி இருக்க வேண்டும். 10 எண்ணிக்கை இவ்வாறு இருந்தவுடன் வலது கையை மேலே உயர்த்தி பழைய நிலைக்கு வரவேண்டும். பின்பு இதேபோல இடது பக்கம் செய்ய வேண்டும்.
பலன்கள்:-
பாதங்கள், மூட்டுகள், கைகள், இடுப்பு மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகள் நன்றாக இயக்கம் பெறும். வலது மற்றும் இடது புறம் சாயும்போது நுரையீரல் நன்கு விரிவடைவதால் அதிகமான ஆக்ஸிஜன் கிடைக்கும். அதிகமான சக்தி கிடைக்கும்.
சவாசனம் என்னும் சாந்தி ஆசனம்
எப்போது யோகாசனம் செய்தாலும் உடனே கண்டிப்பாக சவாசனம் செய்துதான் முடிக்க வேண்டும்.
செய்முறை:-
விரிப்பின்மீது மல்லாந்து படுக்க வேண்டும். இரு உள்ளங்கைகள் திறந்த நிலையில், இருபக்கமாக நீட்டி வைக்கவும். கால்களை சற்றை அகல விரித்து வைக்கவும். உள்ளங்கைகள் மேல் நோக்கி இருக்க வேண்டும். இயல்பாக மூக்கு வழியாக சுவாசிக்க வேண்டும். உடல், மனம் ஆகியவற்றின் நினைவின்றி உறக்க நிலையில் இருக்க வேண்டும். அப்போது அலாதியான சாந்த நிலையில், உடல் மற்றும் மனம் தளர்ந்த நிலையில் இருக்கும். 10 நிமிடம் இப்படி இருந்தால், பூரண அமைதி கிட்டும்.
டாக்டர் த.இங்கர்சா யோகாசன நிபுணர்
தினமும் யோகாசனப் பயிற்சியும், மூச்சுப் பயிற்சியும் அதனுடன் இணைந்து தியானப் பயிற்சியையும் ஒருசேர செய்யும்போது, இயற்கையான முறையில் நம் உடம்பில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
தினமும் யோகாசனப் பயிற்சியும், மூச்சுப் பயிற்சியும் அதனுடன் இணைந்து தியானப் பயிற்சியையும் ஒருசேர செய்யும்போது, இயற்கையான முறையில் நம் உடம்பில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். அதன் காரணாமாக கொரோனா மட்டும் அல்ல, வேறு எந்த ஒரு நோயும் வராது. இந்த பயிற்சிகளை தொடர்ந்து செய்யும்போது இருக்கின்ற நோயும் கட்டுப்படும் அல்லது வெகு சீக்கிரத்தில் குணமாகும்.
ஆழ்நிலை மூச்சுப் பயிற்சி
நம்மை அறியாமல் இயல்பாக சுவாசிக்கும்போது குறைந்த அளவே ஆக்ஸிஜன் நம் நுரையீரலுக்கு செல்லும். அதுவே ஒரு முறையான சுவாசப் பயிற்சி மூலம் செய்யும்போது அதிகமான சக்தி நம் நுரையீரலுக்கு செல்லும். அதனால் இந்த பயிற்சி முக்கியமானது.
செய்முறை:-
சுகாசனத்திலோ அல்லது முடிந்தவர்கள் பத்மாசனத்திலோ நேராக நிமிர்ந்து அமர வேண்டும். மூட்டு வலி இருப்பவர்கள் நாற்காலியில் அமரலாம். முதுகு தண்டு நேராக இருக்க வேண்டும்.
