search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "chakrathazhwar"

    தினமும் சக்கரத்தாழ்வாரை வழிபடும் போது, கீழ்கண்டதை மனதுக்குள் சொல்லி, தியானித்து வழிபாடு செய்தால் அவரது அருளை எளிதில் பெறலாம்.
    சக்கரத்தாழ்வாரை வழிபடும்போது, கீழ்கண்டதை மனதுக்குள் சொல்லி, தியானித்தால் அவரது அருளை எளிதில் பெறலாம்...

    ஒளி வீசக்கூடிய உடல் அமைப்புக் கொண்டவரும், மின்னல் போன்ற கண்களைப் பறிக்கும் ஆடைகளை அணிந்தவரும், விசாலமான கண்களைப் பெற்றவரும், என்றென்றும் இளமையுடன் திகழ்பவரும், மிகவும் அழகானவரும், பாஞ்ச ஜன்யம், கௌமோதகி, சாரங்கம் என்ற ஆயுதங்களை நட்பாகக் கொண்டவரும்,

    ஆதிசேஷனுக்குப் பிரியமானவரும், சங்கு, சக்கரம், வாள், பாசம், அங்குசம் ஆகியவற்றை ஏற்றியவரும், தன்னை எரித்தவர்களை வதம் செய்பவரும், திருட்டுப் பயத்தையும், அரசாங்கத்தாரால் ஏற்படக் கூடிய ஆபத்துக்களையும், எதிரிகளால் ஏற்படக்கூடிய அபாயங்களையும் போக்குபவரும், ஸ்ரீ சுதர்ஸனர் என்ற பெயர் கொண்டவரும், கோபம் அடைந்தவரும், பிரளய காலாக்னி போன்ற ஜ்வலிக்கக்கூடிய பேரொளி பெற்றவரும், அழகிய பட்டுப் பீதாம்பரங்களைத் தரித்தவரும்,

    திருமண்ணால் நிரப்பப்பட்டு உடல் அமைப்பினைக் கொண்டவரும், நினைத்தவுடன் நினைத்த இடத்துக்குச் சஞ்சாரம் செய்யக்கூடிய ஆற்றல் பெற்றவரும்,

    அழகான திருக்கைகள் ஆறினைப் பெற்றவரும், தீட்சண்யமான தன் பார்வையின் ஒளியினால் முதலையாகி வந்த கந்தர்வனை சம்ஹரித்தவரும், மஹா வீரரும்,

    மந்திர கோஷங்களில் நிறைந்திருப்பவரும், ஸ்ரீ ராமாவதாரக் காலத்தில் பரதனாகத் திருவவதாரம் செய்தவரும், இராவணன் போன்றவருக்குப் பீதியை அளித்தவரும், ஸ்ரீ சக்கரத்தாழ்வார் என்ற நாம தேயத்துடன் பகவான் ஸ்ரீ ஹரிவிஷ்ணுவின் தாசானுதாசனாக மாறி நிற்பவருமான ஸ்ரீ சுதர்ஸனரே, உம்மைத் தியானிக்கிறேன்.

    மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகில் உள்ள குருவித்துறையில் சித்திரரத வல்லப்பெருமாள் கோவில் உள்ளது. இங்கு குருபகவான், சக்கரத்தாழ்வார் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கின்றனர். இங்கு பெருமாள் தாயார்களுடன் சந்தன மரச்சிலையால் ஆன மூர்த்தியாக காட்சி தருவது விசேஷமான அம்சம்.

    இத்தலத்தில் நவக்கிரகத்தில் வியாழன் கிரகம் யோக குருவாக அருள்பாலிக்கிறார். சித்திரை நட்சத்திரக்காரர்கள் தங்களுக்கு ஏற்படும் தோஷங்கள் நீங்க இத்தல இறைவனை வழிபாடு செய்கின்றனர்.

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி திருவதிகை ஸ்ரீரங்கநாதர் கோவிலில் உள்ள சக்கரத்தாழ்வாரை வழிபட்டால் நவக்கிரகங்களால் ஏற்படும் துன்பங்கள் எல்லாம் நீங்கும்.
    கடலூர் மாவட்டம் பண்ருட்டி திருவதிகை ஸ்ரீரங்கநாதர் கோவிலில் ஸ்ரீசக்கரத்தாழ்வார்க்கென்று தனி சந்நதி உள்ளது. திருமாலின் பஞ்ச ஆயுதங்களில் ஒன்றான ஸ்ரீசுதர்ன சக்கரத்தின் அம்சமான ஸ்ரீசக்கரத்தாழ்வார் 16 விதமான ஆயுதங்களை 16 கைகளில் தாங்கி வீறுகொண்டு எழும் தோற்றத்துடன் ஆறுகோண சக்கரத்தில் பின்பக்கத்தில் யோக நரசிம்மராகவும், முன்பக்கத்தில் ஸ்ரீசக்கரத்தாழ்வாராகவும் எழுந்தருளி உள்ளார்.

    இங்கு பெருமாளுக்கு செய்யப்படும் அனைத்து வழிபாடுகளும் சக்கரத்தாழ்வாருக்கு செய்யப்படுகிறது. இவரை வழிபடும் பக்தர்களின் பாவங்கள் நீங்கி புண்ணியம் கிட்டும் என்பது ஐதீகம். சங்கடங்களை தீர்க்கும் சக்கரத்தாழ்வாரை வழிபட பக்தர்கள் ஓடி எடுத்து வைத்தால், அவர் இரண்டடி முன் வைத்து பிரச்சினைகளையும் துன்பங்களையும் தீர்த்து சந்தோஷத்தில் ஆழ்த்துவார் என்பது விதி.

    சக்கரத்தாழ்வாரை வழிபட்டால் நவக்கிரகங்களால் ஏற்படும் துன்பங்கள் எல்லாம் நீங்கும். இங்கு நெய் விளக்கு ஏற்ற ஓம் நமோ பகவதே மகா எதிர்னாய நம என வழிபட்டால் கூடுதல் பலன் கிட்டும் என்பது ஐதீகம்.

