என் மலர்tooltip icon

    ஸ்லோகங்கள்

    கர்ப்பத்திலுள்ள சிசு பாதுகாக்கப்பட்டு, சுகப்பிரசவம் ஏற்பட பகமாலினிக்கு உகந்த இந்த மந்திரத்தை தினமும் கர்ப்பிணிகள் சொல்லி வந்தால் வருவது நல்லது.
    இந்த நித்யா தேவியின் மந்திரத்திலும், இவளின் பரிவார தேவதைகளின் மந்திரங்களிலும் ‘பக’ எனும் சப்தம் அடிக்கடி விடுவதால், இவள் பகமாலினி என்று அழைக்கப்படுகிறாள். ‘பகம்’ என்ற சொல்லுக்கு பரிபூரணமான ஐஸ்வரியம், தர்மம், தேஜஸ், ஞானம், வைராக்கியம், வீரியம், முக்தி என்றெல்லாம் பொரு ளுண்டு. முக்கண்களுடனும் இடது கரங்களில் அல்லி மலர், பாசக்கயிறு, கரும்பு வில் ஏந்தியும், வலது கரங்களில் தாமரை, அங்குசம், புஷ்ப பாணங்களை தரித்தும் தோற்றம் தரு கிறாள்.

    மந்திரம்:

    ஓம் பகமாலின்யை வித்மஹே
    ஸர்வ வஸங்கர்யை தீமஹி
    தன்னோ நித்யா ப்ரசோதயாத்

    வழிபட வேண்டிய திதிகள்: சுக்ல பட்ச துவிதியை, கிருஷ்ண பட்ச சதுர்த்தசி.

    பலன்கள்: வாழ்வில் வெற்றிகளைக் குவிக்கலாம். கர்ப்பத்திலுள்ள சிசு பாதுகாக்கப்பட்டு, சுகப்பிரசவம் ஏற்படும்.
    ஒவ்வொரு திதியையும் பரிபாலனம் செய்யும் மூல தேவிகளை நாம் மறவாமல் வழிபட்டால், வறுமை நீங்கும். அனைத்து துன்பங்களும் விலகும்.
    ‘காம’ என்றால், ‘விரும்பிய ரூபத்தை எடுக்கக் கூடியவள்’ என்று பொருள். இவள் கோடி சூரிய பிரகாசமானவள். மாணிக்க மகுடம் தரித்து, பொன்னாலான மரகத மாலை, ஒட்டியாணம் போன்ற அணி கலன்களை அணிந்திருப்பாள். முக்கண், ஆறு திருக்கரங்கள் கொண்டவள். தன் திருக்கரங்களில் கரும்பு வில், மலரம்புகள், பாசக்கயிறு, அங்குசம், அமிர்த பாத்திரம் மற்றும் வரத முத்திரையுடன் பிறை சூடிய திருமுடியைக் கொண்டவள்.

    மந்திரம்:

    ஓம் காமேஸ்வர்யை வித்மஹே
    நித்யக்லின்னாயை தீமஹி
    தன்னோ நித்யா ப்ரசோதயாத்

    வழிபட வேண்டிய திதிகள்: சுக்ல பட்ச பிரதமை, அமாவாசை.

    பலன்கள்: குடும்பத்தில் ஆனந்தம், தனவரவு, மன நிறைவான தாம்பத்திய வாழ்க்கை அமையும்.
    பலன் தரும் இந்த ஸ்ரீ சுதர்சன அஷ்டோத்தரத்தை தினமும் சொல்லி சக்கரத்தாழ்வாரை வழிபாடு செய்து வந்தால் நம் பாவங்கள் எல்லாம் பறந்தோடும்.
    பானபத்திரம், முஸலம், மழு, கதை, வஸ்ராயுதம், அக்னி, குந்தம், கேடயம், ஹலம் போன்ற இன்னும் பற்பலவிதமான சிறந்த ஆயுதங்களை ஏந்தியவரும் ஆன அந்த சக்கரத்தாழ்வார் வாக்கு, மனம், புத்தி, அகங்காரம் ஞானம், அக்ஞானம் இவற்றால் ஜன்ம ஜன்மாந்திரங்களில் செய்த அநேக பாவங்களைப் போக்கி எங்கும் எப்போதும் பாதுகாக்க வேண்டுகிறேன்.