முதலில் மூக்கு வழியாக மூச்சை உள்ளிழுத்து வயிறு முழுவதும் நிரப்ப வேண்டும். மார்பு பகுதியை தாண்டி வயிறு சற்று முன்னோக்கி வர வேண்டும். பின்பு மெதுவாக இழுத்த மூச்சை வெளியிட வேண்டும். அப்போது வயிறு பழைய நிலைக்கு வரவேண்டும். கண்கள் மூடி இருக்க வேண்டும். ஒரு முறை உள்ளிழுத்து வெளியிடுவது ஒரு சுற்று ஆகும். இதுபோல தினமும் 10 எண்ணிக்கை செய்யலாம். எவ்வளவு மெதுவாக செய்கிறோமோ அந்த அளவு மனம் ஒரு நிலைப்படும். அந்த அளவு சக்தி உடம்பு முழுவதும் பரவும். செய்யும்போதே நீங்கள் இதை உணர முடியும். வேகமாகவோ அல்லது அழுத்தம் கொடுத்தோ அல்லது அவசரமாகவோ செய்யக்கூடாது. நிதானமாக மனம் ஒன்றிணைந்து செய்ய வேண்டும்.
மூச்சை உள்ளிழுக்கும்போது அதிகமான பிராண சக்தி உடம்புக்குள்போவது போலவும், வெளிவிடும்போது உள்ளிருக்கும் அனைத்து கெட்டதும் வெளியேறுவது போலவும் நினைக்க வேண்டும்.
தியானம்
மேற்கண்ட மூச்சுப்பயிற்சி செய்து முடித்தவுடன், அதே நிலையில் கண்கள் மூடியபடி இருக்க இரண்டு கைகளும் இரு தொடையின் மீது சின் முத்திரையில் (கட்டை விரல் நுனி இரண்டாவது விரலாகிய சுண்டு விரல் நுனியை லேசாக தொட்டுக் கொண்டிருக்க வேண்டும்) இருக்க வேண்டும். மனதை அமைதியாக்கி எதையும் சிந்திக்காமல் மூச்சை மட்டுமே கவனிக்க வேண்டும். சுமார் 20 நிமிடம் இந்த தியான நிலையில் இருந்து பின் மெதுவாக கண்களை திறந்து இயல்பு நிலைக்கு வரவேண்டும்.
இதேபோல யோகாசனம், மூச்சுப் பயிற்சி, தியானம் ஆகிய மூன்றையும் ஒன்றிணைந்து செய்யும்போது கொரோனா மட்டுமல்ல, எந்த நோய்களும் வராது.
டாக்டர் த.இங்கர்சா யோகாசன நிபுணர்
ஆழ்நிலை மூச்சுப் பயிற்சி
நம்மை அறியாமல் இயல்பாக சுவாசிக்கும்போது குறைந்த அளவே ஆக்ஸிஜன் நம் நுரையீரலுக்கு செல்லும். அதுவே ஒரு முறையான சுவாசப் பயிற்சி மூலம் செய்யும்போது அதிகமான சக்தி நம் நுரையீரலுக்கு செல்லும். அதனால் இந்த பயிற்சி முக்கியமானது.
செய்முறை:-
சுகாசனத்திலோ அல்லது முடிந்தவர்கள் பத்மாசனத்திலோ நேராக நிமிர்ந்து அமர வேண்டும். மூட்டு வலி இருப்பவர்கள் நாற்காலியில் அமரலாம். முதுகு தண்டு நேராக இருக்க வேண்டும்.
முதலில் மூக்கு வழியாக மூச்சை உள்ளிழுத்து வயிறு முழுவதும் நிரப்ப வேண்டும். மார்பு பகுதியை தாண்டி வயிறு சற்று முன்னோக்கி வர வேண்டும். பின்பு மெதுவாக இழுத்த மூச்சை வெளியிட வேண்டும். அப்போது வயிறு பழைய நிலைக்கு வரவேண்டும். கண்கள் மூடி இருக்க வேண்டும். ஒரு முறை உள்ளிழுத்து வெளியிடுவது ஒரு சுற்று ஆகும். இதுபோல தினமும் 10 எண்ணிக்கை செய்யலாம். எவ்வளவு மெதுவாக செய்கிறோமோ அந்த அளவு மனம் ஒரு நிலைப்படும். அந்த அளவு சக்தி உடம்பு முழுவதும் பரவும். செய்யும்போதே நீங்கள் இதை உணர முடியும். வேகமாகவோ அல்லது அழுத்தம் கொடுத்தோ அல்லது அவசரமாகவோ செய்யக்கூடாது. நிதானமாக மனம் ஒன்றிணைந்து செய்ய வேண்டும்.
