என் மலர்tooltip icon

    ஸ்லோகங்கள்

    சூரிய தோஷம் இருப்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இந்த ஸ்லோகத்தை தினமும் அல்லது ஞாயிற்று கிழமைகளில் விரதம் இருந்து சொல்லி வழிபாடு செய்து வரலாம்.
    ஸம்ரக்த சூர்ணம் ஸஸுவர்ணதோயம்
    ஸகுங்குமாபம் ஸகுஸம் ஸபுஷ்பம்
    ப்ரதத்த மாதாய ச ஹேம பாத்ரே
    ஸஹஸ்ரபானோ பகவன் ப்ரஸீத

    - சூர்ய ஸ்லோகம்

    பொதுப்பொருள்: சிந்தூரம் போன்ற சிவந்த நிறமுள்ளவரே ஆதவனே நமஸ்காரம். அழகிய மண்டலத்தைக் கொண்டவரே, ஸ்வர்ணம், ரத்னம் இழைத்த ஆபரணங்களைத் தரித்தவரே, சூரிய பகவானே, நமஸ்காரம். தாமரையின் ஒளி போன்ற கண்களை உடையவரே, அழகிய தாமரையைக் கையிலேந்தியவரே, ப்ரம்மா, இந்திரன், நாராயணன், சங்கரன் ஆகியோரின் வடிவமாய்த் திகழ்பவரே, தினகரா, நமஸ்காரம்.

    தேய்பிறை அஷ்டமி தினத்தன்று இத்துதியை முடிந்த அளவு பாராயணம் செய்து பைரவரை தரிசித்தால் எல்லா வகையான ஆபத்துகளும் நீங்கும். கண் திருஷ்டிகள் அகலும்.
    ரக்த ஜ்வால ஜடாதரம் ஸுவிமலம் ரக்தாங்க தேஜோமயம்
    த்ருத்வா சூல கபால பாச டமருத் லோகஸ்ய ரக்ஷாகரம்
    நிர்வாணம் கந வாஹனம் த்ரிநயனம் ஆனந்த கோலாஹலம்
    வந்தே ஸர்வ பிசாசநாத வடுகம் க்ஷேத்ரஸ்ய பாலம் சிவம்.

    பொதுப்பொருள்: சிவந்த சிகையும் ஒளிமிகுந்த தேகத்தையும் கொண்ட பைரவரே, நமஸ்காரம். சூலம், கபாலம், உடுக்கை ஆகியன தரித்து உலகத்தைக் காப்பவரே, நன்றியின் வடிவமான நாயை வாகனமாகக் கொண்டவரே, நமஸ்காரம். முக்கண்கள் கொண்டவரே, ஆனந்த வடிவினரே, பூத, பிரேத, பிசாசுக் கூட்டங்களைக் கட்டுப்படுத்தும் தலைவரே, அனைத்து புண்ணிய க்ஷேத்திரங்களையும் ரக்ஷிப்பவரே, பைரவரே, நமஸ்காரம்.
    நடராஜரின் அருள் கிடைக்க கீழே கொடுக்கப்பட்டுள்ள ஸ்லோகத்தை தினமும் சொல்லி நடராஜரை வழிபாடு செய்து வந்தால் நிச்சயம் நிறைவேறும்.
    மானாட மழுவாட மதியாட புனலாட மங்கை சிவகாமியாட,
    மாலாட நூலாட மறையாட திறையாட மறைதந்த பிரம்மனாட,
    கோனாட வானுலகு கூட்டமெல்லாமாட, குஞ்சர முகத்தனாட,
    குண்டலமிரண்டாட தண்டைபுலியுடையாட குழந்தை முருகேசனாட,
    ஞானசம்பந்தரொடு யிந்திராதி பதினெட்டு முனியட்ட பாலகருமாட,
    நரை தும்பை யறுகாட நந்திவாகனமாட நாட்டியப் பெண்களாட,
    வினையோட உனைப்பாட யெனைநாடியிது வேளை விருதோடு ஆடிவருவாய்
    ஈசனே சிவகாமி நேசனே யெனையீன்ற தில்லைவாழ் நடராசனே.