    ஸ்ரீசக்கரத்தாழ்வாரின் நாளான வியாழன் அன்று சிவப்பு, மலர்களால் மாலை சூட்டி வழிபட்டால் நினைத்த நல்ல காரியங்களில் வெற்றி கிட்டும், வாழ்வில் சுபீட்சம் காணலாம். திருமணம் ஆகாத கன்னிப்பெண்களுக்கு விரைவில் திருமணம் நடைபெறும். சுமங்கலிகள் சுகமாக வாழ்வர் என்பது ஐதீகம்.

    புதன், சனிக்கிழமைகளில் துளசி சாற்றி துளசியால் அர்ச்சனை செய்து 12, 24, 48 முறை வலம் வந்து வழிபட்டால், பிரார்த்தனை வேண்டுதல்கள் நிறைவேறும். இங்கு கிருத்திகை தோறும் நடைபெறும் சுதர்சன ஹோமத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வேண்டுதல் நிறைவேற வழிபாடு செய்கின்றனர். 
    பெரிய பெரிய அலுவலகங்களிலும் தொழிற்சாலைகளிலும், வீட்டிலும் சத்ரு பயத்தை விரட்ட பிரமாண்ட அளவில் சுதர்சன ஹோமம் நடத்தப்படும்.
    நமது வீடுகளில் நடக்கும் கிரகப்பிரவேசம், ஆயுஷ்ய ஹோமம் போன்ற எந்த ஒரு விசேஷத்தின் போதும் குடும்ப ஐஸ்வர்யம் கருதி ஸ்ரீசுதர்சன ஹோமத்தையும் சேர்த்தே நடத்துவார்கள்.

    அதேபோல் பெரிய பெரிய அலுவலகங்களிலும் தொழிற்சாலைகளிலும் சத்ரு பயத்தை விரட்ட பிரமாண்ட அளவில் சுதர்சன ஹோமம் நடத்தப்படும்.
    வீட்டில் நடத்தப்படும் சுதர்சன ஹோம - தியான ஸ்லோகத்தின் பொருள் வருமாறு:-

    சூரியனின் பிரகாசத்தை மிஞ்சுபவரும், பயங்கரக் கண்கள் கொண்டவரும் சத்ருக்களை சம்ஹாரம் பண்ணுபவரும் பலமான - பயம் தரும் சிரிப்புக் கொண்டவரும், வலுவான பல் உடையவரும், பெரிய வாய் உள்ளவரும், செப்பு நிறத் தலைமுடி வாய்த்தவரும், கைகளில் சக்கரம் - கதை - சங்கு - தாமரைப்பூ - உலக்கை - பாசம் - அங்குசம் - தர்ஜணி போன்ற ஆயுதங்கள் பெற்றவரும், சத்ருக்களுக்கு பயம் தரும் ஆதிமூர்த்தியாக விளங்கும் ஸ்ரீசுதர்சனரை வணங்குகிறேன்.

    அலுவலகம் மற்றும் தொழிற்சாலைகளில் பிரமாண்டமாக நடத்தப்படும் சுதர்சன ஹோம, தியான ஸ்லோகத்தின் பொருள் வருமாறு:-

    சங்கு, சக்கரம், வில், மழு, வாள், அம்பு, சூலம், கயிறு, அங்குசம், கேடயம், கலப்பை, இரும்பு உலக்கை, அக்னி, கவசம், கதை, மூன்று முனைகள் கொண்ட சூலம் போன்ற ஆயுதம் ஆகியவற்றுடன் திகழும் பதினாறு கைகள் கொண்டவரும், பலமான பல் பெற்றவரும், மஞ்சள் நிறத் தலைமுடி உடையவரும், மூன்று கண்களுடன் தங்க நிற சரீரம் பெற்றிருப்பவரும், சகல சத்ருக்களின் உயிர்களை எடுப்பபவரும், அதி கயங்கரத் தோற்றம் உடையவருமான ஸ்ரீசுதர்சனரை ஷட்கோணத்தில் அமர வைத்துப் பிரார்த்திக்கிறேன்.

    சுதர்சன ஹோமத்தின் போது, சக்தி வாய்ந்த பல மந்திரங்கள் சொல்லி ஹோமப் பொருட்களை அக்னி பகவானுக்குச் சமர்ப்பிப்பார்கள். இந்த ஹோமத்தில் ஸ்ரீசுதர்சன சடாக்ஷரி, ஸ்ரீசுதர்சன காயத்ரி, ஸ்ரீசதர்சன மாலா மந்திரம், ஸ்ரீநரசிம்ம மந்திரம், ஸ்ரீநரசிம்ம காயத்ரி, ஸ்ரீவிஷ்ணு காயத்ரி, ஸ்ரீலட்சுமி காயத்ரி, ஸ்ரீலட்சுமி மந்திரம், ஸ்ரீதன்வந்திரி மந்திரம், பஞ்சஜன்ய காயத்ரி போன்ற பல மந்திரங்களையும் சொல்லிச் செய்வதால் பலன் அதிகமாக கிடைக்கும்.

    ஸ்ரீசுதர்சனரின் மூல மந்திரத்தை 12 லட்சம் தடவை உச்சரித்து ஒருவர் ஹோமம் செய்தால் இந்த மந்திரத்துக்கு உண்டான பலன் கிடைக்கும். எள், கடுகு, தாமரைப்பூ, வில்வ இலை, பால் பாயாசம் ஆகிய ஒவ்வொன்றையும் கொண்டு, குறிப்பிட்ட எண்ணிக்கையில் மந்திரத்தை உளமார உச்சரித்து ஜெபிக்க வேண்டும். முழுமனதோடு மிகுந்த முயற்சியுடள் செயல்பட்டால்தான் கிடைக்கிற பலன் முழு அளவில் இருக்கும்.

    ஹோமங்களை எந்த அளவுக்கு நாம் சிரத்தையாகப் செய்கிறோம் என்பதை வைத்து பகவான் அனுக்கிரஹம் செய்வார். பகவத் கீதையில் நீ என்னை நினைத்தால் நான் உன்னை நினைப்பேன் என்கிறார் பகவான்.

