என் மலர்tooltip icon

    ஸ்லோகங்கள்

    குபேர காயத்ரி மந்திரத்தை 108 அல்லது 1008 முறை துதித்து வருவதால் நீங்கள் விரும்பிய பணவரவு அதிகரிக்கும். செல்வம் பெருகும்.
    ஒம்ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் லஷ்மி குபேராய நம

    குபேரனுக்குரிய வடதிசையை பார்த்தவாறு அமர்ந்து இந்த மூல மந்திரத்தை 108 அல்லது 1008 முறை துதிக்க வேண்டும். இதை ஒவ்வொரு வெள்ளியன்றும் செய்து வர உங்களுக்கு வீண் செலவுகள் ஏற்படாது.

    குபேர வழிபாடு செய்ய நினைப்பவர்கள் செப்புத் தகட்டில் செய்யப்பட்ட குபேர எந்திரத்தை வாங்கி வந்து வெள்ளிக்கிழமைகளில் குபேர எந்திரத்தின் நான்கு முனைகளிலும் மஞ்சள், சந்தனம் மற்றும் குங்குமம் இட்டு, பூக்கள் சாற்றி, எந்திரத்திற்கு முன்பாக ஒரு தட்டில் சிறிது மஞ்சள் அட்சதை அரிசியை வைத்து தூபங்கள் கொளுத்தி, குபேர காயத்ரி மந்திரத்தை 108 அல்லது 1008 முறை துதித்து வருவதால் நீங்கள் விரும்பிய பணவரவு அதிகரிக்கும். செல்வம் பெருகும்.
    இந்த துதியை மனமார படித்தால் உங்களுக்கு எதிரிகளால் ஏற்பட்டிருக்கும் எத்தகைய பிரச்சனைகளும் நீங்கும், சத்ரு ஜெயம் எனப்படும் எதிரிகளை வெல்லும் பராக்கிரமம் உண்டாகும்.
    ஓம் கேம் காம் பட் ப்ராணக்ர ஹாஸி ஹாஸி,
    பிராணக்ர ஹாஸி ஹூம் பட் ஸர்வ
    சத்துரு சம்ஹாரணாய சரப ஸாலுவாய
    பக்ஷி ராஜாய ஹூம்பட் ஸ்வாஹா.

    உலகை காக்க சிவபெருமானை எடுத்த உருவம் தான் “சரபேஸ்வரர்”. ஸ்ரீ சரபேஸ்வரரை போற்றும் இந்த மூல மந்திரத்தை போற்றி துதிகளை தினமும் உங்களால் முடிந்த எண்ணிக்கையில் துதிப்பது சிறப்பு. ஞாயிற்று கிழமையன்று உடல், மன சுத்தி செய்து கொண்டு, எத்தகைய புலால் உணவுகளையும் உண்ணாமல் அந்த தினத்தில் வரும் மாலை 4.30 மணி முதல் 6.00 மணிக்குள்ளான ராகு காலத்தில் சிவன் கோவிலுக்கு சென்று சரபேஸ்வரர் சந்நிதி முன்போ அல்லது சிவபெருமான் சந்நிதி முன்போ விளக்கெண்ணெய் தீபம் ஏற்றி, இந்த துதியை மனமார படித்தால் உங்களுக்கு எதிரிகளால் ஏற்பட்டிருக்கும் எத்தகைய பிரச்சனைகளும் நீங்கும், சத்ரு ஜெயம் எனப்படும் எதிரிகளை வெல்லும் பராக்கிரமம் உண்டாகும்.