    ஓம் உதய சூரியனுக்கு சமமானவரே  போற்றி
    ஓம் உதாரமான புஜபலம் உள்ளவரே  போற்றி
    ஓம் கோடி மன்மதனைப் போன்றவரே போற்றி
    ஓம் ஸ்ரீவிஷ்ணுவின் இதய ஆனந்தமே போற்றி
    ஓம் பக்தர்களின் கற்பத விருட்சமே போற்றி
    ஓம் அபய வரத ஹஸ்தம் உள்ளவரே போற்றி
    ஓம் சக்கரத்தாழ்வாரே போற்றி
    ஓம் அண்ட சராசரத்தை தாண்டுபவரே போற்றி
    ஓம் தசரதச் சக்கரவர்த்தியின் திருக்குமாரரே போற்றி
    ஓம் துக்க நெருப்பைத் தகிப்பவரே போற்றி

    ஓம் சுசிபாலனை வதைத்தவரே போற்றி
    ஓம் கைகேயியின் திருக்குமாரரே போற்றி
    ஓம் பாலசூரியனைப் போன்றவரே போற்றி
    ஓம் மிகச் சிறந்த நீதிமானே போற்றி
    ஓம் தேவர்களைக் காப்பவரே போற்றி
    ஓம் தேவ எதிரிகளை வதைப்பவரே போற்றி
    ஓம் மூம்மூர்த்திகளின் முதல்வரே போற்றி
    ஓம் மிகப்பெரும் கீர்த்தி உள்ளவரே போற்றி
    ஓம் திக்குகளைப் பிரகாசிக்க வைப்பவரே போற்றி
    ஓம் சுக்ரீவன் போன்ற வானரர்களுக்கு பிரியரே போற்றி

    ஓம் தத்துவ ஞான ஆசை கொண்டவரே போற்றி
    ஓம் உதய சூரியனைப் போன்ற விழியுடையவரே போற்றி
    ஓம் பட்டுப் பீதாம்பரம்அணிந்தவரே போற்றி
    ஓம் மஹா விஷ்ணுவிற்குப் பிரியமானவரே போற்றி
    ஓம் கோடி சூர்யப் பிரகாசம் உடையரே போற்றி
    ஓம் மௌஞ்சி தரித்திருப்பவரே போற்றி
    ஓம் யக்ஞோப வீதம் தரித்திருப்பவரே போற்றி
    ஓம் பல ஆபரணம் பூண்டவரே போற்றி
    ஓம் தெய்வீகக் களையுள்ளவரே போற்றி
    ஓம் குண்டலங்களை அணிபவரே போற்றி

    ஓம் பக்தர்களின் கோரிக்கையை ஏற்பவரே போற்றி
    ஓம் விரும்பியதைத் தருபவரே போற்றி
    ஓம் முனிவர்களாலும் வணங்கப்படுபவரே போற்றி
    ஓம் வேத த்வனிகளால் மகிழ்ச்சியடைபவரே போற்றி
    ஓம் வைரம் பாய்ந்த அங்கமுடையவரே போற்றி
    ஓம் பிங்கள வண்ண உரோமமுடையவரே போற்றி
    ஓம் ககன மார்க்கப் பிரயாணியே போற்றி
    ஓம் இரண்டு கைகளை யுடையவரே போற்றி
    ஓம் நான்கு கைகளைப் பெற்றவரே போற்றி
    ஓம் எட்டுக் கைகள் உடையவரே போற்றி