    எனவே வாழ்வில் பல நன்மைகளை பெறுவதற்கு நாம் ஸ்ரீசுதர்சன ஹோமம் செய்வது அவசியம். இதன் பலன்கள் ஏராளம்.

    ஸ்ரீசக்கரத்தாழ்வாரை தரிசித்தால், சகல தோஷங்களும் விலகும். அவரின் பரிபூரண அருள் கிடைக்கப்பெற்று நிம்மதியும், சந்தோஷமும் பொங்க வாழலாம் என்பது ஐதீகம்.
    1. சுதர்சனரை வழிபடச் சித்திரை நட்சத்திர தினங்கள் சிறப்பானவை. சித்திரை அவருக்குரிய நட்சத்திரம்.

    2. சுவாமி தேசிகனின் சுதர்சனாஷ்டகமும், ஹோட சாயுத ஸ்தோத்திரமும் சொல்லி வந்தால் எளிதில் ஸ்ரீசுதர்சனரின் அருளைப் பெறலாம்.

    3. சக்கரத்தானை திருவாழியாழ்வான்” என்று போற்றுகின்றனர் ஆழ்வார்கள்.

    4. சுவாமி தேசிகன் இவரை “சக்ர ரூபஸ்ய சக்ரிண” என்று போற்றுகிறார். அதாவது திருமாலுக்கு இணையானவர் என்று பொருள்.

    5. கும்பகோணம் சக்ர படித்துறையில் உள்ள சக்கர தீர்த்தத்தில்தான் பிரம்மா அவப்ருத நீராடல் செய்து யாகம் செய்தார். உடனே பாதாளத்திலிருந்து சக்கரம் வெளிக்கிளம்பி மேலே வந்தது. அந்த சக்கரத்தின் நடுவில் பிரம்மனுக்கு அன்று காட்சி தந்த ஸ்ரீமந் நாராயணன்தான் இன்று நமக்கு ஸ்ரீ சக்ரபாணியாக காட்சி தருகிறார்.

    6. சாளக்ராமங்களில் சுதர்சன சாளக்ராமம் மிகச் சிறந்தது. ஒரு சக்கரம் மட்டுமே உள்ள மிகப் பெரிய சாளக்ராமம் சுதர்சனமாகும். திருமாலின் சக்ராயுதத்தின் பூர்ண சக்தி இதற்கு உண்டு.

    7. ஸ்ரீ சக்கரத்தாழ்வாரையும், அவர் பின்புறமுள்ள ஸ்ரீ நரசிம்மரையும் வணங்கி சுற்றி பிரதட்சணம் செய்தால், நான்கு வேதங்களையும், பஞ்ச பூதங்களையும் அஷ்ட லட்சுமிகளையும், எட்டு திசைகளையும் வணங்கிய பலன் கிடைக்கும். 16 வகையான பேரருளும் கிடைக்கும் என்பது முன்னோர்களின் வாக்கு...!

    8. நரசிம்ம அவதாரத்தில் அரக்கனின் வரத்தையட்டி எந்த ஆயுதமும் இல்லாமல் ஹிரண்யகசிபுவை நரசிம்மர் அழித்தபோது, அவரது நகங்களாக விளங்கியவர் சுதர்சனரே.

    9. வாமன அவதாரத்தில், சுக்ராச் சாரியாரின் கட்ட ளையை மீறி மகாபலி வாமனனுக்குத் தானம் கொடுக்க தாரைவார்த்தபோது, சுக்ராச்சாரியார் வண்டாக வந்து கமண்டல நீர்ப்பாதையை அடைத்தார். அப்போது திருமால் பவித்திரத்தால் கிளற, சுக்ராச்சாரி யார் தன் கண்ணை இழந்தார். அங்கு பவித்திரமாக வந்தவர் சுதர்சனரே.

    10. சக்கரத்தாழ்வார் பல பழமையான திருக்கோவில்களில் தனிச்சந்நிதி கொண்டு காட்சியளிப்பதைக் காணலாம். (குறிப்பாக ஸ்ரீரங்கம், காஞ்சி வரதர்கோவில், திருமாலிருஞ் சோலை (கள்ளழகர்) கோவில், திருமோகூர், ஸ்ரீவில்லிபுத்தூர்.) தற்போது இவரின் மகிமையைப் புரிந்துகொண்டு பல திருத்தலங்களில் இவருக்குத் தனிச்சந்நிதி அமைக்கப் பட்டு வழிபாடுகள் நடந்து வருகின்றன.

    11. சக்கரத்தாழ்வாரின் பின்புறம் உள்ள யோக நரசிம்மரையும் பல இடங்களில் தரிசிக்கலாம். இவரை சுதர்சன நரசிம்மர் என்று போற்றுவர்.

    12. சக்கரத்தாழ்வாரைப் பற்றி பல சுலோகங்கள் உள்ளன. ஸ்ரீரங்கம் கூரநாராயண ஜீயர் சுதர்சன சதகத்தை அருளியுள்ளார். சுவாமி தேசிகனின் சுதர்சனாஷ்டகம் மிகவும் பிரசித்தி பெற்ற சுலோகமாகப் பிரபலமாகியுள்ளது.

    13. ஸ்ரீ சுதர்ஸனாழ்வார்,ஸ்ரீ கருடாழ்வார், ஸ்ரீ அனந்தாழ்வார் என ‘ஆழ்வார் ‘என்ற அடைமொழி இவர்கள் மூவர்களுக்கு மட்டுமே பொருந்தும்.ஸ்ரீ பகவானால் ஆட்கொண்டவர்கள் என்பதால் ஏற்பட்ட சிறப்பேயாகும்.

    14. ஜீவாலா கேசமும், திரிநேத்ரமும்,16 கரங்களும் பதினாறு வித ஆயுதங்களும் உடைய இவரை வழிபடுவதால் முப்பிறவியிலும், இந்த பிறவியிலும் உண்டான பாவங்கள், மற்றவர்களால் ஏற்படும் தீங்குகள், தீவினைகள், தோஷங்களால் கெடுதிகள் யாவும் நீங்கும்.