    மந்திரிக மற்றும் துஷ்ட சக்தி பாதிப்புகளில் இருந்து விமோச்சனம் கிட்டும். நீங்கள் புது வீடு கட்டுவதில் ஏற்படும் பிரச்சனைகள், தாமதங்கள் நீங்கும். நினைத்த காரியங்கள் நடைபெற தொடங்கும். மனம் மற்றும் செயல்புரிவதில் இருக்கும் தயக்கங்கள் நீங்கி தெளிவு ஏற்படும்.
    அம்பாளை மனதில் தியானித்து இந்த பாடலை உங்களால் எத்தனை முறை முடிகிறதோ அத்தனை முறைப் பாடலாம். இதைத் தொடர்ந்து செய்து வர நீங்கள் பிறந்த நேரத்தில் ஏற்பட்ட தோஷங்கள் விலகும்.
    மனிதன் இப்பூமியில் ஜெனிக்கும் போது அன்றைய கிரக, நாள், திதி, கிழமை போன்றவற்றில் ஏற்படும் மாறுபாடுகளால் அவனுக்கு “பிறவி தோஷம்” உண்டாகிறது. இதனால் பாதிக்கப்படும் அம்மனிதன் வாழ்வில் பல்வேறு இன்னல்களைச் சந்திக்கிறான். இது போன்ற பிரச்சனைகளை தீர இவர்கள் பாட வேண்டிய பாடல் தான் இது.

    “கொடியே இளவஞ்சிக் கொம்பே எனக்குவம் பேபழுத்த
    படியே மறையின் பரிமள மேபனி மால் இமயப்
    பிடியே பிரமன் முதலாய தேவரைப் பெற்ற அம்மே
    அடியேன் இறந்து இங்கு இனிப்பிற வாமல் வந்து ஆண்டுகொள்ளே”

    அபிராம பட்டரால் இயற்றப்பட்ட “அபிராமி அந்தாதியின்” ஒரு பகுதியான இப்பாடல் வரிகள் இறையாற்றல் நிறைந்தாகும். இப்பாடலை தினமும் காலையில் தேக மன சுத்தியுடன் “அம்பாள்” கோவிலுக்குச் சென்றோ அல்லது அம்பாளை மனதில் தியானித்து உங்களால் எத்தனை முறை முடிகிறதோ அத்தனை முறைப் பாடலாம். இதைத் தொடர்ந்து செய்து வர நீங்கள் பிறந்த நேரத்தில் ஏற்பட்ட தோஷங்கள் விலகும். அம்பாளின் அருளினால் நீங்கள் விரும்பிய அத்தனைச் செல்வங்களையும் பெறுவீர்கள்.
    திருமணமானது விரைவில் நடக்க கீழே உள்ள மந்திரம் அதை ஜபித்து வாருங்கள் போதும். திருமணம் நிச்சயம் விரைவில் கைகூடும்.
    காமேஸ் வராய காமாய காம பாலாய காமினே நம:
    காம விஹாராய காம ரூபதராய ச
    மங்களே மங்களாதாரே மாங்கல்யே மங்களப்ரதே
    மங்களார்த்தம் மங்களேசிமாங்கல்யம் தேஹிமே சதா:

    மேலே உள்ள மந்திரம் அதை தினம் தோறும் கூறுவது நல்லது. தினம் தோறும் ஜபிக்க முடியாதவர்கள் செவ்வாய் மற்றும் வெள்ளி கிழமைகளில் தொடர்ந்து ஜபித்து வர, நிச்சயம் திருமணத்தில் உள்ள தடைகள் அனைத்தும் விலகி, மனதிற்கு பிடித்த, குடும்பத்திற்கு ஏற்ற ஒரு வரன் விரைவில் அமைய வழி பிறக்கும்.
    மேலே உள்ள மந்திரம் அதை தினம் தோறும் கூறுவது நல்லது. தினம் தோறும் ஜபிக்க முடியாதவர்கள் செவ்வாய் மற்றும் வெள்ளி கிழமைகளில் தொடர்ந்து ஜபித்து வர, நிச்சயம் திருமணத்தில் உள்ள தடைகள் அனைத்தும் விலகி, மனதிற்கு பிடித்த, குடும்பத்திற்கு ஏற்ற ஒரு வரன் விரைவில் அமைய வழி பிறக்கும்.
    மேலே உள்ள மந்திரம் அதை தினம் தோறும் கூறுவது நல்லது. தினம் தோறும் ஜபிக்க முடியாதவர்கள் செவ்வாய் மற்றும் வெள்ளி கிழமைகளில் தொடர்ந்து ஜபித்து வர, நிச்சயம் திருமணத்தில் உள்ள தடைகள் அனைத்தும் விலகி, மனதிற்கு பிடித்த, குடும்பத்திற்கு ஏற்ற ஒரு வரன் விரைவில் அமைய வழி பிறக்கும்.
    மேலே உள்ள மந்திரம் அதை தினம் தோறும் கூறுவது நல்லது. தினம் தோறும் ஜபிக்க முடியாதவர்கள் செவ்வாய் மற்றும் வெள்ளி கிழமைகளில் தொடர்ந்து ஜபித்து வர, நிச்சயம் திருமணத்தில் உள்ள தடைகள் அனைத்தும் விலகி, மனதிற்கு பிடித்த, குடும்பத்திற்கு ஏற்ற ஒரு வரன் விரைவில் அமைய வழி பிறக்கும்.
    நம் வாழ்க்கைக்குத் தேவையான எல்லாவிதமான வளங்களையும் வழங்கக்கூடிய திருமகளை எட்டு வித செல்வங்களுக்கு அதிபதியாக எட்டு தெய்வீக வடிவங்களில் வழிபடக்கூடிய அமைப்பு அஷ்டலட்சுமி என்றழைக்கப்படுகிறது.
    நம் வாழ்க்கைக்குத் தேவையான எல்லாவிதமான வளங்களையும் வழங்கக்கூடிய திருமகளை எட்டு வித செல்வங்களுக்கு அதிபதியாக எட்டு தெய்வீக வடிவங்களில் வழிபடக்கூடிய அமைப்பு அஷ்டலட்சுமி என்றழைக்கப்படுகிறது.

    1.மஹாலக்ஷ்மி:

    யாதேவி சர்வ பூதேஷு லக்ஷ்மி ரூபேண சம்ஸ்திதா:நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம:

    எந்தத் தேவியானவள் அனைவரிடத்திலும் (அனைத்து உயிர்களிலும்) ஸ்ரீலக்ஷ்மி உருவில் உள்ள ஸ்ரீமஹாலக்ஷ்மியை வணங்குகிறேன்.நமஸ்காரங்கள், நமஸ்காரங்கள், நமஸ்காரங்கள்

    2.வித்யா லக்ஷ்மி:

    யாதேவி சர்வ பூதேஷு வித்யா (புத்தி) ரூபேண சம்ஸ்திதா:நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம:

    எந்தத் தேவியானவள் அனைவரிடத்திலும்(அனைத்து உயிர்களிலும்) புத்தியாக, ஞானமாக இருக்கின்றாளோ அந்த தேவிக்கு நமஸ்காரங்கள். அந்த புத்தி உருவில் உறைபவளுக்கு நமஸ்காரங்கள், நமஸ்காரங்கள், நமஸ்காரங்கள்

    3.ஸந்தான லக்ஷ்மி:

    யாதேவி சர்வ பூதேஷு மாத்ரு ரூபேண சம்ஸ்திதா:நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம:
    எந்தத் தேவியானவள் அனைவரிடத்திலும்(அனைத்து உயிர்களிலும்) ,எல்லா உயிரினங்களிலும் தாய் உருவில் உள்ள ஸந்தான லக்ஷ்மியை வணங்குகிறேன். நமஸ்காரங்கள், நமஸ்காரங்கள், நமஸ்காரங்கள்.

    4.காருண்யலக்ஷ்மி:

    யாதேவி சர்வ பூதேஷு காருண்ய ரூபேண சம்ஸ்திதா:நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம:

    எந்தத் தேவியானவள் அனைவரிடத்திலும்(அனைத்து உயிர்களிலும்) , எல்லா உயிரிங்களிலும் தயையுருவில் உள்ள காருண்ய லக்ஷ்மியை வணங்குகிறேன். நமஸ்காரங்கள், நமஸ்காரங்கள், நமஸ்காரங்கள்.