    ஓம் பதினெட்டுக் கைகள் உடையவரே போற்றி
    ஓம் தங்கக் குண்டலமணிந்தவரே போற்றி
    ஓம் அம்பரிஷனைக் காத்தவரே போற்றி
    ஓம் கூப்பிய கைகள் உடையவரே போற்றி
    ஓம் மஹாவிஷ்ணுமுன் நிற்பவரே போற்றி
    ஓம் ஆனந்தக் கண்ணீர் சொரிபவரே போற்றி
    ஓம் காதயுதம் தரித்தவரே போற்றி
    ஓம் சங்காயுதத்தைப் பெற்றவரே போற்றி
    ஓம் சக்கராயுதத்தை அடைந்தவரே போற்றி
    ஓம் வாள் ஆயுதம் உடையவரே போற்றி

    ஓம் எமனின் பாசாயுதம் கொண்டவரே போற்றி
    ஓம் பிரளய காலர்க்னி ஏந்தியவரே போற்றி
    ஓம் விரலாயுதத்தை உடையவரே போற்றி
    ஓம் வஜ்ராயுதம் தரித்தவரே போற்றி
    ஓம் சூலாயுதம் ஏந்தியவரே போற்றி
    ஓம் பராசக்தியின் திரிசூலம் ஏந்தியவரே போற்றி
    ஓம் குந்தாயுதத்தைப் தரித்தவரே போற்றி
    ஓம் முஸலத்தைக் கையில் பெற்றவரே போற்றி
    ஓம் பரசுவைக் கையில் ஏந்தியவரே போற்றி
    ஓம் கேடயத்தைத் தரித்தவரே போற்றி

    ஓம் பிரகாசிக்கும் கேசத்தை உடையவரே போற்றி
    ஓம் முக்கண்களை உடையவரே போற்றி
    ஓம் உறுதி வாய்ந்த தோள் வலிமையரே போற்றி
    ஓம் தண்டம் போன்ற கையரே போற்றி
    ஓம் ராட்சச சம்ஹாரியே போற்றி
    ஓம் விஷ்ணு பக்தரே போற்றி
    ஓம் ருத்ரப் பிரியரே போற்றி
    ஓம் பிங்கள வர்ணக் கண்கள் உடையவரே போற்றி
    ஓம் மஹா வீரரே போற்றி
    ஓம் அசுரர்களின் கொழுப்பகற்றுபவரே போற்றி

    ஓம் தேவர்களால் பூஜிக்கப்படுபவரே போற்றி
    ஓம் மஹா தேஜஸ்வீயே போற்றி
    ஓம் புஜங்களை ஆயுதமாக உடையவரே போற்றி
    ஓம் மஹா ப்ரபஞ்சரே போற்றி
    ஓம் சிவப்ரியரே போற்றி
    ஓம் மஹா பலரே போற்றி
    ஓம் சூரியனுக்கு இணையானவரே போற்றி
    ஓம் அளவில்லா ஆற்றல் உடையவரே போற்றி
    ஓம் மஹா சூரரே போற்றி
    ஓம் ஆத்ம ஸ்வரூபியே போற்றி

    ஓம் தர்மத்தை ஆராதனை செய்பவரே போற்றி
    ஓம் தர்மராஜரே போற்றி
    ஓம் சமத்துவமுடையவரே போற்றி
    ஓம் தண்டதரரே போற்றி
    ஓம் தபஸ்வியே போற்றி
    ஓம் ஜிதேந்த்ரியரே போற்றி
    ஓம் சர்வக்ஞரே போற்றி
    ஓம் புண்ணிய மித்திரரே போற்றி
    ஓம் பிரும்ம அம்சமுடையவரே போற்றி
    ஓம் மிக பயங்கர வாதியே போற்றி

    ஓம் சம்ஹா மூர்த்தியே போற்றி
    ஓம் நம்பினோர்க்கு உபகாரியே போற்றி
    ஓம் பாவிகளின் எமனே போற்றி
    ஓம் விசாலமான கண்கள் உள்ளவரே போற்றி
    ஓம் சுலபமாய் தரிசிக்க முடியாதவரே போற்றி
    ஓம் காலத்தை கண்காணிப்பவரே போற்றி
    ஓம் கோரமானவரே போற்றி
    ஓம் பயங்கரரே போற்றி
    ஓம் திருப்தியுற்றவரே போற்றி
    ஓம் ஸம்ஹாரியே போற்றி