    15. மதுரை அழகர் கோவில், திருமோகூர், ஸ்ரீரங்கம், ஸ்ரீவில்லிபுத்தூர், காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோவில்,கும்பகோணம் ஸ்ரீ சக்ரபாணி கோவில் போன்ற திருத்தலங்களில் ஸ்ரீசக்கரத்தாழ்வார் விசேஷமானவர்.

    16. முன்புறத்தில்ஸ்ரீ சக்கரத்தாழ்வாரையும், அதன் பின்புறத்தில் ஸ்ரீ நரசிம்மரையும் வணங்கி சுற்றி பிரதட்சணம் செய்தால் நான்கு வேதங்களையும், பஞ்ச பூதங்களையும்,அஷ்ட லட்சுமிகளையும், எட்டு திக்கு பாலர்களையும் வணங்கிய பலன் கிடைக்கும்.

    17. ஸ்ரீ சக்கரத்தாழ்வாரை புதனும்,சனியும் சேவிப்பது விசேஷம். முடிந்தால் தினமும்,இயன்ற நிவேதனம் வைத்து பூஜிப்பது நல்லது.

    18. ஸ்ரீ சக்கரத்தாழ்வார் சந்நிதியில் நெய் விளக்கேற்றி,”ஓம் நமோ பகவதே மகா சுதர்சனாய நம “என்று கூறி வழிபடுதல் கூடுதல் பலனைத் தரும்.

    19. வியாழக்கிழமை ஸ்ரீ சக்கரத்தாழ்வாருக்கு சிவப்பு மலர்களால் மாலை சூட்டி வழிபட்டால், நினைத்த காரியங்களில் வெற்றி கிட்டும்.

    20. ஸ்ரீசக்கரத்தாழ்வாரை வழிபட பக்தர்கள் ஓரடி எடுத்து வைத்தால், அவர் உடனே இரண்டடி முன்வைத்து பிரச்சினைகளையும், துன்பங் களையும் தீர்த்து சந்தோஷத்தில் ஆழ்த்துவார் என்பது விதியாகும்.

    21. திருமாலுக்குச் செய்யப்படும் அனைத்து வழிபாடுகளும் சுதர்சனருக்கும் செய்வது என்பது நடைமுறையில் உள்ளது.

    22. ஸ்ரீசக்கரத்தாழ்வாரை வழிபட்டால் நவகிரகங்களால் ஏற்படும் இடையூறுகள், துன்பங்கள் எல்லாம் நீங்கும்.

    23. திருமால், ராம அவதாரம் எடுத்து வனவாசம் மேற் கொண்டபோது, ராமர் சார்பாக அயோத்தியை ஆட்சி புரிந்த பரதன் ஸ்ரீசுதர்சன ஆழ்வாரின் அம்சம் என்று புராணம் கூறுகிறது.

    24.பொதுவாக சக்கரம் திருமாலின் வலது கரத்தில் இடம்பெற்றிருக்கும். ஒரு சில தலங்களில் இடம் மாறியும் காட்சி தருவதைக் காணலாம்.

    25. திருக்கோவிலூர் திருத்தலத்தில் மூலவர் வலக்கையில் சங்கும் இடக்கையில் சக்கரமுமாக, வலக்காலால் வையகத்தை அளந்து நிற்கும் திருக்கோலத்தைத் தரிசிக்கலாம்.

    26. பஞ்ச கிருஷ்ண திருத்தலங்களில் ஒன்றான திருக்கண்ணபுரத்தில் மூலவரின் வலது கரத்தில் பிரயோகிக்கும் நிலையில் சக்கரம் காட்சி தருகிறது. திருமால் கோவிலில் உள்ள சுதர்சனர் சந்நிதியில் நெய் விளக்கேற்றி வழிபட்டால் வாழ்வில் சுபிட்சம் காணலாம். திருமணமாகாத கன்னிப் பெண்களுக்கு விரைவில் திருமணம் நடைபெறும்; சுமங்கலிகள் நீடூழி சுகமாக வாழ்வர் என்பது ஐதீகம்.

    27. பிரம்மோத்ஸவம் மற்றும் பெருமாள் கடலுக்குச் சென்று தீர்த்தவாரி மேற்கொள்ளும் சமயங்களிலும் சுதர்சனருக்கு முக்கியப் பங்கு உண்டு.

    28. சுதர்சனர் எனப்படும் சக்கரத்தாழ் வாருக்கென்று விசேஷமான ஆராதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த ஆராதனைகள் விகசை என்ற மகாமுனியால் ஏற்படுத்தப்பட்டவை.

    29. சுதர்சனர் பிரத்யட்ச தெய்வம். தீவிரமாக உபாசிப்பவர்களுக்கு விரும்பியதை அளித்து காப்பாற்றுவார்.

    30.ஸ்ரீசுதர்சன வழிபாடு பயங்கரமான கனவு, சித்தபிரமை, சதாமனோ வியாகூலம், பேய்விசாசு, பில்லி சூன்யம், ஏவல் முதலிய துன்பங்களிலிருந்து காக்க வல்லது.