மூச்சை உள்ளிழுக்கும்போது அதிகமான பிராண சக்தி உடம்புக்குள்போவது போலவும், வெளிவிடும்போது உள்ளிருக்கும் அனைத்து கெட்டதும் வெளியேறுவது போலவும் நினைக்க வேண்டும்.
தியானம்
மேற்கண்ட மூச்சுப்பயிற்சி செய்து முடித்தவுடன், அதே நிலையில் கண்கள் மூடியபடி இருக்க இரண்டு கைகளும் இரு தொடையின் மீது சின் முத்திரையில் (கட்டை விரல் நுனி இரண்டாவது விரலாகிய சுண்டு விரல் நுனியை லேசாக தொட்டுக் கொண்டிருக்க வேண்டும்) இருக்க வேண்டும். மனதை அமைதியாக்கி எதையும் சிந்திக்காமல் மூச்சை மட்டுமே கவனிக்க வேண்டும். சுமார் 20 நிமிடம் இந்த தியான நிலையில் இருந்து பின் மெதுவாக கண்களை திறந்து இயல்பு நிலைக்கு வரவேண்டும்.
இதேபோல யோகாசனம், மூச்சுப் பயிற்சி, தியானம் ஆகிய மூன்றையும் ஒன்றிணைந்து செய்யும்போது கொரோனா மட்டுமல்ல, எந்த நோய்களும் வராது.
டாக்டர் த.இங்கர்சா யோகாசன நிபுணர்
தனூராசனம் செய்யும் போது வயிற்று தசைகளுக்கு போதிய அழுத்தம் கிடைப்பதால் வயிற்று உள் உறுப்புகள் பலன் பெறுகின்றது. அஜீரணம், உணவு செரியாமை, மலச்சிக்கலால் நீண்ட காலம் அவதிப்பட்டவர்களுக்கு முழு நிவாரணம் கிடைக்கின்றது.
செய்முறை:
விரிப்பில் கிழக்கு நோக்கி குப்புறப் படுத்துக்கொள்ளவும் . இருகால் பாதங்களை முதுகை நோக்கி கொண்டு வந்து கைகளை பின்னால் கொண்டு வந்து, கைகளால் காலின் கணுக்கால் பகுதியை இறுக்கமாக பற்றி பிடிக்கவும். தலை, மார்பு, கால்கள் ஒரு சேர உயர்த்தி மூச்சை உள் இழுத்து தூக்கவும். அடிவயிறு மட்டும் விரிப்பின் மீது இருக்க வேண்டும் . மூச்சை அடக்கி 15 விநாடிகள் இருக்கவும். பின் கைகளை பிரித்து கால்களை நீட்டவும். சிறிது நேரம் ஓய்வெடுத்து மீண்டும் செய்யவும். மூன்று முறைகள் தினமும் செய்யவும்.
முக்கிய குறிப்பு
கல்லீரல் வீக்கம், வயிற்று புண் உள்ளவர்கள் இவ்வாசனத்தை செய்யக்கூடாது. பெண்கள் கருவுற்ற சமயம் செய்யக்கூடாது. இதய பலவீனம், இதய அறுவை சிகிச்சை செய்தவர்கள் செய்யக்கூடாது.
பொதுவான பலன்கள்:
வயிற்று தசைகளுக்கு போதிய அழுத்தம் கிடைப்பதால் வயிற்று உள் உறுப்புகள் பலன் பெறுகின்றது. அஜீரணம், உணவு செரியாமை, மலச்சிக்கலால் நீண்ட காலம் அவதிப்பட்டவர்களுக்கு முழு நிவாரணம் கிடைக்கின்றது. உடல் எடை, தொப்பைக் குறையும். வயிற்றுப் பொருமல், உப்புசம், வாயுக் கோளாறுகள் குணமடையும்.