    ஓம் குளிரச் செய்பவரே போற்றி
    ஓம் சந்தோஷத்தைத் தருபவரே போற்றி
    ஓம் அமைதி நிறைந்த ஞானியே போற்றி
    ஓம் வேண்டிய வரம் தரும் சுதர்ஸனரே  போற்றி  போற்றி.
    பரிக்கல் லட்சுமி நரசிம்மருக்கு உகந்த இந்த ஸ்லோகத்தை தினமும் சொல்லி வழிபாடு செய்து வந்தால் என்ன வேண்டுதல் வைத்தாலும் அதை லட்சுமி நரசிம்மர் நிறைவேற்றி வைப்பார்.
    ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்ஹ ஸ்வாமி நமஹ
    வருவாய் வருவாய் நரசிம்மா
    வந்தருள் புரிவாய் நரசிம்மா
    அனுதினம் வருவாய் நரசிம்மா
    அனுக்ரஹம் செய்வாய் நரசிம்மா
    மாதா பிதா குரு நீதானே
    மனக் கவலையை ஒழிப்பதும் நீதானே
    மன மகிழ்ச்சியைத் தருவதும் நீதானே
    சுப மங்கள மூர்த்தியும் நீதானே
    மனமெனும் வயலை உழவேண்டும்
    குரு உபதேச விதையை விதைக்க வேண்டும்
    அன்பெனும் நீரைப் பாய்ச்ச வேண்டும்
    ஆத்ம பயிரை நாம் வளர்க்க வேண்டும்
    கனவு பலித்தது நரசிம்மா எங்கள்
    மனமும் குளிர்ந்தது நரசிம்மா
    சரணம் அடைந்தோம் நரசிம்மா நாங்கள்
    சகலமும் மறந்தோம் நரசிம்மா
    லட்சுமி நரசிம்மருக்கு உகந்த இந்த 108 போற்றியை தினமும் சொல்லி வழிபாடு செய்து வந்தால் கடன் தொல்லை, எதிரிகள் பிரச்சனைகள் தீரும்.
    1. ஓம் திருக்கடிகைத் தேவாபோற்றி
    2. ஓம் திருமாமகள் கேள்வாபோற்றி
    3. ஓம் யோக நரசிங்காபோற்றி
    4. ஓம் ஆழியங்கையாபோற்றி
    5. ஓம் அக்காரக் கனியேபோற்றி
    6. ஓம் அனுமனுக்கு ஆழி அளித்தாய்போற்றி
    7. ஓம் எக்காலத்தும் எந்தாய்போற்றி
    8. ஓம் எழில் தோள் எம்மிராமாபோற்றி
    9. ஓம் சங்கரப்ரியனேபோற்றி
    10. ஓம் சார்ங்க விற்கையாபோற்றி
    11. ஓம் உலகமுண்ட வாயாபோற்றி
    12. ஓம் உவப்பில் கீர்த்தியம்மாபோற்றி
    13. ஓம் அடியவர்க்கருள்வாய்போற்றி
    14. ஓம் அனைத்துலக முடையாய்போற்றி
    15. ஓம் தாமரைக் கண்ணாபோற்றி
    16. ஓம் காமனைப் பயந்தாய்போற்றி
    17. ஓம் ஊழி முதல்வாபோற்றி
    18. ஓம் ஒளி மணிவண்ணனேபோற்றி
    19. ஓம் ராவணாந்தகனேபோற்றி
    20. ஓம் இலங்கை எரித்த பிரான்போற்றி
    21. ஓம் பெற்ற மாளியேபோற்றி
    22. ஓம் பேரில் மணாளாபோற்றி
    23. ஓம் செல்வ நாரணாபோற்றி
    24. ஓம் திருக்குறளாபோற்றி
    25. ஓம் இளங்குமாரபோற்றி
    26. ஓம் விளக்கொளியேபோற்றி
    27. ஓம் சிந்தனைக்கினியாய்போற்றி
    28. ஓம் வந்தெனை ஆண்டாய்போற்றி
    29. ஓம் எங்கள் பெருமான்போற்றி
    30. ஓம் இமையோர் தலைவாபோற்றி
    31. ஓம் சங்கு சக்கரத்தாய்போற்றி
    32. ஓம் மங்கை மன்னன் மனத்தாய்போற்றி
    33. ஓம் வேதியர் வாழ்வேபோற்றி
    34. ஓம் வேங்கடத்துறைவாபோற்றி
    35. ஓம் நந்தா விளக்கேபோற்றி
    36. ஓம் நால் தோளமுதேபோற்றி
    37. ஓம் ஆயர்தம் கொழுந்தேபோற்றி
    38. ஓம் ஆழ்வார்களுயிரேபோற்றி