    சக்கரத்தாழ்வாரை வழிபடும்போது, கீழ்கண்ட ஸ்ரீ சுதர்சன கவசத்தை மனதுக்குள் சொல்லி, தியானித்தால் அவரது அருளை எளிதில் பெறலாம்...
    முழங்கால் வரையில் நீண்ட கைகளை உள்ள வரும் தாமரைத்தளம் போன்ற நீண்ட கண்களை உடைய வரும் எப்போதும் மலர்ந்திருக்கும் பரிசுத்தமான மலர்ச்சியைக் கொண்டவரும் சியாமள வண்ணரும்
    கத்தி, சுதை, சங்கு, வில், அம்பு ஆகியவற்றினைப் பெற்றிருப்பவரும்
    உதாரமான உருவத்தை உடையவரும்
    ஸ்ரீ மகாலட்சுமியுடன் கூடியவரும்
    ஆதிசேஷனைக் குடையாகப் பெற்றவருமான ஸ்ரீ மகாவிஷ்ணுவின் திருக்கரத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீசுதர்ஸனர் என்ற பெயரைக் கொண்ட ஸ்ரீ சக்கரத்தாழ்வாரை நான் வணங்கி வழிபாடு செய்கின்றேன்.
    சக்கரத்தாழ்வாரின் 16 கரங்களிலும்... சக்கரம், மழு, ஈட்டி, தண்டு, அங்குசம், சமமுகாக்னி, கத்தி, வேல், சங்கு, வில், பாசம், கலப்பை, வஜ்ராயுதம், கதாயுதம், உலக்கை, சூலம் ஆகிய 16 ஆயுதங்கள் உள்ளது.
    திருமாலிருஞ்சோலை என்று ஆழ்வார்களால் மங்கள சாசனம் செய்யப்பட்ட, உலகப் புகழ் வாய்ந்த திவ்விய தேசம் அழகர் மலை. இங்கே மூலவர், ஸ்ரீபரமஸ்வாதி ஸ்ரீசுதர்சனம் எனும் சக்கரத்துடனும், பாஞ்ச சன்யம் எனும் சக்கரத்துடனும், கௌமோதகீ எனும் கதாயுதத்துடனும், நந்தகம் என்ற வாளுடனும் சார்ங்கம் எனும் வில்லுடனும் காட்சியளிக்கிறார்.

    இதை சேவித்த பீஷ்மாச்சார்யா, சங்க சக்ர கதா கட்சி சார்ங்கதந்வா கதாதர எனக் கள்ளழகரை மங்களாசாசனம் செய்கிறார். ஆயினும், எவரால் எப்போது பிரதிஷ்டை செய்யப்பட்டவர் என்று அறிய முடியாதவண்ணம், மிகப் பழைமையானவராகத் திகழ்கிறார் இந்தச் சக்கரத்தாழ்வார். 20-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பாதுகாப்பு கருதி, மலையிலிருந்த ஸ்ரீசக்கரத்தாழ்வாரை அழகர்கோவிலின் உட்புறம் 3-ஆம் பிராகாரத்தில் தாயார் சந்நிதிக்குப் பின்புறம் பிரதிஷ்டை செய்திருக்கிறார்கள்.

    ஜ்வாலா கேசம், த்ரிநேத்திரத்துடன் திகழும் இவரின் 16 கரங்களிலும்... சக்கரம், மழு, ஈட்டி, தண்டு, அங்குசம், சமமுகாக்னி, கத்தி, வேல், சங்கு, வில், பாசம், கலப்பை, வஜ்ராயுதம், கதாயுதம், உலக்கை, சூலம் ஆகிய 16 ஆயுதங்கள். இவரைச் சுற்றி ஷட்கோணம். இந்த அறுகோணத்தைச் சுற்றிலும் பீஜாஷர தேவதையர், வேறெங்கும் காண்பதற்கரிய தரிசனமாக பிம்ப ரூபத்தில் காட்சி தருகின்றார்.

    மனம், வாக்கு, காயம் என்று திரிகரண சுத்தியுடன் ஸ்ரீசுதர்ஸனரைப் பிரார்த்தித்து, நெய் விளக்கேற்றி வழிபட்டு வந்தால், நினைத்தது யாவும் கைகூடும்.

    மேலும் புதன், சனிக்கிழமை ஆகிய விசேஷ நாட்களிலும், முடிந்தால் தினமுமேகூட ஸ்ரீசுதர்சன மூர்த்தியை சேவித்து, பழ வகைகள், பானகம், தயிர்சாதம், உளுந்து வடை முதலானவற்றை நிவேதனம் செய்து, பக்தர்களுக்கும் விநியோகித்து வழிபட்டு வரலாம். 
    திரேதா யுகத்தில் இராமாவதாரத்தின் போது சக்கரத்தாழ்வாரே பரதனாக அவதாரம் எடுத்தார். இது குறித்த வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
    திரேதா யுகத்தில் இராமாவதாரத்தின் போது சக்கரத்தாழ்வாரே பரதனாக அவதாரம் எடுத்தார். அவரையும் பரதாழ்வார் என்றே அழைக்கிறோம். இறைவன் எதைத் தந்தாலும் அது நல்லதுக்கே என்று ஏற்றுக் கொள்ளும் மன பக்குவம் பரதனிடம் இருந்தது. ஒரு மாவீரனுக்கான அடையாளம் அது. இராமன் மேல் அசைக்க முடியாத பக்தியும் நம்பிக்கையும் கொண்டிருந்தான் பரதன்.

    ஆனால் இராமனே சொன்னால் கூட, அறம் என்று அவன் நினைத்ததை, பரதன் ஒரு போதும் விலக நினைக்கவில்லை. இராம பக்தியையும் விஞ்சி நிற்கிறது அவனின் அறத்தின் மேல் கொண்ட பிடிப்பு.

    அரசு வேண்டாம். தாய் கூட வேண்டாம். இந்த இடத்தில் இராமன் ஒன்றே பிராதானம் என்று நினைக்கிறான். உன் தந்தை தயரதன் இறந்து போனான் என்று கைகேயி பரதனிடம் கூறினாள். அதைக் கேட்ட பரதன் துக்கப் படுகிறான். தான் பெற்ற வரங்களினால் தயரதன் இறக்கவும், இராமன் காடு போக நேர்ந்ததையும் கைகேயி சொல்லக் கேட்ட பரதன் அவளை பலவாறாக வைது தீர்க்கிறான். அழுது புலம்புகிறான். அறம் பிறழ தானும் ஒரு காரணம் என்று உலகம் சொல்லுமே என்று வருந்துகிறான்.

    பரதன், அண்ணனிடம் நீங்கள் வந்து முடிசூட்டி ஆட்சிபுரிய வேண்டும் என்று மன்றாடி கேட்கிறான். இராமனோ தந்தை சொல்லை தன்னால் மீற முடியாது, பதினாலு ஆண்டு வனவாசம் புரிய வேண்டும் என்ற ஆணையை தான் கைவிடக்கூடாது என்கிறார்.