முதுகுத்தண்டு பலப்படும்.
நுரையீரல் பலப்படும். ஆஸ்துமா நோயைக் குணப்படுத்தும். நீரிழிவு நோயை குணப்படுத்தும். கணையம் ஒழுங்காக இன்சுலினை சுரக்கச் செய்யும். கூன்முதுகை நிமிர்த்துகின்றது. இரத்த ஒட்டம் சிறப்பாக செயல்படும். பெண்களுக்கு குழந்தை பிறந்த பின் ஏற்படும் பெருத்த வயிற்றை குறைக்கும். ழூமாதவிடாய் சம்பந்தமான பிரச்சினைகள் தீரும்.
நாம் முதலில் இந்த ஆசனத்தைப் பயில வேண்டும். பின்பு நம் குழந்தைகளுக்கும் இதனை இளம் வயதில் பயிற்றுவிக்க வேண்டும். நாம் (தாய், தந்தை) பயிலாமல் குழந்தையை மட்டும் யோகாசனம் பயிலுங்கள் என்று கூறுவது தவறு. முதலில் நம் குழந்தைகளுக்கு நாம் எடுத்துகாட்டாக இருக்க வேண்டும்.
விரிப்பில் கிழக்கு நோக்கி குப்புறப் படுத்துக்கொள்ளவும் . இருகால் பாதங்களை முதுகை நோக்கி கொண்டு வந்து கைகளை பின்னால் கொண்டு வந்து, கைகளால் காலின் கணுக்கால் பகுதியை இறுக்கமாக பற்றி பிடிக்கவும். தலை, மார்பு, கால்கள் ஒரு சேர உயர்த்தி மூச்சை உள் இழுத்து தூக்கவும். அடிவயிறு மட்டும் விரிப்பின் மீது இருக்க வேண்டும் . மூச்சை அடக்கி 15 விநாடிகள் இருக்கவும். பின் கைகளை பிரித்து கால்களை நீட்டவும். சிறிது நேரம் ஓய்வெடுத்து மீண்டும் செய்யவும். மூன்று முறைகள் தினமும் செய்யவும்.
முக்கிய குறிப்பு
கல்லீரல் வீக்கம், வயிற்று புண் உள்ளவர்கள் இவ்வாசனத்தை செய்யக்கூடாது. பெண்கள் கருவுற்ற சமயம் செய்யக்கூடாது. இதய பலவீனம், இதய அறுவை சிகிச்சை செய்தவர்கள் செய்யக்கூடாது.
பொதுவான பலன்கள்:
வயிற்று தசைகளுக்கு போதிய அழுத்தம் கிடைப்பதால் வயிற்று உள் உறுப்புகள் பலன் பெறுகின்றது. அஜீரணம், உணவு செரியாமை, மலச்சிக்கலால் நீண்ட காலம் அவதிப்பட்டவர்களுக்கு முழு நிவாரணம் கிடைக்கின்றது. உடல் எடை, தொப்பைக் குறையும். வயிற்றுப் பொருமல், உப்புசம், வாயுக் கோளாறுகள் குணமடையும்.
முதுகுத்தண்டு பலப்படும்.
நுரையீரல் பலப்படும். ஆஸ்துமா நோயைக் குணப்படுத்தும். நீரிழிவு நோயை குணப்படுத்தும். கணையம் ஒழுங்காக இன்சுலினை சுரக்கச் செய்யும். கூன்முதுகை நிமிர்த்துகின்றது. இரத்த ஒட்டம் சிறப்பாக செயல்படும். பெண்களுக்கு குழந்தை பிறந்த பின் ஏற்படும் பெருத்த வயிற்றை குறைக்கும். ழூமாதவிடாய் சம்பந்தமான பிரச்சினைகள் தீரும்.
மாணவர்களுக்கு ஞாபக சக்தி அதிகமாகும். சோம்பல் நீங்கும். அடிக்கடி கோபப்படும் குணத்தை மாற்றிவிடும். ஒரு ஆசனத்தில் எவ்வளவு பலன்கள் பார்த்தீர்களா? தனூர் என்றால் வில். உடலை வில்போல் வளைத்தல். சிறுகுடல், பெருங் குடல், கணையம், அட்ரீனல், கோணாடு, சுரப்பிகள் மிகச்சிறப்பாக இயங்கச் செய்யும்.