    39. ஓம் நாமம் ஆயிரம் உடையாய்போற்றி
    40. ஓம் வாமதேவனுக்கு அருளினாய்போற்றி
    41. ஓம் மூவா முதல்வாபோற்றி
    42. ஓம் தேவாதி தேவாபோற்றி
    43. ஓம் எட்டெழுத்திறைவாபோற்றி
    44. ஓம் எழில்ஞானச் சுடரேபோற்றி
    45. ஓம் வரவரமுனி வாழ்வேபோற்றி
    46. ஓம் வட திருவரங்காபோற்றி
    47. ஓம் ஏனம்முன் ஆனாய்போற்றி
    48. ஓம் தானவன் ஆகம் கீண்டாய்போற்றி
    49. ஓம் கஞ்சனைக் கடிந்தாய்போற்றி
    50. ஓம் நஞ்சரவில் துயின்றாய்போற்றி
    51. ஓம் மாலேபோற்றி
    52. ஓம் மாயப் பெருமானேபோற்றி
    53. ஓம் ஆலிலைத் துயின்றாய்போற்றி
    54. ஓம் அருள்மாரி புகழேபோற்றி
    55. ஓம் விண் மீதிருப்பாய்போற்றி
    56. ஓம் மண்மீது உழல்வோய்போற்றி
    57. ஓம் மலைமேல் நிற்பாய்போற்றி
    58. ஓம் மாகடல் சேர்ப்பாய்போற்றி
    59. ஓம் முந்நீர் வண்ணாபோற்றி
    60. ஓம் முழுதும் கரந்துறைவாய்போற்றி
    61. ஓம் கொற்றப் புள்ளுடையாய்போற்றி
    62. ஓம் முற்ற இம் மண்ணளந்தாய்போற்றி
    63. ஓம் அனைத்துலக முடையாய்போற்றி
    64. ஓம் அரவிந்த லோசனபோற்றி
    65. ஓம் மந்திரப் பொருளேபோற்றி
    66. ஓம் இந்திரனுக்கருள்வாய்போற்றி
    67. ஓம் குரு பரம்பரை முதலேபோற்றி
    68. ஓம் விகனைசர் தொழும் தேவாபோற்றி
    69. ஓம் பின்னை மணாளாபோற்றி
    70. ஓம் என்னையாளுடையாய்போற்றி
    71. ஓம் நலம்தரும் சொல்லேபோற்றி
    72. ஓம் நாரண நம்பிபோற்றி
    73. ஓம் பிரகலாதப்ரியனேபோற்றி
    74. ஓம் பிறவிப் பிணியறுப்பாய்போற்றி
    75. ஓம் பேயார் கண்ட திருவேபோற்றி
    76. ஓம் ஏழு மாமுனிவர்க்கு அருளேபோற்றி
    77. ஓம் ஏமகூட விமானத்து இறைவாபோற்றி
    78. ஓம் ஆனையின் நெஞ்சிடர் தீர்த்தாய்போற்றி
    79. ஓம் கல்மாரி காத்தாய்போற்றி
    80. ஓம் கச்சி யூரகத்தாய்போற்றி
    81. ஓம் வில்லியறுத்த தேவாபோற்றி
    82. ஓம் வீடணனுக்கருளினாய்போற்றி
    83. ஓம் இனியாய்போற்றி
    84. ஓம் இனிய பெயரினாய்போற்றி
    85. ஓம் புனலரங்காபோற்றி
    86. ஓம் அனலுருவேபோற்றி
    87. ஓம் புண்ணியாபோற்றி
    88. ஓம் புராணாபோற்றி
    89. ஓம் கோவிந்தாபோற்றி
    90. ஓம் கோளரியேபோற்றி
    91. ஓம் சிந்தாமணிபோற்றி
    92. ஓம் சிரீதராபோற்றி
    93. ஓம் மருந்தேபோற்றி
    94. ஓம் மாமணி வண்ணாபோற்றி
    95. ஓம் பொன் மலையாய்போற்றி
    96. ஓம் பொன்வடிவேபோற்றி
    97. ஓம் பூந்துழாய் முடியாய்போற்றி
    98. ஓம் பாண்டவர்க் கன்பாபோற்றி
    99. ஓம் குடந்தைக் கிடந்தாய்போற்றி
    100. ஓம் தயரதன் வாழ்வேபோற்றி
    101. ஓம் மதிகோள் விடுத்தாய்போற்றி
    102. ஓம் மறையாய் விரிந்த விளக்கேபோற்றி
    103. ஓம் வள்ளலேபோற்றி
    104. ஓம் வரமருள்வாய்போற்றி
    105. ஓம் சுதாவல்லி நாதனேபோற்றி
    106. ஓம் சுந்தரத் தோளுடையாய்போற்றி
    107. ஓம் பத்தராவியேபோற்றி