    5.சௌபாக்ய லக்ஷ்மி:

    யாதேவி சர்வ பூதேஷு துஷ்டி ரூபேண சம்ஸ்திதா:நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம:

    எந்தத் தேவியானவள் அனைவரிடத்திலும்(அனைத்து உயிர்களிலும்) , எல்லா உயிரினங்களிலும் துஷ்டி (மகிழ்ச்சி) உருவில் உள்ள சௌபாக்ய லக்ஷ்மியை வணங்குகிறேன். நமஸ்காரங்கள், நமஸ்காரங்கள், நமஸ்காரங்கள்.

    6.தனலக்ஷ்மி:
    யாதேவி சர்வ பூதேஷு புஷ்டி ரூபேண சம்ஸ்திதா:நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம:

    எந்தத் தேவியானவள் அனைவரிடத்திலும்(அனைத்து உயிர்களிலும்), புஷ்டி (நிறைவு / பலம் ) உருவத்தில் உள்ள தனலக்ஷ்மியை வணங்குகிறேன். நமஸ்காரங்கள், நமஸ்காரங்கள், நமஸ்காரங்கள்.

    7.வீரலக்ஷ்மி:

    யாதேவி சர்வ பூதேஷு த்ருதி ரூபேண சம்ஸ்திதா:நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம:

    எந்தத் தேவியானவள் அனைவரிடத்திலும்(அனைத்து உயிர்களிலும்), எல்லா உயிரினங்களிலும் தைர்ய உருவில் உள்ள வீரலக்ஷ்மியை வணங்குகிறேன். நமஸ்காரங்கள், நமஸ்காரங்கள், நமஸ்காரங்கள்.

    8.தான்யலக்ஷ்மி:

    யாதேவி சர்வ பூதேஷு ஸூதா ரூபேண சம்ஸ்திதா:நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம:

    எந்தத் தேவியானவள் அனைவரிடத்திலும்(அனைத்து உயிர்களிலும்), எல்லா உயிரினங்களிலும் பசியை நீக்கும் தான்ய உருவில் உள்ள தான்ய லக்ஷ்மியை வணங்குகிறேன். நமஸ்காரங்கள், நமஸ்காரங்கள், நமஸ்காரங்கள்
    அன்னையின் புகழ் பாடும் 108 போற்றி திருநாமங்களை நாமும் பாடி இஷ்ட சித்திகளைப் பெறுவோமாக.
    ஓம் அங்கயற்கண் அம்மையே    போற்றி
    ஓம் அகிலாண்ட நாயகியே    போற்றி
    ஓம் அருமறையின் வரம்பே    போற்றி
    ஓம் அறம் வளர்க்கும் அம்மையே    போற்றி
    ஓம் அரசிளங்குமரியே    போற்றி
    ஓம் அப்பர் பிணி மருந்தே    போற்றி
    ஓம் அமுதநாயகியே    போற்றி
    ஓம் அருந்தவநாயகியே    போற்றி
    ஓம் அருள் நிறை அம்மையே    போற்றி
    ஓம் ஆலவாய்க்கரசியே    போற்றி

    ஓம் ஆறுமுகத்தின் அன்னையே    போற்றி
    ஓம் ஆதியின் பாதியே    போற்றி
    ஓம் ஆலால சுந்தரியே    போற்றி
    ஓம் ஆனந்த வல்லியே    போற்றி
    ஓம் இளவஞ்சிக் கொடியே    போற்றி
    ஓம் இமயத்தரசியே     போற்றி
    ஓம் இடபத்தோன் துணையே    போற்றி
    ஓம் ஈசுவரியே    போற்றி
    ஓம் உயிர் ஓவியமே    போற்றி
    ஓம் உலகம்மையே    போற்றி

    ஓம் ஊழ்வினை தீர்ப்பாய்    போற்றி
    ஓம் எண் திசையும் வென்றோய்    போற்றி
    ஓம் ஏகன் துணையே    போற்றி
    ஓம் ஐங்கரன் அன்னையே    போற்றி
    ஓம் ஐயம் தீர்ப்பாய்    போற்றி
    ஓம் ஒப்பிலா அமுதே    போற்றி
    ஓம் ஓங்கார சுந்தரியே    போற்றி
    ஓம் கற்றோர்க்கு இனியோய்    போற்றி
    ஓம் கல்லார்க்கும் எளியோய்    போற்றி
    ஓம் கடம்பவன சுந்தரியே    போற்றி

