என் மலர்tooltip icon

    ஸ்லோகங்கள்

    கீழே கொடுக்கப்பட்டுள்ள வராக மந்திரத்தை கொடிய நோய்கள் தீர, பகை அழிய, தோஷங்கள் தொலைய அனுதினமும் படித்து வந்தால் நல்ல பலனை காணலாம்.
    ஸுத்தஸ்படிக ஸங்காஸம் பூர்ண சந்த்ர நிபானநம்
    கடிந்யஸ்த கரத்வந்த்வம் ஸ்ரீமுஷ்ணேஸம் நமாம்யஹம்
    தயாநிதிம் தயாஹீநம் ஜீவாநாமார்த்திஹம் விபும்
    தைத்யாந்தகம் கதாபாணிம் ஸ்ரீமுஷ்ணேஸம் நமாம்யஹம்

    பொருள் : சுத்த ஸ்படிகம் போல் நிர்மலமானவரே, பூர்ண சந்திரனை போல ஒளி படைத்தவரே, வராக மூர்த்தியே நமஸ்காரம். திருக்கரங்களில் சக்கரம், கதையேந்தி அருள்பவரே, கருணையே வடிவானவரே, ஜீவன்களைக் காப்பவரே, ஸ்ரீமுஷ்ணத்தில் திருவருட்பாலிப்பவரே, வராகமூர்த்தியே நமஸ்காரம்.

    இந்த வராக மந்திரத்தை கொடிய நோய்கள் தீர, பகை அழிய, தோஷங்கள் தொலைய அனுதினமும் படிக்கலாம்.
    தினமும் சுக்ரன் பிராண தேவதை ருரு பைரவரின் காயத்ரி மந்திரத்தை ஒன்பதின் மடங்குகளில் பாராயணம் செய்ய வேண்டும். இதனால் இன்பங்கள் அதிகரித்து, துன்பங்கள் அகலும்.
    நவக்கிரகங்களில் மற்றொரு சுப கிரகமாக திகழ்பவர் சுக்ரன். இவரது பிராண தேவதை, ருரு பைரவர்.

    ‘ஓம் ஆனந்த ரூபாய வித்மஹே
    டங்கேஷாய தீமஹி
    தந்நோஹ்: ருருபைரவ ப்ரசோதயாத்’

    என்ற காயத்ரி மந்திரத்தை ஒன்பதின் மடங்குகளில் பாராயணம் செய்ய வேண்டும். இதனால் இன்பங்கள் அதிகரித்து, துன்பங்கள் அகலும்.
    நவக்கிரகங்களில் சுப கிரகமான குரு பகவானின் பிராண தேவதை அசிதாங்க பைரவரி காயத்ரி மந்திரத்தை ஒன்பதின் மடங்குகளில் பாராயணம் செய்து வந்தால், யோகங்கள் அதிகரித்து, துன்பங்கள் விலகும்.
    நவக்கிரகங்களில் சுப கிரகமான குரு பகவானின் பிராண தேவதை அசிதாங்க பைரவர்.

    ‘ஓம் ஞான தேவாய வித்மஹே
    வித்யா ராஜாய தீமஹி
    தந்நோஹ்: அசிதாங்க பைரவ ப்ரசோதயாத்’

    என்ற இந்த காயத்ரி மந்திரத்தை ஒன்பதின் மடங்குகளில் பாராயணம் செய்து வந்தால், யோகங்கள் அதிகரித்து, துன்பங்கள் விலகும்.
    புதன் கிரகத்தின் பிராண தேவதை உன்மத்த பைரவரின் காயத்ரி மந்திரத்தை தினமும் சொல்லி வழிபாடு செய்து வந்தால் யோகங்கள் அதிகரிக்கும். கஷ்டங்கள் குறையும்.
    நவக்கிரகங்களின் வழிபாடு அவசியமானது. நவக்கிரகங்களின் தோஷங்களைப் போக்கும் ஆற்றல் பைரவருக்கும் உண்டு. நவக்கிரகங்களில் ஒவ்வொன்றுக்கும் ஒரு பைரவர் பிராண தேவதையாக இருக்கிறார். புதன் கிரகத்தின் பிராண தேவதை உன்மத்த பைரவரின் காயத்ரி மந்திரத்தை தினமும் சொல்லி வழிபாடு செய்து வந்தால் யோகங்கள் அதிகரிக்கும். கஷ்டங்கள் குறையும்.