    108. ஓம் பக்தோசிதனேபோற்றி
    சிங்கிரிகுடி ஸ்ரீ நரசிம்மருக்கு உகந்த இந்த போற்றியை தினமும் சொல்லி வழிபாடு செய்து வந்தால் வாழ்வின் உண்டாகும் துன்பங்கள் பறந்தோடும் என்று நம்பிக்கை.
    சிங்கிரிகுடி யமர்ந்த ஸ்ரீ நரசிம்மரே போற்றி
    லட்சுமியை மார்பேந்திய ஸ்ரீ நரசிம்மரே போற்றி
    பதினாறு கரமுடன் இரண்யனை வதைத்தவரே போற்றி
    பிரகலாதன் பக்திக்கு மெச்சி காட்சி தந்தவரே போற்றி
    கனகதாரா ஆண்டாளுடன் அருள் தரும் சிங்கமுகரே போற்றி
    மணவாள மாமுனிகள் போற்றிய மாவீரரே போற்றி
    சுக்கிரன் பார்வைபெற துதித்திட்ட சுதர்சனரே போற்றி
    வசிஷ்டர் வணங்கிய சிங்கமுகப் பெருமானே போற்றி
    கஷ்டம் கடன் கவலை தீர்ப்பவரே போற்றி
    சத்ருக்கள் சம்ஹார மூர்த்தியே நரசிம்மரே போற்றி
    யோக நரசிம்மா பாலநரசிம்மருடன்
    அருள்கின்ற அருளாரே போற்றி
    கருடாழ்வார் துதிக்கின்ற கருணாமூர்த்தியே போற்றி
    ஆஞ்சநேயர் வழிபட்ட அவதாரப் புருஷரே போற்றி
    வேதசொரூபமான சிவனார் போற்றிய சிம்ம ரூபியே போற்றி
    சொல்லரிய பலம் கொண்டசங்கு சக்கர தாரியே போற்றி
    தசாவதார புருஷனே தர்ம தயாளனே போற்றி
    தூணிலும் துரும்பிலும் காட்சி தரும் துளசிமார்பனே போற்றி
    நாமணக்க நாராயணா என்பவருக்கு நலமருள்பவரே போற்றி
    பூமணக்க புகழ்மணக்க அருள்கின்ற நரசிம்மரே போற்றி
    நோயற்ற வாழ்வும் குறைவற்ற செல்வமும் தருபவரே போற்றி
    மலர்மங்கை மார்பனே, மாயவனே, தூயவனே போற்றி
    மண்ணுயிரைக் காக்கவந்த மதுசூதனே மாதவனே போற்றி
    புன்னகையோடு பூவுலகாளும் பேரருளாளனே போற்றி
    தேவர்குலம்வாழ, அசுரர்குலம்வீழ, தேவர் பக்கம்
    நின்ற திருமாலே போற்றி
    சிங்கிரி கோவிலமர்ந்த ஸ்ரீ நரசிம்மரே போற்றி போற்றி
    சக்கரத்தாழ்வாரை வழிபடும்போது, கீழ்கண்ட ஸ்ரீ சுதர்சன கவசத்தை மனதுக்குள் சொல்லி, தியானித்தால் அவரது அருளை எளிதில் பெறலாம்...
    முழங்கால் வரையில் நீண்ட கைகளை உள்ள வரும் தாமரைத்தளம் போன்ற நீண்ட கண்களை உடைய வரும் எப்போதும் மலர்ந்திருக்கும் பரிசுத்தமான மலர்ச்சியைக் கொண்டவரும் சியாமள வண்ணரும்
    கத்தி, சுதை, சங்கு, வில், அம்பு ஆகியவற்றினைப் பெற்றிருப்பவரும்
    உதாரமான உருவத்தை உடையவரும்
    ஸ்ரீ மகாலட்சுமியுடன் கூடியவரும்
    ஆதிசேஷனைக் குடையாகப் பெற்றவருமான ஸ்ரீ மகாவிஷ்ணுவின் திருக்கரத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீசுதர்ஸனர் என்ற பெயரைக் கொண்ட ஸ்ரீ சக்கரத்தாழ்வாரை நான் வணங்கி வழிபாடு செய்கின்றேன்.
    கேது பகவான் பிராண தேவதை பீஷண பைரவருக்கு உகந்த காயத்ரி மந்திரத்தை 9 முறை அல்லது ஒன்பதில் மடங்குகளில் பாராணயம் செய்து வந்தால் துன்பங்கள் அனைத்து விலகி ஓடும்.
    நவக்கிரகங்களில் மற்றொரு நிழல் கிரகமாக இருப்பவர் கேது பகவான். இவரது பிராண தேவதை பீஷண பைரவர்.