    ஓம் கல்யாண சுந்தரியே    போற்றி
    ஓம் கனகமணிக்குன்றே    போற்றி
    ஓம் கற்பின் அரசியே    போற்றி
    ஓம் கருணை ஊற்றே    போற்றி
    ஓம் கல்விக்கு வித்தே    போற்றி
    ஓம் கனகாம்பிகையே    போற்றி
    ஓம் கதிரொளிச் சுடரே    போற்றி
    ஓம் கற்பனை கடந்த கற்பகமே    போற்றி
    ஓம் காட்சிக்கு இனியோய்    போற்றி
    ஓம் காலம் வென்ற கற்பகமே    போற்றி

    ஓம் கிளி ஏந்திய கரத்தோய்    போற்றி
    ஓம் குலச்சிறை காத்தோய்    போற்றி
    ஓம் குற்றம் பொறுக்கும் குணமே    போற்றி
    ஓம் கூடற்கலாப மயிலே    போற்றி
    ஓம் கோலப் பசுங்கிளியே    போற்றி
    ஓம் சம்பந்தன் ஞானத்தாயே    போற்றி
    ஓம் சக்தி வடிவே    போற்றி
    ஓம் சங்கம் வளர்த்தாய்    போற்றி
    ஓம் சிவகாம சுந்தரியே    போற்றி
    ஓம் சித்தம் தெளிவிப்பாய்    போற்றி

    ஓம் சிவயோக நாயகியே    போற்றி
    ஓம் சிவானந்தவல்லியே    போற்றி
    ஓம் சிங்காரவல்லியே    போற்றி
    ஓம் செந்தமிழ் தாயே    போற்றி
    ஓம் செல்வத்துக்கரசியே    போற்றி
    ஓம் சேனைத்தலைவியே    போற்றி
    ஓம் சொக்கர் நாயகியே    போற்றி
    ஓம் சைவ நெறி நிலைக்கச்செய்தோய்
        போற்றி
    ஓம் ஞானாம்பிகையே    போற்றி
    ஓம் ஞானப்பூங்கோதையே    போற்றி

    ஓம் தமிழர் குலச்சுடரே    போற்றி
    ஓம் தண்டமிழ்த் தாயே    போற்றி
    ஓம் திருவுடையம்மையே    போற்றி
    ஓம் திசையெலாம் புரந்தாய்    போற்றி
    ஓம் திரிபுரசுந்தரியே    போற்றி
    ஓம் திருநிலை நாயகியே    போற்றி
    ஓம் தீந்தமிழ்ச் சுவையே    போற்றி
    ஓம் தெவிட்டாத தெள்ளமுதே    போற்றி
    ஓம் தென்னவன் செல்வியே    போற்றி
    ஓம் தேன்மொழி அம்மையே    போற்றி

    ஓம் தையல் நாயகியே    போற்றி
    ஓம் நற்கனியின் சுவையே    போற்றி
    ஓம் நற்றவத்தின் கொழுந்தே    போற்றி
    ஓம் நல்ல நாயகியே    போற்றி
    ஓம் நீலாம்பிகையே    போற்றி
    ஓம் நீதிக்கரசியே    போற்றி
    ஓம் பக்தர் தம் திலகமே    போற்றி
    ஓம் பழமறையின் குருந்தே    போற்றி
    ஓம் பரமானந்தப் பெருக்கே    போற்றி
    ஓம் பண்ணமைந்த சொல்லே    போற்றி