    ‘ஓம் மஹா மந்த்ராய வித்மஹே
    வராஹி மனோகராய தீமஹி
    தந்நோஹ்: உன்மத்த பைரவ ப்ரசோதயாத்’

    என்ற காயத்ரி மந்திரத்தை ஐந்தின் மடங்குகளில் ஜபிக்க, யோகங்கள் அதிகரிக்கும். கஷ்டங்கள் குறையும்.
    செவ்வாய் மகா திசை நடைபெறுபவர்கள், தினமும் பைரவர் சன்னிதியின் முன்பாக நின்று, செவ்வாயின் பிராண தேவதையான சண்ட பைரவரின் காயத்ரி மந்திரத்தை உச்சரிக்க வேண்டும்.
    செவ்வாய் மகா திசை நடைபெறுபவர்கள், தினமும் பைரவர் சன்னிதியின் முன்பாக நின்று, செவ்வாயின் பிராண தேவதையான சண்ட பைரவரின் காயத்ரி மந்திரத்தை உச்சரிக்க வேண்டும்.

    ‘ஓம் சர்வசத்ரு நாசாய வித்மஹே
    மஹாவீராய தீமஹி
    தந்நோஹ்: சண்ட பைரவ ப்ரசோதயாத்’

    இந்த காயத்ரி மந்திரத்தை தினமும் 9-ன் மடங்குகளில் ஜெபித்து வர வேண்டும். இதனால், செவ்வாயின் திசை யோக திசையாக இருந்தால் கூடுதல் யோகம் வாய்க்கும். செவ்வாயின் திசை பாதகாதிபதி திசையாக இருந்தால், கஷ்டங்கள் குறையும்.
    யாருக்கெல்லாம் சந்திர மகாதிசை நடைபெறுகிறதோ, அவர்கள் தினமும் பைரவர் சன்னிதியில் 9 முறை அல்லது, 9-ன் மடங்குகளில் இந்த காயத்ரி மந்திரங்களை பாராயணம் செய்து வர வேண்டும்.
    ‘ஓம் கால தண்டாய வித்மஹே
    வஜ்ர வீராய தீமஹி
    தந்நோஹ்: கபால பைரவ ப்ரசோதயாத்’

    யாருக்கெல்லாம் சந்திர மகாதிசை நடைபெறுகிறதோ, அவர்கள் தினமும் அவர்களின் ஊரில் இருக்கும் பைரவர் சன்னிதியில் 9 முறை அல்லது, 9-ன் மடங்குகளில் இந்த காயத்ரி மந்திரங்களை பாராயணம் செய்து வர வேண்டும். இதன் மூலம் சந்திர திசை யோக திசையாக இருந்தால், மேலும் யோகங்கள் அதிகரிக்கும். சந்திர திசை பாதகாதிபதி திசையாக இருந்தால், கஷ்டங்கள் குறையும்.
    சூரிய திசை யாருக்கெல்லாம் நடக்கிறதோ, அவர்கள் பைரவரின் சன்னிதியில் நின்று சூரியனின் பிராண தேவதையான சொர்ண ஆகர்ஷண பைரவரின் காயத்ரி மந்திரத்தை 9 முறை உச்சரிப்பது நன்மை தரும்.
    நவக்கிரகங்களின் வழிபாடு அவசியமானது. நவக்கிரகங்களின் தோஷங்களைப் போக்கும் ஆற்றல் பைரவருக்கும் உண்டு. நவக்கிரகங்களில் ஒவ்வொன்றுக்கும் ஒரு பைரவர் பிராண தேவதையாக இருக்கிறார்.