    - நடராஜப் பத்து

    பொதுப்பொருள்: மான், மழு, மதி, புனல் மற்றும் மங்கை சிவகாமியும் ஆட, திருமால், வேதங்கள் பிரம்மன் போன்றோரோடு தேவர்கள், கணபதி, முருகன், ஞானசம்பந்தர், இந்திரனோடு பதினெட்டு சித்தர்கள், நந்தி, நாட்டியப்பெண்களோடு எம் வினைகளும் ஆடி ஓடிட உம்மைப் பணியும் வேளையிது. ஈசனே, சிவகாமி நேசனே, எமையீன்ற தில்லை வாழ் நடராஜனே சரணம். 
    சந்திரனின் ஆதிக்கம் மிகுந்த அமாவாசையும், சந்திரனுக்குரிய திங்கட்கிழமையும் சேர்ந்த நாளில் (4.1.19), அதிகாலையில் அரச மரத்தை நாராயணராக பாவித்து, இந்த மந்திரத்தை சொல்ல வேண்டும்.
    அமாவாசை திதியும், திங்கட்கிழமையும் சேர்ந்து வரும் தினத்தை ‘அமாசோமவாரம்’ என்பார்கள். அந்த நாளில் அரச மரத்தை வழிபட்டு வலம் வருதல் சிறப்பு. சந்திரனின் ஆதிக்கம் மிகுந்த அமாவாசையும், சந்திரனுக்குரிய திங்கட்கிழமையும் சேர்ந்த நாளில், அதிகாலையில் அரச மரத்தை நாராயணராக பாவித்து,

    ‘மூலதோ பிரம்ஹரூபாய,
    மத்யதோ விஷ்ணு ரூபிணே
    அக்ரத: சிவ ரூபாய விருக்ஷ
    ராஜய தே நமோ நம’

    என்ற சுலோகத்தை சொல்லியபடி 108 முறை வலம் வரவேண்டும். இதனால் எல்லா வித நன்மைகளும் வந்தடையும்.
    வியாழக்கிழமைகளில் இத்துதியை படித்தால் தீராத வயிற்றுவலி நீங்கும். பலம், தீர்க்காயுள், வாரிசு, பொருள் வளரும். பாவங்கள் விலகும். குரு சம்பந்தப்பட்ட அனைத்து தோஷங்களும் நீங்கும்.
    குருப்ரஹஸ்பதிர்ஜீவ, ஸுராசார்யோ விதாம் வர:
    வாகீஸோ திஷணோ தீர்கஸ்மஸ்ரு: பீதாம்பரோ யுவா
    ஸுதாத்ருஷ்டிர் க்ரஹாதீஸோ க்ரஹபீடாபஹாரக:
    தயாகர: ஸௌம்யமூர்த்தி: ஸுராசார்ய: குட்மலத்யுதி:

    - ஸ்கந்த புராணத்தில் உள்ள குரு ஸ்துதி

    பொதுப்பொருள்: குரு, ப்ரஹஸ்பதி, ஸுராசார்யர், வாகீஸர், தீர்கஸ்மஸ்ரு, பீதாம்பரர், யுவர், கிரஹாதீசர், கிரகபீடாஹரர், தயாகரர், ஸெளம்யமூர்த்தி, குட்மலத்யுதி என்றெல்லாம் போற்றப்படும் குரு பகவானே நமஸ்காரம்.

    வியாழக்கிழமைகளில் ஸ்கந்தபுராணத்தில் இடம்பெற்றுள்ள இத்துதியை படித்தால் தீராத வயிற்றுவலி நீங்கும். பலம், தீர்க்காயுள், வாரிசு, பொருள் வளரும். பாவங்கள் விலகும். குரு சம்பந்தப்பட்ட அனைத்து தோஷங்களும் நீங்கும். 
    கீழே கொடுக்கப்பட்டுள்ள இத்துதியை தினமும் மூன்று முறை பாராயணம் செய்து வந்தால் பாவங்கள், வியாதிகள் நீங்கும். மனக்கவலைகள் அகலும்.
    பாபம் தாபம் வ்யாமி மாதிம் ச தைர்யம்
    பீதிம் க்லேசம் த்வம் ஹராஸு த்வதன்யம்
    த்ராதாரம் நோ வீக்ஷ ஈசாஸ்த ஜனார்த்தே
    கோராத் கஷ்டாதுத்தராஸ்மாந் நமஸ்தே.
    குரு தத்தாத்ரேய பஞ்சரத்னம்