    ஓம் பவளவாய்க் கிளியே    போற்றி
    ஓம் பல்லுயிரின் தாயே    போற்றி
    ஓம் பசுபதி நாயகியே    போற்றி
    ஓம் பாகம்பிரியா அம்மையே    போற்றி
    ஓம் பாண்டிமாதேவியின் தேவே    போற்றி
    ஓம் பார்வதி அம்மையே    போற்றி
    ஓம் பிறவிப்பிணி தீர்ப்பாய்    போற்றி
    ஓம் பெரிய நாயகியே    போற்றி
    ஓம் பொன்மயில் அம்மையே    போற்றி
    ஓம் பொற்கொடி அன்னையே    போற்றி

    ஓம் மலையத்துவசன் மகளே    போற்றி
    ஓம் மங்கள நாயகியே    போற்றி
    ஓம் மழலைக்கிளியே    போற்றி
    ஓம் மனோன்மணித் தாயே    போற்றி
    ஓம் மண்சுமந்தோன் மாணிக்கமே    போற்றி
    ஓம் மாயோன் தங்கையே    போற்றி
    ஓம் மாணிக்கவல்லியே    போற்றி
    ஓம் மீனவர்கோன் மகளே    போற்றி
    ஓம் மீனாட்சி அம்மையே    போற்றி
    ஓம் முழுஞானப் பெருக்கே    போற்றி

    ஓம் முக்கண் சுடர் விருந்தே    போற்றி
    ஓம் யாழ்மொழி அம்மையே    போற்றி
    ஓம் வடிவழகு அம்மையே    போற்றி
    ஓம் வேலனுக்கு வேல் தந்தோய்    போற்றி
    ஓம் வேதநாயகியே    போற்றி
    ஓம் வையகம் வாழ்விப்பாய்    போற்றி
    ஓம் அம்மையே அம்பிகையே போற்றி போற்றி
    ஓம் அங்கயற்கண் அம்மையே போற்றி போற்றி
    வீட்டில் விளக்கு ஏற்றிய பிறகு கீழே கொடுக்கப்பட்டுள்ள இந்த பாடலை பாடி வழிபாடு செய்தால் வீடுகளில் செல்வம் நிறைந்து இன்பமாக வாழலாம். மங்களமே நடக்கும்
    சோதியே சுடரே சூழொளி விளக்கே
    சுரிகுழற் பணைமுலை மடந்தை
    பாதியே பரனே பால்கொள் வெண்ணீற்றாய்
    பங்கயத்து அயனும் மாலறியா
    நீதியே செல்வத் திருப்பெருந்துறையில்
    நிறைமலர்க் குருந்த மேவியசீர்
    ஆதியே செல்வத் திருப்பெருந்துறையில்
    நிறைமலர்க் குருந்த மேவியசீர்