    சூரியனின் பிராண தேவதை சொர்ண ஆகர்ஷண பைரவர் ஆவார். சந்திரனின் பிராண தேவதை கபால பைரவர், செவ்வாய் கிரகத்தின் பிராண தேவதை சண்ட பைரவர், புதனின் பிராண தேவதை உன்மத்த பைரவர், குரு பகவானுக்கு அசிதாங்க பைரவரும், சுக்ரனுக்கு ருரு பைரவரும், சனி பகவானுக்கு குரோதன பைரவரும், ராகுவுக்கு சம்ஹார பைரவரும், கேதுவுக்கு பீஷண பைரவரும் பிராண தேவதைகளாக இருக்கிறார்கள்.

    சூரிய திசை யாருக்கெல்லாம் நடக்கிறதோ, அவர்கள் பைரவரின் சன்னிதியில் நின்று சூரியனின் பிராண தேவதையான சொர்ண ஆகர்ஷண பைரவரின் காயத்ரி மந்திரத்தை 9 முறை உச்சரிப்பது நன்மை தரும்

    ‘ஓம் பைரவாய வித்மஹே
    ஆகர்ஷணாய தீமஹி
    தந்நோஹ் சொர்ணபைரவ ப்ரசோதயாத்’

    என்ற இந்த மந்திரத்தை சூரிய திசை முடியும் வரை கூறி வந்தால் நடப்பவையாவும் நன்மையாக முடியும்.
    கீழே கொடுக்கப்பட்டுள்ள ஸ்வர்ணாகர்ஷண பைரவ அஷ்டகத்தை இதைத் தினமும் அல்லது அஷ்ட நாட்களில் படித்து வந்தால் தீராத கடன்கள் தீரும்.
    கீழே கொடுக்கப்பட்டுள்ள ஸ்வர்ணாகர்ஷண பைரவ அஷ்டகத்தை இதைத் தினமும் படித்து வந்தால் தீராத கடன்கள் தீரும். கையில் பணம் இல்லையே என நினைத்து வருந்தும்போது குறைந்த அளவுக்கான தேவைக்காவது பணம் கிடைக்க்ம் என ஆத்தீகர்களின் நம்பிக்கை.

    தனந்தரும் வயிரவன் தளிரடிபணிந்திடின்
    தளர்வுகள் தீர்ந்து விடும்
    மனந் திறந் தவன்பதம் மலரிட்டு வாழ்த்திடின்
    மகிழ்வுகள்வந்து விடும் சினந்தவிர்த் தன்னையின்
    சின்மயப்புன்னகை சிந்தையில் ஏற்றவனே
    தனக்கிலை யீடுயாருமே என்பான் தனமழை பெய்திடுவான் (1)

    வாழ்வினில் வளந்தர வையகம்
    நடந்தான் வாரியே வழங்கிடுவான்
    தாழ்வுகள் தீர்ந்திட தளர்வுகள் மறைந்திட
    தானெனவந்திடுவான் காழ்ப்புகள் தீர்த்தான்
    கானகம் நின்றான் காவலாய் வந்திடுவான்
    தனக்கிலை யீடுயாருமே என்பான் தனமழை பெய்திடுவான் (2)

    முழுநில வதனில் முறையொடு
    பூஜைகள் முடித்திட அருளிடுவான்
    உழுதவன்விதைப்பான் உடைமைகள் காப்பான்
    உயர்வுறச்செய்திடுவான் முழுமலர்த்
    தாமரை மாலையை ஜெபித்து முடியினில் சூடிடுவான்
    தனக்கிலை யீடு யாருமேஎன்பான் தனமழை பெய்திடுவான் (3)

    நான்மறை ஓதுவார் நடுவினில்இருப்பான்
    நான்முகன் நானென்பான் தேனினில் பழத்தைச்
    சேர்த்தவன் ருசிப்பான் தேவைகள்
    நிறைத்திடுவான் வான்மழை எனவே
    வளங்களைப்பொழிவான் வாழ்த்திட வாழ்த்திடுவான்
    தனக்கிலை யீடு யாருமே என்பான் தனமழை பெய்திடுவான் (4)

