search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    மகா விஷ்ணுவின் தசாவதாரங்களில் ஸ்ரீசக்கரத்தாழ்வார்
    X

    மகா விஷ்ணுவின் தசாவதாரங்களில் ஸ்ரீசக்கரத்தாழ்வார்

    மகா விஷ்ணு எடுத்த அவதாரங்கள் அனைத்தும் போற்றுதலுக்கு உரியவை. பகவான் எந்த அவதாரம் எடுத்தாலும், அப்போது அவர் தாங்கியுள்ள ஆயுதங்களும் முக்கியமான இடம் பெற்றுவிடும்.
    உண்மையான பக்தர்களுக்கு சதாசர்வ காலமும் அபயம் அளிக்கும் ஸ்ரீதர்சன சக்கரம், துஷ்டர்களை வதம் செய்யக்கூடியது.

    இதற்காக மகா விஷ்ணு எடுத்த அவதாரங்கள் அனைத்தும் போற்றுதலுக்கு உரியவை. பகவான் எந்த அவதாரம் எடுத்தாலும், அப்போது அவர் தாங்கியுள்ள ஆயுதங்களும் முக்கியமான இடம் பெற்றுவிடும்.

    மகா விஷ்ணுவின் ஒவ்வோர் அவதாரத்திலும் ஸ்ரீசுதர்சனரும் உடன் வந்தார் என்று புராணங்கள் கூறுகின்றன.

    வராக அவதாரத்தின் போது ஹிரண்யாட்சன் என்னும் அசுரனை அழிக்க வராகத்தின் மூக்குப் பகுதியில் ஸ்ரீசுதர்சனர் இருந்தார். பக்த பிரகலாதனைக் காப்பாற்ற, நரசிம்ம அவதாரம் எடுத்து, ஹிரண்யகசிபுவை அழித்தபோது, நரசிம்மரின் கை நகங்களாக இருந்தவர் ஸ்ரீசுதர்சனர்.

    மகாவிஷ்ணு, ராம அவதாரம் எடுத்தபோது அவரது வில்லில் ஸ்ரீசுதர்சனர் இருந்தார். (பரதனாக வந்தவர் ஸ்ரீசுதர்சனர் என்றும் சில புராணங்கள் சொல்கின்றன).
    பரசுராமர் அவதாரத்தின் போது அவரது ஏர்க் கலப்பையின் சக்தியாக ஸ்ரீசுதர்சனர் இருந்தார்.

    கிருஷ்ண அவதாரத்தின் போது நேரடியாகவும், மறைமுகமாகவும் இருந்து நீதி நிலைக்கப்பாடுபட்டார் ஸ்ரீசுதர்சனர். பவுண்ட்ர வாசுதேவன், சிசுபாலன், ஜெயத்ரதன் போன்றோரை அழிப்பதற்கு பகவான் ஸ்ரீகிருஷ்ணருக்கு உதவியது ஸ்ரீசுதர்சனரே.

    கஜேந்திர மோட்சம் கதையிலும் ஒரு பக்த யானைக்கு உதவ வந்தது ஸ்ரீசுதர்சனர்தான்.

    Next Story
    ×