    ‘ஓம் சூலஹஸ்தாய வித்மஹே
    ஸர்வானுக்ராய தீமஹி
    தந்நோஹ்: பீஷணபைரவ ப்ரசோதயாத்’

    என்ற காயத்ரி மந்திரத்தை 9 முறை அல்லது ஒன்பதில் மடங்குகளில் பாராணயம் செய்து வந்தால் துன்பங்கள் அனைத்து விலகி ஓடும். யோகங்கள் வந்து சேரும். 
    சுகப்பிரசவம் ஆக வேண்டும் என்று விரும்பும் பெண்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஸ்ரீ கர்ப்பரட்சாம்பிகைக்கு உகந்த இந்த மந்திரத்தை தினமும் ஜெபிக்கவும்.
    ஹே சங்கர சமரஹா ப்ரமதாதி
    நாதரி மன்னாத ஸரம்ப சரிசூட
    ஹரதிரிசூலின் சம்போஸுகப்பிரசவ
    கிருத்பவமே தயாளோ
    ஹேமாதவி வனேச
    பாளையமாம் நமஸ்தே

    சுகப்பிரசவம் ஆக இதை 108 முறை ஜெபிக்க வேண்டும்.

    ஹிம்பத் யுத்தரே பார்ஸ்வே
    ஸுரதர நாம யாஷினி
    தஸ்யா ஸ்மரண மாத்ரேணா
    விசல்யா கர்ப்பினிபவேது
    ராகு பிராண தேவதை சம்ஹார பைரவருக்கு உகந்த காயத்ரி மந்திரத்தை தினமும் 9 முறை அல்லது ஒன்பதின் மடங்குகளில் உச்சரித்து வந்தால் மகிழ்ச்சியான வாழ்க்கை அமையும். இன்னல்கள் அகலும்.
    நவக்கிரகங்களில் நிழல் கிரகமாக விளங்குவது ராகு. இதன் பிராண தேவதை சம்ஹார பைரவர் ஆகும்.