    பூதங்கள் யாவும் தனக்குள்ளே
    வைப்பான் பூரணன் நான் என்பான் நாதங்கள்
    ஒலிக்கும் நால்வகை மணிகளை நாணினில்
    பூட்டிடுவான் காதங்கள் கடந்து கட்டிடும்
    மாயம் யாவையும் போக்கிடுவான்
    தனக்கிலை யீடு யாருமே என்பான் தனமழை பெய்திடுவான் (5)

    பொழில்களில் மணப்பான் பூசைகள்ஏற்பான்
    பொன்குடம் ஏந்திடுவான் கழல்களில்
    தண்டை கைகளில் மணியணி கனகனாய் இருந்திடுவான்
    நிழல்தரும் கற்பகம் நினைத்திட
    பொழிந்திடும் நின்மலன் நானென்பான்
    தனக்கிலை யீடு யாருமே என்பான் தனமழை பெய்திடுவான் (6)

    சதுர்முகன் ஆணவத் தலையினைக்
    கொய்தான் சத்தொடு சித்தானான் புதரினில்
    பாம்பைத் தலையினில் வைத்தான் புண்ணியம்
    செய்யென்றான் பதரினைக் குவித்து
    செம்பினை எரித்தான் பசும்பொன் இதுவென்றான்
    தனக்கிலை யீடுயாருமே என்பான் தனமழை பெய்திடுவான் (7)

    ஜெய ஜெய வடுக நாதனே சரணம் வந்தருள்
    செய்திடுவாய் ஜெய ஜெய ஷேத்திர பாலனே சரணம்
    ஜெயங்களைத் தந்திடுவாய்
    ஜெய ஜெய வயிரவா செகம் புகழ் தேவா
    செல்வங்கள் தந்திடுவாய்
    தனக்கிலை யீடு யாருமே என்பான் தனமழை பெய்திடுவான் (8)
    திருவெண்காட்டில் கோவில் கொண்டுள்ள இப்பெருமானை தரிசித்தால், கண் திருஷ்டி, ஏவல்கள், காரியத் தடைகள் போன்றவை விலகி, வாழ்வில் ஏற்றம் கிடைக்கும்.
    கல்லடி பட்டாலும், கண்ணடி படக்கூடாது என்பார்கள். கண் திருஷ்டி என்பது, அவரவர் நம்பிக்கையை பொறுத்தது என்றாலும், பொதுவாக கண்திருஷ்டி படுவதை யாரும் விரும்புவதில்லை. அது தங்களது முன்னேற்றத்தை தடை செய்யக் கூடியது என்ற கருத்து ஆழமாக உள்ளது.

    ஸ்ரீ அகோர மூர்த்தியானவர் இத்தகைய கண்திருஷ்டியை போக்கி, தடைகளை நீக்கி, வெற்றியை அருள்பவர். திருவெண்காட்டில் கோவில் கொண்டுள்ள இப்பெருமானை தரிசித்தால், கண் திருஷ்டி, ஏவல்கள், காரியத் தடைகள் போன்றவை விலகி, வாழ்வில் ஏற்றம் கிடைக்கும். தினமும் அதிகாலையில் 21 முறை இத்துதியைச் சொல்லி வந்தால், நன்மை நடக்கும்.


    ஸகல கன ஸமாபம்
    பீமதம்ஷ்ட்ரம் த்ரிநேத்ரம்
    புஜகதரம கோரம்

    ரக்த வஸ்த்ராங்க தாரம்
    பரசு டமரு கட்கம்
    கேடகம் பாணச்சாயை
    திரிசிகநர கபாலை
    விப்ரதாம் பாவயாமி
    சிவனுக்கு பிரியமான இந்த ஸ்லோகத்தை தினமும் அல்லது பிரதோஷ தினங்களில் சொல்லுவதால், வாழ்வில் தடைகள் நீங்கி வளம் பெறலாம்.
    சிவனுக்கு பிரியமான இந்த ஸ்லோகத்தை தினமும் அல்லது பிரதோஷ தினங்களில் சொல்லுவதால், வாழ்வில் தடைகள் நீங்கி வளம் பெறலாம்.