    பதினாலு ஆண்டுகளை பதினாலு நாட்களாகக் கழித்து விட்டு வந்து அரசாட்சியை எடுத்துக் கொள்கிறேன் நீ அயோத்திக்குப் போய் கடமையைச் செய் என்கிறார். தேவர்கள் அசீரியாக இராமர் வனவாசம் புரிதல் வேண்டும் என்று கூறுகிறார்கள். திரும்பி வர பதினாலு ஆண்டுகளுக்கு மேல் ஒரு நொடி அதிகம் ஆனாலும் உயிர் தியாகம் செய்வேன் என்று பரதன் சொல்கிறான். கொள்கைக்கு முன் உயிரை துச்சமெனக் கருதுகிறான் மாவீரன் பரதன். எம்பிரானுடைய பாதுகைகளைப் பெற்றுக் கொண்டு பலமுறை இராமபிரானைத் தொழுது அழுது புறப்படுகிறான் பரதன்.

    அயோத்திக்கே செல்லாமல், அருகில் நந்திக் கிராமத்தில் மணி மண்டபம் அமைத்து, இராமனுடைய பாதுகைகளை வைத்து, அப்பாதுகைகளுக்கு முடிசூட்டி வழிபட ஆரம்பிகிறான் பரதன். தென் திசையையன்றி வேறு திசையை நோக்காமல் பொறி புலன்களை அவித்து உப்பில்லாத கஞ்சியைப் பருகி, இராமனின் பாதுகைகளுக்கு தினந்தினம் ஆயிரம் மந்திரங்களால் அர்ச்சனை புரிந்து இடையறாத இராம பக்தியுடன் தவநெறியில் இருந்தான் பரதன். இலங்கை வேந்தன் இராவணனை வதம் செய்த பின்னர் இராமபிரான் சீதாதேவியுடன் அயோத்திக்கு புஷ்பக விமானத்தில் திரும்பி கொண்டிருந்தனர். அப்போது வழியில் பரத்வாஜ முனிவர் ஆசிரமத்தில் முன்பே வாக்குக் கொடுத்திருந்தபடியால் அனைவரும் தங்கினார்கள்.

    இதற்கிடையில் குறித்த நாளில் இராமபிரான் அயோத்திக்கு வராத காரணத்தால் முன்பு கூறியது போல் பரதன் தீயில் விழுந்து உயிரை விட முற்படுகிறான். இதுவும் மாவீரனுக்குரிய ஒரு செயல்! அப்போது இராமனால் அனுப்பப்பட்ட அனுமன், பரதனை தடுத்து தான் கொண்டு வந்திருந்த மோதிரத்தை காட்டுகிறான்.

    இதைக்கண்டு மகிழ்ந்த பரதன், சத்ருக்கனன் ஆகியோர் இராமனை அழைத்து செல்வதற்காக அனுமனுடனே பரத்வாஜ முனிவரின் ஆசிரமத்துக்கு செல்கின்றனர்.
    இராமனை உயர்த்திக் காட்ட வந்த பல பாத்திரங்களுள் பரதன் மிக முக்கிய பங்கை வகிக்கிறான். இலக்குவன் இராமன் கூடவே இருக்கும் பேற்றினைப் பெற்றான். ஆனால் பரதனோ அவப் பெயரையும் சுமந்து, இராமனையும் பிரிந்து பதினாலு ஆண்டுகள் தவ வாழ்க்கையை வாழ்ந்தான்.

    அவனின் ஒவ்வொரு செயலும் இராமனைப் பெருமை படுத்துவதாகவே அமைந்தது. இராமன் பட்டாபிஷேகம் பின்னொருநாளில் தான் வந்தது. ஆனால் அதற்கு முன்பே இராமனின் திருவடிகளைத் தொட்ட பாதுகைக்கு அளப்பறியா பெருமை சேரும்படி பாதுகா பட்டாபிஷேகத்தை நிகழ்த்தியவன் பரதன். க்கரத்தாழ்வாராகிய பரதாழ்வாரின் புகழ் இராமன் புகழ் இருக்கும் காலம் வரை இதனால் இருக்கும் என்பதில் சிறிதும் ஐயமில்லை.
    பாரதப் போரில் சுதர்சனத்தின் சக்தியை உலகுக்குப் புரிய வைத்தார் பெருமாள். இது குறித்த ஆன்மிக கதையை விரிவாக அறிந்து கொள்ளலாம்.
    ஒரு முறை துர்வாச முனிவர் திருமாலை நேரில் பார்க்க வேண்டும் என்று தவம் இருந்தார். இதை அறிந்த நாரதர், என்ன துர்வாசரே! எதற்காக திருமாலைப் பார்க்க இவ்வளவு கடுந்தவம் செய்கிறீர்கள்? என்று கேட்டார்.

    உலகத்திற்குப் பேரழிவு வரும் என்று என் மனம் சொல்கிறது. அதைத் தடுக்க வேண்டும். அதை திருமாலால் மட்டுமே செய்ய இயலும். அதனால்தான் அவரைக் காண தவம் செய்கிறேன் என்றார்.

    உடனே நாரதர், முனிவரே, திருப்பாற்கடலில் திருமால் ஓய்வில் உள்ளபோது இது போன்ற பணிகளை சுதர்சனரே செய்துவிடுவார் எனக் கூறி, சுதர்சனரை நினைத்து வேண்டினார். உடனே நாரதர்முன் தோன்றிய சுதர்சனர், என்ன நாரதரே! ஏன் என்னை நினைத்தீர்கள்? என்று வினவினார்.

    நடந்ததை நாரதர் விளக்கமாகச் சொன்னார். துர்வாசரைப் பார்த்த சுதர்சனர், என்னை விட ஆற்றல் மிக்க இவரே அதைச் செய்யட்டுமே என்று துர்வாசரை இகழ்ந்து பேசினார். உடனே கோபம் கொண்ட துர்வாசர், முன்பு என்னைக் கொல்வதற்காக வந்தார். இப்பொழுது என்னை இகழ்ந்து பேசிவிட்டார். அதனால் பொன்னிறமான சுதர்சனர் கறுப்பாக மாறட்டும் என்று சாபமிட்டார்.