வேகமாகவும், சுறுசுறுப்பாகவும் உடற்பயிற்சி செய்தால் தசைகளை விரைவில் விரிவுபடுத்த முடியும் என்ற எண்ணம் பலருக்கும் உள்ளது. அதை பற்றி விளக்கமாக பார்க்கலாம்.
தசைகள் விரிவுபடுத்த செய்யும் உடற்பயிற்சிகளை வேகமாகவும், சுறுசுறுப்பாகவும் செய்தால் தசைகளுக்கு வலிவும், வளைந்து கொடுக்கும் தன்மையும் கிடைக்கும் என்று நினைத்து பலரும் அதை பின்பற்றுகின்றனர். ஆனால் இது தவறானது.
இம்மாதிரியான பயிற்சிகளை மிகவும் மெதுவாக செய்யவேண்டும். உதாரணமாக குனிந்து நிமிர்வது, இடுப்பு தசைகளை முறுக்கும் (Twisting) பயிற்சிகள், மற்றும் குனிந்து விரல்களால் பாதங்களை தொடுவது முதலான பயிற்சிகளை வேகமாகச் செய்யும்போது தசைகளில் இறுக்கம் ஏற்பட்டு வலியும், தசை நார்கிழிதல் முதலான மோசமான விளைவுகள் ஏற்படும்.
ஆகவே தசைகளை தளர்வாக வைத்துக் கொண்டு மெதுவாக ஆனால் திரும்ப, திரும்ப செய்யும்போது தசைகளுக்கு வலிவும், பொலிவும் வளைந்து கொடுக்கும் தன்மையும் கிடைக்கும்.
வேகமாக செய்ய வேண்டிய பயிற்சிகளை வேகமாகவும், நிதானமாக செய்ய வேண்டிய பயிற்சிகளை மெதுவாகவும் செய்யவேண்டும். எந்த பயிற்சியாக இருந்தாலும் பயிற்சியாளரில் அனுமதி பெற்ற பின்னரே செய்ய வேண்டும். ஏனெனில் உங்களின் உடல்நிலைக்கு ஏற்றபடியான பயிற்சிகள் எது என்று பயிற்சியாளரால் மட்டுமே புரிந்து கொள்ள முடியும்.
இம்மாதிரியான பயிற்சிகளை மிகவும் மெதுவாக செய்யவேண்டும். உதாரணமாக குனிந்து நிமிர்வது, இடுப்பு தசைகளை முறுக்கும் (Twisting) பயிற்சிகள், மற்றும் குனிந்து விரல்களால் பாதங்களை தொடுவது முதலான பயிற்சிகளை வேகமாகச் செய்யும்போது தசைகளில் இறுக்கம் ஏற்பட்டு வலியும், தசை நார்கிழிதல் முதலான மோசமான விளைவுகள் ஏற்படும்.
ஆகவே தசைகளை தளர்வாக வைத்துக் கொண்டு மெதுவாக ஆனால் திரும்ப, திரும்ப செய்யும்போது தசைகளுக்கு வலிவும், பொலிவும் வளைந்து கொடுக்கும் தன்மையும் கிடைக்கும்.
வேகமாக செய்ய வேண்டிய பயிற்சிகளை வேகமாகவும், நிதானமாக செய்ய வேண்டிய பயிற்சிகளை மெதுவாகவும் செய்யவேண்டும். எந்த பயிற்சியாக இருந்தாலும் பயிற்சியாளரில் அனுமதி பெற்ற பின்னரே செய்ய வேண்டும். ஏனெனில் உங்களின் உடல்நிலைக்கு ஏற்றபடியான பயிற்சிகள் எது என்று பயிற்சியாளரால் மட்டுமே புரிந்து கொள்ள முடியும்.