    ‘ஓம் மங்களேஷாய வித்மஹே
    சண்டிகாப்ரியாய தீமஹி
    தந்நோஹ்: ஸம்ஹாரபைரவ ப்ரசோதயாத்’

    என்ற காயத்ரி மந்திரத்தை 9 முறை அல்லது ஒன்பதின் மடங்குகளில் உச்சரித்து வந்தால் மகிழ்ச்சியான வாழ்க்கை அமையும். இன்னல்கள் அகலும்.
    நரசிம்மருக்கு உகந்த இந்த துதியை தினமும் காலை, மாலை இரு நேரமும் சாமி கும்பிடும்போது படித்து வந்தால் நினைத்தது எல்லாம் கைகூடும்.
    நரசிம்மரே தாய், நரசிம்மரே தந்தை
    சகோதரனும் நரசிம்மரே தோழனும் நரசிம்மரே!
    அறிவும் நரசிம்மரே செல்வமும் நரசிம்மரே!
    எஜமானனும் நரசிம்மரே எல்லாமும் நரசிம்மரே!
    இவ்வுலகத்திலும் நரசிம்மரே! அவ்வுலகத்திலும் நரசிம்மரே!
    எங்கெங்கு செல்கிறாயோ அங்கெல்லாம் நரசிம்மரே!
    நரசிம்மரைக் காட்டிலும் உயர்ந்தவர் எவரும் இல்லை
    அதனால், நரசிம்மரே! உம்மைச் சரணடைகிறேன்.

    இந்த நரசிம்மர் துதியை தினமும் காலை, மாலை இரு நேரமும் சாமி கும்பிடும்போது படித்து வந்தால் நினைத்தது எல்லாம் கைகூடும். இந்த துதியை படிப்பதற்கு முன்பு நரசிம்மருக்கு பானம் நைவேத்தியம் படைத்து வழிபட்டுவிட்டு படித்தால் நரசிம்மர் மனம் குளிர்ந்து அருள்வார்.

    இந்த சுலோகத்தை சொல்லி லட்சுமி நரசிம்மரின் முன்விளக்கேற்ற வேண்டும். காய்ச்சி ஆறவைத்த பசும்பால் அல்லது பானகத்தை நைவேத்தியம் செய்ய வேண்டும். இந்த பிரசாதத்தை குடும்பத்தினர் அனைவரும் சாப்பிட்டு வர வேண்டும். கைமேல் பலனளிக்கும் சக்தி வாய்ந்த சுலோகம் இது. இதை முறையாக கடைப்பிடித்தால் 48 நாட்களுக்குள் எண்ணிய செயல் கைகூடும்.

    பின்னர் நரசிம்மர் கோவிலுக்கு சென்று, சுவாமிக்கு நெய் தீபம் ஏற்றி துளசி மாலை சாத்தி வழிபட வேண்டும். இதனால் கடன் சுமை குறையும். நோய் குணமாகும். திருமணத்தடை அகலும். குழந்தை பாக்கியம், வேலைவாய்ப்பு கிடைக்கும். வேலையில் இடைஞ்சல் அகலும்.

    சனி பகவானின் பிராண தேவதையாக விளங்குபவர் குரோதன பைரவரின் காயத்ரி மந்திரத்தை தினமும் ஒன்பதின் மடங்குகளில் உச்சரித்து வந்தால், இன்பமான வாழ்வமையும்.
    சனி பகவானின் பிராண தேவதையாக விளங்குபவர் குரோதன பைரவரின் காயத்ரி மந்திரத்தை தினமும் ஒன்பதின் மடங்குகளில் உச்சரித்து வந்தால், இன்பமான வாழ்வமையும். துன்பங்கள் விலகி ஓடும்.

    ‘ஓம் க்ருஷ்ண வர்ணாய வித்மஹே
    லட்சுமி தராய தீமஹி
    தந்நோஹ்: குரோதன பைரவ ப்ரசோதயாத்’

    என்ற காயத்ரி மந்திரத்தை ஒன்பதின் மடங்குகளில் உச்சரித்து வந்தால், இன்பமான வாழ்வமையும். துன்பங்கள் விலகி ஓடும்.
    ×