    கோபம் கொண்ட சுதர்சனர் முனிவரைத் தாக்கச் சென்றார். உடனே திருமால் சுதர்சனரைத் தடுத்து நிறுத்தி, துர்வாசர் கொடுத்த சாபம் ஒருநாள் பலிக்கும் என்று கூறினார். அதுபோலவே பின்னாளில் நடந்தது.

    பாரதப்போரில் அர்ஜுனன் மகன் அபிமன்யுவை துரியோதனின் கூட்டத்தார் சூழ்ச்சி செய்து பத்ம வியூகத்தில் சிக்க வைக்க அவனை ஜெயத்ரதன் கொன்றான். இந்தச் செய்தியைக் கேட்ட அர்ஜுனன் கதறி அழுது, நாளை சூரியன் மறைவதற்குள்ளாக ஜெயத்ரதனைக் கொன்றுவிடுவேன். இல்லையென்றால் நானே தீயில் இறங்கி உயிரை விடுவேன் என்று கண்ணன் முன் சபதம் செய்தான்.

    மறுநாள் மிகவும் உக்கிரமாக போர் நடந்துகொண்டிருந்தது. அர்ஜுனன் ஜெயத்ரதனைத் தேடினான். அவன் எங்கும் காணாமல் போக, மாலை நேரம் நெருங்குவதை உணர்ந்த அர்ஜுனன், தீயில் இறங்க எல்லா ஏற்பாடுகளையும் செய்யச் சொன்னான்.

    அப்போது அர்ஜுனனின் தேரில் சாரதியாக இருந்த கண்ணன் தனது சக்கராயுதத்தை எடுத்து சூரியனை நோக்கி எறிந்தார். சுதர்சனச் சக்கரம் சூரியனை மறைத்து பிரபஞ்சத்தை இருளடையச் செய்தது. இருள் சூழ்ந்ததைப் பார்த்த ஜெயத்ரதன் வெளியில் வந்து, அர்ஜுனன் இறந்துவிடுவான் என்று மகிழ்ச்சியில் இருந்தான்.

    கிருஷ்ணர் இதைப் பார்த்து தனது சக்ராயுதத்தை திரும்புமாறு கூறினார். சூரியன் தன் கதிர்களை பிரபஞ்சத்தின்மீது பரவவிட்டான். உடனே கிருஷ்ணர் அர்ஜுனனைப் பார்த்து, இதோ ஜெயத்ரதன் அவன்மீது அம்பை எறி என்று கூறினார்.

    அர்ஜுனன் அம்பை எய்தவுடன் தலை தனியாகி அவன் தந்தை மடியில் விழுந்து, ஏற்கெனவே உள்ள சாபத்தின்படி இருவரும் தலை வெடித்து இறந்தார்கள். பாரதப் போரில் சுதர்சனத்தின் சக்தியை உலகுக்குப் புரிய வைத்தார் பெருமாள்.
    மகா விஷ்ணு எடுத்த அவதாரங்கள் அனைத்தும் போற்றுதலுக்கு உரியவை. பகவான் எந்த அவதாரம் எடுத்தாலும், அப்போது அவர் தாங்கியுள்ள ஆயுதங்களும் முக்கியமான இடம் பெற்றுவிடும்.
    உண்மையான பக்தர்களுக்கு சதாசர்வ காலமும் அபயம் அளிக்கும் ஸ்ரீதர்சன சக்கரம், துஷ்டர்களை வதம் செய்யக்கூடியது.

    இதற்காக மகா விஷ்ணு எடுத்த அவதாரங்கள் அனைத்தும் போற்றுதலுக்கு உரியவை. பகவான் எந்த அவதாரம் எடுத்தாலும், அப்போது அவர் தாங்கியுள்ள ஆயுதங்களும் முக்கியமான இடம் பெற்றுவிடும்.

    மகா விஷ்ணுவின் ஒவ்வோர் அவதாரத்திலும் ஸ்ரீசுதர்சனரும் உடன் வந்தார் என்று புராணங்கள் கூறுகின்றன.

    வராக அவதாரத்தின் போது ஹிரண்யாட்சன் என்னும் அசுரனை அழிக்க வராகத்தின் மூக்குப் பகுதியில் ஸ்ரீசுதர்சனர் இருந்தார். பக்த பிரகலாதனைக் காப்பாற்ற, நரசிம்ம அவதாரம் எடுத்து, ஹிரண்யகசிபுவை அழித்தபோது, நரசிம்மரின் கை நகங்களாக இருந்தவர் ஸ்ரீசுதர்சனர்.

    மகாவிஷ்ணு, ராம அவதாரம் எடுத்தபோது அவரது வில்லில் ஸ்ரீசுதர்சனர் இருந்தார். (பரதனாக வந்தவர் ஸ்ரீசுதர்சனர் என்றும் சில புராணங்கள் சொல்கின்றன).
    பரசுராமர் அவதாரத்தின் போது அவரது ஏர்க் கலப்பையின் சக்தியாக ஸ்ரீசுதர்சனர் இருந்தார்.

    கிருஷ்ண அவதாரத்தின் போது நேரடியாகவும், மறைமுகமாகவும் இருந்து நீதி நிலைக்கப்பாடுபட்டார் ஸ்ரீசுதர்சனர். பவுண்ட்ர வாசுதேவன், சிசுபாலன், ஜெயத்ரதன் போன்றோரை அழிப்பதற்கு பகவான் ஸ்ரீகிருஷ்ணருக்கு உதவியது ஸ்ரீசுதர்சனரே.

    கஜேந்திர மோட்சம் கதையிலும் ஒரு பக்த யானைக்கு உதவ வந்தது ஸ்ரீசுதர்சனர்தான்.