    பொன்னார் மேனியனே புலித்தோலை அரைக் கசைத்து
    மின்னார் செஞ்சடைமேல் மிளர்கொன்றை அணிந்தவனே
    மன்னே மாமணியே மழபாடியுள் மாணிக்கமே
    அன்னே உன்னையல்லால் இனியாரை நினைக்கேனே.

    இந்த ஸ்லோகத்தை தினமும் 11 முறை படித்து வரலாம். இந்த ஸ்லோகம் படிக்கும் போது அசைவம் சாப்பிடாமல் இருத்தல் நலம்.
    ராகு தோஷத்திலிருந்து நிவர்த்தி அடைய (நாகதோஷம்) கீழே கொடுக்கப்பட்டுள்ள ஸ்லோகத்தை தினமும் சொல்லி வந்தால் நல்ல பலன் கிடைப்பதை காணலாம்.
    ஓம் சிரரூபாய வித்மஹே
    அமிருதேசாய தீமஹி
    தன்னோ ராஹுஹ் ப்ரசோதயாத்
    ஓம் நகத்வஜாய வித்மஹே
    பத்மஹஸ்தாய தீமஹி
    தன்னோ ராஹுஹ் ப்ரசோதயாத்
    ஓம் நீலவர்ணாய வித்மஹே
    சிம்ஹிகேசாய தீமஹி
    தன்னோ ராஹுஹ் ப்ரசோதயாத்
    ஓம் பைடினசாய வித்மஹே
    சர்மதராய தீமஹி
    தன்னோ ராஹுஹ் ப்ரசோதயாத்
    இது பூலோக கைலாசமான விளங்கும் சிதம்பரத்தில் ஆனந்த நடனமாடும் நடராஜமூர்த்தியைப் போற்றும் மஹாமந்திரம். இந்த மந்திரம் விசேஷமாக பேரின்ப நிலையை அளிக்கும்.
    இதம் கமலஸுந்தரம் ஸதஸி காஞ்சநே ந்ருத்யத:
    ஸதஞ்சித முதஞ்சிதம் கிமபி குஞ்சிதம் சஞ்சலம்
    விசிந்த்ய சிதம்பரே ஹ்ருதயஸம்பதே ஸாஸ்வதம்
    விரிஞ்சகரகந்துகம் சரணமிந்து சூடாமணே:
    ஸிவ ஸிவ சரணம் ஸிவானந்தம் ஸிவ ஸிவ ஸிவாய ஸிவாய நமஹ

    - சிதம்பர பஞ்சாக்ஷர மந்திரம்

    பொதுப் பொருள்: இது பூலோக கைலாசமான விளங்கும் சிதம்பரத்தில் ஆனந்த நடனமாடும் நடராஜமூர்த்தியைப் போற்றும் மஹாமந்திரம். அவர் தன் குஞ்சிதபாதத்தைத் தூக்கி நடனமிடும் காட்சி அற்புதமானது. பொன்னம்பலத்தில் உலகை இயக்குவதற்காக அவர் ஆனந்த திருநடனம் புரிகிறார். சிவ எனும் இரண்டெழுத்து மந்திரம் நம் பாவங்களை நீக்கி புண்ணியத்தை அளிக்கவல்லது. இம்மந்திரத்தில் ஏழு முறை சிவ நாமம் உச்சரிக்கப்படுகிறது. இந்த மந்திரம் வாழ்க்கையில் அடியார்களுக்கு அறம், பொருள், இன்பம், வீடு, எனும் பிறவிப்பயனை அளிக்கவல்லது. மேலும் இந்த மந்திரம் விசேஷமாக பேரின்ப நிலையை அளிக்கும்.
    ×