    இப்படிச் செய்வதால் வீடுகளில் செல்வம் நிறைந்து இன்பமாக வாழலாம். மங்களமே நடக்கும் வீடுகளில் செல்வம் நிறைந்திருக்கும்.
    துர்கா தேவிக்கு உகந்த இந்த பாடலை தினமும் அல்லது வெள்ளி, செவ்வாய் கிழமைகளில் சொல்லி வழிபாடு செய்து வந்தால் நன்மை உண்டாகும்.
    ஜெயஜெயதேவி
    ஜெய ஜெய தேவி ஜெய ஜெய தேவி துர்கா தேவி சரணம்
    ஜெய ஜெய தேவி ஜெய ஜெய தேவி துர்கா தேவி சரணம்
    ஜெய ஜெய தேவி ஜெய ஜெய தேவி துர்கா தேவி சரணம்
    துர்க்கை அம்மனை துதித்தால் என்றும்
    துன்பம் பறந்தோடும்
    தர்மம் காக்கும் தாயாம் அவளை தரிசனம்
    கண்டால் போதும்
    கர்ம வினைகளும் ஓடும் சர்வமங்களம் கூடும்
    பொற்கரங்கள் பதினெட்டும் நம்மை
    சுற்றிவரும் பகைவிரட்டும்
    நெற்றியிலே குங்குமப் பொட்டும் வெற்றிப்
    பாதையைக் காட்டும்
    ஆயிரம் கண்கள் உடையவளே
    ஆதிசக்தியவள் பெரியவளே
    ஆயிரம் நாமங்கள் கொண்டவளே தாயைப்
    போல் நம்மை காப்பவளே
    சங்கு சக்கரம் வில்லும் அம்பும் மின்னும்
    வாளும் வேலுடன், சூலமும்
    தங்க கைகளில் தாங்கி நிற்பாள் அவள் தங்க
    கைகளில் தாங்கி நிற்பாள்
    சிங்கத்தின் மேல் அவள் வீற்றிருப்பாள்
    திங்களை முடிமேல் சூடி நின்றாள்
    கருணைக் கண்கொண்டு பார்த்திருப்பாள்
    மங்கள வாழ்வு தந்திடுவாள்
    திருமகள் கலைமகள் அவளே திருவருள்
    புரியும் மலைமகளும் அவளே
    அங்கயற் கண்ணியும் மங்கயற்கரசியும் அவளே
    முண்டக கண்ணியும் அவளே அபிராமி
    அம்மையும் அவளே
    ஜெய ஜெய தேவி துர்கா தேவி சரணம்
    கனக துர்காதேவி சரணம்! கனக துர்காதேவி சரணம்.
    திருவிளக்கினை லட்சுமியின் அம்சமாகக் கருதுவது நமது இயல்பாகும். கீழே காணும் மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் பாடலைப்பாடியவாறே தீபத்தை ஏற்ற வேண்டும்.
    திருவிளக்கினை லட்சுமியின் அம்சமாகக் கருதுவது நமது இயல்பாகும். அருளது சக்தியாகும் அரன் தனக்கு இறைவருடைய அருளே சக்தி எனப்போற்றப்படுகிறது. அத்தகைய இறையருளை இறைவியை தீபத்தில் அமரச்செய்து நலம் பெறுதல் பொருட்டே வீடுகளில் காலையும் மாலையும் விளக்கேற்றப்படுகிறது. ”ஆவாஹனம்” என்னும் சொல்லுக்கு ”அழைத்தல்” என்று பொருள். எங்கும் நிறைந்திருக்கும் இறையருளை- சக்தியை நாம் ஏற்றும் தீபத்தில் அமர்ந்து அருள்புரியும்படி செய்ய வேண்டும்.

    கீழே காணும் மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் பாடலைப்பாடியவாறே தீபத்தை ஏற்ற வேண்டும். இப்பாடலை அருளியவர் குமரகுருபர் சுவாமிகள் ஆவர். இவர் மதுரையில் அரங்கேற்றம் செய்யும்போது மீனாட்சியம்மையே இப்பாடலுக்கு மகிழ்ந்து, குழந்தையாக வந்து முத்துமாலையை அருளி மறைந்தாள் என்பது உண்மை வரலாறு ஆகும்.

    பெருந்தே னிறைக்கும் நறைக் கூந்தற்
    பிடியே வரு முழுஞானப்
    பெருக்கே வருக பிறை மௌலிப்
    பெம்மான் முக்கட் சுடர்க்கிடுதநல்
    விருந்தே வருக மும்முதற்கும்
    வித்தே வருக வித்தின்றி
    விளைந்த பரமா னந்தத்தின்
    விளைவே வருக பழமரையின்
    குருந்தே வருக அருள் பழுத்த
    கொம்பே வருக திருக்கடைக்கண்
    கொழித்த கருணைப் பெருவெள்ளம்
    குடைவார் பிறவிப் பெரும்பிணிக்கோர்
    மருந்தே வருக பசுங்குதலை
    மழலைக்கிளியே வருகவே
    மலையத்துவசன் பெற்ற பெரு
    வாழ்வே வருக வருகவே.