    திருமால்பூர் சென்று வணங்கி வழிபட்டபின், சக்கரத்தாழ்வார் வழிபாட்டினை இருபத்தேழு நாட்கள் செய்தால் வாழ்வில் நலம் பல பெறுவார்கள்.
    காஞ்சீபுரத்தில் இருந்து அரக்கோணம் - திருத்தணி செல்லும் சாலையில் திருமால் பூர் ஊர் இருக்கின்றது.

    இறைவனை நோக்கி, திருமாலானவர் ஆயிரத் தெட்டு நாட்கள் பூஜிக்க விரும்பினார். அதற்கான பொருத்தமான இடம் தேடி, இறைவனைப் பூஜித்த இடம் திருமால்பூர் ஆகும். தினம், திருக்குளத்தில் நீராடி, தினம் ஒரு தாமரை மலரைக் கொண்டு பூஜித்து வந்தார். தன் மீது, உண்மை பக்தி கொண்டு பூஜிக்கின்றாரா என்று சோதிக்க விரும்பிய சிவபெருமான், திருமால் கொய்து வந்த ஆயிரத்தெட்டாம் மலரைக் காணாமல் செய்து விட்டார்.

    பூஜை வேளையில் , பூஜிக்க வேண்டிய மலர் காணாமல் போக, கண நேரமும் தாமதியாது, திருமால் தன் கண்களையே தாமரை மலராக எண்ணி, ஒரு கண்ணை எடுத்து பூஜித்தார்.

    தரிசனமளித்த இறைவன், திரும்ப கண்களை அளித்தார். தாமரை மணாளனுக்கு, கமலக் கண்ணன் எனும் திருப்பெயரையும் வழங்கி, தன்னிடம் சக்கராயுதம் பெறவே, இப்பூஜை என்பதனை உணர்ந்து சக்கராயுதம் எனப்படும் சுதர்சன சக்கரத்தை வழங்கினார்.

    இந்த ஆலயத்து இறைவனை வழிபட, இருபத்தேழு நட்சத்திரக் காரர்களால், பட வேண்டிய துன்பங்கள் கொடூரமானதாக இல்லாமல், களைந்தெறியும் சிறப்புமிக்க ஆலயம் எதிரியால் மிகவும் துன்பப்படுவோரும், கண் கலங்கி எதிரியை வெல்ல முடியாமல் அவதியுறுவோரும், இந்த ஆலயத்துக்கு வந்து பரிகார பூஜித்தால், நலம் பெறுவார்கள்.

    தேங்காய் , ஆறு வாழைப் பழம், ஊது வத்தி, மஞ்சள் சாமந்திப் பூ-முல்லைப் பூ கொடுத்து அர்ச்சனை செய்ய வேண்டும். அதன் பிறகு, இறைவனை வணங்கும் திருமாலிற்கும் அர்ச்சனை செய்தல் வேண்டும். அதன் பின்பாக, திருமாலின் முன்பாக உள்ள நந்திகேசுவரரின் முன்பாக, ஒன்பது நெய் தீபங்களை, ஒரு நெய் அகல் தீபங்கொண்டு ஏற்றி, ஒருவரையும் இனி எதிரியாய் நினைத்து கெடுதல் மறந்தும் செய்ய மாட்டேன்.

    எந்த எதிரியும், என் சொல்லாலும், செயலாலும், புதியதாக உருவாகாமலும், உருவாக்கிக் கொண்ட எதிரியாலும் துன்பம் நேராதிருக்க அருள வேண்டுமென்ற கோரிக்கை வைக்க வேண்டும். திருமால்பூர் சென்று வணங்கி வழிபட்டபின், சக்கரத்தாழ்வார் வழிபாட்டினை இருபத்தேழு நாட்கள் செய்தால் வாழ்வில் நலம் பல பெறுவார்கள். 
    ஸ்ரீரங்கத்தில் எழுந்தருளியிருக்கும் சக்கரத்தாழ்வாருக்கும் அரங்கனுக்கும் தொடர்பு உண்டு. இதை பற்றி விரிவாக அறிந்து கொள்ளலாம்.
    ஸ்ரீரங்கத்தில் எழுந்தருளியிருக்கும் சக்கரத்தாழ்வாருக்கும் அரங்கனுக்கும் தொடர்பு உண்டு. ஒரு முறை காவிரியில் அரங்கனுக்கு தெப்ப உற்சவம் நடைபெற்ற நேரம் காவிரியில் வேகம் அதிகரித்தது. அரங்கனை அந்த வெள்ளத்தில் இருந்து மீட்க முடியுமா என்ற பயம் ஏற்பட்ட போது ஸ்ரீரங்கத்தில் எழுந்தருளியிருந்த கூரநாராயண ஜீயர் என்பவர், சுதர்சன சதகத்தை இயற்றி ஸ்ரீசுதர்சனரை வேண்ட... காவிரி வெள்ளம் குறைந்து, அரங்கள் கரையேறினான். இந்த சுதர்சன சதக பாராயணம் பல சங்கடங்களைப் போக்கும் மாமருந்தாகும்.

    கும்பகோணத்தில் சக்கரத்தாழ்வாருக்கு என்றே தனிக் கோவில் அமைந்துள்ளது. வேறெங்கும் காண முடியாத அமைப்பு அது. மேலும், இங்கு மூலஸ்தானத்தில் சக்கரத்தாழ்வார் (மூலவரும் உற்சவரும்) சுதர்சனவல்லித் தாயாருடன் காட்சியளிக்கிறார். தவிர, விஜயவல்லித் தாயாரும் பிரகாரத்தில் தனிக்கோவில் கொண்டு காட்சியளிக்கிறார்.

    இவரை தரிசிக்க தட்சிணாயன, உத்தராயன வாசல்கள் அமைந்துள்ளன. தை முதல் ஆனி வரை உத்தராயன வாசல் வழியாகச் செல்ல வேண்டும். ஆடி முதல் மார்கழி வரை தட்சிணாயன வாசல் வழியாகச் செல்ல வேண்டும். சூரிய பகவானின் கர்வத்தை அடக்கியவர் சக்கரபாணி என்கிறது தலவரலாறு. அதனால் இத்தலத்தை பாஸ்கர க்ஷேத்திரம் என்றும் போற்றுவர்.
    ×