    பொதுப் பொருள்:

    பாவத்தையும், தாபத்தையும், ரோகங்களையும் மனக்கவலையையும், ஏழ்மையையும், சத்ரு பயத்தையும் துக்கத்தையும் ஓ தத்தாத்ரேயரே! தாங்கள் நீக்கியருள வேண்டும்.
    கீழே கொடுக்கப்பட்டுள்ள இந்த ஸ்லோகத்தை தினமும் பூஜையறையில் கூறி வர சர்வ காரியங்களிலும் ஏற்படும் தடைகள் நீங்கும். வெற்றி கிடைக்கும்.
    சிவ: சக்த்யா யுக்தோ யதி பவதி சக்த: ப்ரபவிதும்
    ந சேதேவம் தேவோ ந கலு: குசல: ஸ்பந்திது மபி:
    அதஸ்த்வா மாராத்யாம் ஹரி ஹர விரிஞ்சாதிபிரபி
    ப்ரணந்தும் ஸ்தோதும் வா கதமக்ருத புண்ய
    ப்ரபவதி ஸௌந்தர்யலஹரி ஸ்லோகம்

    பொதுப் பொருள்:

    மங்கள மூர்த்தியான மகாதேவன் பராசக்தியாகிய உன்னுடன் கூடியவராக இருந்தால் மட்டுமே பிரபஞ்சத்தை ஆக்குவதற்கு திறமையுடையவர் ஆகிறார். அவ்வாறு கூடியில்லா விட்டால் அவரால் அசைவதற்குக் கூட திறமை இருப்பதில்லையே? ஆகையால், விஷ்ணு, ருத்ரன், பிரம்மா முதலியவர்களாலும் பூஜித்தற்குரிய உன்னை புண்ணியம் செய்யாதவர்கள் வணங்குவதற்கோ அல்லது துதிப்பதற்கோ எங்கனம் முடியும் தாயே?
    இத்துதியை திருமணம் ஆக வேண்டிய காளையரும், கன்னியரும் தினமும் நம்பிக்கையுடன் பாராயணம் செய்து வந்தால் அவர்களுக்கு விரைவில் திருமணம் நிச்சயமாகும்.
    தேவக்யா ஸுப்ரஜா கிருஷ்ணருக்மிணீ
    ப்ரியவல்லபவிவாஹம் தேஹிமே
    ஸீக்ரம்வாஸுதேவ நமோஸ்துதே.
    ஸ்ரீக்ருஷ்ண பூஜா கல்பம்

    பொதுப்பொருள்:

    தேவகியின் மைந்தனான கிருஷ்ணா, ருக்மிணிக்குப் பிரியமானவனே, நமஸ்காரம். எனக்கு சீக்கிரம் திருமணம் நிகழ அருள்புரிவாய் வாசுதேவனே! தங்களை வணங்குகிறேன்.
    காமாட்சி அம்மனுக்கு உகந்த இந்த ஸ்லோகத்தை தினமும் அல்லது வெள்ளிக்கிழமைகளில் சொல்லி வழிபாடு செய்து வந்தால் விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும்.
    ஸ்யாமாகாசன சந்த்ரிகா த்ரிபுவனே புண்யாத்மநாமனனே
    ஸீமாஸுன்ய கவித்வ வர்ஷ ஜனனீயா காபி காதம்பினீ
    மாராராதி மனோவிமோஹனவிதௌ காசித்தம: கந்தலீ
    காமாக்ஷ்யா: கருணாகடாக்ஷ லஹரீ காமாய மே கல்பதாம் மூக பஞ்சசதீ

    பொதுப் பொருள்:

    காமாட்சி தேவியே, கருணை நிரம்பிய தங்கள் கண்களை நிகரற்ற கருப்பு நிறமுள்ள சந்திரனைப் போலவும், மூவுலகிலும் புண்ணியம் செய்தவர்களின் வாக்கில் அளவற்ற கவித்துவ சக்தியைப் பொழிவிக்கும் மேகக் கூட்டங்கள் போலவும், மன்மதனை எரித்த பரமேஸ்வரனின் மனதை மோகிக்கச் செய்வதில் நிகரற்ற இருள் குவியல் போலவும் காண்கிறேன். அந்த உன் கருணா கடாக்ஷ அலைகள் எனது அனைத்து விருப்பங்களையும் பூர்த்தி செய்ய வேண்டுகிறேன். அபிராமி பட்டருக்காக அமாவாசையை பௌர்ணமியாக்கிய உன் திருவருள் பக்தர்களுக்காக எதைத்தான் செய்யாது? தங்களை மீண்டும் மீண்டும் வணங்குகிறேன், தாயே!
    நமது நல்லெண்ணங்கள், நியாயமான விருப்பங்கள் மற்றும் கோரிக்கைகள் நிறைவேற நமது உள்ள தூய்மையோடு இறைவனின் அனுக்கிரகமும் வேண்டும். அதற்கான நந்தி பகவானின் நந்தி ஸ்லோகம் இதோ.
    நந்திகேசி மஹாயாக
    சிவதயா நபராயண கௌரீ
    சங்கரஸேவர்த்தம்
    அனுக்ராம் தாதுமாஹஸ

    சிவனின் வாகனமும், சிறந்த ஞானியும் ஆன நந்தி பகவானை போற்றும் ஸ்லோகம் இது. இந்த நந்தி ஸ்லோகத்தை தினமும் இது. குளித்து முடித்ததும் 9 முறை அல்லது 27 முறை கூறி வழிபடலாம். மாத சிவராத்திரி, பிரதோஷம் மற்றும் மஹாசிவராத்திரி ஆகிய தினங்களில் சிவன் கோவிலுக்கு சென்று நந்தி பகவானை இந்த ஸ்லோகத்தை கொண்டு 9 முறை துதித்த பின்பு சிவபெருமான் மற்றும் பார்வதியை வணங்குவதால் நமது மனதில் இருக்கும் தீமையானவை அனைத்தும் நீங்கி, உங்களின் கோரிக்கைகள், நல்லெண்ணங்கள், நியாயமான விருப்பங்கள் அனைத்தும் நிச்சயம் நிறைவேற அருள்புரிவார் நந்தி பகவான்.
    இந்தத் துதியை தினமும் காலையில், சிவபெருமானுக்கு பூஜை செய்து 11 முறை கூறி வர வேண்டும். இதனால் பதவி உயர்வு கிட்டும். வாழ்வு வளம் பெறும்.
    பொன்னார் மேனியனே புலித்தோலை அரைக் கசைத்து
    மின்னார் செஞ்சடைமேல் மிளர்கொன்றை அணிந்தவனே
    மன்னே மாமணியே மழபாடியுள் மாணிக்கமே
    அன்னே உன்னையல்லால் இனியாரை நினைக்கேனே.

    பொதுப்பொருள்:  


    பொன் போன்ற திருமேனியனே! இடையில் புலித்தோலை தரித்தவனே! மின்னும் சடையின் மீது மிளிரும் கொன்றை மாலை தரித்தவனே! எம் மன்னனே! மாமணியாய் துலங்கும் மழபாடி மாணிக்கமே! தங்களையல்லால் இனி யாரையும் நினைக்க மாட்டேன்.
    எதிரிகளின் தொல்லை, துன்பம், கஷ்டம் வரும் போது வாராகிமாலையில் உள்ள மிருககுண மாரணம் 17 என்ற பாடலை பாடி வாராகி அம்மனை வழிபாடு செய்ய வேண்டும்.
    மிருககுண மாரணம் 17:-

    “பாடகச் சீரடிப் பஞ்சமி அன்பர் பகைஞர்தமை
    ஓடவிட்டே கை உலக்கை கொண்டு உதிரமெல்லாம்
    கோடகதிட்டு வடித்தெடுத்து ஊற்றி குடிக்கும் எங்கள்
    ஆடகக் கும்ப இணைக்கொங்கையாள் என் அம்பிகையே…”

    விளக்கம்:- வாராகி என்னும் பஞ்சமியை தொழுத அன்பர்கள் பகைவரை ஓடவிட்டு தன் கையில் இருக்கும் உலக்கை கொண்டு அடித்து உதிரத்தை குடித்தும் தன் நெஞ்சில் பூசியும் தன் ஆவேசத்தை தீர்த்து கொள்பவள் இந்த வாராகி.

    பயன்பாடு:- பகைவர் வேண்டும் என்றே துன்புறுத்தும் போது அன்னையை இப்பாடலை பாடி வணங்கலாம்.
    ×