    இப்பாடலை பாடிய வண்ணம் விளக்கை ஏற்றினால் இறையருள் ஒளியில் விளங்கியிருப்பாள். 
    தட்சிணாமூர்த்திக்கு உகந்த சக்தி வாய்ந்த இந்த மூல மந்திரத்தை சொல்லி வந்தால் பதவி உயர்வு கிடைக்கும். வருமானம் அதிகரிக்கும்.
    ஓம் நமோ பகவதே தட்சிணாமூர்த்தயே
    மஹ்யம் மேதாம் பிரக்ஞாம் ப்ரயச்ச நமஹா

    தாட்சண்யம் நிறைந்த தட்சிணாமூர்த்திக்குரிய சக்தி வாய்ந்த மூல மந்திரம் இது. இந்த மந்திரத்தை தினமும் காலையில் துதிப்பது நன்மை பயக்கும். வியாழக்கிழமைகள் மற்றும் பௌர்ணமி தினங்களில் அருகிலுள்ள சிவன் கோயிலில் இருக்கும் தட்சிணாமூர்த்தி விக்ரகம் முன்பாக கணவன் மனைவி இருவரும் சேர்ந்து இந்த மந்திரத்தை துதித்து வழிபடுவதால் தம்பதிகளிடம் ஒற்றுமை அதிகரிக்கும்.

    குடும்பத்தில் வீண் சண்டை, சச்சரவுகள் ஏற்படாது. முக வசீகரம் உண்டாகி பிறருடன் விவகாரங்களில் ஈடுபடும் போது உங்களுக்கு காரிய வெற்றி உண்டாகும். சிறந்த வாக்குவன்மை உண்டாகும். பணியில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். வருமானம் அதிகரிக்கும்.
    இந்த ஸ்லோகத்தை தினமும் சொல்லி வந்தால் சத்ருபயம் நீங்கும். நீர்வளம், நிலவளம் பெருகி வளமான வாழ்வு கிட்டும்.
    மத்ஸ்யாநநம் ஹரிம் தேவம் ஸங்கசக்ர தரம் விபும்
    ஸர்வாபரண ஸம்யுக்தம் ஸ்ரீபூநீலாபதிம் பஜே

    பொதுப் பொருள்: சாட்சாத் பரம்பொருளாகிய நாராயணனே தங்களுக்கு நமஸ்காரம். அதர்மத்தை அழித்து தர்மத்தை நிலை நாட்ட தாங்கள் தசாவதாரம் எடுத்து அருளினீர்கள். அதில் முதல் அவதாரம் சங்கு சக்ரம் தாங்கி சர்வாபரணங்களும் தரித்து பூமிதேவி, நீலாதேவி சமேதராய் அருட்காட்சி தரும் மத்ஸ்யாவதாரம். வேதங்களைக் காத்தது போல் எங்களையும் காத்தருள வேண்டும்.
    அங்காரகன் எனப்படும் செவ்வாய் பகவானுக்குரிய மூல மந்திரம் இது. இந்த மந்திரத்தை தினமும் காலையில் 9, 27, 108 முறை துதிப்பது சிறந்தது.
    ஐம் ஹ்மெளம் ஸீம்த்ராம் கம்
    க்ரஹாதிபதயே பெளமாய ஸ்வாஹா

    அங்காரகன் எனப்படும் செவ்வாய் பகவானுக்குரிய மூல மந்திரம் இது. இந்த மந்திரத்தை தினமும் காலையில் 9, 27, 108 முறை துதிப்பது சிறந்தது. செவ்வாய்க்கிழமைகளில் நவகிரக சன்னதிக்கு சென்று செவ்வாய் பகவானுக்கு செந்நிற மலர்களை சமர்ப்பித்து, தீபம் ஏற்றி இந்த மந்திரத்தை 108 முறை அல்லது 1008 துதித்து வருவதால் ஜாதகத்தில் செவ்வாய் கிரகத்தால் ஏற்படும் பாதகங்கள் நீங்கி நன்மைகள் உண்டாகும்.

    நேரடி மற்றும் மறைமுக எதிர்ப்புகள் உண்டாகாமல் தடுக்கும். வெகு சீக்கிரத்தில் சொந்த வீடு மற்றும் சொந்தமாக நிலம் போன்ற அசையா சொத்துகள் வாங்குவதற்கான யோகத்தை ஏற்படுத்துவார் செவ்வாய் பகவான்.
    ×